Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all 460 articles
Browse latest View live

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 13

$
0
0
 --சாந்திப்பிரியா --
13


(-37)   ஒருவருடைய தந்தை மரணம் அடைந்து விட்டார். அதனால் அவரது மகன்களுக்கும் மகளுக்கும்  பத்து நாள் தீட்டு வந்துள்ளது. அப்போது பத்து நாட்களுக்குள் அவர்களது தாயாரும் மரணம் அடைந்து விட்டால்  அவர்களுக்கு மொத்தம் எத்தனை நாள் தீட்டு உண்டு?

  • சாதாரணமாக தந்தை இறந்து பத்து நாட்களுக்குள் தாயார் இறந்து விட்டால் தந்தைக்காக அனுஷ்டிக்கும் தீட்டுக் காலமான பத்து நாட்களுக்கு மேல் தாயார் மரணத்துக்காக ஒன்றரை நாள் தீட்டு உண்டு. அதாவது தாயார் இரவில் இறந்து விட்டால் பத்து நாட்களுக்கு மேல் இரண்டு இரவு மற்றும் ஒரு பகல் அல்லது  தாயார் பகலில் இறந்து விட்டால்  இரண்டு பகல் மற்றும் ஒரு இரவு தீட்டு உண்டு. அதாவது 13 ஆம் நாள் சுபஸ்வீகாரத்தோடு இரண்டு தீட்டும் போய் விடும். இது பொது முறை என்றாலும் இது குறித்து  வீட்டில்  சடங்கு செய்யும் சாஸ்திரிகளிடம் கேட்டு அவர் கூறுவது போல செய்ய வேண்டும்.
    • ஆனால் தாயார்  இறந்து பத்து நாட்களுக்குள் தந்தை  இறந்து விட்டால் சாதாரணமாக தாயாருக்காக  அனுஷ்டிக்கும் தீட்டுக் காலமான பத்து நாட்களுக்கு மேல் ஒன்றரை நாள் மட்டும் தீட்டுக் கிடையாது.  இந்த நிலையில்  தாயார்  இறந்து பத்து நாட்களுக்குள் தந்தை  இறந்து  விட்டால் தந்தை என்று இறந்தாரோ அன்றில் இருந்து பத்து நாட்கள் கழித்தே தீட்டு விலகும்.  உதாரணமாக  தாயார் ஒன்றாம் தேதி இறந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். தீட்டு அனைத்தும் பதிமூன்றாம் நாள் காலையில் சுபஸ்வீகாரத்துக்கு முன்னால் குளித்ததும் விலகி விடும்.
    • ஆனால் தாயார் மரணம் அடைந்தப் பின் அடுத்த நாள் அதாவது தந்தை  இரண்டாம் தேதி முதல் பத்து தேதிக்குள் என்று மரணம் அடைந்தாலும் அவர் இறந்த தேதியில் இருந்து 13 ஆம் நாள் காலைதான் சுபஸ்வீகாரத்துக்கு  முன்னால் குளித்ததும் தீட்டு விலகும்.  இது பொது முறை என்றாலும் இது குறித்து வீட்டில் சடங்கு செய்யும் சாஸ்திரிகளிடம் கேட்டு அவர் கூறுவது போல செய்ய வேண்டும்.
    (-38)  ஒருவருடைய தாயாரோ அல்லது தந்தையோ இறந்து விட அவர்களுக்கு பத்து நாள் தீட்டு வந்துவிட்டது. அந்த பத்து நாட்களுக்குள் அவர்களுடைய மனைவியோ இல்லை, மகன்களோ இல்லை மகள்களோ இறந்து விட்டால் மொத்தம் எத்தனை நாட்கள் தீட்டு இருக்கும்? 
    • ஒருவருடைய தாயாரோ அல்லது தந்தையோ இறந்து விட்டதினால் ஏற்பட்ட பத்து நாள் தீட்டு முடிவதற்குள், அந்த பத்து நாட்களுக்குள் அவர்களுடைய மனைவியோ இல்லை, மகன்களோ இல்லை மகள்களோ இறந்து விட்டால் முந்தய தீட்டோடு பிந்தைய தீட்டும் போய்  விடும். அதாவது தாயாரோ அல்லது தந்தையோ இறந்து விட்டதினால் ஏற்பட்ட பத்து நாள் தீட்டு முடியும் அதே  தேதியிலேயே  மனைவியோ இல்லை, மகன்களோ இல்லை மகள்களின் இறப்பினால் ஏற்பட்ட தீட்டும் விலகி விடும்.  இந்த நிலையில் சுபஸ்வீகாரத்துக்கு  முன்னால் குளித்ததும் தீட்டு விலகும்.   13 நாட்களுக்கு மேல் தீட்டு கிடையாது. 
    (-39) தந்தையின் முதல் மனைவி உயிருடன் இருக்கையில் அவருடைய இரண்டாம் மனைவி அல்லது மூன்றாம் மனைவி என யார் மரணம் அடைந்தாலும் தந்தையின் மூலம் பிறந்த பிள்ளைகள் மற்றும் பெண்களுக்கும் பத்து நாட்கள்   தீட்டு உண்டாம்.  ஆனால் அந்த செய்தியை அவர்கள் ஒரு வருடத்துக்குப் பிறகு கேட்டால் தீட்டு காலம் மூன்று நாள் மட்டுமே.

    (-40) மனைவி கர்பமாக இருந்தால் சவத்தை சுமக்கவோ அல்லது தகனமோ செய்யக் கூடாது. ஆனால் அவர்களுடைய தாய் மற்றும் தந்தை அல்லது சந்ததி இல்லாத மூத்த சகோதரர்களின் சவத்தை சுமக்க தடை இல்லை.

    (-41) ஒரு குடும்பத்தில் ஏழு வயதுக்குள்  சிறுவனோ அல்லது சிறுமியோ மரணம் அடைந்து விட்டால் அதன் சொந்த சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் தாய் தந்தைக்கும் மட்டுமே பத்து நாள் தீட்டு உண்டு. அந்த குடும்பத்தின் ஏழு தலைமுறையில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு தீட்டுக் கிடையாது. 

    (-42)  தீட்டுக் காலம் 

    (i) தீட்டு என்பது என்ன, அவற்றின் பொது விதி முறைகள் என்பவை அனைத்தையும் ஏற்கனவே முந்தைய பாகங்களில் விளக்கி உள்ளேன். இனி முடிவாக யாருக்கு  எத்தனை நாள்  தீட்டு எனும் தீட்டுக் காலத்தைப் பார்க்கலாம். 

    (ii)  ஒன்று  மற்றும் ஒன்றரை  நாள் தீட்டு:-

    கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் இறந்தவர்களின் நேரடிக் குடும்பத்தினரைத் தவிர்த்து மற்ற பங்காளிக் குடும்பத்தின் ஆண்களுக்கும் அவர்களது மனைவிகளுக்கும் ஒருநாள் தீட்டு உண்டாகிறது.
    • தந்தைக்கு இரண்டு அல்லது மூன்று மனைவிகள்(இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்)இருந்தால் அந்த தந்தையின் மனைவிகளின் (இளைய மற்றும் மூத்த என எந்த மனைவியானாலும் சரி)சகோதரன் அல்லது சகோதரிகள்
    • அவர்களுக்குப் பிறந்தப் பெண்கள் மற்றும் பிள்ளைகள்
    • தந்தையின் இளைய அல்லது மூத்த மனைவிகளின் தாய் மற்றும் தந்தை
    • தந்தையின் இளைய அல்லது மூத்த மனைவிகளின் பெரியப்பா மற்றும் சித்தப்பா
    • பிற பங்காளிகளுக்கு பிறந்த ஆறு வயதுக்கு உட்பட்ட கல்யாணம் ஆகாத பெண்கள்
    • பங்காளிகளின் ஆறு வயதுக்கு மேலான ஆண் பிள்ளைகள் 
    • தனது மனைவியின் தாய் மற்றும் தந்தை ( மாமனார் மற்றும் மாமியார்)
    (iii) பெண்களுக்கு  ஒரு  நாள் தீட்டு:- 

    கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் இறந்தவர்களின் நேரடிக் குடும்பத்தினரைத் தவிர்த்து மற்ற பங்காளிக் குடும்பத்தின் பெண்களுக்கு ஒருநாள் தீட்டு உண்டாகிறது.
    • தந்தைக்கு இரண்டு அல்லது மூன்று மனைவிகள் (இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்)இருந்தால் அந்த மனைவிகளின் (இளைய மற்றும் மூத்த என எந்த மனைவியானாலும் சரி)பெண்களும் பிள்ளைகளும் 
    • இளைய மற்றும் மூத்த தாயாரின்  சகோதரன் அல்லது சகோதரிகள்
    • இளைய மற்றும் மூத்த தாயாரின்  சகோதரன் அல்லது சகோதரிகளுக்குப் பிறந்தப் பெண்கள் மற்றும் பிள்ளைகள்
    • இளைய மற்றும் மூத்த தாயாரின்  தாய் மற்றும் தந்தை
    • இளைய மற்றும் மூத்த தாயாரின் பெரியப்பா மற்றும் சித்தப்பா 
    • பிற பங்காளிகளுக்கு பிறந்த ஆறு வயதுக்கு உட்பட்ட கல்யாணம் ஆகாத பெண்கள்
    • பங்காளிகளின் ஆறு வயதுக்கு மேலான ஆண் பிள்ளைகள்
    (iv) பக்ஷிணீ  தீட்டு:-
     
    பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட காலம் ஆகும். அதாவது ஒன்றரை நாளாகும்.  பகலானாலும், இரவானாலும் சரி மரணச் செய்தி அந்த இரவோ அல்லது பகலோ  முடிவதற்கு முன்னால் கடைசி நேரத்தில் தெரிய வந்தாலும் அந்த தீட்டு அந்த குறிப்பிட்ட காலத்தில் துவங்கி விட்டதாக அர்த்தம் ஆகும். அதாவது இரவு பன்னிரண்டு மணி ஆகும் வேளையில் பக்ஷிணீ தீட்டு கால சமாச்சாரம் தெரிய வரும்போது இரவானாலும் கூட அந்த தீட்டின் ஒரு பகல் வேளைக் கழிந்து விட்டதாக அர்த்தம். ஆகவே இன்னும் ஒரு இரவும், ஒரு பகலும் தீட்டு காத்தால் போதும். ஆனால் அந்த செய்தி இரவு 1.30 க்குப் பிறகு தெரிய வந்தால் அடுத்த நாளில் இருந்து முழு பகல், இரவு, அதற்கு அடுத்த நாள் முழு பகல் என மூன்று வேளை தீட்டு காக்க வேண்டும். 

    (v) ஆண்களுக்கு பக்ஷிணீ  (ஒன்றரை நாள் ) தீட்டு

    கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் இறந்தவர்களின் நேரடிக் குடும்பத்தினரைத் தவிர்த்து மற்ற பங்காளிக் குடும்பத்தின் ஆண்களுக்கும் அவர்களது மனைவிகளுக்கும் பக்ஷிணீ தீட்டு(ஒன்றரை நாள்)உண்டாகிறது.
    • அத்தையின் பிள்ளை அல்லது பெண்
    • மாமனின் பிள்ளை அல்லது பெண்
    • தாயின் சகோதரியின் பெண்கள் மற்றும் பிள்ளைகள்
    • தன் உடன்பிறந்த சகோதரியின் பெண் (மருமாள்)
    • தன் உடன்பிறந்த சகோதரனின் மணமான பெண்
    • சிற்றப்பா மற்றும் பெரியப்பாக்களின் பெண்கள்
    • தன் பிள்ளை வயிற்றுப் மகள்  (பௌத்ரீ- பேத்தி )
    • பெண் வயிற்றுப் பெண்  (தௌஹித்ரி-பேத்தி  )
    • பெண்ணின் உபனயனமாகாத மகன் (தௌஹித்ரன்-பேரன் )
    • தன் சகோதரியின் உபனயனமாகாத மகன் (மருமான்).
    (vi) பெண்களுக்கு  பக்ஷிணீ (ஒன்றரை நாள் ) தீட்டு

    கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் இறந்தவர்களின் நேரடிக் குடும்பத்தினரைத் தவிர்த்து மற்ற பங்காளிக் குடும்பத்தின் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு(ஒன்றரை நாள்) உண்டாகிறது.
    • தந்தையின் சகோதரர்கள்- சித்தப்பா மற்றும் பெரியப்பாக்கள்
    • தந்தையின் தாயார்(பாட்டி)மற்றும் தந்தையின் தந்தை(தாத்தா)
    • தாயுடன் பிறந்த சகோதரிகள்- சித்தி மற்றும் பெரியம்மாக்கள்
    • தாயாரின் தாயார் (பாட்டி)மற்றும் தாயாரின் தந்தை(தாத்தா)
    • தந்தை வழி சித்தப்பா மற்றும் பெரியப்பாவின் பெண்களும், பிள்ளைகளும்
    • தாய் வழி சித்தி மற்றும் பெரியம்மாக்களின் பெண்களும், பிள்ளைகளும்
    • தாயின் சகோதரர்கள்- தாய் மாமன் மற்றும் மாமி
    • தாய் வழி மாமன் மற்றும் மாமியின் பெண்களும் பிள்ளைகளும்
    • தந்தையின் சகோதரிகள்- அத்தை மற்றும் அத்திம்பேர் எனப்படுவோர்
    • தந்தையின் வழி அத்தை மற்றும் அத்திம்பேரின் மகள்கள் மற்றும் மகன்கள் 
    • தனது சொந்த சகோதரியின் பெண்கள் மற்றும் பிள்ளைகள்
    (vii)  ஆண்களுக்கு மூன்று   நாள் தீட்டு:-

    கீழ்கண்டவர்களின் மரணத்தால் ஆண்களுக்கும் அவர்களது மனைவிகளுக்கும்  மூன்று நாட்கள் தீட்டு உண்டு.
    • திருமணம் ஆன சொந்த சகோதரி 
    • தாயின் தந்தை
    • தாயின் தாயார் 
    • தாயின் சகோதரர், அவர் மனைவி ( மாமா மற்றும் மாமி)
    • தாய் வழி (தாயின் சகோதர சகோதரிகள்) சித்தி, பெரியம்மா  மற்றும் சித்தப்பா மற்றும் பெரியப்பா
    • தந்தையின் சகோதரிகள் அவர்களது கணவர்கள் (அத்தை மற்றும் அத்திம்பேர்)
    • திருமணம் ஆன சொந்த சகோதரி, அவருடைய உபநயனம் ஆன மகன் (மருமான்)மற்றும் அந்த மகனின் மகன் 
    • மாமனார், மாமியார்
    • ஏழு தலை முறை ஆண்களும் அவர்களது மனைவிகளும் மற்றும் அந்தப் பங்காளிகளின் 2 வயதுக்கு மேலான ஆண்கள், 7 வயதுக்கு மேலான திருமணம் ஆகாத பெண்கள் 
    •  தனது தாய் மற்றும் தந்தையை பிரிந்து வேறு கோத்திரத்தில் வேறு யாருக்காவது   ஸ்வீகாரமாக கொடுக்கப்பட்டு இருந்தால் அந்த ஆண்  மகனை தத்புத்திரன் என்பார்கள். தன் குடும்பத்தை விட்டு ஸ்வீகாரபுத்திரனாக வேறு கோத்திரத்துக்கு சென்று விட்டாலும் அந்த  தத்புத்திரர்களுக்கு  தன்னை பெற்றெடுத்த தாயார் மற்றும் தந்தையின் (அவர்களுடைய சொந்த தாயை ஜனனி என்றும், சொந்த தந்தையை ஜனக பிதா என்றும்  பண்டிதர்கள் கூறுவார்கள்)மரணத்தில் மூன்று நாள் தீட்டு உண்டு. ஆனால்   ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டுள்ளவர்களின் குடும்பத் தீட்டுக்கள் அனைத்தும் தத்புத்திரர்களுக்கு உண்டு.
    • அதே போல அப்படி சென்று விட்ட தத்புத்திரர்கள்  மரணம் அடைந்து விட்டாலும் அவர்களுடைய பிறந்த வீட்டின் சொந்த சகோதரர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டு. 
    • அது போலவே சொந்த சகோதரி திருமணத்துக்கு முன்னால் வேறு கோத்திரத்தில் வேறு யாருக்காவது   ஸ்வீகாரமாக கொடுக்கப்பட்டு இருந்தால், அவளுடைய மரணத்திலும் மூன்று நாட்கள் தீட்டு உண்டு. 
    (viii) பெண்களுக்கு மூன்று  நாள் தீட்டு:-

    மணமாகிவிட்டப் பெண் புகுந்த வீட்டுக்குச் சென்று அவர்கள் கோத்திரத்தை சார்ந்தவள் ஆகி புகுந்த வீட்டினரின் அனைத்து தீட்டும் வந்து விடுவதினால் அவளுக்கு  பிறந்த வீட்டின் அனைத்து தீட்டும் கிடையாது. பிறந்த வீட்டின்   சில தீட்டுக்கள் மட்டுமே உண்டு. ஆகவே பிறந்த வீட்டின் கீழ் கண்டவர்களின் மரணத்தால் மணமான பெண்களுக்கு  மூன்று நாட்கள் தீட்டு மட்டுமே  உண்டு. ஆனால் அவளுடைய கணவருக்கு அந்த தீட்டு கிடையாது.
    • மனமாகிவிட்டப் பெண்ணின் சகோதரர்கள் மற்றும் அவர்களது மகன்கள் 
    • தந்தையின் இளைய அல்லது மூத்த மனைவி இருந்தால் அவர்கள் 
    • தனது சொந்த சகோதரியின் மகன்கள்  
    • வேறு கோத்திரத்தில் வேறு யாருக்காவது   தத்புத்திரியாக ஸ்வீகாரமாக கொடுக்கப்பட்டு உள்ள பெண்ணுக்கு அந்த வீட்டிற்கு சென்று விட்டாலும் அங்கு அவள் திருமணம் ஆகும்வரை மட்டும்  தன்னை பெற்று எடுத்திருந்த ஜனனீ மற்றும் ஜனக பிதா எனும் சொந்தத் தாய், தந்தை மற்றும் சகோதர சகோதரிகளின் மரணத்தில் மூன்று நாட்கள் தீட்டு உண்டு. அதுவும்  அவளுக்கு ஸ்வீகாரம் தரப்பட்ட வீட்டில் இருந்து திருமணம் ஆகும்வரைதான் உண்டு. ஸ்வீகாரம் தரப்பட்ட வீட்டில் இருந்து திருமணம் ஆகிச் சென்று விட்டால் அவளுக்கு பிறந்த வீட்டின் மரணங்களில் செய்தி கேட்டதும்  பந்து எனப்படும்  உறவினர் ஸ்நானம் மட்டுமே உண்டு.  வேறு எந்த தீட்டும் கிடையாது.  ஆனால்   ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டுள்ளவர்களின் குடும்பத் தீட்டுக்கள் அனைத்தும் உண்டு.
    (ix) பத்து   நாள் தீட்டு:-
    • பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும், அவர்கள் ஆணோ அல்லது பெண்ணோ, அவர்களுடைய தாயார், தந்தை மற்றும் இறந்தவரின் குடும்பத்தில் 7 தலை முறைகளுக்கு உட்பட்ட அனைத்து மணமாகாத பெண்கள், ஆண்கள், மற்றும் அவர்களின்  மனைவிகளுக்கும் 10 நாள் தீட்டு உண்டு. 
    •  பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ (ஆண்) குழந்தை இறந்தால் இறந்த குழந்தையின் தந்தை, தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள் போன்றவர்களுக்கு மட்டுமே பத்து நாள் தீட்டு உண்டு. மற்ற பங்காளிகளுக்கு ஒன்றும் இல்லை.
    (கட்டுரை முடிந்தது )

    Pachchaiyamman temple, Tiruvannamalai

    $
    0
    0

    -சாந்திப்பிரியா-

    பச்சையம்மன் 

    திருவண்ணாமலையில் புறநகர் பகுதியில் உள்ள பச்சையம்மன் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். பல இடங்களில் உள்ள முக்கியமாக முருகனும் வள்ளி தேவியும் உள்ள ஆலயங்களிலும் பார்வதி தேவி பச்சையம்மனாக வழிபடப்படுகிறார். அது போலவேதான் இந்த ஆலயத்திலும் பார்வதி தேவியை பச்சையம்மனாக வழிபடுகிறார்கள். அவளது சிலை சுதை ஓவிய வடிவில் அமைந்துள்ளது. சுதை ஓவியம் என்பது சுண்ணாம்புக் கலவையை காரைப்பூச்சு போல சுவர் மீது பூசி  அதன் மீது ஓவியம் வரைவதைக்  குறிக்கும்.  சுதை சிற்பங்கள் எனப்படும் சுண்ணாம்புக் காரை பூச்சு மீது உருவாக்கப்பட்ட ஆலய சிற்பங்கள் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பழக்கத்தில் இருந்துள்ளது. அந்தக் கலவையைக் கொண்டு வண்ண ஓவியம் வரைவது எளிதல்ல. அவற்றின்  நிறம் காலப்போக்கில் சற்று மங்கலாகுமே தவிர சிற்பங்கள் எளிதில் பழுதடைவது  இல்லை.

    இந்த ஆலயத்தைக் குறித்து இரண்டு கருத்துக்கள் உள்ளன. முன் காலத்தில் இது அந்த கிராமத்துக்கு காவலாக இருந்த கிராம தேவதை வழிபாட்டுத் தலமாக அமைந்து இருந்தது என்றும்,  இன்னொரு கருத்தின்படி இது  கிராமத்தில் பார்வதி தேவிக்கு அங்கு தவத்தில் இருந்த முனிவர்களால் அமைக்கப்பட்ட ஆலயம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் தற்போது உள்ள ஆலய வளாகம்  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்  அமைக்கப்பட்ட ஆலயம் அல்ல. அப்போது அது  திறந்த வெளியில் இருந்திருக்க வேண்டும் என்பது நம்பிக்கை.  தற்போது உள்ள ஆலய வளாகம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கட்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். எது எப்படியோ,  இந்த ஆலயத்தின் வரலாறு  சுவையானது.

    'இந்த பிரபஞ்சம் உருவாகியபோது சிவபெருமானுடன் இணைந்து தானும் அல்லவா இந்த பிரபஞ்சத்தைப் படைத்ததில் முக்கிய பங்கு வகித்திருக்க, தான் இல்லாமல் பரப்பிரும்மம் எப்படி உருவாயிற்று? சிவசக்தியல்லவா பரப்பிரும்மம் என்பது.  அப்படி இருக்கையில் அனைவருமே சிவபெருமானை மட்டுமே பரப்பிரும்மன் என வணங்கி வழிபடுகிறார்களே, தனக்கு தர வேண்டிய உரிய மரியாதையை  தரவில்லையே, ஆகவே சிவபெருமானின் இடதுபுறத்தில் தானும் ஐக்கியமாகி விட்டால் அதன் பின் அவருடன் தன்னையும் சேர்த்து மரியாதை தருவார்கள்'என்ற எண்ணம் எழுந்தது.  இதன் பின்னணிக் காரணமும் பிருங்கி முனிவரே என்பது ஒரு செவி வழிக் கதையாக உள்ளது.

    அந்தக் கதை என்ன? ஒருமுறை பிருங்கி முனிவர் கைலாயத்துக்கு சென்று இருந்தபோது அங்கு சிவபெருமான் பார்வதியுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.  அதைக் கண்ட பிருங்கி முனிவர் அவர்கள் முன் சென்று சிவபெருமானை மட்டும் வணங்கி விட்டுச் சென்று விட்டார். பார்வதியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அதைக் கண்ட பார்வதி கோபம் அடைந்து அந்த முனிவர் தனக்கு அவமரியாதை செய்து விட்டதாக கருதி, சிவபெருமானிடம் தனது மனக்குறையைக் கூறி, தானும் சிவனில் ஒரு பாதி என்பதினால் தனக்கும் சிவபெருமானுக்கு கிடைக்கும் மரியாதையில் சம பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமானின் உடலில் தானும் ஒரு பாதியாக வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சிவபெருமானோ அதை ஏற்கவில்லை என்பதினால் தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள  பார்வதி தேவி பூலோகத்துக்கு வந்து சிவபெருமானை நோக்கி தவம் இருக்கத் துவங்கினாள். பல காலம் காஞ்சீபுரத்தில் தங்கி இருந்தவாறு தவம் செய்து கொண்டு இருந்தபோது சிவபெருமான் கைலாயத்தில் இருந்து திருவண்ணாமலையில் வந்து தங்கி உள்ளதைக் கேள்விப்பட்டு  அங்கேயே சென்று அவரை வழிபட்டு அவரிடம் இருந்து வரத்தைப் பெற வேண்டும் என முடிவு செய்து கொண்டாள். அவரிடம் இருந்து அந்த வரத்தைப் பெற்று விட்டால் சிவசக்தி என்று தன்னையும் சேர்த்து அழைப்பார்கள், தன்னையும் அவருடன் சேர்த்து பூஜிப்பார்கள் என்ற ஆவலில்  திருவண்ணாமலைக்குக் சென்று தவம் இருக்க முடிவு அங்கு கிளம்பிச் சென்றாள்.

    ஆரணியில் இருந்து சுமார் பத்து கிலோ தொலைவில் உள்ள வாழைப்பந்தல் எனும் இடத்தை அடைந்தவள் அங்கு மலை மீது சிவபெருமான் இருப்பதை அறிந்து கொண்டு அதன் அடிவாரத்திலேயே அமர்ந்திருந்தபடி தவமிருக்கத் துவங்கினாள். கைலாயத்தில் இருந்து பர்வத மலை வழியே தனது பாதத்தை வைத்து இறங்கிய சிவபெருமான் அதன் பின்னரே திருவண்ணாமலைக்கு சென்றார் என்பது ஐதீகம். இப்படியாக பூலோகத்துக்கு வந்திருந்த பார்வதி தேவி தங்கி இருந்து தவம் இருந்த இடமே பச்சையம்மன் ஆலயம் உள்ள இடமாகும்.

    வாழைப்பந்தலை வந்தடைந்தவள் தான் தவம் இருக்க உள்ள இடம் கைலாயத்தைப் போலவே குளுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு வாழை இலைகளினால் ஆன பந்தல் ஒன்றை அமைத்தாள். அதன் அடியில் அமர்ந்து கொண்டு தவம் இருக்க ஆரம்பித்தாள். தவத்தில் சிவபெருமானை ஆராதிக்க மணலால் செய்த ஒரு சிவலிங்கத்தை உருவாக்க நினைத்தவள் நதியோ அல்லது குளமோ உள்ளதா என நீர் நிலையைத் தேடினாள். எங்கும் நீர் கிடைக்கவில்லை. ஆகவே தனது மகன்களான வினாயகர் மற்றும் முருகனை அழைத்து எங்கிருந்தாவது நீர் கொண்டு வருமாறு அனுப்பினாள். நேரம் ஓடியது, ஆனால்  அவர்கள் வந்தபாடில்லை. ஆகவே தவத்தை துவக்க வேண்டிய நேரம் கடந்து விடக் கூடாது என்பதற்காக பூமாதேவியிடம் தனக்குத் தேவையான நீரைத் தருமாறு அவளை தட்டி எழுப்ப தன்னிடம் இருந்த தந்தத்தினால் பூமியை தட்ட அவள் தட்டிய இடத்திலிருந்தே பெரிய நீரூற்று எழும்பியது.  அதில் இருந்த நீரைக் கொண்டு மணலினால் ஆன சிவலிங்கத்தை அமைக்கத் துவங்கியபோது அவளுடைய மகன்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களும் தம்முடன்  இரண்டு நதிகளின் தேவதைகளை அழைத்து வந்திருந்ததினால் அதைக் கண்டு மகிழ்ந்து போன பார்வதி அந்த இரண்டு தேவதைகளையும் தனக்கு பூமா தேவி தந்திருந்த நீர் நிலையுடன் கலந்து விடுமாறு கூற அவர்களும் தனது நதிகளுடன் அதில் சென்று மறைய அந்த இடத்தில் மூன்று நீர் நிலைகள் கலந்த நீர் நிலை உருவாயிற்று. அதையே மூன்று நதிகளின் சங்கமம் எனப்படும் முக்கூடல் என்ற நீர் நிலையாக கூறலானார்கள்.

    அந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்தை அமைத்து தவமிருக்கத் துவங்கியதும் அவளது தவத்தைக் கலைக்க அங்கிருந்த ராக்ஷசன் ஒருவன் முயற்சி செய்தான். ஆகவே அதனால் துன்பமுற்ற  பார்வதி தேவி சிவபெருமானிடம் அவன் தொல்லையைக் குறித்து முறையிட, சிவபெருமானும், தன்னுடன் விஷ்ணு பகவானையும் அழைத்து வந்து அந்த ராக்ஷசனை அழித்து அவளது தவம் இடையூறு இல்லாமல் தொடர அங்கேயே வாமுனி மற்றும் செம்முனி எனும் இரு முனிவர்களாக உருவெடுத்து அவளுக்கு காவலுக்கு  நின்றார்கள். அதனால்தான் அந்த முனிவர்களுக்கும் அந்த ஆலயத்தில் சிலைகள் உள்ளன. அவர்களைத் தவிர பல முனிவர்களும், ரிஷிகளும் பார்வதியின் தவத்துக்கு காவலாக இருந்தவாறு அங்கேயே தவம் இருந்தார்களாம். அவர்களது சிலைகளும் ஆலயத்தில் காணப்படுகின்றன.

    வாழைப் பந்தலில் பச்சை நிறத்து சூழ்நிலையில் அவள் தவம் இருந்தப் பின் திருவண்ணாமலைக்கு சென்று சிவனுடன் ஐக்கியமாகி சிவனின் ஒரு பாதியாகி, சிவசக்தியானாள். அதனால்தான் வாழைப் பந்தலில் தவமிருந்த பார்வதிக்கு அங்கேயே ஆலயம் அமைந்தது. பச்சை நிற சூழ்நிலையில் இருந்தவாறு தவமிருந்த பார்வதியை பச்சையம்மன் என்ற பெயரில் வணங்கலானார்கள். அங்கிருந்துதான் வேறு பல இடங்களுக்கும் பார்வதி தேவியானவள் பச்சையம்மனாக  சென்றாள். பார்வதி தேவியானவள் பச்சையம்மன் என்ற முதல் அவதாரம் எடுத்தது இங்குதான் என்பது ஐதீகம். ஆகவேதான் எங்கெல்லாம் பச்சையம்மனாக பார்வதி தேவி வழிபடப்பட்டாலும், பச்சையம்மனின் மூல ஆலயம் திருவண்ணாமலையில் உள்ள பச்சையம்மனின் ஆலயமே ஆகும்.













    பச்சையம்மன் ஆலயத்தின் சன்னதியில் பக்தர்களுக்கு பச்சை நிறத்திலான குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. பச்சையம்மன் அமைத்த சிவலிங்கத்தைப் பிடிக்க அவள் பயன்படுத்திய  தண்ணீரைத் தந்த மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் சுமார் நான்கு அடி உயரமான சிவலிங்கம் அமைந்துள்ளது. அதுவே அங்குள்ள குளத்தின் நீர் என்கிறார்கள். கோயிலின் நுழைவாயிலில் சண்டனும் முண்டனும் இருக்க அங்குள்ள பிற சிலைகள் வாமுனி, செம்முனி, ஜடாமுனி மற்றும் பிற முனிவர்களின் உருவங்களாகும். அவர்கள் அனைவரும் அங்கு அமர்ந்தபடி காட்சி தருகின்றனர். கோவிலினுள் துவார கணபதியும், தேவேந்திரனும் நம்மை வரவேற்கின்றனர். ஆலய வளாகத்தை சுற்றி பல காவல் தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பச்சையம்மனை தரிசனம் செய்த பின்னரே மலை மீது ஏறிச் சென்று பர்வத மலை மீது குடி கொண்டுள்ள சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என்பதும் ஐதீகம் ஆகும். 
    -----------------------------------------
    Courtesy:-


     
          David van der elst
     
    ** All the photos of Pachchaiyammn temple reproduced above have been provided by Mr David van der elst of Belgium (David van der elst  :- https://onedrive.live.com). He has been publishing narrations of the places he visited along with the photographs of the sites he visited. His contributions are published in   ETHNOFLORENCE Indian and Himalayan folkand tribal arts. My sincere thanks to him for granting me  permission to use any of his material in appropriate manner in my blogger. 

    நன்றி:- இந்த கட்டுரையில் வெளியிடப்பட்டு உள்ள படங்கள் அனைத்தையும் தந்து உதவியவர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த திரு டேவிட் வான் தேர் எல்ஸ்ட் (David van der elst  :- https://onedrive.live.com) என்பவர் ஆவார். அவருடைய கட்டுரைகளும் படங்களும் ETHNOFLORENCE Indian and Himalayan folkand tribal arts     என்ற இணைய தளத்தில்    வெளியாகி உள்ளன.  அவருடைய எந்த படத்தையும் என்னுடைய கட்டுரைக்கு ஏற்ப தகுந்த விதத்தில் பயன்படுத்திக் கொள்ள எனக்கு விசேஷ அனுமதி தந்துள்ள அவருக்கு நன்றி. 

    Mathura Kali Amman

    $
    0
    0
    2012 ஆம் ஆண்டு வெளியான இந்தக் கட்டுரை திரு பாலசுப்ரமணியன் என்பவர் எழுதி உள்ள புது செய்திகளுடன் மீண்டும் வெளியிடப்படுகிறது 
     
    மதுர காளி அம்மன்
    சாந்திப்பிரியா

     (படம் நன்றி: http://drlsravi.blogspot.com/2010/07/siruvachur-madura-kaliamman-and.html ) 

    திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு தெற்குப் பகுதியில் உள்ள சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் மதுர காளி அம்மன் ஆலயம். சென்னையில் இருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த கிராமம். இது காஞ்சி பரமச்சாரியாளான ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகளின் குலதெய்வம் என்கிறார்கள்.
     இந்த ஆலயம் உள்ள இடத்தின் மலையின் பெயர் மதிர மலை என்பார்கள். இந்த ஆலயத்தில் உள்ள காளி தேவி ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பஸ்வாமி என்ற இரண்டு காவல் தேவதைகளுடன் இந்த ஊரைக் காத்து வருவதான ஐதீகம் உள்ளது. ஆலயத்தின் தல விருஷம் மதுர மரம். ஆலயம் 1000 அல்லது 1500 வருடங்களுக்கு முற்பட்டது என்கிறார்கள்.
    இந்த ஆலயம் குறித்து பல சுவையானக் கதைகள் உள்ளன . ஆனால் அவற்றுக்கு ஆதாரம் இல்லை என்றாலும் வாய்மொழிக் கதையாகவே ஆண்டாண்டு காலமாக விளங்கி வருகின்றது.
    ஒரு முறை ஆதி சங்கரர் இந்த மலைப் பிரதேசத்தின் வழியே வந்து கொண்டு இருந்தபோது களைப்பினால் ஒரு மரத்தடியில் இளைப்பாறினாராம். அவருக்கு தாகம் எடுத்தது, ஆனால் சுற்றிலும் எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அவர் தேவியை நினைத்து மனமுருகி வேண்டிக் கொண்டபோது, அங்கு இருந்த மதுர காளியம்மான் அவர் முன் தனது சுய ரூபத்தில் தோன்றி அங்கு ஒரு நீர் ஊற்றை வரவழைத்து அவர் தாகத்தைத் தீர்த்தாளாம். அதன் பின் அங்கேயே அவள் ஒரு நான்கு அடி உயர கல் சிலையாக மாறிவிட, ஆதி சங்கரர் அந்த சிலையை எடுத்து அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம்.


    இன்னொரு கதையின்படி ஒரு காலத்தில் இந்த மலைப் பிரதேசத்தின் மூன்று ரிஷிகள் வசித்து வந்தார்கள். அவர்கள் அங்கு தாபத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது ஒரு நாள் ஒரு குழந்தை அங்கு அழுதுகொண்டு அனாதையாகக் கிடந்தது. அதை அவர்கள் கருணையோடு எடுத்து வந்து வளர்த்து அறிவு புகட்டினார்கள். அந்தக் குழந்தை நன்கு அவர்களிடம் ஆன்மீகப் பாடம் கற்றுக் கொண்டவுடன், அங்கிருந்து கிளம்பி ஷேத்ராடனம் சென்றுவிட்டது. அந்த நேரத்தில் ஒரு நாள் அந்த மூன்று ரிஷிகளும் அந்த மலையின் (தற்போது ஆலயம் உள்ள இடத்தில்) ஒரு மரத்தில் தேன்கூடாக மாறி விட்டார்களாம். அதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் அவர்கள் ஒரு முனிவரிடம் பெற்று இருந்த சாபமே. பூர்வ ஜென்மத்தில் அவர்கள் ஒரே குடும்பத்தினர். அந்த மலையில் தேன் எடுப்பவர்கள். ஒரு முறை அவர்கள் அந்த முனிவர் அங்கு தவத்தில் இருந்ததைப் பார்க்காமல் அவர் தவம் இருந்த மரத்தின் மீது இருந்த தேன் கூட்டை கலைக்க அந்த கூட்டில் இருந்த தேன் அந்த முனிவர் மீது வாய் மீது விழுந்து அவர் தவம் கலைந்தது. ஆகவே அவர் அவர்களை தேன்கூடுகளாக மாறி விடுவார்கள் என்றும் பல காலம் பொறுத்து ஒரு சாபத்தினால் அங்கே வந்து குழந்தையாக பிறக்க உள்ள நாரத முனிவர் அவர்களின் சாபத்தைத் தீர்ப்பார் என்றும் சாபமிட்டார். ஆகவே அந்த முனிவர்கள் அந்த மரத்தின் மீதே தேன் கூடுகளாக மாறி அமர்ந்து இருந்தார்கள். அபோது அந்த மரத்தடியில் வந்து இளைப்பாறும் ரிஷி முனிவர்களின் வாயில் ஒரு சொட்டு தேன் விழுமாறு அவை பார்த்துக் கொள்ளும். அதன் காரணம் தமது பூர்வ ஜென்மக் குழந்தை அங்கு வந்தால் அந்த செய்கையை புரிந்து கொண்டு தமக்கு சாப விமோசனம் தரும் என்பதற்காகவே.

     தேசிய நெடுஞ்சாலையில் வரும்
    வளைவில் திரும்ப வேண்டிய இடம் 
    (படம் நன்றி: http://drlsravi.blogspot.com/2010/07/siruvachur-madura-kaliamman-and.html )
    இப்படியாக பல ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர்கள் வளர்த்து ஆளாக்கிய பூத்தார் என்ற பெயர் கொண்ட முனிவராக மாறி இருந்தக் குழந்தை மீண்டும் அங்கு வந்து அவர்களைத் தேடினார். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. அப்போது அந்த மூன்று முனிவர்கள் தேன்கூடாக இருந்த மரத்தின் அடியில் படுத்து இருந்தபோது அவர் வாயில் ஒரு சொட்டு தேன் விழுந்தது. உடனேயே அவர் அந்த செய்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார். அங்கேயே இருந்த காளியின் முன் தவமிருந்து அவளது அருளைப் பெற்று அவர்களுக்கு சாப விமோசனம் பெற்றுத் தந்தார். ஆகவே இனிமையான தேனை போன்ற வாழ்கையை வழங்கும் இடமான அந்த ஆலயம் மதுர (இனிமை என்று பொருள்) பெயர் கொண்டு மதுர மலை ஆயிற்று.

     ஆலயத்தில் ஒரு காட்சி 
    (படம் நன்றி: http://drlsravi.blogspot.com/2010/07/siruvachur-madura-kaliamman-and.html )
    நான்கு கைகளைக் கொண்ட அன்னையின் ஒரு கையில் அக்ஷயபாத்திரம் இருக்க தந்து இடது காலை மடித்து வைத்துக் கொண்டு ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். சாதாரணமாக காளி உக்ரஹ வடிவில்தான் அனைத்து ஆலயத்திலும் காலடியில் தான் வதம் செய்த மனிதன் மீது நின்றபடி காட்சி தருவாள். ஆனால் இங்குள்ள காளியோ கருணை முகத்துடன் காட்சி தந்து அருளைத் தருவதால் மதுர காளி அம்மன் என்ற பெயரைப் பெற்றாள். திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பக்தர்கள் தரிசிக்க ஆலயம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்களில் கண்களுக்குத் தெரியாமல் அங்குள்ள சித்தர்களும் ரிஷி முனிவர்களும் அந்த ஆலயத்து தேவியை வணங்க ஆலயம் மூடப்பட்டு உள்ளதாம். இந்த மதுர காளி தேவியும் உக்ரஹமான காளியின் அவதாரமே.

     ஆலயம் செல்லும் வழி 


     Balasubramanian NR has left a new comment on your post "Mathura Kali Amman

    இந்த தலத்தின்  பெருமையைக் குறித்து திரு N R பாலசுப்ரமணியன் என்பவர் எழுதி அனுப்பி உள்ள கீழ் கண்ட செய்தியை வெளியிடுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். 
    திரு பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி:- 

    ..............''.பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது. திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது. காலை 8 மணிக்கு சன்னதி திறக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். பிற்பாடு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம். குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோயில். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக் இருப்பதால் இங்கு வரும் பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மாவிளக்கு ஏற்றுதல் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன் ஆகும். அங்கபிரதட்ணம் செய்வதும் பக்தர்களால் செய்யப்படும் புகழ்பெற்ற நேர்த்திகடன் ஆகும். நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்யபாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம். மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள். செல்லியம்மன், அன்னை திறம் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள். தான் அருகிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்தில் அமர்கிறாள். சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள். எனவேதான் திங்கள் வெள்ளி மட்டும் ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்.

    சிறுவாச்சூர் காளியம்மன் என்றாலே, மிக பிரசித்தி பெற்ற திருக் கோயிலாகும், அம்பிகை என பக்தர்கள் கூறவே மக்களால் குலதெய்வமாக வணங்கப்படும் , பேசும். பேசியது…பேசிக்கொண்டிருக்கிறது – இன்னும் பலருக்கு சூக்ஷ்ம வடிவில். ஒரு நடமாடும் தெய்வம் - மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். நம் துயர் களைவதற்காகவே - கருணையே தவிர - அம்பாளை பார்த்து விட்டோம் என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். .அடியார்கட்கு அருள் செய்ய, வேண்டுதல்களையும் நிறைவேற்ற அமர்ந்துள்ளாள். அருட்காட்சி தருவது வேறு தலங்களில் இல்லாத சிறப்பாகும். குடும்ப தீராத வழக்குகளை, பிரச்னை தீர, தம்பதியர் ஒற்றுமைக்காகவும், குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தியடைய, வாழ்வில் நன்மைகள் பல பெற்று, திருமண தடை நீங்கவும், பூர்வஜென்ம வினை பிணிகள் தீர, மாங்கல்ய பாக்கியத்திற்கும், தோஷ சாப நிவர்த்திக்காகவும், ஐஸ்வர்யம் பெருகவும், இங்கு வேண்டிக்கொள்கிறர்கள். அம்மன் வடக்கு திசை நோக்கி அருளும் நிலையிலேயே காட்சி. திருமணமான தம்பதியர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் அடுத்தாண்டு அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. இது ஒரு சக்தி பீடமாகும்.

    வெள்ளி கிழமைகளில் மாலை பக்தர்கள் தங்க தேர் இழுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு புடவை சாத்தியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். சிறப்பு அபிஷேகம், எலுமிச்சை தீபம், மாவிளக்கு

    ஏற்றலாம். கரங்களில் சூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறாள். . மாங்கல்ய பாக்கியத்திற்கு, மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.
    இங்கு தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

    Yesterday, i.e. 5.2.15, Shri Yesudas, Carnatic Musician visited the temple along with his family Members and sang a song in praise of the Goddess. They stayed till the end of the Puja.............''

    How Aiyanar Horses are made ?

