Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all 460 articles
Browse latest View live

Chandi Saptha Sathi - 1

$
0
0
சண்டி சப்த சதி -1

சாந்திப்பிரியா 

சண்டி சப்தசதி என்பது என்ன? தேவி உபாசனைகளைக் குறிக்கும் தேவி மகாத்மியம் எனும் மந்திர நூலாகும். 400- 500 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு உள்ள இந்த மகாத்மியம் மார்கண்டேய முனிவரால் இயற்றப்பட்டது. பதிமூன்று அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்பட்டு உள்ள இந்த பாராயண நூலில் உள்ள 700 ஸ்லோகங்களில் காணப்படும் ஒவ்வொரு சொல்லும் சக்தி மிக்கது. மந்திர சக்தி வாய்ந்தது. சப்த சதி என்பதற்கு எழுநூறு என்ற அர்த்தம் உண்டு. சப்தசதி என்பது ஏழு சதி எனும் தேவதைகளையும் குறிக்கும். இதை முறைப்படி துதித்து ஸ்தோத்திரம் செய்தால் வேண்டியப் பலனை அடையலாம் என்ற நம்பிக்கை உண்டு.
இந்த ஸப்த சதியை முறைப்படி படித்து பாராயணம் செய்தால் படிப்பவர்களுக்கு ஏழ்மையில் இருந்து விடுதலை கிடைக்கும், பகைவர்களை வெல்லும் திறமை உண்டாகும். மனதில் தம்மையே அறியாமல் ஏற்படும் பீதி மற்றும் அச்சம் விலகும்.
தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டு ஒன்பது நாட்கள் ஊசி மீது தவத்தில் இருந்த பராசத்தியானவள்  தானே மஹிஷாசுரமர்தினியாகவும் அடுத்த மூன்று நாட்கள் மகாலஷ்மியாகவும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் இருந்து தவம் புரிந்து அசுரர்களைக் கொன்று அழித்தாள்.
தேவி உபாசனைக்கு உரிய அனைத்து நூல்களிலும் சிறந்ததே தேவி சப்த சதி என்பதாகும். பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் பிரதம சரிதம், மத்தியம சரிதம் மற்றும் உத்தம சரிதம் என மூன்று பாகங்களாக உள்ளது.
முதல் பாகத்தில் முதல் அத்தியாயம் (1) மட்டுமே உள்ளது. அது பிரும்மாவினால் படைக்கப்பட்ட இரண்டு அசுரர்களான மதுகைடபர் வதத்துடன் முடிவடைகின்றது.
அடுத்த பாகத்தில் அத்தியாயம் இரண்டு முதல் நான்குவரை (2-4) உள்ளது. இதில் மகிஷாசுரமர்தனின் வதம் உள்ளது.
மூன்றாவது பாகத்தில் அத்தியாயம் ஐந்து முதல் பதிமூன்றுவரை (5-13) உள்ளது.  இது அனைத்து விருப்பங்களும் நிறைவேற பிரார்த்திக்கும் வகையில் உள்ளது.
இந்த பாராயணத்தில் உள்ள மூன்று வடிவு கொண்ட பராசக்தியின் உருவை சின்மயம் என்று சொல்லுவதுண்டு. திரிபுரா என்ற பெயரிலும் அவளை அழைப்பார்கள்.
இந்த சரிதத்தை பாராயணம் செய்வதின் மூலம் மூன்று வேதங்களான ரிக், யஜுர் மற்றும் சாம வேதத்தை பாராயணம் செய்தப் பலனைத் தரும் என்பது மட்டும் அல்ல  அக்னி, வாயு மற்றும் சந்திரன் என்ற மூன்று தத்துவங்களையும் குறிப்பதாகும்.
சப்த சதி என்பது ஏழு சதி எனும் தேவதைகளையும் குறிக்கும் என்பதாக நம்பப்படும்.  அந்த ஏழு தேவிகள் யார் என்பதை விவரமாக தெரிவிக்கவில்லை. அது குறித்து இரண்டு அபிப்பிராய பேதங்கள் உள்ளன. ஒரு சாரர் அந்த ஏழு சதிகள் நந்தா, சாகாம்பரி, பீமா, ரத்த தந்திகா, துர்கா, பிராம்மரி மற்றும் சதாக்ஷி என்று நம்பினாலும் அந்த சதிகள் பிராம்மி, வராஹி, வைஷ்ணவி, சாமுண்டா, மகேஸ்வரி, கௌமாரி மற்றும் இந்திராணி என்பவர்களே என்பதை விவரம் அறிந்தவர்களும் பெரும் பண்டிதர்களும் கூறுகிறார்கள். அதுவே சரியானதாகவும் இருக்கலாம்.
தேவி சப்த சதி என்பது ஏதோ செளந்தர்யலஹரி போன்றது அல்ல. இதனை பாராயணம் செய்யத் துவங்கும் முன் அதை நல்ல குருவிடம் இருந்தே முறைப்படி தீக்ஷை எடுத்துக் கொண்டு துவங்க வேண்டும்.
.........தொடரும் 

