கிராம தேவதைகள்- 6 3
மேலே உள்ள படம் ஒரு கிராமத்தில்
காணப்படும் மாரியம்மன் என்ற கிராம தேவதையின் சிலை
தஞ்சாவூரில் உள்ள திருவாரூரில் உள்ள ஒரு கிராமமே மாங்குடி. ஒரு முறை அந்த கிராமத்தில் இருந்த அனைவரது கனவிலும் ஒரு பெண் கடவுள் தோன்றி தான் அந்த ஊருக்கு வரப் போவதாகக் கூறினாள். எவருக்குமே அவள் யார் என்பதோ, எப்போது வரப் போகின்றாள் என்பதோ தெரியவில்லை. மீண்டும் அவர்கள் கனவில் தோன்றியவள் தான் நதி வழியே வரப்போவதாகக் கூறினாள். ஆகவே அனைத்து கிராமத்தினரும் நதிக்குச் சென்று அவள் வரவுக்குக் காத்து இருந்தனர். பல நாட்கள் காத்து இருந்தும் அவள் வருவதற்கான எந்த அறிகுறியும் தோன்றாததினால் அவர்கள் சலிப்பு அடைந்தார்கள். ஒன்றுமே நிகழவில்லை. ஆனால் ஒரு நாள் பெரும் மழை வந்தது. நதியில் தண்ணீர் ஓடிப் பெருகி வெள்ளம் வர கிராமத்தினர் அன்னையை வேண்டிக் கொண்டு அவள் பெயரில் பிராத்தனை பாடல்களைப் பாடிக்கொண்டு நின்றனர். சற்று நேரத்தில் நதியில் மிதந்து வந்த ஒரு கட்டையில், காளிகாம்பாள் சிலை , வேப்ப இலைகள் மற்றும் ஒரு விளக்கு போன்றவை வந்ததைக் கண்டனர். உடனே அதை வெளியில் எடுத்து வந்து அந்த நதிக்கரையில் சிறிய குடிசை அமைத்து அந்த சிலையை அதற்குள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு நாள் என அதற்குப் பாதுகாப்பாக இருந்தபடி பூஜை செய்து வழிபட்டார்கள்.
விரைவில் அந்த கிராமம் செழிப்புற்றது. ஆகவே அந்த ஊர் மக்கள் அந்த சிறிய குடிசை ஆலயத்தை மாற்றி கல்லினால் ஆன ஆலயமாக பெரிய அளவில் கட்டினார்கள். அவள் வேப்ப இலைகளுடன் அங்கு வந்ததினால் அவளை வேப்பிலைக்காரி என அழைகின்றனர்.
மாங்குடி வேப்பிலைக்காரி
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
தஞ்சாவூரில் உள்ள திருவாரூரில் உள்ள ஒரு கிராமமே மாங்குடி. ஒரு முறை அந்த கிராமத்தில் இருந்த அனைவரது கனவிலும் ஒரு பெண் கடவுள் தோன்றி தான் அந்த ஊருக்கு வரப் போவதாகக் கூறினாள். எவருக்குமே அவள் யார் என்பதோ, எப்போது வரப் போகின்றாள் என்பதோ தெரியவில்லை. மீண்டும் அவர்கள் கனவில் தோன்றியவள் தான் நதி வழியே வரப்போவதாகக் கூறினாள். ஆகவே அனைத்து கிராமத்தினரும் நதிக்குச் சென்று அவள் வரவுக்குக் காத்து இருந்தனர். பல நாட்கள் காத்து இருந்தும் அவள் வருவதற்கான எந்த அறிகுறியும் தோன்றாததினால் அவர்கள் சலிப்பு அடைந்தார்கள். ஒன்றுமே நிகழவில்லை. ஆனால் ஒரு நாள் பெரும் மழை வந்தது. நதியில் தண்ணீர் ஓடிப் பெருகி வெள்ளம் வர கிராமத்தினர் அன்னையை வேண்டிக் கொண்டு அவள் பெயரில் பிராத்தனை பாடல்களைப் பாடிக்கொண்டு நின்றனர். சற்று நேரத்தில் நதியில் மிதந்து வந்த ஒரு கட்டையில், காளிகாம்பாள் சிலை , வேப்ப இலைகள் மற்றும் ஒரு விளக்கு போன்றவை வந்ததைக் கண்டனர். உடனே அதை வெளியில் எடுத்து வந்து அந்த நதிக்கரையில் சிறிய குடிசை அமைத்து அந்த சிலையை அதற்குள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு நாள் என அதற்குப் பாதுகாப்பாக இருந்தபடி பூஜை செய்து வழிபட்டார்கள்.
விரைவில் அந்த கிராமம் செழிப்புற்றது. ஆகவே அந்த ஊர் மக்கள் அந்த சிறிய குடிசை ஆலயத்தை மாற்றி கல்லினால் ஆன ஆலயமாக பெரிய அளவில் கட்டினார்கள். அவள் வேப்ப இலைகளுடன் அங்கு வந்ததினால் அவளை வேப்பிலைக்காரி என அழைகின்றனர்.
-----------------------------
பின் குறிப்பு :
மாங்குடி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மானிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் ஆகும். அதைப் பற்றிஅதிக விவரம் கிடைக்கவில்லை. ஆனால் அவள் மிக சக்தி வாய்ந்தவள் என்றும் அவள் ஆலயத்துக்குச் சென்று அவளிடம் பிரச்சனைகளைக் கூறி வேண்டிக் கொண்டால் வாழ்கையில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன என அந்த ஊரில் உள்ள மக்கள் கூறுகிறார்கள்.-சாந்திப்பிரியா