    $
    0
    0
    களி மண்ணிலான சிற்பக் கலை 

    சாந்திப்பிரியா 

     
    [இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்' 
    (Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம தேவதைகள் எனும் 
    புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் 
    சென்று கிராம தேவதைகளைப் பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து 
    கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு 
    தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார். 
    அவருக்கு என் நன்றி-          Photograph taken by: Christa Neuenhofer Neuenhofer
    சாந்திப்பிரியா ]

    பல கிராமங்களில் நாம் காணும் கிராம தேவதைகள் மற்றும் காவல் தெய்வங்களின் சிலைகளை கண்டு பிரமிக்காதவர்கள் இல்லை. அதுவும் மிகப் பெரிய அளவில், காணப்படும் ஐயனார் சிலைகள், அவற்றில் காணப்படும் அற்புதமான கைவண்ணம் போன்றவற்றையும், சராசரி மனித உருவை விட மிகப் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ள சிலைகளையும் பார்க்கும்போதும் அவற்றை யார் செய்தது என்பதையும் அநேகமாக யாரும் அதிக அக்கறையோடு கவனித்து இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட எண்ணமும் அவர்களுக்கு இருந்திடாது. ஆனால் இந்த விஷயத்தில் மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கி உள்ளதை நான் சமீபத்தில் தெரிந்து கொள்ள நேரிட்டபோது ஆச்சர்யம் அடைந்தேன்.

    இன்றைக்கும் பல்வேறு கிராமப்புறங்களிலும் ஐயனாரையே காவல் தெய்வமாக கருதி அவருக்கு ஆலயம் அமைத்து வழிபடுகிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் ஐயனார் ஆலயம் எனக் கூறாமல் அவற்றை வழிபாட்டுத்தலங்கள் அல்லது ஐயனார் கோவில் என்பார்கள். ஐயனார் கோவில் என்பது பெரும்பாலும் மரங்களடர்ந்த பகுதி, ஆற்றங்கரை, குளக்கரை, ஏரிக்கரை போன்றவற்றை ஒட்டி இருக்கும் பகுதிகளில்தான் அமைந்திருக்கும். ஐயனாருடைய பல கோவில்கள் கிராமப்புற எல்லைகளில் அடுத்த ஊருக்குச் செல்லும் சாலைகளை ஓட்டியே உள்ளன. அவற்றுக்கு மேற்கூறைக்  கூட இருக்காது. ஆனால் ஐயனார் எங்கிருந்தாலும் அவருடன் ஒரு பெரிய குதிரையும் காணப்படும். அதனால்தான் பல கிராமங்களிலும் ஐயனாருடைய வாகனம் குதிரை என்பார்கள்.
     
    தீய சக்திகள், பேய் மற்றும் பிசாசு போன்றவற்றின் உருவம் குதிரைக்கு கண்கூடாகத் தெரியும் என்பது பண்டைய காலம்தொட்டு தொடரும் நம்பிக்கை ஆகும். அதனால்தான் எந்த ஊரில் ஐயனாருக்கு கோவில் உள்ளதோ, அந்த ஊரில் தீய சக்திகள் நுழையாமல் இருக்க ஐயனார் சக்திகளை அடையாளம் காட்டும் குதிரை மீது பவனி வந்தபடி இருக்கும்போது, அந்தக் குதிரை எங்கெல்லாம் தீய சக்தி, பேய், பிசாசுக்களை அடையாளம் காட்டுகிறதோ அவற்றை அடித்துத் துரத்தி அந்த ஊரைக் காப்பார் என்பார்கள். ஊர்காக்கும் கடவுளாக ஐயனார் வணங்கப்படுகிறார். ஐயனாரின் உருவச் சிலை பீடத்தில் அமர்ந்த நிலையிலும், குதிரை வாகனத்தில் ஏறி அமர்ந்த நிலையிலும் காணப்படும். ஐயனாருடைய கோவில்கள் உள்ள கிராமத்தை சேர்ந்த அந்தந்த ஊர் ஜனங்கள் பயபக்தியுடன் அவருக்கு வருடாந்தர திருவிழா எடுப்பர். சங்க காலத்தில் வழிபடப்பட்ட சாத்தன் என்ற தெய்வமே கிராமங்களில் ஐயனாராகக் கொண்டாடப்படுகிறார் என்றும், சாத்தான் எனப்பட்ட கடவுள் சாஸ்தா அதாவது ஐயனார் என்ற நம்பிக்கையும் உண்டு. அப்படிப்பட்ட கிராம தெய்வங்கள் மற்றும் ஐயனாருடைய குதிரையின் சிலைகளும் எங்கு வடிவமைக்கப்படுகின்றன ?

    பல ஆயிரம் ஆண்டுகளாக களிமண்ணினால் ஆன மிகப் பெரிய சிலைகள் தமிழகத்தின் சில கிராமங்களில் செய்யப்பட்டு வந்துள்ளன என்றாலும் தமிழ்நாட்டில் புத்தூர் கிராமத்தில்தான் ஆயிரக்கணக்கான வருடங்களாக களிமண்ணினால் ஆன சிலைகள் பரம்பரைப் பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட குயவர்களின் பிரிவினரால் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அப்படி செய்யப்பட்ட சிலைகள் பல நூற்றாண்டுகள் ஆனாலும் மழை மற்றும் வெயிலினால் எந்த மாற்றமும் அடையவில்லை, அழிவுற்றதும் இல்லை. அப்படிப்பட்ட சிலைகளை செய்வது எளிதல்ல. பல பாவங்களையும், கோணங்களையும் காட்டும் விதத்தில் வடிவமைக்கப்படுவதாகும் அவை. வடிவமைப்பில் அனைத்து கோணங்களும் அவற்றின் பாவனைகளுடன் ஒன்றுடன் ஒன்று ஓத்து இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சிலைகளை நகரங்களை விட்டு வெகு தொலைவில், உள்ள கிராமங்களில் செய்கிறார்கள் என்பதை பலரும் அறிந்திடவில்லை.

    ஐயனார் குதிரை சிலைக்கு  முன்னால் 
    'ரான் டியூ போய்ஸ்' (Ron du Bois)

    1980 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒக்லஹோமா பல்கலைக் கழகத்தில் ஓவியமும் கைவினையும் குறித்து போதனை செய்யும் ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு 'ரான் டியூ போய்ஸ்'{Ron du Bois(1)(2)}எனும் அமெரிக்கர்  இந்த சிலைகளை செய்யும் கலையினை நேரடியாகப் பார்வையிட இந்தியாவுக்கு வந்தார். அவர் உலகின் பல இடங்களுக்கும் விஜயம் செய்து குயவர்கள் செய்யும் பாண்டங்களின் கலைகளை நேரடியாக பார்த்து அவற்றைக் குறித்துக் கட்டுரைகளை எழுதி உள்ளார். அந்த அமெரிக்கர் தமிழ்நாட்டில் வந்து சில பகுதிகளுக்கும் சென்று அங்கிருந்த வழிபாட்டு தலங்களில் இருந்த ஐயனார் சிலைகளைப் பார்த்து வியந்தார். அவர் கூறினார் 'கிராமப்புறங்களில் காவல் தெய்வம் எனப்படும் ஆலயங்களில் இருந்த, பல அடி உயரமான களிமண்ணால் ஆன குதிரைகளைக் கண்டு பிரமித்துப் போன நான் அவை செய்யப்பட்டு எத்தனை வருடங்கள் ஆகி இருக்கும், அவற்றை செய்தது யாராக இருக்கும், அதை என்ன காரணத்துக்காக செய்தார்கள், அவற்றை செய்யும்போது அவை உடைந்து போகாமல் இருக்க என்ன செய்திருப்பார்கள் போன்ற எண்ணங்களை மனதில் சுமந்தபடி என் நண்பர்களுடன் சிதம்பரத்தின் அருகில் இருந்த ஆலயங்களில் காணப்பட்ட களிமண்ணால் ஆன ஐயனார் சிலைகளைக் காணச் சென்றேன். பத்தடிக்கும் உயரமான அந்த ஐயனாரின் சிலைகளின் வண்ணங்கள் மட்டுமே மங்கலாகிக் கிடந்தாலும் உருவ அமைப்பில் அவற்றில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருந்ததைக் கண்டு வியந்தேன். ஆகவே அந்த சிலைகளை செய்யும் இடத்தையும் அவற்றை செய்பவர்களையும் காண ஆவல் கொண்ட நான், இந்தியாவில் இருந்த என் நண்பர்கள் உதவியுடன் சிதம்பரத்துக்கு அருகில் இருந்த புத்தூர் எனும் கிராமத்துக்கு சென்றோம். அங்கு சிலைகளை வடிவமைக்கும் குறிப்பிட்ட இனத்தவர் இருப்பதாக அறிந்து கொண்டு அங்கு சென்றோம். புத்தூருக்கு சென்று அங்கு பத்து நாட்களுக்கும் மேலாக தங்கி இருந்து ஒன்பது அடிக்கும் அதிகமான உயர ஒரு ஐயனார் சிலையை வடிவமைக்க ஒரு குயவனாரின் உதவியை நாடினோம்'



    ஊர் எல்லையில்  பாழடைந்த இடத்தில் 
     களிமண்ணால் செய்யப்பட்டு இருந்த 
    நான்கு ஐயனார் குதிரை சிலைகள்

    அந்த கிராமத்துக்கு சென்று பத்து நாட்கள் தங்கி இருந்த திரு  'ரான் டியூ போய்ஸ்'தாம் கண்ட அந்தக் கலையைக் குறித்து விளக்கமாக எழுதி இருக்கிறார். அவர் எழுதி உள்ளதைப் படியுங்கள். 'அந்தக் கிராமத்தில் நுழைந்த நாங்கள் அங்கு வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த நான்கு பிரும்மாண்டமான மண் குதிரைகளின் சிலைகளை ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்த ஆலயத்தின் அருகில், யாரும் சீண்டாமல் அனாதைப் போலக் கிடப்பதைக் கண்டோம். நான் அங்கு கண்ட சிலைகளின் அளவும், வடிவமைப்பும் அற்புதமானவை என்பது விளங்கியது. மண்பாண்ட தொழிலில் அவர்கள் கடைபிடிக்கும் கலை முற்றிலும் வேறாகவும், வினோதமாகவும் உள்ளது'.

    அந்த மண் குதிரையை செய்தது யார் என்பதோ, அது உருவாக்கப்பட்டுள்ள காலமோ அல்லது எங்கு செய்யப்பட்டது என்கின்ற விவரமோ எதுவுமே அவற்றில் காணப்படவில்லை என்பதின் காரணம் ஐயனார் குதிரைகளை வடிவமைப்பவர்கள் அதைக் குறித்த எந்த செய்தியையுமே அதில் எழுதி வைப்பது இல்லை என்பதுதான். மிகப் பெரிய அளவிலே வடிவமைக்கப்பட்ட மண்ணினால் ஆன குதிரைகளை வடிவமைத்து முடித்ததும் வெட்ட வெளியிலேயே வைத்து நெருப்பினால் சுட்டு பதமாக்குகிறார்கள். அந்த மண் குதிரைகளின் கழுத்துப் பகுதியில் காணப்படும் அணிகலன்கள் போன்ற வடிவமைப்பை மண்ணுடன் நன்கு அரைத்த வைக்கோலையும் கலந்தே வடிவமைத்தாலும், கழுத்துப் பகுதியை பொருத்தவரை அதை முழுவதிலும் களிமண்ணால் ஆன கலவையிலேயே வடிவமைக்கிறார்கள். அந்தக் குதிரைகள் மீது ஏறிக் கொண்டுதான் ஐயனார் இரவில் பவனி வந்து அந்த கிராமத்தைப் பாதுகாப்பதாக ஐதீகம் உள்ளது.

    அந்த கிராமத்தில் நுழைந்து களிமண்ணால் ஆன குதிரைகளின் உருவங்களை செய்யும் குயவர்களைத் தேடியபோது ஒரு இடத்தில் சில குடுசைகள் இருந்ததைக் கண்டதும் அங்கு சென்றோம். அந்த சிறு குடிசைகளில் சில குடும்பங்கள் இருந்ததையும் கண்டோம். அந்த குடிசை வீடுகளின் அருகில் சின்ன ஐயனார் வழிபாட்டுத் தலமும் அதன் முன்னால் மிகப் பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டு இருந்த களிமண்ணால் ஆன குதிரையும், அதனுடன் சேர்த்து இரண்டு காவலாளிகளின் சிலைகளும் குதிரையின் கீழ் பகுதியில் வடிவமைக்கப்பட்டு உள்ளதைக் கண்டோம். பெரிய நகரங்களில் உள்ள ஆலயங்களைப் போல அல்லாமல் கிராமங்களில் இருந்த ஐயனாரின் வழிபாட்டுத் தலங்கள் கிராமப்புற பின்னணியில் ஒதுக்குப்புறமான இடங்களில், சுற்றிலும் மரங்கள் அடர்ந்திருந்த இடங்களில் அமைக்கப்பட்டு இருந்துள்ளன. சிவனுக்கும், விஷ்ணுவிற்கும் பிறந்தவரே ஐயனார் எனக் கூறப்படும் கதையின் பின்னணியில், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாகத்தான் ஐயனாரும் இந்துக் கடவுட்களின் மத்தியில் ஒரு சின்ன தெய்வமாக ஏற்கப்பட்டு உள்ளார் என்பதை அறிந்து கொண்டோம்.

    கிராமத்து மக்கள் ஐயனாரின் கையில் காணப்படும் பட்டாக்கத்தி போன்ற வாளில் தமது குறைகளை எழுதி வைத்து அவற்றை களையுமாறு ஐயனாரை வேண்டுவார்களாம். ஒவ்வொரு நாள் மாலையிலும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அந்த வழிபாட்டுத் தலத்துக்கு வந்து ஐயனாரை வழிபட்டதை தமது தினக் கடமைப் போல செய்து கொண்டிருந்ததைக் கண்டோம்.

    அந்த கிராமத்தில் கடைசியாக செய்யப்பட்ட ஐயனாரின் சிலை சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்டதாம். அவர்களது கலையைக் கண்டு வியந்த நான் எங்களுக்காக ஒரு சிலையை வடிவமைத்துக் காட்ட முடியுமா என்று ஆவலுடன் கேட்டபோது முதலில் சற்று தயங்கியவர்கள், பின்னர் எங்களுக்காக அதை செய்து காட்ட சம்மதித்தார்கள். ஒரு ஐயனார் குதிரை சிலையை வடிவமைத்துக் காட்ட சன்மானமாக ஐநூறு ரூபாயையும் பேரம் பேசி முடித்தோம். அதற்கு ஒப்புக் கொண்ட அந்த தொழிலாளிகள் மறுநாள் காலை அதை துவக்குவதாக உறுதி அளிக்க, மறுநாள் காலை நாங்கள் அந்த கிராமத்தை அடைந்தோம்.

    எங்களுக்காக வடிவமைத்த ஐயனார்
    சிலையை செய்த நான்கு பேர்களில்
    ஒருவரான கலிய பெருமாள்

    நாங்கள் சென்ற சின்ன ஆலயத்தில்
    சாமி ஏறியதாக கூறப்பட்டு மயக்க
    நிலையில் நின்றிருந்தப் பெண்மணி

    1980 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி.  ஐயனார் சிலையை வடிவமைக்கத் துவங்கிய முதல் நாள் நாங்கள் அந்த கிராமத்தினரிடம் கூறி இருந்ததைப் போல சரியான நேரத்தில் அங்கு சென்றதும் ஐயனார் பவனி வரும் குதிரையை வடிவமைக்கத் துவக்கும் முன்னால் அந்த சிலை நல்லபடியாக வடிவமைக்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த குயவர்கள் சிறிய பூஜையை செய்து விட்டு சிலையை வடிவமைக்கத் துவங்கினார்கள்.

    வெட்டி எடுத்து வரப்பட்ட ஒரு சேவலின் தலையில் இருந்து ரத்தம் சிந்திபடி இருக்க அந்த ரத்தத்தை கையில் பிடித்து எடுத்து எந்த இடத்தில் சிலையை செய்ய இருந்தார்களோ அந்த இடத்தை சுற்றி தெளித்தார்கள். தேங்காயை உடைத்து அவற்றின் மூடிகளை இரு பக்கங்களிலும் வைத்தார்கள். ஐயனாருக்கு படைக்கப்பட்ட படையலில் அந்த ஊரிலேயே தயாரிக்கப்பட்டிருந்த கள் எனும் சாராயமும் இருந்தது. ஐயனாருக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடித்தப் பின்னர் ஐயனார் அருள் கிடைத்து விட்டதாகக் கருதி ஐயனார் பவனி வரும் குதிரையின் சிலையை செய்யும் பணியினை துவக்கினார்கள்.

    ஐயனார் குதிரையை வடிவமைக்க குளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மணலையும் களிமண்ணையும் கொண்ட கலவையை  முதல் நாளே செய்து வைத்திருந்தார்கள். அவற்றின் மேல் படிந்து இருந்த வண்டலை நீக்கிவிட்டு அவ்வப்போது சிறிது சிறிதாக தண்ணீரை விட்டு பிசைந்து களிமண் கலவையைப் பதப்படுத்தினார்கள். ஆனால் வெறும் களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட்டால் அது மழைக் காலத்தில் வெடிப்புக்களை ஏற்படுத்தலாம், உடைந்தும் விடலாம், அல்லது சிதைவும் அடையலாம் என்பதினால் அந்தக் களிமண்ணுடன் மூன்று பங்கு அளவில் உமி மற்றும் ஒரு பங்கிற்கு மூன்று அல்லது நான்கு அங்குல நீட்டமாக வெட்டப்பட்டிருந்த வைக்கோல் போன்றவற்றைக் கலந்து நன்றாக பிசைந்து கலவையை செய்தார்கள்.

    முதலில் குதிரையின் குளம்பு
    எனப்படும் பாதம் அமைக்கப்படுகிறது 

    அவருக்கு பின்னால் இருப்பது 
    நூறு வருடங்களுக்கு முந்தைய 
    குதிரையின் சிலை ஆகும்


    பின்னர் ஒவ்வொன்றாக நான்கு கால்களும் 
    வடிவமைக்கப்பட்டன

    முதலில் பூமியில் 12 அங்குலத்துக்கு 12 அங்குல அளவு குழியை வெட்டினார்கள். பிறகு அதை சுற்றி அரிசி உமி கலந்த களிமண்ணை குதிரையின் குளம்பு எனப்படும் பாதம் போன்ற அமைப்பில் செய்து வைத்தார்கள். அதன் பின் அந்த 12 அங்குல வட்டவடிவமான களிமண் அமைப்பின் மேல் சுமார் 16 அங்குல வட்ட வடிவிலேயே, மண் கலவையைக் கொண்டு வட்டமாகவே சுவர்போல எழுப்பினார்கள். அதன் பின் இன்னொரு குயவர் சுமார் ஆறு அடி உயரமான மூங்கில் கட்டையை அந்த வட்டவடிவிலான மண் சுவற்றின் நடுவில் வைக்க அந்த மூங்கில் கட்டையை சுற்றி இருந்த வெற்று இடத்தை அடிப்பாகம்வரை களிமண் கலவை கொண்டு முழுமையாக நிறப்பினார்கள். இப்படியாக சுமார் ஆறு அடி உயர அமைப்பில் நான்கு கால்களும் தயாராயின.

    இரண்டு கால்களின் நடுவிலும் வயிற்றை தாங்கிப் பிடிக்க
    ஒரு தூண் போன்ற அமைப்பு செய்யப்படுகிறது

    அதை செய்து முடித்ததும் மறுநாள் வரை மேலும் எதுவும் செய்யாமல் அந்த வடிவமைப்பை நன்கு காய்ந்து போகுமாறு அப்படியே விட்டு வைப்பார்கள். வெயிலின் அளவு அன்றைக்கு சுமார் 112 F டிகிரி அளவில் இருந்தது. அந்த களிமண் கலவைக் காய அத்தனை உஷ்ணம் தேவையாம். பிறகு மீண்டும் மறுநாள் அதன் மீது நான்கு கால்களையும் சேர்க்கும் விதங்களில் மூங்கில் கட்டைகளை பக்குவமாக அவற்றின் மீது வைத்தப் பின் அவற்றை வைக்கோலில் செய்த கயிற்றினால் கட்டிய பின்னர் கால்களை கனமாக வடிவமைக்க நான்கு அங்குல தடிமன் அளவு களிமண்ணை கால்களை சுற்றி அனைத்து பகுதியிலும் மீண்டும் பூசி விடுவார்கள். மறுநாள் அவர்கள் செய்து முடித்திருந்த முன்னாங்காலின் உயரம் 44 அங்குலமாகவும், கால்களின் தடிமன் 17 x 38 அங்குல சுற்றளவாகவும் இருந்தது. அதன் பின் மீண்டும் அந்த நான்கு கால்களையும் இணைத்து கட்டி வைக்கப்பட்டு இருந்த மூங்கில் மீது பக்குவமாக்கி கலந்து வைத்திருந்த களிமண்ணை கால்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணையும் வகையில் பூசி களிமண் கலவையினால் இணைத்தார்கள். அவற்றை செய்து முடித்ததும் அவை நன்கு காய்ந்து கெட்டியாகும்வரை அப்படியே அங்கேயே அசையாமல் இருக்குமாறு விட்டு வைத்தார்கள்.

    மாதிரிப் படங்கள் எதையும் வைத்திருக்காமல்
    நடுத் தூணில் உருவம் வடிவமைக்கப்படுகிறது

    முன் கால்கள் மற்றும் பின்னங்கால்கள் இரண்டையும் ஒன்றுடன் ஒன்றாக சேரும்வகையில் களிமண்ணால் பூசிய வடிவமைப்பு அந்தக் கால்களின் மீது சின்ன தொட்டியை வைத்தது போல காணப்பட்டது. அந்தக் கால்களுக்கு இடையே நடுப்பகுதியில் வயிற்றுப் பகுதியை தாங்கிப் பிடிக்கும் வகையில் கால்களின் உயரத்தில் தூண் போன்ற அமைப்பும் களிமண்ணினால் செய்யப்பட்டு வைக்கப்பட்டது. அந்த அமைப்புக்கள் அனைத்துமே அவற்றின் இடங்களை விட்டு நகராமல் இருக்க வைக்கோல் கட்டையினாலும் கயிற்றினாலும் கட்டி வைக்கப்பட்டது. இப்படியாக செய்யப்பட்ட அனைத்து பாகங்களையும் சுட்டெரிக்கும் வெய்யிலில் நன்கு காயுமாறு அப்படியே விட்டு வைத்து விடுகிறார்கள்.

    நடுத் தூணின் ஒருபக்கம் களிமண்ணால்
    வடிவமைக்கப்படும் உருவம்

    நடுத் தூணின் இன்னொரு பக்கம்
    களிமண்ணால் வடிவமைக்கப்படும் உருவம்

    கீழ் வயிற்றுப் பகுதிக்கு உள்ளே மேல் வயிற்றுப்  பகுதி 
    சரியாமல் இருக்க வைக்கப்படும்  மூங்கில் கட்டைகள் 

    அடுத்தது வயிற்றுப் பகுதியை வடிவமைத்தார்கள். அந்தப் பகுதியையும் மண் கலவையினால் நன்கு வடிவமைத்து முடித்தப் பின்னர் அது காயும்வரை அடிப்பாகத்தில் வைக்கப்பட்டு இருந்த தூண் போன்ற பகுதியின் மீது களிமண்ணைக் கொண்டு சின்ன ஐயனார் சிலைப் போன்ற காவல் தெய்வங்களின் சிற்பங்களை வடிவமைத்தார்கள். தூண் போன்ற அமைப்பின் இருபுறமும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன. அந்தக் கலையில் தேர்ச்சி பெற்றக் குயவர்கள் அந்த சிற்பங்களை எந்தவித அளவுகோளையோ அல்லது மாதிரிப் படத்தையோ வைத்துக் கொண்டு வடிவமைக்காமல் இயற்கையாக அவர்களுக்கு கைவந்துள்ள கைக் கலைக் கொண்டு வடிவமைக்கிறார்கள். அந்தக் கலைதான் அவர்களுடைய மிகப் பெரிய பலம் ஆகும்.

    பாதி அளவே எழுப்பப்பட்ட வயிற்றுப் பகுதிக்குள் 
    கட்டைகள் குறுக்கும் நெடுக்குமாக வைக்கப்படுகின்றன

    மெல்ல மெல்ல வயிற்றுப் பகுதி
    மேலேழுப்பப்படுகிறது

    கால்கள் முதல் மெல்ல மெல்ல வயிற்றுப் பகுதி
    வரை அலங்கார சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன 

    அதைப் போலவே கால்கள் மற்றும் பாதி உயர அளவிலேயே வடிவமைக்கப்பட்டு வைத்திருந்த வயிற்றுப் பகுதிகளில் அற்புதமான கலைநயமிக்க அணிகலன்களின் வடிவமைப்புக்கள், சலங்கைகள், மணிகள் போன்றவற்றின் உருவ வடிவமைப்பும் மற்றும் அமரும் ஆசன இருக்கை போன்றவற்றையும்  கலையழகு மிக்கவாறு  வடிவமைத்தார்கள்.

    இப்படியாக களிமண் கலவையைக் கொண்டு முதல் ஐந்து நாட்களிலும் அன்றாடம் ஒவ்வொரு பகுதியையும் மிக்க கவனத்துடன் வடிவமைத்ததும் ஆறாம் நாளன்று பாதி அளவே வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த வயிற்றுப் பகுதியின் உள்ளே மூங்கில் கட்டைகளை முன்னங்கால் மற்றும் பின்னங்கால் பகுதிகளை இணைக்கும் வகையில் குறுக்கும் நெருக்குமாக வைத்தப் பின் வயிற்றுப் பகுதியை முழுமையாக்கும் விதத்தில் மேல் வயிற்றுப் பகுதியின் முதுகுப் பகுதி மூடி உள்ளது போல அமைந்திருக்கும் வகையில் களிமண் கலவையைக் கொண்டு சுவர் போல எழுப்பியவாறு களிமண் கலவையைப் பூசி  மூடி விடுவார்கள்.

    கால்கள் முதல்  வயிற்றுப் பகுதி முழுவதுமாக 
    வடிவமைக்கப்பட்ட  பின்னர் கால்கள் மற்றும் 
    வயிற்றுப்  பகுதிகளில் அணிகலங்கள் போன்ற 
    சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன 

    அந்த வயிற்றுப் பகுதிக்குள் முன்னர் வைக்கப்பட்டு இருந்த மூங்கில் மரக்கட்டைகள் வயிற்றுப் பகுதி மீது பூசப்படும் சுவர் போன்ற களிமண் கலவையை அப்படியே தாங்கிப் பிடித்தவாறு இருக்க உதவுகின்றது. வயிற்றுப் பகுதியின் சுவர்களை கனமான சுவர்போல எழுப்பாவிடில் அவை உடைந்து கீழே விழுந்து விடும். ஒருமுறை மண்கலவை காய்ந்து விட்டால் அதற்குப் பிறகு அது உடையாது.  அதன் காரணம் அவற்றின் தடிப்பு மிக அதிகமாகவே இருப்பதுதான்.  இதனால் களிமண் கலவையைக் கொண்ட முதல் சுற்று  சுவர் நன்கு காய்ந்ததும் அனைத்தின் மீதும் மீண்டும் ஒரு அடுக்கு களிமண் கலவை சுவர் போல பூசப்பட்டு அதன் மீது அலங்கார வடிவமைப்புக்கள் செய்யப்படுகின்றன. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. வடிவமைப்பு அடர்த்தியான சுவர் மீது இல்லாமல் மெல்லிய சுவர் மீது வடிவமைக்கப்பட்டால் அதை வடிவமைக்கும்போதே உள்ளே வெற்றிடமாக உள்ள பகுதியில் எழுப்பட்டு உள்ள சுவர்   உடைந்து விழக் கூடும் என்ற அச்சமே என்பதினால்தால் முதல் சுற்று பூச்சு சுவர் மீது இன்னொரு பூச்சு சுவர் எழுப்பி அந்த உடல் முழுவதையும் தடிமனாக்கி விடும் வடிவமைப்பு முறை ஆகும்.  அப்படி தடிமனான சுவரை வயிறுபோல எழுப்பி காய வைத்ததும் அதன் மீதுதான் கலைநயமிக்க ஓவியங்கள் செதுக்கப்படுகின்றன.

    இப்படியாக படிப்படியாக ஆறு தினங்கள்வரை ஐயனார் குதிரை அமைப்பை வடிவமைத்ததும் ஏழாம் நாளன்று அந்த குதிரை வடிவமைப்பின் உயரம் ஒன்பது அடிவரை வளர்ந்தது. இதில் ஆச்சர்யம் என்ன என்றால் எந்த அளவையுமே அளவுகோலை வைத்துக் கொண்டு அளந்து செய்யாமல் கையினாலேயே தோராயமாக அளவெடுத்து செய்தது வியப்பாக இருந்தது  . அவர்கள் குதிரையின் நீட்டத்தை பதிமூன்று முழமாகவும், ஒவ்வொரு காலும் நான்கு நான்கு முழ நீளமுமாக இருக்கும் வகைக்கு அளந்து வடிவமைத்தார்கள் (ஒரு முழம் என்பது ஒரு மனிதரின் விரல் நுனி முதல் கை முட்டி வரையிலான தூரம் ஆகும்). அப்படி தோராயமாக அளவெடுத்து செய்தாலும் வடிவியல் வடிவமைப்புக்கள் (Geometrical) அனைத்துமே தாறுமாறாக இல்லாமல் ஒன்றுடன் ஒன்று ஓத்து இருந்தது ஆச்சர்யமாகவே இருந்தது. இந்தக் கைக் கணக்கிலான அளவு முறைகளின் பக்குவம் பரம்பரைப் பரம்பரையாக தந்தையிடம் இருந்து மகனுக்கு போதிக்கப்பட்டு வந்துள்ளன.

    அவர்கள் வடிவமைத்த முகங்களும், தோரணைகளும் பல இந்துக் கடவுட்களின் முகங்களையும் பாவனைகளையும் ஒத்திருந்தது. அவற்றையும் கூட வரைந்து வைத்திருந்த எந்தவிதமான சித்திரங்களையும் பார்த்துப் பார்த்து வடிவமைக்காமல் மனதில் இருந்தே பிம்பங்களின் உருவங்களை கைவிரல்களில் பாய்ச்சி அந்தக் வடிவமைப்பை செய்தது விவரிக்க இயலாத வியப்பைத் தரும் உண்மை நிலையாகும் .

    வயிற்றுப் பகுதியின் அனைத்து பக்கங்களிலும் களிமண் 
    கலவையைக் கொண்டு கலைநயமிக்க சித்திர
    வேலைகள் கொண்ட உருவங்கள் அமைக்கப்பட்டன

    அது போலவே கழுத்துப் பகுதியிலும் சித்திர
    வேலைபாட்டுடன் கூடிய அணிகலன்கள்
    போன்ற வடிவங்கள் அமைக்கப்பட்டன


    கலைநயமிக்க சித்திர வேலைபாடுகள்
    கொண்ட வடிவமைப்புக்கள்

    ஒன்பதாம் நாள் ஐயனார் குதிரையின் கழுத்துப் பகுதி, முதுகுப் பகுதி, குதிரையின் பின் மற்றும் வால் பகுதிகள் போன்ற அனைத்தும் வடிவமைக்கப்பட்டு முடிந்திருந்தன. பத்தாவது நாளன்று முகமும் வடிவமைக்கப்பட்டு அது கீழே விழுந்து விடாமல் இருக்க சங்கிலி போன்றஒருவிதமான பிடிப்பும் முகத்தை பிடித்தபடி இருக்கும் வகையில் வைக்கப்பட்டது.  பத்தாம் நாளன்று காலையிலேயே அவற்றை செய்து முடித்தப் பின்னர் அதுவரை செய்யப்பட்டு இருந்த வடிவமைப்புக்கள் அனைத்தும் நன்கு காய்வதற்கு வசதியாக மறுநாள்வரை தகிக்கும் வெய்யிலில் இருக்குமாறு அப்படியே விட்டு விடப்பட்டது.

    வடிவமைக்கப்பட்ட குதிரையை சுற்றி முதலில்
    மாட்டு சாணத்தைக் கொண்ட கலவையை
    சுவர் போல எழுப்பினார்கள்

    வடிவமைக்கப்பட்ட குதிரையை சுற்றி சுவர் போல 
    எழுப்பிய மாட்டு சாணத்தைக் கொண்ட கலவை மீது 
    அங்காங்கே உடைந்த மண் சட்டியையும் வைத்தார்கள்

    வைக்கோலைக் கொண்டு குதிரை 
    முழுவதுமாக மூடப்பட்டது

    அதன் மீது சாணத்தினால் செய்த வரட்டி
    மற்றும் மண் பானைகள் வைக்கப்பட்டன


    முடிவாக அனைத்திற்கும் தீ மூட்டி
    அவற்றை முழுமையாக எரிய விட்டார்கள்

    பதினோறாம் நாள் முடிவில் குதிரையின் வடிவமைப்பு முழுமையானதும் பன்னிரண்டாவது நாளன்று அந்த ஐயனார் குதிரையை சுற்றி ஐந்தடி உயரத்துக்கு சாணத்துடன் கூடிய களிமண்ணைக் கொண்டு சுவர் போன்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். அதற்குள் வைக்கோல், மரக் கட்டைகள், சாணத்தினால் ஆன வறட்டி போன்றவற்றை கொண்டு வந்து நிறப்பினார்கள். அவற்றை வைத்து குதிரையின் சிலையை முழுமையாக மூடியதும் அனைத்திற்கும் தீ வைத்தார்கள். நெருப்பு குபுகுபுவென எரியத்  துவங்கியது. வடிவமைத்த அந்த விசேஷ களிமண் கலவையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட களிமண் குதிரையை அப்படி நெருப்பினால் சுட்டெரித்தால்தான் அந்த ஐயனார் குதிரை வலுப்பட்டு எத்தனை ஆண்டானாலும் மழையினாலோ அல்லது வெய்யிலினாலோ பாதிக்கப்படாமல் இருக்குமாம். ஒரு குறிப்பிட்ட மணிநேரம்வரை அப்படியே எரிய விடுவார்கள். தீ அணைந்து விட்டாலும் அதை அப்படியே இரவு முழுவதும் இருக்குமாறு விட்டு வைத்தார்கள். மறுநாள் காலை தீ வைத்து எரித்ததினால் கிடந்த சாம்பலை அப்புறப்படுத்தி அனைத்தும் எடுக்கப்பட்டு சுத்தப்படுத்தப் பின்னர் வடிவமைக்கப்பட்ட அந்த ஐயனார் குதிரைக்கு விதவிதமான வண்ணம் பூசி அழகூட்டிய பின்னர் ஐயனார் அதில் ஏறி பவனி வர தயார் நிலையில் வைத்தார்கள். இப்படியாக வடிவமைக்கப்படும் ஐயனார் குதிரையின் சிலையை எந்த வழிபாட்டுத் தலத்தில் வைக்க வேண்டுமோ அங்கு எடுத்துச் சென்று விடுவார்கள்.

     -----------------------------------
    The condensed version of the article above is based on “Larger than life: The Terracotta sculptures of India” written by Shri Ron Du Bois, Emeritus Professor of Art in Oklahoma State University,USA.  His personal experience on the art of making terracotta images in a village called Puthur in Tamilnadu appeared in the site Ethnoflorence, a site that publishes articles connected to art and Sculptures of different parts of the world. All the pictures in the article as reproduced above have been provided by Mr.Ron du Bois {(1)(2)} himself. My sincere thanks to him for according permission to use any of his articles in appropriate manner in my blogger.

    நன்றி:- இந்த மூலக் கட்டுரை அமெரிக்காவின் ஒக்லஹோமா பல்கலைக் கழகத்தில் ஓவியமும் கைவினையும் குறித்து போதனை செய்யும் ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ரான் டியு போய்ஸ் ( Ron Du Bois: http://www.angelfire.com) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த புதூர் எனும் கிராமத்துக்கு சென்று அங்கு களிமண்ணில் வடிவமைக்கப்படும் கலையினை நேரிலே கண்டு அதை தனது அனுபவமாக Ethnoflorence எனும் இணையதளத்தில் எழுதி உள்ள கட்டுரையின் அடிப்படையில் சுருக்கி எழுதப்பட்டு உள்ளது.  இவற்றில் காணப்படும் படங்களும் திரு ரான் டியு போய்ஸ் கட்டுரையை சார்ந்தவையே. அவருடைய கட்டுரைகளும் படங்களும் Ethnoflorence எனும் இணைய தளத்தில்Larger than Life: The Terracotta sculptures of India  வெளியாகி உள்ளன. அவருடைய அனைத்துப் படங்களையும் கட்டுரையையும் என்னுடைய கட்டுரைக்கு ஏற்ப தகுந்த விதத்தில் பயன்படுத்திக் கொள்ள எனக்கு விசேஷ அனுமதி தந்துள்ள அவருக்கு நன்றி.

    Grama Devatha

    $
    0
    0
    பெங்களூர்  மத்திய
    பகுதியில்  காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தேவதை 
    ஆலயங்கள்

    சாந்திப்பிரியா

    தெற்கு பெங்களூரில் உள்ள சில முக்கியமான பகுதிகளே பிலகஹல்லி, ஹுலிமாவு, அரிக்கரே, பொம்மனஹல்லி மற்றும் பேகூர் போன்ற பகுதிகள் ஆகும். இவை அனைத்துமே சுமார் ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உள்ளன. முன் ஒரு காலத்தில் இவை அனைத்துமே கிராமமாக இருந்துள்ளன. அதற்கு பல காலத்துக்கும் முன்னால் இவை அனைத்துமே பெரிய வனப் பிரதேசமாகவே இருந்துள்ளது என்கிறார்கள். பின்னர் காடுகள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு கிராமங்கள் ஆயின. தற்போது கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குள் இந்தப் கிராமப் பகுதிகள் பிரபலமாகி நகரத்துடன் இணைந்துள்ளன.

    இந்தப் பகுதிகள் கிராமமாக இருந்தபோது அந்த கிராமத்து மக்கள் குடும்பம் குடும்பங்களாக வழிபட்டு வந்துள்ள பல கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்கள் அங்குமிங்குமாக இருந்துள்ளன. இப்படியாக சுமார் இருபது முதல் முப்பதுக்கும் மேற்பட்ட கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்கள் இன்றும் அழியாமல் காப்பாற்றப்பட்டு வந்துள்ளது மட்டும் அல்லாமல், அவற்றில் சில சிறு ஆலயங்களாகவும் உருவெடுத்து உள்ளன. அந்த கிராம ஆலயங்களில் வழிபட்டு வந்துள்ளவர்கள் வேறு சில இடங்களுக்கு சென்று வாழ்ந்து கொண்டிருந்தாலும் இன்றும் அவர்கள் முன்னர் வழிபட்டு வந்திருந்த அந்த கிராம தேவதை ஆலயங்களுக்கு சென்று வழிபடுகிறார்கள். இதுவே பக்தி மார்கத்தின் அடையாளம். இந்தப் பகுதிகளில் காணப்படும் கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்களில் முக்கியமான சில :

    1) மாரியம்மனின் பல்வேறு அவதார அம்மன்கள்
    2) முனீஸ்வரர்
    3) வீரபத்திரர்
    4) ராகு மற்றும் கேது
    5) நாகம்மா எனப்படும் பாம்புப் புற்றுக்கள்

    இங்குள்ள பகுதிகளில் காணப்படும் அம்மனை சார்ந்த கிராம தேவதை ஆலயங்கள் பெரும்பாலும் மாரியம்மனை சார்ந்த எல்லம்மா, முனியம்மா, லகுவம்மா, கெம்பம்மா, சௌடேஸ்வரி, நாகம்மா மற்றும் நாடம்மா என்ற பெயர்களில் உள்ளன. அம்மன் அவதாரத்தை சார்ந்த அந்த கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்கள் அனைவரது தலையிலும் நாகங்கள் படமெடுத்து குடை பிடித்து நிற்கும் காட்சி உள்ளது .

    அது போல ஆண் கிராம தெய்வங்களில் பெரும்பாலானவை முனீஸ்வரர் மற்றும் வீரபத்திரராக உள்ளதும் நாக உருவுடன் கூடிய ராகு மற்றும் கேதுவும் காணப்படுகின்றன. முனீஸ்வரர் வழிபாடு உள்ள வீடுகளில் எந்தவிதமாக ஏவல் மற்றும் பில்லி சூனியங்களின் பாதிப்பு இருக்காது என்பது நம்பிக்கை. அதனாலோ என்னவோ முனீஸ்வரர் வழிபாடு இந்தப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

    இந்த ஐந்து பகுதிகளிலும் உள்ள கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்களின் வழிபாட்டு தலங்களில் பாறையில் நாக உடலுடனான ராகு மற்றும் கேதுவின் உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. ராகு மற்றும் கேதுவின் சிலை இல்லாத தலமே இல்லை என்பதைக் காணும்போது வியப்பாக இருந்தது. அது மட்டும் அல்லாமல் அங்காங்கே பல அரச மரங்களின் அடியில் ராகு மற்றும் கேதுவின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளதும் ஒரு காலத்தில் ராகு மற்றும் கேதுவின் வழிபாடு இந்த கிராமங்களில் மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. சாதாரணமாக அரச மரத்தின் அடியில் வினாயகர் வழிபாட்டுத் தலங்கள் அதிகம் இருக்கும் என்பார்கள். ஆனால் இங்கோ ராகு மற்றும் கேதுவின் வழிபாட்டுத் தலமே பெருமளவில் அரச மரங்களின் அடியில் காணப்படுகிறது. அது மட்டும் இல்லை, அந்த ராகு மற்றும் கேதுவின் வழிபாட்டுத் தலங்களில் பாம்புப் புற்றும் வழிபடப்பட்டு வருகிறது. ராகுவையும் கேதுவையும் வணங்கும்போது அந்த புற்றுக்கும் பாலூற்றி, மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு அந்த புற்றையும் சேர்த்தே பூஜிக்கிறார்கள்.

    அதைக் குறித்து ஒரு பண்டிதரிடம் கேட்டபோது அவர் இவ்வாறாகக் கூறினார் ''ஒரு காலத்தில் பிலகஹல்லி முதல் அரேகேரே, ஹுலிமாவு, பொம்மனஹல்லி போன்ற அனைத்து இடங்களும் அடர்ந்த காட்டுப் பகுதிகளாக இருந்ததினால் வனத்தில் நாகங்கள் மிகவும் அதிகம் இருந்தன. அவை பலவும் புற்றில் வசித்து வந்தன. அப்படி புற்றுக்களில் வசித்த நாகங்கள் வெறும் பாம்புகள் இல்லை. அவற்றில் பெரும்பாலானவை நாக தேவதைகள். தமக்கு கிடைத்த சாபங்களுக்கு விமோசனம் பெறுவதற்கு பூலோகத்துக்கு வந்து அடர்ந்த வனப்பிரதேசங்களில் தங்கி இருந்த அம்மன் ரூபிணி தெய்வங்களுக்கு துணையாக இருக்க பூமிக்குள் இருந்த நாக லோகங்களில் இருந்து வெளி வந்து பூலோகத்தில் வந்து தங்கி இருந்தவை அந்த நாக தேவதைகள். அதனால்தான் இந்தப் பகுதிகளில் பாம்பு கடித்து இறந்தவர்கள் மிகவும் அரிதாகும். நாகதேவதைகளை அதிகம் ஆராதிக்கும் இடங்களில் நாகங்கள் மனிதர்களை சீண்டுவது இல்லை''.

    பண்டிதர் தொடர்ந்து கூறினார் ''இரண்டாவதாக ராகுவும், கேதுவும் விஷ்ணுவினால் பாம்பு வடிவம் பெற்று கிரக அந்தஸ்தை அடைந்தவை என்றாலும் அவை நாக வடிவமும் பெற்று இருந்ததினால் பூலோகத்தில் பாம்புப் புற்றுக்களையே தமக்கு வசிக்கும் இடமாக வைத்துக் கொண்டார்கள். எப்படி நாக அம்மன் (மாரியம்மன் குடும்ப அவதாரங்கள்) அவதாரங்களுக்கு பாம்புப் புற்று அவை வசிக்கும் இடமாயிற்றோ அது போலவேதான் ராகு மற்றும் கேதுவும் பாம்புப் புற்றில் வசித்ததினால் ராகு மற்றும் கேதுக்களின் தோஷத்திற்கு பரிகாரம் செய்ய பாம்புப் புற்றுகளில் பால் ஊற்றுவதும், புற்றை வலம் வந்து வழிபட்டதும் நாகதோஷங்களை விலக்கிக் கொள்ள செய்யப்பட்டு வந்திருந்த வழிபாடாயிற்று. எந்த பாம்புப் புற்றில் ராகு மற்றும் கேது இருந்தார்களோ, எந்த பாம்புப் புற்றில் அம்மனும் நாக தேவதைகளும் வசித்தார்கள் என்பதும் எவருக்கும் தெரியாது என்பதினால் பொதுவாக பாம்புப் புற்றின் வெளியில் ராகு மற்றும் கேதுவுக்கு சிலைகள் வைக்கப்பட்டு அங்கேயே அவையும் வழிபடப்பட்டு வந்துள்ளன.