Chandi Saptha Sathi -2

$
0
0
சண்டி சப்த சதி -2

சாந்திப்பிரியா 



சண்டி சப்த சதிக்கு துர்கா சப்த சதி என்று பொருள். துர்கா என்றால் அணுகுவதற்கு அறியவள் என்பதும் ஒரு பொருள் ஆகும். துர்கா என்றால் துர்கதி அடையாமல் நம்மை காப்பாற்றுபவள் என்றும் அர்த்தம். தேவி சூக்தத்தில் அம்பிகை கூறுகிறாள் ''எவன் என்னை தியானிப்பானோ, எவன் என்னிடம் சரண் அடைகிறானோ அவனை நான் ரிஷியாகவும், பெரும் மேதையாகவும் ஆக்கிடுவேன்''
அதனால்தான் கூறுவார்கள் இந்த உலகம் என்ற மாயையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும். அன்னை கூறுவாள் '' இந்த உலகில் நான் ஒருவளே இருக்கிறேன். என்னைத் தவிர என்னைப் போன்ற இரண்டாமவர் கிடையாது. அனைத்தையுமே படைத்தவள் நான். ஒன்றாகி இருந்த பிரும்மமான  நான் இரண்டாகி என்னைப் பெருக்கிக் கொண்டேன் என்பதின் காரணம் உங்களைக் காக்கவே''.
ஆக்குவதும், காப்பதும் மற்றும் அழிப்பதும் தன் முக்குணத்திலான சத்வ, ரஜஸ், தமஸ் என்றவற்றால் நடத்தி வைக்கும் மகா சக்தி அவள். மகா காளி, மகா லஷ்மி மற்றும் மகா சரஸ்வதி  என மூன்று ரூபங்களை மும்மூர்த்திகளைப் போல  எடுத்து உலகைக் காத்தவள் அவளே நம்மையும் இந்த உலகின் மாயையில் இருந்து விடுதலைப் பெற உதவ வேண்டும். அக்ஞானத்திற்கு  ஆதாரமாக மாயையை ஒழித்து  ஞானத்தை தர வந்தவளின் மகிமையை எடுத்துரைக்க எழுதப்பட்டதே சண்டி சப்த சதி எனும் நூல். தமது பரப்பிரும்ம  ரூபத்தை அம்பிகை எப்படி வெளிப்படுத்தி போதிக்கிறாள் என்பதைக் கூறுவதே  தேவி மகாத்மியம் என்ற இந்த  மகாத்மியம். 
சண்டி சப்த சதியில் வரும் ஒரு கதையில் சுரதன் என்ற அரசன் மற்றும் சமாதி எனும் வைசியன் என்ற இருவரும் தமது இல்லங்களில் இருந்து விரட்டப்பட்டவர்கள். வனத்திலே சந்தித்த அவர்கள் சுமேதஸ் என்ற மஹரிஷியிடம் தமது மனக் குறைகளைக் கூறி அழுதபோது அவர் அவர்களுக்கு அறிவுரை செய்தார்.
அரசன் கேட்டான்  ' மகா முனிவரே, நான் செய்யாத தர்மம் இல்லை. செய்யாத நற்காரியங்கள் இல்லை. என்னை சுற்றி இருந்தவர்கள் என்னை விரட்டி விட்டு வேதனைப் படுத்தினார்கள். இதற்கு என்னக் காரணம் ?'' என்று கேட்டபோது அந்த ரிஷியானவர் அவனிடம் கூறினார்:
'' மன்னா, நீ நல்லவை பலவற்றையும் செய்தாய். ஆனால் நீ செய்த பெரும் குற்றம் உன்னை வளர்த்தவர்களை, உனக்கு உதவி செய்து உன்னை முன்னேற்றம் அடைய வைத்தவர்களை, உன்னை சேர்ந்தவர்களை ஒரு கட்டத்தில்  உதாசீனப்படுத்தினாய். அவர்களது மனதை நோக வைத்தாய். மனதிலே தூய்மையானவன் செய்யும் காரியம் அல்ல அவை. தேவியை ஆராதிப்பவனின் மனது தூய்மையுடன் இருந்தால்தான் அவன் நல்ல பலனைப் பெற இயலும்.
நீ நல்லவனாக இருந்தபோது தேவியை ஆராதித்ததினால் உனக்கு அருள் கிடைத்தது. அப்படி கிடைத்த அருளினால் நீயும் அரசனானாய். ஆனால் அகங்காரத்தினால் ஒரு கட்டத்திலே அந்த தேவியே  உன்னிடமே சரண் அடைந்து விட்டவளைப் போல  ஒரு பிரமையை உலகிற்கு  காட்ட நினைத்தாய். மற்றவர்களைத் தூற்றிக் கொண்டே உன்னை  நல்லவனாக, வல்லவனாக, தேவிக்கு பிரியமனானவனாக காட்டிக் கொள்ள நினைத்து அதை அனைவருக்கும் கூறத் துவங்கினாய்.  அந்த தேவி உனக்கு மட்டுமே விசேஷமான அருள் புரிந்தது போலக் காட்டிக் கொண்டாயே, அதுவே நீ செய்த அற்பத்தனம்.  நீ யார், என்ன நிலையில்  இருந்தாய் என்பதை எண்ணிப் பார்க்காமல் திடீர் எனக் கிடைத்த ஆடம்பர வாழ்வில்  மதி இழந்து  அகங்காரம் கொண்டு, உண்மைகளை மறைத்து பொய்யை பரப்பிய அந்த ஈனச் செயல்களை கண்டு உன் சுக துக்கங்களில் பங்கு கொண்டு உன் வாழ்க்கையில் நீ முன்னேற உதவியவர்கள், உன்னுடன் தோளோடு தோளாக நின்றவர்கள்  மனம் வெதும்பினார்கள். அவர்களது வெந்த மனம் உன் வாழ்கையை வேக வைத்து விட்டது. முன் ஜென்மத்தின் உன் பெற்றோர்கள் செய்த புண்ணியத்தினால் உனக்கு இந்த ஜென்மத்தில் உனக்கு கடவுள் கொடுத்த அருளை தவறாகப் புரிந்து கொண்டு உனக்கு மட்டுமே அந்தக் கடவுள்  மிகப் பெரிய அளவில் அருள் புரிந்துள்ளதாக கருதிய மூடனே நீ  என்பதினால் நீயும் ராஜ்யத்தை இழந்தாய். இங்கு வந்து  நாதியற்று நிற்கிறாய்.  இதற்குக் காரணம் நீயேதான்.
அன்னையின் தத்துவம் என்ன தெரியுமா? ' முழு மனதுடன் அவளை மட்டுமே துதி. ஆனால் அதை செய்யும்போது  அதை நல்ல மனதுடன் செய். அவளை  மட்டுமே முழுமையாக  நம்பு.  ஆனால் உன்னிடம் அன்பு செலுத்தியவர்களை, உனக்கு நல்லது செய்தவர்களை  பழித்துக் கொண்டே அவளை மட்டுமே துதித்தால் அதை அவள் உன்னிடம் மட்டுமே கருணைக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு மாயை தோற்றத்தை நீ உணரலாம். அது உன் அறியாமை. ஆனால் களங்கமுள்ள மனதுடன் செய்யப்படும்  துதியை அவள்  ஏற்பதில்லை. தேவியை எதற்கு துதிக்கிறாய்? மற்றவர்களை தூஷித்துக் கொண்டே இருக்கவா? ஒருவனுக்கு  தேவை இந்த உலகின்  மாயையில் இருந்து விடுபட வேண்டும்.
ஆனால்  அந்த மாயையிலேயே உழன்று கொண்டு,  நல்லவன் போல காட்டும் பிரமையை ஏற்படுத்திக் கொண்டு அவளிடம் சென்று பிரார்த்தித்தால் அவள் உனக்கு அருள் புரிவாளா என்ன?  அவளிடம் சரண் அடைய வேண்டும் என்றால் முதலில் உன் மனதை தூய்மையாக வைத்துக் கொண்டு அவளை துதிப்பாய். அப்போதுதான்  அதை அவள்  ஏற்று உனக்கு மாயையில் இருந்து விடுதலை தருவாள் '.
இதையெல்லாம் மனதில் கொண்டு தூய மனதுடன் நவராத்திரியில் சப்த சதியை  நீ  துதித்தால் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவாய்''. அதைக் கேட்ட மன்னன் தான் செய்த தவறுகளை எண்ணிப் பார்த்தான். தான் செய்துள்ள தவறுகளே தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்பதை உணர்ந்தான்.  இனியாவது திருந்தி வாழலாம்  என எண்ணியவன்  சப்த சதியை ஜெபிக்கும் முறையைக் கேட்க அவரும் அதை  கூறலானார்.
............தொடரும் 

Chandi Saptha Sathi -3

$
0
0
சண்டி சப்த சதி -3

சாந்திப்பிரியா 

மேதஸ் ரிஷி கூறலானார் '' மன்னனே கேள் . சப்த சதியை பாராயணம் செய்ய சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும். அதை பாராயணம் செய்யும்போது உச்சஸ்தாயியில் பாராயணத்தை செய்யாமல் மிகவும் மெதுவாகவும், நமக்குள் மட்டும் கேட்கும் குரலிலும் மட்டுமே படிக்க வேண்டும். இதை பாராயணம் செய்யும் முன்னால் சில அத்தியாயங்களை முதலில் படிக்க வேண்டும். இதை பாராயணம் செய்ய நித்திய கர்மாவை முடித்துக் கொண்டு  பரிசுத்தமான இடத்தில் அமர்ந்து கொண்டு  ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு அதன் பின்னரே கீழ் கூறி  உள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் பாராயணதைக் கைக்கொள்ள  வேண்டும். 
ஆனால் அதே நேரத்தில் தேவி மகாத்மியத்தை பாராயணம் என்று  செய்யாமல் நேரடியாகப் படிப்பதும் வாழ்க்கைக்கு தேவையான பலவிதமான நல்ல பலனையே தரும் என்றாலும், ஒருவனுக்கு உலகத்தில் இருந்து - அதாவது மாயையில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் நல்ல குருவிடம் தீட்ஷை பெற்றுக் கொண்டு முறைப்படி அதை மந்திர பாராயணம் செய்ய வேண்டும்.  ஸ்லோகங்கள் இல்லாமல்  நேரடியாகப் படிக்கும்  தேவி மஹாத்மியத்தின் கதை மந்திர பாவங்களைக் கொண்டது அல்ல.
சிதம்பர ரஹஸ்யத்தில் பரமேசுவரர் பார்வதிக்குக் கூறினார் ? 'தேவியே! ஸப்த சதீயின் மகிமையைக் கூறுகிறேன், கேள். அதைப் படிப்பவர் ஏழ்மையினின்று விடுபடுவர், மாயையில் இருந்து விடுதலை ஆவார்கள். சின்மயமான திரிபுரா என்பவள் மூன்று வடிவைக்  கொண்டவள். அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டுப் பரதேவதை காளி உருவைக் கொண்டாள். அவளே காலாந்தரத்தில் லக்ஷ்மியாகவும் ஸரஸ்வதியாகவும்  தோன்றினாள்'. 
அப்படி அவர் கூறியதைக் கேட்ட பரமேஸ்வரி அழகாக சிரித்தாள். அதைக் கண்ட சிவபெருமான் துணுக்குற்று அவளிடம் கேட்டார் ' பத்தினியே, நீ ஏன் நான் கூறியதைக் கேட்டு சிரித்தாய்?' 
பரமேஸ்வரி கூறினாள் 'நாதா அவை அனைத்துமே என்னுள்  இருந்து உருவானவைகள்தானே!  அப்படி இருக்கும்போது நானே எடுத்த அவதாரத்தை எனக்கே ஒரு புதிர் போலக் கூறியதினால் அதைக் கேட்டு சிரித்தேன் ' என்றாள். அதைக் கேட்ட பரமேஸ்வரரும் தன்னை மறந்து அவளுடன் சேர்ந்து சிரித்தார். அவர்கள் சிரித்த சிரிப்பினால் உலகமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அவர்கள் ஆனந்தமயமாக சிரித்த அந்த ஷணத்திலே உலகில் வேறெங்குமே துன்பம் இல்லை. அந்தக் கோலம் ஏற்பட்டதின் காரணம் சப்த சதி எனும் பெயரினால் விளைந்தவை அல்லவா?  ஆகவேதான் கூறுகிறேன் மன்னா, நீயும் தேவியான அந்த பரமேஸ்வரியைச் சரணடைவாய். அவளை ஆராதித்தால் அவள் இகலோக இன்பங்களையும் ஸ்வர்க்கத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பாள்''.
இப்படியாகக் கூறியவர் சப்த சதியை பாராயணம் செய்ய தேவையான  நியமங்களைக் கூறலானார்.

