சாந்திப்பிரியா
பிரும்ம லோகத்தில் இருந்து கோபத்துடன் கிளம்பிச் சென்ற பிருகு முனிவரினால் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதே கோபத்துடன் சிவலோகம் சென்றவரை வாயிலிலேயே தடுத்து நிறுத்தின சிவ கணங்கள். 'தற்போது சிவபெருமான் பார்வதியுடன் எதோ முக்கியமான விஷயம் குறித்து பேசிக் கொண்டு இருக்கிறார் என்பதினால் யாரையுமே உள்ளே அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு போட்டு உள்ளார். ஆகவே தாங்கள் அவர் அழைக்கும்வரை இங்கு அமர்ந்து கொண்டு இருங்கள்' என்று ஒரு ஆசனம் தந்து சற்று நேரம் அதில் அமருமாறு கூறினார்கள். ஆனால் பிருகு முனிவரினால் அதை ஏற்க முடியவில்லை. தான் என்ற அகங்காரம் வெளித் தோன்றியது. 'என்னை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்த உங்களுக்கு அதிகாரம் இல்லை' என்று சப்தம் போடத் துவங்கினார். அவர் கத்த, காவலில் இருந்த சிவ கணங்களும் அவரை தடுத்து நிறுத்த அந்த இடத்தில் கூச்சலும் குழப்பமுமாக இருக்க சிவபெருமானின் காதுகளில் அந்த சப்தம் கொடூரமாக ஒலித்தது. முக்கியமாக எதையோ பார்வதியிடம் விவாதித்துக் கொண்டு இருக்கையில் இங்கு வந்து யார் குழப்பம் செய்கிறார்கள் என்று கோபத்துடன் தனது திரிசூலத்தை கையில் ஏந்திக் கொண்டு கோபமாக வெளியே வந்தவர் 'இங்கு வந்து யார் கத்துகிறார்கள்?' எனக் கேட்க, பிருகு முனிவர் 'உம்மைக் காண வந்த என்னை தடுத்து நிறுத்த இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது?' என்று சிவபெருமானையே பார்த்துக் கோபமாகக் கேட்டார்.
தன் கையில் திரிசூலத்தை ஏந்திக் கொண்டு கோபமாக வந்த
சிவபெருமானையும் பார்த்து பிருகு முனிவர் சாபமிட்டார்
அதைக் கேட்ட சிவபெருமானும் கோபமுற்றார். ' என்னைப் பார்க்க வரும் முன் முறையாக அனுமதி கேட்காமல், என் வீட்டிற்கு முன்னால் வந்ததும் இல்லாமல் இங்கு வந்து என் அதிகாரத்தையே கேள்வி கேட்கும் நீங்கள் உங்களை பிரும்ம ரிஷி, கற்றறிந்தவர் என்று கூறிக் கொள்கிறீர்களே........ வெட்கமாக இல்லை? கற்றறிந்தவர் என எண்ணும் நீங்கள் நடக்கும் முறை கண்ணியமானதா?' என்று கோபமாகக் கத்தினார்.
அதைக் கேட்ட பிருகு முனிவர் இன்னமும் ஆத்திரம் கொண்டு ' சிவபெருமானே, நான் எதற்காக இங்கு வந்தேன் என்பதை தெரிந்து கொள்ளாமல் என்னை அவமதித்து விட்டீர்கள். நீங்கள் பார்வதி தேவியுடன் பேசிக் கொண்டு இருந்தால் என்ன? ஒரு நிமிடம் என்னை அழைக்கலாகாதா? நான் அறிவில் சிறந்தவன். பூலோகத்தில் மக்களின் நன்மைக்காக நடைபெறும் ஒரு யாகத்துக்கு அதித்தியாக வருமாறு பெருமையுடன் உம்மை அழைக்க வந்தேன். அதுவும் அந்த யாகத்தை நடத்தி வரும் ரிஷி முனிவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் இங்கு அவர்கள் சார்ப்பில் வந்தேன். ஆனால் நீங்களும் பிரும்மா நடந்து கொண்டதைப் போலவே கண்ணியம் அற்ற முறையில் நடந்து கொண்டு , என்னை உதாசீனம் செய்வதாக நினைத்துக் கொண்டு, அந்த யாகத்தின் பிரதிநிதியாக வந்துள்ள என்னை அவமதித்ததின் மூலம் அந்த யாகத்தை அவமதித்து விட்டீர்கள். நீங்களும் பிரும்மாவைப் போலவே ஸாத்வீக குணத்துடன் நடந்து கொள்ளாமல் யாகப் பிரதிநிதியாக வந்துள்ள என்னை அழிக்க வருவது போல திரிசூலத்தை ஏந்தி வந்ததின் மூலம் கோபத்தை முன் வைத்து அநாகரீகமாக நடந்து கொண்டு விட்டீர்கள். ஆகவே நான் இப்போது உமக்கு சாபமிடுகிறேன், கேளுங்கள். எந்த மக்களின் நன்மையைக் கருதி யாகம் நடைபெறுகிறதோ, அந்த மக்களின் பிரதிநிதியாக வந்துள்ள என்னை நீங்கள் அவமதித்து விட்டதினால் பூமியில் உமக்கு இனி சிவன் உருவில் உருவ பூஜை செய்ய மாட்டார்கள். குத்துக் கல்லைப் போல பார்வதியுடன் அமர்ந்து கொண்டு என்னை எப்போது அழைக்க விரும்பவில்லையோ அப்போதே உங்களின் கல் போன்ற குணம் எனக்குத் தெரிந்து விட்டது. ஆகவே இனி பூமியில் உள்ள மக்கள் உங்களை ஒரு குத்துக் கல்லைப் போன்ற உருவில் வழிபடட்டும்' என்று சாபமிட்டு விட்டு அங்கிருந்து கோபமாகக் கிளம்பி வைகுண்டத்துக்கு விஷ்ணுவைக் காணச் சென்றார்.
