சாந்திப்பிரியா
பாகம் -7
தென் இந்தியப் பகுதியில் ஒரு சோழ மன்னன் ஆண்டு வந்தான் அவன் பெயர் திசையுக்த சோழன் என்பது. அவனுக்கு ஒரு அழகிய மகள் பிறந்தாள். எல்லா அங்கலஷணங்களும் உள்ளவளாகவும், பிறந்தவளாகவும், புத்தி கூர்மைக் பெண்ணாகவும் இருந்தவளுமானவள் என்ன காரணத்தினாலோ அவள் வயது வளர வளர அவளது அழகிய முகம் குதிரை முகம் போல ஆகத் துவங்கியது. ஒரு கட்டத்தில் அவள் முகம் முழுவதுமே குதிரை போல ஆகிவிட அவளால் வெளியில் நடமாட முடியவில்லை. யாருடனும் பழக முடியவில்லை. மனம் ஒடிந்துப் போனவள் திருமண வயதை எட்டியதும் தனது வனப்பை இழந்தாள். அதைக் கண்ட மன்னனும் அவனது மனைவியும் கவலைக் கொண்டனர்.
என்ன செய்வது என்று புரியாமல் ஜோதிடர்களையும், பண்டிதர்களையும் அழைத்து ஆலோசனைக் கேட்டார்கள். அப்படி அவர்கள் பலரையும் சந்தித்து ஆலோசனைக் கேட்டபோது அந்த மன்னனின் அரண்மனைக்கு ஒரு பெரிய சன்யாசி வந்தார். அவரிடமும் மன்னன் தனது மகளின் நிலையைக் கூறி அழுதார். அதைக் கேட்ட அந்த சன்யாசியும் மன்னனிடம் கவலைக் கொள்ள வேண்டாம் என்றும், நகுல மலைக்குச் சென்று அங்குள்ள கீரி முனிவரிடம் ஆலோசனைக் கேட்குமாறு கூறினார்.
அவர் கூறிய அறிவுரையை ஏற்றுக் கொண்ட மன்னனும் உடனே தனது மகளை அழைத்துக் கொண்டு பரிவாரங்களுடன் நகுல மலைக்குச் சென்றார். அங்கு தங்கி இருந்த கீரி முனிவரை சந்தித்து தமது பிரச்சனைகளைக் கூறி அவரிடம் அறிவுரைக் கேட்டார்கள்.
அவளது பூர்வ ஜென்மத்தை ஆராய்ந்த கீரி முனிவர் கூறினார் ' மன்னா உன்னுடைய மகளின் இந்த நிலைக்குக் காரணம் முன் ஒரு பிறவியில் அவள் பெற்று இருந்த சாபமே. ஒரு பிறவியில் அவள் ஒரு மன்னனின் குதிரை லாயத்தில் வேலைப் பார்த்து வந்தாள். அவளுக்கு ஒரு தீய பழக்கம் இருந்தது. அவ்வப்போது பெண் குதிரைகளின் முகத்தில் ஏதாவது கூரிய கம்பினால் அல்லது ஈட்டியினால் அவற்றைக் குத்திக் குத்திக் காயப்படுத்துவாள். அவை வலியினால் அலறித் துடிக்கும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடைவாள். அவளுக்கு பெண் குதிரைகளை அப்படி காயப்படுத்துவது ஒரு வினோத பழக்கமாக இருந்தது. இப்படியாக அவள் யாருக்கும் தெரியாமல் குதிரை லாயத்தில் திருட்டுத் தனமாக செய்து வந்த அட்டகாசத்தினால் பல பெண் குதிரைகளின் முகங்களில் காயம் ஏற்பட்டு அவை துடித்தன.
ஒருநாள் அவள் பிறந்த பெண் குதிரையின் முகத்திலும் கூரிய கம்பினால் குத்தி விட அந்தக் கம்பு அதன் மூக்கில் சென்று பலத்த காயத்தை ஏற்படுத்தி விட அதனால் ஏற்பட்ட காயம் பெரியதாகி புரைபுண்ணாகி அது துடி துடித்து செத்து விட்டது. அந்தக் குதிரை சாகும் முன் மனதார அந்தப் பெண்ணுக்கு சாபம் இட்டது. நீ அடுத்த ஜென்மத்தில் பெண் உருவில் மனிதப் பிறவி எடுக்க வேண்டும். ஆனால் குதிரையின் முகத்தை காயப்படுத்தி வேதனைப் படுத்துகிறாயே அதே குதிரையின் முகத்தை கொண்டவளாக நீ மாறி அவமானப்பட்டு தவிக்க வேண்டும்.