    மேலும் அம்மன் அவதாரங்கள் அனைத்துமே பார்வதியின் பல்வேறு ரூப அவதாரங்களே என்பதினால், அந்த அவதாரங்களில் பாம்புப் புற்றில் வந்து வசிக்கும் பார்வதிக்கு காவல் தெய்வமாக, ஷேத்திர பாலகர்களாக ராகுவும் கேதுவும் புற்றுக்களின் வெளியில் காணப்படுகின்றனர் என்பதும் இன்னொரு நம்பிக்கையாக இருந்துள்ளது. இதன் விளைவாகவே அரச மரங்களின் அடியில் காணப்படும் பாம்புப் புற்றுக்களும், அவற்றின் வெளியில் வைக்கப்பட்டு உள்ள ராகுவும் கேதுவும் ஊர் காக்கும் கிராம தேவதைகளாக, காவல் தெய்வங்களாக பார்க்கப்பட்டு, வணங்கப்பட்டு வந்துள்ளன. காலம் காலமாக வாய்மொழியாகவே கூறப்பட்டு வரும் இந்த உண்மைகளை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. யாராருக்கு பிராப்தம் உள்ளதோ அவர்கள் மட்டுமே இவற்றை யார் மூலமாவது கேட்டு அறிந்து அதை பிறருக்கும் கூற முடியும் என்பதே இதன் தேவ ரகஸ்யமாகும்''. அந்த பண்டிதர் இப்படியாக தீர்கமாகக் கூறியது என் மனதில் ஆழப்பதிந்தது. காலம் காலமாக வாய்மொழி வழியாக கூறப்பட்டு வரும் இப்படிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையிலான செய்திகள் எந்த அளவுக்கு உண்மையோ, ஆனால் அந்தப் பண்டிதர் கூறியவற்றில் பல விஷயங்கள் நம்மை சிந்திக்க வைப்பவை, நமக்கு தெரியாமல் உள்ளவை என்பது உண்மை ஆகும்.

    சில பிரிவினருக்கு சில கிராம தேவதைகள் குல தெய்வமாகவும் இருந்துள்ளது. இங்குள்ள பல கிராம தேவதை ஆலயங்களின் பின்னணியில் பெரிய வரலாறு எதுவும் இல்லை, அவற்றின் காலமும் தெரியவில்லை என்றாலும், அந்த கிராம தேவதைகளை இனம் தெரியாத அளவு பக்தியோடு அங்கு வந்து மக்கள் வணங்குவதைக் காணும்போது ஆச்சர்யமாக உள்ளது. காலம் தெரியாமல் வணங்கப்பட்டு வந்திருந்த அந்த கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்களை அவை எங்கு முதலில் இருந்தனவோ அங்கேயே அவற்றுக்கு கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஆலயங்களை எழுப்பி பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

    இதில் இன்னொரு முக்கியமான செய்தியும் கூற வேண்டி உள்ளது. அந்த கிராம தேவதை ஆலயங்களில் இன்று சிலை வடிவில் உள்ள பல தேவதைகள் ஒரு கல் உருவிலேயே அந்தக் காலத்தில் இருந்துள்ளன. அவற்றுக்கு வெகு காலத்துக்குப் பின்னரே வடிவம் தரப்பட்டு சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இந்த நிலை இல்லை. சில வழிபாட்டுத் தலங்கள் ஆலயங்களாக உருவெடுத்தப் பின்னரும் எந்தக் குத்துக் கல் தெய்வமாக வழிபடப்பட்டதோ அதை மாற்றாமல் அதன் மீது அந்த தெய்வத்தை பிரதிபலிக்கும் உருவம் கொண்ட கவசத்தை போட்டு ஆராதிக்கிறார்கள். இன்னும் சிலவற்றில் முதலில் ஆராதிக்கப்பட்டு வந்திருந்த அந்த பிரதான தெய்வக் கல்லின் மேல்பகுதியில் அந்தக் கடவுளின் வடிவச் சிலையை வடிவமைத்து பிரதிஷ்டை செய்து இரண்டையும் சேர்த்தே பூஜிக்கிறார்கள்.

    அதன் விளக்கத்தை அந்தப் பண்டிதரிடம் கேட்டபோது அந்தப் பண்டிதர் கூறினார் ''அதன் காரணம் அந்தக் குத்துக் கல்லில் உள்ள தெய்வத்தின் சக்தியை வெளியில் எடுக்க இயலாது என்பதினால் அதன் உருவச் சிலைக்கு பூஜை செய்து அந்த சிலைக்கும் மந்திர சக்தியை மெல்ல மெல்ல ஏற்றுகிறார்கள். இதன் அடிப்படைக் காரணம் பூஜிக்கப்படும் கடவுளை ஒரு உருவ வடிவில் பார்க்கும்போதுதான் வணங்குபவர்களுக்கும் தாம் யாரை வணங்குகிறோம் என்பது புரியட்டும், அவர்கள் மனதில் அந்தக் கடவுளின் பிம்பமும் பதிகிறது என்பதற்காக பிற்காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள்''.

    இன்னும் சில கிராம தேவதைகளை எந்த மாறுதலுக்கும் உட்படுத்தாமல் அவற்றை சுற்றி சுவர் மட்டுமே எழுப்பி வழிபாட்டுத் தலங்களை அமைத்து உள்ளார்கள். சிலவற்றை அவை குடியிருந்த அதே மரங்களின் அடியில் எந்த மாறுதலுக்கும் உள்ளாக்காமல் அவற்றை சுற்றி சுவர் கூட எழுப்பாமல் திறந்த வெளியில் அப்படியே வைத்திருந்து வழிபடுகிறார்கள். வெயில், மழை என எந்த காலத்திலும் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதில் அந்த தலங்களில் புற்றுக்களாக உள்ள நாகம்மாவும் அடக்கம்.

    மரத்தடியில் உள்ள கிராம தேவதைகளையோ, காவல் தெய்வங்களையோ அல்லது பாலூற்றி வணங்கப்பட்டு வந்துள்ள புற்றுக்களையோ அப்புறப்படுத்தினாலோ அல்லது அவற்றை மாறுதலுக்கு உட்படுத்தினாலோ அவற்றில் குடி உள்ளதாக நம்பப்படும் தெய்வங்கள் அவற்றை ஏற்காது, மாறாக அவற்றின் சக்தியை இழந்து விடும், நாக தோஷம் வந்து சேரும் என்பதான நம்பிக்கையும் உள்ளது. ஆனால் அவற்றில் சில கிராம தேவதைகள் ஆலயங்களாக உருவெடுக்கக் காரணம் அந்த தேவதைகள் தனக்கு ஆலயம் அமைக்குமாறு தம்மை வணங்கி வந்திருந்த சிலருக்கு கனவில் வந்து கூறியதின் பேரில், ஊர் சாமியாடிகள் மூலம் கூறப்பட்ட செய்திகள் மூலம் அமைக்கப்பட்டவை என்பதான கதையையே பெரும்பாலும் பலரும் கூறுகிறார்கள்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைந்ததுள்ளதுதான் பிலகஹல்லியின் உள்பகுதியில் அமைந்துள்ள பட்டாளத்தம்மன் ஆலயமும். ஒரு காலத்தில் பட்டாளத்தம்மன் ஆலயப் பகுதியை சுற்றி இருந்த இடத்தில் குடி இருந்த ஆண்குடியினர் பலர் ராஜாங்கங்களில் பட்டாளத்தில் போர் வீரர்களாக இருந்ததாகவும், அவர்கள் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக போருக்கு செல்வதற்கு முன்னால் இங்கிருந்த கிராம தேவதையான அம்மனை வழிபட்டு வந்திருந்ததாகவும், வெற்றி பெற்று திரும்பி வந்ததும் இந்த அம்மனுக்கு காணிக்கை செலுத்தியதாகவும், அதனால்தான் இங்குள்ள அம்மன் பட்டாளத்தம்மன் என்ற பெயரைப் பெற்றுள்ளதாகவும் கிராமக் கதைக் கூறுகிறார்கள். முன்னர் மேற்கூரை இல்லாத சின்ன வழிபாட்டு தலமாக இருந்த பட்டாளத்தம்மன் இன்று பெரிய ஆலயமாக உருவெடுத்துள்ளது என்றாலும் இந்த ஆலயம் அதிகம் வெளித் தெரியாமலேயே இருக்கிறது.

    கிராம தேவதை பட்டாளத்தம்மன்

    பிலகஹல்லி உள்ளே உள்ள பட்டாளத்தம்மன்
    ஆலயத்தில் மாரம்மா

    கிராம தேவதை பட்டாளத்தம்மன்
    ஆலயத்தில் நாகம்மா

    அது போலவேதான் பிலகஹல்லியின் உட்புறத்தில் உள்ள திரௌபதி ஆலயமும். பெங்களூரின் மத்தியப் பகுதியில் உள்ளதும், வருடாந்திர கரக ஆட்டத்துக்கு புகழ் பெற்றதும், மிகவும் பிரசித்தமானதுமான தர்மராஜா ஆலயத்துடன் சேர்ந்த சிறு ஆலயமே இதுவும் என்கிறார்கள். இந்த ஆலயமும் பிலகஹல்லியின் பிரதான சாலையில் இருந்து வெளித் தெரியாமல், உட்புறப் பகுதியில் சின்ன சாலைக்குள் அமைந்துள்ளது. இந்த வருட மார்ச் மாதம் நான்காம் தேதியன்று இந்த ஆலயத்தில் கரகம் எடுத்து விழா நடைபெற உள்ளதாக கூறினார்கள்.

    திரௌபதி -தர்மராஜா ஆலயம் முன்னால்
    உள்ள கிராம தேவதை சிலைகள்

    பிலகஹல்லியில் உள்ள இந்த ஆலயத்தின் அருகில் உள்ள இன்னொரு சிறிய சந்தில் உள்ளது கெம்பம்மா ஆலயம். அவளை பெல்லிகேரம்மா என்றும் கூறுவார்கள். சிறிய சந்தில் இருந்தாலும், கெம்பம்மாவின் ஆலயம் பெரிய அளவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்தில் கெம்பம்மாவின் இரு பக்கத்திலும் உள்ள தனித் தனி சன்னதிகளில் பரசுராமரும், மாரியம்மனும் அழகாக காணப்படுகிறார்கள். நான் சென்று இருந்த வேளையில் கெம்பம்மாவுக்கு அபிஷேகம் நடைபெற்று முடிந்து அற்புதமாக அலங்கரித்துக் கொண்டு இருந்தார்கள்.

    மாரியம்மன் குடும்பத்தை சார்ந்த அவதாரமான கெம்பம்மா தேவியை தொட்டம்மா, சுகஜம்மா, கங்கம்மா, எல்லம்மா மற்றும் லகுவம்மா என்ற பெயர்களில் அழைத்தாலும் அந்த காலத்தில் அவள் ஊருக்கு காவல் தெய்வமாக, கிராம தேவதையாக கருதப்பட்டு வணங்கப்பட்டவள். பொதுவாகவே அம்மன்கள் குடிகொண்டிருக்கும் ஊரில் உள்ள அம்மனை அவர்கள் அம்மை நோயில் இருந்து காப்பாற்றுபவள், ஊரைக் காக்கின்றாள், பஞ்ச காலத்தில் மழையைப் பொழிய வைக்கின்றாள், குழந்தைப் பேறு தருகின்றாள், குடும்பத்தைக் காக்கின்றாள், நோய்களை விரட்டுகின்றாள் என பலவாறாக கூறி ஆராதிப்பார்கள்.

    ஒரு கட்டத்தில் பல இடங்களிலும் குத்துக் கல் உருவிலேயே வழிபடப்பட்ட கிராம தேவதைகளின் வழிபாட்டுத் தலங்களில் பின்னாளில் அவற்றுக்கான உருவங்களுடன் கூடிய சிலைகளும் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டன. இப்படியாக எழுந்துள்ளது கெம்பம்மாவின் இன்னொரு ஆலயம் ஹுலிமாவு எனும் பகுதியில் உள்ளது. ஆடி அமாவாசை தினங்களில் ஹுலிமாவுவில் உள்ள கெம்பம்மாவின் ஆலயத்தில் தீ மிதித்து கெம்பம்மாவை வழிபடுகிறார்கள். நவராத்திரி தினங்களில் ஒன்பது நாளும் அவளுக்கு விதவிதமான அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள்.

    பிலகஹல்லி உள்ளே உள்ள குடியிருப்பின்
    மத்தியில் காணப்படும் முன்னர் கிராம
     தேவதையாக இருந்த கெம்பம்மாவின் ஆலயம்

    பிலகஹல்லி கிராம தேவதை கெம்பம்மா
    ஆலயத்தில் தனி
    சன்னதியில் நாகம்மா எனும் மாரியம்மன்

    பிலகஹல்லி கெம்பம்மா ஆலயத்தில்
    தனி சன்னதியில்
    கையில் கோடாரியுடன் பரசுராமர்

    ஹுலிமாவு ஆலயத்தில் உள்ள கெம்பம்மா
    ஆலயத்தில் கெம்பம்மா

    ஹுலிமாவுவில் உள்ள இன்னொரு ஆலயமான பகவதி ஆலயத்திலும் பாம்புப் புற்றுக்கு பூஜை செய்கிறார்கள். இந்த ஆலயத்தில் கொடுங்கல்லூர் பகவதி எனும் பெயரில் ஒரு காவல் தெய்வம் உள்ளது. பகவதி தேவியை விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான பகவான் பரசுராமர், அவருக்கு தொல்லை தந்து வந்திருந்த தாருகா எனும் அசுரனை அழிக்க தோற்றுவித்ததாகவும், அவளுடைய பரிவார தேவதைகளில் ஒருவளே கொடுங்கல்லூர் பகவதி என்பவள் எனும் கதை உள்ளது.

    பகவதி தேவிக்கு யுத்தத்தில் உதவுவதற்காக உருவானவளே கொடுங்கல்லூர் பகவதி எனும் காவல் தேவதை என்றும் அவளை ஆலயத்துக்குள் சன்னதி அமைத்து அதில் வைத்து பூஜிக்கக் கூடாது, அவளுக்கு பக்தர்கள் நேரடியாக பூஜை செய்யலாம், ஆனால் பகவதி ஆலயத்து பண்டிதர்கள் அவளுக்கு பூஜைகளை செய்யக் கூடாது என்பது ஐதீகம் என்பதினால் ஆலயத்தின் வெளிப்புறத்தில் பகவதி அம்மனுக்கு காவல் தெய்வமாக கொடுங்கல்லூர் பகவதியை வைத்து உள்ளார்கள்.

    ஹுலிமாவு பகவதி தேவியின் ஆலயத்தின்
    வெளியில் பகவதி தேவியின் காவல் தேவதை

    ஹுலிமாவுவின் உள்பகுதியில் காணப்படுவது இன்னும் இரண்டு கிராம தேவதை மற்றும் காவல் தெய்வ ஆலயங்கள். ஹுலிமாவுவின் கடைவீதியின் மத்தியில் உள்ளது பிடரி அம்மன் ஆலயம். இவளை நாடம்மா என்று அழைக்கிறார்கள். இவளை காளியின் அவதாரம் என்கிறார்கள். அவளுக்கு பக்கத்து சன்னதியில் உள்ளது மாரம்மாவின் வழிபாட்டு தலம். மாரம்மாவின் வழிபாட்டுத் தலம் மேற்கூரை இல்லாமல் உள்ளது. மாரம்மாவின் சிலை இல்லாமல் கல் ஒன்றையே மாரம்மாவாக கருதி வணங்குகிறார்கள். நாடம்மாவைப் பொருத்தவரை மூன்று சிறிய கற்களை மட்டுமே நாடம்மாவின் மூன்று கண்களாக பாவித்து அதை வணங்குகிறார்கள். தமிழ்நாட்டில் பிடாரி அம்மனை வழிபடுவது போல இந்த வழிபாட்டு தலத்தில் அவளை வந்து வழிபாட்டு வேண்டுபவர்கள் அதிகம் உண்டாம். ஒரு காலத்தில் இந்த பகுதி கிராமமாக இருந்தபோது அதன் காவல் தெய்வமாக நாடம்மா வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். இந்த அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்ற கோழி பலியும் தரப்படுவதாக கூறுகிறார்கள். மனதார வேண்டினால் அதை தருபவள் இந்த நாடம்மா என்றும், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், அடைக்கலம் தேடும் அபலைகள், திருமணம் ஆகாத பெண்கள், விதவைகள் போன்றவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறாள் இந்த நாடம்மா எனும் எல்லை பிடாரி அம்மன் என்பது நம்பிக்கை. இந்த இரண்டு வழிபாட்டுத் தலங்களும் எந்த காலத்தில் அமைக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும், குறைந்தது அவை நூறு வருடங்களுக்கு முன்னர் இருந்தே வழிபடப்பட்டு வந்துள்ளவை என்கிறார்கள்.

    நாடம்மா அல்லது பிடாரி அம்மன்

    ஹுலிமாவு உள் பகுதியில் உள்ள
    ராகவேந்திரர் ஆலயத்தின் வெளியில்
    காணப்படும் ராகு மற்றும் கேதுவுடன்
    கூடிய பாம்புப் புற்று .
    இதன் விவரம் தெரியவில்லை.

    ஹுலிமாவுவின் உள்புறத்து பகுதியில் காணப்படுவது இன்னொரு ஆலயமான முன்னர் கிராமத்தின் காவல் தெய்வமாக குடி இருந்த தொட்டம்மாவின் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாறு குறித்து அங்கிருந்த ஒரு பண்டிதர் கூறிய கதை இது.

    ''முன் ஒரு காலத்தில் இந்தப் பகுதிகள் முழுவதுமே அடர்ந்தக் காடுகளாக இருந்துள்ளன. அப்போது பல முனிவர்களும், ரிஷிகளும் இந்தக் காடுகளில் தவம் இருந்துள்ளார்கள். அங்காங்கே நாகம்மாவின் உருவில் நாக தேவதை தமது பரிவாரங்களுடன் குடி இருந்துள்ள இடம் இந்த பகுதிகள் அனைத்தும் ஆகும். அதனால்தான் இந்தப் பகுதிகள் முழுவதிலுமே அங்காங்கே பாம்புப் புற்றுக்கள் நாகம்மாவாக பூஜிக்கப்படுகின்றன. சில புற்றுக்களில் வாழும் நாகங்களும் உள்ளன. அவை பாம்பு அவதாரம் எடுத்து வந்துள்ள தேவதைகள். யாருக்கும் தீங்கு விளைவிக்காது. ஆனால் எவர் கண்களுக்கும் புலப்படாமல் சுற்றித் திரிபவை''.

    பண்டிதர் தொடர்ந்தார் ''தொட்டம்மா தேவி எனும் அவதாரம் மகாலஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதி தேவி எனும் மூவரும் சேர்ந்துள்ள அவதாரம். முன்னொரு காலத்தில் அதாவது தற்போது ஆலயம் உள்ள இந்த இடத்தில் உள்ள அரச மரத்தின் அடியில் பாம்புப் புற்றின் அருகில் சாப விமோசனம் பெற தொட்டம்மா தேவி குடி கொண்டு இருந்தாளாம். தொட்டம்மா பலருக்கும் இந்த மரத்தின் அடியில் நின்று கொண்டு நேரடியாக தரிசனம் தந்து இருக்கிறாளாம். காடுகள் மெல்ல மெல்ல அழிந்து கிராமங்கள் தோன்றியபோது மரத்தடியில் இருந்த அந்த இடத்தையே தமது கிராமத்தைக் காத்தருளும் காவல் தெய்வமான தொட்டாமாவின் வழிபாட்டு தலமாக அமைத்து விட்டார்கள். ஒருநாள் இந்த மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த தொட்டம்மாவை ஒருவர் நேரடியாக கண்டாராம். அன்று இரவு அவருடைய கனவில் மீண்டும் வந்து தரிசனம் கொடுத்த தொட்டம்மா தனக்கு அதே இடத்தில் ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என அவருக்கு கட்டளை இட அதன் காரணமாக இந்த ஆலயமும் எழுந்தது''.

    பண்டிதர் மேலும் கூறினார் ''இதில் ஒரு வேடிக்கை என்ன என்றால் இந்த ஆலயத்தைக் கட்டியவர் அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட வழி இல்லாமல் இருந்தவராம். ஆனால் ஆலயம் அமைக்க அவருக்கு கட்டளைக் கிடைத்ததும், எங்கிருந்தெல்லாமோ அவர் கேட்காமலேயே பணம் வந்து குமிய அவரும் கோடீஸ்வரர் ஆனார். அவருக்குக் கிடைத்தக் கட்டளையின்படி ஆலயம் அமைத்ததும் தாமாகவே கேட்காமல் கிடைத்து வந்த அனைத்து நன்கொடைகளும் நின்றன. இத்தனை அதிசய சக்தியைக் கொண்டது முன்னர் கிராம காவல் தெய்வமாக இருந்த இன்றைய தொட்டம்மாவின் ஆலயம் ஆகும். இன்றும் கூட தொட்டம்மாவை நாம் எந்த தேவியாக கருதி பார்ப்போமோ அந்த தேவியாக காட்சி தாது நமது பூஜைகளை அவள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம் உள்ளது. தொட்டம்மாவின் காவலுக்கு அவள் சன்னதியின் நுழை வாயிலில் இரண்டு வேதாளங்கள் நிற்கின்றன. அவற்றுக்கு இன்றும் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இரவு சரியாக பன்னிரண்டு மணிக்கு பூஜை செய்து அன்னம் படைக்கப்படுகிறது. காலமில்லாக் காலத்தில் இருந்தே இந்த தேவி இங்கு குடி இருக்கிறாள்''. இவை அனைத்தையும் பண்டிதர் கூறியதைக் கேட்ட எனக்கு வியப்பாக இருந்தது.

    சன்னதியில் கீழே காணப்படும் சின்ன உருவம்
    தொட்டம்மாவின் மூல சிலை. அது வெறும்
    சிவலிங்கம் போன்ற கல்லாகவே இருந்தது.
    அதன் மீது அம்மனின் வெள்ளி முகம்
    வைக்கப்பட்டு உள்ளது. அதற்கு மேலே காணப்படுவது
    பின்னர் வடிவமைக்கப்பட்ட சிலை ஆகும்

    தொட்டம்மாவின் சன்னதிக்கு முன்
    காணப்படும் காவல் தேவதைகள்

    வேதாளங்கள் எனும் காவல் தேவதைகள்

    மேலே உள்ள இரண்டு படங்களும் தொட்டம்மா
    ஆலயத்தின் பின்புறம் உள்ள பெரிய ஆல மரம்.
    காலம் தெரியாத இந்த மரத்தின் அடியில்தான்
    தொட்டம்மா பக்தர்களுக்கு காட்சி அளித்தாளாம்

    ஹுலிமாவுவின் வெளிப் பகுதியில் காணப்படும் இன்னொரு ஆலயம் சௌடேஸ்வரி ஆலயம் ஆகும். முன் ஒரு காலத்தில் நாக தேவதையான நாகம்மாவின் வழிபாட்டுத் தலமாக இது இருந்துள்ளது. பெரிய அரச மரத்தின் அடியில் இருந்த பெரிய பாம்புப் புற்றை கிராம மக்கள் நாகம்மாவாக பல காலத்துக்கு வழிபட்டு வந்துள்ளார்கள். பிற்காலத்தில் அந்த புற்றை சுற்றி ஆலயம் எழுப்பி அந்த நாகம்மா எனும் அம்மனான சௌடேஸ்வரிக்கு அங்கேயே சிலை அமைத்து, ஆலயம் எழுப்பி பூஜிக்கத் துவங்கினார்கள். இன்றும் அந்த பாம்புப் புற்றை நாகம்மாவாக வழிபட்டு வேண்டுதலுக்காக வளையல் அடுக்கி பூஜிக்கிறார்கள்.

    சௌடேஸ்வரி ஆலயத்தில்
    பூஜிக்கப்படும் பாம்புப் புற்று

    சௌடேஸ்வரி ஆலயத்தில் மூல தேவி

    நிற்க, பிலகஹல்லி கெம்பம்மாவின் ஆலயத்தின் எதிரில் அதே சாலையில் உள்ளது லகுவம்மா ஆலயம். லகுவம்மாவின் ஆலயத்தின் உள்ளே தனி சன்னதியில் நாகம்மாவின் புற்றும் வழிபடப்பட்டு வருகின்றது. அதில் ஒரு வாழும் நாகமும் உள்ளதாகக் கூறுகிறார்கள். தொட்டி நாயக்கர்களின் பிரிவான ராஜகம்பளத்தார்களின் குலதெய்வம் லகுவம்மா. இவர்கள் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுபவர்கள். இந்த சமூகத்தினரே லகுவம்மாவை தாம் தங்கி இருந்த கிராமப் பகுதியின் காவல் தெய்வமாக ஆராதித்து வந்திருக்க வேண்டும். அதன் பின்னர் ஆலயத்தை எழுப்பி இருக்க வேண்டும். கம்பளத்தார் முதலில் ஆந்திராவை ஆண்டு வந்த யாதவ அரசர்களின் படைவீரர்களாகவும் பின்னர் விஜயநகரப் பேரரசின் படைவீரர்களாகவும் இருந்தவர்கள் என்கிறார்கள். ஆகவே இவர்களும் பட்டாளத்தம்மனை இந்தப் பகுதியில் வழிபட்டிருக்க வேண்டும்.

    பிலகஹல்லி உள்ளே உள்ள குடியிருப்பின்
    மத்தியில் உள்ள இன்னொரு ஆலயத்தில் லகுவம்மா


    லகுவம்மாவின் இன்னொரு தோற்றம்

    லகுவம்மா ஆலயத்தில் நாகேஸ்வரி

    இப்படியாக அங்காங்கே உள்ள அன்றைய கிராம வழிபாட்டுத் தலங்கள் சில சாலை ஓரங்களில் அமைந்துள்ளன. இன்னும் சில அங்காங்கே கட்டப்பட்டு உள்ள குடியிருப்புக்களின் நடுப்பகுதிகளில் வெளித் தெரியாமல் அமைந்துள்ளன. ஆலயத்தில் உள்ள தேவதைகளின் சிலையை குங்கும, சந்தன, மஞ்சள் கலவையினால் அழகூட்டி, பூக்களால் ஆன மாலைகளைக் கொண்டு அலங்கரித்து, தீபங்கள் ஏற்றி அவற்றை பயபக்தியோடு பூசிப்பது காணக் கண்கொள்ளாக் காட்சியாகவே உள்ளது.

    பிலகஹல்லியில் பட்டாளத்தம்மனின் ஆலயத்தின் அருகில் உள்ளது முனீஸ்வரர் ஆலயம். அதுவும் பட்டாளத்தினரால் (படை வீரர்கள்) வழிபடப்பட்டு வந்திருக்க வேண்டும் என்பதின் காரணம் இதன் கதையும் பட்டாளத்தம்மன் ஆலயக் கதையைப் போலவே உள்ளது. போரில் தமக்கு பாதுகாப்பாக முனீஸ்வரர் இருப்பார் என்பது அந்த காலத்து படை வீரர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளதாம். இந்த வழிபாட்டுத் தலத்தின் ஆலய மேற்கூரையில் ராணுவ சிப்பாய்களின் உருவமும் சிலையாக காணப்படுவது இந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது. இந்த ஆலயத்தின் ஒரு பக்கத்தில் பாம்புப் புற்று உள்ளது. ஆனால் மேலும் எந்த விவரமும் இதைக் குறித்து கிடைக்கவில்லை. முன்னர் வழிபாட்டுத் தலமாக இருந்துள்ள இடத்தில் முனீஸ்வரரின் புதிய சிலையும் ஆலயக் கட்டிடமும் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் வந்திருக்கின்றன.

    முனீஸ்வரர் ஆலய தோற்றம்

    முனீஸ்வரர் சன்னதிக்கு முன்புள்ள தோற்றம்

    ஆலயம் மூடப்பட்டு இருந்ததால்
    கதவின் இடுக்கில் இருந்து எடுத்தப் படம்

    இதே போல பிலகஹல்லியில் இருந்து தேவசிக்கனஹல்லிக்கு செல்லும் வழியில் பிலகஹல்லியிலேயே உள்ள சிறு சனீஸ்வரர் ஆலயமும் புகழ்பெற்று விளங்குகிறது. அந்த சனிபகவான் ஆலயத்தில் ஒரு பெண்மணியே அர்ச்சகராக உள்ளார். மரத்தடியில் அமைந்துள்ள சனி பகவானின் ஆலயம் எந்த காலத்தை சேர்ந்தது என்பது தெரியவில்லை. ஒரு பெரிய அரச மரத்தின் அடியில் சிறிய அளவில் காணப்படும் சனி பகவானின் சன்னதிக்கு முன்னால் ராகு மற்றும் கேதுவின் உருவம் கொண்ட மூன்று சிலைகள் பாறையில் செதுக்கப்பட்டு உள்ளன. முன் ஒரு காலத்தில் அந்த மரத்தின் அடியில் இருந்த ராகுவும் கேதுவும் கிரஹ தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள வழிபடப்பட்டு வந்துள்ளார்கள். அப்படி வழிபடப்பட்டு வந்துள்ள அந்த ராகு மற்றும் கேதுவிற்கு பின்னால் சனி பகவானுக்கும் சின்ன சிலை வைக்கப்பட்டு அவரும் வழிபடப்பட்டு வந்துள்ளார். பின்னர் அதுவே சனி பகவான் ஆலயமாக உருமாறி உள்ளது என்கிறார்கள். அந்த மரத்தடி சனி பகவான் பிலகஹல்லி பகுதியில் சக்தி உள்ள சனி பகவானாகவே அந்தப் பகுதி மக்களால் பார்க்கப்படுகிறார். சனிபகவானின் இந்த ஆலயத்தைக் குறித்த தகவல்கள் வேறு எதுவும் கிடைக்கவில்லை.


    பிலகஹல்லி -பேகூர் செல்லும் சாலையில்
    மரத்தடி ஒன்றில் சனிபகவான் ஆலயத்தில்
    தனி சன்னதியாக கிராம தேவதைகள் ராகு-கேது

    அதே ஆலயத்தில் சனிபகவான்

    இதே இடத்தில் சனி பகவான் ஆலயத்தின் நேர் எதிரில் வீரபத்திரர் ஆலயமும் உள்ளது. வீரபத்திரரை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு அவரை குல தெய்வமாக வழிபடுபவர்கள் வீரமுஷ்ட்டி அல்லது வீரமுட்டி என்று அழைக்கப்படுவார்கள். அந்த வீரமுட்டி இனத்தவர் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பரவலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அதனால்தான் வீரபத்திரர் வழிபாடும் கர்னாடகாவில் அதிகம் உள்ளது. வீரபத்திரர் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர் என்ற நம்பிக்கை உள்ளதினால் பொதுவாகவே பல சிவன் ஆலயங்களிலும் வீரபத்திரர் சிவபெருமானின் துணைத் தெய்வமாக கருதப்பட்டு தனி சன்னதியில் வழிபடப்படுகிறார். பிலகஹல்லியில் உள்ள வீரபத்திரர் ஆலயத்தில் வீரபத்திரரே பிரதான மூர்த்தி ஆவர். முன் காலத்தில் இதுவும் இந்த கிராமத்து காவல் தெய்வ வழிபாட்டு தலமாக மரத்தடியில் இருந்து இன்று அதே இடத்தில் மேற்கூரை எழுப்பப்பட்டு அமைந்துள்ள சிறிய அளவிலான ஆலயமாக மாறி உள்ளது என்பதற்கு சாட்சியாக உள்ளே உள்ள மூர்த்திகளின் சிலை அமைப்பும், ஆலய அமைப்பும் காட்டுகின்றன.


    பிலகஹல்லி உள்ளே உள்ள வீரபத்திரர்
    ஆலயத்தில் தனி சன்னதியில் நந்தீஸ்வரர்

    பிலகஹல்லி உள்ளே உள்ள வீரபத்திரர்
    ஆலயத்தில் வினாயகர் தன் மனைவியுடன்

    ஆலயத்தில் மூலமூர்த்தி வீரபத்திரர்

    வீரபத்திரர் ஆலயத்தில் உற்சவ
    மூர்த்தி வீரபத்திரர்

    வீரபத்திரர் ஆலயத்தில் தனி
    சன்னதியில் பெரிய தூண் ஆஞ்சநேயர்

    பிலகஹல்லி -பேகூர் செல்லும் சாலையில்
    மரத்தடி ஒன்றில் காணப்படும்
    கிராம தேவதைகள் ராகு-கேது

    பிலகஹல்லி -பேகூர் சாலையில்
    சனி பகவான் ஆலயத்தின் பக்கத்தில்
    உள்ள வெங்கடாசலபதி ஆலயத்தில்
    வெங்கடசலபதி

    பிலகஹல்லி அருகில் விஜயா பாங்க்
    காலனியில் கிராம தேவதை
    காவேரியம்மன்

    அரிகேரே - பேகூர் செல்லும் சாலையில்
    கிராம தேவதை ஆலயத்தில் சிவலிங்கம்

    அரிகேரே - பேகூர் செல்லும் சாலையில்
    கிராம தேவதை ஆலயத்தில் சிவலிங்கம்

    அரிகேரே - பேகூர் செல்லும் சாலையில்
    கிராம தேவதை ஆலயத்தில் அம்மனின் சூலம்

    தற்போது பிலகஹல்லி, ஹுலிமாவு மற்றும் அரேகேரே போன்ற இடங்களை சுற்றி காணப்படும் சில ஆலயங்களில் உள்ள கிராம தேவதைகளை, காவல் தெய்வங்களின் ஆலயங்களை வெளியிட்டு உள்ளேன். மற்ற பகுதிகளில் உள்ளவை பிறகு வெளியாகும்.

    மரத்தடியில் ராகு மற்றும் கேதுவின்
    வழிபாட்டு தலம்

    அரச மரத்தடியில் ராகு மற்றும்
    கேதுவின் வழிபாட்டு தலம்

    அதே அரச மரத்தடியில்சப்த கன்னிகைகள்
    வழிபாட்டு தலம்

    பெயர் தெரியாத சாலை ஓரத்து வழிபாட்டு தலம்

    Tree Worship

    $
    0
    0
     
    முன் காலத்தில் மக்கள் இயற்கையை கடவுளாக பாவித்து வழிபட்டு வந்துள்ளார்கள்.  நீர், நெருப்பு ஆகாயம் என அனைத்தையும் இறைவீகமாகவே கருதியவர்கள் ஆலயங்களில் காணப்பட்ட ஸ்தல விருட்ஷங்களையும் கடவுளின் அவதாரங்களாகவே கருதி ஆலயங்களில் அந்த மரங்களை வழிபட்டு வந்துள்ளார்கள். அதன் காரணம் ஒவ்வொரு ஆலயத்துக்கும் அதிகாரபூர்வமாக  ஒரு ஸ்தல விருஷம் இருந்துள்ளது என்பதினால் அந்தந்த தல விருட்ஷங்கள் அங்குள்ள தெய்வத்துடன் சம்மந்தப்பட்டதாக இருந்துள்ளது என்ற நம்பிக்கை அவர்களுக்குள் இருந்தது. இதுவே பின் காலத்தில் இயற்கை வழிபாடு என  உருமாறியது.


    ''ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள தலவிருட்ச மரங்களின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், உச்சிப் பகுதியில் சிவன் என மும்மூர்த்திகளும் குடியிருப்பர். அதன் கிளைகளிலும் இலைகளிலும் அவர்களால் படைக்கப்பட்ட தேவ, தேவதைகள் வசிக்கின்றனர். தெய்வங்கள் அந்த மரத்தில் காலைப் பொழுதில் தங்கி இருக்கின்றனர். மாலைப் பொழுதில் அவர்கள் சென்ற பின் சித்தர்களும், யட்சர்களும் அதில் வந்து தங்கிடுவர்''என்கிறது  கருடபுராணம்.

    மர வழிபாடு என்பது காலம் காலமாக இருந்துள்ளது.  முன் ஒரு காலத்தில் மர  வழிபாட்டின் தத்துவம் என்னவென்றே தெரியாமல் இருந்த மக்கள் பின்னாட்களில் குருமார்களும், பெரியோர்களும் செய்து வந்திருந்த போதனைகளினால் ஈர்க்கப்பட்டு பசுமையான மரங்களில் தெய்வங்கள் குடி உள்ளதாக நம்பி  மர வழிபாட்டை கடைப்பிடித்து வந்தார்கள். அதன் இன்னொரு முக்கியமான காரணம் முன்காலத்தில்  நாட்டுப்புறங்களில் இருந்த ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும்  மரங்களின் அடியில் அமைந்து  இருந்ததினால் மரங்கள்  தெய்வீகத் தன்மைகளை கொண்டவையாக உள்ளன என்பதாக மக்கள் நம்பினார்கள். மர  வழிபாடு காலப்போக்கில் இயற்கை வழிபாடு என்பதாக கருதப்பட்டது.


    அனைத்து மரங்களும் தெய்வங்களுடன் சம்மந்தப்பட்டது இல்லை. சில மரங்கள் மட்டுமே சில தெய்வங்களுக்கு உகந்த மரங்கள். இவற்றில் வினாயகருக்கு உகந்ததாக அரச மரம், மாரியம்மனுக்கு உகந்ததாக வேப்ப மரம், சிவபெருமானுக்கு கடம்ப மரம் அல்லது வில்வ மரம் மற்றும் தத்தாத்திரேயர் மற்றும் லஷ்மிக்கு நெல்லி மரம் போன்றவை உண்டு. பழனியில் உள்ள திரு ஆவினன்குடி முருகன் ஆலயத்தின் தல மரம் நெல்லி என்கிறார்கள். பல ஆலயங்களிலும் வில்வம் மற்றும் வன்னி மரமே ஆலயத்தின்  தல மரங்களாக உள்ளன. 

    அவற்றை போல பெருமைக் கொண்டது பனை மரம் ஆகும்.  இலங்கையில்தான் முருகப் பெருமானின் மனைவியான வள்ளி தேவியும் வேடர்களால் வளர்க்கப்பட்டவள் என்பதாக புராண  வரலாறும் உள்ளது.  பனை மரத்தடியில்தான் முருகனும் வள்ளியும் தமது காதலை வெளிப்படுத்தினார்கள். ஆகவே வேடர்கள் பனை மரத்தை வணங்கியதின் மூலம்  அவர்கள்  முருகப் பெருமானை வணங்கி வந்தவர்கள் என்பது புரிகிறது. ஆகவே வேடர்கள் வணங்கி வந்திருந்த பனை மரம் முருகனுக்கும் உகந்த மரம் என்பதாகிறது. அதனால்தான்  சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையை ஆண்டு வந்திருந்த பாண்டுரங்க அபயன் என்பவர் 'வேட்டைக்காரர்களுக்கு மரியாதை தரும் வகையில் பனை மரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தமது அரண்மனையில் பனை மரங்களை வைத்ததாக'மகாவம்சம் எனும் நூலில்  கூறப்பட்டு உள்ளது. திருப்பனந்தாள், திருப்பனங்காடு, திருப்பனையூர், திருமழல்பாடி, திருக்குறுங்குடி போன்ற ஆலயங்களில் பனை மரமே ஆலயத்தின் தல மரம்  ஆகும். சங்க இலக்கியங்களான அகநானூறு மற்றும் நற்றிணை போன்ற நூல்களிலும் மர வழிபாட்டை மேன்மைப்படுத்தும் பாடல்கள் உண்டு.

    பலரும் நினைப்பது போல ஆலயங்களில் உள்ள மரங்களில் மட்டுமே தெய்வங்கள் குடி உள்ளன என்ற நம்பிக்கை சரியானது அல்ல. மற்ற இடங்களில் உள்ள  வேறு சில மரங்களும் தெய்வங்களின் அவதாரங்கள் குடி உள்ள மரங்கள் ஆகும். நமது விதியை நிர்ணயிக்கும் நட்ஷத்திரங்களின் அதிபதி தேவ, தேவதைகள் வசிக்கும் இடமும் மரங்கள் ஆகும்.  இவை அனைத்தையும் அறியாமலேயே ஆலயத்தில் உள்ள  மரங்களையும், அவற்றைத் தவிர வேப்ப மரம், ஆல மரம் மற்றும் அரச மரம் போன்ற மூன்றையும் மட்டுமே தெய்வீக மரங்களாகக் கருதி பெரும்பாலான  மக்கள் வழிபட்டு  வந்துள்ளார்கள். நட்ஷத்திரங்களின்  அதிபதி தேவதைகள் உள்ள மரங்கள் பற்றிய செய்தியை அதிக மக்கள்  உணர்ந்திருக்கவில்லை.

    நட்ஷத்திரங்களின் அதிபதியானவர்கள்  தேவ, தேவதைகளா? ஒவ்வொரு நட்ஷத்திரத்துக்கும் உரிய அதிபதி தேவதைக்கு  தனிப்பட்ட மரம் உண்டா?,  அதில்தான் நட்ஷத்திரங்களின் அதிபதிகளான தேவ, தேவதைகள் வசிக்கிறார்களா என ஒருவர் வியப்பு அடையலாம். அவை உண்மையே. ஒவ்வொரு நட்ஷத்திரத்துக்கும் ஒரு அதிபதி தேவதை உண்டு. அந்த ஒவ்வொரு அதிபதி தேவதைக்கும் ஒரு தனி மரம் உண்டு. அந்த மரமே ஒருவரது நட்சத்திர மரமும் ஆகும். அதன் பின்னணி என்ன?

    இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது பரப்பிரும்மம் என்ற சக்தியில் இருந்து முதலில் வெளி வந்தவர்கள் மூன்று கடவுட்களான பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் என்பவர்களே. மற்ற அனைத்துக் கடவுட்களுமே அவர்களுடைய சக்தியினால் வெளி வந்த அவதாரங்கள்தான். அது போலவேதான் 27 நட்ஷத்திரங்களும், அவற்றுக்கான அதிபதி தேவ, தேவதைகளும் பல நிலைகளில் உருவான பரப்பிரும்மனின் சக்திகளே. அவர்கள் அனைவருமே யாரால் படைக்கப்பட்டார்களோ அந்த தெய்வத்தின் தூதுவர்களாக உள்ளவர்கள்.  ஆனால் அவற்றுக்கு என தனிப்பட்ட சக்திகள் எதுவும் கிடையாது என்பதினால் அந்த தேவதை அவதாரங்களுக்கு அவற்றைப் படைத்த தெய்வங்கள் சில விசேஷ  சக்திகளை கொடுத்துள்ளார்கள்.  அந்த தேவதைகள்  கொண்டுள்ள  அனைத்து சக்திகளுமே பரப்பிரும்மனால் படைக்கப்பட்ட மூன்று கடவுட்களான பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் போன்றவர்களின் சக்திகளுக்கு உட்பட்டவையே.

    பிரபஞ்சம் படைக்கப்பட்டவுடன் இருபத்தி ஏழு நட்ஷத்திரங்களையும் படைத்து அந்தந்த நட்ஷத்திரங்களுக்கும்  அதிபதிகளாக  இருபத்தி ஏழு அதி தேவ, தேவதைகளும் படைக்கப்பட்டார்கள். அப்படி படைக்கப்பட்ட தேவ, தேவதைகளும்   பூலோகத்தில் சென்று மக்களின் கண்களுக்குப் புலப்படாமல் தங்கி இருந்து மனித குல மேம்பாட்டுக்கு வழி காட்டுமாறு உபதேசிக்கப் பட்டார்கள்.  பூலோகத்தில் வந்து தங்கி இருக்க வேண்டிய நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட  தேவ, தேவதைகள்  எங்கு சென்று  தங்க முடியும்?  எனவேதான் அவை பூலோகத்தில் வந்ததும் தங்கி இருக்க சில மரங்களும் பூலோகத்தில் படைக்கப்பட்டன. அந்த மரங்களில் குடி உள்ள நட்ஷத்திரங்களின் தேவதைகள் தமது ஸ்வாச உணர்வுகளையும், தன்மைகளையும்  அந்த மரத்தை சுற்றி வெளியிட்டுக் கொண்டே இருப்பதினால் அந்த மரங்கள் தெய்வீக சக்தி கொண்ட தேவதை மரங்கள் ஆயின. அந்த ஸ்வாச உணர்வுகளையும், தன்மைகளையும்தான் ஜீவ சக்தி என்பார்கள். தேவதைகள் தமது ஸ்வாச உணர்வுகளையும், தன்மைகளையும் அதாவது ஜீவ சக்தியை அந்தந்த மரங்களின் இலைகள் மூலமும், மரங்களின் மரப்பட்டைகள் மூலமும் வெளிப்படுத்திக் கொண்டே உள்ளன.  அதைப் போலவேதான் தெய்வங்களும் பூலோகத்தில் வந்து பல்வேறு அவதாரங்களில் தங்கி இருந்தபோது அவர்கள் மரங்களின் அடிகளில் தங்கி இருந்தே தவம் செய்து தமது சாபங்களை விலக்கிக்  கொண்டார்கள். அப்போது அவர்கள் தம்மை சுற்றி தமக்கு பாதுகாப்பாக இருக்க தமது சக்திகளை அந்த மரங்கள் மூலமே வெளியிட்டு உள்ளார்கள். அதனால் அந்தந்த தெய்வங்கள் தவம் இருந்த மரங்கள் தெய்வீக மரங்கள் ஆயிற்று.  பின்னர் அந்த குறிப்பிட்ட அவதார தெய்வத்தின் பல ஆலயங்களில் அந்த குறிப்பிட்ட மரங்களின்  பிரிவே தல மரங்கள் ஆயின.

