Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all 460 articles
Browse latest View live

Village Deities - 9

$
0
0
கிராம தேவதைகள் - 9

படம்:  http://www.pbase.com/neuenhofer/image/140291497
 தமிழ்நாட்டில் ஒரு கிராம தேவதை
ஆலயத்தில் காணப்படும் சுடலை மாடனின் சிலை


[இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'
(Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம
தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப்
பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ]



சீவலப்பேரி சுடலை மாடன் 

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது சீவலப்பேரி எனும் கிராமம். அங்குதான் சுடலை மாடனின் ஆலயமும் உள்ளது.
சுப்பிரமணியர் (முருகன்) பழநிக்குச் சென்று விட்டதும் பார்வதிக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அவள் தனது கணவர் சிவபெருமானிடம் அதை பற்றிக் கூற அவரும் அவளை மரகதக் கல்லினால் ஆன தூண் அருகில் விளக்கில் தீபம் ஏற்றுமாறும், ஆனால் அது எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். அவ்வப்போது எரிம்து கொண்டு இருந்த விளக்கு மங்கத் துவங்க அதன் திரியை சிவபெருமான் பெரியதாக்கிக் கொண்டே இருந்தார். அப்போது அது பார்வதியின் தொடையில் விழ அது ஒரு பெரிய சதைப் பிண்டமாயிற்று. ஆகவே பார்வதி அந்த சதைப் பிண்டத்துக்கு உயிர் கொடுக்குமாறு பிரும்மாவை வேண்டிக் கொள்ள அவரும் அதை ஒரு குழந்தை ஆக்கினார். அந்தக் குழந்தைக்கு சுடலை என்ற பெயர் வைத்தார்கள். அது பெரியவனானதும் பசி பசி என எப்போதும் பசியால் துடித்து ஸ்மசானத்தில் இருந்த உடல்களைத் தின்னத் துவங்கியது. ஒரு நாள் அதன் உடலில் பிண வாசனை அடிப்பதைக் கண்ட பார்வதி அதைப் பற்றி சிவனிடம் கூற கோபமுற்ற அவர் அதை கைலாசத்தில் இருந்து அனுப்பிவிடுமாறுக் கூறினார். ஆகவே பார்வதி அதனுடன் இருபத்தி ஒரு பிடி சமைத்த உணவை தந்து வனப் பேச்சியை அழைத்து அதை அங்கிருந்து அழைத்துப் போய் விடுமாறு கூறினாள்.
அந்தக் குழந்தையும் தாமிரபரணியின் அருகில் இருந்த சீவலப்பேரியை அடைந்தது. சுடலைக்கு அந்த இடம் மிகவும் பிடித்து இருந்தது. அங்கு சென்றதும் மீண்டும் அந்த குழந்தைக்கு பசி எடுக்க அங்கு வந்த மசானம் என்ற ஆட்டு இடையனிடம் அவன் கொண்டு வந்த ஒரு குறிப்பிட்ட ஆட்டின் பாலைக் கறந்து தருமாறு கேட்க, மசானமோ அது பால் தர முடியாத மலடி ஆடு என்றான். சுடலை விடவில்லை அதன் பாலைக் கறக்குமாறுக் கூற மசானமும் ஆட்டின் பாலைக் கறக்கத் துவங்க மலட்டு ஆடு நிறைய பாலை தந்ததும் அதை அந்த குழந்தை குடித்தது. அதன் பின்னர் ஆட்டு இடையன் மசானத்தின் நாக்கில் சுடலை மாடன் ஒரு யந்திரம் வரைந்தார். மேலும் அது முதல் மசானம் எப்போது அழைத்தாலும் தான் வந்து அவருக்கு உதவுவதாகக் கூறி அனுப்பினார்.


மசானமும் சிவகிரிக்குச் சென்று அங்கு யோகக் கலையையும் ஆன்மீகத்தையும் கற்றறிந்து வந்தார். பல வருடங்களுக்குப் பிறகு சுடலை இருந்த மயானத்துக்கு வந்த மசானம் சுடலை மாடன் இருந்த இடத்தில் சுடலை மாடனுக்கு பதிலாக ஒரு சிவலிங்கமும் இருந்ததைக் கண்டார். அதைக் கேள்விப்பட்ட மக்கள் மசானத்தை வள குரு சந்நியாசி என அழைத்து அவரையே அங்கு பூசாரியாக இருக்குமாறு கூறினார்கள். அது முதல் மசானத்தின் சந்ததியினர் சுடலை மாறனை வழிபடத் துவங்கினார்கள். முதலில் அவர்கள் சிவலிங்கத்தையே வணங்கி வந்தாலும் அதன் பின் சுடலையின் உருவத்தில் நான்கு கைகளை அமைத்து அதை வழிபட்டனர். அது மட்டும் அல்ல அவர்கள் அங்கு வனப் பேச்சி மற்றும் பிரும்ம ரிஷியையும் பிரதிஷ்டை செய்து அவர்களையும் வணங்கினார்கள். அந்த ஆலயத்தின் வெளியில் பிரும்மா சதிக்கு உருவம் தந்த புதிய சாமியும் உள்ளார். அந்த சிலைக்குப் பின்னால் கல்லில் முண்ட சாமி எனும் தலை இல்லாத உருவச் சிலை உள்ளது. சுடலை மாடனின் ஆலயத்தில் இருந்து அரை கிலோ தொலைவில் வள குரு சன்யாசியின் ஆலயமும் உள்ளது. அதில் வள குரு சன்யாசி லிங்க உருவில் உள்ளார். அவர் இறந்ததும் அவரை அங்கு சமாதி செய்தார்கள்.
தாமரபரணி ஆற்றில் இருந்து எடுத்து வரப்படும் நீரினால் இரு முறை சுடலை மாடனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். சுடலை மாடனுக்கு பிரசாதமாக படைப்பதில் ஒரு பகுதியை வள குரு சன்யாசியின் ஆலயத்துக்கும் எடுத்துச் செல்கிறார்கள். ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன என்றால் சுடலை மாடனின் ஆலயத்தில் தரப்படும் பிரசாதம் அவரது ஆலயத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டில் இருந்து கொண்டு வரப்படும் மண்ணாகும் . அது அனைவரது குறைகளையும், நோய்களையும் நீக்குவதாக நம்புகிறார்கள். தைபூச நாளன்று வள குரு சன்யாசியின் ஆலயத்தில் பொங்கலை பிரசாதமாகப் படைத்து அதை அனைவருக்கும் விநியோகம் செய்கிறார்கள்.
பங்குனி மாதத்தில் (மார்ச்- ஏப்ரல் மாதங்கள்) சுடலை மாடன் ஆலயத்தில் பெரிய விழா நடைபெறும். அப்போது அவருக்கு வள குரு சன்யாசியின் ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்படும் ஆடையை போடுகிறார்கள். சுடலை மாடனின் ஆலயத்துக்கு தினமும் வந்து வள குரு சன்யாசியே சுடலை மாடனுக்கு பூஜை செய்வதாக நம்புகிறார்கள். அந்த விழாவின்போது அங்குள்ள சுடலை மாடன் சக்தி பெரும் சாமியாடி அருகில் உள்ள பிராமணர்களை தகனம் செய்யும் சுடுகாட்டிற்குச் சென்று பூமியைத் தோண்டி ஏதாவது பிணம் கிடைக்குமா எனப் பார்ப்பார். கிடைக்கவில்லை என்றால் வெறும் கையுடன் திரும்புவார். அந்த ஆலயத்தில் பலியாக தரப்படும் கருப்பு நிற மாடுகளின் ரத்தத்தை சாமியாடி குடிப்பார். அவற்றைத் தவிர அங்கு பலியிடப்படும் மற்ற ஆடுகளின் ரத்தத்தையும் அவர் குடிப்பார். முட்டை, இறைச்சி கலந்த இருபத்தி ஒரு பிடி சாதம் சமைக்கப்பட்டு சுடலை மாடனுக்கு படைக்கப்படும். அதைத் தவிர சிகரெட் சாராயம் போன்றவற்றையும் சுடலை மாடனுக்கு தருகிறார்கள். அதன் பின்னர் அனைவரது நலனுக்கும் வேண்டிக் கொள்ளும் மக்கள் அங்கிருந்து கிளம்பிச் செல்வார்கள்.

----------------------
 பின்குறிப்பு:
சீவலப்பேரி கிராமம் திருநெல்வேலியில் உள்ள புதுக்கோட்டை தாலுக்காவில் உள்ளது. சீவலப்பேரி புதுக்கோட்டையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுடலை மாடன் தமது கிராமத்தைப் பாதுகாக்கும் கடவுள் என்றே மக்கள் நினைக்கிறார்கள். சுடலை மாடன் ஆலயங்கள் பெரும்பாலும் கிராம எல்லைகளில்தான் உள்ளன. நகரத் தானி பெரும் தொலைவில் உள்ள  பல கிராமங்களில் ஒரு துணையோ அல்லது பெரிய குத்துக் கல்லையோ  சுடலை மாடன் என அழைத்து வழிபட்டாலும் வேறு பல  கிராமங்களில்  சுடலை மாடன்  சிலை வடிவில் காட்சி அளிக்கிறார். - சாந்திப்பிரியா 

Village Deities - 10

$
0
0
கிராம தேவதைகள் - 10 

 தமிழ்நாட்டில் தூத்துக்குடியில்   ஒரு 
கிராம தேவதை  ஆலயத்தில் காணப்படும் சிலை


கலையாற் குறிச்சி  கூடமுடையார்

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது  கலையாற் குறிச்சி  எனும் கிராமம். அங்கு  அர்ஜுனா மற்றும் சரஸ்வதி நதிகள் கலக்கின்றன. அவை சதுரகிரி மலையில் உற்பத்தியாகி அங்கு வருகின்றன.  சதுரகிரி மலையில் ஆடுமாடு மேய்ப்பவர்கள் பலர் உண்டு.  ஒரு முறை சிவபெருமான் அவர்களுடன் விளையாட நினைத்தார். ஆகவே அவர் ஒரு கன்று போல உருமாறி அனைத்து மாடுகளின் மடியில் இருந்தும் பாலைக் குடித்து விட்டார். அந்த இடையர்களுக்கு மாடுகளின் பால் வற்றி விட்டதின் காரணம் தெரியவில்லை. குழம்பினார்கள் . ஆகவே என்ன நடக்கின்றது என அவர்கள் கண்காணிக்கத் துவங்கினார்கள். ஒருநாள் அந்தக் கன்று அனைத்து மாடுகளின் பாலையும் குடிப்பதைக் கண்டு பிடித்தனர். அதைப் பிடிக்கத் துரத்தினார்கள். சிவபெருமான் ஓடிப் போய் ஒரு சாப்பாட்டு பானையில் ஒளிந்து கொண்டார். வருணனை பெரும் மழையை பொழியச் சொன்னார். அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்தப் பானை மிதந்து சென்று கயலாற் குறிச்சியில்  ஓடிய அர்ஜுனா நதியில் உடைந்து விழ சிவன் அங்கிருந்த மண்ணில் ஒளிந்து கொண்டார். அந்த இடத்தின் அருகில் கோவில்பட்டி உள்ளது. அங்கு யாதவர்கள் அதிகம் உண்டு. மாடு மேய்ப்பது அவர்களின் தொழில்.  ஒரு முறை ஒரு யாதவன் அந்த வழியாக மாட்டை ஓட்டிக் கொண்டு சிவபெருமான் மறைந்து கொண்டு இருந்த இடத்தின் வழியே செல்கையில்  சிவபெருமான் அவன் காலை இடறி விட்டார். அது தினமும் தொடர அந்த இடையன் தனது நண்பரான முத்துக் கருப்ப செட்டியாரிடம் அது பற்றிக் கூறினார். அவர்கள் இருவரும் அந்த இடத்துக்குச் சென்று அங்கு தோண்டிப் பார்க்க அதில் இருந்து முதலில் பாலும் அதன் பிறகு ரத்தமும் வர பயந்து போனவர்கள் குழியை ஒரு கூடையினால் மூடிவிட்டு வந்து விட்டனர். சில நாட்கள் பொறுத்து அவர்கள் மீண்டும் அந்த இடத்திற்குச் சென்று மூடி விட்டு வந்த இடத்தில் இருந்த கூடையை திறந்துப் பார்க்க அங்கு சிவலிங்கம் ஒன்று இருந்தது.  அப்போது செட்டியாருக்கு சாமி வந்து தான்தான் அந்த இடத்தில உள்ள கூடை லிங்கம் எனவும் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடுமாறும் கூற அவர்கள் கிராமத்திற்கு ஓடிச் சென்று அந்த செய்தியை  அனைவரிடமும் கூற அவர்கள் அதை நம்ப மறுத்தனர். ஆகவே கோபமடைந்த சிவன் அனைத்து மாடுகளையும் கல்லாக்கி விட்டார். பயந்து போனவர்கள் அந்த லிங்கம் கிடைத்த இடத்திற்குச் சென்று தம்மை மன்னித்து விடுமாறு வேண்டிக் கொண்டார்கள். உடனே கல்லான மாடுகள் திரும்பவும்  உயிர் பெற்றன.  ஆகவே மக்கள் அங்கு சிவலிங்கத்துக்கு ஒரு ஆலயம் அமைத்து அதை கூடமூடையான் என அழைத்து வழிபடலானார்கள்.  இன்று அந்த செட்டியாரின் வம்சாவளியினரே அந்த ஆலயத்தின் பூசாரிகளாக உள்ளனர்.
சில காலத்திற்குப் பின்னால் கோவில்பட்டியை சேர்ந்த சிலர் அந்த ஆலயம் கட்டியவர்களுக்கு தொந்தரவு தரத் துவங்கினார்கள். அவர்கள் கிராமத்தில் இருந்தவர்களை துரத்தியடித்தனர். ஆகவே சிவன் அந்த வெள்ளம் ஓடிய  நதியின் மத்தியில் ஒரு பாதையை உருவாக்க அங்கிருந்து சென்றவர்கள் அடுத்த கரையை அடைந்தனர். அந்த புதிய இடத்துக்குச் சென்று கூடமுடையான் சிவனுக்கு ஆலயம் எழுப்பினார்கள். சிவன் கிழக்கு நோக்கி நதியைப்  பார்த்திருக்க அவர்கள் வடக்கு நோக்கி பார்த்தபடி இருக்குமாறு  ஐயனாரையும், புஷ்கலா மற்றும் பூர்ணாவையும் பிரதிஷ்டை செய்தார்கள்.  அந்த ஐயனாரை கூடமுடைய ஐயனார் என அழைக்கின்றார்கள். ஐயனாரைத் தவிர சின்ன கருப்பு, பெரியகருப்பு, ஒத்தை கருப்பச்சாமி, லாடன் , சன்யாசி , காளி, வேட்டை அருப்புச்சாமி மற்றும் அக்னி கருப்பச்சாமிகளின் சிலைகளும் அங்கு வைக்கப்பட்டு உள்ளன.

பெங்களூரில் முன்னர் கிராமமாக இருந்த 
இடத்தில் காணப்படும் கிராம தேவதை ஆலயத்து சிலை 

வாயிலில் செட்டியார் முத்தையா சிலை  வடிவில் உள்ளார். அவரே அந்த ஆலயத்தின் பாதுகாவலர். அவரைப் பற்றிய அற்புதமான  கதை இது.  அந்த கிராமத்தின் அருகில் இருந்த இன்னொரு ஊரான செத்தூர் எனும் ஊரில் வாழ்ந்து வந்தவர் இளைஞர் முத்தையா.    ஒரு முறை அவர் அந்த நாட்டு அரசியை காதலித்து  கடத்திக் கொண்டு போய் விட அவனை துரத்திப் பிடித்தார் மன்னர். அவனை சதுரகிரி மலை மீது சிரச்சேதம் செய்தார். ஆகவே அது முதல் தினமும் அந்த செட்டியாரின் ஆவி இரவு நேரத்தில் அந்த அரசியை கடத்திச் சென்றுவிட்டு விடியற்காலை அவளை திரும்பக் கொண்டு வந்து விட்டு விடும். ஆகவே அதை யாராவது தடுத்து நிறுத்தினால் முந்நூறு பொன் காசுகள் தருவதாக மன்னன் அறிவித்தார். ஆலய பூசாரியான முத்துக் கருப்பன் செட்டியார் அந்த ஆவியிடம் பேசி அந்த ஆலயத்தில் கடைசியாக வந்து வணங்கப்படும் தெய்வமாக வந்து இருக்குமாறு கூற அந்த ஆவியும் அதற்கு ஒப்புக் கொண்டது. மன்னன் தான் அறிவித்தபடி முந்நூறு பொற்காசுகளை ஆலய பூசாரியான செட்டியாரிடம் இனாமாகத் தந்தப் பின் செட்டியாரை கொன்று விட்டு அதை திருப்பி எடுத்து வருமாறு கூறி ஆறு சிப்பாய்களை அனுப்பினார். அதை அறிந்து கொண்ட செட்டியார் மந்திரத்தினால் அவர்களை பிடித்து வைக்க மன்னன் வந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டார். அது முதல் முதல் சிவராத்திரி அன்று செய்யப்படும் முதல் பூஜை  அந்த மன்னனின் பெயரிலேயே  செய்யப்படுகின்றது.
அந்த கடவுளை வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிவராத்ரி அன்று  மூன்று நாட்கள் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ஆடி அம்மாவாசையில் இரண்டு நாட்கள் விழா நடைபெறும். அந்த கிராமத்தில் இருந்து வெளியேறி பல இடங்களுக்கும் சென்று வசிக்கும் மக்கள் அந்த விழா காலங்களில் தமது மாட்டு வண்டியில் ஏறி அங்கு வந்து அவரை வணங்குகின்றனர். சுமார் ஐநூறு மாட்டு வண்டிகளில் வந்து அங்கு நடக்கும் விழாவில் மக்கள் பங்கேற்கின்றார்கள்.