இப்படி அவள் முன் பிறவியில் செய்து இருந்த பாவத்தினால்தான் இந்தப் பிறவியில் அந்த இறந்து போன குதிரையின் சாபத்தினால் குதிரை முகத்தைக் கொண்டப் பெண்ணாகி அவமானப்படுகிறாள். ஆனால் விதி எப்படி வேலை செய்துள்ளது என்பதைப் பாருங்கள். சந்தர்ப்பவசத்தினால் எந்த குழந்தைக் குதிரையை இவள் முன் ஒரு பிறவியில் சாகடித்தாளோ, அந்த குதிரையின் தாய் குதிரையாக நான்தான் இருந்து, பின்னர் வேடனாகப் பிறந்து சாபம் பெற்று கீரி முகத்தவனாக இங்கு வந்து சாப விமோசனம் பெற்றுள்ளேன். இவளோ என்னிடமே வந்து சாப விமோசனத்துக்கு வழி கேட்டு என்னையே வேண்டிக் கொண்டு நிற்கிறாள். இதுவும் நகுலேஸ்வரரின் ஆணைப் போலும். இவள் என்னுடையக் குழந்தையைக் கொன்று விட்டாலும், அதற்கான எனது சாபத்தைப் பெற்று அதிக அவமானத்தை அடைந்து விட்டமையினாலும் இவளை நான் மேலும் தண்டிக்க விரும்பவில்லை.
ஆகவே இவளுக்கு மீண்டும் மனித உருவிலான பெண் முகத்தை அடைய வழிகாட்டுவது ஒரு முனிவரான என் கடமை. முனிவரான என்னிடம் வந்து இவள் இறைஞ்சும்போது அவளை தண்டிப்பது முனிவரான என் நிலைக்கு அழகல்ல. தவறை மறந்து மன்னிப்பதே பெருமை. ஆகவே இவள் இங்கேயே தங்கி இருந்து கங்கரசாகரசங்கமத்தில் தினமும் குளித்தப் பின் இங்குள்ள நகுலேஸ்வரி மற்றும் நகுலேஸ்வரரை வணங்கி வந்தால் அவள் தனது பழைய முகத்தைப் பெறுவாள். அவளுக்காக நானும் நகுலேஸ்வரரை பிரார்த்திக்கிறேன்' என்று கூற அவர்களும் அங்கேயே தங்கி இருந்து கீரி முனிவர் கூறியபடி தினமும் கங்கரசாகரசங்கமத்தில் குளித்தப் பின் ஆலயத்தில் நகுலேஸ்வரி மற்றும் நகுலேஸ்வரரை வணங்கி வர விரைவில் அவளது முகம் மாறி அழகியப் பெண்ணாக மாறினாள். அவளுக்காக கீரி முனிவரும் நகுலேஸ்வரரையும், நகுலேஸ்வரியையும் பூஜித்து அவள் நல்ல முகத்தை அடைய வேண்டும் என வேண்டி வந்தார் என்பதும் அவள் பிரச்சனை தீரக் காரணமாக இருந்தது.
இப்படியாக குதிரை முகம் கொண்டவளது முகத்தை மனிதப் பெண் உருவாக்கியதைக் கண்ட மக்கள் கீரி முனிவர் மீது மேலும் மதிப்பை அதிகரித்துக் கொண்டு அவரை இன்னும் போற்றி வரலானார்கள்.
இப்படியாக நகுலேஸ்வரத்தின் பெருமையை கூறி முடித்த சூதக முனிவர் கூறினார் ''மாமுனிவர்களே, உங்களது வினாக்களுக்கான விடைகளை சுருக்கமாக கூறி விட்டேன். எல்லாப் பாவங்களையும் அழிப்பதாகவும், சுத்தமானதுமான நகுலேஸ்வரர் மற்றும் நகுல மாதவர் சரித்திரத்தைக் கேட்ட நீங்கள் முக்தி அடைவீர்கள் என்பது நிச்சயம். முனீஸ்வரர்களே , நகுல மலையில் இருந்து ஊற்றெடுக்கிற கன்னியா கங்கை தன்னை சேர்ந்தவர்களுக்கு நன்மை பயக்கும். எந்த மனிதன் ஒரு நாளாவது கன்னியா கங்கையில் ஸ்நானம் செய்வானோ அவன் எல்லா பாபங்களும் அகன்றவன் ஆவான்.'' என்று கூறி முடித்தார். அதைக் கேட்ட அனைத்து முனிவர்களும் பேரானந்தம் பெற்று ஒரு முறையாவது தாமும் நகுலேஸ்வரத்துக்குச் சென்று அங்கு நகுலேஸ்வரர், நகுலாம்பிகை மற்றும் நகுல மாதவர் ஆகியோரை வணங்கி வர வேண்டும் என சூதக முனிவர் முன்னால் சங்கல்பம் செய்து கொண்டார்கள் .