    அப்படி என்றால் மரங்கள் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தனவா என்ற கேள்வி எழலாம். மரங்களுக்கு காந்த சக்தி அதிகம் உண்டு. அவற்றுக்கும் ஜீவ சக்திகள் உண்டு. அந்த ஜீவ சக்திகளை அந்தந்த மரங்கள் அவற்றின் வேர்ப்பகுதிவரை  அழியாமல் வைத்திருக்கும். வேரும் வளர வளர அந்த ஜீவ சக்திகளும் பெருகிக் கொண்டே இருக்கும்.  இதனால்தான் தெய்வங்கள் பூமிக்கு வந்து தவம் இருந்த நிலையில் தமது சக்திகளை மரங்களுக்குள் விட்டுச் சென்றார்கள். அந்த சக்திகளை அந்தந்த மரங்கள் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டன. இந்த  உண்மைகளின்  காரணமாகவே நட்சத்திர அதிபதி தேவதைகளையும் மரங்களில் வசிக்க ஏற்பாடு செய்து, அந்த மரங்களில் அந்தந்த நட்ஷத்திரங்களின் ஜீவ சக்தியை ஊட்டினார்கள். இதனால்தான் ஒருவரை வாழ்த்தும்போது   'உன் பெருமை  விருட்ஷம் போல வளர வேண்டும்'என்பார்கள்.


    நட்ஷத்திரங்களும், அவற்றுக்கான மரங்களும் படைக்கப்பட்டப் பின் அவற்றுக்கு  முன்னால்  உருவாக்கப்பட்ட அனைத்து மனிதர்களுக்கும் பஞ்ச பூத சக்திகளை உள்ளடக்கி குறிப்பிட்ட ஸ்வாச உணர்வுகளும், உயிர் தன்மைகளும் தரப்பட்டு  அவர்கள்  27 தனித் தனி தன்மைகளைக் கொண்ட மனிதர்களாகவும் பிரிக்கப்பட்டார்கள்.  லட்ஷக்கணக்கிலான அணுக்களால் பின்னப்பட்ட அந்த  உணர்வுகள் எனும் ஜீவசக்தியானது  அந்தந்த மனிதர்களை சுற்றிக் கொண்டே இருக்கும். அந்த ஜீவசக்தியே ஆரா, அதாவது ஒருவரை சுற்றி  இருக்கும் ஒளிக்கற்றைகள் போலவே அவர்களை சுற்றிக் கொண்டு இருக்கும்.  அந்த  மூலத் தன்மைக் கொண்ட ஜீவசக்தியானது  நீடிக்கும்வரை அவர்கள் நல்ல தன்மையுடன், ஆன்மீக எண்ணங்களுடன் இருப்பார்கள். தீமைகளை செய்ய அஞ்சுவார்கள், நியாய உணர்வுகளும், மனசாட்சியும் அவர்களிடம் மேலோங்கி இருக்கும். அவர்கள் அன்பு கொண்டவர்களாக, தியாக உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.

    ஆரோ போல மனிதர்களை சுற்றி உள்ள 
    ஜீவசக்தியான ஸ்வாச  உணர்வும், தன்மைகளும் 

    மனிதர்களை கட்டுப்படுத்தும் விதத்தில் படைக்கப்பட்ட 27 நட்ஷத்திரங்களுக்கும் அவற்றின் அதிபதி தேவ, தேவதைகளுக்கும் அதே மனிதப் பிரிவினரின் ஜீவ சக்திகளும் தரப்பட்டிருந்தன என்பதினால் அந்த  குறிப்பிட்ட ஸ்வாச உணர்வுகளையும், உயிர் தன்மைகளையும்  கொண்டிருந்த மக்கள் பாவ காரியங்களில் ஈடுபடத் துவங்கியவுடன்,  அவர்களது  தனிச் சிறப்புத் தன்மைக் கொண்ட, இயற்கையாக கொடுக்கப்பட்டிருந்த ஜீவ சக்திகளும் அழியத் துவங்கி, பாவாத்மாக்கள் அவர்களை சுற்றித் திரியத் துவங்கும். அவர்களிடம் இருந்து தன்னியல்பாக உருவாக்கப் பட்டிருந்த  அந்த ஒளிக்கதிர்கள் அதாவது ஆரோ போன்றதும்  அழியத் துவங்கும்.

    ஆரோ போல மனிதர்களை சுற்றி 
    உள்ள  உண்மையான ஸ்வாச  உணர்வும்,  
    தன்மைகளும்  பாவாத்மக்களால்  சூழப்பட்டு 
    அழிக்கப்படுகின்றன 

    இதனால் அவற்றைக் கண்டு வெறுப்படையும்  அவர்களை சார்ந்த நட்சத்திரங்கள் அவர்களை விட்டு விலகிச் செல்லத் துவங்க, அந்த நட்சத்திரக் குடும்பத்தை சார்ந்த மக்கள் மேலும் மேலும் தீய சக்திகளினால் பிடிக்கப்பட்டு மேலும் மேலும் பாவங்களை செய்தபடி இருப்பார்கள்.  அப்படி என்றால் அந்த நிலையை எப்படி மாற்றி அமைப்பது? அதை யார் செய்வார்கள்? அவர்களுக்கு இருக்க வேண்டிய அவர்களது நிஜமான,  தூய்மையான  ஜீவ சக்திகளை எப்படி மீட்டுத் தர இயலும்?

    அந்த காரியத்தை செய்ய முடிந்தவை  அந்தப் பிரிவு மக்களை கண்காணிக்கும்  தேவ,தேவதைகள்தான். அவர்களாலேயே தமது பிரிவை சேர்ந்த மனிதர்களின் உண்மையான ஸ்வாச உணர்வுகளையும், உயிர் தன்மைகளையும் மீண்டும் உயிர்பித்துத் தர முடியும்.  அதற்கு மனிதர்கள் செய்ய வேண்டிய ஓரே வழி  என்னவென்றால் அவர்கள் அந்த தேவ தேவதைகளின்  அருளைப் பெற முயல வேண்டும். அந்த தேவ, தேவதைகளின் அருளை அவர்களால் எப்படிப் பெற முடியும்?

    அது மிகவும் சுலபமானது. அந்த தேவதைகள் குடி இருக்கும்  மரங்களின் அடியில் சென்று அதன் அடியில் நின்றிருந்தவாறு அந்த மரத்தின் தேவதைகளை ஆராதிப்பதின்  மூலமும், அங்கு அந்த தேவதைகளை துதிப்பதின் மூலமும் தாம் அறியாமையினால் செய்து வரும் பாவங்களின் தீய பலாபலன்களைக் குறைத்துக் கொள்ள முடியும்.  நடுவில் தாம் இழந்திருந்த தமது உண்மையான ஜீவசக்தியை மீண்டும் உயிர்பிக்க முடியும். அந்த மரங்களை வணங்கித் துதிப்பதின் மூலம் அதை எப்படி அடைய முடியும்?

    குறிப்பிட்ட ஜீவ சக்திகளை கொண்ட  தேவதைகள் எந்த  மரத்தில் குடியிருக்குமோ அவற்றின் ஜீவ சக்திகள் அந்த மரத்தில் இருந்து தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கும். அந்த ஸ்வாச  உணர்வுகளும் தன்மைகளும் அந்த மரத்தில் இருந்து வீசிக்கொண்டே இருக்கும்.  அப்படி மரங்கள் மூலம் தேவதைகளினால் வெளிப்படுத்தப்படும் கதிவீச்சுக்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி அதே தன்மைகள் கொண்ட மனிதர்களை சுற்றி உள்ள ஒளிக் கற்றைகளுக்குள்ளே உள்ளே  மட்டுமே ஊடுருவிச் செல்ல முடியும் என்பது நியதி ஆகும்.

    ஆகவேதான் அந்த மரத்தடியில், அந்த நட்சத்திரப்  பிரிவை சார்ந்த மனிதர்கள் வந்து அந்த மரங்களை வணங்கி துதிக்கும்போது  அதில் குடி உள்ள தேவதைகள் அந்த மனிதர்களை சுற்றி இருக்க வேண்டிய லட்ஷக்கணக்கிலான அணுக்களால் பின்னப்பட்ட உண்மையான  ஸ்வாச உணர்வுகளும், உயிர் தன்மைகளும் குறைந்து இருப்பதையும், அந்த இடங்களில் பாவ அணுக்கள் நல்ல அணுக்களுடன் கலந்து சுற்றித் திரிவதையும், அதனால்தான் அந்த மனிதர்கள் தம் உணர்வின்றி, பாவ காரியங்களில் ஈடுபடுவதையும் உணர்ந்து கொண்டு, தன்னை நாடி வந்து தமது தொல்லைகளைக் களையுமாறு வேண்டி வழிபடும் தமது பிரிவு மக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாவங்களின் தாக்கத்தைக் குறைக்கும்  வகையில் அந்த மரத்தில் இருந்து அவர்களுக்கு தேவையான ஸ்வாச உணர்வுகளையும், தன்மைகளையும் வெளிப்பட வைக்கும்.  அந்த தன்மைகள் அந்த  மனிதர்களை சுற்றி உள்ள ஒளிக்கற்றைக்குள் புகுந்து அங்கு குடியேறி உள்ள  தீய அணுக்களை துரத்தி அடித்துத் துரத்திவிட்டு அவர்களை சுற்றி உள்ள ஒளிக்கதிர்களை மீண்டும் உண்மையான தன்மையை கொண்ட ஜீவசக்தியின் அணுக்களால் நிறப்பி   விடும். 

     மரங்களில் குடி உள்ள தேவதைகள் உண்மையான 
    ஸ்வாச  உணர்வுகளையும்  தன்மைகளையும் 
    வெளிப்படுத்த, அந்த கதிர்கள்  மனிதர்களை 
    சுற்றி உள்ள தீய அணுக்களை  துரத்தி அடிக்கின்றன 

    இப்படியாக ஒவ்வொரு முறையும் அந்தந்த மனிதர்கள் தமக்கு உரிய நட்சத்திர மரத்தின் அடியில் சென்று அவற்றை வலம்  வந்து வணங்கித் துதிக்கையில் அவர்களை சுற்றி உள்ள தீய அணுக்கள் அந்த மரத்தில் குடியுள்ள தேவதைகளின் சக்தியினால் அழிக்கப்படுவதினால், அதனுடன் அந்த மனிதர்களின் பாவங்களின் தாக்கமும் விலகி விலகி அவர்களுடைய பாவச் சுமைகளும் குறையத் துவங்கும். அவர்கள் மீண்டும் புத்துணர்ச்சிப் பெறுகிறார்கள்.   ஒரு விதத்தில் பார்த்தால் மீண்டும், மீண்டும் தம்மை அறியாமலும், அறிந்தும் பாவச் செயல்களில் ஈடுபட்டு பாவங்களை சுமக்கும் மனிதர்கள், மர வழிபாட்டின் மூலம் தேவதைகளின் அருளைப் பெற்று அவற்றை மீண்டும், மீண்டும் அழித்துக் கொள்வது  ஏற்றத் தாழ்வு நிலை கொண்ட முடிவற்ற கடல் அலையைப் போன்றது என்றாலும்,  இப்படி செய்வதின் மூலம் ஒருவர் மரணம் அடையும் முன் தமது பாவங்களை ஓரளவு குறைத்துக் கொள்ள முடிகிறது என்பதினால்தான் தமது நட்சத்திரதுக்கு  ஏற்ற மரம் உள்ள இடத்தைக் கண்டுபிடித்து வருடத்துக்கு  ஒரு முறையாவது அந்த மரத்தை வணங்கித் துதிப்பது நலம் என்பார்கள்.

    தமது நட்ஷத்திரத்துக்கு ஏற்ற மரங்களை வணங்கித் துதிப்பத்தின் மூலம்  அவரவர் பெற்று இருந்த பூர்வ ஜென்மப் பாவங்கள் குறையும், கடன் தொல்லை நீங்கும், தீராத நோய் விலகும். மேலும்  தம் நட்சத்திர மரத்திற்கு நீர் ஊற்றி வழிபாடு செய்யும் பொழுது அவரவர் ஊற்றும் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு அந்த மரம் புதிய இலைகளைத் துளிர்க்க வைக்கும்போது அந்த நீரை ஊற்றி ஆராதித்தவர்களின் குடும்பமும் செழிக்கும் என்பதெல்லாம் நம்பிக்கை ஆகும்.  அந்த மரங்கள் அவரவர் ஊற்றும் தண்ணீரை உறுஞ்சுவது அவரவர் செய்த பிரார்த்தனைகளை அந்த மரத்தில் குடியுள்ள அவரவர் நட்சத்திர தேவதைகள் ஏற்றுக் கொண்டு அருள் புரிய காத்திருக்கும் நிலை ஆகும்.
     
    அந்தந்த நட்ஷத்திரத்தை  சேர்ந்தவர்கள், தமக்கே உரிய அந்தந்த தலமரங்களின் காய்ந்த குச்சிகள், இலைகள் இவற்றைச் சேகரித்து தங்கள் வீட்டின் நுழை வாயிலில் கட்டி வைத்தால்  பில்லி, சூன்யம் மற்றும் ஏவல் முதலிய தொல்லைகள் அவர்கள் வீடுகளுக்குள்  வருவதில்லை என்ற நம்பிக்கையும்  உண்டு.  அதைப் போலவே அந்தந்த மரங்களின் குச்சிகளை பணப்பெட்டியில் வைத்திருந்தாலும் செல்வம் அழியாமல் மாறாக நிலையாக இருக்கும் என்பார்கள். அதன் காரணமும் அவற்றில் குடி உள்ள தேவதைகளின் ஸ்வாச  உணர்வுகளும் அதன்  தன்மைகளும்தான் .

    இதற்காகத்தான் இருபத்தி ஏழு நட்ஷத்திரங்களையும் மும்மூர்த்திகளே படைத்தார்கள். மனித பிறவிகளையும்  இருபத்தி ஏழு குணாதிசயங்களைக் கொண்ட பிரிவினராக  பிரித்து அந்த 27 பிரிவினரை பூலோகத்தில் கண்காணித்து, நல்வழிப்படுத்தும் பணியில் தாம் முதலில் படைத்த 27 நட்ஷத்திரங்களின் அதிபதியாக அதே மரங்களின் ஸ்வாச  உணர்வுகளும், தன்மைகளும் கொண்ட தேவ, தேவதைகளையும் காவல் தேவதையாக அமைத்தார்கள். அந்த தேவ, தேவதைகள் அந்தந்த மனிதர்களின் பாவ புண்ணியங்களை கண்காணித்தவாறு இருந்து கொண்டு, அவர்கள் பாவ காரியங்களை செய்யும்போது அவர்களை திருத்தி நல்வழியில் அழைத்துச் செல்ல முயலும்.

    மரங்களின் அதிபதி தேவதைகள்  வெவ்வேறானவை
    ஒவ்வொன்றும் அதே மரத்தின் தன்மைகளை 
    தன்னுள் அடக்கிக் கொண்டவையாக  இருந்தன

    அந்த தேவதைகளுக்கு சில சக்திகளும் கொடுக்கப்பட்டு இருந்தன என்பதை ஏற்க்கனவே கூறி உள்ளேன். அந்த விசேஷ சக்தி மூலம் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்களையும், சிறு பாவங்களினால் ஏற்படும் தோஷங்களையும் அந்த தேவதைகளினால் விலக்க முடியும் என்பதே அவற்றுக்கு கொடுக்கப்பட்ட விசேஷ சக்தியாகும். அது மட்டும் இல்லாமல் அந்த தேவதைகள் அந்த மனிதர்களின் பூர்வ ஜென்ம புண்ணியப் பலன்களுக்கு ஏற்ப அவர்களுடைய வேண்டுதல்களையும் தம்முடைய அதிபதி தெய்வத்திடம் எடுத்துச் சென்று மனிதர்களின் குறைகளைக்  களைகின்றனவாம்.  இதனால்தான் தெய்வத்திடம் இருந்து நல்ல அருளைப் பெற முதலில் அவரவர்களது நட்ஷத்திரங்களின் அதிபதி  தேவதைகளை மரவழிபாடு மூலம் ஆராதிப்பது அவசியம் ஆகும். அதை அவரவர் வணங்க வேண்டிய மரங்களை வணங்கித் துதிப்பதின் மூலம் மட்டுமே செய்ய இயலும்.

    நட்சத்திரங்கள் படைக்கப்பட்டபோது  முதலில் வெளிவந்தது அஸ்வினி. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்தவையே பரணி, கிருத்திகை, ரோஹினி , மிருச்சிகம், திருவாதரை, புனர்பூசம் , பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாஹம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரத்தாதி, உத்திரட்டாதி, மற்றும் ரேவதி போன்றவை ஆகும்.

    ஒரு விஷயத்தைப் பார்த்தோமானால் பெரும்பாலான பக்தர்கள் ஆலமரம், அரச மரம் மற்றும் வேப்ப மரம் இவற்றை மற்றுமே பூஜைக்கு உகந்த மரங்களாக கருதி அவற்றை பிரதர்ஷணம்  செய்வதும், அவற்றின் அடியில் பூஜிப்பதையும் நாம் பார்க்கிறோம்.  அதுவும் இந்த மூன்று மரங்களும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து இருந்தால் அது பூஜிக்கத்தக்க இடமாகவே பாவிக்கப்படுகிறது. ஆலயங்களுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் ஆலயத்தின் ஸ்தல விருட்ஷம் என்ற பொருளிலேயே மரங்களைப் பார்க்கின்றார்களே தவிர  வேறு பல மரங்களுக்கும் தெய்வீகத் தன்மை உண்டு என்பதை அறிந்து கொள்ளவில்லை.

     நம் அனைவரும் நமது ராசிபலனுக்கு ஏற்பவும், நட்ஷத்திரங்களுக்கு ஏற்பவும் குறிப்பிட்ட ஆலயங்களுக்கு சென்றும், குறிப்பிட்ட தெய்வங்களுக்கும் ஆராதனை செய்து வணங்குகிறோமே தவிர, அதைப் போலவே நமது ஜன்ம நட்ஷத்திரங்களுக்கும் ஏற்ப மரங்கள் உள்ளன, அவற்றை வணங்குவதின் மூலம் பல பாபங்களை விலக்கிக்  கொள்ளலாம், பல நன்மைகளை அடையலாம் போன்ற உண்மை பலருக்கும் தெரியாது.  இதன் காரணம் ஜென்ம நட்ஷத்திரங்களுடன் சம்மந்தப்பட்ட மரங்களின் தெய்வீகத் தன்மைக் குறித்த நூலேடுகள் மற்றும் புராணங்கள் அதிகம் காணப்படவில்லை. இரண்டாவது காரணம் ஸ்தல விருட்ஷங்கள் எனப்படும் மரங்களின் மகிமைகளைக் குறித்தும் ஆலயங்களில் விவரங்கள் காணப்படவில்லை.

    மரவழிபாட்டை எப்படி செய்வது ?  தமது ஜென்ம நட்ஷத்திரத்துக்கு உகந்த மரத்தை தெரிந்து கொண்டு, வருடத்துக்கு ஒரு முறையாவது அங்கு சென்று அந்த மரத்துக்கு குங்கும சந்தனம் இட்டு, பூக்களை அதன் மீது தூவி,  அந்த மரத்தை பதினோரு  முறை பிரதர்ஷனம் செய்து, அதன் வேருக்கு பாலையும் நீரையும் ஊற்றி அபிஷேகம் செய்து, அதை நமஸ்கரித்துவிட்டு அங்குள்ள தேவதையிடம் தமது பாவங்களைக் களைந்து  தமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டு வர வேண்டும்.  பூஜை செய்து வழிபட்டதும்  அந்த மரத்தின் அடியில் அல்லது  அதன் பக்கத்தில் குறைந்தது ஒரு மணி நேரமாவது இருக்க வேண்டும். அப்போதுதான் அவரவர் இழந்திருந்த ஜீவசக்தி மீண்டும் அவர்களுக்கு அந்த மரங்களில் குடியுள்ள தேவதைகள் அந்த மரத்தின் இலைகள் மற்றும் கிளைகள் மூலம் வெளிப்படுத்தும் அதிர்வலைகளில் இருந்து கிடைக்கும். அதன் மூலம் அவர்களை சூழ்ந்திருந்த பாவங்களின் சுமைகளும் விலகத் துவங்கும். இதையே நட்சத்திர மர வழிபாடு என்கிறோம்.

     
     மரங்களில் குடி உள்ள தேவதைகள் உண்மையான 
    ஸ்வாச  உணர்வுகளையும்  தன்மைகளையும்  தம்மை வந்து 
    வணங்கித் துதிக்கும் மனிதர்களை சுற்றி உள்ள  ஆரோ 
    போன்ற  கற்றைகள்  மீது  செலுத்தி  அவர்கள் இழந்து 
    இருந்த ஜீவசக்தியை மீட்டுத் தர வழி வகுக்கின்றன 
     
    ஆனால் அத்தகைய புனிதமான மர வழிபாடான இயற்கை வழிபாடு என்பதை தற்காலத்தில் ஒரு சுற்றுலா பயணம் போல மாற்றி அமைத்து  பயணிகளை பொழுதுபோக்குக்காக எங்காவது வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு உணவருந்தி, ஓய்வெடுத்து திரும்ப அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.  இயற்கை வழிபாடு எனும் பெயரில் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்பவர்கள் இயற்கை வழிபாட்டின் உண்மையான காரணத்தையும், தத்துவத்தையும், அதனால் விளையும் நன்மைகளையும், அங்குள்ள மரங்களின் தன்மைகளையும், யார் யார் அங்குள்ள மரங்களில், எந்த மரங்களை வழிபட வேண்டும் என்பதையும் வந்துள்ளவர்களுக்கு  எடுத்துக் கூறி  நல்வழிக் காட்டாமல் பொழுதுபோக்கு அம்சமாகவே அதை  மாற்றி அமைத்து விட்டார்கள். இதனால்தான் இயற்கை வழிபாட்டின் முக்கியமான மர  வழிபாடு பற்றி பலருக்கும் தெரியாமல் உள்ளது.



    நட்சத்திரம்
    நட்ஷத்திரத்துக்கானமரம்
    எந்தமரம்  எந்ததெய்வத்துக்குஉகந்தது?. அவைஉள்ளஆலயம்எது ?
    1
    அஸ்வனி
    எட்டி
    ஆலயம்: கூத்தனூர் , ஸ்ரீரங்கம், திருத்துறைப் பூண்டி
    2
    பரணி
    நெல்லி
    லஷ்மிமுருகன், விஷ்ணு,   போன்றதெய்வங்களுக்கு  உகந்தது. ஆலயம்:- பழனிமுருகன், போரூர்ராமனாதீஸ்வரர் , மடிப்பாக்கம்சிவா- விஷ்ணுஆலயம்
    3
    கிருத்திகை
    அத்தி
    தத்தாத்திரேயர்மற்றும்விஷ்ணுவுக்குஉகந்ததுஆலயம்: சேங்காலிபுரம்தத்த  குடீரம்ஆலயம், திருவண்ணாமலைஅகத்தீஸ்வரர்ஆலயம்
    4
    ரோகினி
    நாவல்

    ஆலயம்:- திருநாவலூர்பக்தஜனேஸ்வரர்மரம்உள்ளஆலயம்
    5
    மிருச்சிகம்
    கருங்காலி
               
    6
    திருவாதரை
    செங்கருங்காலி
     
    7
    புனர்பூசம்
    மூங்கில்

    8
    பூசம்
    அரசு

    9
    ஆயில்யம்
    புன்னை
    புன்னை ஸ்ரீநிவாசப்பெருமாள்  ஆலயம், தூத்துக்குடி / மாரியம்மன்மாரியம்மனின்பலஆலயங்கள்
    10
    மகம்
    ஆலம்

    11
    பூரம்
    பலசம்

    12
    உத்திரம்
    அலரி

    13
    அஸ்தம்
    அத்தி
    தல மரம் உள்ள ஆலயம்: திருவெற்றியூர் ஆதிபுரீஸ்வரர்
    14
    சித்திரை
    வில்வம்
    சிவபெருமான். பலசிவாலயங்கள்
    15
    சுவாதி
    மருதம்
    தல மரம் உள்ள ஆலயம்: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர், திருவெற்றியூர் ஆதிபுரீஸ்வரர்
    16
    விசாகம்
    விளாமிச்சை

    17
    அனுசம்
    மகிழம்

    18
    கேட்டை
    பிராய்அல்லதுகுட்டிபலா

    19
    மூலம்
    மரா (அரசமரம்  போன்றது)

    20
    பூராடம்
    வஞ்சி (ஒருவிதபூமரம்)

    21
    உத்திராடம்
    பலா

    22
    திருவோணம்
    வெள்ளெருக்கு

    23
    அவிட்டம்
    வன்னி
    துர்க்கைமற்றும்சனிபகவானுக்குஉகந்தது- ஆலயங்கள்:-
    சென்னைமருதேஸ்வரர்  ஆலயம், விருதாச்சலத்தின்விருத்தகிரீஸ்வரர்மகுடேஸ்வரர்
    24
    சதயம்
    கடம்பு
    முருகன்மற்றும்மகாவிஷ்ணுவிற்குஉகந்தது- ஆலயங்கள்:- திருக்கடம்பூர்அமிர்தகடேஸ்வர் , மதுரைசோமசுந்தரேஸ்வர்
    25
    பூரட்டாதி
    தேமாமரம்அல்லதுகருமருது  (ஒருவிதபூமரம்)

    26
    உத்திரட்டாதி
    வேம்புஅல்லதுவேப்பமரம்
    அம்மனுக்குஉகந்தது
    ஆலயம்:- பொதுவாகவேஅம்மன்மற்றும்மாரியம்மன்ஆலயங்கள்
    27
    ரேவதி
    இலுப்பை
    அஷ்டலஷ்மிக்குஉகந்தது
    ஆலயம்:-திருச்சங்கோடுஅர்த்தநாரீஸ்வரர் , திருஇரும்பைமாகாளம் (பாண்டி)


    அடுத்தக் கேள்வி இது.  ஒருவருக்குத் தேவையான நட்சத்திர மரத்தை எங்கு போய் தேடுவது?   வசதி இருந்து வீடுகளில் தோட்டமும்  வைத்து உள்ளவர்கள் தமது நட்ஷத்திரத்துக்கான செடிகளை வாங்கி வைத்து மரமாகவே வளர்க்கலாம். அதன் மூலம் வீட்டிலேயே வழிபாட்டை தினமும் தொடரலாம்.

    அத்தி, வேம்பு,  ஆல மரம், நெல்லி மரம், மகிழ மரம், மற்றும் வில்வம் போன்ற மரங்கள் பல இடங்களிலும் உள்ள ஆலயங்களில் உள்ளன.  அந்த நட்ஷத்திரத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்று அவற்றை வழிபடலாம்.

    சேலம் நகரில் உள்ள  சுகவனேஸ்வரர் ஆலயத்தின்  எதிரில் சுபிக்ஷா பிருந்தாவனம் என்ற மிகப் பெரிய தோட்டம் உள்ளது. அதில் அனைத்து நட்ஷத்திரங்களுக்கும் உரிய 27 வித மரங்களும் வளர்க்கப்பட்டு  வருகின்றனவாம். அது போலவே குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் ஆலயத்தின் அருகில் உள்ள  தோட்டத்தில் 27 நட்சத்திர மரங்கள் உள்ளனவாம். திருச்சி நீதிமன்றத்துக்கு அருகே ஐயப்பன் ஆலயத்தில் 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு   வளர்க்கிறார்களாம்.  தம்முடைய நட்ஷத்திரங்களுக்கு  உரிய மரங்களை தாம் வசிக்கும் ஊரில் இல்லை என்றால்  இந்த இடங்களுக்குச் சென்று  மர வழிபாடு செய்யலாம்.

    அதைப் போலவே மயிலாடுதுறையிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ள அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கண்காணாதீஸ்வரர் எனும் ஆலய பிராகாரங்களில் வளர்க்கப்பட்டு வருவதாக கூறப்படும் 27 நட்ஷத்திரங்களுக்கு உரிய மரங்களை வழிபடலாம் என்கிறார்கள். இந்த கோவில் அறங்காவலர் திரு பாஸ்கரன் (போன் நம்பர்---9715352496) அல்லது கோவில் சாம்பசிவக் குருக்களை (போன் நம்பர்---9443392 176) தொடர்ப்பு கொண்டு அறிவுரை பெறலாம்.

    மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் பூங்காவிலும்  நட்சத்திர மரங்கள் நடப்பட்டுள்ளன என்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் சனீஸ்வரர் ஆலயத்தின் சூரியன் தோட்டம் எனும் இடத்திலும் 27 நட்சத்திர மரங்கள் உள்ளனவாம்.  இவற்றைத் தவிர கீழே குறிப்பிடப்பட்டுள்ள  இடங்களிலும் நட்சத்திர மரங்கள் உள்ளனவாம்.

    (1) சர்வசக்தி நட்சத்திர விருட்ச பீடம்,
    கிச்சகத்தியூர்,
    இலுப்பாபாளையம் (அஞ்சல்),
    சிறுமுகை - 641302,
    கோயம்புத்தூர் (மாவட்டம்),
    தமிழ்நாடு,
    இந்தியா.
    செல் : 85260 74891.
    99440 99980.

    (2) 108 மூலிகை வளர்ப்பு மையம்
    சிவ வன நகர் , சிக்கரசம்பாளையம்,
    (சத்தி to பண்ணாரி மெயின் ரோடு,மு௫கன் கோவில் பஸ் ஸடாப்)
     சத்தியமங்கலம் ,ஈரோடு மாவட்டம்
     
    (3) சுமார் 1100 ஆண்டுகளாக புகழ்பெற்று விளங்கும் நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.  இந்த கோவில் நாமக்கல் மாவட்டம் திருமளைப்பட்டி கிராமத்தை அடுத்த மின்னாம்பள்ளி இருளப்பட்டியில் அமைந்துள்ளது.  நாமக்கல்லில்  இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.  

    Lakshmi Hayagreevar Pooja

    $
    0
    0


    கோயம்பத்தூர் மருதமலை சாலை நவாவூர் பிரிவு அருகில் உள்ள பாலாஜி நகரில் செயல்பட்டு வருவது 'ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சாரிடபள் டிரஸ்ட்'என்பதாகும். இந்த டிரஸ்ட் வேத பாட சாலை ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். அங்குள்ள ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயத்தில் அவர்கள் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவருக்கு சன்னதி அமைத்து அதில் மூலவரின் சிலை ஒன்றை நிர்மாணிக்க உள்ளார்கள்.  இந்த டிரஸ்டுக்கு சிருங்கேரி சாரதா பீடம், காஞ்சி மடம் மற்றும் தத்தாத்திரேயரின் வழித்தோன்றலான அவதூதரான ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் பாததுளி ஸ்ரீ துர்கா பிரசாத் ஆனந்த ஸ்வாமிகள் போன்றவர்களின் அருளாசியும் உண்டு. இந்த வேத பாடசாலையில் கல்வி, கேள்வி, ஞானம் மற்றும் செல்வத்தை அள்ளித் தரும் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் பஞ்சலோக விக்ரகம் உள்ளது.

    இங்குள்ள ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயத்தை அவதூதரான ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் நிறுவியதாக கூறுகிறார்கள். அவருடைய சமாதி சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில்  உள்ளது.

    இதே  டிரஸ்டின்  நிர்வாகத்தில் உள்ள புவனேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் சிலையையும் பிரதிஷ்டை செய்ய உள்ளார்கள்.  தற்போது டிரஸ்ட் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள உற்சவ மூர்த்தியான ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவரை  அந்த ஆலயத்தில் உள்ள சரஸ்வதி சன்னதிக்கு எடுத்துச் சென்று அங்கு வைத்து பூஜைகளை செய்தபின் மீண்டும் திரும்ப ட்ரஸ்ட் அலுவலகத்தில் வைத்து விடுகிறார்கள். ஆலயத்தில் மூலவர் சிலை அமைக்கப்படும்வரை அந்த உற்சவ மூர்த்தியே பூஜிக்கப்பட்டு வருமாம். அந்த உற்சவ  மூர்த்தி பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு மந்திரங்கள் ஓதி பூஜிக்கப்படுவதினால், உற்சவ மூர்த்தியே என்றாலும், ஆலய சன்னதியில் உள்ள மூலவர் போல அதன் சக்தி பெருகி உள்ளதாம். ஒருமுறை ஒரு இடத்தில் அந்த உற்சவ மூர்த்திக்கு லட்ஷார்ச்சனை செய்தபோது அங்கிருந்த திக்குவாய்  குழந்தை ஒன்று பூஜையின் முடிவில் திக்குவாய் நோய் குணமடைந்து நன்கு பேசத் துவங்கியதாம். இப்படி பல சம்பவங்கள் உள்ளதாம். அங்காங்கே நடைபெறும் லட்ஷார்ச்சனை மற்றும் பூஜையினால் மேலும் மேலும் அந்த விக்ரஹத்துக்கு சக்தி பெருகிக் கொண்டே போவதை பெருமையாக அந்த பூஜையை நடத்தி வைத்த பண்டிதர் கூறினார்.

    இந்த ட்ரஸ்ட் அமைக்க உள்ள பெரிய  வேதபாடசாலை மற்றும் ஆலய திருப்பணிக்கான நன்கொடையை வசூலிக்கும் ஒரு வழிமுறையாக அவர்கள் செல்வத்தையும் கல்வியையும் தரும் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவரை பூஜிக்க விரும்பும் பக்தர்கள் வீட்டுக்கே அந்த ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் பஞ்சலோக விக்ரஹத்தை எடுத்துச் சென்று மெத்த பாண்டித்தியம் பெற்றுள்ள பண்டிதர் மூலம் அவரவர் வீட்டில் அந்த விக்ரஹத்துக்கு பூஜை செய்து அவர்களது விருப்பத்தை நிறைவேற்றித் தருகிறார்கள்.  இதன் மூலம் அந்த புனிதமான திருப்பணிக்காக  பெறப்படும் நன்கொடையை அவர்கள் ஆலயம் கட்டும் பணிக்கு பயன்படுத்த உள்ளார்கள்.  விளம்பரம் இல்லாமல் வாய்மொழி செய்தியாகவே  வழியே இந்த பூஜை பற்றிய செய்தி அனைத்து ஊர்களிலும் உள்ள இடங்களிலும் பரவி வருகிறது என்றாலும் தொடர்ந்து ஒரு குழுவாக அந்த ட்ரஸ்டை சார்ந்தவர்கள் இந்தப் பணியை செய்தவண்ணம் ஊர் ஊராக சென்று வருகிறார்கள்.

    திருப்பணிக்கான நன்கொடையை அவர்கள் இந்த முறையில் வசூலிப்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஆலயத்தில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீஸ்வரர் சன்னதியை நிர்மாணிக்க செல்வம் படைத்தவர் சிலர்  முன்வந்து தாமே அனைத்து செலவினையும்  ஏற்கத் தயாராக இருந்தாலும், ஒன்று அல்லது இரண்டு தனி நபர்களிடம் இருந்து நன்கொடைப் பெற்றுக் கொண்டு இந்த திருப்பணியை செய்யக் கூடாது என்பது கட்டளையாக உள்ளத்தினாலும், ஸ்ரீ  லஷ்மி ஹயக்ரீவரை மனித குல மேம்பாட்டிற்காக பல இடங்களிலும் அழைத்துச் சென்று, பல்வேறு இடங்களிலும் வைத்து அவருக்கு பூஜையை செய்து, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்தும் நன்கொடைப் பெற்று குறிப்பிட்ட காலம்வரை அந்த உற்சவ மூர்த்தி அனைத்து இடங்களுக்கும் உலா சென்றுவிட்டு வர வேண்டும் என்பதே குருவின் கட்டளை என்பதினால் இந்த திருப்பணிக்கான நன்கொடையினை ஊர் ஊராகச் சென்று தனி நபர்களின் வீடுகள், தொழில்சாலைகள், வணிக கூடங்கள் மற்றும் கல்விக் கூடங்கள் போன்ற இடங்களில் வைத்து ஆசாரமாக, விதிப்படி பூஜை செய்து நன்கொடை வசூலிக்கிறார்கள். இந்த பூஜைக்கான கட்டண விவரங்களை கட்டுரையின் முடிவில் தரப்பட்டு உள்ள நிர்வாகிகளுடன் தொடர்ப்பு கொண்டு கேட்டறியலாம்.

    ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சாரிடபள் டிரஸ்ட் சார்ப்பில் நடத்தப்படும் அந்த பூஜை இன்று காலை பெங்களூரில் அரிக்கேரே  எனும் பகுதியில் (ஹுலிமாவு, சாந்திநிகேதன் லேயவுட்  மற்றும் விஜயா பாங்க்  காலனிக்கு மத்தியில் உள்ள இடம்) உள்ள பாரமௌண்ட் பிளட்ஸ் எனும் குடி இருப்பில் தனி நபர் ஒருவர் வீட்டில் சிறப்பாக நடந்தேறியது.  தனி நபர் வீட்டில் நடைபெற்ற பூஜை என்பதினால் 10 அல்லது 15 குடும்பங்களே அழைக்கப்பட்டு இருந்தன. சுமார் 50-60  பக்தர்கள் அதில் கலந்து  கொண்டு ஹயக்ரீவர் அருளைப் பெற்று மன ஆனந்தம் அடைந்தார்கள்.

    குடியிருப்பின் நுழை வாயிலிலேயே விக்ரஹத்தை வண்டியில் இருந்து இறக்கி ஒரு சின்ன பீடத்தில் வைத்தப் பின்னர், ஆரத்தி எடுத்தப் பின் மந்திரங்கள் ஓதியபடி வழி முழுவதும் உற்சவ மூர்த்தியின் விக்ரகத்தின் மீது பூக்களைத் தூவியபடியே ஊர்வலமாக எடுத்து வந்தார்கள். அந்த விக்ரஹத்தை வைப்பதற்காக அவர்களே மரப்பலகையிலால் ஆன ஒரு பீடத்தையும் எடுத்து வந்தார்கள். அனைத்து ஏற்பாடுகளையுமே சிரத்தையுடனும், கவனத்துடனும் சிறப்பான தொழில்முறை வல்லுமையின் அடிப்படையில் செய்து உள்ளதினால், ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்த காரியங்களை மளமளவென தடங்கல் இன்றி செய்தார்கள். ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட உற்சவ மூர்த்திக்கு  வீட்டு நுழை வாயிலில் பெண்கள் ஆரத்திப் பாடல்களைப் பாடி, தீபம் காட்டி உள்ளே அழைத்துச் சென்று விக்ரஹத்தை அதற்கான பீடத்தில் வைத்தப் பின் பூஜைகளைத் துவக்கும் முன்னால் அந்த ட்ரஸ்ட்டின் பொறுப்பாளர்  அவர்களுடைய பணிக்கான காரணங்களையும், பூஜையின் மகத்துவம் மற்றும் எதிர்கால திட்டங்களையும்  விளக்கினார்.  அதன் பின்னரே பூஜை   துவங்கியது.



    பூஜைகளை துவக்குவதற்கு முன்னதாக சன்னதியை மூடி வைத்துள்ளதைப் போல சம்பிரதாயமாக பீடத்தில் வைக்கப்பட்டு இருந்த விக்ரஹத்துக்கு முன்னால் திரைப் போல ஒரு துணியை இருவர் பிடித்திருக்க, அந்த விக்ரஹத்துக்கு போடப்பட்டு இருந்த அதன் ஆபரணங்கள் மற்றும் ஆடைகளை எடுத்தப் பின் அபிஷேக ஆடைகளை அணிவித்து விட்டு திரையை விலக்கி அபிஷேகங்களை துவக்கினார்கள்.



    மந்திரங்களை ஓதியபடியே விக்ரஹத்துக்கு பன்னீர் , பால், சந்தனம் மற்றும் தேன் அபிஷேகம் போன்ற அனைத்தையும் ஆலயத்தில் செய்வது போலவே செய்தபின் முடிவாக தண்ணீர் ஊற்றி விக்ரஹத்தை  அலம்பிய பின்னர் தூப தீபாராதனைக் காட்டிய பின்னர் மீண்டும் திரையால் பீடத்தை மூடி விக்ரஹத்தை நன்கு அலங்கரித்தப் பின்னர் திரையை விலக்கி ஹயக்ரீவர் பூஜைகளை துவக்கினார்கள்.








    அந்த பூஜையை செய்வித்த பண்டிதர் அற்புதமாக பூஜைகளை செய்து முடிக்க, கூடி இருந்த பக்தர்கள் திருப்பாவை, திருவாய்மொழி, விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்றவற்றை ஓதிக் கொண்டிருக்க அதன் பின்னர் வேத விற்பனர் ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் மற்றும் லஷ்மி ஸ்தோத்திரத்தையும் ஓதி பூஜைகளை செய்வித்தார். அதன் பின்னர்  கற்பூர ஆரத்தியுடன் தூப தீபாராதனை நடந்து முடிந்தது. சுமார்  மூன்று மணிநேரம் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இறுதியில் பண்டிதர் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் கதையையும் கூறினார்.



     

     

     
     

     

     
    அந்த பூஜையில் கலந்து கொண்டவர்கள் தமது வீட்டுக் குழந்தைகளின்  புத்தகங்களை ஸ்வாமி அமர்ந்திருந்த பீடத்தில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் காலடியில் வைத்து வழிபட்டார்கள்.


    கீழே உள்ளவை பூஜை காட்சிகள், அதில் கலந்து கொண்டவர்களின் சிறு பகுதி மற்றும் பூஜை முடிவில் ஆரத்தி எடுத்ததும்  அவர்களது சம்பிரதாயத்தின்படி பெண்கள் பாடியபடி கும்மி அடித்து நடனமாடி ஸ்வாமியை பெருமைப்படுத்திய காட்சிகள் ஆகும்.





    கீழே உள்ள படங்கள் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் பூஜையில் கலந்து கொண்ட குடும்பத்தினரில் சிலர்.





    ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் யார்? அவர் கதை என்ன?

    பிரபஞ்சம் படைக்கப்பட்டு முடிந்தப் பின்னர் முதல் யுகத்தில் குதிரை முகத்தை உடைய ஹயக்ரீவர் என்றொரு அசுரன்  வாழ்ந்திருந்தான். அந்த அசுரனோ, எவருமே தன்னை அழிக்க முடியாத வரத்தைப் சிவபெருமானை  நோக்கி ஆயிரம் வருட காலம் கடுந்தவம் புரிந்துப் பெற்றான். ( சில கதைகளில் அந்த அசுரன் பெற்ற வரத்தை புவனேஸ்வரி தேவியை நோக்கி தவம் புரிந்து பெற்றதாக கூறப்படுகிறது).  அவனது துதியில் மகிழ்ந்த சிவபெருமான்  'மகனே உனக்கு என்ன வரம் வேண்டுமோ அதைக் கேள் தருகிறேன்'என்று கேட்க ஹயக்ரீவன் தயங்காமல் சிவபெருமானிடம் 'என்னைப்போலவே குதிரை முகத்தினை உடையவனாக இருப்பவனால் மட்டுமே என்னை வதம் செய்ய இயலும் என்ற வரத்தைக் கொடுங்கள்'என்று கேட்க அவனது துதியில் மகிழ்ந்து காட்சி தந்த சிவபெருமானும் அவன் கேட்ட வரத்தை அருளி மறைந்தார். மனித உடலும் குதிரை முகத்தையும் கொண்டிருந்த அந்த அசுரனின்  செயலால் அடுத்தடுத்து வந்த யுகங்களில் மக்கள் பெறும் அவதிக்கு உள்ளானார்கள்.