------------------
பின் குறிப்பு :
கலையாற் குறிச்சி  கிராமம் சிவகாசியில் இருந்து சுமார் 12 கிலோ தொலைவில் உள்ளது. கலையாற் குறிச்சியில் கூடமுடையார் ஆலயத்தைத் தவிர ஸ்ரீ சக்தி மாரி அம்மன்   உள்ளது.  இந்த ஆலயத்துக்குச் செல்பவர்கள் 21 நாட்கள் விரதம் இருந்து பொங்கல் பானைப் படைப்பார்கள். அந்த விழாவின் சிறப்பு நிகழ்சியாக ஆடலும் பாடலும், வில்லுபாட்டு போன்ற நிகழ்சிகளும்  நடக்கும் - சாந்திப்பிரியா 

Village Deities - 11

$
0
0
கிராம தேவதைகள் - 11
 
 படம்:http://www.pbase.com/neuenhofer/image/140990329
தமிழ்நாட்டில் சேலத்தில்  ஒரு கிராம தேவதை  ஆலயத்தில் காணப்படும் 
கருப்பண்ணசாமியின் சிலை

[இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'
(Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம
தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப்
பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ]



காட்டுப் பாளையம் 
மலைக் கருப்பச்சாமி

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]


ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆண்டியூர் கிராமத்தின் அருகில் உள்ள மலைப் பகுதியில் உள்ளதே காட்டுப் பாளையம். ஒரு காலத்தில் அங்கு வெள்ளாய கௌண்டர் என்ற செல்வந்தர் வசித்து வந்தார். அவர் தெய்வ பக்தி மிகுந்தவர். ஆகவே காட்டில் சென்று யோகா பயிற்சிகளை செய்து விட்டு திரும்புவார். ஒரு நாள் அவர் காட்டில் நடந்து கொண்டு இருந்தபோது உருவம் தெரியாத எதோ ஒரு சக்தி தான் திரும்பிச் செல்வதை தடுத்து நிறுத்துவது போல உணர்ந்தார். எப்படியோ சமாளித்து அதனிடம் இருந்து தப்பி வந்தார். ஆனால் அது தினமும் நடக்கத் துவங்க அங்கு எதோ ஒரு இனம் புரியாத தெய்வம் உலாவுவதாக எண்ணி அதை கிராமத்தினரிடம் கூறினார். அங்கிருந்து சிறிது களிமண்ணை எடுத்து வந்து அதை கருப்பு எனும் தேவதையின் சிலையாக வடிவமைத்து அதை பூஜித்து வரலானார். தினமும் அந்த இடத்துக்குச் சென்று உணவும் தூக்கமும் இல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். அது முதல் அவர் கிராமத்தினருக்கு குறி கூறவும் ஆரம்பித்தார். அதன் பின் சில காலத்தில் அவர் மரணம் அடைந்தார். அவரை அங்கேயே புதைத்து அவருக்கும் ஒரு சிலை செய்து அதை தவசியப்பன் எனப் பெயரிட்டு அவரை தெய்வமாகவே வணங்கி வரலானார்கள். அது போல இன்னொரு இடத்திலும் முனி இருப்பதாக நம்பிய கிராமத்தினர் முனியப்பருக்கும் ஆலயம் அமைத்தனர்.
உள்ளூர் கிராமத்தினர் அந்தக் காட்டில் தவசியப்பனும் மற்ற தேவதைகளும் தவம் இருப்பதாகவும், அதனால் அவர்களுக்கு தொந்தரவு தரக் கூடாது என்பதற்காக அந்த கிராமத்தில் உள்ள அனைத்து ஆலயத்திலும் மணி அடிப்பதை நிறுத்தினார்கள். தவசியப்பன் ஆலயத்தில் அன்னப்பாறை என்ற ஒரு பாறை உள்ளது. அந்த ஆலயத்து பூசாரிகள் காட்டில் சென்று சில மூலிகைகளைக் கொண்டு வந்து அந்த அன்னப்பாறை மீது வைத்து அறைத்து சாறு எடுப்பார்கள். அது பல வியாதிகளை குணப்படுத்தும், முக்கியமாக பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்தது என்பதினால் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அதை பக்தர்களுக்குத் தருவார்கள். ஆகவே அந்த தினங்களில் கூட்டம் அதிகமாக வருகின்றது. மக்கள் தவசியப்பன் ஆலயத்துக்கு வந்து செப்பு, தாமிரம் மற்றும் தகரத்தில் செய்த யந்திரங்களை தந்து விட்டுச் செல்வார்கள். அதை அங்குள்ள பூசாரி ஆலயத்தின் சிலைக்குப் பின்னல் வைத்து விட்டு ஐந்து வாரங்களுக்குப் பிறகு ஒரு கயிற்றுடன் சேர்த்துத் தருவார். அதை பக்தர்கள் தாயத்து போல கழுத்தில் அணிந்து கொள்வார்கள். பில்லி சூனியம் போன்ற தீய ஆவிகளினால் பிடிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து சில நாட்கள் தங்க அவர்கள் குணம் பெறுகிறார்கள்.
அந்த மூன்று ஆலயங்களும் ஒரே இடத்தில் இல்லை என்றாலும் அவை மூன்றுமே ஒரே கடவுள் என்றே கிராமத்தினர் கருதுகிறார்கள்.தவசியப்பருக்கு பொங்கல் படைகின்றார்கள். சித்திரை மாத (ஏப்ரல் மற்றும் மே மாதங்கள்) மூன்றாம் செய்வாய் கிழமையில் இரவு வேளைகளிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. அடுத்த நாள் மலை கருப்பசாமிக்கு பலிகள் தரப்படுகின்றன. அப்போது ஆலயங்களில் மணி சப்தம் எழுப்பப்படும். மேளங்கள் முழங்கும்.
-----------------------------------
பின்குறிப்பு :-
காட்டுப்பாளையம் மிக செழிப்பான பூமியாகும். திருப்பூர் ரயில் நிலையத்துக்குச் சென்றே காட்டுப் பாளையத்திற்கு செல்ல வேண்டும். அல்லது ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர் மற்றும் பிற இடங்களில் இருந்து பேருந்துகளில் செல்லலாம்.காட்டுப்பாளையத்தின்  அருகில்  சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில்  வெங்கட்ரமணசாமி  மற்றும்  பொன்காளியம்மன் என்ற இரண்டு ஆலயங்கள் உள்ளன.- -சாந்திப்பிரியா 

Village Deities - 12

$
0
0
கிராம தேவதைகள் - 12

 படம்:http://www.pbase.com/neuenhofer/image/121939169
தமிழ்நாட்டில் சேலத்தில்  ஒரு கிராம தேவதை  ஆலயத்தில் காணப்படும் 
கருப்பண்ணசாமியின் ஒரு  சிலை

[இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'
(Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம
தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப்
பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ]


வீ.களப்பட்டி 
வேண்டிமுத்துக் கருப்பு 

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
 
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ளதே வீ.களப்பட்டி என்கின்ற சிறிய கிராமம். அங்கு ஒரு பெரிய ஏரியை மக்கள் உருவாக்கி இருந்தனர். அங்கு இருந்த செட்டிநாட்டை சேர்ந்த வேண்டிமுத்து என்பவர் மலையாளக் கருப்பை வணங்கி வந்தார். அவர் மறைந்தப் பின் அவருடைய சந்ததியினர் அவரை ( கருப்பை) கவனிக்கவில்லை என்பதினால் கருப்பு அவர்களுக்கு தொல்லை தரத் துவங்கினார். ஆகவே அவர்கள் ஒரு மலையாள மந்திரவாதியை அழைத்து அவரை கட்டி வைத்தனர். ஆனால் அவர் அதை உடைத்துக் கொண்டு வெளியேறி வீ.களப்பட்டியை அடைந்தார். வீ.களப்பட்டியில் அந்த நேரத்தில் அந்த ஏரி உடைந்தது. அதை கஷ்டப்பட்டு கிராமத்தினர் சீர்படுத்தினர். ஆனால் அங்கு வந்த கருப்பு அதை மீண்டும் உடைத்து விட்டார். மீண்டும் மீண்டும் உடைப்பை சரி செய்தாலும் அதை அவர் உடைக்கத் துவங்க அது இரண்டு நாட்கள் தொடர்ந்தது. ஆகவே அந்த கிராமத்தினர் என்ன நடக்கின்றது என கண்காணித்தனர். அவர்கள் அதை செய்வது கருப்பரே என்பதைக் கண்டு பிடித்தனர். அவரோ அவர்களிடம் தான் ஒரு கடவுள் எனவும் தனக்கு ஆடுகளை பலி தந்து வழிபட்டால் ஏரியைக் காப்பேன் என்றும் கூற அவர்களும் அவருக்கு ஆலயம் எழுப்பி வணங்கினார். அதன் பின் இன்றுவரை அந்த ஏரி உடையவில்லை. வேண்டிமுத்து கருப்பரை வணங்கி வந்ததினால் அந்த தேவதையை அவர்கள் வேண்டிமுத்துக் கருப்பு என அழைக்கலாயினர். அவர் ஆலயத்தின் பின்னால் பெரிய ஆல மரம் உள்ளது. அந்த ஊரில் உள்ளவர்கள் புதியதாக தாம் எது செய்தாலும் கறுப்பரின் அனுமதி பெற்றே அதை துவக்குவார்கள். பதில் கேட்டு காத்திருப்பவர்கள் பல்லி கத்தினால் அதை அவருடைய சம்மதம் என எடுத்துக் கொள்கின்றனர். மாசி மாதத்தில் மூன்று நாட்கள் காலரி (மைதானம் என்பது பொருள்- சாந்திப்பிரியா) எனும் பெரிய விழா நடைபெறுகின்றது.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ளதே வீ.களப்பட்டி என்கின்ற சிறிய கிராமம். அங்கு ஒரு பெரிய ஏரியை மக்கள் உருவாக்கி இருந்தனர். அங்கு இருந்த செட்டிநாட்டை சேர்ந்த வேண்டிமுத்து என்பவர் மலையாளக் கருப்பை வணங்கி வந்தார். அவர் மறைந்தப் பின் அவருடைய சந்ததியினர் அவரை ( கருப்பை) கவனிக்கவில்லை என்பதினால் கருப்பு அவர்களுக்கு தொல்லை தரத் துவங்கினார். ஆகவே அவர்கள் ஒரு மலையாள மந்திரவாதியை அழைத்து அவரை கட்டி வைத்தனர். ஆனால் அவர் அதை உடைத்துக் கொண்டு வெளியேறி வீ.களப்பட்டியை அடைந்தார். வீ.களப்பட்டியில் அந்த நேரத்தில் அந்த ஏரி உடைந்தது. அதை கஷ்டப்பட்டு கிராமத்தினர் சீர்படுத்தினர். ஆனால் அங்கு வந்த கருப்பு அதை மீண்டும் உடைத்து விட்டார். மீண்டும் மீண்டும் உடைப்பை சரி செய்தாலும் அதை அவர் உடைக்கத் துவங்க அந்த கிராமத்தினர் என்ன நடக்கின்றது என கண்காணித்தனர். அவர்கள் கருப்பை கண்டு பிடித்தனர். அவரோ அவர்களிடம் தான் ஒரு கடவுள் எனவும் தனக்கு ஆலயம் அமைத்து வழிபட்டால் ஊரைக் காப்பேன் என்றும் கூற அவர்களும் அவருக்கு ஆலயம் எழுப்பி வணங்கினார். அதன் பின் இன்றுவரை அந்த ஏரி உடையவில்லை. அவர் ஆலயத்தின் பின்னால் பெரிய ஆல மரம் உள்ளது. அந்த ஊரில் உள்ளவர்கள் புதியதாக தாம் எது செய்தாலும் கறுப்பரின் அனுமதி பெற்றே அதை துவக்குவார்கள். பதில் கேட்டு காத்திருப்பவர்கள் பல்லி கத்தினால் அதை அவருடைய சம்மதம் என எடுத்துக் கொள்கின்றனர். மாசி மாதத்தில் மூன்று நாட்கள் காலரி விழா நடை பெறுகின்றது. 

Village Deities - 13

$
0
0
கிராம தேவதைகள் - 13
 
ஒரு கிராம தேவதை  ஆலயத்தில்மரத்தில் கட்டப்பட்டு 
உள்ள  குழந்தைகளின் தொட்டில்கள் 


பூதாங்குடி 
தீ பாய்ந்த நாச்சியார்
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
 
கடலூரில் உள்ள வடலூர் பகுதியின் அருகில் உள்ளது பூதாங்குடி கிராமம். இந்த ஊர் செட்டியார்கள் அதிகம் வாழும் இடம். அவர்கள் சோழ மன்னனின் படை வீரர்களாக இருந்தவர்கள். நாடு போர் இன்றி அமைதியாக இருக்கும் காலங்களில் அவர்களில் பெரும்பாலோனர் விவசாயம் செய்தும் காடுகளில் சென்று வேட்டை ஆடுவதையும் தொழிலாகக் கொண்டு இருந்தனர். ஒரு முறை செட்டியார் ஒருவர் காட்டில் வேட்டை ஆடிக்கொண்டு இருந்தபோது அழுது கொண்டு இருந்த அழகான சிறு பெண்ணைக் கண்டனர். ஆகவே அவளை கிராமத்திற்கு அழைத்து வந்து தமது பெண்ணாகவே அவளை வளர்த்து வந்தார். நாளடைவில் அவளை வளர்த்து வந்த செட்டியார் மரணம் அடைய அவள் தன்னையும் அவருடன் சேர்த்து எரித்து விடுமாறுக் கூறினாள். எலுமிச்சை, தேங்காய் பின்னிய பாய் மற்றும் வெற்றிலையை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டு அவர் சிதையில் தானும் விழ அந்த சீதை முழுவதும் எரிந்தப் பின்னும் அவள் எடுத்துச் சென்ற எந்த பொருளும் எரிந்து போகவில்லை . ஆகவே அவள் தெய்வமாகவே இருந்து இருக்க வேண்டும் எனக் கருதிய மக்கள் அவளை தம்மைக் காப்பவளாகக் கருதி குலதெய்வமாக வணங்கலாயினர். அவளது ஆலயத்தின் அருகில் ஏர் அழிஞ்சி எனும் அபூர்வமான மரம் ஒன்று உள்ளது. குழந்தை இல்லாதவர்கள் அந்த மரத்தின் மீது தூளி ஒன்றைக் கட்டி விட்டு வந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. அப்படி பிறக்கும் குழந்தைகளின் முதல் தலை முடியை அவளுக்கு காணிக்கையாகக் கொடுப்பார்கள். அவளை சீதையின் அவதாரம் எனக் கருதுகிறார்கள். அவள் ஆலயத்தில் ராமருடைய பாதத்தைத் சுற்றி இருக்குமாறு விஷ்ணுவின் சக்கரம், ஐயப்பன், நவக்கிரகங்கள் என அனைவரது சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
மாசி மகத்தில் அங்கு வருகைத் தரும் ஸ்ரீ முஷ்ணத்து பூவராகவ ஸ்வாமிகள் கடல் கரையில் குளிக்க வரும்போது அந்த ஆலயத்தில்தான் வந்து தங்குவார். வெள்ளிக் கிழமைகளிலும் நவராத்தரியிலும் விசேஷமாக பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்து அவளை வணங்கியப் பின் தமது பயணத்தை தொடர்வார்கள். புதிய வண்டி வாங்குபவர்களும் அங்கு வண்டியை எடுத்து வந்து பூஜிக்கிறார்கள் .



பின் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் உள்ள செந்தியாத் தோப்பு எனும் இடத்தில் உள்ளதே பூதாங்குடி எனும் இந்த கிராமம். இது கடலூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர்
இந்த ஊரை 11 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னனான ராஜேந்திரன் என்பவர் நிறுவியதாகக் கருதுகிறார்கள்.-சாந்திப்பிரியா

Village Deities - 14

$
0
0
கிராம தேவதைகள் - 14

கும்பகோணத்து அருகில் ஒரு கிராம தேவதை  
ஆலயத்தில் காணப்படும் சிலைகள் 
(படம் நன்றி:www.indiamike.com  )



வத்தலக் குண்டு இடுமலை மகாலிங்க மாயக் கருப்பு

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது வத்தலக் குண்டு எனும் கிராமம். அங்குள்ள ஆலயத்தில் உள்ள மாயக் கருப்பு முதலில் தேனீ மாவட்டத்தில் உள்ள எட்டூர் கொட்டக் குடி என்ற கிராமத்தில் இருந்தவர் . அவரை அந்த ஊரில் இருந்தவர்கள் வணங்கி வந்தாலும் அவரை சரி வர வணங்கவில்லை என்ற கோபத்தினால்  அவர் அவர்களுக்குப் பல தொல்லைகளைத் தந்தார். ஆகவே கோபமுற்ற மக்கள் அவரையும் அவரை சார்ந்த இருபத்தி ஒரு சிறு கடவுட்களையும் , அதாவது சின்னக் கருப்பு, முன்னோடி கருப்பு, கழு உதயான், கனவே கருப்பு, அலத்திக்காரி, போன்றவர்களை ஒரு சிறிய பெட்டியில் வைத்து மூடி நதியில் தூக்கி எறிந்து விட்டார்கள்.  நதியில் மிதந்து வந்த அதை பார்த்த கட்டக்காமன்படியை சேர்ந்த ஒரு பிராமணன் அதை தனது வீட்டிற்கு எடுத்து வந்தார். அன்று இரவு அதில் இருந்து கலகல என்ற சப்தம் கேட்டது. அந்த ஓசையை எழுப்பிய மாயக் கருப்பு அவரிடம் தான்  மிருகங்களின்  ரத்தத்தைக் குடிப்பவர்  என்பதினால்  தம்மை மலை மீது உள்ள நதிப் பக்கம் வைத்து விடுமாறும் கூறினார்.  அதனால் அந்த பிராமணரும்  அந்தக் கூடையை  ஜாக்கிரதையாக எடுத்துப் போய் மாயக் கருப்பை  மலை மீது இருந்த நதிக்கரையில் விட்டு விட்டப் பின்  மற்ற கடவுட்களை பிராமணர் அல்லாதவர்கள் கையில் தந்து விட்டார். மலை மீது மாயக் கருப்பிற்கு ஒரு வழிபட்டுத் தலம் அமைந்தது. மாயக் கருப்பு மலை மீது ஒரு  ஆலயத்தில் அமர விரும்பியதினால் அங்கிருந்த ஒரு சுவற்றை இடுமலை மகாலிங்கக் கருப்பு என அழைத்து அதையே மாயக் கருப்பாக கருதி வணங்கத் துவங்கினார்கள். அவருடைய உருவத்தை அந்த  மலையில்  இருந்த ஒரு சுவரில் சித்திரமாக வரைந்து வைத்து இருக்க மற்ற கடவுட்களை சிறிய சுவற்றில் வரைந்து வைத்து வணங்குகிறார்கள். சின்னக் கருப்பருக்கு மட்டுமே சிலை உள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கலரி எனும் விழாவைக் கொண்டாடுகிறார்கள். அது ஆடி மாதமாகும். அந்த மாதத்தின் முதல்  வெள்ளிக் கிழமையில் மாயக் கறுப்பர் ஆலயத்தில் அனைவரும் வந்து கூடி அந்த ஆண்டு பண்டிகை கொண்டாடலாமா எனக் கேட்பார்கள். பல்லி இடது புறத்தில் இருந்து சப்தம் போட்டால் பண்டிகைக் கொண்டாடக் கூடாது என்பது அர்த்தம் ஆகும்.  ஆனால் பள்ளியின் ஒழி வலப்புறத்தில் இருந்து ஒலித்தால் அது அவருடைய சம்மதம் கிடைத்ததற்கான அறிகுறி என எடுத்துக் கொண்டு உடனடியாக விழாவை அடுத்த வெள்ளிக் கிழமையில் இருந்து செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை அன்று அந்த கிராமத்தில் உள்ள அனைவரது இல்லங்களும் சுத்தப்படுத்தப்பட்டு புதிய பானையில் பொங்கல் செய்யப்படும். அந்த கடவுட்களை பிரதிபலிக்கும் இருபத்தி ஒரு சாமியாடிகள் நதியில் எந்த இடத்தில் அவை கிடைத்தனவோ அந்த இடத்திற்கு  பொங்கல் பானைகளை தலை மீது வைத்துக் கொண்டும், பூஜையில் அடிக்கும் மணியையும் எடுத்துச் செல்வார்கள். அங்கு அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டதும் சாமி ஏறியவர்களை  மக்கள் வணங்குவார்கள். அதன் பின் அந்த  சாமியாடிகள் மக்களுக்கு குறி கூறுவார்கள். அதன் பின் அந்த மணியையும் பானையையும் மீண்டும் ஆலயத்தில் கொண்டு போய் வைத்தப் பின் வீட்டுக்குச் சென்று விடுவார்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அன்றைய விழா முடிந்து விடும். அடுத்த வெள்ளிக் கிழமை ஆலயத்தில் உள்ள அனைத்து சிலைகளும் பெட்டியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு சுத்தமாக துடைக்கப்பட்டு எண்ணை  பூசப்பட்டு வணங்கப்படும்.  அதன் பின் அவை  மீண்டும் பெட்டிக்குள் வைக்கப்படும்.  அன்று மாலை மீண்டும் இருபத்தி ஒரு சாமியாடிகளும் வருவார்கள். சின்னக் கருப்பு சாமியாடி மட்டும் ஐந்து அடி நீளமான அரிவாள் மீது நின்று இருக்க மற்றவர்கள் இடா  எனும் மலைக்கு செல்வார்கள். அங்கு பொங்கல் படைக்கப்பட்டு மாயக் கருப்பிடம் கேள்விகள் கேட்கப்படும். மாயக் கருப்பு தனக்கு பசிக்கின்றது எனக் கூறும்போது ஆடுகள் பலி தரப்பட அவற்றின் ரத்தத்தை மாயக் கருப்பு குடிப்பார். விடியற்காலை பிறந்ததும் அந்த  இறைச்சியையும் பொங்கலையும் வைத்து உணவு தயாரிக்கப்பட்டு அவற்றை அனைவரும் உண்பார்கள்.
மாயக் கருப்பிடம் தன்னுடைய எதிரியை நாசம் செய்யுமாறு மக்கள் வேண்டுவது உண்டு. பிள்ளை பிறக்கவும், வியாதிகள் தீரவும் அவரை வேண்டுகிறார்கள்.