கவசம்
ஒரு போர் வீரன் கவசத்தை அணிந்து கொண்டு போருக்குப் போவது போன்ற மந்திரம் இது. பத்து திக்குக்களின் சக்திகள், சப்த மாத்ருகைகள் (பெண்) , பல இடங்களிலும் பல கோலத்துடன் காட்சி தரும் சக்திகள் என அனைவரையும் அழைத்து வணங்கி, நம் ( பாராயணம் செய்பவரின்) உடலின் புற மற்றும் அக உறுப்புக்கள், சுவாசிக்கும் பிராண்ணன், மனைவி, உடன் பிறந்த மக்கள், புத்திர புத்திரிகள், செல்வம் என அனைத்தையும் காக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு பிரார்த்திக்கப்படுகிறது. ஆகவே சப்த சதியை பாராயணம் செய்யும் முன் மற்ற இடைஞ்சல்களில் இருந்து நம்மைக் காத்தருள ஓத வேண்டிய மந்திரத்தையே கவச மந்திரம்'' என்று கூறியவர் கவச மந்திரத்தையும் அவர்களுக்குக் போதித்தார். (கவச மந்திரம் சுமார் 101 வரிகளானது என்பதினால் அதை நான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா).

அர்க்கலம்
மேதஸ் ரிஷி அடுத்து பாராயணம் செய்ய வேண்டிய அர்க்கலம் என்பதைப் பற்றிக் கூறினார். ''அர்க்கலம் என்பது எந்த ஒரு காரியத்தையும் வெற்றியுடன் செய்யும்போது ஏற்படக் கூடிய இடையூறுகளை அகற்றுவதற்காக செய்ய வேண்டிய பிரார்த்தனை ஸ்லோகம். அதனால்தான்  சப்த சாதியைப் பாராயணம் செய்யும்போது ஏற்படும் இடையூறுகளை தடுக்க இந்த தோத்திரத்தை படிக்காமல் தேவி மகாத்மியத்தைப் படித்தால் பூரண பலன் கிடைக்காது. இதைப் படிப்பதினால் சிறந்த பல பலன்கள் கிட்டும்'' என்பதாகக் கூறிய பின்னர் அந்த சுலோகங்களையும் கூறினார். (அந்த ஸ்லோகங்களை நான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா ).
...........தொடரும்

Chandi Saptha Sathi - 4

$
0
0
சண்டி சப்த சதி -4

சாந்திப்பிரியா

கீலகம் :
கீலகம் என்றால் கொடுத்துப் பெறுதல் என்பது பொருளாகும். எதற்காக கீலகம் என்ற பெயரில் மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டியது அவசியம் என்றால் தன்னிடம் உள்ள அனைத்தையும்  தேவியிடம் தந்து விட்டு அவளை சந்தோஷப்படுத்தி  தன்னை  பற்றற்ற நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவளும் நமக்கு தேவையானதைத் தருவாள்.  'தன்னிடம் உள்ள அனைத்தையும்  தேவியிடம் தந்து விட்டு' என்று கூறுவது செல்வத்தை  குறிக்க அல்ல. தன்னையே என்பது  முழுமையான சரணாகதி என்ற தத்துவத்தையே இங்கு குறிப்பிடுகிறது.  சப்த சதியை பாராயணம் செய்யத் துவங்கும் முன்னர் கீலகம் எனும்  மந்திரத்தை ஓதி தேவியை தியானிக்க வேண்டும். (அந்த ஸ்லோகங்களைநான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா).

ராத்திரி ஸூக்தம்  
உலக இயக்கம் அனைத்தும் தற்காலிகமாக மறைந்து இருக்கும் காலமே இரவு என்பது. அதுவே ஜீவராத்திரி அல்லது ஈஸ்வர ராத்திரி எனப்படும். அதாவது உயிருள்ள ஜீவன்கள் ஓய்வெடுக்கும் காலம் அந்த நேரம். அப்போது பரம்பொருள் மட்டுமே விழித்த நிலையில் இருக்கும். ஈஸ்வர ராத்திரி எனப்படும் இது இந்த சந்தியா காலத்தில்தான் ராத்திரி ஸூக்தம்   பாராயணம் செய்யப்படுகிறது.  ராத்திரி சுக்தம் ஏன் படிக்கப்படுகிறது என்றால் இரவு என்பது அஞ்ஞானத்தைக் குறிக்கும். பகல் என்றால் ஞானத்தைக் குறிக்கும்.  ஸூக்தம்   என்றால் பிரார்த்தனை அல்லது  பாராயணம் என்று பொருள்படும். ஆகவேதான் மனதில் உள்ள அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தைத் தர வேண்டும் என்பதற்காக அது இரவு தேவதையை வேண்டிக் கொண்டு படிக்கப்படுகிறது. அதாவது 'என்னுடைய அஞ்ஞானத்தை விலக்கி ஞானத்தைக் கொடு' என்பதான தத்துவம். 
சப்த சதியை படிப்பதற்கு  முன்னால்   ராத்திரி   ஸூக்தமும் சப்த சதிக்கு பின்னால் தேவி    ஸூக்தமும் படிக்கப்பட வேண்டும் என்பது நியதி. உலகில் உள்ள ஒவ்வொரு இயக்கமும் தற்காலிகமாக ஒய்வு எடுத்தாலும் அந்த வேளையிலும் சக்தியின் இயக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆகவேதான் காலை மாலை என்ற இரண்டையும் ஆட்கொண்டு உள்ள இரண்டு  தேவதைகளை ராத்திரி தேவதை என்றும் காலை தேவதையை உஷை என்றும் அழைப்பார்கள். உஷை என்பவள் சூரியனின் மகள். இருவருமே சகோதரிகளே. (அந்த ஸ்லோகங்களை நான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா ).
 
நவாக்ஷாரி 
 நவா என்றால்  ஒன்பது என்று அர்த்தம். அந்த ஒன்பது அட்ஷரங்களை கொண்ட மந்திரத்தை, ஒன்பது ரூபங்களைக் காட்டும் துர்கா தேவியை துதிப்பதையே சண்டி காயத்திரி என்பார்கள். நம்முடைய மனதில் உள்ள மாயையை ஒழித்திட தினமும் இருபது முறை  சண்டி காயத்திரியை படிக்க வேண்டும் என்பார்கள். இதை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும்போதுதான் ஒருவர் பிரும்மன் என்ற நிலையை அடைவார். அங்கிருந்தே மாயையை விளக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். அந்த நிலையே ஆனந்தம் என்பது. அந்த நிலைக்கு அதிபதியானவளே ஆனந்தி எனும் தேவி. அவளே  மாயையை அழிக்கும் சாமுடா தேவி என்பவள். இந்த நவாக்ஷாரி மந்திரத்தின் தேவதைகள் யார் தெரியுமா? அவர்களே மகா காளி, மகா லஷ்மி, மற்றும் மகா சரஸ்வதியானவள். சப்த சாதியின் முக்கிய மந்திரமே  நவாக்ஷாரி மந்திரம். நவாக்ஷாரி மந்திரத்தை பாராயணம் செய்யாமல் சப்த சதியை படித்தால் அதற்க்கு பூரண பலன் கிடைக்காது. (அந்த ஸ்லோகங்களை நான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா ).
...............தொடரும் 

