சாந்திப்பிரியா
விஷ்ணு மற்றும் பத்மாவதியின் திருமண வைபவம்
திருமணத் தேவைக்கான செல்வம் கிடைத்ததும், தனது மூத்த சகோதரரான கோவிந்தராஜரை அழைத்த ஸ்ரீனிவாசர் (கோவிந்தராஜர் வகுளாதேவியின் மூத்த மகன் ஆவார். அதை ஏற்கனவே கூறி உள்ளேன்) அனைவருக்கும் வந்து தங்கும் இடமும் உணவருந்தவும் வசதியை ஏற்படுத்தித் தருமாறு கூறினார். ஆகவே கோவிந்தராஜரும் தயங்காமல் பூலோகத்திலயே வைகுண்டத்துக்கு இணையான இடத்ததை தற்போது திருப்பதி மலை உள்ள இடத்திலேயே விஸ்வகர்மாவின் உதவிடன் செய்தார். அதே சமயம் கருட பகவானை அழைத்த ஸ்ரீனிவாசர் யாரை எல்லாம் திருமணத்துக்கு அழைக்க வேண்டும் என்பதை வகுளா தேவி மற்றும் நாரத முனிவருடன் கலந்து ஆலோசனை செய்தப் பின் அனைவருக்கும் தமது பூத கணங்கள் மூலம் திருமண செய்தியை அனுப்பி அவர்களுக்கு தாம்பூலம், பழங்களைக் கொடுத்து அழைக்கச் சொல்லுமாறும், அந்த வேலையை கருடனே செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். நிறைய கடனை குபேரனிடம் இருந்து பெற்று வந்திருந்ததினால் செலவு செய்ய பணத்துக்குப் பஞ்சமே இல்லை எனும் அளவில் காரியங்கள் நடைபெற்றன.
அதே நேரத்தில் ஆகாச ராஜனும் தனது மகளுடைய திருமண வைபவத்தை நன்கு நடத்த அந்த ராஜ்யத்தையே அலங்கரித்தார். அனைவர் வீடுகளிலும் தோரணங்கள் கட்டியும், கோலங்கள் போட்டு அலங்கரிக்கவும் ஏற்பாடு செய்ததும் அல்லாமல் மக்களுக்கும் பல பரிசுகளை வழங்கினார். அனைவருக்கும் வித விதமான உணவு வகைகளை தந்து அவர்களை உபசரித்தார்.
திருமண நாளும் வந்தது. தேவ லோகத்தில் இருந்தும் பூலோகத்தில் இருந்தும் அனைவரும் வந்து அங்கு குமுழி இருந்தார்கள். சிவன், பார்வதி, பிரும்மா, சரஸ்வதி, நாரதர், பிருகு முனிவர், சுக முனிவர், நந்தி தேவர், கருடர் மற்றும் பல லட்சக் கணக்கான தேவர்களும், ரிஷி முனிவர்களும், தேவ கணங்களும் குமுழி இருந்தார்கள்.
ஸ்ரீனிவாசர் முன் ஜென்மத்தில் வேதவதியாக
இருந்த லஷ்மி தேவியின் மாய அவதாரத்தை மணக்கிறார்
வசிஷ்ட முனிவர் புரோகிதர் பாகத்தை ஏற்று திருமணத்தை நடத்தினார். ஆரத்தி எடுத்து , பாத பூஜைகள் செய்து, மங்கள வாத்தியங்களை முழங்கி நல்ல நேரத்தில் நவரத்தினங்கள், பவழங்கள், கோமேதகம், வைடூரியம் போன்ற கற்களை செதுக்கிய மாலையில் செய்த திருமங்ககலியத்தை அனைவர் முன்னாலும் ஸ்ரீனிவாசர் பத்மாவதியின் கழுத்தில் கட்டினார். ஆனால் அங்கு வராத முக்கியமான ஒருவர் யார் என்றால் அது லஷ்மி தேவியாகும். அவள் கொல்லாபுரத்தில் தவத்தில் இருந்ததினால், அவளுடைய ராமாயணக் கால மாய அம்சமான வேதவதியின் மறு ஜென்ம அவதாரமான பத்மாவதிக்கும் ஸ்ரீனிவாசர் உருவில் இருந்த விஷ்ணுவிற்கும் இடையே அப்போது திருமணம் நடந்தது அவளுக்குத் தெரியாது.
விஷ்ணு மேற்கொண்ட ஷேத்ராடனம்
இருவருக்கும் திருமணம் ஆனப் பின்னர் ஆகாசராஜன் கண்ணீர் மல்க தனது மகளை ஸ்ரீனிவாசருடன் அனுப்பி வைத்தார். திருமணம் முடிந்து அவர்கள் கிளம்பிச் சென்ற பின்னரே அவர்கள் இருவருமே மனித அவதாரம் எடுத்துள்ள விஷ்ணு மற்றும் லஷ்மி தேவி என்பதை மற்றவர்கள் அனைவரும் அறிந்தார்கள் ஆகா....இத்தனை நாளும் நாம் அவர்களை தெய்வப் பிறவிகள் என்று அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று மனம் தவித்தார்கள் ஆனால் அதற்குள் அவர்கள் ஷேத்ராடனம் செய்யக் கிளம்பினார்கள். அப்படிச் செல்கையில் அவர்களை வழியில் அகஸ்திய முனிவர் சந்தித்தார். அவர் அவர்களிடம் கூறினார் ' பிரபோ திருமணம் ஆகி ஆறு மாதத்துக்கு மலை மீது ஏறிச் செல்லக் கூடாது என்பது சாஸ்திரத்தின் ஒரு விதியாகும். ஆகவே மலை மீது சென்று கொண்டிருக்கும் நீங்கள் ஆறு மாத காலம் என் ஆஸ்ரமத்தில் தங்கி வசித்தப் பின் மலையேறிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட இருவரும் அகஸ்தியரின் ஆஸ்ரமத்திலேயே சில காலம் தங்கி இருந்தார்கள்.
.........தொடரும்