Village Deities - 15

$
0
0
கிராம தேவதைகள் - 15


அறியக்குறிச்சி வெட்டுடையார் காளி
(படம் நன்றி : K Senthil Sivan, Blue Chip Technologies
Pvt Ltd & Lite Technology Trainers Pvt Ltd.)




அறியக்குறிச்சி 
வெட்டுடையார் காளி
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]


சிவகங்கை நகரில் இருந்து 15 கிலோ தொலைவில் உள்ளது அறியக்குறிச்சி கிராமம். அந்த கிராமத்தில் உள்ள ஆலயம் பற்றியக் கதை இது. ஒரு காலத்தில் அந்த இடத்தை சுற்றி நிறைய காடுகளே இருந்தன. ஒருமுறை கருப்ப வேலர் மற்றும் கரி வேலர் என்ற இரண்டு சகோதரர்கள் காட்டில் கிழங்குகளை பிடுங்கி வரச் சென்றார்கள். அவர்கள் ஒருமுறை தோண்டிய இடத்தில் அவர்களுக்கு ஒரு ஐய்யனார் சிலை கிடைத்தது. அதை அவர்கள் வெட்டுடைய ஐய்யனார் எனப் பெயரிட்டு அங்கேயே பிரதிஷ்டை செய்து வணங்கி வரலாயினர். பின்னர் கரி வேலர் கேரளாவுக்குச் சென்று மந்திரக் கலையை கற்று அறிந்து வந்தார். வந்தப் பின் ஐயனாருக்கு முன்னால் பூமியில் எதோ எழுதி உள்ளதைக் கண்டார். அவை காளியை ஆராதிக்கும் மந்திரங்கள் என்பதை புரிந்து கொண்டார். ஆகவே தனது மந்திர சக்தியினால் அவர் அங்கேயே ஒரு காளியின் உருவை படைத்து ஐயனாருக்கு அருகில் வைத்தார். அவளை வெட்டுடைய காளி என அழைத்தார்.
அந்த ஆலயம் பற்றிய இன்னொரு கதை இது. சிவகங்கை ஆண்டு வந்த மன்னனான முத்து வடக நாதர் என்பவர் ஆங்கிலேய அரசர்களால் கொல்லப்பட்டார். அவருடைய மனைவி வேலு நாச்சியார் என்பவர். கொல்லப்பட்ட தனது கணவருக்கு இறுதிக் காரியங்களை செய்தப் பின் அவளைப் பிடிக்க வந்த ஆங்கிலேயப் படையினரிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தாண்டவராயன் என்ற மந்திரியுடன் காட்டிற்குத் தப்பி ஓடினாள். காட்டில் ஒளிந்து கொண்டாள். ஆனால் அவளைத் துரத்தி வந்த ஆங்கிலேயப் படையினர் அறியக்குறிச்சிக்கு வந்தபோது அவர்கள் உடையால் என்ற பெயரைக் கொண்ட இடைசிப் பெண்ணை சந்தித்தார்கள். அவளிடம் ராணி ஒளிந்துள்ள இடத்தின் விவரத்தைக் குறித்துக் கேட்டபோது அவள் அதை கூற முடியாது என்றாள். ஆகவே அவர்கள் கோபமடைந்து அவளை அங்கேயே சிரச்சேதம் செய்தனர். அவர்கள் சென்றதும் மறைந்திருந்த இடத்தில் இருந்து வெளியில் வந்த அரசி அவளுக்கு வெட்டுடையார் காளி என்ற பெயரில் அங்கேயே ஆலயம் எழுப்பினாளாம். அவள் எட்டு கைகளுடன் காணப்படுகிறாள். அவளுக்கு தன்னுடைய அனைத்து நகைகளையும் ராணி போட்டு விட்டாளாம். எவர் தவறு செய்தாலும் அவர்களை அந்த காளி கடுமையாக தண்டிப்பாளாம் . அங்கு வருபவர்கள் அவளுக்குப் பின்புறத்திலுள்ள கூண்டில் பணங்களைப் போட்டு அவளிடம் தமக்கு நியாயம் கிடைக்க வழி செய்யுமாறு வேண்டிக் கொள்வார்களாம். அது போலவே அங்கு வந்து வேண்டிக்கொள்ளும் காதலர்கள் ஒன்று சேர்வார்களாம். எவர் மீதாவது புகார் வந்தால் அதை காளியிடம் வந்து கூறி நியாயம் கேட்கும் மக்களுக்காக அந்தக் காளி எட்டு நாட்கள் தவணை தருவாளாம். எவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளதோ அவர் அந்த எட்டு நாட்களுக்குள் வந்து தம்முடைய வாதத்தை எடுத்து வைத்தால் அல்லது தமது தவறுக்கு மன்னிப்புக் கேட்டால் அனைத்தையும் ஆராய்ந்து அதற்கான நியாயமான தீர்ப்பை காளி தருவாளாம்.
ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் சோனை கருப்பசாமி காளிக்கு உதவி செய்பவராகவும், அவளுடைய பாதுகாவலராகவும் உள்ளார். இந்த ஆலயம் காளிக்கே மகத்துவம் வாய்ந்தது என்றாலும் அந்த ஆலயத்துக்கு வருபவர்கள் முதலில் வெட்டுடைய ஐயனாரைதான் வணங்க வேண்டும். அந்த ஆலயத்துக்குள்ளேயே சோலட்டுக் காளி, கறுப்பர் மற்றும் பைரவருக்கும் சிறு ஆலயங்கள் உள்ளன. காலை ஆறு முதல் மாலை ஆறுவரை ஆலயம் திறந்து உள்ளது. பங்குனி மாத திருவாதரையில் இருந்து பங்குனி மாதம்வரை பத்து நாட்கள் ஆலயத்தில் விழா நடைபெறுகின்றது. வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஆலயத்தில் கூட்டம் அலை மோதுமாம்.

--------------------
பின்குறிப்பு:-
இந்த கிராமம் குறித்தோ, ஆலயம் குறித்தோ மேலும் தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த கிராமத்துக்கு செல்ல சிவகங்கை ரயில் நிலையம், நாட்டரசன் ரயில் நிலையம் மற்றும் பன்னான்குடி ரயில் நிலையங்களில் இறங்கிச் செல்லலாம். இந்த கிராம ஆலயம் எழும்பிய காலம் தெரியவில்லை என்றாலும் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று என கிராமத்தினர் கருதுகிறார்கள்  -  சாந்திப்பிரியா

Village Deities - 16

$
0
0
கிராம தேவதைகள் - 16

சலுப்பை  மேல் அழகர் ஆலய முகப்பு  


சலுப்பை 
துறவு மேல் அழகர்

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]


கும்பகோணத்தில் இருந்து 37 கிலோ தொலைவில் உள்ளது பெரம்பலூர். பெரம்பலூரில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே சலுப்பை  எனும் கிராமம்.  துறவு என்றால் உள்ளூர் பாஷையில் அழகு எனவும் துறவு மேல் அழகர் என்றால் மலை மீது உள்ள அழகான ஆண் என்று அர்த்தம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அந்த இடத்தில் பிராமணர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு சொந்தமாக ஒரு கிணறும் அங்கு இருந்தது. அதில் இருந்துதான் பிராமணக் குடும்பத்துப் பெண்கள் நீரை எடுத்துச் செல்வார்கள். ஒரு முறை அந்த கிராமத்துக்கு ஒரு துறவி வந்தார் . அங்கிருந்த மலை மீது அமர்ந்து கொண்டு அவர் தவத்தில் இருந்தார். அதை அறியாமல் அங்கு வந்த இரண்டு பெண்கள் கிணற்று நீரில் இருந்து தண்ணீர் எடுத்தபோது சிறிது தண்ணீர் துறவி மீது கொட்டி விட்டது. அதனால் கோபம் அடைந்தவர் அவர்களை உருவமில்லாமல் போய்விடுவார்கள் என சபித்து விட அவர்கள் உருவமில்லாமல் ஆகிவிட்டார்கள். அதன் பிறகு அவரும் மாயமாகிவிட்டார்.
அது முதல் அந்த கிராமத்தில் இருந்தவர்கள் அந்த முனிவரை துறவு மேல் அழகர் என அழைத்து அவரை வணங்கலாயினர். கிணற்றையும் மூடிவிட்ட பின்னர் அந்த துறவிக்கு உருவம் இல்லை என்பதினால் ஒரு கல்லை மூடிய கிணற்றின் மீது வைத்து அதையே அந்த முனிவர் என நினைத்து வணங்கி வரலாயினர். அந்த ஆலயத்தில் சிவனுடைய அனைத்து சின்னங்களும் வைக்கப்பட்டு அவரை சிவனாகவே வழிபடலாயினர். அழகர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருப்பதினால் அவரை நேரில் பார்த்தவாறு இருக்காமல் நந்தி வேறு இடத்தில் தள்ளி வைத்து விட்டார்கள். அழகர் ஆலயத்தின் இரு புறமும் வினாயகர் ஆலயங்கள் உள்ளன. அதில் உள்ள ஒரு வினாயகர் பெண்களைப் பாதுகாக்கும் வினாயகராக கருதப்படுகிறார்.
காலம் மாறியது. பிராமணர்கள் இருந்த இடங்கள் அழிந்தன. ஆகவே அங்கிருந்த பிற மக்கள் உள்ளூரில் இருந்த விஷ்ணுவின் ஆலயத்தை அந்த ஆலயத்துக்குள் மாற்றி விட்டனர். முனிவருடைய தவத்தை இரண்டு பெண்கள் கலைத்து விட்டதினால் அந்த ஆலயத்தில் இளம் வயதுப் பெண்கள் வருவது இல்லை. ஆனால் குழந்தைகளும் வயதான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அழகர் ஆலயத்தில் இருந்து அறுபது அடித் தள்ளி ஒரு கூடம் உள்ளது. அதுவரைதான் பெண்கள் செல்ல முடியும். அந்த கூடத்தின் அருகில் உள்ள இடத்தில் வீரபத்திரசாமியின் சிலை உள்ளது. அவரே அந்த அழகர் ஆலயத்தைப் பாதுகாப்பவர். அங்கு பல திரி சூலங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு வரும் பக்தர்கள் தமது வேண்டுகோட்களையும், எவர் மீதும் புகார் கூற எண்ணினால் அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி அந்த காகிதத்தை அர்ச்சகரிடம் தர அதை அவர் அந்த சூலங்கள் மீது குத்தி வைப்பார். வீரபத்திரசாமி எவர் மீது தன்னிடம் புகார்கள் வந்துள்ளதோ அவர்களுடைய கனவில் யானை அல்லது குதிரையாக காட்சி தருவார். அடுத்த நாள் அவர்கள் பயந்து போய் ஆலயத்துக்கு வந்து அவரிடம் மன்னிப்புக் கேட்பார்கள்.
வீரபத்திரரைத் தவிர அங்கு மதுரை வீரன், எட்டுக் கைகளைக் கொண்ட செல்வ மாகாளியும் உள்ளனர். காளி பெண்களுக்கான வியாதிகளை குணப்படுத்துவளாம். ஆலயத்தில் வீரலி மரம் உள்ளது. அதில் பதினெட்டாம்படி கருப்பன் உள்ளதாக நம்புகிறார்கள். மதுரை வீரனுக்கும், பதினெட்டாம்படி கருப்பனுக்கும் மிருக பலிகள் தரப்படுகின்றன.
அழகருக்கு பெரிய விழா எடுப்பது இல்லை. தைபூச தினத்தன்று மட்டும் அவரை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். ஒரு விளக்கை மட்டும் அவர் முன் ஏற்றி வைப்பார்கள். ஆலயத்துக்கு அருகில் வீடுகள் கட்டப்படுவது இல்லை. காரணம் தியானத்தில் உள்ள முனிவரை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காகத்தான்.

-------------------------------------

 பின் குறிப்பு:-
 ஒருபுறத்தில் கும்பகோணம் இருந்தாலும் மறுபுறத்தில் மீன்சுருட்டி சலுப்பை கிராமம் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது  - சாந்திப்பிரியா 

Grama devathas and deities in Vedik temples

$
0
0
 கிராம தேவதைகளும் 
நகர தெய்வங்களும் 
(வழிபாட்டுத் தலங்கள்  
தோன்றிய  வரலாறு )

சாந்திப்பிரியா 
பல கிராமங்களில் காணப்படும்  அம்மன் வழிபாட்டுத் தலங்கள், 
எல்லைக் காவல் தெய்வங்கள்  
 
படம்:   http:// www.pbase/neuenhofer/naga cult in_tamilnadu
[இந்தப்  படங்கள் அனைத்துமே ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'
(Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம
தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப்
பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா
]
- I-

சில நாட்களுக்கு முன்னர் என்னுடைய ஒரு உறவினர் என்னிடம் சில விவரங்களைக் கேட்டார்.  அவர் கேட்ட சந்தேகங்களின் சாரம் :-
கிராம தேவதைகள் என்பது என்ன?
ஆலயங்கள் மற்றும் கிராம தேவதைகளின் ஆலயங்கள் வெவ்வேறானதா?
பல குடும்பங்களில் கிராம தேவதை எனப்படும் தெய்வங்களை குலதெய்வமாக வழிபடுகிறார்களே. அதன் பின்னணி என்ன?
ஒவ்வொருவருடைய குல தெய்வம் என்பதும் அம்மனாகவே இருக்கும் (பெண் தெய்வம் ) என்பது சரியா?

அவருடைய சந்தேகங்கள் அனைத்துமே விளக்கப்பட வேண்டியவை. நானும் பல நாட்களாக இந்த விஷயங்களைக் குறித்து பல இடங்களிலும் விசாரித்து வந்துள்ளேன். அது போலவே கிராம தேவதைகள் மற்றும் வேத முறையிலான தெய்வ ஆலயங்கள் (இரண்டும் வெவ்வேறானவை) எழுந்த வரலாற்றுப் பின்னணியையும் பலரிடமும் விசாரித்து வந்துள்ளேன். அவற்றைக் குறித்து நான் நீண்ட கட்டுரை எழுத நினைத்து இருந்தேன். ஆனால் என்னிடம் கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு உடனடியாக விளக்கம் தர வேண்டும் என்பதினால் நான் எழுத இருந்த  கட்டுரையை சிறிய  கட்டுரையாகவே இப்போது எழுதி உள்ளேன்.

கிராம தேவதைகள் கடவுட்கள் இல்லையா? அவர்களுக்கும் கடவுட்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? வேத   முறையிலான  சிவன், பார்வதி, முருகன் , மகாவிஷ்ணு போன்ற கடவுட்களுக்கு  ஆலயங்கள் எப்படி எழுந்தன? முருகனை மட்டும் ஏன் வேதமுறைக் கடவுளாக பார்ப்பதில்லை? கிராம தேவதைகளின் ஆலயம் மற்றும் வேத முறை ஆலயங்களுக்கும்  உள்ள வித்தியாசங்கள் என்ன, பல பிரசித்தி பெற்ற இன்றைய ஆலயங்கள் முன்னர் கிராம தேவதை ஆலயங்களாக இருந்த ஆலயங்களா?  கிராம தேவதை மற்றும் தெய்வீக ஆலயங்கள் என்ற பாகுபாடு ஏன்  போன்றவற்றை முடிந்தவரை  விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

முதலில் சில உண்மைகளை  தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆலயங்கள் எப்போது எழுந்தன என்பது யாருக்குமே தெரியாது. அதைப் பற்றிய  சரியான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் சரித்திர ஆய்வாளர்களின் கூற்றுப்படி வேத காலத்திலும் கூட அதாவது கி.பி 1500 அல்லது கி .பி 1600 ஆம் ஆண்டுகளில் கூட ஆலயங்கள் என்பன இருந்திருக்கவில்லை.   முதன் முதலில் ஆலயம் என்ற ஒன்றை  கண்டு பிடித்ததும் ஆப்கானிஸ்தானில்தான்.  இந்தியாவில் உள்ளதைப் போன்ற   பல இந்து ஆலயங்கள் ஆசியாவின் பல பாகங்களிலும் அதாவது கம்போடியா, தாய்லாந்து, இரான், பாகிஸ்தான், மலேஷியா, சிங்கப்பூர், ஆப்ரிக்க நாடு போன்ற பகுதிகளில் பரவலாக இருந்துள்ளன. ஆனால் தென் பகுதிகளில் அவை இல்லை. தென் பகுதிகளில் இருந்த பெரும்பாலான வழிபாட்டுத் தளங்கள் எல்லாக் காவல் தெய்வ ஆலயங்களே. வேத காலத்தில் இருந்த கடவுள் வழிபாட்டில் வேத மந்திரங்களை ஓதி தெய்வங்களை ஆராதித்திருந்தார்களே  தவிர உருவ வழிபாடோ இல்லை விக்ரஹ வழிபாடோ இருந்ததான செய்திகள் இல்லை.   அவை பின்னர்தான் தோன்றின.

தென் பகுதிகளில் வேத முறையிலான வழிபாட்டுத் தலங்கள் சிறு ஆலயங்களாக எழுந்த காலம் ஒன்றாம் ஆம்  நூற்றாண்டில்தான். ஆலயங்கள் வடநாட்டில்  குப்தர்கள் ஆட்சிக் காலத்தில்மூன்றாம் நூற்றாண்டில் துவங்க  பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவிலும் (அதாவது கி. பி 500 ஆம் ஆண்டுக் காலம்) ஆலயங்கள் கட்டப்படத் துவங்கின. பின்னர் அவை சோழ மன்னர்கள் என பல மன்னர்களால் தொடரப்பட்டது என்பதே உண்மை.

அதற்கு முன்னர் தெய்வ வழிபாடு இல்லையா என்ற கேள்வி எழும். உண்மைதான். அதற்கு முன்னரும் அதாவது வேத காலம் பிறந்தப் பின் அங்காங்கே ஆலய வழிபாடுகள் தோன்றத் துவங்கின.  அந்த ஆலயங்கள் எனப்படும் வழிபாட்டுத் தலங்கள்  மண் குடுசைகளிலும், கூறைவேயப்பட்ட நான்கு மண் சுவர்களுக்குள்ளும், குகைகளிலும்,  கற்களினால் உழப்பட்ட இடங்களிலும் மேல் கூரை இல்லாமலும் இருந்த இடங்களில் இருந்தன.