Chandi Saptha Sathi - 5

$
0
0
சண்டி சப்த சதி -5

சாந்திப்பிரியா 


சண்டி சப்த சதியை படிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட சண்டி சப்த சதி மூன்று சரித்திரங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் பிரதம சரிதம், மத்தியம சரிதம் மற்றும் உத்தம சரிதம்என மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
பிரதம சரிதம் எனும் முதல் பாகத்தில் முதல் அத்தியாயத்தில் லோக மாயைப் பற்றியும் அத்கில் சிக்குண்டு தேவர்கள் முதல் மற்றவர் அனைவரும்  மாயையில் சிக்கி தவிப்பதையும் மாயையான அந்த லோக மாதாவை, அதாவது லோக மாதா எனும் மகா காளியையே  வழிபட்டு அவர்களது மாயையில் இருந்து விடுபட அவளைப் பிரார்த்திப்பதைக் கூறுகிறது. அதில் உள்ள லோக மாதாவான மாயைக்கு விஷ்ணுவே  உட்படுகிறார். இதில் பிரும்மா லோகமாதாவை துதிக்கும் ஸ்தோத்திரமே மிக முக்கியமானது. மதுகைடப சம்ஹாரம் இதில் வருகின்றது.  
மத்யம சரிதம்எனும் இரண்டாம் பாகத்தில் உள்ள அத்தியாயம் இரண்டு முதல் நான்குவரை  மகிஷாசுரமர்தனின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் தேவர்கள் தேவியை ஸ்தோத்திரம் செய்வது மற்றும் மகிஷாசுரனின் சைனியம் மற்றும்   மகிஷாசுரனின் வதமும் விவரிக்கப்பட்டு உள்ளது.  சகல தேவர்களின் உடல்களில் இருந்தும் பல தேவிகள் வெளிப்பட்டு மகாலஷ்மி எனும்  மகிஷாசுரமர்தினியான  ஒரே அம்பிகையாகிறாள். 
உத்தம சரிதம்எனும் மூன்றாவது பாகத்தில் அத்தியாயம் ஐந்து முதல் பதிமூன்றுவரை (5-13) உள்ளது.   இதில் ஆறாம் அத்தியாயத்தில் தும்ரலோசன வதம், ஏழாவதில் சண்ட-முண்ட அசுரர் வதம், எட்டாவதில் ரக்தபீஜ வதம், ஒன்பதில் நிசும்ப வதம், போன்றவை உள்ளன.   இது அனைத்து விருப்பங்களும் நிறைவேற பிரார்த்திக்கும் வகையில் உள்ளது.
இந்த உத்தம சரிதத்தின் பன்னிரண்டாவது அத்தியாயத்தில் சப்த சதியினைப் பாராயணம் செய்வதினால் ஏற்படும் நன்மைகளை தேவியே கூறுவது போல அமைந்துள்ளது.
அந்த பன்னிரண்டாம் அத்தியாயத்தில் தேவி கூறுகிறாள் '' இந்த துதிகளினால் யார் என்னைப் பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுடைய கஷ்டங்களை நான் போக்குவேன். அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் நவமி போன்ற தினங்களில் இதைப் படிப்பவர்களை பாவங்கள் அண்டாது.  இந்த மகாத்மியத்தைப் படித்த மட்டிலேயே அனைத்து கஷ்டமும் விலகும். இது எங்கு படிக்கப்படுமோ அங்கு நான் நிரந்தரமாக இருப்பேன். இதை பூஜை, ஹோமங்களில் படிக்கையில் எதிரிகள் ஓடி ஒளிவார்கள் . அவர்களது குலமும்  கோத்திரமும் மேன்மையாக  விளங்கும். அவர்களின் இல்லங்களில் மங்களம்  நிலைக்கும்.  எங்கெல்லாம் பூஜைகளும், அக்னி காரியங்களும் ( ஹோமம்) நடைபெறுமோ அங்கெல்லாம்  இந்த மான்மியம் படிக்கப்பட  வேண்டும்.  வருடம் முழுவதும் செய்யப்படும் கோதானம், அன்னதானம், தூபதீபம், மற்றும் புஷ்பதானம் போன்றவற்றினால் கிடைக்கும் பலனைக் காட்டிலும்,  ஒரே ஒரு தடவை  இந்த மான்மியத்தைப் படிப்பதின் மூலம் அதே பலன் கிடைக்கும்''.
சப்த சாதியின் பூர்வாங்க பாராயணங்களுக்குப் பிறகு மூன்று சரிதங்களைப் பாராயணம் செய்தப் பின் முடிவாக சப்த சாதியின் உத்திராங்கம் எனும் பகுதியைப் படித்து முடிக்க வேண்டும். அந்த உத்திராங்கத்தில் வருவதே தேவி  ஸுக்தம் எனப்படுவது.  இதை வாக் ஆம்ருணிய ஸுக்தம்  என்றும் கூறுவார்கள். இந்த ஸுக்தத்தை  அமைத்தவர் ஒரு பெண்  ரிஷியாவார். அவர் பெயர் வாக் தேவதை.
.............தொடரும் 

Chandi Saptha Sathi - 6

$
0
0
சண்டி சப்த சதி -6

சாந்திப்பிரியா 



சில ஸூக்தங்களுக்கு பெண்களே ரிஷிகளாக உள்ளார்கள். ரிக் வேதத்தில் இந்த மாதிரியான ஸூக்தங்கள் சில உள்ளன அவற்றில் ஒன்றே வாகாம்ருணீய ஸூக்தம். வாக் என்பவள் பிரும்ம ரிஷி என்பதாக அறியப்படுகிறது. 
வாக் என்றால் வாக் எனும் பரப்பிரும்மம் என்று பொருள் கொள்ளலாம்.  அவளே பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து அநுபூதி நிலையைப் பெற்றவள். அந்த நிலையில் அவள் ஆத்மஸ்துதி செய்து கொள்ள முடியும். ஆகவேதான் தேவி ஸூக்தத்தில்   கூறப்பட்டு உள்ள  ஆத்மஸ்துதி  என்ன என்றால் ?   
''நான் உலகிற்குக் காரணமாய் வாசு ருத்திரர்களாகவும், அதித்ய விஸ்வ தேவர்களாகவும் சஞ்சரிக்கிறேன்.
 பிரும்ம ஸ்வரூபமாய் இருந்து கொண்டு வருணன், இந்திரன், அக்னி என்ற அனைத்து தேவர்களையும் அவரவர் ஸ்தானத்தில் நிலைக்கச் செய்கிறேன்.  உலகின்  என்னுள்ளேயே அடக்கி வைத்துள்ளேன்.
த்வஷ்டா முதலிய தேவர்களை உரிய  ஸ்தானத்தில் அமர வைத்து தேவர்களுக்கு ஹவிஸ் மற்றும் சமரசத்தை தரும் என் எஜமானருக்கு நான் ஐஸ்வர்யத்தைத் தருவேன்.
பரபிரும்மத்தை அறிந்து என் உருவின் மூலம் அதை அனைவருக்கும் வெளிப்படுத்துவேன். அதனால்தான் நான் தேவர்களில் முதன்மையானவளாகக்  கருதப்படுகிறேன். அதனால்தான் பஞ்ச பூதங்களையும் என்னுள் அடக்கி வைத்துக் கொண்டு உள்ள என்னை பல இடங்களிலும் தேவர்கள்  ஸ்தாபனம் செய்துள்ளார்கள். 
மனிதன் உண்பதும் பார்ப்பதும், கேட்பதும், உயிர் உள்ளவர்களாக இருப்பதும் என்னால்தான். ஐம்புலன்களும் என்னால்தான் இயங்குகின்றன.  என்னை அறிந்து கொள்ளாதவனுக்கு அழிவு நிச்சயம்.
நான் விரும்பினால் எதையும் உயர்ந்த நிலையில் வைப்பேன். ஒரு மனிதனை ரிஷியாகவோ, பிரும்ம ரிஷியாகவோ, அதி மேதாவியாகவோ என்னால் ஆக்க முடியும்.
கடவுளை வெறுப்பவர்களை தண்டிக்கும் ருத்திரனுக்கு அவர் வில்லின் நாணைப் பூட்டித் தருபவளும் நானேதான்.  என் பக்தர்களின் விரோதிகளை அழிப்பவள் நான். 
பூமியிலும், இரவு பகலிலும் அந்தர்யாமியாக உள்ளேன். நானே இந்த உலகிற்குக் காரண ரீதியாக  இருந்து சிருஷ்டிக்கிறேன்.  காற்றைப் போல அனைத்து இடங்களிலும் சஞ்சரிக்கிறேன். பூமியையும் ஆகாயத்தையும் கடந்து  நிற்பவள் நான்''.
சப்த சதியில் காணப்படும்  ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒவ்வொரு அத்தியாய தேவதை அதிபதியாக  இருக்கிறாள். அவர்கள் யார் ?
  • அத்தியாயம் -1    மகாகாளி 
  • அத்தியாயம் -2     மகா லஷ்மி 
  • அத்தியாயம் -3    சங்கரி தேவி 
  • அத்தியாயம் -4    ஜெயா துர்கா 
  • அத்தியாயம் -5     மகா சரஸ்வதி 
  • அத்தியாயம் -6     பத்மாவதி 
  • அத்தியாயம் -7     மாதாங்கி 
  • அத்தியாயம் -8    பவானி 
  • அத்தியாயம் -9     அர்த்தாம்பிகா 
  • அத்தியாயம் -10   காமேஸ்வரி 
  • அத்தியாயம் -11  புவனேஸ்வரி 
  • அத்தியாயம் -12   அக்னி துர்கா 
  • அத்தியாயம் -13    தாரிகா பரமேஸ்வரி 