என்ன செய்வது என்று புரியாமல் ஜோதிடர்களையும், பண்டிதர்களையும் அழைத்து ஆலோசனைக் கேட்டார்கள். அப்படி அவர்கள் பலரையும் சந்தித்து ஆலோசனைக் கேட்டபோது அந்த மன்னனின் அரண்மனைக்கு ஒரு பெரிய சன்யாசி வந்தார். அவரிடமும் மன்னன் தனது மகளின் நிலையைக் கூறி அழுதார். அதைக் கேட்ட அந்த சன்யாசியும் மன்னனிடம் கவலைக் கொள்ள வேண்டாம் என்றும், நகுல மலைக்குச் சென்று அங்குள்ள கீரி முனிவரிடம் ஆலோசனைக் கேட்குமாறு கூறினார்.
அவர் கூறிய அறிவுரையை ஏற்றுக் கொண்ட மன்னனும் உடனே தனது மகளை அழைத்துக் கொண்டு பரிவாரங்களுடன் நகுல மலைக்குச் சென்றார். அங்கு தங்கி இருந்த கீரி முனிவரை சந்தித்து தமது பிரச்சனைகளைக் கூறி அவரிடம் அறிவுரைக் கேட்டார்கள்.
அவளது பூர்வ ஜென்மத்தை ஆராய்ந்த கீரி முனிவர் கூறினார் ' மன்னா உன்னுடைய மகளின் இந்த நிலைக்குக் காரணம் முன் ஒரு பிறவியில் அவள் பெற்று இருந்த சாபமே. ஒரு பிறவியில் அவள் ஒரு மன்னனின் குதிரை லாயத்தில் வேலைப் பார்த்து வந்தாள். அவளுக்கு ஒரு தீய பழக்கம் இருந்தது. அவ்வப்போது பெண் குதிரைகளின் முகத்தில் ஏதாவது கூரிய கம்பினால் அல்லது ஈட்டியினால் அவற்றைக் குத்திக் குத்திக் காயப்படுத்துவாள். அவை வலியினால் அலறித் துடிக்கும்போது அதைக் கண்டு மகிழ்ச்சி அடைவாள். அவளுக்கு பெண் குதிரைகளை அப்படி காயப்படுத்துவது ஒரு வினோத பழக்கமாக இருந்தது. இப்படியாக அவள் யாருக்கும் தெரியாமல் குதிரை லாயத்தில் திருட்டுத் தனமாக செய்து வந்த அட்டகாசத்தினால் பல பெண் குதிரைகளின் முகங்களில் காயம் ஏற்பட்டு அவை துடித்தன.
ஒருநாள் அவள் பிறந்த பெண் குதிரையின் முகத்திலும் கூரிய கம்பினால் குத்தி விட அந்தக் கம்பு அதன் மூக்கில் சென்று பலத்த காயத்தை ஏற்படுத்தி விட அதனால் ஏற்பட்ட காயம் பெரியதாகி புரைபுண்ணாகி அது துடி துடித்து செத்து விட்டது. அந்தக் குதிரை சாகும் முன் மனதார அந்தப் பெண்ணுக்கு சாபம் இட்டது. நீ அடுத்த ஜென்மத்தில் பெண் உருவில் மனிதப் பிறவி எடுக்க வேண்டும். ஆனால் குதிரையின் முகத்தை காயப்படுத்தி வேதனைப் படுத்துகிறாயே அதே குதிரையின் முகத்தை கொண்டவளாக நீ மாறி அவமானப்பட்டு தவிக்க வேண்டும்.