இன்னும் ஒரு கேள்வி எழும். அப்படி என்றால் 10000 20000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மகாபாரதம், ராமாயணம், விஷ்ணு புராணம், சிவ புராணங்களில் கூறப்பட்டு உள்ள தெய்வங்கள் பொய்யானதா?  அதுவும் இல்லை. இங்குதான் ஒன்றை கூர்ந்து கவனிக்க வேண்டும். நடந்த அவை அனைத்துமே தெய்வங்கள் மனிதப் பிறவிகளை எடுத்து வந்து நடத்திய காட்சிகள். ஆகவே அவர்கள் ஆலயங்களில் அமர்ந்திருந்தவர்கள் அல்ல. ராமன், சீதை, லஷ்மி, விஷ்ணு, பார்வதி, போன்ற அனைவருமே  பூலோகத்தில் நடந்த காட்சியில் பங்கேற்ற மனித உருவில் வந்திருந்த  தெய்வங்கள். அவர்களை அந்த வடிவத்தில் மக்கள் ஆலயங்களை கட்டி  ஆராதித்து வந்திருக்கவில்லை. அந்த தெய்வங்களின் உருவங்கள் வெளிவந்தது வேத காலத்துக்குப் பின்னர்தான். விஷ்ணு என்றால் இந்தந்த உருவங்கள், சிவன் என்றால் இந்தந்த உருவங்கள் என ஓவ்வொரு கடவுளின் வடிவங்களும் வேத காலத்துக்குப் பின்னரே வெளியாகத் துவங்கின.

இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் தெய்வங்களுக்கு ஒரு உருவம் கிடைத்தது வேத காலத்துக்குப் பின்னர்தான் என்பதினால் இந்தியாவின் வடக்குப் பக்கங்களில் இருந்த இடங்களில் கிராம தேவதை வழிபாட்டுத் தலங்கள்  இல்லாமல் வேத முறையிலான இந்து கடவுட்களின்  ஆலயங்கள் மட்டுமே கூரைகளிலும், மண் சுவர்களுக்கு இடையிலும், குகைகளிலும் இருந்திருக்க, தென் பகுதியில்தான்,  ஒரிஸ்ஸா மானிலப் பகுதிகள்வரை   பல இடங்களிலும் கிராம தேவதை  வழிபாடுகள் இருந்து உள்ளன.  கிராம தேவதைகளின் ஆலயங்கள் தோன்றிய  பிறகுதான்  தெய்வீக ஆலயங்கள் தென் பகுதிகளில் பரவலாக தோன்றின. அதே நேரத்தில் வடா பாகங்களிலும் ஆலயங்கள் சிறிதும் பெரிதுமாக போன்றத் துவங்கின. இன்றைக்கும் பல முக்கியமான ஆலயங்களின் பின்னணி வரலாற்றில்  கிராம தேவதைகள்  இருந்துள்ளன. அந்த ஆலயங்கள் கிராம தேவதை ஆலய பூமிகள் மீதே எழுந்துள்ளன.   அது எப்படி?  கிராம தேவதைகள் என்றாலே கருப்பசாமி, சங்கிலிக் கறுப்பர், பேச்சாயி போன்ற மனித ரூபத்தில் உள்ளவர்கள் ஆராதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் அல்ல. அவர்களும் தெய்வத்தின் அம்சங்களே என்பதே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை. இங்குதான் ஆரிய, திராவிட பிரிவுகளின் பிரிவு  காரணமாக அமைந்தது.
.............தொடரும் 

Grama devathas and deities in Vedik temples - 2

$
0
0
 கிராம தேவதைகளும் 
நகர தெய்வங்களும் -2
(வழிபாட்டுத் தலங்கள்  
தோன்றிய  வரலாறு 

சாந்திப்பிரியா 

பல கிராமங்களில் காணப்படும்  அம்மன் 
வழிபாட்டுத் தலங்கள், 
எல்லைக் காவல் தெய்வங்கள்  
 
படம்:   http:// www.pbase/neuenhofer/naga cult in_tamilnadu
[இந்தப்  படங்கள் அனைத்துமே ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'
(Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம
தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப்
பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா
]


- II -



ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதிகள் வடப் பகுதியில் இருந்த மக்களுடன் மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டு இருந்துள்ளன. தென் பகுதி மக்கள் தம்மை திராவிடர் என்று எண்ணிக் கொண்டு இருந்தபோது வடப் பக்கங்களை சேர்ந்தவர்களை ஆரியர்கள் எனக் கூறினார்கள். அந்த ஆரியர்கள் எனப்பட்டவர்கள் தென் பகுதிகளுக்கு வந்தபோதே அவர்களுடன் வேத முறைப் பழக்கங்களும் வந்துள்ளன. ஆரியர்கள் எனப்பட்டவர்கள் பிராமணர்கள் அல்லது பண்டிதர்கள் எனக் கருதப்பட்டனர். அவர்களே தென் பகுதிகளில் இருந்த ஆலய வழிபாட்டு முறைகளை மாற்றி அமைத்தவர்களில் முக்கியமானவர்கள்.

வேத காலத்தின் பின்னர் பிராமணர்களின் ஆதிக்கம் துவங்கியது. அதுவரை அவரவர் வாழ்கை நெறிமுறையில்தான் -கிராம மக்கள்- வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். நகரங்கள் என்பதே பிற் காலத்தில் எழுந்தவைதான். மக்கள் இருந்த இடங்கள் குக்கிராமம் என்றும், பெரிய கிராமம் என்றும் அழைக்கப்பட்டு வந்தன. பொதுவாக பெரிய கிராமங்களில் பணம் படைத்தவர்களும் குக்கிராமங்களில் ஏழ்மை நிலையில் இருந்தவர்களும் வாழ்ந்து வந்தார்கள். அப்போதெல்லாம் ஜாதி பேதப் பிரிவினைகளும் அதிகமாகவே இருந்தன. அதனால் கீழ் நிலை மக்கள் அதிகம் இருந்த இடங்களில் பிராமணர்கள் வசித்தது இல்லை. இதை எதற்காக கூற வேண்டி உள்ளது என்றால் கீழ் நிலை மக்களின் கிராமங்களில் துவங்கியதே கிராம தேவதை ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள். ஆனால் அந்த கிராமங்கள் பின்னர் நகர் புறங்களாக மாறியபோது அந்த கிராம ஆலயங்களே நகர்புற ஆலயங்களாக மாறி பிராமணர்களும் ஆராதிக்கும் இடங்கள் ஆயின என்ற உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது.

மதுரை பரிமேல் அழகர் ஆலயம், சபரிமலை அய்யப்பனும், சமயபுரம் மாரி அம்மன், புன்னை நல்லூர் மாரி அம்மன், பல இடங்களில் உள்ள வீரபத்திரர் ஆலயங்கள், பல இடங்களில் உள்ள முனீஸ்வரர் ஆலயங்கள் என பல கிராம தேவதை ஆலயங்கள் ஆகம விதியிலான வழிபாட்டு முறைகளை கொண்ட ஆலயங்களாக மாறி விட்டிருகின்றன. தமிழ் நாட்டில் பல நகரங்களில் உள்ள பல பிரபலமான அம்மன் ஆலயங்கள், மாரிஅம்மன் ஆலயங்கள், முருகன், அம்பாள் ஆலயங்கள் என பலவும், ஏன் சில சிவாலயங்கள் கூட முன்னர் கிராம ஆலயங்களாகவே இருந்துள்ளன. நீங்கள் எந்த ஒரு பெரிய ஆலயத்துக்கும் சென்றாலும் ( நவீன காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள் அல்ல, மாறாக புராதானமான பெருமை வாய்ந்த ஆலயங்கள்) அங்கு உள்ள பிராகாரங்கள் சிலவற்றில் கிராம தேவதைகளின் உருவச் சிலைகளைக் காணலாம்!!

கிராம மக்களில் ஒரு பகுதியினர் கிராமங்களை சுற்றி இருந்த இடங்களில் இருந்த காடுகளில் இருந்து பொறுக்கி வந்த மரக்கட்டைகளை விற்றும், மிருகங்களை வேட்டையாடி அவற்றை விற்றுக் கிடைத்த பணத்திலும் வாழ்கையை ஓட்டியவர்கள். இன்னும் ஒரு பிரிவினர் அருகில் இருந்த நிலங்களில் சென்று கூலி வேலை செய்து பிழைத்தவர்கள். குக்கிராமங்கள் என்பது அங்காங்கே திட்டு திட்டாக தீவைப் போல நிலப்பரப்பில் இருந்த இடங்கள். அப்போதெல்லாம் ஒவ்வொரு கிராமத்துக்கும் இடையே பல மைல் இடைவெளி இருக்கும். அதற்குக் காரணம் கிராமங்களை சுற்றி இருந்த காடுகளும் வயல்வெளிகளும்தான்.

இப்படியான சூழ்நிலையில் வாழ்ந்து வந்திருந்த கிராம மக்களுக்கு வெளிக் கிராமங்கள் அல்லது வெளி இடங்களில் இருந்து தாக்குதல் நடத்துபவர் அல்லது உள்ளூரிலேயே யார் மூலமாவது ஏதாவது ஒரு வகையில் இன்னல் ஏற்பட்டால் அந்த கிராமத்தில் உள்ள திடகார்த்தமான ஆட்கள் ஒன்று கூடி அவற்றை எதிர்த்து நின்று கிராம மக்களைப் பாதுகாத்து வந்தார்கள். ஆகவே அப்படிப்பட்ட வீரர்களை கிராமத்தினர் தம்மைக் காக்கும் வீரர்களாகக் கருதினார்கள். அப்படிப்பட்டவர்கள் மரணம் அடைந்ததும் அவர்களை தகனம் செய்யும் இடத்திலோ, அவர்கள் வீர மரணம் அடைந்த இடத்திலோ அல்லது அவர்களை புதைத்த இடத்திலோ சில கற்கள் அல்லது பெரிய பாறைகளை நட்டு வைத்து அவர்களுக்கு நினைவுச் சின்னங்களாக வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பூசி அதையே இறந்து போன அந்த வீரர்களின் ஆவிகள் எனக் கருதி அந்த ஆத்மாக்கள் தம்மை பாதுகாக்கும் எனக் கருதி அந்த கற்களையும் பாறையையும் வணங்கி வந்தார்கள்.

அந்த வீரர்கள் இறந்த பின்னரும் அவர்கள் தேவதையாக அதாவது இனம் தெரியாத அடையாளம் காண இயலாத ஆத்மாக்களாக அங்கு உலாவிக் கொண்டு இருப்பதாக நம்பியதினால் இறந்து போனவர்களின் ஆவிகளை தம்மை விட அதிக சக்தி உள்ள அமானுஷ்யப் புருஷர்களாகவே கருதினார்கள். அதனால்தான் அவர்களை சிறப்பு மிக்க மனிதர்களாகக் கருதி அவர்களை ஒரு கல்லின் உருவத்தில் வணங்கி வந்தார்கள். சில நேரங்களில் அந்த மாவீரர்கள் வைத்திருந்த வாட்கள், திரிசூலங்கள், சூலாயுதம், வேல், அரிவாள், மற்றும் பிற ஆயுதங்களை அந்த கற்களின் பக்கங்களில் புதைத்து வைத்து அவற்றுக்குள் மறைந்து போன மாவீரர்களின் சக்தி இருக்கும் என்பதாகக் கருதி அவை அனைத்தையுமே வழிபடத் துவங்கினார்கள். இன்னும் சிலரோ பாம்புப் புற்றுக்களை பெண் தேவதைகளாகக் கருதி அவற்றையும் வழிபட்டார்கள். பெரும்பாலான கிராம தேவதை ஆலயங்கள் மரத்தின் அடியிலோ, குளத்தின் அருகிலோ, ஊரின் எல்லையிலோ அல்லது திறந்த வெளியிலோதான் இருக்கும். இப்படியாக எழுந்ததே கிராம தேவதைகளின் ஆலயங்கள்.

நான் குறிப்பிடும் இந்த காலக் கட்டம் தெய்வங்கள் என்பது யார், அவர்களின் உருவ அமைப்பு என்ன என்று தெரியாத காலம். கிராம தேவதை வழிபாடுகளும் இரண்டு கட்ட நிலைகளைக் கொண்டது. முதல் நிலை பெயர் தெரியாத அமானுஷ்யன்களைக் கண்டு பயந்த மக்கள் கற்களையும், பாறைகளையும், ஆயுதங்களையும், புற்றுக்களையும், குதிரை, நாய், யானை போன்ற விலங்குகளையும் வணங்கி வந்தக் காலம்.

பொதுவாக அப்படிப்பட்ட வணங்கும் இடங்கள் ஊர் எல்லைகளில், மறைந்து போனவர்கள் சாதாரணமாக அமர்ந்து இருந்த இடங்கள், தங்கி இருந்த இடங்கள் அல்லது அவர்களை தகனம் செய்த இடங்கள் போன்றவையாக இருந்தன. இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். கிராம மக்களுக்கு தேவதைகள் என்பதோ கடவுட்கள் என்பதோ தெரியாமல் இருந்தக் காலம் அது. ஆகவேதான் தம்மை மீறிய சக்தி பெற்றவர் மடிந்து போனவர்கள் என்ற நம்பிக்கையில் இறந்து போனவர்கள் அப்படியே மேல் உலகிற்குச் செல்வார்கள் என்று நம்பிக்கை கொண்டு இருந்தார்கள். மேல் உலகம் என்பது என்ன என்பதும் அவர்களுக்கு தெரியாது. மேலே தெரிந்த ஆகாயமே மேல் உலகம் என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள்.

இரண்டாம் கட்டத்தில் அதாவது வேத காலம் தோன்றியப் பின் எழுந்த கிராம ஆலயங்கள். ஆகம வழிபாட்டு முறைகளில் அமைந்த ஆலயங்களில் இருந்த தெய்வங்களுக்கு ஒரு வடிவம் தரப்பட்ட காலம். அப்படிப்பட்ட காலத்தில் எழுந்த கிராமிய ஆலயங்களில் வைக்கப்பட்ட அந்த மாவீரர்களின் சிலைகளை காத்தவராயன், மதுரை வீரன், மாயக் கருப்பு, கருப்பசாமி, வேலப்பர், கடா மறவர், சுடலை மாடன், ஐயனார், மலைக் கருப்பு, வேண்டிமுத்துக் கருப்பு, தவசி ஆண்டி, முனீஸ்வரர், முத்தையசாமி போன்ற பெயர்களில் அழைத்தும், அவர்களில் சிலரை அந்த தெய்வங்களுடன் சம்மந்தப்படுத்தியும் பூஜித்தார்கள்.

அது போலவே பாம்புப் புற்றுக்கள் மீதும், இன்னும் சில இடங்களில் உயிர் இழந்த பெண்களை புதைத்த அல்லது தகனம் செய்த இடங்களில் அமைக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் உருவச் சிலைகளை அமைத்து அவற்றுக்கு காளியம்மா, கங்கம்மா , சௌடம்மா , பொலிமேரம்மா, கிகிரம்மா, வெங்கலியாம்மா, மரியம்மா, மைசம்மா, பேச்சியம்மா, ஐடம்மா, பொசம்மா, எல்லம்மா , சீதலதேவம்மா, கன்யகலம்மா, மன்த்ராலம்மா, ஜம்புலம்மா, ஜனம்மா, நண்டையலம்மா, திரௌபதம்மா, அன்னம்மா , கௌரம்மா , கேலுவலம்மா , பெரண்டலம்மா, பெத்தம்மா , மஞ்சலம்மா, மலசிசெம்மா, பகவடல்லி, மன்கலியம்மா, கோனியம்மா, துர்கம்மா, பப்பம்மா, சுன்குலம்மா, அங்கம்மா, திருபதம்மா, அன்காரம்மா, மாரியம்மா, விழியம்மா, கெம்பம்மா, தண்டம்மா எனப் பெயரிட்டு அவர்களையும் ஆகம வழிபாட்டு முறைகளில் அமைந்த ஆலயங்களில் இருந்த தெய்வங்களுடன் சம்மந்தப்படுத்தியும் வணங்கித் துதித்தார்கள்.

இவ்வாறு வணங்கப்பட்ட தெய்வங்கள் சிவபெருமானின் கணங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது பராசக்தியின் பரிவாரங்களைச் சேர்ந்த கணங்களாகவோ கருதப்பட்டனர். இரண்டு பெயர்களை மட்டும் ஏன் குறிப்பிட வேண்டி உள்ளது என்றால் இந்த பிரபஞ்சத்தைப் படைத்ததே பராசக்தி என்றும், அந்த பராசக்தியே பரமசிவன் மற்றும் பார்வதியின் இணைந்த அம்சம் என்றும் நம்புவதினால்தான்.
...........தொடரும்

Grama devathas and deities in Vedik temples - 3

$
0
0
 கிராம தேவதைகளும் 
நகர தெய்வங்களும் -3
(வழிபாட்டுத் தலங்கள்  
தோன்றிய  வரலாறு 

சாந்திப்பிரியா 

- III -

ஒரு விஷயத்தை மனதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  கிராம ஆலயங்களில் உள்ள தெய்வங்கள்  மற்றும் கிராம தேவதைகள் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்றால் கிராம தேவதைகள்  என்பவர்கள் இரண்டாம் நிலைக் கடவுட்கள் .  அவர்கள்  மூல தெய்வங்களின் அதாவது சிவன், விஷ்ணு, பார்வதி போன்றவர்களின் பூத கணங்கள் அல்லது அவர்களுடைய பரிவார தேவதைகள் எனக் கருதப்பட்டன. அதாவது கிராம தேவதைகளை இரண்டாம் அல்லது மூன்றாம் நிலைக் கடவுட்கள் என்று கூடக் கூறலாம்.

முதலாம் கட்ட காலத்தில் வழிபடப்பட்ட கிராம தேவதைகள்- பாறைகள், விலங்குகள், சூலம், போன்ற உருவங்கள்  பூதகணங்களில் அடக்கம் இல்லை. முதலாம் கட்ட கிராம தேவதைகள் ஒரு விதத்தில் ஆவி உலக வழிபாட்டுடன் சம்மந்தப்பட்டது. அந்த கால மக்கள் இனம் தெரியாத சக்திகளை ஆவிகள் என நம்பியதினால்தான்  அப்படிப்பட்ட உருவ வழிபாடு இருந்தது.   அவர்களைப் பொருத்தவரை தமக்கு பாதுகாப்பு வேண்டும் என்று எண்ணினார்கள். அதனால்தான் முதலில் கிராம தேவதைகள் தம்மையும் தமது சக்தியையும் வெளிக்காட்ட கிராம மக்களை ஏதாவது ஒரு விதத்தில் பயமுறுத்தினார்கள். கிராம மக்கள் சிலரின்  கனவில்  தோன்றி தான் இன்ன இடத்தில் புதைந்து உள்ளதாகவும், தன்னை வெளியில் எடுத்து வழிபட்டால் அந்த ஊரைக் காத்தபடி இருப்பேன் எனவும் கூறுவார்களாம். அதன்படி அந்த கிராம மக்கள் கனவில் வந்த அந்த தேவதைகளைக் கண்டறிந்து சிறு ஆலயம் எழுப்பி வழிபடுவார்கள். அந்த தேவதையும் அந்த ஊரைக் காத்தபடி ஊர் எல்லைகளில் அமர்ந்து இருப்பார்களாம். அதனால் கிராம மக்கள்  உருவமற்ற அந்த கடவுட்களின்  சின்னமாக கற்களையும், பாறைகளையும், சூலாங்களையும் ஏன் சில இடங்களில் பானைகளையும்   குப்புற வைத்து அதையே கனவில் வந்த தேவதைகளாக எண்ணி அதற்கு மஞ்சள் குங்குமம் பூசி வழிபாட்டு வந்துள்ளனர்.  இந்த நிலை சற்று மாறுபட்டபோது  இரண்டாம் கட்ட கிராம தேவதைகள் - கருப்பசாமி, ஐயனார், முனீஸ்வரர், சுடலை மாடன் - போன்றவர்கள் தெய்வங்களின் உருவங்கள் அமைக்கப்பட்டன. அவர்கள்  தெய்வங்களின் பூத கணங்களாக கருதப்பட்டு வணங்கப்பட்டு  வந்துள்ளார்கள்.
 