அதைக் கேட்ட பிருகு முனிவர் இன்னமும் ஆத்திரம் கொண்டு ' சிவபெருமானே, நான் எதற்காக இங்கு வந்தேன் என்பதை தெரிந்து கொள்ளாமல் என்னை அவமதித்து விட்டீர்கள். நீங்கள் பார்வதி தேவியுடன் பேசிக் கொண்டு இருந்தால் என்ன? ஒரு நிமிடம் என்னை அழைக்கலாகாதா? நான் அறிவில் சிறந்தவன். பூலோகத்தில் மக்களின் நன்மைக்காக நடைபெறும் ஒரு யாகத்துக்கு அதித்தியாக வருமாறு பெருமையுடன் உம்மை அழைக்க வந்தேன். அதுவும் அந்த யாகத்தை நடத்தி வரும் ரிஷி முனிவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் இங்கு அவர்கள் சார்ப்பில் வந்தேன். ஆனால் நீங்களும் பிரும்மா நடந்து கொண்டதைப் போலவே கண்ணியம் அற்ற முறையில் நடந்து கொண்டு , என்னை உதாசீனம் செய்வதாக நினைத்துக் கொண்டு, அந்த யாகத்தின் பிரதிநிதியாக வந்துள்ள என்னை அவமதித்ததின் மூலம் அந்த யாகத்தை அவமதித்து விட்டீர்கள். நீங்களும் பிரும்மாவைப் போலவே ஸாத்வீக குணத்துடன் நடந்து கொள்ளாமல் யாகப் பிரதிநிதியாக வந்துள்ள என்னை அழிக்க வருவது போல திரிசூலத்தை ஏந்தி வந்ததின் மூலம் கோபத்தை முன் வைத்து அநாகரீகமாக நடந்து கொண்டு விட்டீர்கள். ஆகவே நான் இப்போது உமக்கு சாபமிடுகிறேன், கேளுங்கள். எந்த மக்களின் நன்மையைக் கருதி யாகம் நடைபெறுகிறதோ, அந்த மக்களின் பிரதிநிதியாக வந்துள்ள என்னை நீங்கள் அவமதித்து விட்டதினால் பூமியில் உமக்கு இனி சிவன் உருவில் உருவ பூஜை செய்ய மாட்டார்கள். குத்துக் கல்லைப் போல பார்வதியுடன் அமர்ந்து கொண்டு என்னை எப்போது அழைக்க விரும்பவில்லையோ அப்போதே உங்களின் கல் போன்ற குணம் எனக்குத் தெரிந்து விட்டது. ஆகவே இனி பூமியில் உள்ள மக்கள் உங்களை ஒரு குத்துக் கல்லைப் போன்ற உருவில் வழிபடட்டும்' என்று சாபமிட்டு விட்டு அங்கிருந்து கோபமாகக் கிளம்பி வைகுண்டத்துக்கு விஷ்ணுவைக் காணச் சென்றார்.