    ஹயம் என்றால் குதிரை என்று பொருள். எனவே, குதிரை முகம் கொண்டவன் என்ற பொருளில் அவனை ஹயக்ரீவன் என்றே அனைவரும் அழைத்தார்கள். அந்த அசுரனின் தொல்லையினால் தேவலோகத்திலோ, பூலோகத்திலோ எங்குமே யாராலும் நல்ல காரியங்களை நடத்த முடியவில்லை. யாகங்கள், வேள்விகள் என எவற்றையுமே யாராலும் நடத்த முடியாமல் அவன் தடங்கல் செய்து அவற்றை தடுத்து நிறுத்தினான். மூவுலகிலும் நடைபெற்று வந்திருந்த தர்ம காரியங்களுக்கு இடையூறு விளைவித்து வந்தான். அவனை யாராலும் வெல்லவும் முடியவில்லை, அழிக்கவும் முடியவில்லை. மகா பராக்கிரமசாலியாக விளங்கியவன் தன்னைப் போன்ற உருவத்துடன் உள்ள ஹயக்ரீவனால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் எனவும் வரம் பெற்று இருந்ததினால் அவன் ஒருவனைத் தவிர குதிரை முகம் கொண்டவர் இந்த பிரபஞ்சத்தில் யாருமே இல்லை, பிறக்கவும் முடியாது என்பதே அவனுக்கு பலமான ஆயுதமாக இருந்தது.

    அசுர குலத்துக்கே உரிய மூர்க்கத்தனத்துடன் திகழ்ந்து வந்த அந்த அசுரன் கொடுத்து வந்த தொல்லைகளையும், இன்னல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் போன ரிஷிகளும், சாதுக்களும், தேவியிடம் சரண் அடைந்து தம்மை அந்த மூர்கனிடம் இருந்துக் காப்பாற்றுமாறு வேண்டினார்கள். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதினால் அவனைப் படைத்த பிரும்மாவிடமே சென்று முறையிட்டார்கள். அவரும் தன்னால் அந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்பதினால் அனைவரையும் அழைத்துக்  கொண்டு ருத்ரரின் வடிவில் இருந்த சிவபெருமானைக் காணச் சென்றார்கள். சிவபெருமானும் அந்த அசுரன் அழிய வேண்டிய காலம் வந்துவிட்டதை உணர்ந்து கொண்டு அந்தக் காரியத்தை மஹாவிஷ்ணுவால் மட்டுமே செய்ய முடியும் என்பதினால் திருமாலிடம் சென்று அவர் உதவியை நாடுமாறு அறிவுறுத்தினார்.

     

    அவர்கள் சென்று இருந்தபோது மகாவிஷ்ணு ஏற்கெனவே ஓர் அசுரனுடன் பல காலம் யுத்தம் செய்த களைப்பினால் அனந்த சயனத்தின் மீது வில்லை தன் முகவாயிற் பொருத்தி கண்களை மூடியபடி படுத்திருந்தார். லஷ்மி தேவி அவர் கால்களை வருடி விட்டபடி இருந்தாள். அங்கு சென்ற தேவர்கள் எத்தனை அழைத்தும் மகாவிஷ்ணு கண்களை திறக்கவே இல்லை என்பதினால் பிரும்மா அவர் தலைமாட்டில் போய் மகாவிஷ்ணு படுத்திருந்த வில்லின் நாணை இழுத்துப் பார்த்தார். அவ்வளவுதான் அந்த வில்லின் நாணானது அறுந்து விழ மகாவிஷ்ணுவின் தலையும் வெட்டுப்பட்டு பறந்து சென்று கடலுக்குள் சென்று மூழ்கி மறைய, அவ்வளவுதான் பூமியே அதிர்ந்தது கடல் பொங்கி எழுந்து கரை புரண்டது. அவற்றைக் கண்டு அஞ்சிய சூரியனும் அப்படியே மறைந்தார். லஷ்மியும், தேவர்களும் கூக்குரலிட்டு அழுதனர். உடனடியாக அவரை உயிர் பிழைக்க வைக்க என்ன செய்யலாம் என்பதற்காக அவர்கள் அனைவரும் மீண்டும் சிவபெருமானிடமே சென்று கதறி அழ, அவரும் அவர்களை தேற்றி தேவலோகத்தில் இருந்த ஒரு வெள்ளைக் குதிரையின் தலையை வெட்டி எடுத்து வந்து அந்த தலை அற்ற உடலில் வைத்து பிரும்மாவே மந்திரங்களை ஓதினால் அவர் உயிர் பிழைப்பார் என்று கூற பிரம்மதேவரோ, காலம் தாழ்த்தாமல் அந்த வெள்ளைக் குதிரையின் சிரஸை அறுத்து வந்து, அதை மகாவிஷ்ணுவின் உடலில் பொறுத்த அங்கிருந்த அனைவரும் அஸ்வமேக யாக மந்திரங்களை ஓத, சற்று நேரத்தில் குதிரையின் முகத்துடன் படுக்கையில் இருந்து ஹயக்ரீவராக மாறி எழுந்த மகாவிஷ்ணு மிக்க ஆவேசத்துடன் கனைத்தபடி அந்த துஷ்ட அசுரன் ஹயக்ரீவன் இருந்த இடத்துக்கு பாய்ந்து சென்று அவனுடன் யுத்தம் செய்து அவனை வதைத்தார். தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.

    ஆனால் அளவுக்கு மீறி சினத்துடன் இருந்த ஹயக்ரீவரின் கோபத்தைக் குறைக்க முடியவில்லை. அவரது உக்ரஹத்தை தேவலோகத்தில் இருந்த எவராலும் தாங்க முடியவில்லை. ஆகவே அவர்கள் செய்வதறியாது மீண்டும் லஷ்மி தேவியிடம் சென்று, ஹயக்ரீவரை சாந்தப்படுத்துமாறு கூற லக்ஷ்மி தேவியானவள் அவர் இருந்த இடத்தை அடைந்து அவர் மடியில் அமர்ந்து அவரை சாந்தப்படுத்தத் துவங்கினாள். அங்குமிங்குமாக அலைகழித்தபடி நீண்ட தூரப் பயணத்தில் ஹயக்ரீவரை  ஈடுபடவைத்து, அதே நேரத்தில் அவர் மடியில் இருந்தபடியே அவருடைய கோபம் நீங்க அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டே வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றாள். அங்கு ஏற்கனவே அவர் வரவை எதிர்நோக்கி அமர்ந்திருந்த சரஸ்வதி தேவியைக் கண்டதும் அவள் கேட்டுக் கொண்டபடி அவளுக்கே ஞானோபதேசம் செய்த பின்னர் அகஸ்திய முனிவரை அழைத்து பூமியில் மனிதகுல மேம்பாட்டிற்காக அவருக்கும் லலிதா சஹாஸ்ரனாமாவளியை போதனை செய்துவிட்டு அதை பூலோகத்தில் சென்று மனிதகுலத்தில் பரப்புமாறு கூறிவிட்டு அமர்ந்ததும் அவருக்கு மீண்டும் பழைய உருவம் திரும்ப வந்து சேர்ந்தது. தன் பழைய உருவை அடைந்தவர் லஷ்மி தேவியுடன் வைகுண்டத்துக்கு சென்றார். இப்படியாக ஹயக்ரீவர் கல்வியின் அதிபதியான சரஸ்வதிக்கே குருவானார் என்பதினால்தான் கல்வி அறிவுக்கு  குருவானவர் லஷ்மி ஹயக்ரீவர் என்பவர் என்ற ஐதீகம் ஆயிற்று. இதனால்தான் மஹா விஷ்ணுவானவர் ஹயக்ரீவர் அவதாரத்தில் சரஸ்வதி தேவிக்கே ஞானோபதேசம் செய்து, மஹாலஷ்மியை தன் மடியில் அமர வைத்து இருந்ததினால் பூலோகத்தில் உள்ளவர்கள் ஹயக்ரீவரை துதித்து பூஜித்தால் அளவற்ற செல்வமும், ஞானமும், அபார கல்வி அறிவும் பெறுவார்கள் என்பதாயிற்று.

     'ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சாரிடபள் டிரஸ்ட்'குழுவினரிடம்  பூஜை  விவரம் குறித்து கேட்டறிய விரும்புவோர் தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி:

    திரு சந்தான கிருஷ்ணன், மானேஜிங் ட்ரஸ்டி : 098422 62311
    திருமதி  கிரிஜா, செக்ரடரி : 098420 40386
    அர்ச்சகர் திரு ராமகிருஷ்ணன் : 099943 11019
    அர்ச்சகர் திரு சிவராமகிருஷ்ணன் : 096008 67678
    சென்னையில் :
    திருமதி  P.  சுகந்தி : 097109 16999
    திரு K.P. வரதராஜன் : 098412 64666

    Curse for Moon

    $
    0
    0

    ஒருமுறை கைலாயத்திலே சுக்ல சதுர்தியில் சிவபெருமானை துதி பாடிக் கொண்டிருந்த பெரிய விழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அனைத்து தேவர்களும் முனிவர்களும் கூடி இருந்தார்கள். சிவபெருமான் என்றால் சிவபெருமானும் முருகனும் இல்லாமலா விழா நடக்கும். ஒவ்வொருவரும் தமக்கே தெரிந்தவகையில் ஆடிப்பாடி சிவபெருமானை மகிழ்வித்த வண்ணம் இருக்க வினாயகருக்கும் தானும் நடனமாட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆகவே அவரும் எழுந்து சபை நடுவே சென்று நடனம் ஆடத் துவங்கினார்.

    என்ன இருந்தாலும் வினாயகர் குட்டையானவர், தொப்பை உள்ளவர், சிறிய கால்களும், சிறிய கைகளையும் கொண்டவர் என்பதினால் அவர் ஆடிய ஆட்டம் விநோதமாக இருந்தது. ஆகவே அவர் தொந்தியும் தொப்பையுமாக குலுங்கிக் குலுங்கி ஆடத் துவங்கியதும் அனைவருக்கும் சிரிப்பு வந்தது. அனைவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள் என்றாலும் சந்திரபகவானால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை, சிரித்து விட்டார்.  மற்றவர்களும் அதை கண்டு சிரித்தார்கள். அதைக் கண்ட வினாயகர் அவமானம் அடைந்து நாட்டியத்தை நிறுத்திக் கொண்டாலும் வினாயகருக்கு கோபம் வந்துவிட அவர் சந்திரனை சபித்தார். சந்திரன் சிரித்ததால்தானே அனைவரும் தன்னை  பார்த்து கேலியாக சிரித்தார்கள் என்பதினால் இனி பூலோகத்தில் சந்திரனை யாரும் வழிபட மாட்டார்கள் என்று சாபமிட்டு விட சந்திரன் வருத்தம் அடைந்தார்.


    அடுத்த வினாடி சந்திரன் தனது ஒளிமயமான முகத்தின் களையை இழந்தார், மற்றவர்களும் வருத்தமுற்றார்கள். ஆகவே அனைவரும் வினாயகரிடம் சென்று வருத்தம் தெரிவித்து விட்டு அவர் கோபத்தை குறைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டு சந்திரனை மன்னித்து அவருக்குக் கொடுத்த சாபத்தை விலக்குமாறும்  வேண்டினார்கள். ஆனால் ஒருமுறை கொடுத்த சாபத்தை தெய்வங்களினால்  திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதினால் வினாயகரும் அவர்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அதே சமயம் அப்படி சபையில் ஒருவரை அவமானப்படுத்துவது தவறு என்பதை உணர்த்தும் வகையில் இனி ஒவ்வொரு வளர்பிறையின் சுக்ல சதுர்தியிலும் சந்திரனது உருவைக் காண்பவர்கள் அபவாதத்தை (பழிச் சொல்) அடைவார்கள். ஆனால் வருடத்தில் ஒரே ஒரு நாள் அதாவது ஆவணி மாதம் சுக்ல சதுர்தியில் விரதம் இருந்து வினாயகரை பூஜித்து வழிபட்டால்   சுக்ல சதுர்தி அபவாதங்கள் அனைத்தும் நீங்கும் எனவும் சாபத்தை மாற்றி அமைத்தார்.


    அதனால்தான் வளர்பிறையில் சதுர்தியில் வானத்தில் சந்திரனை யாரும் பார்க்க மாட்டார்கள். அப்படி தப்பித் தவறி பார்த்து விட்டாலும் அந்த பாவத்தை விலக்கிக் கொள்ள ஆவணி மாதம் சுக்ல சதுர்தியில் விரதம் இருந்து வினாயகரை பூஜித்து அந்த பாவத்தைப் போக்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

    Kaleeswarar Temple, Sivagangai

    $
    0
    0




    காளையார் கோவில் என்பது காளீஸ்வரர் கோவில் என்ற பெயரிலிருந்து மருவி வந்ததாகும். சிவகங்கை மாவட்டத் தலைநகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில், மற்றும் மதுரையில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கானப்பேரூர்  என்று அழைக்கப்பட்ட இடத்தில்  காளையார் கோவில் அமைந்துள்ளது. சிவகங்கையின் புகழ் பெற்ற கோயிலாக காளையார் கோயில் விளங்குகிறது. முன் ஒரு காலத்தில், ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டு வந்திருந்தபோது காளையார் கோவில் பெரிய வனப்பகுதியாகவே இருந்துள்ளது. அங்கிருந்த பகுதிகள் பாளயக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளன.
     
    இந்த ஊருக்கு காளையர் கோவில் என்ற பெயர் வந்ததின் காரணமும் உண்டு. ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் விருதுநகர் அருகில் உள்ள திருச்சுழி எனும் ஊரில் ஆலய தரிசனம் செய்தப் பின் காளையார் கோயிலுக்கு சென்றார். அப்போது அதன் பெயர் காளையார் கோவில் என்பதாக இல்லை. அந்த ஊருடைய எல்லைக்கு வந்தவுடன் வழி எங்கும் சிவலிங்கமே நிறைந்துள்ளதைக் கண்டவர் சிவலிங்கத்தின் மீது நடந்தா ஊருக்குள் இறைவனைக் காணச் செல்ல வேண்டும் என மனம் வருந்தி திரும்பிச் செல்ல முயன்றபோது எதிர்புறத்தில் இருந்து ஒரு காளை ஓடி வந்ததைக் கண்டார். அங்கு ஓடி வந்த காளை சுந்தரமூர்த்தி நாயனார் நின்றிருந்த இடம் வரை வந்தப் பின் மீண்டும் திரும்பிச் சென்றது. அப்படி அது திரும்பிச் சென்றபோது அது கால் பதித்து நடந்த  இடங்களில் லிங்கம் இல்லையென்றும், ஆகவே அந்த வழியே வந்து தன்னைத் தரிசிக்கலாம் என அசரீரி ஒலிக்கவே, நாயனார் மகிழ்ச்சியுடன் அந்தக் காளை நடந்து சென்ற வழியில் நடந்து சென்று சிவபெருமானை தரிசனம் செய்தார். ஆகவேதான் நாயனாருக்கு ஒரு காளை வழிகாட்டி சிவபெருமானின் தரிசனம் பெற அழைத்துச் சென்ற தலம் என்பதால் அந்த ஊரை காளையார் கோவில் எனக் கூறலாயினர்.

    காளையார் கோவிலில் காளையார் ஆலயம் எழுந்ததின் பின்னணிக் கதை ஒன்று உண்டு. கைலாயத்தில் ஒருமுறை சிவனும் பார்வதியும் கேலியாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அப்போது பார்வதிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அவள் சிவபெருமானிடம் கேட்டாள் 'ஐயனே எல்லாம் வல்ல வல்லமைக் கொண்ட தங்களுக்கு பல்வேறு ரூபங்கள் எதற்கு? ஒரே ஒரு ரூபம் போதாதா'என்று கேட்டாள். அதற்கு அவர் அவளுக்கு பதில் தருகையில் அவளுடைய பல சந்தேகங்களையும் விளக்கிய பின் கூறினார் 'தேவி நான் கண் விழித்தால் உலகமும் கண் விழிக்கும், கண்களை மூடினால் உலகமும் அழிந்து விடும், அது போல கண்களை மூடாமல் இருக்கும்வரை உலகம் வாழ்ந்து கொண்டே இருக்கும் 'என்று கூற பார்வதிக்கு ஒரு சந்தேகம் வந்தது. இவர் கண்களை மூடினால் உலகம் அழியுமா அதையும் சோதனை செய்து பார்த்தால் என்ன எனத் தோன்ற விளையாட்டுத் தனமாக அவருக்கு பின்னால் சென்று அவர் கண்களை மூடினாள். 

    அவ்வளவுதான் உலகமே இயக்கத்தை நிறுத்திக் கொண்டு இருளில் மூழ்கத் துவங்க பயந்து போன பார்வதி மீண்டும் அவர் கண்களை திறந்து விட நின்ற  இயக்கம் மீண்டும் துவங்கியது. அந்த வேளையில் பூமியிலே சண்டாசுரன் எனும் கொடிய அசுரன் அனைவரையும் வாட்டி வதைத்துக் கொண்டு தேவர்களையும் துன்புறுத்திக் கொண்டு வந்தான். ஆகவே தேவர்கள் சிவபெருமானிடம் சென்று அவனை அழிக்குமாறு வேண்டினார்கள். அவர்கள் குறையை சிவபெருமான் கேட்டுக் கொண்டிருந்த வேளையில்தான் இந்த சம்பவமும் நடந்தது. ஆனால் அவள் செயலைக் கண்டு கோபமுற்ற சிவபெருமான் அவளுக்கு சாபம் இட்டார்.  பார்வதி சிவபெருமானிடம் தன்னை மன்னித்து விடுமாறு கெஞ்சினாள். 


    ஆகவே அவர் கண்களை மூடிய பார்வதியின் சாபத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் எனில் அவள் காளி அவதாரம் எடுத்து சண்டாசுரனை அழித்தால் மட்டுமே மீண்டும் தன்னிடம் வந்து சேர முடியும்  என்றார். ஆகவே பார்வதி தேவியும் காளி அவதாரம் எடுத்து சண்டாசூரனுடன் யுத்தம் செய்து  அவனை அழித்தாள். அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமானும் பார்வதி தேவியின் சாபத்தை விலக்கினார். இப்படியாக பார்வதி தேவி சாப விமோசனம் பெற்ற இடமே காளையார் கோவில் ஆகும். சாப விமோசனம் பெற்ற பார்வதியும் அதே இடத்தில் அதி அழகான பெண்ணாக உருமாறி  சிவபெருமானை மீண்டும் மணந்து கொண்டாள். ஆகவே அவளை மணந்து கொண்ட சிவபெருமான் காளியின் அவதார பார்வதியை மணம்  செய்து கொண்டதினால் காளீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார்.   தங்கத்தைப்  போல மினுமினுத்த அதி அழகான உருவம் பெற்ற பார்வதியும் ஸ்வர்ண சுந்தரி அதாவது அதி அழகானவள் என்ற பெயரில் சிவபெருமானை மணந்து கொண்டாள்.

    பின்னர் அங்கேயே காளீஸ்வரர் மற்றும் ஸ்வர்ண சுந்தரிக்கு பாண்டிய மன்னன் ஒருவரால் ஆலயம் எழுப்பப்பட அந்த ஆலயம் ஸ்வர்ண காளீஸ்வரர் ஆலயம் என்றாயிற்று. ஆனால் அந்த ஆலயம் பல போர்களுக்கு இடையே பழுதடைந்து போனதினால் சிவகங்கை சீமையை சேர்ந்த அரசர்களான சின்ன மருது மற்றும் பெரிய மருது என்பவர்கள் ஆலயத்தில் இருந்த மூன்று சன்னதிகளிலும் மண்டபங்களைக் கட்டி ஆலயத்தை விரிவாக்கினார்கள்.

    ஆங்கிலேயர் பல இடங்களில் இருந்த பாளையக்காரர்களையும் அழித்து நாடுகளைக் கைப்பற்றி வந்தபோது அவர்களால் சின்ன மருது மற்றும் பெரிய மருது இருவரையும் யுத்தத்தில் தோற்கடிக்க முடியாமல் திணறி வஞ்சகமாக அவர்கள் நாட்டை கைப்பற்றினார்கள். ஆனால் அவர்கள் கையில் சிக்காமல் பெரிய மருது தலைமறைவானார். பெரிய மருது உயிருடன் உள்ளவரை தம்மை மீண்டும் அந்த பூமியை நிம்மதியாக ஆள விடமாட்டார் என பயந்து போன ஆங்கிலேய  அரசு அவரைத் தேடியும் அவர் எங்கும் கிடைக்காததினால் அவர் சரண் அடையாவிடில் அந்த ஆலயத்தை இடித்து தரைமட்டம் ஆக்கி விடுவோம் என்று தண்டோரா போட்டு நாடகம் நடத்த, தன்னால் காளீஸ்வரர் ஆலயத்துக்கு எந்த பங்கமும் விளைந்து விடக் கூடாது எனக் கருதிய பெரிய மருது ஆங்கிலேய அரசர்களிடம் சரணடைய வேண்டி இருந்தது. அவரை அவர்கள் உடனடியாக தூக்கில் இட்டார்கள். ஆனால் அவர் ஆசைப்பட்டபடி அவரது சமாதியை ஆலயத்துக்கு முன்னால்  அமைத்தார்கள்.

    இந்த ஆலயத்தின் எதிரில் பெரிய தெப்பக் குளமும்  உள்ளது. அதை உருவாக்கியது தேவேந்திரனின் யானையான ஐராவதம் என்பது புராணக் கதை ஆகும். ஒருமுறை சிவபெருமானின் வாகனமான நந்தீஸ்வரரின் வாலை  இழுத்து அவரை தொந்தரவு செய்த ஐராவதத்தை பூமியிலே சென்று தெய்வ யானையாக இல்லாமல் காட்டு யானையாக பிறந்து ஆயிரம் வருடங்கள் அவதிப்பட வேண்டும் என நந்தி தேவர் சாபமிட காளையார் கோவில் ஊர் உள்ள இடத்துக்கு வந்த ஐராவதம் காட்டு யானையாக மாறியது.

     

    தனது கொம்புகளாலேயே குத்திக் குத்தி ஒரு குளத்தை  உருவாக்கிய ஐராவதம் அந்த குளத்தில்  இருந்து தினமும் நீரை எடுத்து வந்து சிவபெருமானை வணங்கித் துதித்து சாப விமோசனம் அடைந்தது.

    Thenkasi Viswanathar

    $
    0
    0


    சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையை ஆண்டு வந்தவர் பராக்கிரம பாண்டியன் என்பவர். அவர் சிவபக்தர். அவர் தினமும் மதுரையில் இருந்த சொக்கநாதர் ஆலயத்துக்கு சென்றுவிட்டு வருவதுண்டு. ஒருமுறை அவர் காசிக்குச் சென்று காசி விஸ்வனாதரை தரிசித்து விட்டு வந்தார். அங்கிருந்த போது அவர் தினமும் காசி விஸ்வனாதரை தரிசனம் செய்த பின்னரே உணவு அருந்துவார். சில காலம் காசியில் தங்கி விட்டு வந்தவர் நாடு திரும்பினார். திரும்பி வந்த சில நாட்களிலேயே அவருக்கு மீண்டும் காசிக்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஆனால் போக முடியாத சூழ்நிலையில் இருந்தார்.
     
    மனம் வருந்தி சொக்கநாதர் ஆலயத்துக்கு சென்றுவிட்டு வந்தவர் கனவில் அன்று இரவு சொக்கநாதர் தோன்றிக் கூறினார் 'மன்னனே, நீ ஏன் காசிக்கு செல்ல முடியவில்லை என்று வருத்தப்படுகிறாய்? கவலைப்படாதே. நாளைக் காலை உன் அரண்மனை வாயிலில் எறும்புக் கூட்டத்தை காண்பாய். அவை வரிசையாக செல்லும். அவற்றைக் கொல்லாமல் அவற்றை தொடர்ந்து சென்றால் அவை எங்கு சென்று நிற்குமோ அங்கு நான் காசி விஸ்வனாதராக காட்சி தருவேன். நீ அங்கு ஒரு ஆலயம் எழுப்பி என்னை வழிபடு. காசிக்கு செல்ல முடியாதவர்களுக்கு காசிக்குச் செல்பவர்களுக்கு எப்படி மோட்ஷம் கிடைக்குமோ அதே போலவேதான் இங்கு வந்து என்னை வழிபடுபவர்களுக்கும் அதே அளவிலான மோட்ஷம் கிடைக்கும்'என்று கூறிவிட்டு மறைந்தார். இதனால்தான் காசிக்கு செல்ல முடியாதவர்கள் தென்காசிக்குச் சென்று மோட்ஷம் பெறலாம் என்ற நம்பிக்கை தோன்றியது.

    மறுநாள் காலை விழித்தெழுந்த மன்னன் அரண்மனை வாயிலில் எறும்புக் கூட்டம் ஒன்று சாரை சாரையாக எங்கோ செல்வதைக் கண்டார். கனவில் வந்து சொக்கநாதர் கூறியது போல அவை செல்லும் பாதையில் அவற்றைத் தொடர்ந்து சென்றார். சிற்றாற்றங்கரையில் (நதிக் கரையில்) செண்பக வனத்திற்கு அருகில் சென்ற அந்த எறும்புக் கூட்டம் அங்கிருந்த புற்றில் மறைந்து விட்டது. அந்தப் புற்றைத் தோண்டி எடுத்த பராக்கிரம பாண்டியன் அங்கு ஒரு சுயம்பு லிங்கம் இருந்ததைக் கண்டு ஆனந்தம் அடைந்தார். காசி விஸ்வனாதரே தனது பூதகணங்களை எறும்பு உருவில் அனுப்பி தனக்கு தான் மறைந்துள்ள இடத்தைக் காட்டி உள்ளார் என்பதை மன்னன் உணர்ந்தான். இல்லை எனில் அத்தனை நாளும் இல்லாமல் அன்று மட்டும் ஏன் எறும்புக் கூட்டம்  அவர் அரண்மனை வாயிலில் இருந்து ஆலயம் உள்ள இடம்வரை செல்ல வேண்டும்? அதற்குப் பின்னர் அப்படி ஒரு எறும்புக் கூட்டமே அங்கு காணப்படவில்லை. தான் எங்கு எழுந்தருள விருப்பம் கொண்டுள்ளாரோ அங்கு  தன்னே தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள தெய்வங்கள் தவறுவதில்லை.

    சொக்கநாதர் கனவில் கூறியதைப் போலவே அங்கேயே ஒரு ஆலயம் அமைத்து சிவபெருமானை வழிபடலானார். 1445 ஆம் ஆண்டில் பராக்கிரம பாண்டியனால் ராஜகோபுர திருப்பணி துவங்கப்பட்டு ஆறு  ஆண்டுகளுக்குப் பின் பட்டத்துக்கு வந்த பராக்கிரம பாண்டியனின் தம்பி சடையவர்மன் குலசேகர பாண்டியனால் 1505 ஆம் ஆண்டில் ராஜகோபுரத் திருப்பணி முடிவடைந்தது என்று கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.

    தென்காசியில் அமைந்துள்ள இந்த தென்காசி விஸ்வனாதர் ஆலயத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலோனோர் தங்கள் குடும்பங்களின் நடக்கும் அனைத்து சுப காரியங்களுக்கும் காசி விஸ்வநாதரை வணங்கி, ஆசி பெற்றுக் கொண்டே காரியங்களை துவக்குகிறார்கள் என்கிறார்கள். இந்திரன்,  நாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி மற்றும் பல முனிவர்கள்  இங்கு வந்து காசி விஸ்வநாதரை வழிபாட்டு சாபங்களை விலக்கிக் கொண்டுள்ளார்கள்.

    இங்கு வந்து வழிபட்டால் வாழ்க்கை வளம் பெறும், தொழில் வளம் உயரும், உடல் ஆரோக்கியம் பெருகும், வேலை வாய்ப்பு கைகூடும், தடைபடும் திருமணம் நிறைவேறும், புத்திரபாக்கியம் கிடைக்கும், பூர்வ ஜென்ம பாபங்கள் விலகும், எந்த விதமான தோஷங்கள் இருந்தாலும் அவையும் விலகும் மற்றும் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்பதெல்லாம் காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கை ஆகும்.

    இங்கு சுயம்புவாக வெளிப்பட்ட ஈஸ்வரனுக்கும், அன்னைக்கும் வஸ்திரம் சாத்தி ஆராதிக்கின்றனர். எல்லா தலங்களிலும் தெற்கு நோக்கி இருக்கும் துர்க்கை இங்கு மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள். 

    Shri Maha shethra Bala Bairavar Rudra Temple

    $
    0
    0

    -1-

    தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஈச்சங்கரணை எனும் சிறிய கிராமத்தில் திருவடிசூலம் எனும் மலையின் அடிவாரத்தில், சுற்றிலும் இயற்கை எழில் மிகுந்த பகுதியில், அமைதியான சூழ்நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது அதிசயமான ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் ஆலயம். சுற்றிலும் காணப்படுவது மலை முகட்டும், மரங்களுமே. ஈச்சங்கரணை கிராமம் சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    பைரவருக்கு எனத் தனி ஆலயத்தைக் காண்பது அரிதானது. எனக்குத் தெரிந்தவரை காசியில் உள்ள கால பைரவர் ஆலயத்தை தவிர மாயவரத்தின் அருகில் ஷேத்ரபாலா எனும் இடத்தில் மட்டுமே கால பைரவருக்கு எனத் தனியான ஆலயம் உள்ளது. அதற்கு அடுத்து ஈச்சங்கரணையில்தான் பைரவருக்கு என்றே தனியான அமைக்கப்பட்டு உள்ள ஆலயத்தைக் காண நேரிட்டது. பல ஆலயங்களிலும் பைரவர் சன்னதி இருக்கும். ஆனால் பைரவருக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து அவரையே பிரதான தெய்வமாக வைத்து பூஜிக்கப்படும் ஆலயம் இவை இரண்டு மட்டுமே என்றே நினைக்கிறேன்.
     
    ஆலயத்தை சுற்றி  உள்ள இடம்  மற்றும்  ஆலயம்  செல்லும் வழி 

    பைரவர் யார்? அவர் சிவபெருமானால் தன்னுள் இருந்து, தனது அவதாரமாகவே படைக்கப்பட்டவர். ஆகவேதான் அவரை சிவபெருமானின் அம்சம் என்பார்கள். எந்த சிவன் ஆலயத்திலும் சிவபெருமான் சன்னதியின் வடகிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதை பார்க்கலாம். சிவாலயம் சென்று விட்டு பைரவரை வணங்காமல் திரும்பி வந்தால் அந்த ஆலயத்துக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்காது என்பது ஐதீகம் ஆகும். இவரையே தன்னுடைய மனைவியான பார்வதியின் ஆலயங்களிலும், பார்வதியின் அவதார ரூப ஆலயங்களிலும் தேவிக்கு காவல் தெய்வமாக இருக்குமாறு அமைத்தார்  என்பார்கள்.
     
    நின்ற நிலையில் காணப்படும் பைரவரின் கோலம் பரதேசி கோலமாகும். அவரை பன்னிரு கைகளுடனுடனும், நாகத்தை பூணூலாக அணிந்தவராகவும், தலையில் சந்திரன் இருக்க, சூலாயுதம், பாசக்கயிறு, அங்குசம் போன்ற ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் ரூபத்திலும் சிலைகளை வடிவமைத்து இருப்பார்கள். பைரவரே சனிபகவானுக்கு குரு. அவர் கட்டுப்பாட்டில் உள்ளவை பன்னிரண்டு  ராசிகள், எட்டு திசைகள், பஞ்சபூதங்கள், நவகிரகங்கள் போன்ற அனைத்தமே. அதனால்தான் அவரை காலத்தை கட்டுப்படுத்துபவர் என்பார்கள்.


    பன்னிரண்டு ராசிகள் தோற்றத்தில் காலபைரவர் 
     
    ஈச்சங்கரணை கால பைரவருடைய ஆலயத்தின் முக்கியமான மகத்துவம் மற்றும் விசேஷம் என்னவென்றால் இங்கு மட்டுமே இறந்தவர்களுக்கு போடப்படும் 'வாய்க்கரிசிக்கு'முக்கியத்துவம் தரப்பட்டு வாய்க்கரிசி எனும் பெயரில் அரிசி தானம் பெறுவதுதான். எந்த ஒருவருக்கும் தான் எப்போது மரணம் அடைவோம் என்பது தெரியாது. அந்த நேரத்தில் பூர்வ ஜென்ம ஊழ்வினைகளினால் அவதிப்பட்டு பலர் எண்ணற்ற மனத் துயரை அடைவார்கள். மாறி வரும் கால சூழ்நிலையில் தனக்கு யார் வாய்க்கரிசி போட உள்ளார்கள் என்பதுகூட அவர்களுக்கு தெரியாது. ஆகவே தனக்குத் தானே இந்த ஆலயத்தில் வாய்க்கரிசி போட்டுக் கொண்டால் அவர்களது பூர்வஜென்ம ஊழ்வினைகளை பைரவர் களைந்து விடுகிறார். ஏன் எனில் வாய்க்கரிசி போடப்படுவது பைரவர் ஆலயத்தில்.

    வாய்க்கரிசி போடுதல் என்பது தனது வாயில் தானே அரிசியை போட்டுக் கொள்வது அல்ல. அப்படி என்றால் அதை எங்கு, எப்படி போடுவது என்பதை கடைசியில் விளக்கி உள்ளேன். வாய்க்கரிசிக்கு போடப்படும் அரிசியை நம் வீட்டில் இருந்து எடுத்துச் செல்ல வேண்டும். கடையில் இருந்து வாங்கிக் கொண்டு செல்லக் கூடாது.
     
    நாம் இந்த பிரபஞ்சத்தில் பிறப்பு எடுத்து வாழ்கையில் பல்வேறு பாப காரியங்களை அறிந்தும், அறியாமலும் செய்து வருகிறோம். அதன் காரணம் பூர்வஜென்ம ஊழ் வினைகளின் தொடர்ச்சிதான். பூர்வஜென்ம ஊழ் வினைகளின் தொடர்ச்சி மரண காலத்தில் பல்வேறு துன்பங்களைத் தருகிறது. அது மோட்ஷத்துக்கு செல்ல உள்ள ஆத்மாவை தடுத்து நிறுத்தும். ஆகவே அந்த அந்த பூர்வஜென்ம ஊழ் வினைகளின் தொடர்ச்சியினால் ஏற்படும் துன்பங்களைக் களைய இந்த ஆலயத்துக்கு வந்து தனக்குத் தானே வாய்க்கரிசி போட்டுக் கொண்டால் அவர்களது பூர்வஜென்ம ஊழ்வினைகளை அந்த நிமிடமே பைரவர் களைந்து விடுகிறார்.

    இப்படியாக போடப்படும் வாய்க்கரிசியில் உள்ள தீமைகளும் இந்த பைரவர் சன்னிதானத்தில் களையப்பட்டு விடுவதினால் அந்த அரிசியைக் கொண்டு சமைத்த உணவு அன்னதானத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலம் அந்த உணவை உண்டு பசி தீர்த்துக்கொள்ளும் மக்களது ஆசிர்வாதமும்  வாய்க்கரிசி போட்டவர்களுக்குக் கிடைக்குமாம்.

    ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் ஆலயத்தின் இரண்டாவது பிரதான சிறப்பு என்னவென்றால், இந்த ஆலயத்தின் பைரவரை இன்னென்ன கிழமைகளில்தான் வணங்கித் துதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. அவரை இன்ன மாதிரியான பூஜாவிதிப்படித்தான் வணங்க வேண்டும் என்ற எந்த ஒரு கட்டுப்பாடோ, வரைமுறையோ கிடையாது.
     
    இங்குள்ள ருத்ர பால பைரவரை தரிசிக்க பன்னிரண்டு படிகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு படிக்கட்டும் ஒவ்வொரு கிரஹத்தை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது என்கிறார்கள். அவர் கட்டுப்பாட்டில் உள்ளவை அந்த பன்னிரண்டு  ராசிகள் அடங்கி உள்ள படிக்கட்டுக்கள். ஆகவே அதன் மீது ஏறிச் செல்லும்போது அந்தந்த கிரகங்களினால் ஏற்பட்டு இருந்த தீய விளைவுகளை அந்தந்த கிரகங்களே திரும்ப கிரகித்துக் கொண்டு அங்கேயே அழித்து விடுகின்றன.  அதனால் பைரவரை தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் அனைத்து ஊழ்வினைகளின் தீய பலன்களும் இந்த ஆலயத்துக்கு செல்லும்போது அழிகின்றன. மேலும் படிக்கட்டில், பைரவரை சுற்றிலும் என அனைத்து இடங்களிலும் ருத்திராக்ஷ மணிகளைக் கொண்ட மாலைகள் போடப்பட்டும், கட்டப்பட்டும் உள்ளன. சிவன் அம்சமான ருத்திராக்ஷம் அங்கு வந்து தரிசிப்பவர்களை சுற்றி உள்ள தீமைகளை அழிக்கின்றன. உடலில் உத்வேகத்தை தருகின்றன என்பது மட்டும் இல்லாமல் உக்ரஹ மூர்த்தியான பைரவரை சாந்த ரூபத்தில் வைத்து உள்ளன.
     
    பன்னிரண்டு ராசிகளைக் குறிக்கும் 
    பன்னிரண்டு படிக்கட்டுக்கள்

    மூன்றாவதாக இந்த ஆலயம் எந்தவிதமான கட்டிடக் கலை நிபுணர்களின் வரைப்படத்தைக் கொண்டும்  கட்டப்படவில்லை. நடுத் தூணே இல்லாமல் அவ்வப்போது நேரடியாக பைரவரிடம் இருந்து பைரவ ஸ்வாமிக்கு ( இவர் யார் என்ற கேள்விகளுக்கு பதிலாக இவரைக் குறித்த செய்தி கீழே வருகிறது) பைரவர் மூலம் கிடைத்த நிர்மாணத் தோற்றத்தில் கட்டப்பட்ட ஆலயம் இது.

    நான்காவது அற்புதம் கூம்பு வடிவ கருவறை மேலே எழுப்பப்பட்டு உள்ள ஆடும் கும்ப கலசம் ஆகும். இது போன்ற ஆடும் கலசம் வேறு எந்த ஆலயத்திலும் காணப்பட முடியாதது. ஆடும் கலசம் என்பது எதற்காக அமைக்கப்பட்டது? இந்த பிரபஞ்சத்தில் தோன்றும் பல்வேறு இயற்கை மாற்றங்களுக்கு ஏற்ப இந்த ஆடும் கலசம் நம் கண்களுக்குப் புலப்படாத வகையில் சுயன்று அந்த மாற்றங்கள் இந்த ஆலயத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்குமாம். 
    ...........தொடரும் 

    Shri Maha Shethra Bala Bairavar Temple - 2

    $
    0
    0

    -2-

    நாங்கள் அங்கு சென்று இருந்தபோது இந்த ஆலயத்தை நிர்மாணித்தவர்களில் ஒருவர் எங்களுக்கு இந்த ஆலயத்தின் விவரத்தைக் கூறினார். அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டேன், ஆனால் அவருடைய புகைப்படத்தைக் கீழே காணலாம். 


    ஆலயம் எப்படி கட்டப்பட்டது என்கின்ற விவரம் குறித்து அவர் கூறிய வியப்பான விவரங்களை கீழே தந்துள்ளேன்:
    ''அவர்கள் அனைவருமே தென் நாட்டின் கன்யாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பைரவரின் பக்தர்கள். அவர்கள் பைரவ சித்தாந்த ஸ்வாமிகளுடன் உடன் இருந்தவர்கள். பைரவரின் முழு அருளாசி பெற்ற அந்த பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் இவர்களை வழி நடத்தி வந்தவர். அவரை இவர்கள் அனைவருமே பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் என்றே அழைப்பார்களாம் (பைரவ சுவாமிகளின் இயற்கைப் பெயர் சுப்பிரமணியப் பிள்ளை என்பதாக அறிந்தேன்). பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் தம்மை அவர்கள் அனைவரும் ஸ்வாமிகள் என அழைப்பதை விரும்பவில்லை. தாம் பைரவரின் தூதுவர் என்றே அவர் தம்மைக் குறித்துக் கூறி வந்தாலும் அதை அவர்கள் ஏற்கவில்லை. அவர்கள் அவரை பைரவரின் அம்சமாகவே கருதினார்கள். அவர்கள் அனைவருக்குமே ஒரு ஏக்கம் இருந்தது. பைரவரின் பக்தர்கள் வணங்கித் துதிப்பதற்கு பைரவருக்கு என தனி ஆலயம் தமிழ்நாட்டில் இல்லையே என்பதே அந்த மனத் தாக்கம் . 

    இப்படி இருக்கையில் ஒருநாள் திடீர் என பைரவ சித்தாந்த ஸ்வாமிகள்  அவர்களிடம் தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு பைரவர் கட்டளை இட்டதும் மட்டும் இல்லாமல் அதன் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், என்ன மாதிரியான சூழ்நிலையில் அந்த ஆலயம் அமைந்து இருக்க வேண்டும், தான் எந்த காட்சியில் அங்கு இருக்க வேண்டும் போன்ற விவரங்கள் அனைத்தையும் கூறி விட்டு, அந்த ஆலயத்தை ஐந்தே மாதத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று உத்தரவு இட்டு விட்டதினால் பைரவர் ஆலயம் அமைக்க உடனடியாக இடத்தைத் தேட வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டார். அது மட்டும் அல்ல ஒரு குறிப்பிட்ட தேதியில் ஆலயத்துக்கான நிலத்துக்கு முன்பணத்தைக் கொடுத்து விட வேண்டும் என்று கூறி அந்த தேதியையும் குறிப்பிட்டார் (அவர் கூறியது மே மாதம் என்பது மட்டும் எனக்கு நினைவில் உள்ளது. அவர் அழகாக தென் மாவட்ட நாகர்கோவில் மொழி உச்சரிப்பில் அனைத்தையும் கூறினார்).  ஐந்து மாதத்தில் ஆலயத்தை கட்டி முடிக்க எத்தனைக் காரியங்களை   செய்ய வேண்டி இருக்கும், கையில் அத்தனை பணம் இல்லை எனும்போது எங்கிருந்து அத்தனைப் பணத்தை திரட்டுவது ? எந்த இடத்தில் பைரவர் கூறிய அடையாளங்களுடனான நிலத்தை தேடுவது? பைரவரின் கட்டளையின்படி ஐந்து மாதங்களுக்குள் ஆலயத்தை நிர்மாணிக்க முடியுமா? இந்த கேள்விகள் அனைத்தும் அவர்களை பிரமிக்க வைத்தாலும், முழு நம்பிக்கையோடு அவர்கள் ஆலயத்திற்கான நிலத்தை தேடும் பணியை துவக்கினார்கள். 

    உடனடியாக கன்யாகுமரி மாவட்டத்திலேயே இருந்த மைலாடி எனும் கிராமத்தில் பெரிய கல்பாறை  ஒன்றை தேர்வு செய்து அதில் பாலபைரவர் சிலையை அமைக்க ஏற்பாடுகளை செய்தார்கள். அடுத்து ஆலயத்துக்கான நிலத்தை தென் பகுதியில் பல இடங்களிலும் தேடியும் அவர்களுக்கு பைரவர் கோடிட்டுக் காட்டி இருந்த அடையாளங்களுடன் கூடிய  நிலம் தென்படவே இல்லை. ஆனால் பைரவர் ஸ்வாமிகள் 'மனம் தளராதீர்கள், பைரவர் சித்தப்படி அனைத்தும் அவர் கூறிய கால கட்டத்தில் நடந்து முடியும்'என்ற நம்பிக்கையை கொடுக்க ஐந்து பேர் ஆலயத்துக்கான இடத்தை தேடி அந்த ஸ்வாமிகளுடன் சேர்ந்து இரவும் பகலும் பல இடங்களிலும் சுற்றி அலைந்தவாறு நடந்து கொண்டே சென்றார்கள். இப்படியாக கஞாகுமரிடில் இருந்து கிளம்பியவர்கள் இடமிடமாகச் சென்றுவிட்டு  சென்னையை அடைந்தார்கள். சென்னையில் மறைமலை நகரைத் தாண்டிச் சென்று கொண்டு இருந்தபோது பைரவ சித்தாந்த ஸ்வாமிகள்  வழிக் காட்டியபடி திருவடிசூலம் அருகே இருந்த ஈச்சங்கரணை  கிராமத்தின் அருகே (தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்துக்கு) வந்ததும் அந்த இடம் அனைத்து விதத்திலும் பைரவர் சித்தாந்த ஸ்வாமிகளுக்கு அந்த பைரவரே குறிப்பிட்டு இருந்த நிலப்பரப்பைப் போலவே இருந்ததினால் அங்கேயே பிரசன்னம் போட்டுப் பார்த்தார்கள்.   அதில் கிடைத்த விடையின்படி அந்த  இடமே தமக்கு பைரவர்  அடையாளம் காட்டிய இடம் என சித்தாந்த பைரவ ஸ்வாமிகள் கூறினாராம். 