இன்னொரு விஷயத்தையும் கூர்ந்து ஆராய்ந்தால் அந்த காலத்தில் கிராம மக்கள் தம்மை அறியாமலேயே  தம்மைக் காக்கும் கடவுளாக நினைத்து தெய்வங்களின் பலவிதமான சின்னங்களை வணங்கி வந்துள்ளார்கள் என்பது புரியும். அதைக் கூடசில மாகான்கள் தெய்வங்களின் செயலே என்றே கூறுகிறார்கள். தெய்வங்கள் மனித உருவில் தாம் பூமிக்கு வந்திருந்தபோது, அந்த மனித உடம்பைத்  துறந்து சென்றபோது அவர்களது  உடல்கள்களும், அவர்களது பரிவார தேவதைகள் மற்றும் கணங்களின் உடல்களும்  பூமியில் பல இடங்களிலும் புதைந்து இருந்தன எனவும், அவை தெய்வீக உடல்கள் என்பதினால் அவை அதே வடிவத்தில் அவை அனைத்துமே  கற்களாக மாறி அதே உருவத்திலான சிலைகளாயின. இப்படியாக வெளிவந்ததே கடவுட்களின் பல உருவங்களும் என்பதும் சில மகான்களின்  கூற்று.

எங்கெல்லாம் தெய்வங்கள் அவதரிக்க நினைத்தார்களோ அங்கெல்லாம் இருந்த மக்கள் கனவிலும் தோன்றி தம்மை வெளியில் எடுக்க வைத்து  பல இடங்களிலும் தெய்வங்களும் அவர்களது பரிவார தேவதைகளும் அமர்ந்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ கிராமத்தில் இருந்த மக்கள்  (அப்போதெல்லாம் நகரங்கள் இருந்ததில்லை என்பதை முன்னரே கூறி உள்ளேன்)  தம்மை அறியாமலேயே தெய்வங்களின் சின்னங்களை மட்டுமே வணங்கி வந்துள்ளனர்  என்பது வியப்புக்குரிய செய்தி.  மக்கள் வணங்கி வந்திருந்த முக்கியமான சின்னங்கள்  எவற்றைக் குறிப்பவை என்பதைப் பார்த்தால் வியப்பே ஏற்படும் ?  கிராம மக்கள் சிங்கங்கள், புலி , ஓநாய், பூனை, கழுதை, முதலை, போன்ற மிருகங்களின் சிலைகளையோ அல்லது  கருடன், பருந்து  போன்ற பறவைகளின் சிலைகளையோ கூட வணங்கவில்லை . அவர்கள் வணங்கி வந்தவை குறிப்பிட்ட பொதுவான சில சின்னங்களே. அவை என்ன?

குத்துக் கல்-இது சிவபெருமானின் லிங்க நிலையைக் குறிப்பது.
பாம்புப் புற்று - அம்மன்களைக் குறிப்பது 
வேல் மற்றும் சேவல்  - முருகனைக்  குறிப்பது.
யானை -   இந்திரனின் வாகனம் என்பதினால்  தேவலோகக் கடவுட்களைக் குறிக்கும்  சின்னம் 
நாகங்கள்  - ராகு, கேது போன்ற கிரகங்கள் மற்றும் மாரி அம்மன் 
குதிரை -  அஸ்வாரூடை எனும்  மகிஷாசுரமர்த்தினியின் படை தளபதியான அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளின் வாகனம்
சூலம் :  மகிஷாசுரமர்த்தினி மற்றும் துர்கை
பயங்கர முகம் கொண்ட  சின்னங்கள் :காளிதேவி 
நாய் -பைரவர்
வரிசையான எட்டு அல்லது ஒன்பது பாறைகள் அல்லது கற்கள் : சப்த கன்னிகைகள் மற்றும் நவக்கிரகங்கள்
குப்புற வைக்கப்பட்ட வட்டவடிவிலான  பானைகள்  : சந்திரன், சூரியன்

கிராம மக்கள்  வணங்கிய கிராம தேவதைகள் யார்? அதையும் படியுங்கள். கிராம மக்கள் வணங்கும் கிராம தேவதையான கருப்பசாமி யார்? முதலில் கிராம தேவதையாக கருதப்பட்டு இருந்த கருப்பசாமி காலப் போக்கில் ராமர் காட்டில் இருந்தபோது சீதைக்கு காவல் இருந்த முனிவரால் தர்பை மூலம் படைக்கப்பட்ட குழந்தை என்றும், யார் தன்னுடைய உண்மையான குழந்தை என்பதைக் கண்டு பிடிக்க ராமர் நடத்திய தீப் பரீட்சையில் தீயில் கருகி எரிந்து போன தர்பைக்கு ராமரே மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப, தீயில் எரிந்ததினால் கருப்பாக மாறிய  அவர் கருப்பசாமி ஆனார் என்றக் கதைகளும் உள்ளது. அது முதல் கருப்பசாமி ராமரின்   வளர்ப்புக்  குழந்தையானார் என்பது கிராமியக் கதை.  முதலில் அவர் கிராம மக்களினால் ஆராதிக்கப்பட்டதினால் கிராம தேவதையாக இருந்தார். காலம் மாறிய பின்னர் அவரையும் ஒரு கடவுளாக ஏற்றுக் கொண்டு உள்ளதினால்தான் தமிழ்நாட்டில் கருப்பஸ்வாமிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவருக்கு மதுரை அழகர் ஆலயத்தில் தனி மரியாதையுடன் கூடிய சன்னதியே உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் எனும் ஊரில் அவருக்கு கோவில் உள்ளது. அதில் அம்பாள் செல்லாண்டியம்மன் அன்னைக்கும் சன்னதி உள்ளது.  மேலும் கருப்பசாமியை சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஆப்ரிக்கா  போன்ற நாடுகளில் உள்ளவர்கள் ஆகம வழியிலான தெய்வமாகவே ஏற்றுக் கொண்டு நகரங்களில் ஆலயங்கள் அமைத்து வழிபடுகிறார்கள். அங்கெல்லாம் அவர் கிராம தேவதையாகக் கருதப்படுவது இல்லை.  இன்னொரு கதையின்படி கருப்பசாமி கருப்பாக இருப்பதினால் சில காரணங்களினால் அவர் பிராமணர் அல்லாத யாதவர் குலத்தில் பிறந்து இருந்த கிருஷ்ணரின் அவதாரம் எனவும், மக்களை துன்பங்களில் இருந்து காப்பாற்ற பூமியில் கிருஷ்ணரே கருப்பசாமியின் உருவத்தில் அவதரித்து உள்ளார் என்கிறார்கள்.
 
ஐயனார் யார்?  அவர் சிவன் மற்றும் மோகினி அவதாரத்தில் இருந்த  விஷ்ணு என்ற இருவர் மூலமும்  படைக்கப்பட்டவர் என்று  தமிழ்நாட்டில் கடலூரை சேர்ந்த  தென்னம்பாக்கம் கிராமத்து முத்தையனார் கோவில்  கதை உள்ளது. அங்குள்ள ஆலயத்தில் உள்ள அய்யனாருக்கு காவல் வீரபத்திரர்.  ஐயனாரை அங்கு அழகன் முத்தையனார் என்ற பெயரில் அழைக்கிறார்கள். அதே ஐயனார் கடலூர் மாவட்டத்திலேயே உள்ள இடைச்செருவாய் எனும் சிறிய கிராமத்தில் மஞ்சபத்திரய்யனார் எனும் பெயரில் கிராம காவல் தெய்வமாக இருக்கிறார்.  அது போலவே பாண்டிச்சேரி மானிலத்தில் உள்ள  புதுப்பெட்டில் உள்ள மஞ்சனீச்வரர் எனும் ஆலயத்தில் பூரணா, புஷ்களா  எனும் இரண்டு அம்பாள் சகிதமாக ஐயனார் காட்சி தருகிறார். ஐயனாரே பின்னர் ஐயப்பனாக  அவதரித்தார் என்பதும் இன்னொரு புராணக் கதை.

அடுத்த கிராம தெய்வம்  வீரபத்திரர்.   அக்னி வீரபத்திரருக்கு மதுரை சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் என்ற கிராமத்தின் அருகில் உள்ள சூரக்குடி என்ற சிறு ஊரில் பிரபலமான ஆலயம் உள்ளது.   அங்கு உள்ள ஒரு அரச மரத்தடியில்தான் வீரபத்திரர் வந்து தங்கி இருந்து தவம் இருந்து தோஷத்தைக் களைந்து கொண்டாராம். அது மட்டும் அல்ல அந்த நேரத்தில் அவர் அந்த கிராமத்தின் தேவதையாக இருந்து ஊரைக் காத்து வந்தாராம். அவரையும் யார் என்று தெரியாமல் வீரபத்திரர் என்ற பெயரில் கிராம தேவதையாக வழிபட்டு வந்தார்கள். ஆனால் அவர் சிவபெருமானால் படைக்கப்பட்டவர் என்பது பின்னர் தெரிந்தபோது அவருக்கும் ஆகம முறையிலான பூஜைகளை செய்யத் துவங்கினார்கள். கும்பகோணத்தின் அருகில் உள்ள ஒரு கிராமத்திலும் அவருக்கு பெரிய ஆலயம்  உள்ளது. அது முன்னர் கிராம தேவதை ஆலயமாக இருந்ததாம்.
 
 மாரியம்மனை எடுத்துக் கொண்டால் அவர் பாம்புப் புற்றில் இருந்து வெளியானவர், மழையைப் பொழிய வைப்பவர், நோய்களை தீர்ப்பவர்  என்று கருதி கிராம மக்கள் வணங்கினார்கள். காலப் போக்கில்தான் அவரும் பார்வதியின் அவதாரம் என ஏற்கப்பட்டு நகர ஆலயங்களில் அமர்த்தப்பட்டு ஆகம முறையிலான பூஜை புனஸ்காரங்கள் அவருக்கும் செய்யப்பட்டன. வேறு பல அம்மன் ஆலயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.  தமிழ்நாட்டில்  சென்னை புரசைவாக்கம் அருகே குயப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ஆதி மொட்டையம்மன் கோவில் முன்னர் கிராம ஆலயமாக இருந்ததுதான். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள முண்டகண்ணி அம்மன், கோல விழி அம்மன்,  தம்பு செட்டி சாலையில் உள்ள காளிகாம்பாள் கோவில், திருவொற்றியூரில் உள்ள சிவன் ஆலயம், என அனைத்துமே முன்னர் கிராம ஆலயங்களாக இருந்தவைதான்.

 முன்னர் ஒரு காலத்தில் வனப்பகுதிகளில் இருந்த சமயபுரம் மாரி அம்மன்,  புங்கைனல்லூர் மாரி அம்மன், ஏன் வனப்பகுதில்  இருந்த திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம், கும்பகோணத்தில் சித்தாடி எனும் கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன்   என பல்வேறு ஆலயங்கள் அனைத்துமே ஒரு காலத்தில் கிராம ஆலயங்களாக இருந்தவைதான்.  இது போல பலப் பல ஆலயங்கள் முன்னர் கிராம ஆலயங்களாகவே இருந்துள்ளன  பொதுவாகவே வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு எங்கெல்லாம் ஆலயங்கள் எழுந்தனவோ அவை  அனைத்துமே கிராம ஆலயங்களாக  இருந்தவை.
பேசவைக்க அருள் புரியும் என  கிராம மக்கள்  வணங்கித் துதிக்கும்  பேச்சி  அம்மன் யார் ? அவர் சரஸ்வதியின்  அவதாரம். இசக்கி அம்மன் யார்? அவர் பார்வதியின் அவதாரம்.

கிராம தேவதை என கூறப்பட்ட முனீஸ்வரரை எடுத்துக் கொள்ளுங்கள். சிவபெருமானின் நெற்றியில் இருந்து வெளிப்படவராக கருதப்படும் அவர் சிவமுனி, மகா முனி, ஜடாமுனி, நாதமுனி, தரமுனி, வாழும் முனி மற்றும் தரமாமுனி என ஏழு அவதாரங்களை எடுத்தாராம். இலங்கையில் ஊறுகொடவத்தை என்ற ஊரில் கிராம ஆலயமாக இருந்த முனீஸ்வரர் வழிபட்டுத் தலம் இன்று மகா பத்ரகாளி ஆலயமாக மாறி உள்ளது. இப்படியாகத்தான் பல கிராம தேவதைகளும் தெய்வங்களுடன் இணைத்து பேசப்பட்டார்கள். 
 
ஒரு வருத்தமான  உண்மை என்ன என்றால் முன்னர் ஒரு காலத்தில் கிராமங்களில் இருந்த ஆலயங்கள் பிராமணர்கள் அல்லாதோர் ஆலயம் என்றும், கிராமங்களுக்கு வெளியில் இருந்தவை பிராமணர்கள் ஆலயங்கள் எனவும் ஒரு காலத்தில் பார்க்கப்பட்டதினால்  கிராம ஆலயங்கள் தெய்வீக ஆலயங்களாக கருதப்படவில்லை.  அது மட்டும் அல்ல கிராம ஆலயங்களில் மிருக பலிகள் தரப்பட்டன,  வேத முறையிலான மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்படவில்லை, மற்றும் அவற்றில் பூஜைகளை செய்ய பண்டிதர்களும் இருந்திருக்கவில்லை.  இவை  அனைத்துமே  கிராம ஆலயங்கள் தெய்வீக ஆலயங்களாக ஏற்கப்படாமல் இருந்ததின்  காரணம். ஆனால் காலப்போக்கில் அனைத்துமே மாறிவிட்டன. இன்று முன்னர் கிராம ஆலயங்களாக இருந்த பல ஆலயங்கள் ஆகம முறையிலான வழிபாட்டு முறைகளை ஏற்று  பிரபலமாக ஆகிவிட்டன. ஆகம விதிப்படி தெய்வங்களின் சிலைகள் மாற்றி அமைக்கப்பட்டன.

காலம் மாறிக் கொண்டே இருக்க, ஆகம விதி ஆலயங்கள் தோன்றத் துவங்கிய காலத்தில் கிராம தேவதைகள் மற்றும் நகர தெய்வங்கள் என்ற பேதங்கள் மறையத் துவங்கி தெய்வங்கள் சில பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கப்பட்டன. தெய்வங்களை கிராம தெய்வங்கள், குல தெய்வங்கள், இன தெய்வங்கள் என பிரித்துக் கூறலானார்கள் ?
 .........தொடரும் 

Grama devathas and deities in Vedik temples - 4

$
0
0
 கிராம தேவதைகளும் 
நகர தெய்வங்களும் -4
(வழிபாட்டுத் தலங்கள்  
தோன்றிய  வரலாறு 

சாந்திப்பிரியா 


- IV -

நான் முன்னரே எழுதியது போல கிராமப்புறங்களில் இருந்த மக்களினால் வணங்கப்பட்டு வந்திருந்த தெய்வங்கள் அதாவது சுடலை மாடன் (பார்வதியினால் மயானத்தில் படைக்கப்பட்டவர் என்பது கதை) , ஐய்யனார், இசக்கி அம்மன், மாரி அம்மன் முதல் வினாயகர், முருகன், வள்ளி போன்றவர்கள் பிற்காலத்தில் படித்தறிவு பெற்று நகர்ப்புறங்களுக்கு சென்று குடி அமர்ந்த கிராம மக்களின் குல தெய்வம் ஆயின. இன்னொன்றையும் கூர்ந்து கவனியுங்கள் ஆகம வழிபாட்டு முறையிலான ஆண் தெய்வங்களில் கூட வெங்கடாசலபதி, முருகன் மற்றும் வினாயகரை தவிர அதாவது ஒரு குடும்பத்தில் ஆண்டாண்டு காலமாக அவர்களுடைய மூதையார்கள் தொடர்ந்து வழிபாட்டு வந்திருந்த ஆலய தெய்வம் வெளி இடங்களுக்குச் சென்று குடி அமர்ந்த அந்த குடும்பத்தை சார்ந்த சந்ததியினரால் குல தெய்வமாக ஏற்கப்பட்டது. அதில் ஒரு விசேஷம் என்ன என்றால் ஒரு கட்டத்தில், அப்படிப்பட்ட கிராம ஆலயங்கள் பிற இனங்களை சேர்ந்த மக்களைப் போலவே ஆச்சாரமான பிராமண குடும்பங்களை சேர்ந்தவர்களினால் கூட வணங்கப்பட்டு வந்திருந்த ஆகம விதிப்படி பூஜிக்கப்படாத கிராம ஆலயமாகவும் இருந்துள்ளது. ஆகம விதிப்படி பூஜிக்கப்படாத அதே கிராம ஆலயங்கள் பிற் காலத்தில் ஆகம விதிப்படி பூஜைகளைக் கொண்ட ஆலயங்களாக மாறி உள்ளன.

இவற்றில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஒரு கட்டத்தில் கிராம தேவதைகள் என கருதப்பட்டவர்கள் பின்னர் தெய்வங்களாக ஏற்கப்பட்டார்கள். கிராம தேவதை ஆலயங்களிலும் பொதுவாக பெண் தெய்வங்களையே அதிகம் வணங்கி உள்ளார்கள். அதற்குக் காரணம் ஒருவருக்குத் தேவையான அனைத்தையும் அன்பையும் தருபவள் ஒரு தாயார் என்ற பொதுவான காரணமே. இன்னொன்று என்ன என்றால் தெய்வீக சம்மந்தமான பல கதைகளையும் படித்தால் பெரும்பாலான அரக்கர்கள் மற்றும் அசுரர்களையும் அழித்தவர்கள் பெண் உருவில் இருந்த தெய்வங்களே என்பது புரியும். ஆகவே அசுரர்களையும், அரக்கர்களையும் அழிக்கச் சென்ற பெண் தெய்வங்களுக்கு யுத்தத்தில் உதவியாக இருக்க அவர்களது உடலில் இருந்து வெளி வந்த படையினர் பெரும்பாலும் பெண் கணங்களே. இதனால்தான் பெண் தெய்வங்களுக்கே கிராமங்களிலும் அதிக ஆலயங்கள் அமைந்துள்ளன. அவை அனைத்துமே அம்மன் ஆலயங்களாக இருந்துள்ளன. அதற்கும் மேலே ஒரு படி போனால் இன்னொரு உண்மை புரியும். இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவள் பெண் தெய்வம் என்பதான நம்பிக்கை உள்ளது. ஆகவே ஆண் தெய்வங்களை விட பெண் தெய்வங்களையே சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதி உள்ளார்கள். அதனால்தான் பலருடைய குலதெய்வம் என்பது பெண் தெய்வமாகவே இருந்துள்ளது.