பின்னுரை 

இந்த ஆறு கட்டுரைகளில் சப்த சதி என்பது என்ன, அதை பாராயணம் செய்ய வேண்டிய முறை என்ன , அதில் எத்தனை பாகங்கள் உள்ளன, தேவிகள் யார் என்பதைப் பற்றி மட்டுமே எழுதி உள்ளேன். இதை ஒரு அறிவு ஞானத்திற்காகவே எழுதினேன்.  
தேவி சப்த சதியை நல்ல குருவிடம் தீக்ஷைப் பெற்றுக் கொண்டு பாராயணம் செய்வது ஒரு வகை. அதை நல்ல ஞானம் பெற்றவர்களினால் மட்டுமே செய்ய இயலும். அனைவராலும் அதை பாராயணம் செய்ய இயலாது.  ஏன் எனில் அது மந்திர சாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்தது. முக்கியமாக சாதனாக்களை செய்பவர்கள், மாயையில் இருந்து விலகி  ஆன்மீக உச்ச நிலையை அடைய, குரு தீட்ஷைப் பெற்றுக் கொண்டு, நியமனங்களை கடுமையாக பின்பற்றிக் கொண்டு இதை சிலர் சாதனாவாக செய்வார்கள்.  அந்த காலத்தில் அத்தியாயத்தைப் படிக்கத் துவங்கியதும் நடுவில் ஏதேனும் ஒரு காரணத்தினால் அதை தொடர்ந்து படிக்க முடியாமல் போனால், அதை நடுவில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் படிக்கத் துவங்கக் கூடாது.  ஆரம்பத்தில் இருந்து மீண்டும் படிக்கத் துவங்க வேண்டும் என்பது கண்டிப்பான விதியாகும்.  நவராத்திரி போன்ற விஷேஷ விழாக் காலங்களில் வீட்டில் நடைபெறும் நவராத்திரி பூஜைகளிலும் இதை பூஜையாக செய்வார்கள். 
ஆனால் அதே சமயத்தில் பாமரனும் தேவி மகான்மியத்தைப் படித்துப் பலன் பெரும் வகையில் தேவி மகாத்மியம் பல காலமாகவே தமிழில் கூடப் பாடலாகப் பாடப்பட்டு வந்துள்ளது. அதைப் படிப்பதினால் மன நிம்மதி கிடைக்கப் பெற்று வீட்டில் அமைதி நிலவும், வீண் மன பயம் விலகும் என்பார்கள். 
முடிந்தபோது சுமார் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் பாடலாக பாடப்பட்டு வந்துள்ள தேவி  சப்த சதியை  நவராத்திரி சமயத்தில்  பாராயணம் செய்வதற்கு உதவியாக இருக்க  வெளியிடுகிறேன்.
முற்றியது  

Kshethrapalapuram Bairavar Temple - 1

$
0
0
சாந்திப்பிரியா 
   
-I-

 ஆலயத்து சன்னதியில் 
ஸ்ரீ ஆனந்த கால பைரவர் 

ஷேத்ரபாலபுரம் என்பது மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்துக்கு இடையில் உள்ள குற்றாலம் தாலுக்காவில் உள்ளது.   இதை கிராம காவல் தெய்வம்  என்றும் சிலர்  கூறி உள்ளார்கள். ஆனால் இந்த ஆலயத்திற்கு தனி வரலாறு உள்ளது.  சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் உள்ள பைரவர் சிலைகளில் அவருடன் நாயும் இருப்பதைக் காணலாம். அது மட்டும் அல்ல பைரவர் சாந்தமான முகத்தைக் கொண்டு  அங்கெல்லாம் காட்சி தருவது இல்லை. ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள பைரவரோ சிரித்த முகத்துடன் தன்னுடைய வாகனமான நாயும் இல்லாமல், சூலத்துடன்  காட்சி தருவதினால் இவரை ஆனந்த கால பைரவர் என்றே அழைக்கிறார்கள். இந்த ஆலயத்தில் பைரவரே பிரதான தெய்வம். அவருக்கு மட்டுமே அனைத்து முக்கிய பூஜைகளும் நடைபெறுகின்றன. முருகன், பிள்ளையார், செல்லி அம்மன்  மற்றும் ஐயப்பனுக்கு சிறு சன்னதிகள்  இருந்தாலும் அவர்களுக்கு பைரவருக்கு அடுத்த முக்கியத்துவம்தான் தரப்படுகிறது.  பைரவருக்கு அடுத்து விநாயகர் முக்கியத்துவம் பெற்றுள்ளார். மற்றவர்கள் அதன் பிறகே முக்கியத்துவம் பெற்று உள்ளார்கள்.

ஷேத்ரபாலபுரம் மிகச் சிறிய கிராமப் பகுதியாகும். ஆனால் இங்குள்ள கால பைரவர் ஆலயத்தினால் இந்த கிராமம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு உள்ளது. ஆலயம் மிகப் பெரியது அல்ல என்றாலும் அதிக சக்தி வாய்ந்த ஆலயம் ஆகும். அந்த கால சிறு கட்டிடத்தில் உள்ளது. நுழை வாயிலில் உள்ளூர்  பக்தர்கள் சிலர் நன்கொடை தந்து மேல் கூரைப் போட்ட தளம் அமைத்து உள்ளார்கள்.

காசியில் உள்ள கால பைரவருக்கு மேலானவர் இங்குள்ள கால பைரவர் என்றே பண்டிதர்களும் கூறுகிறார்கள். மயிலாடுதுறை அல்லது கும்பகோணத்தில் இருந்து பேருந்தில் சென்று ஷேத்திரபாலபுரத்து பேருந்து நிலையத்தில் இறங்கினால் அடுத்த பத்து அல்லது பதினைந்து மீட்டர் தொலைவில் உள்ள சிறு சாலை அந்த ஆலயத்துக்கு செல்லும் வழியைக் காட்டும்.

சிறிய ஆலயம்தான் . ஆனால் கீர்த்தி மிக்கது.   ஆலய நுழை வாயில் மற்றும் மேல் கூரையில்  எழுதப்பட்டு உள்ள வாசகம்

எனக்குத் தெரிந்த வரையில் ஷேத்ரபாலபுரத்தைத் தவிர காலபைரவருக்கு என தனி ஆலயம் வேறு எங்குமே கிடையாது. பல ஆலயங்களிலும் பைரவர் தனி சன்னதியில் காட்சி தருவார். ஆனால் அவருடைய வாகனமான நாய் இல்லாமல், மூலவராக பைரவர் மட்டுமே உள்ள, மூன்று  கால பூஜைகளை செய்தவாறு உள்ள தனி  ஆலயம் காசியில் கூடக் கிடையாது.  காசியில் கூட மூன்று காலமும் கால பைரவருக்கு அர்ச்சனை, பூஜைகள் செய்து வழிபடுவதாகத் தெரியவில்லை. ஷேத்ரபாலபுரத்தில்  கால பைரவருக்கு என ஏற்படுத்தப்பட்ட இந்த  தனி ஆலயம்  எழுந்தக் காலம் தெரியவில்லை. ஆனால் மிக மிகப் பழைமையான ஆலயம் என்பது மட்டும் புரிந்தது.  அந்த ஆலயத்துக்குள் நுழைந்ததுமே நம்மை அறியாமல் ஒரு சிலிர்ப்பும் ஏற்படுகிறது.

பைரவரின் தோற்றத்தைப் பற்றிக் கூறப்படும் கதைகளில் இருந்து விலகி வித்தியாசமான ஸ்தலபுராணத்துடன் உள்ளது இந்த ஆலயம். இந்த ஆலயத்தின் பின்னணிக் கதையை இப்படியாகக் கூறுகிறார்கள். இந்தக் கதை பைரவரின் பிறப்புப் பற்றியக் கதையில் பெரும் மாறுதலானக் கதையாக உள்ளது. அதன் கதை இது:-

''ஒருமுறை பிரும்மா பூலோகத்துக்கு வந்திருந்தார். அப்போது  ஐந்து தலையுடன் இருந்த  பிரும்மா பூலோகத்துக்கு வந்து  செருக்குக் கொண்டு அனைத்து கடவுட்களையும் விட தானே சக்தி வாய்ந்தவர் என்று அனைவரிடமும் கூறிக் கொண்டு திரிந்தார்.  விஷ்ணுவைப் பழித்தார். சிவபெருமானையும் பழித்தார். இப்படி அவர் இருக்கையில் ஒருநாள் பூமிக்கு சிவபெருமானும் தனது மனைவி பார்வதியுடன்  வந்திருந்தார். அவர்களுடன் ருத்திரரும் துணைக்கு வந்திருந்தார். அவர்கள் மூவரையும் கண்ட பிரும்மா தன் நிலையை மறந்து தனது ஐந்தாவது தலையின் மூலம் சிவபெருமானை நிந்திக்கத் துவங்க, கோபமுற்ற சிவபெருமான் தன்னை நிந்தித்துக் கொண்டு இருந்த பிரும்மாவின் அந்த குறிப்பிட்ட தலையைக் கிள்ளி எறியுமாறு ருத்திரனுக்கு ஆணையிட்டார். உண்மையில் ருத்திரரும் சிவபெருமானின் ஒரு துணை கடவுளேயாவார்.