    ஆனால் பரந்து விரிந்திருந்த அந்த இடத்தில் யாருமே தென்படவில்லை, சுற்றிலும் எந்த வீடும் இல்லை, அமைதியான கிராமப் பகுதியாக இருந்தது. இங்குதான் ஆலயம் அமைக்க வேண்டும் எனில் அந்த இடத்துக்கான சொந்தக்காரரை கண்டு பிடிக்க எங்கு போய் தேடி அலைவது?  யாரைக் கேட்பது என பிரமித்து நின்றபோது அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் முன்பின் தெரியாத எவரோ ஒருவர் அங்கு வந்தார். அவர்களிடம் நேரடியாகக் கேட்டார் 'நீங்கள் ஆலயம் அமைக்க நிலத்தைத் தேடுகிறீர்களா? நான்தான் இந்த நிலத்தின் சொந்தக்காரன். இதை நான் விற்க உள்ளேன், வேண்டுமா'. அவர்களால் நம்பவே முடியவில்லை 'இவருக்கு எப்படி ஆலயம் அமைக்க நமக்கு நிலம் தேவை என்று தெரியும்?'  அடுத்தடுத்து சம்பாஷணை தொடர, பைரவ சித்தாந்த ஸ்வாமிகள்கூறியபடி அவர்களில் ஒருவர் தம்முடன் எடுத்து வந்திருந்த 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக அங்கேயே தந்தார். அந்த தினம் எது தெரியுமா, எந்த தினத்தன்று ஆலயத்துக்கான  முன்பணத்தை தர வேண்டும் என குறிப்பேட்டில் சித்தாந்த பைரவர் ஸ்வாமிகள் குறிப்பிட்டு இருந்தாரோ, அதே மாதம், அதே தேதி!! 

    அடுத்த சில தினங்களில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, பணங்களை திரட்டி நிலத்தை வாங்கி ஆலயம் அமைக்க பதிவும் செய்து விட்டார்கள். அனைத்தும் கனவு போல ஒன்றன்பின் ஒன்றாக இடையூறே இல்லாமல் நடந்து முடிந்தது.  இதற்கு இடையில் கன்யாகுமரியில் மைலாடியில் தயார் நிலையில் செய்து வைக்கப்பட்டு இருந்த ஸ்ரீ மஹா ருத்ர பைரவர் சிலையையும் அங்கு எடுத்து வர ஏற்பாடு செய்தார்கள். சிலை அங்கு வந்ததுமே ஒரு பக்கத்தில் ஒரு மண்டல பூஜையையும் இன்னொரு பக்கத்தில் கட்டிடப் பணியையும் தொடரத்  துவக்கினார்கள்.  ஆலயத்தை ஐந்து  மாதத்தில் கட்டி முடிக்க வேண்டுமே. 

    நிலத்தை தேடுகையில் எந்த ஒரு கட்டிடக் கலை நிபுணர்களிடமும் ஆலயத்தின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், கட்டிடத்தை எப்படி அமைக்கலாம், என்னென்ன செய்யலாம் என்ற ஆலோசனை  கேட்கவில்லை.  கால பைரவர் அவருடைய பக்தரான சித்தாந்த பைரவ ஸ்வாமிகளுக்கு எந்த அமைப்பில் ஆலயம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினாரோ அதே அமைப்பில் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்று கூறி விட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கட்டிடக் கலைஞர்களிடம் கூறி விட்டு அந்த ஆலயத்தை ஐந்தே மாதத்தில் கட்டி முடித்தார்கள்.  ஆகவே இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணியை பைரவரே செய்துள்ளார் என்பது பெரும் மகத்துவம் ஆகும். அது மட்டும் அல்ல அவ்வப்போது பைரவரே என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பைரவ  சித்தாந்த ஸ்வாமிகளுக்கு  எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும் கட்டளையின்படி ஆலயவளாக விரிவாக்கம் தொடர்ந்து கொண்டு வருகிறது. அதற்கேற்ப நன்கொடைகளும் தாமாகவே எங்கிருந்தெல்லாமோ வந்து கொண்டு இருக்கிறது.

     

     
    மேலே உள்ள இரண்டு படங்கள்: -
    தற்போது  விரிவாக்க வேலைகள் தொடர்ந்து 
    கொண்டிருக்கும் ஆலய வளாகத்தின் இரு பக்கத் 
    தோற்றம். நடுவில் காணப்படுவது 
    பைரவ சித்தாந்த ஸ்வாமிகளின் தோற்றம் 

     தூரத்தில் இருந்து தெரியும் 
    ஆலய காட்சி

    இதை அதிசயம் என்பதா?  இல்லை மாயாஜாலம் என்பதா? எளிதில் எவராலும் நம்ப முடியாத உண்மை சம்பவம் மேலே கூறப்பட்டவை. பைரவர் தனக்கு ஆலயம் அமைக்க என்ன கூறினாரோ அவை அனைத்தையும் உள்ளடக்கி ஆலயம் அமைந்தது ஒரு கனவு போல நடந்து முடிந்தது. இன்ன தேதியில் இன்னென்ன வேலை இந்த அமைப்பில் முடிய வேண்டும் என பைரவர் ஸ்வாமிகள் ஒரு குறிப்புப் புத்தகத்தில் அவருக்கு கிடைத்தக் கட்டளைப்படி எழுதி வைத்திருந்தார். அனைத்து வேலைகளுமே அந்த குறிப்பேட்டில் எழுதப்பட்டு இருந்தது போலவே துல்லியமாக நடந்து முடிந்து, எந்த தேதியில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டுமோ அந்த தேதியிலேயே அதுவும் நடந்து முடிந்தது மிகப் பெரிய அதிசயம் . அது பைரவரின் அருள் இல்லாமல் நடக்க முடியுமா?''. 

    ...........தொடரும்

    Shri Maha Shethra Bala Bairavar Temple - 3

    $
    0
    0
    -3-

    அவர் மேலும் தொடர்ந்து கூறிய பிற விவரங்கள் :-

    ''கால பைரவரின் பிரதான எட்டு பைரவர்களையும், அவர்களை வணங்கித் துதித்த ரிஷி முனிவர்களையும் ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் மூல சன்னதியின் கீழ் சன்னதியில் வைத்து உள்ளார்கள். இந்த ஆலயத்தில் அவர்களையும் பிரதர்ஷணமாக வலம் வந்து வணங்க வேண்டும். அது போலவே தேவிக்கு யுத்த கன்னிகைகளாக இருந்த அஷ்ட  கன்னிகைகளும் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்கள். அது மட்டும் அல்ல இந்த ஆலயத்தின் சன்னதி சிவபெருமானின் ஹிமயமலையின் சூழ்நிலையை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக வாயிலில் மலையின் மீது ஓடும் நதியுடன் கூடிய சிலைகளையும் மந்திரங்களை ஓதி பிரதிஷ்டை செய்து உள்ளார்கள். மண்டபத்தின் உட்புற மேல் கூறையில்  மின் மினுக்கும் நட்ஷத்திரங்களை காட்டும் வகையில் அமைப்பு உள்ளது.  இந்த அமைப்புக்கள் அனைத்துமே  பைரவ சித்தாந்த ஸ்வாமிக்கு  ஸ்ரீ மஹா ஷேத்திர பால பைரவரே நேரில் கூறியவை ஆகும். ஆகவேதான் இந்த ஆலயத்தை கட்டிடக் கலைஞர்களின்  மாதிரிப் படங்களை கொண்டு வடிவமைக்காமல் நேரடியாக ஷேத்திர பால பைரவரே குறிப்பிட்டதைப் போல நிர்மாணித்து உள்ளார்கள்.

    அசிதாங்க பைரவர், சண்ட பைரவர், குரு பைரவர், குரோதன பைரவர், 
    பிக்ஷாடன  பைரவர், கபால பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர் 
    மற்றும்  விளக்கு உருவில் அஷ்ட கன்னிகையில் ஒருவரும்,  
    பைரவர்களை துதித்த  முனிவர்களில் ஒருவரும் 

    சன்னதியின் நுழை வாயிலில் இருபுறமும் 
      நதிகள் ஓடிவரும் மலையின் சிலைகள்

    ஆலயம் கட்டத் துவங்கியதும் அவர்கள் ஒரு விஷயத்தில் பயந்தார்கள். இது வனப்பிரதேசமாக உள்ளதே. ஹனுமானின் தூதர்களான குரங்குகள் தொல்லை வேறு உள்ளதே. அவை அங்கு வருகைத் தரும் பக்தர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமே, என்ன செய்வது? ஆனால் பைரவரே அதற்கான விடையையும் பைரவ சித்தாந்த ஸ்வாமிகளுக்கு தந்தார். அது என்ன என்றால் ஆலயத்திற்கு நேர் எதிரில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேய ஈஸ்வரர் சன்னதியை அமைக்க வேண்டும். அதற்கான ஏற்பாட்டை உடனே துவக்கினார்கள். ஹனுமானுக்கு எந்த இடத்தில் சன்னதியை அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக பைரவரின் உத்தரவுக்கு இணங்க ஒரு குறிப்பிட்ட இடத்தை பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் தேர்வு செய்து அங்கு முதலில் ஏழரை அடி நீளத்தில் பள்ளம் தோண்டுமாறு கூறினார்.

    பள்ளம் தோண்டத் துவங்கியதுமே பத்தடி ஆழத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் புதைந்து கிடந்ததைக் கண்டார்கள். ஒரு ஆலயத்தில் நுழைந்ததுமே எப்படி சன்னதியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு இருக்குமோ அதைப் போலவே அந்த சிவலிங்கம் அங்கு  புதைந்து கிடந்தது. ஆகவே அந்த இடமே ஹனுமானின் சிலையை பிரதிஷ்டை செய்ய பைரவர் அனுமதித்துள்ள இடம் என அறியப்பட்டது. பைரவரின் உத்தரவின்படி அந்த சிலை வெளியில் எடுக்கப்படாமல் அதன் நெற்றிப் பகுதிவரை சுத்தம் செய்யப்பட்டு அதற்கு பூஜைகளை செய்து வழிபட்டப் பின் அந்த பள்ளமும் மூடப்பட்டது.

    ஆலயத்தின் எதிரில் தனியாக  காணப்படும்  
    ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேய ஈஸ்வரர் சன்னதி
     
    அதன் காரணம் என்ன என்றால் ஹனுமானை சிவபெருமானின் அம்சம் என்பார்கள். சிவபெருமானே ஹனுமானாக அவதரித்தவர் என்று புராணங்களில் செய்திகள்  உள்ளன.  ஆகவே சிவபெருமான் எந்த இடத்தில் ஹனுமானாக தான் அமர வேண்டும் என்பதை விரும்பினாரோ அந்த இடத்தை இப்படியாக  சிவபெருமான் வெளிப்படுத்திக் காட்டி உள்ளார் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். பைரவரின் ஆணைக்கேற்ப அந்த இடத்திலேயே புதைந்து இருந்த சிவலிங்கத்தை வெளியில் எடுக்காமல் கட்டிடம் எழுப்பப்பட்டு புதைந்து கிடந்த சிவலிங்கம் இருந்த இடத்தின் மேலேயே பஞ்சமுக ஹனுமானின் சிலை செய்யப்பட்டு அவரை வணங்கித் துதிக்க தனி சன்னதி அமைக்கப்பட்டது. அந்த பஞ்சமுக ஹனுமாரை ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேய ஈஸ்வரர் என்கின்றார்கள். அந்த சன்னதி அமைக்கப்பட்டது முதல் குரங்குகள் தொல்லை இங்கு இல்லையாம்.

    அவற்றைத் தவிர வெளியில் நாக ருத்ர ஈஸ்வரர் சன்னதியும் வன துர்க்கை அம்மன் சன்னதிகளும் ஒன்றுடன் ஒன்று தள்ளித் தள்ளி அமைந்துள்ளன. சன்னதியின் வெளிப்பிராகாரத்தின் சுவற்றில் தன்வந்தரி, குபேரர் மற்றும் பிரும்மாவிற்கும் தனித் தனி சுவர் சன்னதிகள்  அமைந்துள்ளன.

    ஆலயத்தின் வெளியில் சப்த  கன்னிகைகளுக்கும்  ஆலய தல மரத்துக்கும் தனித் தனியாக சன்னதிகள் அமைந்து  உள்ளன.
     
    நாக ருத்ர ஈஸ்வரர் சன்னதி 
     
    சப்த கன்னிகைகள் சன்னதி
     ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் ஆலயத்தின் பிற வளாகங்கள் அனைத்திலும் மேலும் சில சன்னதிகள் அமைக்கப்பட்டு முழு ஆலய வளாகமும் மொத்தம் பத்து வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு விட வேண்டும் என்பது பைரவரின் கட்டளை. அந்த உத்தரவை முடிப்பதற்கு இன்னும் ஏழரை வருடங்களே மீதம் உள்ளதாம். அதன் பின் பைரவரின் உத்தரவின்படி முழுமையாக இந்த ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு விடும் ''. 

    தல மரத்தின் அடியில் கற்பக  விருட்ஷ சூலம்

    அஷ்ட பைரவர்களைக் குறித்து புராணங்களில் காணப்படும் விவரத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். முன் ஒரு காலத்தில் அந்தகாசுரன் எனும் கொடிய அசுரன் சிவபெருமானிடம் இருந்து பெற்று இருந்த வரத்தினால் தேவலோகம் மற்றும் பூலோகங்களில் இருந்த அனைவரையும் வதைத்து வந்தான். அவன் பெற்று இருந்த பெரும் சக்தியினால் உலகையே இருளில் மூழ்கடித்தான். பிரபஞ்சத்தின் எட்டு திசைகளும் இருளில் மூழ்கின. தேவர்களாலும், ரிஷி மற்றும் முனிவர்களாலும் அவனை அழிக்க முடியவில்லை, இருள் சூழ்ந்த உலகில் எப்படி வாழ்வது எனத் தெரியாமல் தவித்த அவர்கள் தம்மைக் காக்குமாறு சிவபெருமானிடம் வேண்டினார்கள். அதனால் கோபம் கொண்ட சிவபெருமான் பிரும்மாவின் அகங்காரத்தை அழிக்க எப்படி கால பைரவரை உருவாக்கினாரோ அது போலவே காலபைரவரிடம் இருந்தே கால அக்னி எனும் பைரவரை படைத்தார்.

    அந்த கால அக்னி பைரவரை தவிர எட்டு திசைகளிலும் படர்ந்திருந்த இருளைப் போக்க எட்டு பைரவர்களையும், எட்டு திசைகளிலும் (8) இருந்த அந்த பைரவர்களை சுற்றி இருந்த நான்கு திசைகளிலும் பணி செய்திட ஒவ்வொரு திசைக்கும் நான்கு பைரவர்கள் (4) என அறுபத்தி நான்கு (64) பைரவர்களையும் படைத்தார். இப்படியாக கால பைரவர் அவதாரத்தில் இருந்து எழுபத்தி இரண்டு (72) பைரவ கணங்கள் அவதரித்தார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே கால பைரவரின் அவதார தெய்வ கணங்களே என்பதினால் இந்த ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் ஆலயத்தில் அந்த பைரவ அவதாரங்கள் யார் யார் எனக் காட்ட அவர்களை பிரதிஷ்டை செய்து உள்ளார்கள்.

    பைரவர் ஆலய அமைப்பு எப்படி உள்ளது? வட்ட வடிவிலான பிரகாரத்தை சுற்றி வந்தால், சன்னதிக்கு செல்லும் ஆலயத்தின் நுழை வாயிலில் வெளியே இரண்டு துவார பாலகர்களும், பைரவரின் வாகனங்களான நாய்களும் காணப்படுகின்றன. அந்த மூன்று நாய்களில் ஒன்று படுத்துள்ள நிலையிலும், மற்ற இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டு உள்ள நிலையிலும் உள்ளன. அவற்றை வலம் வந்தே பைரவர் சன்னதியை அடைய முடியும் எனும் வகையில் அவற்றை பிரதிஷ்டை செய்து உள்ளார்கள்.

     சன்னதிக்கு செல்லும் நுழை வாயிலில் 
    பைரவரின்  வாகனமான நாய்கள் 

    சிவனுக்கு நந்தியைப் போல பைரவருக்கு நாய்களே வாகனம் ஆகும். ஆகவே அவற்றைத் தாண்டிச் செல்லக் கூடாது என்பதினால் அவற்றின் இடப்புறம் உள்ள படிக்கட்டில் இறங்கி அவற்றை பிரதர்ஷணமாக கடந்து சென்று அங்குள்ள மூன்று அல்லது நான்கு படிக்கட்டில் ஏறி  பிரும்ம வாசல் வழியே மூல பைரவர் சன்னதியை அடைய வேண்டும்.  ஆனால் அந்த சன்னதியும் விசித்திரமாகவே இருந்தது. ஏன் எனில் சன்னதி இரண்டு பகுதிகளாக காணப்படுகிறது.  முதல் பிராகாரம் அதாவது சன்னதி கீழே இருக்க, அதன் இடையில் பன்னிரண்டு ராசிகளைக் குறிப்பிடும் படிக்கட்டுக்கள் உள்ளன.
     
    அந்தப் படிகளில் ஏறிச் சென்றே பைரவரை தரிசிக்க முடியும். அதனால் அவரவர் ராசிப் படியில் ஏறிச் செல்லும்போது அவர்களது ஜாதக தோஷங்கள் அனைத்தும் அங்கேயே அழிந்து விடுகின்றன. ஆலயத்தில் தரிசனம் செய்த பின் வீடு திரும்பியதும் மீண்டும் வாழ்க்கையில் செய்யும் நன்மை தீமைக்கேற்ப அவரவர்களுக்கு மீண்டும்  தோஷங்கள் ஏற்படுகின்றன. ஆகவே வருடத்துக்கு ஒருமுறையாவது இங்கு வந்து தோஷ நிவர்த்தி அளிக்கும் இந்தப் படிகளில் ஏறிச் சென்று  ஸ்ரீ மஹா ஷேத்திர பைரவரை வணங்கித் துதித்து விட்டால் அப்படி ஏற்பட்ட தோஷங்கள் மீண்டும் விலகும்.
     
    ராசிப் படிகளில் மேலே ஏறிச் சென்றால் இரண்டாவது சன்னதியான கால பைரவர் சன்னதி உள்ளது. படிகளின் கைபிடிகளில் ருத்ராக்ஷ மாலைகள் போடப்பட்டு உள்ளன. அந்த ருத்ராக்ஷங்கள் நம் உடலில் ஒட்டிக் கொண்டு நம்மை தொடரும் தீய கணங்களை அழிக்கும். ஒன்றுக்குள் ஒன்றாக மேலும் கீழுமாக உள்ள சன்னதியின் மேல் சன்னதியில் ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் நின்ற நிலையில் அற்புதமாக காட்சி தருகிறார். அந்த சன்னதியின் சுவர்கள் கண்ணாடிக் கூட்டினால் கட்டப்பட்டு உள்ளன. ருத்ர பால பைரவரை வணங்கி நமது வேண்டுதலை கூறி அர்ச்சனை செய்தப் பின் நம் மனதுக்கு தோன்றிய அளவிற்கு  அந்த சன்னதியை பிரதர்ஷணம்  செய்து விட்டு கீழிறங்கி வர வேண்டும்.  கீழ் சன்னதியில் பைரவரின் அஷ்ட அவதாரங்களைக் கொண்ட சுவர் சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அவதாரத்துக்கும் எதிரில் அவரை துதித்த ரிஷிகளை ஒரு பாறையின் வடிவில் வைத்திருக்க அவற்றின் முன்னால் அஷ்ட தேவதைகளையும் விளக்கு ரூபத்தில் பிரதிஷ்டை  செய்து வைத்து உள்ளார்கள். அந்த சன்னதியையும் மனதுக்கு தோன்றும் அளவில் பிரதர்ஷணம் செய்து விட்டு வர வேண்டும்.

    ஆலய சுவற்றில் தத்தாத்ரேயர் , குபேரர்  மற்றும் தன்வந்தரி சன்னதிகள் 
    ................தொடரும்.......நாளை நிறைவு பெறும்

    Shri Maha Shethra Bala Bairavar Temple - 4

    $
    0
    0
    -4-

     ஸ்ரீ பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் 

    மற்ற எந்த ஆலயத்திலும் காணப்படாத ஒரு வழிபாட்டு முறை இந்த ஆலயத்தில் காணப்படுகிறது. அதுவே இந்த ஆலயத்தின் அதிசயம் ஆகும். இந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் தமது வீட்டில் எத்தனை நபர்கள் உள்ளனரோ அவர்கள் கையினால் வீட்டில் சமைக்க வைத்துள்ள அரிசி பாத்திரத்தில் இருந்து ஒவ்வொரு பிடி அரிசியை வாங்கி ஒரு பாத்திரத்திலோ அல்லது மூட்டையாக  கட்டியோ கொண்டு வர வேண்டும். அதைக் கையில் வைத்துக் கொண்டு காலபைரவர் முன் நமக்கு தேவையான வேண்டுதலை வைத்து அவரை வணங்கிய பின் அதை அந்த அரிசியை கொடுக்க வேண்டிய அறைக்கு எடுத்துச் சென்று அங்கு அதை சமர்பிக்க வேண்டும். அதை அங்குள்ள ஒரு பீப்பாயில் கொட்ட வேண்டும். அதைக் கொண்டு அவர்கள் உணவு தயாரித்து அன்னதானம் செய்கிறார்கள். இந்த அரிசியைதான் வாய்க்கரிசி என்கிறார்கள். அதன் தாத்பர்யம் பாகம் -1 ல் தரப்பட்டு உள்ளது. இதில் உள்ள முக்கியமான விதியே வீட்டில் வைத்து உள்ள அரிசியைத்தான் கொண்டு வர வேண்டும். வீட்டில் அரிசி இல்லை என்றால் கடையில் இருந்து அரிசியை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து அதில் இருந்து ஒரு கவளமாவது  உணவை தயாரித்தப் பின் மீதம் உள்ள அரிசியில் இருந்து ஒரு பிடி கொண்டு வர வேண்டும். இது எதனால் என்றால் எவர் வீட்டில் இருந்து அரிசியைக் கொண்டு வருகிறோமோ அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரின் ஜீவ அணுக்களும் அதோடு கலந்திருக்கும் என்பதினால் இந்த விதி முறை உள்ளது. அந்த அரிசியை வாய்க்கரிசியாகப் போடும்போது கிடைக்கும் பலன் கடையில் இருந்து வாங்கி நேராக கொண்டு வந்தும் அரிசிக்குக் கிடையாது. அந்தப் பலன் அந்த கடைக்காரருக்குப் போய் விடுகிறது.

    உஜ்ஜயினியில் எனக்குத் தெரிந்து ஒரு ஆலயத்தில் ஆரூடம் சொல்லும் ஸ்வாமிகள் ஒருவர் அவரிடம் செல்பவர்களின் வீட்டில் இருந்து ஒரு பிடி அரிசியை கொண்டு சென்றால் மட்டுமே அதை அவர் முன் உள்ள பீடத்தில் போடச் சொல்லி விட்டு ஆரூடம் கூறுவார். வெளியில் இருந்து வாங்கிக் கொண்டு வீட்டில் வைத்திருக்காமல் நேரடியாக அவரிடம் கொண்டு சென்றால் அவரால் வந்தவருக்கு எந்த ஆரூடமும் கூற இயலாது. அதைப் பார்த்த உடனேயே இது உங்கள் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது அல்ல, இதில் உங்கள் வீட்டின் ஜீவன்கள் இல்லை என்பதினால் உங்களுக்கு என்னால் ஆரூடம் கூற முடியாது என்று திருப்பி அனுப்பி விடுவார். அதற்கு அவர் கூறிய அதே காரணமே இந்த ஆலயத்தின் விதி முறைக்கும் பொருந்தி உள்ளது  என்பதினால் இந்த தத்துவம்  மிக முக்கியமானதே என்பதை இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது.

    நமக்கு ஏற்படும் துன்பங்களுக்குக் காரணம் ஊழ்வினைகளின் தொடர்வுதான். அவை நம்மை விட்டு விலகாதவரை நாம் படும் துயரங்களும் வேதனைகளும் நம்மை விட்டு விலகுவது இல்லை. அவற்றில் இருந்து நமக்கு எப்படி விமோசனம் கிடைக்கும் என்பதே நம் முன் எழும் கேள்வி ஆகும். அதன் விடை இங்கே உள்ளது. இந்த பைரவர் ஷேத்திரத்தில்  நாம் காலடி எடுத்து வைத்ததுமே நம்மை சூழ்ந்து நிற்கும் அனைத்து ஊழ்வினை தீய சக்திகளுமே நம்மை விட்டு விலகி ஓடும். அதன் காரணம் பைரவர் உள்ள இடத்தில் தீய சக்திகளோ அல்லது தீமைகளை செய்யும் கணங்களோ நுழையவோ அல்லது உயிரோடு இருக்க முடியாது.

    ஸ்ரீ பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் 

    மனிதர்களை ஆட்டிப் படைக்கும் காலக் கோட்கள் (ராசிகளும், நட்ஷத்திரங்களும்) மனிதர்களை   இனம் பிரித்தோ நிறம் பிரித்தோ அவர்களது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. அவரவர் செய்த பூர்வ மற்றும் நடப்பு வாழ்வின் பாப புண்ணியங்களுக்கு ஏற்ப அவற்றுக்கான தண்டனைகளையோ அல்லது வசந்தத்தையோ இந்த ஜென்மத்தில் அவை தருகின்றன. அதே சமயத்தில் பல நேரங்களில் மனிதர்கள் தம்மை அறியாமலேயே தவறுகளை செய்து அதன் விளைவாக தம்முடைய பாபங்களை பெருக்கிக் கொள்கின்றார்கள். அதன் காரணம் கோள்களின் பாதிப்புக்கள்தான். அதனால்தான் இந்த ஆலயத்தில் வந்து கோள்களினால் ஏற்படும் பாதிப்புக்களை விலக்கிக் கொள்ள முடியும் என்பதாக ஸ்ரீ பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் கூறுகிறார்கள்.

    பொதுவாக நாய்களை தம்முடன் வைத்திருக்கும் நிலையில் காணப்படும் தெய்வங்கள் பைரவர் மற்றும் தத்தாத்திரேயர் போன்றவர்கள் ஆவர்கள். இருவருமே சிவபெருமானின் அவதாரங்கள்.  ஆனால் அந்த இருவரில் பைரவர் மட்டுமே தம்முடைய வாகனமாக நாயை வைத்துள்ளார்.  பொதுவாக எந்த ஒரு தெய்வத்துக்கும் ஒரே ஒரு வாகனம் மட்டுமே இருக்கும். அப்படி அந்த தெய்வம் தமது வாகனத்துடன் காட்சி தந்தால் அவர்களுடைய வாகனம் அவர்கள் பக்கத்தில் காணப்படும், அல்லது அதன் மீது அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அதே போல அவர்களது வாகனமும் (மிருகங்கள்) அவர்களது சன்னதிக்கு முன்பாக காணப்படும்.  பைரவருடைய வாகனம் நாய் என்பதினால் அவருடைய வாகனமான ஒரு நாயை பக்கத்தில் கொண்டு காட்சி அளிக்கும் பைரவரின் சிலையை பல ஆலய சன்னதிகளில் காணலாம். ஆனால் தனது வாகனமாக ஒன்றுக்கும் மேலான நாய்களை வைத்துக் கொண்டு ஆலயத்தில் காட்சி தரும் பைரவரைப் பார்ப்பது அபூர்வமானது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட வாகனங்களுடன் காட்சி தரும் தெய்வங்களின் சக்தி பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம் ஆகும். ஆகவேதான் இந்த ஆலயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பைரவரரின் முன் பிராகாரத்தில் காட்சி தருவதின் மூலம் இங்குள்ள பைரவருக்கு மிக அதிகமான சக்தி  இருக்கும் என்பது தெளிவாகிறது.

    அதுவும் பைரவரே இன்ன தோற்றத்தில்  தான் வடிவமைக்கப்பட  வேண்டும் என்று ஸ்ரீ பைரவ  சித்தாந்த ஸ்வாமிகளிடம்  எடுத்துக் எடுத்துக் காட்டி அதே நிலையில் தான் மூன்று வாகனங்களுடன் அமர்ந்திருப்பத்தின் மூலம் மூன்று நிலைகளிலும் (நீர், நிலம் மற்றும் ஆகாயம்) தான் வியாபித்திருப்பதை  எடுத்துக் காட்டுகிறார். அதனால்தான் ஒன்றுக்கும் மேற்பபட்ட வாகனங்களுடன் வீற்று இருக்கும் ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் அதீத சக்தி கொண்டவராக விளங்குகிறார்.

    ஆலயத்துக்கு வந்திருந்த ஒருவர் கூறினார் 'சாதாரணமாகவே ஏவல், பில்லி சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத் தடைகள் அகல, பித்ரு தோஷம், சனி தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் பூரணமாக விலகிட பைரவரை வழிபட வேண்டும் என்பதாக பண்டிதர்கள் கூறுவார்கள். ஆனால் ஸ்ரீ பைரவ சித்தாந்த ஸ்வாமிகளோ இந்த ஆலயத்துக்கு வந்து ராசிப் படிகளின் வழியே ஏறி ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவரை தரிசித்தால் மட்டும் போதும், அனைத்து தோஷங்களும் விலகி ஓடும் என்கிறார்கள். உற்சவங்களில் ஸ்ரீ பைரவ சித்தாந்த ஸ்வாமிகளே அக்னிப் பூ சட்டி எனும் பெயரில் அக்னியாக எரிந்து கொண்டிருக்கும்  முப்பதுக்கும் மேற்பட்ட பெரியப் பெரிய  நெய் விளக்குகளை தம் உடலில் ஏந்தியவண்ணம், அதன் உஷ்ணத்தையும் தாங்கிக் கொண்டு பவனி வந்து பைரவரை ஆராதிப்பதைக் காண்பது மயிர்க்கூச்சல் எரிய வைக்கும்.  அந்த அற்புதத்தை என்னவென்று கூறுவது?'

    எரிந்து கொண்டிருக்கும் நெய் விளக்குகளான 
    அக்னிப் பூ சட்டியை தம் உடலில் 
    ஏந்தியவண்ணம் ஸ்வாமிகள் செல்லும் ஊர்வலம் 

    ஆமாம், அந்த ஆலயத்துக்கு சென்னையில் இருந்து எப்படி செல்வது?

    அந்த ஆலயத்துக்குச் செல்ல வேண்டும் எனில் சென்னையைத் தாண்டி செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடும்சாலை NH -45 ல் பயணித்து சென்னையில் இருந்து சுமார் 54 கிலோ தொலைவில் உள்ள  மறைமலை நகரை தாண்டி உள்ள மகேந்திர சிட்டி எனும் தொழில் கூடத்தில் நுழைய வேண்டும். மகேந்திர சிட்டியில் பல பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலங்கள் உள்ளன. முக்கியமாக கணினி சம்மந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் நிறையவே உள்ளன. சென்னையில் இருந்து செல்பவர்கள் மகேந்திர சிட்டியில் உள்ளே நுழைந்ததும்  நுழைந்த சாலையிலேயே எங்கும் திரும்பாமல் நேராக சென்று கொண்டு இருக்க வேண்டும். 4th அவென்யூ மற்றும் Central அவென்யூ வழியே சென்று கொண்டே இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு சென்றால் அந்த தொழில்பேட்டையின் எட்டாவது அவென்யூ அதாவது கடைசி பகுதியை அடையலாம். அந்த சாலையின் இடதுபக்கத்தில் SWAAP, Mind Tree,  Renault Nissan, Capgemini,  Sundaram federal, Mohal, போன்ற பல நிறுவனங்கள் காணப்படும். நாம் செல்லும் பாதை சரியானதே என்பதைக் காட்டும் அவற்றை அடையாளமாகக் கொண்டு அவை அனைத்தையும் கடந்து சென்றால் இடது பக்கத்திலேயே Parkar எனும் நிறுவனத்தைக் காணலாம். அதை ஒட்டி இடப்புறம் செல்லும் சாலையில் நுழைந்து இன்னும் சில மீட்டர் தூரம் பயணித்தால் தொழில் கூடத்தின் பின்புற வாயிலை  காணலாம்.

    அந்த வாயிலைக் கடந்ததும் கரடுமுரடான சாலையில் செல்லத் துவங்குவோம்.  சுமார் பத்து அல்லது பன்னிரண்டு அடியே அகலமான சாலை வளைந்து வளைந்து சென்றபடி சில குக்கிராமங்கள் (தாலுக்காக்கள்) வழியே செல்லும். வழியில் காந்தளூர், ஆத்தூர், புலிப்பாக்கம், ராஜகுளிப்பேட்டை, அனுமந்தை, குன்னவாக்கம் போன்ற கிராமங்களைக் காணலாம். சாலையின் இருபுறமும் வயல்களே காணப்படும். வழியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில வீடுகள் அந்த குக்கிராமங்களில் காணப்படுகின்றன. அவற்றின் வழியே செல்லும்போது இன்னும் சற்றே கரடு முரடான சிறிய பாதையில் நுழைந்து செல்ல நேரிடும். அந்த சாலைகள் தார் சாலையாக இருந்தாலும் மழைக் காரணமாக அங்காங்கே மேடும் பள்ளமுமாக இருந்தன. இப்படியாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு கரடு முரடான சாலையில் பயணித்தால் குன்னவாக்காம் என்ற சிறு தாலுக்காவின் பெயர் பலகையைக் காணலாம். அதே வழியில் இரண்டு இடங்களில் ஆலயம் செல்லும் வழி என்ற பெயர் பலகை காணப்படும்.  சரியான  என்கின்ற நம்பிக்கைக்கு கூற வேண்டும் என்றால் செல்லும் வழியில் ஒரு இடத்தில் சின்ன தேவாலயமும் மற்றும் இன்னொரு இடத்தில் வலது பக்கத்தில் மசூதித் தெருவு என்று சாலையின் பெயர் போடப்பட்டு இருப்பதையும் காணலாம். இவை இரண்டுமே நீங்கள் பயணிக்கும் வழி சரியானதே என்பதை விளக்கும். ஆனால் அவை உள்ள சாலைகள் எதிலும் திரும்பாமல் நாம் சென்று கொண்டு இருக்கும் பாதையிலேயே நேராகவே சென்று கொண்டு இருந்தால் ஆலயம் செல்லும் வழி என இடப்புறத்தில் நோக்கி ஒரு பெயர் பலகை காணப்படும். அந்த பெயர்ப் பலகையை ஒட்டி உள்ள இடதுபக்க சாலையில் திரும்பினால் மலை அடிவாரத்து சாலை காணப்படுகிறது. அதில் சுமார் ஒரு கிலோமீட்டர் பயணித்தால் இடது புறத்தில் காலபைரவர் ஆலயம் உள்ளதைக் காணலாம்.

    ஆலய விலாசம்:-
    ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயம்,
    ஸ்ரீ பைரவர் நகர்,
    திருவடிசூலம் சாலை,
    ஈச்சாங்கரணை,
    செங்கல்பட்டு-  603 003
    தொடர்புக்கு தொலைபேசி: 9940392913 மற்றும் 9444460759

    - முடிவுற்றது  -

    Nallattoor Veera Anjaneyar Temple

    $
    0
    0

    திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் சாலையில் திருத்தணியை அடுத்த நல்லாட்டூர் கிராமத்தின் அருகில் உள்ள கொற்றலை ஆற்றின் கிளை நதிக்கரையில் அமைந்துள்ளது குசஸ்தலை ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயம். சென்னையில் இருந்து சென்றால் சுமார் இரண்டு மணி நேரத்தில் நல்லாட்டூரை அடையலாம். ஆந்திரவின் கிருஷ்ணாவரம் கிருஷ்ணா நீர்தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர், பள்ளிப்பட்டு மற்றும் குமாரராஜபேட்டை எனும் கிராமத்தில் லவா மற்றும் குசா எனும் பெயர்களில் உள்ள ஆறுகளுடன் இணைந்து குசஸ்தலை எனும்சிறு ஆறாக மாறி இதன் வழியே ஓடுகிறது. சில இடங்களில் காணப்படும் கல்வெட்டு செய்திகளின்படி பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இந்தப் பகுதியும் கர்னாடகா மற்றும் ஆந்திராவை ஆண்டு வந்திருந்த ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் ஆட்சியில் இருந்ததாகவும் அந்த காலத்தில் எழுப்பப்பட்டு இருந்த வழிபாட்டுத் தலமாக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய ராஜகுருவாக இருந்தவரும் 1460 முதல் 1539 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்திருந்தவருமான வியாசராயர் எனும் ராஜகுருவினால் பல இடங்களிலும் ஆஞ்சநேயர் ஆலயங்கள் எழுப்பப்பட்டன என்றும் அவற்றில் ஒன்றே இந்த நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயமும் ஒன்றாகும் என்கின்றார்கள். வியாசராயர் எதோ தீராத வியாதியினால் பீடிக்கப்பட்டு இருந்ததாகவும் ,அவர் தனது வியாதியை தீர்த்து வைத்தால் தன்னால் எந்த அளவு முடியுமோ அத்தனை ஆலயத்தை ஹனுமானுக்கு நிர்மாணிப்பதாக வேண்டிக் கொண்டதாகவும், அதனால்தான் அவர் சுமார் 732 ஆலயங்களை கர்னாடகாவின் பல இடங்களிலும் கட்டியதாகவும் அதில் ஒன்றே இங்குள்ள ஆலயம், பெங்களூரின் பிரபலமான கலி வீர ஆஞ்சனேயர் மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள பிரசித்தமான காட்டு வீர ஆஞ்சனேயர் ஆலயமும் என்றும் கூறுகிறார்கள். ஆகவே கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில்தான் இந்த ஆலயமும் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது என்பது தெளிவாகிறது.

    திருத்தணியை அடுத்த நல்லாட்டூரில் எழுந்தருளியுள்ள இந்த ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயத்தின் ஹனுமார் ஸ்வயம்பு மூர்த்தி என்றும், அது வடிவமைக்கப்பட்டதின் காலம் தெரியவில்லை என்றும், காலம் காலமாக வாய் வழிச் செய்தி மூலமே கிடைக்கும் செய்திகளின்படி இந்த ஆலயம் வியாச முனிவரின் அருளால் தானாகவே தோன்றி உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    ஆனால் இன்னொரு செவி வழிக் கதையும் இதைக் குறித்து உள்ளது. பல இடங்களிலும் ஹனுமானுக்கு ஆலயம் எழுப்பியவாறு சென்று கொண்டிருந்த வியாசராயாவும் அவருடன் உடன் சென்றவர்களும் கால் நடையாக கர்னாடகாவில் இருந்து திருப்பதி மலையில் ஹனுமானுக்கு ஆலயம் அமைக்க பாறையில் செதுக்கப்பட்ட  ஒரு ஹனுமானின் சிலையை தம்முடன் எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றபோது வழியில் இளைப்பாற நல்லாட்டூரில் இரவு தங்கினார்களாம். ஹனுமானின் சிலையை தாம் இளைப்பாறிய இடத்தில் பூமி மீது பத்திரமாக  வைத்து இருந்தார்கள். மறுநாள் காலை எழுந்து தமது பயணத்தைத் துவக்கினார்கள். ஆனால் அவர்கள் கொண்டு சென்றிருந்த ஹனுமானின் சிலையை அவர்களால் பூமியில் இருந்து எடுக்க முடியவில்லை. என்ன செய்தும் அவர்களால் அந்த சிலையை அகற்ற முடியவில்லை. ஆகவே வருத்தத்துடன் அங்கேயே அன்று இரவும் தங்கி விட்டார்கள்.  அன்று இரவு வியாசராயரின் கனவில் தோன்றிய ஹனுமான் தனக்கு அங்கேயே ஒரு வழிபாட்டுத் தலம் எழுப்பி அதில் அந்த சிலையை வைக்குமாறு கூறியதாகவும் வியாசராயரும் அங்கேயே அந்த ஹனுமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதுவும் ஹனுமாரின் ஒரு வழிபாட்டுத் தலம் ஆயிற்று. அப்படி எழுந்ததே இந்த மூல ஆலயம் என்றும் கூறுகிறார்கள். அந்த வியாசராயரையே வியாசர் என்று கூறுகிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆகவே இந்த ஆலயத்தின் காலம் ஆயிரத்துக்கும் முற்பட்ட வருட காலமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

    ஆனால் அதற்குப் பிறகு காலப்போக்கில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளினால் இந்த வழிபாட்டுத் தலம் அழிந்து புதைந்து விட்டதாகவும், அங்கிருந்த பெரிய பாம்புப் புற்றின் அருகில் பாறையில் செதுக்கப்பட்டு இருந்த ஹனுமானின் சிலையும் புதைந்து இருந்ததாகவும், அந்த பாறை சிலையை யாரும் நாசப்படுத்தாமல் இருக்க ஒரு பெரிய பாம்பு ஒன்று அந்த புற்றில் மறைந்து இருந்தவாறு அதைக் காலம் காலமாக காத்து நின்றதாகவும் பிரசன்னத்தில் தெரிய வந்ததாகக் கூறுகிறார்கள்.

    எது எப்படியோ காலப்போக்கில் நல்லாட்டூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்  இருந்த இடமே தெரியாமல் மறைந்து இருந்தாலும், பாறையில் செதுக்கப்பட்டு இருந்த ஆஞ்சநேயர் பிற் காலத்தில் முன்னர் வழிபாட்டுத் தலம் அமைந்து இருந்த அதே இடத்தில் கண்டெடுக்கப்பட்டது என்கிறார்கள். இங்குள்ள ஆலய பண்டிதர்களின் கூற்றின்படி காலம் காலமாக ஐதீகமாக அவர்கள் கூறி வரும் இந்த தல வரலாற்றுக் கதை வாய் வழியே கூறப்பட்டு வந்த கதையே என்றும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவற்றை தாமும் தெரிவிப்பதாகவும் கூறுகின்றார்கள். அப்படி என்றால் முன்னர் புதைந்து இருந்த ஆலயமும் ஹனுமானின் சிலையும் எப்படி வெளிவந்து புதிய ஆலயமாக ஆயிற்று?

    பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வழிப்பாட்டு தலமாக இருந்த இந்த ஆலயத்தை இதே கிராமத்தை சேர்ந்தவரும் அப்போது சென்னையில் ஹோட்டல் தொழில் செய்து வந்திருந்த தனி நபர் ஒருவரே எழுப்பி உள்ளார் என்கின்றார்கள். சென்னையில் தொழில் அதிபராக இருந்த அந்த பக்திமான் ஒருவர் வேலை நிமித்தம் டெல்லிக்கு சென்று இருந்த நேரத்தில் அவருக்கு கனவில் தோன்றிய ஹனுமான், தான் புதைந்து உள்ள இடத்தைக் குறிப்பிட்டு அதே இடத்தில் தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூற, அந்த மனிதர் மறுநாள் காலை தனக்கு வந்த கனவைக் குறித்து மனைவிக்குக் கூற அவரும் தனக்கும் அதே போன்ற கனவு அதே நேரத்தில் வந்ததாகக் கூறினார்.  இது பகவானின் சித்தமே என எண்ணிய தம்பதியினர் பிரசன்னம் போட்டு பண்டிதர்களிடம் ஆலோசனைக் கேட்டப் பின், கனவில் கிடைத்த ஆலயத்தின் அங்க அடையாளங்களை வைத்துக் கொண்டு பண்டிதர்களின் உதவியுடன் குறிப்பிட்ட இடத்தை எப்படியோ கண்டு பிடித்து பூமிக்குள் மறைந்து இருந்த பாறையில் காணப்பட்ட ஆஞ்சநேயரை வெளியில் எடுத்து அங்கேயே ஒரு சிறிய ஆலயம் எழுப்பினார்களாம். இப்படியாக எழுந்ததே திருத்தணியை அடுத்த நல்லாட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயம் ஆகும். மூல கிராமம் குசஸ்தலை ஆற்றின் இடது புறத்திலும்  ஆலயம் வலது புறத்திலும் அமைந்து உள்ளது.