இன்னொரு காரணம் பொதுவாகவே ஒவ்வொருவருடைய வீட்டிலும் உள்ள பெண்கள் அதிக பூஜை போன்ற வழிபாடுகளைக் கொண்டுள்ளார்கள். தமக்கு தாலி பாக்கியம் வேண்டும் என்றும் குழந்தை வேண்டும் என்று நினைத்தவர்களும் பெரும்பாலும் பராசக்தியின் அம்சங்களையே வேண்டிக் கொண்டதினால் அவர்கள் சக்தியின் ஆலயங்களுக்கு செல்லத் துவங்கினார்கள். தொடர்ந்து சக்தி ஆலயங்களுக்கே அவர்கள் செண்டு கொண்டு இருந்ததினால் சக்தியே அவர்களுடைய குல தெய்வம் ஆயிற்று. சக்தி என்பது பலதரப்பட்ட அம்பிகைகள், அம்மன்களை உள்ளடக்கியது. ஆகவேதான் ஆண் தெய்வத்தை குல தெய்வமாக ஏற்று இருப்பது மிகவும் குறைவானதாகவே இருந்துள்ளது. மேலும் முன்னர் இருந்த நிலப்பரப்புக்கள் பெரும்பாலும் கிராமங்களே என்பதாலும், கிராமங்களில் இருந்த கிராம மக்கள் அம்மன் போன்ற பெண் தெய்வங்களையே ஆண்டாண்டு காலம் பெரிதும் வணங்கி வந்தார்கள் என்பதினாலும் பெரும்பாலான குடும்பங்களில் குல தெய்வமானது பெண் சம்மந்தப்பட்ட தெய்வமாகவே- அதாவது அம்மன் சம்மந்தப்பட்டதாகவே இருந்துள்ளது என்பதே உண்மை நிலை. 
இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். கிராமப்புறங்களில் எந்த காலத்திலுமே ஆண் தெய்வங்களுக்கு அதாவது சிவன், விஷ்ணு, பிரும்மா, கிருஷ்ணர், ராமர் போன்றவர்களுக்கு அதிக வழிபாட்டுத் தலங்கள் இருந்ததில்லை. அப்படி இருந்தாலும் அங்கெல்லாம் அம்பிகை சன்னதிகளும் இருந்துள்ளன. அதற்கும் காரணம் அந்த ஆண் தெய்வங்களைப் படித்ததும் சக்தியே என்பதாகும். ஆகவே அம்மன் மற்றும் அம்பிகைகளுக்கே பக்தர்கள் பெரும்பாலும் முக்கியத்துவம் தந்துள்ளனர். சிவாலயங்களில் வழிபாடுகள் சிவலிங்கத்துக்கு அதிகம் இருந்தாலும் சிவலிங்கத்தை சக்தி-சிவன் என்ற தத்துவத்தில் பார்த்ததினால் அங்கும் அம்பிகைகளே அதிக முக்கியத்துவம் பெற்றார்கள். மேலும் வம்சம் விருத்தி அடைய வேண்டும் என்றால் பெண்கள் மூலமே அது நடக்கும் ( கர்ப்பம் அடைந்து குழந்தைகளைப் பெற்றெடுப்பது என்பதே இதன் பின்னணி) என்பதினாலும் பெண் தெய்வங்களே முக்கியத்துவம் பெற்றார்கள். இப்படியாக பல விதங்களிலும் பெண்களே முக்கியத்துவம் பெற்று இருந்ததினால் ஆண் தெய்வங்களை விட பெண் தெய்வங்கள் அதிக முக்கியத்துவம் பெற்று இருந்தன. அதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை என்பதாக ஒரு பண்டிதர் கூறினார்.

குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.தங்களுக்குள் வழிகாட்டியாய் விளங்கி, வாழ்ந்து மறைந்த முன்னோர்களையோ, கன்னியாக இருந்த நிலையில் வாழ்ந்து மறைந்த பெண்களையோ, தங்களின் வீட்டுத் தெய்வமாக வழிபடும் மரபு காணப்படுகிறது. இது பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். இதனை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், வாழ்வரசி என்று கூறுவதுண்டு.

முடிவாக கிராம தேவதைகள் அல்லது காவல் தெய்வங்களும் நகர தெய்வங்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவைதான். அதாவது அனைவரும் தெய்வீக நிலையில் உள்ளவர்கள். அவற்றில் சிலர் ஆகம வழி முறையில் வழிபடப்பட்டவர்கள். சிலர் ஆகம முறையில் வழிபடப்படாதவர்கள். சிலர் தெய்வங்களில் முதன்மை தெய்வம். சிலர் தெய்வீக கணங்கள், சிலர் பரிவார தேவதைகள். இதுவே உண்மை நிலை.

கிராம தேவதைகள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பது தெரியுமா?

ஆண் தேவதைகள் அல்லது காவல் தெய்வங்கள் :-
கருப்பசாமி, சுடலை மாடன், கருப்பண்ணசாமி, காத்தவராயன், பெரியாண்டவர், முனீஸ்வரன், ஐயனார், பெரியசாமி, பெரியண்ண ஸ்வாமி , மலையாள கருப்பு, கொல்லி மலை கருப்பு, பதினெட்டாம்படி கருப்பு, ஒண்டிக் கருப்பு, சங்கிலி கறுப்பர், பனையடி கருப்பு, கூத்தாண்டவர், சமயக் கருப்பசாமி, கழுவடியான், இருளப்ப சாமி, மாடசாமி, உத்தாண்ட சாமி, எல்லைக் கறுப்பு, மாதேஸ்வரர், மகாலிங்கா, ராஜவாயன், மதுரை வீரன், மாகா முனி, லாட சன்னாசி, வீரபுத்திர ஸ்வாமி, ஆந்திரமுடையார், சிதம்பர நாடார், தாடி வீரசாமி, பொன்னர், தூண்டி வீரன், கொன்றையாண்டி, வேம்புலி ஐயனார், மருது ஐயனார், விருமாண்டி, சீவலப்பேரி சிங்காரம், கலியாண்டி ஐயனார், சமணமலை ஐயனார், சிறை மீட்ட ஐயனார், குளத்து அய்யனார் , வீர முத்து ஐயனார், பிராண்டி ஐயனார், வீர பயங்கர ஐயனார், வீரப்பிள்ளை ஐயனார், இருளப்பர், காவல்காரன், நொண்டிக் கருப்பு, பாவாடைக்காரன், கிளுகிளுப்புக்காரன், மண்டக் கருப்பு போன்றவர்கள்.

பெண்களில் காவல் தெய்வம் அல்லது கிராம தேவதைகள் :-

மாரியம்மா, மரம்மா, காளியம்மா, கங்கம்மா , சௌடம்மா , பொலிமேரம்மா, கிகிரம்மா, வெங்கலியாம்மா, மரியம்மா, மைசம்மா, ஐடம்மா, பொசம்மா, எல்லம்மா , சீதலதேவம்மா, எட்டுகை அம்மன், கொல்லிப் பாவை, பாப்பாத்தி, கருப்பாயி, பாலம்மா, பத்ரகாளி, பூலங்கொண்டாள் அம்மன், பொன்னிறத்தாள் அம்மன், அங்காள பரமேஸ்வரி, கன்யகலம்மா, மந்தராலம்மா, ஜம்புலம்மா, ஜனம்மா, நண்டையலம்மா, திரௌபதம்மா, அன்னம்மா, கௌரம்மா , கேலுவலம்மா, பெரண்டலம்மா, நீலி, பைரவி, மாடச்சி, அம்மாச்சி, பேராத்துசெல்வி, தளவாய்பேச்சி, பூங்குறத்தி, பெத்தம்மா, மஞ்சலம்மா, மலசிசெம்மா, பகவடல்லி, மன்கலியம்மா, கோனியம்மா, துர்கம்மா, பப்பம்மா, சுன்குலம்மா, அங்கம்மா, திருபதம்மா, அன்காரம்மா, மாரியம்மா, விழியம்மா, கெம்பம்மா,தீப்பாச்சி அம்மன் , இடைச்சியம்மன், கிச்சம்மா, தொட்டிச்சி அம்மன், பூலம்மா, சப்தகன்னிகை, துர்க்கை, உடலம்மா, உக்கிரமாகாளி, உச்சினமாகாளி, வாசுகோடி, ஈலம்மா, வானமாலம்மன், பேச்சியம்மன் போன்றவர்கள்.
கட்டுரை முடிவுற்றது 

Village Deities - 17

$
0
0
கிராம தேவதைகள் - 17
பெங்களூரில் ஒரு ஆலயத்தில் முனீஸ்வரர் 

கோபால சமுத்ரம் 
அடைக்கலம் காத்தார்

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
 
உப்பூர் கோபாலசமுத்திரம் என்பது திருவாரூர் மாவட்டத்தின் முத்துப் பேட்டையில் இருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு பெரிய முனீஸ்வரன் ஆலயம் உள்ளது. அவரே ஊரின் அடைக்கலம் காத்தாரின் காவல் தெய்வம். அடைக்கலம் என்றால் காப்பவர், மற்றும் சரண் அடைந்தவர் என்ற அர்த்தம் உண்டு. ஒரு காலத்தில் கோபால சமுத்திரம் சமுத்திரத்தின் கரைப் பகுதியாக இருந்துள்ளது. நாகப்பட்டினம் மற்றும் அந்த காலத்தில் கொலம்போ என அழைக்கப்பட்ட ஸ்ரீ லங்காவுக்கு கப்பல் மூலமே வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு முறை நாகப்பட்டினத்தில் இருந்து கொலோம்போவுக்கு சரக்கு கப்பல் போய் கொண்டு இருக்கையில் கடலில் பயங்கரமான சூறாவளி ஏற்பட்டது. கடல் கொந்தளித்தது. கப்பல் முழுகி விடும் போல இருக்க அந்த கப்பலின் சொந்தக்காரன் கடவுளை வேண்டிக் கொள்ள அந்த கப்பல் எதன் மீதோ மோதி நின்று விட்டது. ஆகவே எதன் மீது அந்தக் கப்பல் மோதி நின்றுள்ளது என்பதைப் பார்த்துவிட்டு வருமாறு கப்பலை ஓட்டி வந்தவனை சோதனை செய்யுமாறு கூற அவனும் அந்தக் கப்பல் ஒரு கல்லின் மீதுதான் மோதி நின்றுள்ளது என்ற அதிசயத்தை சொந்தக்காரனிடம் கூறினான். அந்த கப்பல் மோதியது ஒரு கல் மீதே என்பதைப் பார்த்தவர் அந்த கல்லினால் கப்பல் நின்று இருக்க முடியாது என நினைத்து அதை கடலில் தூக்கிப் போட்டு விட்டார். அது மட்டும் அல்லாமல் உண்மையில் இந்த இடம் தெய்வாம்சம் பொருந்தியது என்றால் நான் அடுத்த முறை வரும் போது கடல் இங்கு இருக்க கூடாது என நினைத்தார். அதுவே நடந்தது. அடுத்த முறை அவர் அங்கு சென்றபோது அங்கு கடல் இல்லை. சிறிய தீவே இருந்தது. அது மட்டும் அல்ல அவர் தூக்கிப் போட்ட அதே கல்லும் அந்த தீவின் மீது இருந்தது. ஆகவே அவர் அந்தக் கல்லை எடுத்து வரச் சொல்லி அதற்கு அங்கு ஒரு ஆலயம் அமைத்தார். அந்த ஆலயத்துக்கு கப்பலைக் காத்தவர் என்ற பெயரில் அடைக்கலம் காத்தார் என பெயரிட்டார். அது முதல் அவர் வியாபாரம் பெருகியது. நிறையப் பணம் வரலாயிற்று. அதற்குக் காரணம் அடைக்கலம் காத்த பெருமாளே என நினைத்து அவருக்கு இன்னும் பெரிய ஆலயம் கட்டினார். அதன் முன்னால் பெரிய யானையின் சிலையை செய்து வைத்தார். முதலில் யானையின் உடலை செய்து வைத்தவர் அடுத்து அதன் முகத்தை செய்தது அதை உடலுடன் பொருத்துமாறு கூறினார். ஆனால் எத்தனை முயன்றும் யானை சிலையின் தலை உடைந்து விழுந்து கொண்டே இருந்தது. அவர் ஒரு சாமியாடியை அது குறித்துக் கேட்க சாமியாடி அடைகலம் காத்தாரின் வாகனம் குதிரை என்பதினால் அப்படி நடக்கின்றது என்று கூறினார். ஆகவே முன்னர் செய்த யானையின் சிலையை எடுக்காமல் அதன் எதிரில் இருக்குமாறு ஒரு குதிரையின் சிலையை செய்து வைத்தார். . அது இன்னமும் அங்கே உள்ளது. அந்த ஆலயத்தில் அடைக்கலம் காத்தாரின் உருவச் சிலை இல்லை. கடலில் கண்டு எடுத்த அந்தக் கல்தான் அடைக்கலம் காத்தவர் என்று என்று கருதி அவரை கல்லின் உருவில்தான் வணங்குகிறார்கள். என வணங்குகிறார்கள். ஆனால் முனீஸ்வரருக்கு மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு உள்ளது. அவர் அடைக்கலம் காத்தாரின் பாதுகாவலராக இருக்கிறார். மக்கள் முதலில் முனீஸ்வரரை வணங்கிய பின்தான் அடைக்கலம் காத்தாரை வணங்குவார்கள்.
வைகாசி மாதத்தில் (ஏப்ரல்-மே) வண்ணமயமான குதிரையின் சிலைகள் அங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ள அலாங்காடு என்ற கிராமத்தில் செய்யப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும். அடைக்கலம் காத்தார் சைவ உணவையே உண்பவர். ஆகவே அவருக்கு பலி தரப்படுவது இல்லை. ஆனால் முனீஸ்வரருக்கு பலிகள் தரப்படுகின்றன. முத்துபேட்டையில் இருந்து திருத்துரைபூண்டிக்கு வளைந்து வளைந்து செல்லும் அபாயகரமான பாதை உள்ளது. ஆனால் அந்த சாலையில் விபத்துக்களே நடப்பது இல்லை.

Village Dieties - 18

$
0
0
கிராம தேவதைகள் - 18
 
மேலாரப்பனூர்  தவசி ஆண்டி ஆலயம் 

மேலாரப்பனூர் 
தவசி ஆண்டி

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

மதுரை அருகில் உள்ளதே திருமங்கலம் என்கிற கிராமம். ஒரு காலத்தில் தவசி ஆண்டி என்பவர் உயர் ஜாதியினரால் வணங்கப்பட்டு வந்திருந்தார். ஆனால் இன்றோ அவரை தலித்துக்களே வணங்குகின்றனர். அந்த தேவதைக்கு ஆலயம் இல்லை. அலங்கரிக்கப்பட்டு உள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ள கல்லையே தவசி ஆண்டி என வணங்குகின்றனர். அவர் சக்தி வாய்ந்த கடவுள் என்ற நம்பிக்கையும் உள்ளது. தவசி ஆண்டி அந்த ஊருக்கு எப்படி வந்தார் என்பதோ அல்லது அந்த ஆலயத்தின் பண்டிதரும், ஆலயத்தின் சாமியாடியும் ஏன் தலித்துக்களாகவே உள்ளனர் என்பதோ யாருக்கும் தெரியவில்லை. அவருடைய அருளினால்தான் தம் நிலங்களில் நல்ல விளைச்சல் ஏற்படுகின்றது என கிராமத்தினர் நம்புகின்றனர். ஆகவே தமது விளைச்சலில் ஒரு பகுதியை அவருக்கு காணிக்கையாக அர்பணித்து விடுவார்கள். யார் எவ்வளவு கொடுத்தனர் என்ற விவரம் எழுதி வைக்கப்பட்டு விடுகின்றது.
கார்த்திகை மாத மூன்றாம் வெள்ளிக் கிழமையில் ( நவம்பர்- டிசம்பரில்) தவசி ஆண்டியின் விழா நடைபெறும். அந்த ஆலையத்துக்கு தரப்பட்ட தானியங்கள் விற்கப்பட்டு அந்தப் பணத்தில் வாழைப்பழங்கள் வாங்கி வரப்படும். சாதாரணமாக ஐம்பதாயிரம் வாழைப் பழங்கள் வாங்கப்படும். அந்த பண்டிகை தினத்தன்று ஆலய பூசாரியும் சாமியாடியும் உணவு அருந்தாமல் விரதம் இருப்பார்கள். இரண்டு கறவை மாடுகள் ( பெண் மாடுகள்) கொண்டு வரப்பட்டு அங்கு கட்டி வைக்கப்படும் . காலை முதல் அதன் பாலை சுரக்க விடாமல் அதன் காம்பின் மீது எதோ மந்திரித்த வீபுதியை தூவுவார்களாம். அதன் கன்று கூட பாலை அருந்தாது.
உள்ளூரில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ள தவசி ஆண்டியின் ஆபரணங்கள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் எடுத்துச் செல்லப்படும். அவர்கள் அதை வணங்குவார்கள். கிராம எல்லைவரை அதனுடன் பெண்களும் செல்வார்கள். ஆனால் ஆலயத்துக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதினால் அதன் பின் அவர்கள் அவரவர் வீட்டுக்குத் திரும்பி விடுவார்கள். நாடு இரவில் மாட்டின் பாலைக் கறந்து அதனுடன் சிறிது பழத்தைக் கலந்து அபிஷேகம் செய்வார்கள்.
அதன் பின் அனைத்து ஆண்களும் அங்கு தேவதை முன் கூடி நின்று ஊரில் '' மழையும் தண்ணீரும் வேண்டும். எங்களுக்கு நல்ல விளைச்சல் வேண்டும். அதற்கு நீ அருள் புரிந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் . இதன் அடையாளமாக ஏதாவது ஒரு சமிக்கையை எங்களுக்குக் காட்ட வேண்டும் '' என அவரிடம் வேண்டுவார்கள். அந்த ஆலயத்தின் பக்கத்தில் உள்ள ஆல மரத்தில் இருந்து பல்லி கத்தினால் அவர் அருள் கிடைத்து விட்டது என்று அர்த்தம். அந்த சப்தம் வர நேரமானால் கிராமத்தில் எதோ தவறு நடந்து விட்டதாகக் கருதுவார்கள். அந்த சப்தம் வரும் வரை இரண்டு நாளானாலும் அங்கேயே காத்துக் கிடப்பார்கள். சப்தம் வந்த பின்னரே அங்குள்ள சாமியாடிக்கு அனைவரும் நமஸ்காரம் செய்வார்கள். எத்தனை நேரம் ஆனாலும் பல்லியின் சப்தம் வராமல் விழாவை விட்டுப் போக மாட்டார்கள்.
அது போலவே ஒவ்வொரு குடும்பத்தினரும் அவரவர் பிரச்சனைக்கும் பதில் கேட்டு காத்திருப்பார்கள்.
விழா முடிந்தப் பின் வாழைப் பழங்களை அவரவர் கொடுத்த காணிக்கைக்கு ஏற்ப கிராமத்தினருக்கு பகிர்ந்து கொடுப்பார்கள்.