சிவபெருமானின் ஆணையை ஏற்றுக் கொண்ட ருத்திரரும் உடனடியாக தன்னை பைரவராக உருமாற்றிக் கொண்டு பிரும்மாவின் ஐந்தாவது தலையை தனது விரல் நகத்தினால்  கிள்ளி எறிந்தார்.  தனது தலையை இழந்த  பிரும்மாவும் தன தவறை உணர்ந்தார்.  தன்னை விட்டு விடுமாறு பைரவரிடம் வேண்டிக் கொண்டு அவரை துதிக்கத் துவங்கினார். பிரும்மாவை உயிருடன் விட்டு விட்ட பைரவர் அங்கிருந்து கிளம்பி சிவபெருமானுடன் சென்றார். ஆனால் பிரும்மாவின் தலையைக் கிள்ளி எறிந்ததினால்  பைரவருக்கு பிரும்மஹத்தி தோஷம் தொற்றிக் கொண்டது. அவர் கையில் வைத்திருந்த சூலமும் உடனடியாக மறைந்து போனது. பிரும்மாவின் ஐந்தாவது தலையும் ஒரு கபாலமாக உருமாறி அவர் கையில் ஒட்டிக் கொண்டது.

ரத்த பிட்ஷை எடுத்த ஆனந்த கால பைரவர் 

ஆகவே அந்த சாப விமோசனம் விலக வேண்டும், சூலமும் மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால்  உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து ரத்த பிட்ஷை எடுத்து   கையில் உள்ள கமண்டலம் நிறையும் அளவிற்கு  ரத்தத்தை நிறப்பிக் கொண்டால் மட்டுமே அந்த சாபம் விலகும் என்று சிவபெருமான் அவருக்கு சாப விமோசனத்துக்கான வழியைக் கூறினார்.

ஆகவே பைரவரும் ஒரு கையில் கபாலம், மறு கையில் கமண்டலம்  என இரண்டையும் ஏந்திக் கொண்டு பன்னிரண்டு ஆண்டுகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு ரத்த பிட்ஷை எடுத்து வரலானார். பல்வேறு இடங்களுக்கும் சென்று ரத்த பிட்ஷை எடுத்து வந்தாலும் கமண்டலத்தில் ரத்தம் நிறையவில்லை என்பதினால் வருத்தமுற்று விஷ்ணுவிடம் சென்றார்.

விஷ்ணுவும் அவரிடம் தான் இந்த பூலோகத்தில் பத்து அவதாரங்கள் எடுக்க உள்ளதாகவும், அப்போது எதிரிகளைக் கொன்று  அவர்களது  ரத்தத்தை அவருக்கு அளித்து கமண்டலத்தை நிரப்புவதாக உறுதிக்  கூறினார். அதன் பின்  விஷ்ணுவானவர் பத்து அவதாரங்களை எடுத்தப் பின் அவர் தங்கி இருந்த இடத்துக்கு பைரவர் சென்றார்.   அங்கு விஷ்ணு அவருக்கு அளித்த ரத்த பிட்ஷையினால் கமண்டலம் நிறைய, பைரவரின் பிரும்மஹத்தி தோஷம் விலகியது.  பைரவர் எந்த இடத்தில் நின்று கொண்டு  சாப விமோசனத்தைப்  பெற்றாரோ அந்த இடமே ஷேத்திரபாலபுரம்  என ஆகியது.

தோஷம் விலகிய பைரவரும் அங்கிருந்த ஒரு தாடகத்தில் குளித்தவுடன் அந்த தாடகத்தில் மறைந்திருந்த சூலமும் அவருடன் வந்து சேர்ந்து கொண்டது. அதனால்தான் அந்த தாடகத்தின் பெயரும் சூலதீர்த்தம் என்றாகியது.  தாடகத்தில் குளித்தப் பின் பைரவர் வெளியில் வந்ததும் அங்கு பால உருவில் விநாயகர் தோன்றினார். ஆகவேதான் அந்த ஷேத்திரத்திரமும் அவரது பாலகனைப் போலவே வினைகளை தீர்க்கும் இடமாக அமையும் என்று பைரவர் விநாயகருக்கு அருள் புரிந்து அந்த ஷேத்திரத்தின் பெயரை அவருடன் இணைத்து ஷேத்திரபாலபுரம் என அமைத்தார்''.  இதுதான் இந்த ஆலயத்தின் தல புராணம் ஆகும்.

இந்த ஆலயத்தை சுற்றி சூல  தீர்த்தம், காவேரி தீர்த்தம், கணேஷ தீர்த்தம், சக்கர தீர்த்தம் மற்றும் ஸ்கந்த தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. ஆலயத்தின் வடக்குப் புறத்தில் உள்ள காவேரி தீர்த்தத்தை சங்கு முக தீர்த்தம் என்று அழைக்கிறார்கள். அதற்குக் காரணம் அது சங்கு வடிவில் அமைந்து இருந்ததே.  அதில் குளிப்பது காசியில் குளித்தப் புண்ணியத்தை தரும் என்பது இந்த ஆலய தல வரலாறு. ஆலயத்தின் இடதுபுறத்தில் உள்ளது சூல தீர்த்தம் ஆகும்.

காசிக்குச் சென்றுவிட்டு திரும்பிய கால பைரவரை இந்த தலத்தில் வந்து பிரும்மா, இந்திரன், நவகிரகங்கள் போன்றவர்கள் பூஜித்து துதித்ததான கதை  உள்ளது. நவக்கிரகங்களின் சக்தி வாய்ந்த ஆலயங்கள் இந்த பூமியை சுற்றி (கும்பகோணம்) அமைந்துள்ளதின் ஒரு காரணமும் இதுதான் என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஆரம்ப காலத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த கிராமத்தில் இருந்த இந்த ஆலயத்தின் மகிமை பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் சனாதன முனிவர்கள் போன்ற பெருமை வாய்ந்த ரிஷி முனிவர்கள்  இங்கு வந்து பைரவரை வழிபட்ட காலத்துக்குப் பிறகே இந்த ஆலயத்தின் பின்னணி தெரிய வந்ததாக புராணக் கதை கிராமத்தில் கூறப்படுகிறது. அது மட்டும் அல்ல பஞ்சபாண்டவர்களும் இங்கு வந்து பைரவரை பூஜித்து உள்ளார்கள்.
.........தொடரும்

Kshethrapalapuram Bairavar Temple - 2

$
0
0

சாந்திப்பிரியா 

பைரவரைப் பற்றி கூறப்படும் அனைத்துக் கதைகளிலும் ''பிரும்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை துண்டித்ததினால்  ஏற்பட்ட  பிரும்மஹத்தி தோஷத்தை தொலைக்க, அந்த தலையின் கபாலத்தை பைரவர் கையில் ஏந்தியவண்ணம் உலகெங்கும் சுற்றி பிட்சை பெற்றுக்  கொண்டு காசியை அடைந்து அந்த பாபத்தைத் தொலைக்க வேண்டும்' என சிவபெருமான் பைரவரிடம் கூறியதாகவும், அதனால் பைரவரும் கபாலத்தை (பிரும்மாவின் தலை) எடுத்துக் கொண்டு மூவுலகமும் சுற்றிய வண்ணம் பிட்சை எடுத்தார் என்றும், சிவபெருமான் பைரவருக்கு அவ்வாறு கூறிய உடனேயே மற்றொரு பயங்கர முகத்தைக் கொண்ட இரத்தம் கக்கிக் கொண்டு இருந்த பெண் அங்கு தோன்றி பைரவர் பின்னால் அவரை பயமுறுத்திக் கொண்டே துரத்திச் சென்ற வண்ணம் இருக்க, பைரவர் காசியை அடைந்ததும் அவரை பயமுறுத்திக் கொண்டு சென்றப் பெண்ணும் மறைந்து விட காசியில் நுழைந்த பைரவர் கையில் இருந்த கபாலம் கீழே விழுந்து உடைய, அவரைத் துரத்திக் கொண்டு சென்ற பெண்ணும் மறைந்து போனாள். அங்கு பைரவருடைய தோஷமும் விலகியது'' என்று கூறப்படுகிறது.
ஆலய சன்னதியில் பைரவர்- ஒரு படக் காட்சி

ஆனால் ஷேத்திரபாலபுரத்தில் உள்ள ஆலயத்தின் கதை மேலே உள்ள கதையில் இருந்து மாறுபட்டு இருக்கின்றது. இங்குள்ள கதையின்படி பிரும்மஹத்தி தோஷத்தை பைரவர் ஷேத்திரபாலபுரத்தில் தான் களைந்து கொண்டார் என்பதாக   குறிப்பிட்டு உள்ளது.