     ஆலய நுழைவாயில் 

    சன்னதிக்கு செல்லும் வழி 


    இன்னொரு செய்தியின்படி தற்போது அமைக்கப்பட்டு உள்ள பெரிய ஆலயம் 1932 களில் சென்னை ராஜதானி முதலமைச்சராக பணியாற்றிய திவான் பகதூர் முனுசாமி நாயுடுவின்  மகன் ஸ்ரீராமுலுவின் மருமகனின்  தனிப் பெரும் முயற்சியில் கட்டி முடிக்கப்பட்டதென்றும் 1998ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி அப்போதையை சட்டபேரை தலைவர் பி. டி. ஆர். பழனிவேல் ராஜன் முன்னிலையில் காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் பட்டர் திருக்கரங்களால் இதில் குடமுழுக்கு நடைபெற்றது என்றும் தகவல் கிடைக்கிறது.

    சன்னதியில் உள்ள ஹனுமானின் தோற்றம் 

    இந்த ஹனுமானின் சிலை கரும் பச்சை நிறத்திலான பாறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.  இந்த  சிலையின்  சிறப்பு பல உண்டு. இந்த சிலை ஹனுமாரை பால உருவிலான ஹனுமான் என்கின்றார்கள். வலது பக்கத்தை நோக்கி பார்த்தபடி அவர் நின்று இருப்பது விசேஷமானது. வலது கை மேலே தூக்கியபடி இருக்க அதில் அபய முத்திரை காணப்படுகிறது. சிலையின் சிறப்பு இன்னும் பல உள்ளது. ஹனுமான் நீண்ட வாலின் நுனியில் மணி, தலையில் நாமம், காதுகளில் குண்டலங்கள், கோரப்பற்களுடன் சங்கு, தலை உச்சியில் தாழம்பூ, அருகில் சுதர்சன சக்கரம், கழுத்தில் சாலிக்கிராமத்திலான மாலை, இடுப்பில் துஷ்டர்களை வதம் செய்யும் கத்தி போன்றவற்றுடன் காட்சி தரும் ஆஞ்சநேயர் தனி ஆஞ்சநேயர் அல்ல.

    சாதாரணமாகவே வாயுவின் புத்திரரான ஆஞ்சநேயரை சிவனின் அவதாரம் அல்லது சிவனின் அம்சம் என்பார்கள். ஆகவே மகாபாரத யுத்த காலத்திலே பூலோகத்தில் கொடுமைகளை செய்து வந்திருந்த அரக்கர்களை வதம் செய்து மக்களை துயரங்களில் இருந்து மீட்க இங்கு வந்து அவதரித்திருந்த ஆஞ்சநேயருக்கு அநேக சக்தி தரும் வகையில் அவருடைய உருவில் பல்வேறு அம்சங்களை சிவபெருமான் கொடுத்தார்.  தலையில் ராமர்  பாதம், இடது கையில் தாமரைப் பூ உருவில் மகாலஷ்மி, காதுகளில் அணிகலன்களாக காளி தேவி, கோரைப் பற்களாக துர்க்கை, இடுப்பில் கத்தியாக பரசுராமர், நெற்றியில் திருநேத்ரமாக (கண்) சிவபெருமான், இருபுறங்களிலும் சங்கும் சக்கரமுமாக விஷ்ணு பகவான், கால்களில் தண்டையாக கிருஷ்ணர் என பல தெய்வங்கள் ஆஞ்சநேயரின் உடலில் குடியேற, அங்கு வந்த பார்வதி தேவி அனைவரும் அனைத்து இடத்தையும்  அனைவரும் ஆக்ரமித்துக் கொண்டு விட்டதினால் தனக்கு தங்க ஒரு இடம் இல்லையே என அனுமானிடம் கூற அவரும் தனது வாலை உயர்த்திக் காட்டி அதில் கட்டப்பட்டு இருந்த சிறு மணி கட்டப்பட்டு உள்ள இடமே மீதம் உள்ளது என்று கூற பார்வதி அவர் வாலில் மணியாக அமர்ந்து கொள்ள, அங்கு வந்த வியாசர் ஒரு பூணூலாக மாறி அந்த ஹனுமாரின் உடலில் அமர்ந்து கொண்டாராம். அந்த ஆஞ்சநேயர் இப்படியாக பல்வேறு தெய்வங்களின் சக்திகளைக் கொண்டவராக இருந்து கொண்டு அங்கு வந்து தன்னை வணங்கித் துதிக்கும் அனைத்து பக்தர்களுக்கும் செல்வமும், வாழ்க்கையில் வளத்தையும் குறைவில்லாது அள்ளித் தந்து வருகிறார் என்கின்றார்கள். மனதில் அமைதியையும், ஆனந்தத்தையும் அள்ளித்தரும் ஸ்ரீ வீர மங்கள ஆஞ்சநேயரை வணங்கினால் வெற்றியும், செல்வமும் வீடு தேடி வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    இந்த ஆலயத்தில் தனித் தனி சன்னதிகளில் வினாயகரும், குடும்ப சமேதகர்களாக ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி போன்றவர்களும், தனி சன்னதியில் நவகிரகங்கள் தமது வாகனங்களுடன் காட்சி தந்தபடி இருக்கிறார்கள். ஹனுமானைப் நேராகப் பார்த்தபடி சனிபகவானும் உள்ளார் என்பதும் இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். அதனால்தான் இங்கு வந்து சனி பகவானையும் ஹனுமானையும் வணங்கிச் சென்றால் சனியின் எந்த தொல்லை இருந்தாலும் அவை பூரணமாக விலகிவிடும் என்கிறார்கள். மூலஸ்தானத்தில் நின்றிருக்கும் ஸ்ரீவீரமங்கள ஆஞ்சநேயர் தன்னிடம் வந்து வேண்டிடும் பக்தர்களுக்கு காட்சி தந்து அபயம் அளிக்க, அதே சன்னதியின் இடப்புறத்தில் நாகதேவதை சன்னதியும் இருக்க சன்னதியின் பின்னால் இரண்டு சந்தன மரமும், நாக சன்னதியின் பின்புறத்தில் சிவப்பு செம்பருத்தி மரமும் உள்ளன. அந்த நாக சன்னதியில்தான் ஹனுமானின் பாறையைக் காலம் காலமாக காத்து நின்ற நாகத்தின் வம்சமும் தொடர்ந்து வசிப்பதாகக் கூறுகிறார்கள். ஆகவேதான் அந்த பாம்பு புற்றை அகற்றாமல் பூஜித்து வருகிறார்கள். இன்றும் அந்த புத்தில் நாகம் வந்துவிட்டுச் செல்வதாகவும், ஆனால் யாரும் அதற்கு இடையூறு செய்வதில்லை என்றும் கூறுகிறார்கள்.
     
    ஹனுமான் சன்னதிக்கு வலப்புறத்தில் 
    நாக சன்னதியும் பாம்புப் புற்றும்

    இந்த ஆலயத்தின் ஒரு முக்கிய அம்சம் இங்கு நடைபெறும் வருடாந்திர ஸ்ரீ சீதா திருக்கல்யாண உற்சவம் ஆகும். மாலை 6 மணியிலிருந்து ஸ்ரீராமரும், சீதையும் திருமணக் கோலத்தில் சன்னதியில் இருந்து புறப்பட அதைத் தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம், மாங்கல்ய தாரணம், அர்ச்சனை, தாம்பூலப் பிரசாதம் என பல நிகழ்ச்சிகளும் நடைபெறுமாம். இந்த சுப வைபவத்தின் பிரதான அம்சமே ராமர்- சீதை இருவரும் தம்பதி சமேதகர்களாக காப்புக் கயிறு கட்டிக் கொள்வதுதான். ஆகவே திருமண வயதை எட்டிவிட்ட ஆனால் திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலாரும் இங்கு வந்து ராம-சீதை திருமணத்தன்று வழங்கப்படும் காப்புக் கயிற்றைக் கட்டிக் கொண்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நீண்ட கால நம்பிக்கை ஆகும். அந்த நிகழ்ச்சியன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் காப்புக்கயிறு கட்டுவார்கள்.


    புத்திர பாக்கியம்  வேண்டியும், திருமணம் 
    நிறைவேற வேண்டியும் ஆலய  வேப்ப 
    மரத்தில் கட்டப்பட்டு உள்ள  பிரார்த்தனை துணிகள்

    சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் பிரதான சாலையில் இருந்து திருத்தணி மலைக்  கோவிலுக்கு செல்லும் பாதையின் எதிர்புறமாக அதாவது நேர் எதிரில் அமைந்துள்ள சின்ன சாலை வழியே தாழவேடு, பூனிமாங்காடு போன்ற கிராமங்களின் வழியே இருபுறத்திலும் இயற்கை எழில் தரும் விவசாய நிலங்களின் வழியே போடப்பட்டு உள்ள நல்ல பாதையில் சென்று இந்த ஆலயத்தை அடையலாம். இருபுறமும் பச்சைப்பசேலென பரந்து விரிந்துள்ள விளை நிலங்களின் வழியே செல்லும்போது நமது மனம் அமைதி அடைகிறது.
    ஆலயம் செல்லும் வழி

    ஆலய வளாகத்தின் நுழை வாயில் அருகே உள்ள மைதானத்தில் அமர்ந்து கொண்டு தியானிக்கும் காட்சியில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும் திருத்தணிக்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்துக்கும் வந்து ஆஞ்சநேயரை வணங்கி செல்கின்றனர்.

    Chettipunniyam Hayagreevar Temple

    $
    0
    0


    குதிரை முகம் கொண்டு, அபாய கரங்களைக் காட்டியபடி தியான நிலையில் உள்ள ஹயக்ரீவரை, லஷ்மி தேவி மடியில் அமர்ந்திராமல் தனிமையில் அமர்ந்திருக்கும் குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவரை எந்த ஆலயத்திலும் காண முடியாது. அப்படி அவர் சன்னதி எங்காவது அமைந்து இருந்தால் அது அபூர்வமான ஆலயம் எனலாம். அப்படிப்பட்ட அபூர்வமான காட்சியில் அமர்ந்துள்ள ஹயக்ரீவரை தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள செட்டிப் புண்ணியம் எனும்  கிராமத்தில் யோகஹயக்ரீவர் எனும் ஆலயத்தில் காணலாம்.  இந்த ஆலயத்தில் உள்ள யோகஹயக்ரீவரை கல்வி ஞானம், தேர்வுகளில் வெற்றி,  தொழிலில் வெற்றி,  நாட்டியம், இசை, சங்கீத கலைகளில் புகழ் பெற  என மாணவர்கள் முதல் அனைவரும் வந்து வேண்டிக் கொண்டு வணங்கும் ஆயிரத்துக்கும் முற்பட்ட வருட ஆலயம் ஆகும்.

     பிரபஞ்சம் படைக்கப்பட்டப் பின் பிரளய காலத்தில்  ஒருமுறை கடுமையான யுத்தம் செய்து  அசுரர்களை அழித்த களைப்பில் சமுத்திரத்திலே ஆயிலையில் யோக நித்திரையில் இருந்தார் மகா விஷ்ணு. அதற்கு முன்னர்தான் அவர் நாபிக் கமலத்தில் இருந்து வெளிவந்த பிரும்மன் நான்கு வேதங்களையும் படைத்து அவற்றை உலகிற்கு உபதேசித்த  பிரும்மா தனது படைப்புத் தொழிலையும்  துவக்கி இருந்தார்.

    விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருந்து பிரும்மா வெளி வந்த அதே நேரத்தில் விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருந்த ஆயிலையில் இருந்த இரண்டு நீர் திவலைகளில் இருந்து மது மற்றும் கைடபன் எனும் இரண்டு அசுரர்கள் வெளி வந்து பிரும்மா செய்து வந்திருந்த படைப்புத் தொழிலையும்  தாமே செய்ய ஆசை கொண்டு பிரம்மனிடமிருந்த வேதங்களை திருடிக்  கொண்டு ஓடி விட்டார்கள். அந்த வேதங்களை திருடிக் கொண்டு சென்றவர்கள் அதை தக்க இடத்தில் பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்று எண்ணி அதை கடலுக்கு அடியில் இருந்த பாதாளத்தில் கொண்டு சென்று ஒளித்து வைத்து விட்டு அங்கேயே குதிரை வடிவ முகம் கொண்டு இருந்தார்கள்.


    வேதங்கள் அவர்கள் வசம் இருந்ததினால் அதை வைத்துக் கொண்டு தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து அழியா வரத்தையும்  பெற்றார்கள். அந்த வரத்தின்படி தம்மை அழிக்க குதிரை முகம் கொண்டவர் அவதரித்தால் மட்டுமே முடியும் எனும் அளவிற்கு வரத்தையும் பெற்றதை அறிந்து கொண்ட மகாவிஷ்ணு பிரும்மாவிடம் இருந்து அவர்கள் திருடிச் சென்ற வேதங்களை மீட்டு வருவது மட்டும் அல்லாமல் அவர்களை முற்றிலும்  அழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாடகம் நடத்தினார்.  அந்த நாடகத்தின் ஒரு காட்சியாக வில்லின் நாண் மூலம் தலை அறுபட்டு குதிரை முகம் கிடைக்கப் பெற்றவர், ஹயம் என்றால் குதிரை என்பது அர்த்தம் என்பதினால் ஹயக்ரீவர் என்ற பெயரையும் பெற்றார். அந்த குதிரை முகத்தோடு கடலுக்குள் புகுந்து சென்று அந்த அசுரர்களைக் கொன்று வேதத்தை மீட்டு வந்தார். அசுரர்களுடன் போரிட்ட குதிரை முகத்தைக் கொண்டிருந்த ஹயக்ரீவர் உக்ரமாக இருந்ததினால் அவர் கோபத்தைக் குறைக்க மகாலட்சுமி அவர் மடியில் அமர்ந்து கொண்டு அவரை சாந்தப்படுத்தினாள்.

    இப்படியாக தசாவதார அவதாரங்கள் எடுக்க இருந்த காலத்துக்கு முன்னரே விஷ்ணு பகவான் எடுத்த முதல் அவதாரமான ஹயக்ரீவர் மடியில் லஷ்மி தேவி அமர்ந்திருந்த உருவமே லட்சுமி ஹயக்ரீவர் எனும் வடிவம் ஆயிற்று. அந்த கோலத்தில் அவர்கள் இருந்தபோது அங்கு வந்த சரஸ்வதி தேவி ஹயக்ரீவரிடம் வேண்டிக் கொண்டபடி சரஸ்வதிக்கும் ஞானத்தை உபதேசித்து கல்விக்கே அதிபதியான சரஸ்வதிக்கே குருவானார்.  ஆகவே ஹயக்ரீவரை வணங்கித் துதித்தால் சரஸ்வதியை வணங்கித் துதித்து பெற்ற அருளை  விட பல மடங்கு அருள் கிட்டும் என்பார்கள்.  தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல கல்வி அறிவு கிடைக்க  சரஸ்வதியை வணங்க வேண்டும் என்றாலும் அதன் பின்னர் சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவரையும் வணங்கித்  துதித்தால்தான் சரஸ்வதி தேவியிடம் இருந்து பெற்ற கல்வி ஞானம் முழுமை அடையும்,  இன்னும் அதிக கல்வி ஞானத்தை முழுமையாகப்  பெற்று வெற்றி மேல் வெற்றியும் அடையலாம் என்பது ஐதீகம் ஆகும். ஆனால் அங்கும் சின்ன நிபந்தனை இருந்தது. கல்விக்காக சரஸ்வதியை வணங்காமல் ஹயக்ரீவரை மட்டுமே கல்விக்காக வணங்கினால் முழுமையான பலன் கிட்டாது. கல்வி ஞானத்தைப் பொருத்த ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவருடைய சீடரான சரஸ்வதிக்கும் மரியாதை தர வேண்டும் என்பதினால் சரஸ்வதியையும் வேண்டி விட்டு தம்முடைய அதாவது ஹயக்ரீவரின் அருளாசியைப் பெற வேண்டும் என்பதே ஹயக்ரீவரின் தத்துவம் என்பார்கள். மற்ற வேண்டுதல்களுக்காக  அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப ஹயக்ரீவரை நேரடியாக துதிக்கலாம் .

     செட்டிப்புண்ணிய ஆலயத்து 
    ஹயக்ரீவரின் தோற்றம்

    இத்தனை மகிமை வாய்ந்த ஹயக்ரீவருக்கு தமிழ்நாட்டில் செட்டிப்புண்ணியம் எனும் கிராமத்தில் ஒரு ஆலயம் உள்ளது.  அவரை இங்கு வந்து வணங்கித் துதித்தால் அவர் அளவற்ற ஞானத்தையும், கல்வி அறிவையும் தந்து அனைத்து தேர்வுகளிலும் வெற்றி அடைய வைப்பார் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலான ஐதீகம் ஆயிற்று. அத்தனை மேன்மை வாய்ந்த சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனப்படும் ஹயக்ரீவரின் இந்த ஆலயம் எழுந்த வரலாறும், அந்த ஆலயத்தின் மேன்மையும் மகத்தானது. அந்த ஆலயம் தோன்றிய வரலாறு மற்றும் மேன்மை என்ன ?

    ஆலயம் செல்லும் வழியில் 
    காணப்படும் இயற்கை எழில் காட்சிகள் 


    ஆலயம் செல்லும் வழியில் உள்ள மலைத் 
    தொடரில் உள்ள பாறைகளில்  காணப்படும்
    இறைவனின் திருநாமம்  அந்த இடமே பெருமாள் 
    குடியிருக்கும் இடம் என்பதை பறை சாற்றுகிறது

    ஒரு காலத்தில் தென் இந்தியாவின் பல பகுதிகளும் முகலாய மன்னர்களின் பிடியிலும், அவர்களைத் தொடர்ந்து போர்த்துகீசியர் மற்றும் ஆங்கிலேயர் பிடிகளிலும் மாறி மாறி இருந்தபோது அந்த அன்னியர்கள்  பல இடங்களிலும் இருந்த இந்துக்களின் ஆலயங்களில் இருந்த நகைகளையும் ஆபரணங்களையும் கொள்ளையடித்து ஆலய மூர்த்திகளையும் நாசப்படுத்தி வந்தார்கள்.  இந்துக்களின் ஆலயங்கள் குறிவைத்து நாசப்படுத்தப்பட்டதினால் பல இடங்களிலும் இருந்த பக்தர்கள் தாம்  வழிபட வேண்டும் என்பதற்காக ஆலயங்களை மறைவிடத்தில் அமைத்துக் கொண்டு அதில் வழிபட்டு வந்திருந்தார்கள்.  அதற்கும் முன்னதாக காலம் காலமாக வழிபடப்பட்டு வந்திருந்த ஆலயங்களில் இருந்த தெய்வீக மூர்த்திகளை காப்பாற்றுவதற்காக அங்கிருந்த விக்ரகங்களை இடம் பெயர்த்து எடுத்துச் சென்றார்கள். முக்கியமாக எளிதில் படையினர் கண்டு பிடிக்க முடியாத மற்றும் செல்ல முடியாத வனப்பிரதேசங்களில் வழிபாட்டு தலம் அமைத்து அங்கு அந்த விக்ரகங்களை வைத்து வழிபட்டு வந்திருந்தார்கள். ஆங்கிலேய, போர்த்துகீசிய மற்றும் முகலாய மன்னர்களினால் அந்த இடங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மீறிச் சென்றாலும் அவர்கள் படையினரை எதிரிகள் எளிதில் வழிமறித்துக் கொல்ல முடிந்தது என்பதினால் மலை முகட்டுக்களிலும்,  அடர்ந்த காடுகளிலும்  மறைந்திருந்த ஆலயங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் அன்னியர்களினால் அழிக்க முடியவில்லை. அப்படி பாதுகாப்பாக எடுத்துச் சென்று பல இடங்களிலும் மறைத்து வைக்கப்பட்டு, வழிபடப்பட்ட இந்துக்களின் தெய்வ சிலைகள் இன்றளவும்,   இலங்கைவரை படர்ந்து உள்ளன என்பதை வரலாற்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த பின்னணியில்தான் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் இருந்த திருவஹந்திபுரம் எனும் ஊரில் பக்தர்களினால் ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த தேவநாதப் பெருமாள் மற்றும் ஹயக்ரீவர் போன்ற தெய்வங்களின் சிலைகள் அன்னியர்களினால் நாசம் அடையாமல் இருக்க 1848 ஆம் ஆண்டில் அன்றைய திவானாக இருந்த திரு ரங்காச்சார் என்பவரால் பரம ரகசியமாக செட்டிப் புண்ணியத்தில் உள்ள இந்த ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. அந்த காலத்தில் சரியான சாலைகள் இல்லாத, போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த மற்றும் மக்கள் நடமாட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்த செங்கல்பட்டு அருகே இருந்த இடமே செட்டிப்புண்ணியம் என்பது. அந்த இடமும் உயர்ந்திருந்த மலையின் உச்சியில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியில் அமைந்திருந்தது  என்பதினால் இந்த இடத்தில் விக்ரகங்களை வைப்பது பாதுகாப்பானது என்று நினைத்தே அவற்றை இங்கு கொண்டு வந்தார்களாம்.  இங்கு அதிக அளவில் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்களே குடி இருந்ததாலும், அவர்களே  ஆலய மூர்த்திகளை பாதுகாக்க அனைத்து விதங்களிலும் உதவி செய்ததினாலும் இந்த இடம் செட்டிப் புண்ணியம் என்ற பெயரைப் பெற்றது.

    முதலில் வரதராஜப் பெருமாளுக்காகவே இந்த ஆலயம் அமைக்கப்பட்டு இருந்ததாம். அதன் பின்னரே தேவநாதப் பெருமாள் மற்றும் குதிரை முகத்துடன் யோக நித்திரையில் இருந்த ஹயக்ரீவருடைய சிலை மற்றும் உர்ச்சவ மூர்த்திகள் 1848 ஆம் ஆண்டுவாக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டன. அதன் பின்னர் அதே போல ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த தஞ்சாவூரில் இருந்த உற்சவ மூர்த்திகளான சீதா-ராம-லஷ்மண-ஹனுமான் மூர்த்திகளும் 1868 ஆம் வாக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்படலாயின.

    இந்த ஆலயம் தோன்றிய காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது  என்று பொதுவாக கூறப்பட்டாலும் பலரும் நம்புவதைப் போல சுமார் 500 முதல் 600 ஆண்டுகள் பழமையான இந்த ஸ்ரீ தேவநாத பெருமாள் ஆலயத்தில் வரதராஜப்பெருமாள் மூலவராக வழிபடப்படுகிறார்.  ஆலயம் உள்ள இடமும், அதற்குள் உள்ள மூர்த்திகளின் மகிமைகளும் பரவலாக  வெளியில் தெரிந்தால் மீண்டும் அந்த ஆலயத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று  அந்த காலத்தில் இருந்த பக்தர்கள் அஞ்சியதினால்  அந்த ஆலயம் குறித்த அனைத்து செய்திகளுமே செவி வழி வார்த்தைகளாகவே இருந்து விட சமீப காலம்வரை பெருமளவிலான பொதுமக்களுக்கு செட்டிப் புண்ணியத்தில் மறைந்திருந்த  தெய்வீக மகிமை மிக்க ஆலயத்தின் விவரமோ அல்லது மகிமையோ அதிகமாக தெரியாமலேயே இருந்தன.

    ஆயினும் கூத்தனூரில் இருந்த சரஸ்வதி ஆலய மகிமையைக்  குறித்து மட்டுமே தெரிந்திருந்த மக்களுக்கு மெல்ல மெல்ல ஹயக்ரீவரின் சக்தி  மற்றும் ஹயக்ரீவரின் மேன்மையும் வரலாறுகளும் தெரியவர கல்விச் செல்வத்தை அளவில்லாது வழங்கும் ஸ்ரீ யோக ஹயக்ரீவமூர்த்தி குடியேறி இருந்த ஆலயங்களை நோக்கிப் பக்தர்கள் படையெடுக்கலாயினர். பல இடங்களிலும் ஹயக்ரீவர் ஆலயமும் எழுந்தது. இந்த நிலையில்தான்  மெல்ல மெல்ல செட்டிப் புண்ணியத்தின் யோக ஹயக்ரீவர் ஆலய விவரங்களும்  வெளித் தெரியவரத்  துவங்கியதும் பக்தர்கள் அங்கு செல்லத் துவங்கினார்கள்.

    அந்த காலத்திலும் கூட அதிக சாலை வசதிகளே இல்லாத, மலைப்  பகுதியில் இருந்த இந்த ஆலயத்துக்கு சென்று யோக ஹயக்ரீவரை தரிசித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உண்மையான பக்தர்கள் மட்டும் தத்தம் குழந்தைகளுடன் செட்டிப் புண்ணியத்தை தேடி வருவது வழக்கமாக இருந்து வந்திருந்ததாம்.

     
    இந்த ஆலயத்தில் குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் யோக முத்திரைக் கொண்டு தனியாகவே காட்சி தருவது அபூர்வமான காட்சி ஆகும்.  அனைத்து ஆலயங்களிலும் யோக ஹயக்ரீவர் மடியில் லஷ்மி தேவி அமர்ந்துள்ள காட்சியே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக இங்கு ஹயக்ரீவர்  குதிரை முகம் கொண்டு தனிமையில் யோக நிலையில் அபாய முத்திரைக் காட்டியபடி ஸ்ரீ  தேவநாதன்  எனும் பெயரில் தனி சன்னதியில் காணப்படுவது விசேஷ காட்சி ஆகும். அவர் சன்னதியில் உற்சவ மூர்த்தியையும் வைத்து பூஜிக்கிறார்கள். அவர் சன்னதியின் அருகில் உள்ள சன்னதியில் ஹோமப்ஜவல்லி எனும் பெயரில் லஷ்மி தேவி காட்சி தருகிறார். சன்னதிக்கு எதிர் புறத்தில் சற்றே தள்ளி அமைந்துள்ள தனி சன்னதியில் ராம-சீதா-லஷ்மண சமேதகர்களாக காட்சி தந்து கொண்டு இருக்க ஹனுமார் அவர்கள் முன்  மண்டி இட்டபடி காணப்படும் உற்சவ மூர்த்திக்கே மதியம் 12.00 மணிக்கு உச்ச கால ஆராதனை நடைபெறுகிறது.  இந்த ஆலயத்தில் அனைத்து சன்னதியிலும் சன்னதிக்குள்ளேயே  மூல மூர்த்திக்கு முன்பாக வைக்கப்பட்டு உள்ள உற்சவ  மூர்த்திக்கே ஏன் பூஜைகளை செய்கிறார்கள் என்பதற்கான காரணம் விளங்கவில்லை.


    ராமர் சன்னதியின் முகப்பு . பச்சை நிறத்திலான 
    தடுப்பு போடப்பட்டுள்ளதே  ராமர் சன்னதி ஆகும் 
    ராமர் சன்னதி 
    ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள அங்கோளம் அல்லது அழிஞ்சல் என்ற பெயருடைய தெய்வீக மரத்தில் தமது வேண்டுதலை நிறைவேற்றித் தர பக்தர்கள் தமது ஆடையில் இருந்து இரண்டு நூலை பிய்த்து எடுத்துக் கட்டுகிறார்கள். சிலர் வீடு கட்ட அருள் வேண்டி அந்த மரத்தின் அடியிலேயே கல்லினால் ஆன  சின்ன வீடு கட்டுகிறார்கள். 

    அங்கோளம் அல்லது அழிஞ்சல்
    எனும் தெய்வீக மரம் 
     

    ஆலயத்தில் நிறைய குரங்குகள் காணப்படுகின்றன. சற்றே ஏமார்ந்தால் அவை நமது கைகளில் உள்ளவற்றை பிடுங்க முயல்கின்றன. சன்னதியின் வாயிலில் தமது பிரார்த்தனை நிறைவேற நெய் விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.



    தேவநாதர் சன்னதிக்கு செல்லும் 
    முன் உள்ள கூடத்தின் காட்சி 

    தேவநாதர் சன்னதிக்கு செல்லும் 
    முன் உள்ள கூடத்தில் உள்ள ஸ்தல வரலாறு 

    தினமும் பூஜை செய்யப்படும் ஆலயப் பசு 

    தேவநாத ஸ்வாமி சன்னதி நுழை வாயில் 

    பரிமுகன் என அழைக்கப்படும் ஹயக்ரீவருடைய உருவ அம்சங்கள் என்னென்ன?  சந்தியா தேவதைகள் நாசித் துவாரங்களாக இருக்க  நீண்ட நாசி,  குதிரை முகத்தில் உள்ள பிடரி மயிர்கள் சூரிய ஒளிக்கதிர்களால் அமைந்தவை,  கங்கையும், சரஸ்வதியும் அவரது புருவங்களாக அமர்ந்துள்ளார்கள், சந்திரனும் சூரியனும் அவரது கண்களாக அமர்ந்திருக்க அவருடைய பற்கள் பித்ரு தேவதைகள் ஆவர்.  பிரும்ம லோகம் இரண்டுமே மேலும் கீழுமாக அவர் வாயின் உதடுகளாக அமைந்தன என்பார்கள்.

    ஒருவர் வாழ்க்கையில் அவருடைய மேன்மைக்கு சாட்சியாக  காணப்படுவது கல்வி ஞானமே.  ஆகவேதான் கல்வியும் செல்வமும் பெருக  இங்குள்ள யோக ஹயக்ரீவர் ஆலயத்துக்கு வந்து தேவநாத ஸ்வாமி எனும் பெயரில் எழுந்தருளி உள்ள யோக ஹயக்ரீவரை  வணங்குகிறார்கள். ஸ்வாமிக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்தி கூடும் என்பது நம்பிக்கை ஆகும். கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் வழிபடும் முறையிலேயே தேர்வு எழுதும் மாணவர்கள் பெற்றோர்களுடன் இங்கு வந்து   யோக ஹயக்ரீவரின் பாதத்தில் தாம் எடுத்துச் செல்லும் பேனா மற்றும் பென்சிலை வைத்து வணங்கிய பின் அதை எடுத்து செல்கின்றனர். இதன் காரணமாக செட்டி புண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே இது பெயர் பெற்றுவிட்டது. கல்விக்காக வேண்டுபவர்கள் மட்டும் இன்றி  இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கும் , தமது தொழிலில் தடைகள் அகலவும்  இங்குள்ள ஹயக்ரீவரை வந்து வழிபடுகிறார்கள்.

    இந்த பிரிவினரைத் தவிர அஞ்ஞானம் எனும் இருளை அகற்றி ஞானம் எனும் ஒளியை நோக்கி பயணிக்க விரும்பும் தம்முடைய பக்தர்களை ஞான நிலைக்கு அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக இருந்தவாறு யோக ஹயக்ரீவர் அருள் புரிகிறார். சில தலங்களில் யோக ஹயக்ரீவர் கல்வி ஞானம் பெற அருள் புரியும் வேளையில், அவர் மடியில் அமர்ந்துள்ள லஷ்மி தேவியோ அந்த பக்தர்களுக்கு கல்வி ஞானத்தோடு சேர்த்து செல்வத்தையும் வாரி வாரி வழங்கும் விதமாக அருள்புரிகிறார்.

    சென்னையில் இருந்து செல்பவர்கள் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து மகேந்திரா சிட்டியின் நேர் எதிரில் உள்ள சின்ன சாலையில் இறங்கி மூன்று கிலோ மீட்டர் அளவுக்கு ஆலயம் செல்லும் வழியைக் காட்டும் பெயர் பலகைகளுடனான சற்றே மலை மீது ஏறிச் செல்லும் வகையில் அமைந்துள்ள பாதையிலேயே சென்றால் ஸ்ரீ தேவநாத ஸ்வாமி ஆலயத்தை அடையலாம். காலை 7.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள யோகஹயக்ரீவரை திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும் ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும் என்பார்கள்.

    கீழ்சூரியமூலை- சூர்யகோடீஸ்வரர்

    $
    0
    0

    -சாந்திப்பிரியா-

    கும்பகோணத்தின் அருகில் உள்ள கஞ்சனூருக்கு அருகில் உள்ளது கீழச்சூரியமூலை என்றொரு சிற்றூர். அங்குள்ள சூர்ய கோடீஸ்வரர் ஆலயம் சுமார் 2000 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த ஆலயம் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் சூரிய பகவான் தினமும் காலை முதல் மாலைவரை சிவபெருமானை வணங்கித் துதிப்பதாக ஐதீகம் உள்ளது.  அப்படி துதிப்பதின் மூலமே சூரிய  ஒளிக்கதிர் சக்தி குறையாமல் கிடைப்பதாகவும் ஐதீகமுள்ளதாம். இந்த ஆலயத்தின் புராணக் கதை என்ன?

    உலகில் உள்ள அனைவரும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசனம் செய்து பல பயன்களை அடைகிறார்களே, ஆனால் தன்னால் மட்டும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் சூரிய பகவானுக்கு ஏற்பட அவர் தன்னுடைய சீடரும் மாமுனிவருமான யாக்கியவல்லவரிடம் தனது மன வருத்தத்தையும் வேதனையையும் எடுத்துரைத்தார்.  அதைக் கேட்டு வேதனை அடைந்த அந்த மாமுனிவரும், அவருக்கு ஆறுதல் கூறி விட்டு, சூரிய பகவானுக்காக தானே சிவபெருமானை வழிபட்டு அதன் மூலம் சூரியனுக்கு   தன்னால் ஆன உதவியை செய்வதாக வாக்குறுதி கொடுத்தப் பின் தினமும் சிவபெருமானின் சன்னதிக்கு சென்று மாலையில் தான் பெற்று இருந்த அனைத்து வேத சக்தியையும் சூரிய கிரண சக்திகளாக மாற்றி அதை  இலுப்ப எண்ணை தீபத்தில் இறக்கி  வைத்து  சிவபெருமானை வழிபடலானார். தினமும் ஒரு கோடி  இலுப்பை எண்ணை  தீபம் ஏற்றி சூரியனுக்காக தவம் இருந்தார்.

     தினமும் ஒரு கோடி இலுப்பை எண்ணை
     தீபம் ஏற்றி சிவபெருமானை துதித்தபடி 
    யாக்யவால்யகர் தவத்தில் இருந்தார்

    பல காலம் இப்படியாக சிவபெருமானை வழிபட்டு வந்த யாக்யவால்யகருக்கு நாளடைவில் இலுப்ப எண்ணை கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்படத் துவங்கியது.  அனைத்து இடங்களிலும் இருந்த  இலுப்ப எண்ணையை   பயன் படுத்தி விட்டதினால் மேலும் இலுப்ப எண்ணை  கிடைப்பது கஷ்டமாகியது. அதனால் அவரது வழிபாடு தடைபடலாயிற்று. மாமுனிவர் அங்கும் இங்கும் அலைந்து இலுப்ப காய்களைக் கொண்டு வந்து எண்ணை எடுத்து அதனால் விளக்கு ஏற்றி வழிபட வேண்டியதாயிற்று.  அதைக் கண்ட வேத சக்திகள் அந்த இலுப்ப எண்ணை தீபத்தினால் ஏற்றப்பட்ட விளக்கு அணைந்ததும் பூமியிலே சென்று புதைந்து கொண்டு இலுப்ப மரமாக மாறி வளரத் துவங்கின. இப்படியாக இலுப்ப மரங்களாக மாறிய மரங்களினால் அந்த இடமே இலுப்ப மரத்தினால் சூழ்ந்த அடர்ந்த வனப்பிரதேசமாக மாறி விட அது முதல் மாமுனிவருக்கு இலுப்பை எண்ணை கிடைப்பதில் எந்த தடங்கலும் இல்லாமல் போயிற்று.

    தனது வேண்டுகோள் நிறைவேற வேண்டும் என்பதற்காக மாமுனிவர் யாக்யவால்யகர் தொடர்ந்து சூரிய கிரணங்களை இலுப்பை எண்ணை தீபத்தின் ஒளியாகவும், சூரியனார் தனக்கு அளித்த சக்திகள் அனைத்தையும் பாஸ்கர சக்கரம் எனும் ஒரு சக்கரமாகவும்  மாற்றி அமைத்து அதை சிவலிங்கத்தின் பாதத்தில் வைத்து வழிபடலானார். இப்படியாக தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு ஒரு கோடி இலுப்பை எண்ணை தீபங்களை தொடர்ந்து ஏற்றி, அந்த இடத்தையே காலை வேளையோ என்று அதிசயிக்க வைக்கும் அளவுக்கு சூரிய கிரணங்களினால் மினுமினுக்க வைத்து, சிவபெருமானை வழிபட்டு வந்த மாமுனிவர் யாக்யவால்யகர் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவர் முன்னால் தோன்றி அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, யாக்யவால்யகரும் தனக்கு வேதங்களை பயில்வித்த தனது குருவான சூரியனின் வேதனையை சிவபெருமானிடம் எடுத்துக் கூறி அதற்கு தக்க உபாயம் செய்து பிரதோஷ காலத்தில் சூரியனும் சிவபெருமானை வணங்கித் துதிக்க சிவபெருமான் ஏற்பாடு செய்ய வேண்டும், சூரியனின் கிரணங்களைக் கொண்ட தீபத்தை தான் ஏற்றி வழிபட்டதினால் சூரியன் இழந்த ஆற்றலையும் திரும்பத் தந்து, சூரியனுக்கு இன்னும் அதிக ஒளிச் சக்தியை தினம் தினம் தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

    அந்த மாமுனிவருக்கு சிவபெருமான்  காட்சி தந்தது பிரதோஷ வழிபாடு துவங்கும் காலம் ஆகும். அதைக் கேட்ட சிவபெருமானும் அந்த இலுப்பை எண்ணையில் சூரியனின் கிரண சக்திகளை ஏற்றி யாக்யவால்யகர் வழிபட்டதினால் இனி மாலை வேளையில் இலுப்பை எண்ணை ஊற்றிய தீபத்தை தான் தங்கி உள்ள அந்த இடத்திலேயே ஏற்றி வழிபடும்போது சூரியனின் அருள் அங்குள்ளவர்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும்,   சூரியனின் கிரணத்தையே இலுப்பை எண்ணையில் ஏற்றி வழிபட்டதினால் சூரியனும் தினமும் காலை முதல் மாலைவரை தன்னை அங்கு வழிபட முடியும் என்றும்,  அதன் மூலம் இலுப்ப எண்ணை தீபத்தில்  இழந்த கிரண சக்திகள் சூரியனுக்கு மீண்டும் கைகூடுவது மட்டும் இல்லாமல், அது மேலும் மேலும் அதிகரிக்கும் என்றும் வரம் அருளினார். அது மட்டும் அல்லாமல் மாலை வேளையில் அந்த இலுப்பை எண்ணை விளக்கு தீபம் சூரிய கிரணத்தால் ஒளி விடுகிறது என்பதினால் தினமும் தனது ஒளியை பூமியில் வெளிப்படுத்தாமல் சூரியனால் மாலையிலும் அந்த இடத்தில் வந்து இலுப்ப எண்ணை ஒளி மூலம் தன்னை வணங்கித் துதிக்க முடியும் என்றும் அருள் புரிந்தார்.

    அதைக் கேட்டு மகிழ்ந்து காலையில் உதித்தெழுந்த சூரியன் அன்று மாலையிலேயே, சூரிய அஸ்தமனம் ஆகிய உடனேயே, பிரதோஷ காலம் முடியும் முன்பாகவே இலுப்பை எண்ணெய் தீப ஒளியில் பிரவேசித்து அதன் மூலம் சிவபெருமானை தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் பெற்றாராம். இப்படியாக மாமுனிவர் யாக்யவால்யகர் மூலம் சூரியனுக்கும் பிரதோஷ காலத்தில் மாலையிலும் பூமியிலே வந்து அந்த ஆலயத்தில் சிவபெருமானை வணங்கித் துதிக்க முடிந்தது. அது முதல் சூரியன் மட்டுமல்லாது பலகோடி மண்டலத்து சூரிய அவதாரங்களும் சூரிய கணங்களும் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாலும் சூரியனுக்கு பிரகாசமான ஒளியை தரும் ஆற்றலை தந்தபடி சிவபெருமான் அங்கு தங்கி  இருப்பதினாலும் இங்குள்ள  சிவபெருமான் சூரிய கோடீஸ்வரர் என்ற பெயர் பெற்று  இங்கேயே தங்கி  அருள் புரிகிறார். யாக்யவால்யகரும் பல காலம் அங்கேயே தங்கி இருந்தார்.  அப்போது அவர் சிவபெருமானுக்காக செய்த ஒரு யாகத்தை தவறின்றி நடத்தி முடிக்க பைரவர் அவருக்கு ஆசானாக இருந்து அதை நிறைவேற்றித் தந்தார். அதனால் அந்த இடத்தில் தங்கிய பைரவரும் சொர்ண பைரவர் என்ற பெயரைப் பெற்றார்.

    இப்படியாக தினம் தினம் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகும், வெளித் தெரியாமல் இலுப்பை எண்ணை தீப ஒளி மூலம் சூரிய பகவான் அங்கு வந்து சிவபெருமானை வணங்கித் துதிப்பதினால், மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னால் அங்கு வந்து சிவபெருமானுக்கு இலுப்பை எண்ணை தீபம் ஏற்றி வணங்கித் துதித்தால் சிவபெருமானின் அருள் மூலம் சூரியனின் அருளையும் பெற்று செய்வாய் கிரக தோஷங்களை விலக்கிக் கொள்ளலாம் என்பதாக ஐதீகம் ஏற்பட்டது. சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம் உள்ளது என்பதினால் காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை சூரிய கோடீஸ்வரராக லிங்க உருவில் அமர்ந்துள்ள மூல லிங்கத்தின் உருவம் நிழலாக கருவறை சுவற்றில் தொடர்ந்து தெரிகிறது. இத்தனைக்கும் அந்த கருவறையில் சிவலிங்கத்தின் உருவத்தை நிழலாகத் தரும் வகையில் சூரிய கிரணங்கள் நேரடியாக விழுவது இல்லை என்பது பெரிய அதிசயம் ஆகும்.

    அங்குள்ள சன்னதியில் பவளக்கொடி எனும் பெயரில் பார்வதி தேவியும் சிவபெருமானுடன் தங்கி உள்ளார். அவர்களுக்குக் காவலாக சொர்ண பைரவர் எனும் பெயரில் பைரவரும் தங்கி உள்ளார். அந்த பைரவருக்கு பிரதோஷ காலத்தில் தீபாராதனை காட்டும்போது அவரது கழுத்தில் பவளமணி அளவில் சிவப்பு ஒளி தோன்றி மறைவதும் அது மெல்ல அசைவது போலவும் காட்சி தருவது அற்புதமான காட்சியாகும் என்கிறார்கள்.

    இங்குள்ள ஒரு சன்னதியில் குடி உள்ள துர்க்கையின் சிலையில் ஒரு காலில் மட்டுமே மெட்டி காணப்படுகிறது.  தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை துர்க்கை அம்மன் எழுந்து வந்து வரவேற்பதாக இதன் பொருள் ஆகும். சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும், நிம்மதி கிடைக்கும், பார்வைக் கோளாறு நீங்கும் என்கிறார்கள்.  இக் கோயிலில் அன்னதானம் செய்தால், முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும். கடன், நோய், எதிரிகள் பிரச்னை எளிதில் தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும். ஆலயம் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும், மாலை நான்கு முதல் ஏழு மணிவரையிலும்  திறந்து இருக்கும். இங்கு ஆலயத்தில் உள்ள சூர்யகோடீஸ்வரர் ஸ்வயம்புவாக எழுந்தருளியவர் ஆகும். நாங்கள் சென்ற ஆண்டு இந்த ஆலயத்துக்கு சென்று இருந்தபோது மதியம் ஆகிவிட்டதினால் சன்னதிகள் மூடப்பட்டு இருந்தன. ஆனாலும் கதவு  வழியே சிவபெருமானை தரிசித்து விட்டு வந்தோம்.
     

      சன்னதியில் துர்க்கை 

     பவளக் கொடி  மற்றும் சூர்யகோடீஸ்வரர் 


    : ஆலய விலாசம் :

    அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில்,
     கீழச்சூரியமூலை,
    தஞ்சாவூர். -613001,
    தமிழ்நாடு.