--------------
பின்குறிப்பு:-
மதுரையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் பாதையில் உள்ளது மேல் உரப்பனூர் கிராமம். இந்த கிராமத்திலும் மதுரையிலும் தவசி ஆண்டி எனும் காவல் தெய்வத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது என்பதே உண்மை. அதன் காரணம் ஒரு காலத்தில் ஜாதி பேதம் இன்றி அனைவராலும் வணங்கப்பட்ட காவல் தெய்வம் அவர்.   
தவசி ஆண்டி யார், அவர் எங்கிருந்து வந்தார், எப்படி கிராமக் காவல் தெய்வமானார் என்பதைப் பற்றிய விவரம் யாருக்கும் தெரியவில்லை.  அவருடைய உருவப் படமும் கிடைக்கவில்லை. ஆனால் தவசி ஆண்டியைப் பற்றி கூறப்பட்டு வரும்  கிராமிய வாய்மொழிக் கதைதான் மேலே கூறப்பட்டுள்ள கதை. 
அவரைப் பற்றி கிராம மொழி ஒன்று உண்டு . அது - கண்மாய் கரையில் தவசி ஆண்டி சக்தியுள்ள தெய்வமாக அமர்ந்திருந்து, கண்மாயைக் காத்திருந்து, கழனியை (நிலம்) செழிக்க வைத்து,  பசியில்லாது இருக்க கஞ்சி ஊற்றுகிறார்.     -சாந்திப்பிரியா

Village Deities - 19

$
0
0
கிராம தேவதைகள் - 19

தமிழ் நாட்டில் ஒரு கிராம
 எல்லையில்  உள்ள காவல் தெய்வங்கள் 

காப்பாத்தம்பட்டி 
பச்சை மலையான் 

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

சேலம் மாவட்டத்தில் ஜலகண்டபுரத்தில் உள்ளது சிறிய கிராமமான கப்பாத்தம்பட்டி என்பது. அது வறண்ட பூமி. ஒரு முறை அந்த கிராமத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டது. தண்ணீர் இல்லை. ஆகவே அங்கிருந்து எண்பது கிலோ தொலைவில் இருந்த பச்சை மலை என்ற இடத்துக்கு சிலர் சென்று குடியேறினார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த நான்குபேர் அந்த மலை உச்சிக்குச் சென்று அங்கு கடவுளுக்காக ஒரு குடுசையில் தண்ணீர் வைத்து இருந்த மூன்று பானைகளில் இருந்த தண்ணீரை தாகம் தாங்காமல் குடித்து விட்டனர். அவர்கள் நால்வரும் குருடாகி விட்டனர். அதன் பிறகு அந்த மலை ஜாதியினர் தம் கிராமத்துக்கு வந்து நடந்ததைக் கூற அவர்கள் அங்கு மீண்டும் சென்று அங்கிருந்த ஆலய பூசாரியிடம் மன்னிப்புக் கேட்க அவரும் அவர்களுக்கு ஆலயத்தின் வீபுதியைக் கொடுக்க அவர்கள் இழந்த கண் பார்வையை திரும்பப் பெற்றார்கள். ஆகவே அந்த கிராமத்தினர் அவரிடம் கேட்டு அந்த மலை மீது இருந்த குடுசையில் இருந்து ஒரு கல்லைக் கொண்டு வந்து வைத்து அதை பச்சை மலையான் என பெயரிட்டு வணங்கலாயினர். அதை செய்தப் பின் அந்த கிராமம் மீண்டும் செழிப்புற்றது. நல்ல மழை பொழிய ஆரம்பித்தது. இன்றும் அங்கு உள்ள சில கற்களையே பச்சை மலையானாக வணங்கி வருகிறார்கள். அவரை சுற்றி நாடார், வீரக்காரன், சன்னாசி, வேடர், ஏழு கன்னிகைகள், சின்னண்ணன் மற்றும் பெரிய அண்ணன் போன்றோவர்களுக்கு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதன் பின் ஒரு இடத்தில் கூரைப் போட்டு அவர்கள் அனைவரையும் அங்கு மாற்றினார்கள். இன்றும் அங்கு உள்ள ஒரு கல்லை பச்சை மலையானாக வணங்கி வருகிறார்கள். அவரை சுற்றி நாடார், வீரக்காரன், சன்னாசி, வேடர், ஏழு கன்னிகைகள், சின்னண்ணன் மற்றும் பெரிய அண்ணன் போன்றவர்களுக்கு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதன் பின் ஒரு இடத்தில் கூரைப் போட்டு அவர்கள் அனைவரையும் அங்கு மாற்றினார்கள். ஆனால் அப்படி தேவதைகளைக் கொண்டு வந்தபோது அவற்றில் இரண்டு தேவதைகளை எடுத்து வர மறந்து விட்டதை அவர்கள் கனவில் தோன்றிய அந்த இரண்டு தேவதைகளும் சுட்டிக் காட்டின. ஆகவே மறுநாள் அந்த கற்களை எடுத்து வரச் சென்றபோது அவர்களால் பல கற்களுக்கு இடையே இருந்த அதை அடையாளம் காண முடியவில்லை. ஆகவே அங்கிருந்த அனைத்து கற்களையும் அவர்கள் தெய்வமாகக் கருதி எடுத்து வந்துவிட்டனர் .
பச்சை மலையான் சுத்த சைவ உணவையே உண்பவர். வைகாசி மாதத்தில் ( மே-ஜூன்) பச்சை மலையான் தவத் திருவிழா என்ற விழா நடைபெறுகின்றது. அந்த விழா ஒரு நாளைக்கு மட்டுமே நடைபெறும். மே மாதத்தில் கிராமத்தினர் அந்த ஆலயத்தில் ஒன்று கூடுவார்கள். பச்சை மலையானிடம் திருவிழாவை நடத்த வேண்டுமா எனக் கேட்பார்கள். ஆலயத்தின் வடக்கில் உள்ள ஆல மரத்தில் இருந்து பல்லி கத்தினால் ஆமாம் என்று அர்த்தம், இல்லை தென்புறத்தில் உள்ள மரத்தில் இருந்து பல்லி கத்தினால் வேண்டாம் என்று அர்த்தம்.
கடவுளின் ஆயுதங்களும் அவருடைய வாளும் கிராமத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளன. விழா முடிவு செய்யப்பட்டவுடன் அங்குள்ள குயவர்கள் தூய்மையுடன் விரதம் இருந்து சிரத்தையுடன் புதிய பானைகளை செய்வார்கள். பொங்கல் படைக்க ஆயிரம் பானைகள் செய்யப்படும். அரிசியை அங்குதான் களைந்து இடிப்பார்கள் . அந்த கிராமத்து பெண்கள் அங்கு வந்து அரிசியை இடித்தப் பின் அதை ஒரு பையில் கொட்டி வைத்து தமது பெயரையும் அதன் மீது எழுதி வைத்து விட்டுச் செல்வார்கள். ஆலயத்தின் மீது புதிய கூரை போடப்படும். விடியற் காலை மூன்று மணிக்கே எழுந்து அவருடைய ஆயுதமும் மற்றும் ஆலய மணிகளை எடுத்து வருவார்கள். சுமார் முந்நூறு மீட்டர் தள்ளி சாமியாடிகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். முதலில் பெரிய பானையில் பச்சை மலையானுக்கு பொங்கல் படைத்தப் பிறகு ஏழு கன்னிகைகளுக்கும் சிறிய பானைகளில் படைக்கப்படும். சாமியாடிகள் குறிகளும் சொல்வார்கள்.
சின்னண்ணன், பெரியண்ணன் மற்றும் அவர்கள் பாட்டனாரான பாட்டப்பனுக்கும் ஆடு பலி தரப்படும். அதன் பின் பன்றிகளைத் துரத்தி பிடித்து வேட்டை ஆடிக் கொல்வார்கள் . அதன் பின் மூன்று பானைகளில் தண்ணீர் வைத்தப் பின் விழா முடிவடையும்.

Village Deities - 20

$
0
0
கிராம தேவதைகள் - 20

சங்கிலிக் கறுப்பர் 

கீழவயல் 
சங்கிலிக் கறுப்பர் 

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கண்ணம்புரியின் அருகில் உள்ள கிராமமே கீழவயல் என்பது. அதன் அருகில் நாத கலை பட்டினம் என்ற வளர்ச்சி அடைந்த ஊர் உண்டு. அந்த ஊரில் இருந்தவர்கள் வசதியான வாழ்க்கையை மேற்கொண்டு உள்ளனர் என்பதினால் பொறாமை கொண்ட சில மந்திரவாதிகள் அந்த ஊர் மக்களுக்கு தொல்லை தரத் துவங்கினார்கள். அந்த கிராமத்தில் ஒளி விடை ஐயனாரின் ஆலயம் இருந்தது.  ஆகவே மக்கள் அங்கு சென்று ஐயனாரிடம் முறையிட்டனர். அவர் தந்து சகோதரியான மதுரை மீனாஷியை சந்தித்து அவளுடைய ஆலோசனைக் கேட்டார். அவள் தன்னிடம் உள்ள 121 படையினரில் எவரை வேண்டுமானாலும் அழைத்துப் போகுமாறு கூறினாள். ஐயனாருக்கு சங்கலிக் கறுப்பர் மீதே அதிக நம்பிக்கை இருந்ததினால் அவரையே அழைத்துச் சென்றார். சங்கிலிக் கறுப்பர் அங்கு சென்று மிகப் பெரிய உருவை எடுத்து மந்திரவாதிகளை கல் சிலைகளாக்கி விட்டார். அதை முடித்தப் பின் தனக்கு என்ன வெகுமதி தர உள்ளாய் என ஐயனாரிடம் அவர் கேட்க ஐயனாரோ அந்த ஊரிலும் அதை சுற்றி உள்ள பத்து கிராமங்களிலும் சங்கிலிக் கருப்பருக்கே தமது தேவதை என முதல் மரியாதை தருவார்கள் என்று கூறினார். ஆகவே அதுமுதல் கீழவயலை சுற்றி இருந்த பத்து கிராமங்களுக்கும் அவரே காவல் தெய்வமானார். ஆகவே அவருக்கு ஒரு ஆலயம் எழுப்பினார்கள். அவரோ சூரிய ஒளி தன் முகத்தின் மீதும், மழை தன் உடம்பின் பின் பகுதியிலும் விழுமாறும் ஆலயம் அமைக்க வேண்டும் எனக் கூற அவர்களும் அது போலவே ஆலயத்தைக் கட்டினார்கள். அந்த ஆலயத்தில் ஆலய மணிகளைத் தவிர கடவுளிடம் மட்டுமே ஆயுதம் இருந்தது. அந்த ஆலய மணியைக் கூட பக்தர்கள் தந்து இருந்தனர்.
ஒரு முறை ஒரு திருடன் அந்த ஆலயத்துக்கு வந்து அங்கிருந்த மணியை திருட முயன்றான். சங்கிலிக் கறுப்பர் ஒரு சிறுவன் வேடத்தில் ஊருக்குள் சென்று அந்த விஷயத்தை ஒரு முதியவரிடம் கூற அவர் ஆட்களைத் திரட்டி வந்து திருடனைப் பிடித்தார். அது முதல் அந்த ஊரில் திருட்டு பயமே இல்லையாம்.
அந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் இருந்தது. ஆயிரம் அடித் தோண்டினாலும் நீர் கிடைக்கவில்லை என்ற நிலை இருந்தது . சங்கிலிக் கறுப்பர் ஒரு பக்தரின் கனவில் தோன்றி ஒரு குறிப்பிட்ட இடத்தில் தோண்டுமாறு கூற 150 அடிக்கும் குறைவான அளவில் நிறைய தண்ணீர் வந்ததாம்.
சங்கிலிக் கறுப்பர் ஒப்புக் கொண்டால் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறும். அனைவரும் ஆலயத்தின் முன் வந்து கூட அவர் வைத்துள்ள கத்தியில் இருந்து பல்லி கூவினால் விழா நடைபெறுமாம். மூன்று மாதங்களுக்கு முன்பே விழாவிற்கான ஏற்பாடுகளை துவக்கி விடுகின்றனர். ஊரில் உள்ளவர்கள் வெளி ஊருக்கு செல்ல மாட்டார்கள். மற்றவர்கள் வீட்டில் சாப்பிட மாட்டார்கள் ஆயிரம் ஆடுகள் பலி தரப்படும். பெண்கள் ஆலயத்தின் பக்கம் கூடப் போக மாட்டார்கள்.

Village Deities- 21

$
0
0
கிராம தேவதைகள் - 21

ஒரு  கிராம  ஆலயத்தில் காணப்படும்  இந்த 
கிராம தேவதை  பத்திரகாளியா அல்லது பைரவியா   
என்பது தெரியவில்லை 


தகத்தூர் 
மாப்பிள்ளை வீரன் 

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
 
நாகையில் வேதாரண்யத்தின் அருகில் உள்ளது தகத்தூர் கிராமம். மாப்பிள்ளை வீரன் என்றால் மாப்பிள்ளை என்று அர்த்தம். அந்த ஊரில் உள்ள அந்த ஆலயத்தில் சிலை கிடையாது. ஒரு கல்லை மட்டுமே கடவுளாக வணங்குகிறார்கள். அந்த ஆலயத்தின் கதை இது.
ஒரு காலத்தில் அந்த ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் திருமேனி அம்மன் என்ற பெயரில் காளி சிலையை வணங்கி வந்தார். அவர் அதன் எதிரிலேயே மரணம் அடைந்தார். ஆகவே அவருக்கு அங்கேயே சமாதி எழுந்தது. அந்த ஊரில் சாமி வழிபாடுகள் எதுவும் இல்லாததினால் திருடர்கள் அட்டகாசம் அதிகரித்தது. மக்கள் துன்பம் அடைந்தனர். அந்த கிராமத்தின் அருகில் இருந்த அதியங்காடு என்ற இடத்தில் ஒரு சிவன் ஆலயம் இருந்தது. அந்த ஆலயத்தின் அனைத்து நகைகளையும் திருடர்கள் திருடிக் கொண்டு சென்று விடுவார்கள் என பயந்த மக்கள் அதை எடுத்து வந்து அந்த சாமியாரின் சமாதி இருந்த இடத்தில் புதைத்து வைத்து விட்டார்கள். அதன் மீது ஒரு வேப்ப மரத்தையும் நட்டு அதன் பெயரை மாப்பிள்ளை வீரன் என அழைத்தார்கள். சமாதியை சுற்றி தடுப்பும் கூரை மீது பனை ஒலையினால் ஆன தடுப்பையும் செய்து வைத்தனர். ஒரு நாள் அந்த மேல்கூரைத் தடுப்பு விளக்கினால் ஏற்பட்ட தீயில் அழிந்து போக மரமும் சிறிது சேதம் அடைந்தது. அவை என்றும் காணப்படுகின்றது. ஆகவே அவர்கள் அங்கு கல்லினால் ஆன தடுப்பை அமைக்க விரும்பி பூமியை தோண்டியபோது அவர்கள் கோடாலி ஒரு கல்லின் மீது வேகமாகப் பட்டது . கோடரி கல்லின் மீது பட்டதினால் கல்லில் இருந்து ரத்தம் வந்ததாம். ஆகவே அந்த கல்லை தெய்வமாக பாவித்து அதை ஒரு மூலையில் வைத்து மண்டபத்தைக் கட்டினார்கள். அந்த கல்லின் மீது ஓம் என்ற எழுத்தை பொறித்து வைக்க அதையே இன்றும் மாப்பிள்ளை வீரனாக வணங்குகிறார்கள். அவரே சிவனாரின் சொத்துக்களை அங்கு பாதுகாத்து வருவதாக நம்புகிறார்கள்.

 மாப்பிள்ளை வீரன் ஆலய நுழை வாயில் 

பங்குனி மாதத்தில் (மார்ச்- ஏப்ரலில் ) பதினெட்டு நாள் விழா நடைபெறும். அதியங்காட்டில் பைரவர் ஆலயம் உள்ளது. அங்கிருந்து சாமியாடிகள் இங்கு புறப்பட்டு வந்து மாப்பிள்ளை வீரனுக்கு பூஜைகளை செய்வார்கள். அதன் பின் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் தருவார்கள்.
தமது உடலில் எந்தப் பகுதியிலாவது நோய் வந்தால் அதைப் போல ஒரு உருவச் சிலையை செய்து வந்து அங்கு வைத்தால் நோய் குணமாவதாக நம்பிக்கை உள்ளது. அதனால்தான் அங்கு அத்ததகைய பொம்மைகள் நிறையவே அங்கு கிடக்கின்றன.

--------
பின்குறிப்பு:
வேதாரண்யத்தில் இருந்து இங்கு செல்ல பேருந்துகள் உள்ளன. மற்றும் தஞ்சாவூரின் சேதுபாவ சத்திரத்தில் இருந்தும் இங்கு பேருந்தில் செல்லலாம். தகட்டூர் மாப்பிள்ளை வீரன் திருவிழாவில் , ஏராளமான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற சிலைகளை வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தமது வேண்டுதல்களை நிறைவற்றிக் கொள்ள மண் குதிரைகள், மனித உருவ சிலைகளை கொண்டு வந்து கோவில் வளாகத்தில் நேர்த்திக் கடனாக வைக்கிறார்கள். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட பக்தர்கள் குலைக் குழியாக வாழைப்பழம் தார்களை கொண்டு வந்து கூட்டத்தினருக்கு விநியோகிப்பார்கள். அப்படி தானம் தரப்படும் பழத்தை பெறுவதன் மூலம் பெண்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை - சாந்திப்பிரியா 

Village Deities - 22

$
0
0
 கிராம தேவதைகள் - 22
மாடப்புரம் பத்ரகாளி  ஆலயத்தில் 
காணப்படும்  சிலையின் இரு தோற்றம் 