அது குறித்து  சில பண்டிதர்களிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் கூறினார்கள் ''இதில் என்ன சந்தேகம் உள்ளது? கதைகளுமே சரியானவைதான். பைரவருக்கு பிரும்மஹத்தி தோஷம் விலகியது ஷேத்ரபாலபுரத்தில்தான். ஆனால் பைரவரின் கையில் ஒட்டிக் கொண்டு இருந்த பிரும்மாவின் கபாலம் காசியில்தான் முக்தி பெற்றது. ஷேத்ரபாலபுரத்தில் பிரும்மஹத்தி தோஷத்தை விலக்கிக் கொண்ட பைரவரும், காசிக்குச் சென்று அங்கு பிரும்மாவின் ஐந்தாவது தலையின் கபாலத்திற்கு மோட்ஷம் கொடுக்க வேண்டி இருந்தது என்பது விதியாக இருந்ததினால் பைரவர் காசிக்குச் சென்று அதை செய்து முடித்தார் என்பதையே காசியில் பைரவருக்கு தோஷம் தொலைந்தது என்பார்கள். பைரவரின் விரலில் ஒட்டிக் கொண்டு இருந்த கபாலம் கீழே விழும்வரை  அந்த தோஷம் பைரவர் விரலில் ஒட்டிக் கொண்டு இருந்தது.  ஆகவேதான் பைரவரின்  முழுமையான பிற தோஷங்களும் காசியில் விலகின.

பிரும்மா தனது தலையை பூலோகத்தில் மனித உருவில் இருந்தபோது இழந்ததினால் பூலோகத்தில் இருந்து அந்தக் கபாலத்திற்கு விமோசனம் கிடைக்க தக்க இடத்துக்குப் போக வேண்டும்.  அந்த புனித இடம் காசி என்பது விதி.   எப்படி ஒருவர் இறந்தவர்களுக்கு இறுதி காரியத்தை காசியில் செய்து மோட்ஷத்தை  தருகிறார்களோ அது போலத்தான்  பூமியிலே உயிரை இழந்த பிரும்மாவின்  ஐந்தாவது  தலைக்கும் மோட்ஷம் தர வேண்டி இருந்தது.  காசிக்கு சென்றதும் கபாலம் தானாகவே கீழே விழ அவரது ஐந்தாவது தலையும் தேவலோகத்துக்குச் சென்றது.  அந்த ஐந்தாவது தலையும் பிரும்மாவின் ஒரு மாய உருவே.   அதன் கதை என்ன ? அதன் பின்னணி  தத்துவம் என்ன? 

பிரும்மா தனது ஐந்தாவது தலையை படைத்துக் கொண்டதும், அதை அழித்துக் கொள்ள சாபம்  பெற்றதற்கான காரணம் சிவபெருமானின் துணை அவதாரமான பைரவர் அவதரிக்க வேண்டும் என்பதற்காகவே. அப்போதுதான் பைரவர்  சிவபெருமானின் மனைவி பார்வதி குடியிருக்கும் ஆலயங்களில் அவளுக்கு  காவலாக இருக்க முடியும்.  மேலும் அந்த பைரவர் அவதாரத்தின் மூலமே காசி என்பது மோட்ஷத்தை  தரும் பூமி என்ற பெருமையை காசிக்கு  தர வேண்டும். அதே நேரத்தில் சபிக்கப்பட்ட பிரும்மாவின் ஐந்தாவது தலைக்கும் மோட்ஷம் தர வேண்டும்.

பிரும்மாவிற்கு ஐந்து தலை வந்தது  ஏன்? அவர் அதில் ஒன்றை இழந்தது  ஏன்? இதைக் குறித்த ஒரு புராணக் கதை  உண்டு.  உலகைப் படைக்கத் துவங்கிய பிரும்மாவிற்கு முதலில் ஒரே ஒரு தலைதான் இருந்தது. ஆனால் உலகைப் படைக்கத் துவங்கியதும் அவர் ஒரு அழகிய பெண்ணையும் படைக்க விரும்பினார்.  தனது உடலில்  இருந்தே சிறிது பகுதியை எடுத்து அதற்கு ஒரு தேவலோகப் பெண் உருவைக் கொடுத்தார். ஆனால் அவரே படைத்த அந்தப் தேவலோகப் பெண்ணின் அழகில் மயங்கிய அவர்  அவள் சென்ற இடங்களில் எல்லாம் அவளையே திரும்பிப்  பார்த்தபடி இருந்து அவளது அழகை ரசிக்கலானார். அவளோ நான்கு திக்குக்களில் எங்கு ஓடி ஒளிந்தாலும்  அவளை தொடர்ந்து சென்று அவளது அழகை ரசிக்கத் துவங்கியவருக்கு ஒவ்வொரு திசையில் திரும்பியபோதும் ஒவ்வொரு தலை முளைத்தது. இவாறாக நான்கு திசைகளிலும் திரும்பியதினால் நான்கு புதிய முகங்கள் தோன்றின. 
ஆகவே இனி செல்வதற்கு வேறு திசை இல்லை என்பதினால் அவரது பார்வையில் இருந்து தப்புவதற்காக அந்தப் பெண்ணும்  தேவ லோகத்தை நோக்கி  ஓடத் துவங்க அவரும் தன்னுடைய உண்மையான முதல் முகத்தினால் மேலே பார்க்க அது  ஐந்தாம் தலை ஆயிற்று  அதைக் கண்ட  அந்த பெண்  பிரும்மனைப் படைத்தது உலகை உருவாக்கவே எனும்போது, அதை மறந்து  அவரே பெண் மீது  மோகம் கொண்டு அலைகிறாரே என கோபமுற்றவள் பிரும்மனுக்கு சாபம் கொடுத்தாள்.  'இனி உன்னுடைய நான்கு முகமும் நான்கு பக்கங்களைப் பார்த்தபடியே  இருக்கும்.  எந்த ஐந்தாவது தலையினால்  நீ தேவலோகத்தை நோக்கியும் என்னைப்  பார்த்தவாறு தவறு செய்தாயோ அது மீண்டும் தேவலோகத்துக்கே திரும்பட்டும்.  எந்த பராசக்தி உன்னைப் படைத்தாளோ  அவள் மூலமே நீயும் உன் ஐந்தாவது தலையை இழப்பாய். உலக மக்களைப்  படைத்த  கடவுளான நீயே மோகத்தினால் நீ ஒரு பெண்ணான என்னை நோக்கி உன் மனத்தால் காமத்தை  செலுத்தியதினால் தனித் தன்மை வாய்ந்த கடவுளாக உன்னை மனிதர்கள் மதிக்க மாட்டார்கள்.  எந்த ஒரு பெண்ணின் நிலையை தவிப்புக்கு உள்ளாக்கினாயோ, அதே பெண் இனம் இன்னுடன் இருந்தால் மட்டுமே  உனக்கு பெருமையும் கிடைக்கும். உனக்கென இனி தனித் தன்மை இருக்காது ' என்று சபித்து விட , பிரும்மா தன் தவறை உணர்ந்தார். அதற்குப் பிராயசித்தமாகவே தான் சாப விமோசனம் பெற வேண்டும் என்பதற்காக அவர் பூலோகத்துக்கு வந்து பராசக்தியை துதித்து வேண்டலானார்.
........தொடரும் 

Kshethrapalapuram Bairavar Temple - 3

$
0
0

சாந்திப்பிரியா 

-III-

தான் செய்த தவறுக்கு மன்னிப்பைக் கேட்டவர் தன்னை தனிக் கடவுளாகப் பார்க்காவிடிலும், தன்னை தனித் தன்மை கொண்ட கடவுளாக மக்கள் பார்க்க தனக்கு அருள் புரியுமாறு பராசக்தியிடம் வேண்டிக் கொள்ள, அந்தப் பெண்ணும் மாயமாக மறைந்தாள். அங்கு பராசக்தி தோன்றி அவரை ஆசிர்வதித்தார். ஒரு பெண்ணிற்காக நான்கு திசைகளையும் நோக்கிப் படர்ந்த அவரது முகங்கள் நான்கு திசைகளிலும் பரவும் வேதங்களைப் பிரதிபலிக்கும் என்றும், இனி நான்கு வேதத்தின் அதிபதி அவராக இருப்பார் என்றும், எந்த ஐந்தாவது தலையினால் அவர் தவறு செய்து சாபம் பெற்றாரோ அது சிவபெருமானினால் சாப விமோசனம் பெற்று மீண்டும் தேவ லோகத்துக்கே சென்று விடும் என்றும், இனி பிரும்மாவை மக்கள் நான்முகனாக, நான்கு வேதங்களை பிரதிபலிப்பவராக பார்ப்பார்கள்' என்றாள். அது போலவே பின்னர் வேதங்களின் அதிபதியாக வேதமாதா காயத்திரி அமைய, அவளையே மணம் புரிந்து கொண்ட பிரும்மாவிற்கும் அவளால், காயத்திரி எனும் சரஸ்வதியினால் மட்டுமே பூமியில் பெருமை கிடைத்தது. இப்படியாகவே பிரும்மா பெற்று இருந்த சாபத்தினால் பிரும்மாவின் ஐந்தாவது தலை சிவபெருமானின் துணை அவதாரமான பைரவரினால் அழிந்தது. சிவபெருமான் மூலமே சாப விமோசனம் பெற்று தேவலோகத்தை அடைந்தது.