இப்படி அவள் முன் பிறவியில் செய்து இருந்த பாவத்தினால்தான் இந்தப் பிறவியில் அந்த இறந்து போன குதிரையின் சாபத்தினால் குதிரை முகத்தைக் கொண்டப் பெண்ணாகி அவமானப்படுகிறாள். ஆனால் விதி எப்படி வேலை செய்துள்ளது என்பதைப் பாருங்கள். சந்தர்ப்பவசத்தினால் எந்த குழந்தைக் குதிரையை இவள் முன் ஒரு பிறவியில் சாகடித்தாளோ, அந்த குதிரையின் தாய் குதிரையாக நான்தான் இருந்து, பின்னர் வேடனாகப் பிறந்து சாபம் பெற்று கீரி முகத்தவனாக இங்கு வந்து சாப விமோசனம் பெற்றுள்ளேன். இவளோ என்னிடமே வந்து சாப விமோசனத்துக்கு வழி கேட்டு என்னையே வேண்டிக் கொண்டு நிற்கிறாள். இதுவும் நகுலேஸ்வரரின் ஆணைப் போலும். இவள் என்னுடையக் குழந்தையைக் கொன்று விட்டாலும், அதற்கான எனது சாபத்தைப் பெற்று அதிக அவமானத்தை அடைந்து விட்டமையினாலும் இவளை நான் மேலும் தண்டிக்க விரும்பவில்லை.
ஆகவே இவளுக்கு மீண்டும் மனித உருவிலான பெண் முகத்தை அடைய வழிகாட்டுவது ஒரு முனிவரான என் கடமை. முனிவரான என்னிடம் வந்து இவள் இறைஞ்சும்போது அவளை தண்டிப்பது முனிவரான என் நிலைக்கு அழகல்ல. தவறை மறந்து மன்னிப்பதே பெருமை. ஆகவே இவள் இங்கேயே தங்கி இருந்து கங்கரசாகரசங்கமத்தில் தினமும் குளித்தப் பின் இங்குள்ள நகுலேஸ்வரி மற்றும் நகுலேஸ்வரரை வணங்கி வந்தால் அவள் தனது பழைய முகத்தைப் பெறுவாள். அவளுக்காக நானும் நகுலேஸ்வரரை பிரார்த்திக்கிறேன்' என்று கூற அவர்களும் அங்கேயே தங்கி இருந்து கீரி முனிவர் கூறியபடி தினமும் கங்கரசாகரசங்கமத்தில் குளித்தப் பின் ஆலயத்தில் நகுலேஸ்வரி மற்றும் நகுலேஸ்வரரை வணங்கி வர விரைவில் அவளது முகம் மாறி அழகியப் பெண்ணாக மாறினாள். அவளுக்காக கீரி முனிவரும் நகுலேஸ்வரரையும், நகுலேஸ்வரியையும் பூஜித்து அவள் நல்ல முகத்தை அடைய வேண்டும் என வேண்டி வந்தார் என்பதும் அவள் பிரச்சனை தீரக் காரணமாக இருந்தது.
இப்படியாக குதிரை முகம் கொண்டவளது முகத்தை மனிதப் பெண் உருவாக்கியதைக் கண்ட மக்கள் கீரி முனிவர் மீது மேலும் மதிப்பை அதிகரித்துக் கொண்டு அவரை இன்னும் போற்றி வரலானார்கள்.
இப்படியாக நகுலேஸ்வரத்தின் பெருமையை கூறி முடித்த சூதக முனிவர் கூறினார் ''மாமுனிவர்களே, உங்களது வினாக்களுக்கான விடைகளை சுருக்கமாக கூறி விட்டேன். எல்லாப் பாவங்களையும் அழிப்பதாகவும், சுத்தமானதுமான நகுலேஸ்வரர் மற்றும் நகுல மாதவர் சரித்திரத்தைக் கேட்ட நீங்கள் முக்தி அடைவீர்கள் என்பது நிச்சயம். முனீஸ்வரர்களே , நகுல மலையில் இருந்து ஊற்றெடுக்கிற கன்னியா கங்கை தன்னை சேர்ந்தவர்களுக்கு நன்மை பயக்கும். எந்த மனிதன் ஒரு நாளாவது கன்னியா கங்கையில் ஸ்நானம் செய்வானோ அவன் எல்லா பாபங்களும் அகன்றவன் ஆவான்.'' என்று கூறி முடித்தார். அதைக் கேட்ட அனைத்து முனிவர்களும் பேரானந்தம் பெற்று ஒரு முறையாவது தாமும் நகுலேஸ்வரத்துக்குச் சென்று அங்கு நகுலேஸ்வரர், நகுலாம்பிகை மற்றும் நகுல மாதவர் ஆகியோரை வணங்கி வர வேண்டும் என சூதக முனிவர் முன்னால் சங்கல்பம் செய்து கொண்டார்கள் .
பின்னுரை
நகுல புராணம் முற்றியது