மாடப்புரம் 
பத்திரக்காளி  

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தின் அருகில் உள்ளதே மாடப்புரம் என்கின்ற கிராமம். ஒரு முறை உலகில் பிரளயம் தோன்றியது. அனைத்தும் முழுகி விட மதுரை மீனாக்ஷி தன்னுடைய கணவரான சிவபெருமானிடம் மதுரையின் எல்லை எது என்பதை காட்டுமாறு கேட்டுக் கொண்டாள். ஆகவே அவர் தன்னை ஒரு மிகப் பெரிய பாம்பாக்கிக் கொண்டு அந்த நீரை அப்படியே வளைத்துப் பிடிக்க அவருடைய நாக்கு வாலை தொட்ட இடமே மாடப்புரம் என்பதை புரிந்து கொண்டாள். ஒரு முறை அவளும் சிவனாரும் வேட்டையாடச் சென்றனர். மதுரை மீனாக்ஷி களைத்து விட்டாள். ஆகவே சிவனார் அவளை அங்கேயே (மாடப்புரத்தில்) தங்குமாறு கூறி விட்டு துணைக்கு ஐயனாரையும் நிற்க வைத்து வைத்து விட்டுச் சென்றார். ஐயனார் அவளுக்கு துணையாக அங்கு உள்ளார். எவர் ஒருவர் வைகை நதியில் நீராடுகிறார்களோ அவர்களுக்கு கங்கையில் குளித்த புண்ணியத்தை விட அதிக புண்ணியம் கிடைக்கும் என சிவனார் கூறினார். அது முதல் மதுரை மீனாக்ஷி அங்கு பத்ரகாளியாக உள்ளாள். பார்வதிக்கு காவலாக நின்று இருந்ததினால் அங்குள்ள ஐயனாரை அடைக்கலம் ஐயனார் என அழைகின்றார்கள். அந்த ஆலயத்தில் மூல பூஜை பத்ரகாளிக்கே நடைபெறுகின்றது. அவள் சிலை சுமார் பதிமூன்று அடி உயரம் உள்ளது. அவளுடைய இரு பக்கத்திலும் இரண்டு பூத கணங்கள் உள்ளன. ஒரு பக்தர் தான் என்றும் அவளுடன் இருக்க விரும்பியதினால் அவருக்கு தன் பின்னால் நிற்க இடம் தந்தாள். அவர் மிகப் பெரிய குதிரையாக அவள் பின்னால் தனது முன்னங்கால்கள் இரண்டையும் அவள் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தபடி நிற்கின்றார். அவள் தன் கையில் ஒரு திரிசூலத்தை வைத்துக்கொண்டும், எரிந்து கொண்டு உள்ள கிரீடத்தை தலையில் அணிந்து கொண்டும் காட்சி தருகிறாள். அவளுக்கு எலுமிச்சை பழம் பிடிக்கும் என்பதினால் அந்த மாலை அணிவிக்கப்படுகின்றது. அவளுக்கு மட்டும் அணிவிக்க வேண்டும் எனில் நூறு பழம் வேண்டும். குதிரைக்கும் சேர்த்து என்றால் ஆயிரம் பழங்கள் வேண்டும்.
அந்த ஆலயத்தை நீதியின் இடம் என்கிறார்கள். ஆலயத்தில் அவளுக்கு முன்னால் ஒரு மேடு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும், குற்றம் சுமத்தப்பட்டவரும் அங்கு வந்து அந்த மேட்டில் நின்று கொண்டு தத்தம் வாதத்தை வைக்க வேண்டும். பொய் கூறுபவர் முப்பது நாட்களுக்குள் ஏதாவது ஒரு விதத்தில் தண்டனையை பெறுகிறார் . சில சமயங்களில் அவர்களால் அந்த கிராமத்தின் எல்லையைக் கூட கடக்க முடியாமல் ஆகிவிடுமாம். ஆகவே தண்டனை பெற்றவன் மீண்டும் ஆலயத்துக்கு வந்து பத்ரகாளிக்கு காணிக்கை செலுத்தி, குற்றமற்றவனுக்கும் அபராதமாக ஏதாவது தொகை தர வேண்டுமாம்.
பணக்காரர்களினால் கொடுமை இழைகப்பட்டவர்கள் ஈரத் துணி உடுத்தி அங்கு வந்து பட்டயக்கல் எனக் கூறப்படும் இடத்தில் நின்று கொண்டு ஒரு நாணயத்தை அங்குள்ள கத்தி மற்றும் சுத்தியலினால் இரண்டாக உடைத்து அங்கே போட வேண்டும். அதை செய்தால் அவர்களை கொடுமைபடுத்தியவர்களை பத்ரகாளி கடுமையாக தண்டிப்பாளாம் .
ஒரு காலத்தில் சில நீதிபதிகளே குற்றம் சாட்டப்பட்டவரையும் , குற்றம் சுமத்தப்பட்டவரையும் அங்கே அழைத்து வந்து அவர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பின் வழக்கை விசாரித்ததாகக் கூறுகிறார்கள். பத்ரகாளிக்கு பின் புறத்தில் வேப்ப மரம் உள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் மற்றும் திருமணத் தடை விலக வேண்டும் என வேண்டிக் கொண்டும் பக்தர்கள் அங்கு வருவது உண்டாம். அவை உடனேயே நடைபெறுகின்றனவாம். அந்த ஆலயத்தில் விழா எதுவும் கிடையாது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நிறைய கூட்டம் வருகின்றது.

--------------------------------- 
பின் குறிப்பு :
இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாடப்புரம் மதுரைக்கு அருகில் உள்ளது. அந்த இடத்துக்கு செல்ல திருப்புவனத்தில் இருந்து வாகன வசதிகள் உள்ளன. அது போல திருநெல்வேலியில் இருந்தும் செல்ல நல்ல சாலை உள்ளது. சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதி கேசனை எடுத்து மதுரையை வளைத்தார்.
மேற்கே திருவேடகமும், தெற்கே திருப்பரங்குன்றமும், வடக்கே திருமாலிருஞ்சோலையும் இருக்குமாறு எல்லையை வைத்த இறைவன் கிழக்கில் இருந்த மடப்புரத்தில் தனது வாயையும் சேர்த்து வைத்தபடி இருந்தவாறு மதுரையின் எல்லையை பார்வதிக்கு காட்டினார் என்றும் அதனால் அந்த இடத்தில்தான் சிவபெருமானின் வாயில் இருந்து வெளியான நஞ்சை உண்ட பார்வதி இங்கு காளியாக காட்சி தந்தாள் என்பது இன்னொரு கதை. காளியின் தலை மீது கால்களை தூக்கியபடி நிற்கும் குதிரையின் கால்கள் நிழல் தரும் குடையாக உள்ளது என்கிறார்கள்
- சாந்திப்பிரியா 

Village Deities - 23

$
0
0
 கிராம தேவதைகள் - 23

படம் : http://www.pbase.com/neuenhofer/image/122496671
 தமிழ்நாட்டில் சேலத்தில் ஒரு கிராமத்தில் காணப்படும் 
அங்காள பரமேஸ்வரியின் சிலை 

[இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'
(Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம
தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சென்று கிராம தேவதைகளைப்
பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து கிராம தேவதைகள் 

என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு தன்னுடைய 
புத்தகத்தில் உள்ள படங்களை  பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  
அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா ]

ஏனாடி செங்கோட்டை 
அங்காள பரமேஸ்வரி

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானா மதுரையில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது ஏனாடி செங்கோட்டை என்ற கிராமம். இங்குள்ள ஆலயத்தில் அங்காள பரமேஸ்வரி தன்னுடன் 21 துணை தேவதைகளையும் 64 பிற கடவுட்களையும் வைத்துக்கொண்டு வீற்று உள்ளாள். ஒரு காலத்தில் வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணத்தை மேற்கொண்ட வேடன் ஒருவன் தன்னுடன் தான் வணங்கிய அங்காள பரமேஸ்வரியின் சிலையையும் கொண்டு வந்து இருந்தான். ஒரு நாள் அவன் ஏனாடி சின்னக்கோட்டை கிராமத்தை அடைந்தபோது அங்கு இருந்த ஒரு மரத்தின் அடியில் அதை வைத்து விட்டு பூ பழங்கள் போட்டு அதை பூஜித்தான். அங்காள பரமேஸ்வரிக்கு அந்த இடம் பிடித்துப் போய் விட்டதினால் தான் அங்கேயே இருக்க விரும்புவதாகவும் , அவனை மேற்கொண்டு அவனது யாத்திரையை தொடருமாறும் கூறினாள் . ஆகவே அவளை அங்கேயே விட்டு சென்று விட்டவன் பின்னர் திரும்பி வரவேயில்லை. காலப் போக்கில் அந்த சிலையை மண் மூடியது. எவரும் அதை கவனிக்கவில்லை. அந்த ஊரின் அருகில் இருந்த மரவாநேன்தல் என்ற ஊரை சேர்ந்த யாதவ பால்காரப் பெண்மணி ஒருவள் தினமும் அந்த வழியாக செல்வதுண்டு. ஒரு நாள் அவள் அந்த வழியே சென்றபோது தடுக்கி விழுந்து அத்தனை பாலும் அந்த சிலை மூடி இருந்த மண் மீது மீது கொட்டி விட்டது. அது தினமும் தொடர்ந்து அதே இடத்தில் நடந்தது. அந்த நேரத்தில் தன்னுடைய ஊமை பெண்ணை அழைத்துக் கொண்டு ஒரு பிராமணன் ராமேஸ்வரம் சென்று கொண்டு இருந்தார். அவரும் அந்த வழியாகவே சென்றார். அவருக்கு கிளம்புன் முன் ஒரு அற்புதம் நிகழ உள்ளது என ஆரூடம் கூறப்பட்டு இருந்தது. அவர் தனது ஊமை மகளுடன் அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தபோது மீண்டும் அந்த யாதவப் பெண்மணி பால் பாத்திரத்துடன் அதே இடத்தில் விழுந்தாள். ஊமை பெண் அதைப் பார்த்துவிட்டு ' பால் குடத்துடன் அவள் விழுந்து விட்டாள்' எனக் கத்தினாள். ஆகவே ஊமையை பேச வைத்த அந்த இடத்துக்கு எதோ மகிமை உள்ளது என அவர் கிராமத்திடம் கூற அவர்களும் அங்கு வந்து அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது அங்காள பரமேஸ்வரியின் சிலை கிடைக்க அதை ஒரு வன்னி மரத்தடியில் அவர் பிரதிஷ்டை செய்தார். அப்போது ராமநாதபுரத்து மன்னனான சேதுபதியின் மனைவிக்கு தீராத வயிற்று வலி இருந்தது. பிராமணன் அவரிடம் சென்று அங்கு ஆலயம் அமைக்க உதவி கேட்டபோது அவர் தன் மனைவியின் நோயை குணப்படுத்தினால் அதை செய்வதாக வாக்கு தந்தார். அவர் மனைவி குணம் அடைந்தாள். ஆனால் மன்னன் தந்து இருந்த வாக்குறுதியை மறந்து விட்டார். பின்னர் ஒரு நாள் குதிரை மீதேறி அந்த இடம் வழியே செல்கையில் குதிரை தடுக்கி விழுந்து காயம் அடைந்தது. அங்காள பரமேஸ்வரி ஆலயத்து காவலாயை உதவி கேட்க அவனும், அந்த இடத்தில் இருந்த மண்ணை வீபுதி போல குதிரையின் நெற்றியில் தடவ அது உடனடியாக எழுந்து நின்றது. அப்போதுதான் மன்னனுக்கு தான் அங்கு ஆலயம் அமைப்பதாக கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வர உடனடியாக அங்கு ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்தார். அவளுக்கு உதவியாக இருக்க பாதாள ராக்கு, முத்து ராகாச்சி, முத்து இருளாயி, சந்தனக் கருப்பு, போன்ற இருபத்தி ஒரு துணை கடவுளுக்கும் அறுபத்தி ஒரு படை வீரர்களுக்கும் சிலைகள் வைத்தான். மூன்று கருவறைகள்- அங்காள பரமேஸ்வரி, சந்தனக் கருப்பு மற்றும் இருளாயி போன்றவர்களுக்கு ஏற்பட்டன. அங்காள பரமேஸ்வரி சுத்த சைவம். ஆகவே அவளைத் தவிர்த்து மற்ற தேவதைகளுக்கு மட்டுமே பலிகள் தரப்படுகின்றன.
வருடாந்திர விழா சிவராத்திரிக்கு இரண்டு நாட்கள் முன்னால் துவங்கி எட்டு நாட்கள் நடைபெறும். சிவராத்திரி அன்று அங்காள பரமேஸ்வரி பரி வேட்டை என்ற பெயரில் தான் முன்னர் புதைந்து இடம்வரை ஊர்வலமாக சென்றப் பின் அங்கிருந்து திரும்பி வருவாள். அன்றைய தினம் அவளுக்கு ஒன்பது விதமான தானியங்களை காணிக்கையாகத் தருவார்கள்.
மூன்று வருடங்களுக்கு ஒரு முறை அங்காள பரமேஸ்வரியின் துணை தேவதையான பத்திர காளிக்கு கர்பிணி ஆடு ஒன்றை பலியாகத் தருகிறார்கள்.
அங்காள பரமேஸ்வரிக்கு நிறைய பக்தர்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் உண்டு. ஒரு முறை வைகை நதி நீர் கரை புரண்டு ஓடி அந்த ஆலயத்துக்குள்ளும் தண்ணீர் வந்துவிட்டது. ஆகவே அவளுடைய பக்தர்கள் மஞ்சள் கயிற்றை மஞ்சளுடன் சேர்த்துக் கட்டி அவள் கழுத்தில் போட்டு வைத்தப் பின் அதை ஒரு பானையில் வைத்து நதியில் போட வெள்ள நீர் உள்ளே புகவில்லையாம். வெள்ளமும் வடிந்ததாம்.

Village Deities- 24

$
0
0
 கிராம தேவதைகள் - 24
 

சுந்தரபாண்டியம் ஆலயத்தில் உள்ள சிலை 

சுந்தரபாண்டியம் 
வைகுண்டமூர்த்தி 

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

மதுரையில்  இருந்து  ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் மதுரையில் இருந்து பதினைந்து கிலோ தொலைவில் உள்ளதே சுந்தரபாண்டியம் எனும் கிராமம். அந்த இடத்தை மூன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் மாரவர்ம பாண்டியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஒரு முறை அந்த ஊரின் அருகில் இருந்த காட்டின் வழியே ஒரு வயதான தம்பதியினர் நடந்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்களது எதிரில் திடீரென ஒரு எரும்புப் புற்று தோன்றியது மட்டும் அல்லாமல் அது வளரவும் துவங்கியது. ஆகவே ஆவலினால் அதற்குள் என்ன உள்ளது என்பதைப் பார்க்க அந்த வயதானவர் தனது வாளை புற்றில் நுழைத்துப் பார்க்க அது ஒரு கல்லில் மோதி அதில் இருந்து ரத்தம் வந்ததாம். ஆகவே ஊருக்குள் சென்று கிராமத்தினரை அழைத்து வந்து அந்த புற்றை விலக்கி விட்டுப் பார்த்தபோது அங்கு வைகுண்ட மூர்த்தி அவர் மனைவிகளுடன் சிலையாக இருந்தார். அதை வெளியில் எடுத்தப்  பின் அது குறித்து  மன்னனிடம் கூற அவரும் அங்கு வந்து அதைப் பார்த்துவிட்டு  அங்கு ஆலயம் எழுப்பினார் . அதன் பின் அதன் அருகில் இருந்த மலையில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியால் அந்த மலை மீது இருந்த பெரிய கருப்பச்சாமி ஆலயத்தில் இருந்த பெரிய கருப்பச்சாமியின் சிலை அடியோடு வெளி வந்து அந்த ஆலயத்தின் முன்  விழுந்தது. ஆகவே வைகுண்ட சாமியின் அனுமதியோடு அவருக்கும் அங்கு ஒரு ஆலயம் அமைத்தனர். அது முதல் பெரிய கருபச்சாமி வைகுண்ட சாமிக்கு உதவி வருகிறார். மணப்பாறை கிராமத்தில் மாமுண்டிக் கறுப்பர் என்பவருக்கும் ஆலயம் இருந்தது. அவர் சுந்தரபாண்டியத்துக்கு அடிக்கடி வருவது வழக்கம். ஆகவே அவரையும்  பெரிய கருப்பச்சாமி மூலம் வைகுண்டர் அங்கு வந்து தங்குமாறு அழைத்தார். அங்கு வர சம்மதித்த மாமுண்டி கருப்பரோ  தான் வரத் தயாராக உள்ளதாகவும், ஆனால் பெரிய கருபச்சாமி தனது உத்தரவையும் மதிக்க வேண்டும் என்று கூற அதற்கு ஒப்புக் கொண்டவுடன் அவரும் அங்கு வந்தார்.
அந்த காலத்தில் ஒரு சமயம் மந்திரக் கலை தெரிந்து இருந்த பக்கத்து நட்டு கேரளத்து அரசன் தனது சக்தியினால் சுந்தரபாண்டியத்தில் மழை பெய்யாமல் மழையை கட்டி வைத்து விட்டான். ஆகவே மாமுண்டி கருப்பு கேரளாவுக்குச் சென்று சொல்ல முடியாத வயிற்று உபாதையை மன்னனின் மனைவிக்குத் தர மன்னன் தனது மனைவியின் உபாதையைத் தீர்க்க மாமுண்டிக் கருப்பின் உதவியை நாடினார். அவரோ மன்னன் மந்திரத்தினால் கட்டி வைத்து இருந்த மழையையும் நீரையும் அவிழ்த்து விட்டால் தான் அதை தீர்ப்பதாகக் கூற மன்னனும் அதை செய்ய சுந்தரபாண்டியத்தில் பெரும் மழை பெய்து நாடு செழிப்படைந்தது.
இன்னொரு முறை அந்த ஆலயத்தின் வழியே சென்ற ஆங்கிலேயன் அந்த ஆலயத்தை அவமதிக்க பெரிய கருப்பச்சாமி அவன் குதிரையை ஆகாயத்தில் தூக்கி அடித்தார். அந்த ஆங்கிலேயன் ஆலயத்தின் சக்தியை அறிந்து கொண்டு தன் குதிரையை அந்த ஆலயத்துக்கே தந்து விட்டுச் சென்றான். அதை குறிக்கும்  வகையில்   ஆலயத்தில் பதினைந்து அடி உயர குதிரையின் சிலை காணப்படுகிறது.
அந்த ஆலயத்தில் அவர்களைத் தவிர பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன், லாட சன்யாசி, ஏழு கன்னிகைகள், பூ மாலை ராஜா, மாடத்தி, மாடசாமி, இருளப்பசாமி , வீரபத்ரன், மீனாக்ஷி, உத்திரகாளி, பத்ரகாளி மற்றும் மாரியம்மன் போன்றோரின் சிலைகளும் உள்ளன. அவர்களைத் தவிர அந்த ஆலயத்தைக் கண்டு பிடித்த வயதான தம்பதியினர்களுடைய சிலையும் உள்ளது.
ஆலயத்தின் வெளியில் உள்ள வேப்ப மரத்தடியில் சுந்தர  மகாலிங்கம் உள்ளது. ராக்சி அம்மனையும் பேச்சியம்மனையும் குழந்தை வரம் கேட்டு வணங்குகிறார்கள். வைகுண்ட மூர்த்தியை பேய் பிசாசு தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்க வணங்குகிறார்கள். பெரிய கருப்பணச்சாமிக்கு ஆடு வெட்டப்பட்டு அதன் ரத்தம் ஒரு பாத்திரத்தில் பிடிக்கப்படுகின்றது. அதனுடன் அரிசியை கலந்து அவருக்கு படைக்கின்றார்கள். அதன் பிறகு சாமியாடிகள் அதை எடுத்து அருகில் உள்ள புளியமரத்தின் மீது உள்ளதாக கருதப்படும் பேய் பிசாசுகளுக்கு என தூக்கி எறிவார்கள். அப்படி போடப்படும் அரிசி உருண்டைகள் பூமியில் திரும்ப விழுவது இல்லையாம். தமிழ் புது வருடப் பிறப்பன்று விழா நடைபெறும்.

-----------------------------
பின் குறிப்பு :
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிராம ஆலயமான சுந்தரபாண்டியத்தில் பெரியகோயில் என்றழைக்கப்படும் வைகுண்ட மூர்த்தி ஆலயத்தில் - ஒரே ஆலயத்தில் -  தர்மசாஸ்தாவாகவும் (ஐயப்பனாகவும்), அய்யனாராகவும் இருவேறு உருவங்களில் எழுந்தருளி அப்பகுதி மக்களை காத்து வருகிறார்.  இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ள குதிரை பீடத்தில்  வைகுண்டமூர்த்தி அமர்ந்து கொண்டு ஐயப்பன் உருவில்   பரிவேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது. வைகுண்டவாசியான வைகுண்டமூர்த்தியினர்  பூலோக உயிர்களை காப்பதற்காக பூலோகத்தில் வந்து  நிலை கொண்டுள்ளார் என்பது நம்பிக்கை.
மதுரையில் இருந்து சுந்தரபாண்டியத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளன  -  சாந்திப்பிரியா 
Viewing all 460 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>