    கூந்தலூர் முருகன்

    $
    0
    0

    சாந்திப்பிரியா  

    சென்னையில் இருந்து மாயவரம் மற்றும் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது பூந்தோட்டம்.  அதன் அருகில் உள்ளதே கூந்தலூர் எனும் சிறு கிராமம். கும்பகோணத்துக்கு தென் கிழக்கே சுமார் 10 அல்லது 12 கிலோ தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் உள்ளது கூந்தலூர் ஆலயம். நாச்சியார் கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் சாலையில் சென்றோ அல்லது நாச்சியார் கோவிலில் இருந்து 10 கி.மீ தொலைவு பயணித்தோ இங்கு செல்லலாம். சென்னையில் இருந்து மாயவரம் செல்லும் பல பேருந்துகள் கூந்தலூர் வழியே செல்கின்றன.

    கூந்தலூரில் உள்ள ஆயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான முருகன் ஆலயம் இது ஆகும்.  சனி மற்றும் செவ்வாய் கிரக தோஷங்களை நிவர்த்திக் கொள்ளும் பரிகாரத் தலம் இது. அருணகிரிணாதர் பாடியது போல 'சிலம்பு ஏந்தி, காலிலும் கையிலும் சலங்கையும் தண்டையும் கட்டி, வலிமையான தோளுடன் காட்சி தரும் முருகப் பெருமான் என் முன்  நின்றிருந்தால், நாளோ, பூர்வ ஜென்ம வினையோ அல்லது  கோளின் (கிரஹம்) தாக்கமோ, எதுதான் என்னை என்ன செய்ய முடியும்'என்று கூறியதைப் போல சனி பகவானின் கிரக தோஷங்களும் இங்கு வந்து முருகனை வணங்கித் துதித்தால் தூர விலகும் என்பது ஐதீகம்.

     முருகன் சன்னதி 

    இங்குள்ள சிவபெருமான் மற்றும் பார்வதியை 'ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர்'  என்று அழைக்கிறார்கள். ஜம்பு என்றால் நாவல் பழம் அல்லது நரி என்ற இரு அர்த்தம் உண்டு. இந்த ஆலயம் அமைக்கப்பட்ட காலத்தில் இந்தப் பகுதி முழுவதுமே நாவல் பழ மரங்களினால் சூழப்பட்டு இருந்ததினாலும், ஒருமுறை சாபத்தினால் நரி உருவெடுத்த முனிவர் ஒருவர் ஒன்று இங்கு வந்து சிவபெருமானை வணங்கி துதித்து தன்னுடைய சாபத்தை விலக்கிக் கொண்டதினாலும் இந்த ஆலயத்து இறைவனை  ஜம்புகாரணேசுவரர் என அழைக்கப்பட்டதாக செவி வழி வரலாறு உள்ளது.

    இந்த ஆலயத்துக்கு சிறப்பு பலவும் உண்டு. அவை அனைத்தும் செவி வழி  வரலாறு என்பதாகவே  உள்ளன. இராமாயண காலத்தில் தசரத மன்னனின் கட்டளைப்படி ராமரும், சீதையும் வனவாசத்துக்கு சென்ற போது இந்த வழியே வந்து இந்த வனத்தில் சில காலம் தங்கி இங்கு எழுந்தருளி இருந்த ஜம்புகாரணேஸ்வரரை வழிபட்டு உள்ளார்கள். அவர்கள் தங்கி இருந்த குடிசையின் அருகில் தாம் குளித்து நீராட சீதா தேவி ஒரு நீர் நிலையை அமைத்தாராம். அந்த நீர் நிலையே சீதா தீர்த்தம் என்பதாகவும், அந்த தீர்த்தத்தின் அருகில் அமர்ந்து கொண்டு சீதா பிராட்டியார் தமது கூந்தலை வருடி விட்டுக் கொள்ளும்போது சீதையின் தலை முடிகள் அந்த நீருக்குள் விழுந்து அந்த தீர்த்தத்தை புனிதமாக்கிக் கொண்டே இருந்ததாம் என்பதாகவும் புராணக் கதை உள்ளது. உண்மையில் கூந்தல் என்பது தலை முடியல்ல, அது காரணப் பெயர் ஆகும். அந்த தலை முடிகள் என்பவை சீதையின்  உடலில் இருந்து வெளியேறிய தேவகணங்களே. சீதை லஷ்மியின் அவதாரம் என்பதினால் அந்த நீர் நிலையைக் காத்தபடி நின்றிருந்த தேவ கணங்கள் அங்கேயே வாசம் செய்தன. இதனால்தான் இந்த இடமே கூந்தல் காத்த ஊர் என்பதாக முன்னர் கூறப்பட்டு, கூந்தலூர் என பின்னர் மருவி உள்ளதாம்.

    கூத்தப்பனை மரம் 
     
    கூந்தலூர் என்ற பெயர் வர இன்னொரு காரணமும் உண்டு. நாவல் மரங்களைத் தவிர கூந்தப்பனை எனும் பெயரைக் கொண்ட பனை மரங்கள் நிறைந்த பகுதியாகவும்  இந்த இடம் இருந்ததால் இப்பகுதி கூந்தலூர் என்று பெயர் பெற்றது என்றும் செய்தி உள்ளது.  இந்த மரத்தை கூந்தல்பனை, இரும்பனை, திப்பிலிபனை என்றும் கூறுவார்கள். இம்மரத்தைப் பார்க்கும்போது, குளித்து முடித்த பின் ஒரு பெண் தன் கூந்தலை விரித்து உலர்த்திக் கொண்டிருப்பது போலவும், பூங்கொத்துகள் நீளமான கூந்தலைப் போலவும் தோன்றுவதால் இந்த மரங்கள் அடர்ந்திருந்த இந்தப் பகுதி கூந்தல்பனையூர்  என்ற பெயர் பெற்று இருந்திருக்கலாம் என்கிறார்கள். அதைத்தான் சீதையின் கூந்தல் என்றும், அதுவே பின்னர் மருவி கூந்தலூர் என்றாகிற்று என்கிறார்கள்.
     ரோம ரிஷி

    இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு என்ன என்றால், இது சிவன் ஆலயம் என்றாலும் முருகப் பெருமானுக்கே அதிக முக்கியத்துவம் தரும் ஆலயமாக உள்ளது. அதனால்தான் முருகனின் சன்னதியும் ஆலயத்தின் முன்புறத்தில் முதலாவதாக அமைந்துள்ளது. அதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு. சித்தர்களில் மேன்மையானவரும் மகா ரிஷியுமான ரோம ரிஷி என்பவர் அரசலாற்றின் தென்கரையில் தவம் செய்து கூந்தலூர் ஆலய சிவபெருமானிடம் இருந்து அறிய ஆற்றலைப் பெற்றார். அந்த சக்தியின்படி அவரால் தனது தாடியில் இருந்து தங்கத்தை வரவழைக்க முடிந்தது. அந்த ஆற்றலைக் கொண்டு ரோம ரிஷி அவரை நாடி வந்த ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக தமது அஷ்டமா சித்தியால் தாடி வழியே பொன்னை  வரவழைத்து அவர்களுக்கு அளித்து வந்தார்.

    இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்தவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருமுறை தாடியில் இருந்து பொன்னை வரவழைக்கும் அவருடைய சக்தியை தடுத்து நிறுத்தினார். சிவபெருமானின் திருவிளையாடல் காரணமாக ரோம ரிஷியின் தாடி வழியே பொன் வந்து கொண்டிருந்தது நின்று விட்டது. அதனால் அவரால் ஏழைகளுக்கு முன்னைப் போல உதவிட முடியவில்லை. என்ன காரணத்தினால் தான் சக்தியை இழக்க வேண்டியதாயிற்று என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் தவித்து  மனம் தளர்ந்து போன ரோம ரிஷி அடுத்த நாளே தனது தாடியை நீக்கி விட்டார். தாடியை எடுத்தப் பின் முடியை சுத்தப்படுத்திக் கொள்ள குளிக்கக் கூட மறந்து விட்டு தன்னை மறந்த நிலையில் சிவபெருமானை தரிசிக்க கூந்தலூர் ஆலயத்துக்குள் செல்லத் துவங்கினார்.

     ஆலயத்துக்குள் நுழைய வந்த 
    ரோம ரிஷியை முருகனும், 
    வினாயகரும் தடுத்து  நிறுத்தினார்கள்  

    அப்படிப்பட்ட நிலையில் நீராடாமல் சிவனை தரிசிக்க ஆலயத்துக்குள் நுழைய வந்த ரோம ரிஷியை உள்ளே நுழைய விடாமல் வாயிலிலேயே வினாயகப் பெருமானும் முருகனும் அவரை தடுத்து நிறுத்தினார்கள். அதன் பிறகே தன்  நினைவுக்கு வந்து தன் தவறை உணர்ந்த ரோம ரிஷியும் மனம் வருந்தி ஆலய வாயிலிலேயே அமர்ந்து கொண்டு சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்கும் வகையில் தவம் இருந்தார். அவர் பக்தியையும், தவத்தையும் மெச்சிய சிவபெருமானும் ஆலயத்திற்கு வெளியே வந்து அந்த ரிஷிக்கு காட்சி தந்ததும் இல்லாமல் மீண்டும் அவருக்கு இன்னும் பல ஆற்றல்களையும் சக்தியையும் தந்தருளினார். வெளித் தூய்மையை விட மனத் தூய்மையே பெரியது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் அந்த திருவிளையாடலை சிவபெருமான் நடத்தியதாக தல வரலாறு கூறுகிறது.

    நடந்தேறிய அந்த நாடகத்தில் ரோம ரிஷியை ஆலயத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தப் பின் முருகப்பெருமான் அங்கேயே அமர்ந்து கொண்டார். அதனால் முருகப் பெருமான் அங்கு அமர்ந்திருந்த ஆலயத்தில் அதே முன் பகுதியில் அவருடைய சன்னதி  அமைந்தது.  அதற்கு முன்பாக தனக்கு ஏற்பட்டு இருந்த ஒரு சாபத்தை விலக்கிக் கொள்ள அங்கு வந்து சிவபெருமானை துதித்தபடி பல காலம் தவத்தில் இருந்த சனிபகவான் அன்றும்  நீர் நிலையில் குளித்தப் பின் உள்ளே நுழைய வந்தபோது அவரையும் முருகன் தடுத்து நிறுத்தி கூறினாராம் 'இனி இந்த தலத்தில் வந்து என்னை வழிபடுபவர்களின் அனைத்து சனி தோஷங்களையும் அந்த நிமிடமே விலக்கிக் கொள்ள நீங்கள் சம்மதித்தால் மட்டுமே உங்களை உள்ளே நுழைய விடுவேன்'என்று கோபத்துடன் கூற அதைக் கண்டு பயந்து போன சனி பகவானும் தனக்கு ஏற்பட்ட சாபம் விலக வேண்டும் எனில்  கூந்தலூர் ஜம்புகேஸ்வரரின் அருள் வேண்டுமே என்பதற்காக வேறு வழி இன்றி அந்த உறுதிமொழியை அனைவர் முன்னிலையிலும் முருகனுக்குத் தந்த பின்னரே சனி பகவானை உள்ளே நுழைய முருகன் அனுமதித்தாராம். அதன் பின் சனி பகவானும் முருகன் சன்னதிக்கு எதிர்புறத்தில் சென்று அமர்ந்து கொண்டு தமது தவத்தை தொடர்ந்து கொண்டு சிவபெருமானின் அருளைப் பெற்று  சாபத்தை விலக்கிக் கொண்டாராம்.  சனி பகவான் அமர்ந்திருந்த  இடத்திலேயே சனி பகவானுக்கும் சன்னதி அமைந்தது.
    தேவ மயிலுடன் முருகன் 

    இத் தலத்தில் முருகன் ஈசான்ய மூலையில் தனது இரு தேவியருடன் மயிலின் அருகில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். சூரசம்ஹாரத்திற்கு முன்பே முருகனுக்கு இருந்த மயில் வாகனம் இது என்பதினால்தான் இங்குள்ள மயில் தேவ மயில் என்ற பெயரைப் பெற்றது. ஈசான்ய மூலையில் தேவமயிலுடன் தேவியருடன் நின்ற கோலத்தில் காட்சி தருவதும், ஈசான்யப் பார்வையால் சனீச்வரரை நோக்கி இருப்பதினாலும் சனிஸ்வரரின் தொல்லைகளை இந்த முருகனே களைவதாக ஐதீகம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் சனி மற்றும் செவ்வாய் கிரக சன்னதிகள் இந்த ஆலயத்தில் எதிர் எதிராக அமைந்துள்ளதால் இத்தலம் சனி-செவ்வாய் கிரக பாதிப்புகள் நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.


    ஈசான்ய மூலை என்பது என்ன? எட்டு திசைகளில் வடக்கு திசையும், கிழக்கு திசையும் சந்திக்கும் இடமே ஈசான்ய மூலை என்பதாகும். ஈசான்ய மூலை என்பது ஈசனானவர், அதாவது சிவபெருமான் வசிக்கும் இடம் என்பது பொதுவான நம்பிக்கை ஆகும். ஆகவேதான் வீட்டிலும் கூட ஈசான்ய மூலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அங்கு பூஜை அறையையோ அல்லது பூஜை அறை அமைக்க முடியாதவர்கள் தெய்வத்தின் படத்தையோ அங்கு வைத்து வணங்குவது சிறப்பு என்பதாக பண்டிதர்கள் அறிவுறுத்துவார்கள். வடக்கு திசையும், கிழக்கு திசையும் சந்திக்கும் ஈசான்ய மூலையில் தெய்வப் படத்தை வைத்து நமஸ்கரித்து வணங்கலாம். ஒருவர் வீட்டிலேயே கூட வடகிழக்கு மூலை ஈசன் உள்ள இடம் என்பதினால்தான் வடகிழக்கு மூலை ஒரு இடத்தின் ஆற்றல் தரும் இடம் என்பார்கள்.

      எட்டு பட்டைகள்  உள்ள  தாரா லிங்கம்

    இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு என்ன என்றால் இங்குள்ள ஒரு சன்னதியில் பதினாறு பட்டைகள் (16) கொண்ட தாரா லிங்கம் அல்லது பாணப்பட்டை சிவலிங்கம்  எனப்படும் சிவலிங்கம் ஒன்றும் காணப்படுகிறது. சிவலிங்கங்களில் பலவகை லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு அம்சம் உண்டு. அவற்றில் ஒன்றே தாரா லிங்கம் என்பதாகும். பல்லவர் காலத்தை சார்ந்த அபூர்வமான தாரா லிங்கம் என்பது பாணப் பகுதியில் பட்டைகளோடு காட்சி தரும் லிங்கங்கள் ஆகும். அப்படிப்பட்ட லிங்கங்கள் அனைத்து ஆலயங்களிலும் இருக்காது. தாரா லிங்கங்களில் எட்டு பட்டை, பதினாறு பட்டை மற்றும் பன்னிரண்டு பட்டைகளைக் கொண்ட தாரா லிங்கத்தை வணங்கி வந்தால் பல செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை ஆகும்.

    இது போன்ற மேலும் சில அபூர்வமான தாரா லிங்கங்கள் இலங்கையிலும்  அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் காணப்படுகின்றன என்பது ஆச்சர்யமாகவே உள்ளது.   அனைத்து சிவன் ஆலயத்து பிரகாரத்திலும் காணப்படும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பாலசுப்ரமணியர், மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் போன்றவர்கள் சன்னதிகள் இங்கும் அமைந்துள்ளன.

    Neelamadhava-Puri Jagannathar - 1

    $
    0
    0

    1
    எந்த ஆலயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள மூல தெய்வங்களின் சிலைகளை எந்த காரணத்தைக் கொண்டும் மாற்றி அமைக்க மாட்டார்கள். தினமும் செய்யப்படும் பூஜைகள் மற்றும் மந்திர ஒலிகளினால் மேலும் மேலும் அந்த சிலைகளுக்கு சக்தி ஏறுகிறது என்பது ஐதீகம். கற்சிலைகளையோ அல்லது உலோகங்களினால் செய்யப்பட்ட சிலைகளையோ மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏன் என்றால் இயற்கையின் காரணத்தால் அவை உடைந்து அல்லது பழுதடைந்து போகலாமே தவிர அவை அழிவது இல்லை. அதனால்தான் ஆலயங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் கும்பாபிஷேக விழாவில் ஹோமங்கள் வளர்த்து, மந்திரங்கள் ஓதி ஆலய சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் செய்து ஏற்கனவே உள்ள சிலைக்கு மேலும் சக்தியூட்டுவார்கள். விக்ரகங்களை பீடத்தில் ஸ்திரமாக வைக்க, பீடத்துக்கும் விக்ரகத்துக்கும் இடையில் உள்ள பகுதியில் அஷ்டபந்தனம் அதாவது கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதி லிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டு வகை மருந்துகள் கலந்த கலவையைச் சாற்றுவது வழக்கம். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டு வகை மருந்துகளை பூசுவதற்கே அஷ்ட பந்தனம் என பெயர்.

     எந்த ஆலயத்தில் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தனம் சாற்றி விக்ரகங்களை அதன் மீது பிரதிஷ்டை செய்துள்ளார்களோ அந்த ஆலயங்களில் மட்டுமே சாதாரணமாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். அஷ்டபந்தன மருந்து 12 ஆண்டுகளில் தனது சக்தியை இழந்துவிடும் என்பதால் அதனை எடுத்து விட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி அந்த பீடத்திலேயே அதே ஸ்வாமி சிலையை மீண்டும் ஸ்தாபனம் செய்தற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர். அதே சமயத்தில் பீடத்தில் இருந்து எடுத்து மீண்டும் வைக்கப்படும் விக்ரகங்களுக்குப் பதில் வேறு புதிய விக்ரஹத்தை அங்கு ஸ்தாபனம் செய்ய மாட்டார்கள். இயற்கையினால் மூலவரின் சிலை பழுதடைந்து போனால் ஒழிய மூலவரை மாற்றி அமைக்க மாட்டார்கள். ஆனால் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ள மூலவரின் சிலைகளை  ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாற்றிக் கொண்டே இருக்கும் ஒரு புராதன பழக்கம் பூரி ஜகன்னாதரின் ஆலயத்தில் மட்டுமே தொடர்ந்து கொண்டு உள்ளது என்பது வியப்பான செய்தி ஆகும்.

    12 அல்லது 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு வருடத்தில் 'அதிக மாசம்'அல்லது 'ஆஷாட'எனும் மாதம் இருமுறை சேர்ந்து வரும் (ஜூன் மற்றும் ஜூலை மாத இடையில்). அதுவே முக்கியமான வருடமாகக் கருதி அந்த ஆண்டில் பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் மூல மூர்த்திகளாக உள்ள ஜகன்னாதர், சுபத்திரை,ஜகன்னாதரின் சகோதரரான பாலபத்திரர்  மற்றும் சுதர்சனம் (விஷ்ணுவின் சக்ரம்) எனும் நான்கு பேர்களது சிலைகளையும் அதே மாதிரியான புதிய சிலையை வடிவமைத்து'நவகலேவரா'என்ற பெயரில் கொண்டாடப்படும் பண்டிகையில் மாற்றி அமைப்பார்கள்.  1996 ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற 'நவகலேவரா'பண்டிகை 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ஆண்டு அதாவது 2015 ல்  மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் ஜூலை 27 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

    பல்வேறு பஞ்சாங்கங்கள், ஆலய வரலாறு, ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆவணங்கள் மற்றும் பிற ஆவணங்களின் கூற்றின்படி 1575 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை இருபத்தி மூன்று முறை இரட்டை 'ஆஷாட'மாதங்கள் வந்த வருடங்களில்  நவகலேவரா  பண்டிகை நடைபெற்று இந்த ஆலயத்தில் சிலைகள் மாற்றப்பட்டு உள்ளதாக தெரிகின்றது.   ஆகவே இந்த வருடம் நடைபெறும்  நவகலேவரா  பண்டிகை இருபத்தி நான்காம் முறை நிகழும் பண்டிகை ஆகும்.

    பன்னிரண்டு (12) அல்லது பத்தன்பொது (19) ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நபகலேபரா  65 நாட்கள் தொடரும் பண்டிகை ஆகும். பூரி ஆலயத்தில் உள்ள நான்கு  தெய்வங்களும் மரத்தில் வடிவமைக்கப்பட்டவை. மரம் காலப்போக்கில் அழிவுறும் தன்மைக் கொண்டது. ஆகவேதான் இந்த சிலைகள் மாற்றி அமைக்கப்படுகின்றனவாம்.

    இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். அந்த காலத்தில் பாரதம் என அழைக்கப்பட்ட நம் நாட்டில் பல்வேறு ஆலயத்திலும் உள்ள மூலவர்களுடைய அல்லது உற்சவ  மூர்த்திகளின் சிலைகள்  அனைத்துமே கற்பாறைகள், கரும்கற்கள், நவபாஷணங்கள், சுடப்பட்ட மண் கலவை, அல்லது சில குறிப்பிட்ட  உலோகங்களில் மட்டுமே செய்யப்பட்டு உள்ளன. கிராம தேவதைகள் அல்லது கிராம தெய்வங்களின் சிலைகள் கூட மண்ணினாலும், கல்லினாலும் செய்யப்பட்டு  இருக்க,  அவை அனைத்துக்கும் மாறாக பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் மட்டுமே மரத்திலான சிலைகள் சன்னதியில்  உள்ளன. மனிதர்களுக்கு இறப்பும் பிறப்பும் உள்ளதைப் போலவே தெய்வங்களுக்கும் இறப்பும் பிறப்பும் உள்ளது என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டவே இந்த நியதியை விஷ்ணு பகவான் உருவாக்கி  வைத்தாராம்.

    சிற்பக் கலைகளைப் பற்றி விவரமாக எடுத்துரைக்கும் புராண நூலான 'ஷில்பசாஸ்திரா'என்பதின்படி ஆலயங்களில் வடிவமைக்கப்படும் சிலைகளுக்கு சில குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே உயிர் இருக்குமாம்.  ரத்தினக் கற்களினால் மற்றும் இயற்கைக் கற்களினால் செய்யப்படும் சிலைகளின் ஆயுள் 10,000 வருடங்கள், உலோகத்தினால் செய்யப்படுபவைகளுக்கு  1000 வருடங்கள், மண் சிலைகள் ஒரு வருடம் மற்றும் மரங்களில் செய்யப்பட்டவை 12 வருடங்கள் ஜீவன் உள்ளதாக இருக்கும் என்பதாக கூறப்பட்டு உள்ளது.

    நபகலேபரா என்ற இந்த வைபவம் ஒரு விதத்தில் பார்த்தால் ஆலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் போலவே தோன்றும் என்றாலும், இதற்கும் கும்பாபிஷேகத்துக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. மரத்தில் வடிவமைக்கப்பட்ட தெய்வ சிலைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.

    பிற ஆலயங்களில் செய்யப்படுவதைப் போல கும்பாபிஷேகம் செய்து பழைய சிலையையே   மீண்டும் பீடத்தில் அமர்த்தி வைக்காமல், கும்பாபிஷேகம் போன்ற வைபவத்தை செய்து அதன் முடிவில் புதிய சிலையை, தெய்வீக தன்மைகளைக் கொண்ட, வேப்ப மரத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய சிலையை, பழைய சிலைகளில் உள்ள சக்தியை வெளியில் எடுத்து புதிய சிலைகளில் அவற்றை செலுத்தி, அவற்றை ஆலய பீடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்வதை நபகலேபரா என்கிறார்கள்.  பல கட்டங்களாக  நடைபெற்று வரும் இந்த வைபவத்தில் முக்கியமானவை:-
    • ஆஷாட மாதத்தில் திருவிழா துவக்கம் 
    • சிலைகளுக்கான மரத்தைக் கண்டு பிடிக்க தேடுதல்  வேட்டை
    • மரங்களைக் கண்டு பிடித்து அதை எடுத்து வருவது
    • சிலை வடிவமைப்பு
    • சிலைக்குள் பிரும்மாவின் சக்தியை  செலுத்துதல்
    • சிலைகளை தேரில் ஏற்றி ஊர்வலம் செல்லுதல்
    • தேரை  ஆலயத்துக்கு திரும்பக் கொண்டு வருதல்
    • சிலைகளுக்கு அழகூட்டி ஆபரணங்களை அணிவித்தல்
    • பிரசாதம் படைத்தல்
    • சிலைகளை மீண்டும் சன்னதியில் கொண்டு சேர்த்தல்
    • பழைய சிலைகளை மண்ணில் போட்டு புதைத்து விடுவது
    மனிதர்களுக்கு இறப்பும் பிறப்பும் உள்ளதைப் போலவே தெய்வங்களுக்கும் உள்ளது என்ற தத்துவத்தைக் எடுத்துக்  காட்டுவதைப் போன்ற இந்தப் பழக்கம் ஒரிஸ்ஸா மானிலத்தில், நினைவுக்கு எட்டாத பழங்காலத்தைச் சேர்ந்த பூரி ஜகன்னாத் ஆலயத்தில் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டு உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள கடவுள் பூமியிலே உயிரோடு இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் தன் பழைய உடலை துறந்து இன்னொரு உடம்பில் அவர் குடி புகுந்து கொள்வதான ஐதீகத்தின் அடிப்படையில் நபகலேபரா  திருவிழா நடைபெறுகிறது.  நபா என்றால் 'புதிய'என்றும் கலேபரா என்றால் 'உடல்'என்பதாகவும் அர்த்தமாம். அதாவது பல தெய்வங்கள் பல்வேறு காரணங்களினால் பூமியிலே அவதரிக்கின்றன. தெய்வமே ஆனாலும் பூமியிலே அவதரிக்கும் எந்த உடலுக்கும் அழிவுண்டு என்றும் அதில் உள்ள தெய்வீக ஆத்மா புதிய உடலில் புகுந்து கொண்டு புதுத் தோற்றத்தை அடைந்தாலும் அதனுள் உள்ள ஆத்மாவின் தெய்வீகத் தன்மை மாறுவதில்லை என்பதை உணர்த்தவும், தம்முடைய தெய்வீக தத்துவத்தை நிரூபிக்கவும் புதிய உடலோடு தோன்றி ஆலயத்திலே அமர்கிறார் பூரி ஜகன்னாதர். எப்படி ஒருவர் தன்னுடைய உடைகளை மாற்றிக் கொள்கின்றாரோ அப்படித்தான் பூரி ஸ்ரீ ஜகன்னாதரும்  தமது குடும்பத்தினருடன் நபகலேபரா விழாவின்போது பழைய உடலை துறந்து புதிய உடலில் குடி புகுந்து கொள்கிறார் என்கிறார்கள். இதன் பின்னணி கதை  என்ன? ஆகவே முதலில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டதாக நம்பப்படும்,   சத்யயுகத்தில் ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஆலயம் எழுந்த அற்புதமான கதையைப் பார்க்கலாம்.



    பூரி ஜகன்னாதர் ஆலயம் எழுந்த கதை இது:-


    சத்ய யுகத்தில் பூமியிலே 'இந்ரதையுமா'என்றொரு மன்னன் ஆண்டு வந்திருந்தான். அந்த மன்னன் பகவான் விஷ்ணுவின் பெரும் பக்தன். சிறந்த வைஷ்ணவர்.  ஒருமுறை அவரது அரச சபையில் இருந்த ஒரு பக்தர் மூலம் இந்த பூமியிலேயே எங்கோ ஒரு இடத்தில் விஷ்ணு பகவான் 'நீல மாதவா'என்ற பெயரில் அவதரித்து உள்ளார் என்றும், அவர் சிலருக்கு மட்டுமே காட்சி தந்து வருவதாகவும் செய்தி கிடைத்தது. அதைக் கேட்டு வியந்து போன மன்னன் உடனே நீலமாதவா எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டு பிடித்து வருமாறு தனது சபையில் இருந்த ராஜகுருக்களுக்கு உத்தரவு போட்டார். அவர்களும் உடனேயே கிளம்பி நான்கு திசைகளிலும் சென்றபடி இருந்து நீல மாதவாவை தேடலாயினர்.

    அவர்கள் எங்கு சென்று தேடியும், நான்கு திசைகளிலும் இருந்த அனைத்து இடங்களையும் சுற்றி அலைந்திருந்தபடி இருந்தும் நீல மாதவாவை கண்டு பிடிக்க முடியவில்லை என்பதினால் சில காலம் பொறுத்து சோர்வுடன் நாடு திரும்பி நீல மாதவா என்ற பெயரில் விஷ்ணு பகவான் பூமியிலே எங்கும் அவதரிக்கவில்லை, அது கட்டுக் கதையாக இருக்கலாம் என்ற ஐயத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அவர்களில் ஒருவரான வித்யாபதி என்பவர் மட்டும் திரும்பி வரவில்லை. அவர் எங்கு சென்றுள்ளார் என்பதும் தெரியவில்லை. ஆகவே அவர் திரும்பி வந்தால்தான் மட்டுமே உண்மையிலேயே நீல மாதவா பூமியிலே அவதரித்து உள்ளாரா இல்லையா என்ற கேள்விக்கு விடைக் கிடைக்கும் என்பதினால் அனைவரும் வித்யாபதியின் வரவுக்காக காத்திருந்தார்கள்.
    ..............தொடரும்

    Neelamadhava-Puri Jagannathar - 2

    $
    0
    0

    2
    இதற்கிடையில் வடக்கு நோக்கி சென்று கொண்டு நீலமாதவாவை தேடி அலைந்த வித்யாபதி, 'நீலாத்ராரி'எனும் மலைப் பகுதியை அடைந்தார். அங்கு சென்று மலை அடிவாரத்தில் தங்கியவர் மேல் பகுதி மலை மீது வினோதமான காட்சியில் இருந்த மக்களை காண நேரிட்டது. அவர்கள் அனைவருக்கும் நான்கு கைகள் இருந்தன. ஒரு கையில் சங்கு, இன்னொன்றில் சக்கரம், மூன்றாவதில் தாமரை மலர் மற்றும் நான்காவதில் கதை போன்றவை இருந்தன. அதில் இருந்தே அவர்கள் வைஷ்ணவர்கள் என்பதும் தெரிந்தது. தாம் ஒருவேளை நீல மாதவா தங்கி உள்ள தேவலோகத்தில் நுழைந்து விட்டோமா என்று எண்ணியபடி மலை மீது ஏறி செல்லத் துவங்கினார். நேரம் ஆக ஆக பசியாலும் தாகத்தினாலும் களைத்துப் போன அவர் சென்ற வழியில் விஸ்வாசு என்பவரை சந்திக்க நேரிட்டது. வித்யாபதியின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட விஸ்வாசு அவர் வந்த நோக்கத்தைக் கேள்விப்பட்ட பின், தானும் நீல மாதவாவை குறித்துக் கேள்விப்பட்டு உள்ளதாகவும், ஆகவே தன்னுடன் வந்து தன் வீட்டில் தங்கி இருந்து கொண்டு நீல மாதவாவை தேடுமாறும், அவருக்கு ப்ராப்தம் இருந்தால் நீல மாதவாவை அவர் சந்திக்க முடியும் என்றும் கூறி விட்டு அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

    விஸ்வாசு குடிலில் தங்கி இருந்த வித்யாபதி தினமும் அந்த மலை மீதே அங்கும் இங்கும் அலைந்தபடி இருந்தவாறு நீல மாதவாவை தேடினார். அதற்கு இடையில் அந்த குடிலில் இருந்தபோது விஸ்வாசுவின் மகளும் வித்யாவதிக்கு நெருக்கம் ஆகி விட அவரும் அங்கு இருந்த சில நாளிலேயே அவளை மணந்து கொண்டு அங்கேயே தங்கி இருந்தார். காலம் கடந்தது. அப்போது தினமும் நடு இரவில் வீட்டில் இருந்து விஸ்வாசு எங்கேயோ கிளம்பிச் சென்று விட்டு விடியற் காலையில் திரும்பி வருவதை கவனித்த வித்யாபதிக்கு சந்தேகம் வந்தது. எதற்காக விஸ்வாசு தினமும் இரவு அனைவரும் ஒய்வு எடுக்கச் சென்ற பின் வெளியில் செல்கிறார் என்ற சந்தேகம் எழ அவர் தனது மனைவியிடம் அது குறித்துக் கேட்கத் துவங்கினார். முதலில் அவள் எதை எதையோ கூறி மழுப்பத் துவங்கினாலும், முடிவாக வித்யாபதியின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் தனது தந்தை தன்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு கூறிய செய்தியை வித்யாபதியிடமும் சத்தியம் வாங்கிக் கொண்டு கூறினாள்.  அவளுடைய தந்தை தினமும் மலை உச்சிக்குச் சென்று, அங்கு உள்ள ஒரு குகையில் தங்கி உள்ள நீல மாதவாவை தரிசனம் செய்து விட்டு வருவதாக கூறியதும், தான் வந்த நோக்கம் நிறைவேறும் கட்டம் வந்து விட்டதை உணர்ந்த வித்யாபதியும் நீல மாதவா தங்கி உள்ள இடத்துக்கு எப்படி செல்வது என அவளிடம் ஆலோசனைக் கேட்டார். பதிபத்தினியாகவே வாழ்ந்து கொண்டிருந்த அவளும் தனது கணவர் கேட்கின்றாரே என்பதினால் அவருக்கு ஒரு ஆலோசனைக் கூறினாள்.

    அவள் கூறியபடியே வித்யாபதியும் தன்னுடைய மாமனாரிடம் தான் தன்னுடைய மன்னன் இந்ரதைய்யுமாவின் ஆணைப்படியே நீல மாதவா இருக்கும் இடத்தைப் பார்க்க வந்ததாகவும் தனக்கும் அவரை தரிசிக்கும் பாக்கியத்தை ஏற்படுத்தித் தருமாறும் கெஞ்சிக் கேட்க, அவரும் வித்யாபதியின் கண்களைக் கட்டி நீலமாதவா தங்கி இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்று அவரை தரிசிக்க வைத்தார்.

    ஒரே ஒரு கணம்தான். அடுத்தகணம் அனைத்து காட்சிகளும் மறைந்தன. அங்கு நீல மாதவா காணப்படவில்லை. முதலில் வித்யாபதி கண்ட நான்கு கைகளுடன் கூடிய மனிதர்களே தென்பட்டார்கள். அவர்கள் வித்யாபதியிடம் தாம் அனைவருமே தேவலோக மனிதர்களே என்றும், அதுவரை தமக்கு அங்கு காட்சி தந்து கொண்டிருந்த நீல மாதவா திரும்பிச் சென்று விட்டார் என்றும், போகும் முன்னால் அவர்களிடம் இன்னும் சில காலத்தில் பூமியை ஆண்டு வரும் மன்னனான இந்ரதைய்யுமா தன்னைத் தேடி அங்கு வர உள்ளதாகவும், அவர் அங்கு வந்து விட்டு திரும்பி தன் நாட்டுக்கு சென்றதும் தனக்கு ஒரு ஆலயம் எழுப்ப உள்ளதாகவும், வரும் காலத்தில் அனைவருக்கும் அங்கேயே தான் தரிசனம் தர உள்ளதாகவும் கூறி விட்டு மறைந்து போனதாகவும், ஆகவே தாங்களும் இந்ரதைய்யுமா அங்கு வந்து நீல மாதவாவை சந்திக்கும்வரை தங்கி இருக்க உள்ளதாகவும் கூறினார்கள்.

    அதைக் கேட்டு வியந்து போன வித்யாபதியும் இனியும் தாமதிக்கலாகாது, நாட்டுக்குச் சென்று மன்னரிடம் அனைத்தையும் கூற வேண்டும் என முடிவு செய்து உடனடியாக விஸ்வாசு மற்றும் தனது மனைவியிடம் விடைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்துக் கிளம்பிச் சென்று மன்னனிடம் நீல மாதவாவின் செய்தியைக் கூறினார். வித்யாபதி நல்ல செய்தியுடன் வந்ததைக் கேட்ட மன்னனும் மன மகிழ்ந்து போய் தானும் நீல மாதவாவை சந்திக்க ஆவல் கொண்டுள்ளதாகக் கூறி விட்டு நீல மாதவாவை தரிசிக்க வித்யாபதியுடன் உடனடியாகக் கிளம்பி நீலாத்ராரி மலைப் பகுதியில் நீல மாதவா தங்கி இருந்த இடத்தை சென்றடைந்தார். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நீல மாதவா மட்டும் அல்ல, நான்கு கைகளைக் கொண்ட மனிதர்கள் கூட அங்கு காணப்படவில்லை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த இடம் மனிதர்களுடைய நடமாட்டமே இல்லாத சூனியமான பிரதேசமாகவே காட்சி அளித்தது.

    அங்கு எவரையுமே காணவில்லை என்பதினால் வித்யாபதியும் கலக்கம் அடைந்தார். தான் பொய்யைக் கூறியதாக மன்னன கோபமடைவாறே என கவலைப்பட்டுக் கொண்டு நின்று இருந்தபோது, அங்கு பெரும் புயல் அடித்தது. மலையில் புழுதி வாரி இறைத்தது. எவரும் எவருடைய கண்களுக்கும் தெரியவில்லை. நீல மாதவாவைக் காண முடியாத துயரத்தில் ஆழ்ந்த இந்ரதைய்யுமா அங்கேயே மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ய முயன்றார். அப்போது   வானத்தில் இருந்து ஒரு குரல் வந்தது. அந்தக் குரலில் இருந்து அசீரி கூறியது 'மன்னா நீ இங்கிருந்து கிளம்பி நீல மலைக்குச் சென்று அங்குள்ள மலை மீது எனக்கு ஒரு ஆலயம் அமைப்பாய். அதில் ஜகன்னாதரின் உருவில் என் பரிவாரத்துடன் மரக்கட்டையில் செதுக்கிய சிலையாக அமர்ந்து கொண்டு நான் அனைவரையும் ரட்ஷிப்பேன்.  அந்த ஆலயத்துக்குள் பிரும்மாவைக் கொண்டு மரத்திலான உருவில் இருக்க உள்ள என்னை பிரதிஷ்டை செய்து ஆலயத்தை புனிதப்படுத்துவாய்'என்று கூறிவிட்டு அந்த ஆலய அமைப்பையும் எடுத்துரைத்தது .

    அதைக் கேட்ட இந்ரதைய்யுமாவும் மற்றவர்களும் சற்றே அதிர்ந்து போனாலும் தான் செல்ல வேண்டிய இடம் எது, அங்கு எப்படிப் போவது, ஆலயத்தைக் கட்ட என்னென்ன செய்ய வேண்டும், அதில் விஷ்ணுவை எப்படி வடிவமைப்பது என்பதெல்லாம் தெரியாமல் குழம்பினார். ஆகவே வேறு வழி இன்றி மீண்டும் அங்கேயே விஷ்ணுவை மனதார ஆராதனை செய்தபடி அமர்ந்திருந்தபோது அவரை யாரோ எழுப்புவது போல உணர்ந்தார். கண்களை திறந்து பார்த்தபோது அவர் எதிரில் நாரத முனிவர் நின்று கொண்டு இருந்ததைக் கண்டார். நாரத முனிவரைக் கண்ட மன்னன் உடனடியாக எழுந்து  அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து பல முறை அவரை வணங்கிய பின் தான் நீல மாதவாவை தரிசிக்க ஆசைப்பட்ட விஷயம் முதல் அனைத்து செய்திகளையும் கூறிய பின் தான் எத்தனை துரதிஷ்டசாலியாக இருந்திருந்தால் நீல மாதவாவைக் காண முடியாமல் திரும்பிப் போக உள்ளது என்பதைக் கூறி வருந்தினார்.

    அதைக் கேட்ட நாரத முனிவர் கூறினார், 'மன்னா கவலைப்படாதே. இங்கு நடந்தவை அனைத்தையும்  நான் அறிவேன். நீ மனதார வழிபடும் விஷ்ணு பகவான், நீ நீல மலையில் கட்ட உள்ள ஆலயத்திலேயே நீல மாதவராக அவதரிக்க உள்ளார். அதுவும் புருஷோத்தம ஷேத்திரத்தில் நீ கட்ட உள்ள ஆலயத்தில் அவர் தனது பரிவாரங்களுடன் பிரதீஷ்ய தெய்வமாக பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் புரிய உள்ளார். அந்த ஆலயத்தை நிர்மாணிக்கும்போது பிரும்மாவே நேரிலே வந்து அதைக் மேற் பார்வையிட உள்ளார். அது மட்டும் அல்ல மன்னா, அந்த ஆலயத்தைக் கட்ட தேவலோகத்தில் இருந்து விஸ்வகர்மாவும் தனது பரிவாரங்களுடன் வந்து உனக்கு உதவி செய்வார். இதை பிரும்மாவே எனக்குக் கூறி, உன்னிடம் இந்த செய்தியை தெரிவிக்க என்னை இங்கே அனுப்பி உள்ளார். ஆகவே என்னுடன் கிளம்பி வா...நாம் புருஷோத்தம ஷேத்திரத்துக்கு செல்வோம்'என்று கூற அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னனும் அவர் கால்களில் மீண்டும் விழுந்து வணங்கிய பின்னர் அவரை அழைத்துக் கொண்டு பரிவாரங்களுடன் தன் நாட்டுக்கு திரும்பினார்.

    வழியில் நாரத முனிவரிடம் 'மா முனிவரே, புருஷோத்தம ஷேத்திரம் எங்குள்ளது? அதை நான் எப்படி கண்டு பிடிப்பது? நீல மாதவரின் சிலைக்கான மரத்தை எங்கு போய் எப்படித் தேடுவது? என்னை நீல மலைக்கு போகுமாறு அசீரி கூறி மறைந்து விட்டதே. அனைத்துமே எனக்கு குழப்பமாகவே உள்ளதே'என்று கேட்க நாரத முனிவர் கூறினார் 'மன்னா நீலை மலையின் உச்சிதான் புருஷோத்தம ஷேத்திரம் என்பது. அங்கு சென்றவுடன் அது நிலப்பரப்பாகி விடும். அதன் அருகில் உள்ள கடலில்தான் நீல மாதவர் தன் உருவத்தை வடிவமைக்க உள்ள மரத்தின் அடிப்பகுதியையும் உனக்கு தர உள்ளார். ஆனால் அதற்கு முன்னால் அங்கு நீ ஆயிரம் குதிரைகளைக் கொண்டு யாகமும் செய்ய வேண்டும். ஆகவே கவலைப் படாமல் என்னுடன் வா ... நாம் முதலில் நீல மலைக்கு செல்வோம் '.

    அனைத்தையும் கேட்டுக் கொண்ட மன்னன் நாரத முனிவர் அருளாசியுடன் நீல மலையின் உச்சியை சென்றடைந்தார். அவர்கள் அங்கு சென்றதும் அங்கு ஒரு பெரிய மரம் தென்பட்டது. அதைக் காட்டிய நாரத முனிவர் அந்த மன்னனிடம் அந்த மரம்தான் விஷ்ணு பகவான் அமர்ந்திருந்த இடம் என்றும், அதன் நிழலில் சென்று அமர்பவர்களுக்கு மோட்ஷம் கிட்டும் என்றும் கூற, அடுத்தகணமே அந்த மரத்தின் அடியில் ஹிரண்யகசிபுவின் உடலைக் கிழித்தபடி உக்ரஹமான சிங்க முகத்துடன், கைகளில் ரத்தம் கொட்டிக் கொண்டிருக்கும் காட்சியில் விஷ்ணு பகவான் காட்சி தந்தார். ஆனால் அந்த காட்சி நடக்க உள்ளதை நாரத முனிவர் ஏற்கனவே கூறி இருந்ததினால் மன்னனும் அவர் பரிவாரங்களும் சற்றும் பயப்படாமல் அப்படியே சாஷ்டாங்கமாக பூமியிலே விழுந்து நரசிம்மரை வணங்கித் துதித்து அவர் தாம் அனைவருக்கும் அருள் பாலிக்கும் விதத்தில் அங்கேயே சாந்தமாக எழுந்தருளுமாறு வேண்டிக் கொண்டார். அவர்கள் பூமியிலே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி விட்டு எழுந்ததும் அவர்கள் கண்ட ஹிரண்யகசிபுவின் வதம் குறித்த நரசிம்ம அவதாரக் காட்சி அப்படியே மறைந்துவிட்டது. மீண்டும் அங்கு ஒரு அசிரீயின் குரல் கேட்டது. 'மன்னா நீ உடனே கிளம்பிச் கடற்கரைக்கு செல். அங்கு நான் மரத்தின் அடிப்பாகமாக என்னை வடிவமைக்க வருவேன்'  என்று கூறி விட்டு மறைந்தது.
    ...........தொடரும்
    Viewing all 460 articles
    Browse latest View live


    <script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>