அந்த சாபத்தை ஏற்றுக் கொண்ட சிவபெருமானோ அவர் செல்லும் முன் அவரிடம் கூறினார் ' குத்துக்கல்லாகவே என்னை மக்கள் வழிபட்டாலும் என்னை சுற்றித்தான் இந்த பிரபஞ்சமே இயங்கும். நானே சக்தியுடன் கூடிய பரப்பிரும்மன். ஆகவே இந்த உலகில் உள்ளவர்கள் என்னில் துவங்கி என்னையே அடைவார்கள். பரப்பிரும்மனான என்னை சிவனும் பார்வதியுமாக உள்ள தத்துவத்தில்தான் இனி மக்கள் பார்க்க முடியும். எந்த நிலையிலும் சிவசக்தி என்ற தத்துவமான எங்களை தனியே பிரித்தே பார்க்க முடியாது' என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இதனால்தான் சிவபெருமான் சிவலிங்க உருவில் பூஉலகில் தோற்றம் தரத் துவங்கினார். சிவலிங்கத் தத்துவம் என்ன என்றால் சிவபெருமான் பூமியிலே அமர்ந்துள்ள நிலையில் அவரை வணங்கி ஆராதிப்பவர்கள் அவர் காலடியிலேயே சரண் அடைவார்கள் என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் பார்வதி தேவி ஆவுடையார் வடிவில் அவர் பாதங்களில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். தான் வசிக்கும் இமயமலையையே ஒரு குத்துக் கல்லைப் போன்ற உருவாக்கி, அதற்குள் சிவபெருமான் வசிக்கத் துவங்க, அந்த மலையை சுற்றி சுற்றி பார்வதி வலம் வரத் துவங்கி சிவபெருமானின் கோபத்தை தணித்து அவரை குளிர்ச்சி அடைய வைக்க அனைத்து பக்கங்களில் இருந்தும் கங்கை நீரை அவரை சுற்றி ஓட வைத்து அந்த நீரை தன் இரு கைகளினாலும் ஒரு அணைப் போல தடுத்து நிறுத்தி வைத்திருந்தபடி அவரை அர்ச்சிக்க அதுவே சிவசக்தி தத்துவ உருவமாக அமைந்தது.
ஆவுடையாரின் ஒரு பக்கத்தில் காணப்படும் நீண்ட பகுதி பார்வதி தேவியின் கைகள் என்றும் அவர் ஆவுடையார் உருவில் அமைத்த கங்கை நீரில் நின்றபடி சிவபெருமானை வணங்கிய நிலையில் உள்ளதினால்தான் அந்த ஆவுடையாரை தாண்டிக் கொண்டு செல்லக் கூடாது என்று சிலர் கூறுவார்கள். வடநாட்டில் இந்தப் பழக்கம் அதிகம் உண்டு. சிவலிங்கத்தை வழிபடும்போது, ஆவுடையாரின் ஒருபுறத்தில் இருந்து இன்னொருபுறம் சென்று விட்டு அதே வழியாக மீண்டும் திரும்பி வந்து விடவேண்டும் என்று இந்தக் காரணம் புரியாமலேயே பல ஆலயங்களில் கூறுவார்கள்.
சிவனை கீழே விழுந்து நமஸ்கரித்து வணங்கும்போதும் ஆவுடையாரின் நீண்ட பகுதியில் தலையைத் தொட்டு அல்லது கைகளால் அதை தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்வதின் மூலம் சிவனை வணங்கும் பார்வதியின் கைகளை வணங்குவதாகவும், அதன் மூலம் சிவனுக்கு ஆராதனை செய்வதாக அர்த்தம் ஆகிறது என்கிறார்கள்.
பிருகு முனிவரின் சாபத்தினால்தான் சிவனும் பார்வதியும் ஒன்றிணைந்துள்ள தத்துவமான லிங்க உருவில் பார்வதியையும் சிவபெருமானையும் மக்கள் பூமியில் வழிபடத் துவங்கினார்கள் என்பதல்ல உண்மை. பிருகு முனிவர் மூலம் தங்களுடைய சிவசக்தி தத்துவத்தை சிவபெருமான்-பார்வதி வெளிக் காட்டினார்கள் என்பதே உண்மை. அதனால்தான் சிவன்-பார்வதி தேவி இருவரும் தனித் தனி உருவங்களில் உள்ள சிலை வடிவில் அவர்களுக்கு ஆலயங்களில் பூஜைகள் நடைபெறுவதில்லை. மாறாக ஒன்று சிவபார்வதி ஒன்றிணைந்துள்ள சிவலிங்கத்துக்கோ அல்லது சிவலிங்கத்துக்கும், பார்வதிக்கும் தனித் தனி சன்னதியிலோ பூஜைகள் செய்கிறார்கள்.
இதனால்தான் சிவபெருமான் சிவலிங்க உருவில் பூஉலகில் தோற்றம் தரத் துவங்கினார். சிவலிங்கத் தத்துவம் என்ன என்றால் சிவபெருமான் பூமியிலே அமர்ந்துள்ள நிலையில் அவரை வணங்கி ஆராதிப்பவர்கள் அவர் காலடியிலேயே சரண் அடைவார்கள் என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் பார்வதி தேவி ஆவுடையார் வடிவில் அவர் பாதங்களில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். தான் வசிக்கும் இமயமலையையே ஒரு குத்துக் கல்லைப் போன்ற உருவாக்கி, அதற்குள் சிவபெருமான் வசிக்கத் துவங்க, அந்த மலையை சுற்றி சுற்றி பார்வதி வலம் வரத் துவங்கி சிவபெருமானின் கோபத்தை தணித்து அவரை குளிர்ச்சி அடைய வைக்க அனைத்து பக்கங்களில் இருந்தும் கங்கை நீரை அவரை சுற்றி ஓட வைத்து அந்த நீரை தன் இரு கைகளினாலும் ஒரு அணைப் போல தடுத்து நிறுத்தி வைத்திருந்தபடி அவரை அர்ச்சிக்க அதுவே சிவசக்தி தத்துவ உருவமாக அமைந்தது.
சிவலிங்கத் தத்துவம்
சிவனை கீழே விழுந்து நமஸ்கரித்து வணங்கும்போதும் ஆவுடையாரின் நீண்ட பகுதியில் தலையைத் தொட்டு அல்லது கைகளால் அதை தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்வதின் மூலம் சிவனை வணங்கும் பார்வதியின் கைகளை வணங்குவதாகவும், அதன் மூலம் சிவனுக்கு ஆராதனை செய்வதாக அர்த்தம் ஆகிறது என்கிறார்கள்.
பிருகு முனிவரின் சாபத்தினால்தான் சிவனும் பார்வதியும் ஒன்றிணைந்துள்ள தத்துவமான லிங்க உருவில் பார்வதியையும் சிவபெருமானையும் மக்கள் பூமியில் வழிபடத் துவங்கினார்கள் என்பதல்ல உண்மை. பிருகு முனிவர் மூலம் தங்களுடைய சிவசக்தி தத்துவத்தை சிவபெருமான்-பார்வதி வெளிக் காட்டினார்கள் என்பதே உண்மை. அதனால்தான் சிவன்-பார்வதி தேவி இருவரும் தனித் தனி உருவங்களில் உள்ள சிலை வடிவில் அவர்களுக்கு ஆலயங்களில் பூஜைகள் நடைபெறுவதில்லை. மாறாக ஒன்று சிவபார்வதி ஒன்றிணைந்துள்ள சிவலிங்கத்துக்கோ அல்லது சிவலிங்கத்துக்கும், பார்வதிக்கும் தனித் தனி சன்னதியிலோ பூஜைகள் செய்கிறார்கள்.
பார்வதி தேவி தானும் தனது நாயகரான சிவபெருமானுக்கு
தனிமையில் அமர்ந்து கொண்டு தினமும் பூஜைகளை செய்கிறாள் .
தனிமையில் அமர்ந்து கொண்டு தினமும் பூஜைகளை செய்கிறாள் .
இந்த தத்துவத்தினால்தான் சில ஆலயங்களில்
பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன.
தனித் தனி சன்னதியில் ஏன் சிவலிங்கத்தையும் பார்வதியையும் வைத்து பூஜிக்கிறார்கள் என்பதின் காரணம் என்னதான் தெய்வமாக இருந்தாலும், மக்கள் தம் இருவரையும் சேர்த்து ஆராதிப்பதைப் போல தனது நாயகனான சிவபெருமானை தானும் பூஜிக்க வேண்டும் என பார்வதி தேவி எண்ணுவதினால்தான் அவளுக்கும் தனி சன்னதிகள் அமையக் காரணமாக இருந்துள்ளன. அந்த நிலையை பார்வதியேதான் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறாள். தனி சன்னதியில் அமர்ந்தவாறு சிவபெருமானை பூஜித்துக் கொண்டு இருக்கும் அவளையும் மக்கள் அதனால்தான் அந்த தனி சன்னதிக்குச் சென்று வணங்குகிறார்கள்.
இப்படியாக சிவபெருமானை லிங்க வடிவில் அவதரிக்கக் காரணமாக இருந்த பிருகு முனிவர் விஷ்ணுவின் மன நிலை எப்படி இருக்குமோ தெரியவில்லையே என்று எண்ணியபடி மனதில் விரக்தியுடன் கிளம்பிச் சென்றார்.
இப்படியாக சிவபெருமானை லிங்க வடிவில் அவதரிக்கக் காரணமாக இருந்த பிருகு முனிவர் விஷ்ணுவின் மன நிலை எப்படி இருக்குமோ தெரியவில்லையே என்று எண்ணியபடி மனதில் விரக்தியுடன் கிளம்பிச் சென்றார்.
.................தொடரும்