உஜ்ஜயினியில் ஒரு  பைரவர் 
ஆலயத்தில் பைரவர் 

பைரவர் யார் ? அவர் சிவபெருமானின் இன்னொரு துணை அவதாரம் ! பைரவரின் அவதாரத்திற்காக அதை பிரும்மாவும் தனது ஐந்தாவது தலையுடன் வந்து அதை அவர் இழக்க வேண்டி இருந்ததினால், இந்த நிகழ்வு நடந்தது என்பதே உண்மை. ஒவ்வொரு அவதாரமும் பிறக்க ஒவ்வொரு காரணம் தேவை. அந்த தேவ நாடகங்களில் ஒன்றுதான் இந்த பைரவ அவதாரமும், பிரும்மாவின் ஐந்தாவது தலை இழப்பும்!!

ஒவ்வொரு கிரகத்திலும் ஒவ்வொரு பைரவர் ஆதிக்கத்தில் உள்ளார்கள். ஆகவே அந்தந்த கிரகங்களினால் ஏற்படும் தோஷத்தைக் களைந்து கொள்ள இங்குள்ள பைரவர் ஆலயத்துக்கு வந்து அந்த கிரகத்திற்குரிய பைரவ காயத்திரி மந்திரத்தை ஜெபித்து வந்தால் துயரங்கள் விலகும்.

வெளியூரில் உள்ளவர்கள் கிரக தோஷத்தை விலக்கிக் கொள்ள இந்த ஷேத்திரபால பைரவரை வேண்டிக் கொண்டு அந்த காயத்திரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டு இருந்தவாறு, முடிந்தபோது ஒருமுறை இந்த ஆலயத்துக்கு வந்து கால பைரவரை வணங்கி துதிக்கலாம். ஆனால் இந்த பிராண காயத்திரி மந்திரத்தை ஜெபிக்கும் முன்னர் நல்ல குருவிடம் தீட்ஷை எடுத்துக் கொண்டு செய்வது மிக்க நல்ல பலனைத் தரும்.


அந்தந்த காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கையில் இருவருடைய மந்திரத்தையும், அதாவது பைரவர் மற்றும் காயித்திரி இரண்டு மந்திரங்களையும்  சேர்த்தே ஜெபிக்க வேண்டும். ஒவ்வொரு மந்திரமும் ஐந்து அல்லது ஆறு வரிகளில் உள்ளன.

ஸ்வேதப் பிள்ளையார் முன்னால் ஏற்றி
வைக்கப்பட்டு உள்ள வேண்டுதல் தீபங்கள்

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் விஷேஷமானது.  இந்த ஆலயத்தில்தான் நாம் செய்யும் ஒவ்வொரு பூஜைக்கும் போட வேண்டிய பூக்கள், மாலை, நெய் அல்லது எண்ணை தீபம் எந்த பாண்டத்தில் ஏற்ற வேண்டும், அன்னதானத்தில் போட வேண்டிய பதார்த்தங்கள் - கூட்டு முதல், பொறியல் மற்றும் இனிப்பு வகை வரை - அனைத்தையும் விவரமாக குறிப்பிட்டு உள்ளார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது! இந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளிலும் செய்யக் கூடிய சில பூஜைகள் வருமாறு:

இந்த ஆலயத்து பைரவருக்கு புனுகு பூசி பூஜிப்பது விசேஷமானது. ஒவ்வொரு வேண்டுதலுக்காகவும்  பூஜை செய்யும்போது பைரவருக்கு புனுகு பூசி பூஜை செய்வதை முக்கியமாகக் கருதுகிறார்கள். அது போலவே பல வேண்டுதல்களை நிறைவேற்றும்போதும் பாவற்காய் அன்னம், பாவக்காயில் நெய் விளக்கு ஏற்றி வைப்பது, பாவக்காய் கூட்டு செய்து அன்னதானம் செய்வது போன்றதை  செய்வதின் மூலம் பாவக்காயிற்கு முக்கியம் தந்து உள்ளார்கள். பாவக்காயிற்கு முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளத்தின் காரணம் நான் அது குறித்துக் கேட்ட பல பண்டிதர்களுக்கும் கூட சரிவரத் தெரியவில்லை. யாருக்கேனும் அது குறித்து தெரிந்தால் அதை வெளியிடலாம்.
எலுமிச்சை பழம், பாவற்காய், 
மற்றும் பூஷணிக் காய்
முதலியவற்றில் ஏற்றி வைக்கப்பட்டு 
உள்ள வேண்டுதல் தீபங்கள்

ஆலயத்தின் அர்ச்சகர் தொலைபேசி
- முற்றும் -

Kshethrapalapuram Bairava- Gayathri manthirangal

$
0
0


 சூரியன் 

ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோ: சொர்ண பைரவ ப்ரசோதயாத்

ஸ்ரீ பைரவி காயத்ரி
ஓம் த்ரிபுராயை ச வித்மஹே
பைரவ்யை ச தீமஹி
தந்நோ: பைரவி ப்ரசோதயாத்


சந்திரன் 
 
ஸ்ரீ கபால பைரவர் காயத்ரி
ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்

ஸ்ரீ இந்திராணி காயத்ரி
ஓம் கஜத் வஜாயை வித்மஹே
வஜ்ரா ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்


செவ்வாய் 
ஸ்ரீ சண்ட பைரவர் காயத்ரி
ஓம் சர்வ சத்ரு நாஸாய வித்மஹே
மகா வீராய தீமஹி
தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்

ஸ்ரீ கௌமாரி காயத்ரி
ஓம் சிகித் வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: கௌமாரி ப்ரசோதயாத்


புதன் 
ஸ்ரீ உன்மத்த பைரவர் காயத்ரி
ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோஹராய தீமஹி
தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்

ஸ்ரீ வராஹி காயத்ரி
ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வராஹி ப்ரசோதயாத்


குரு  

ஸ்ரீ அசிதாங்க பைரவர் காயத்ரி
ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ: அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்

ஸ்ரீ பிராம்ஹி தேவி காயத்ரி
ஓம் ஹம்சத் வஜாயை வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: பிராம்மீ ப்ரசோதயாத்


சுக்ரன் 

ஸ்ரீ ருரு பைரவர் காயத்ரி
ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ: ருரு பைரவ ப்ரசோதயாத்

ஸ்ரீ மஹேஸ்வரி காயத்ரி
ஓம் வருஷத் வஜாயை வித்மஹே
ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: ரௌத்ரீ ப்ரசோதயாத்


சனி 

ஸ்ரீ குரோதன பைரவர் காயத்ரி
ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே
லஷ்மி தராய தீமஹி
தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்

ஸ்ரீ வைஷ்ணவி காயத்ரி
ஓம் தாஷ்யத் வஜாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்


ராகு 

ஸ்ரீ ஸம்ஹார பைரவர் காயத்ரி
ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாயை தீமஹி
தந்நோ: ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்

ஸ்ரீ சண்டி காயத்ரி
ஓம் சண்டீச்வரி ச வித்மஹே
மஹா தேவிச ச தீமஹி
தந்நோ: சண்டி ப்ரசோதயாத்


கேது  

ஸ்ரீ பீஷண பைரவர் காயத்ரி
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ: பீஷண பைரவ ப்ரசோதயாத்

ஸ்ரீ சாமுண்டி காயத்ரி
ஓம் பிசாசத் வாஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: காளி ப்ரசோதயாத்

Thiruparasalur Veeratteswar Temple - 1

$
0
0

சாந்திப்பிரியா 


- I -



மேலே கூறப்பட்டு உள்ள வீரபத்திரர் தியான ஸ்லோகத்தின் அர்த்தம் என்ன என்றால்  ''மரகத மணி போன்ற  ஒளியுடையவர், கிண்கிணி அணிந்த காதினர் , சூரியன், சந்திரன், நெருப்பு இவை மூன்றையும் முக்கண்களாய் கொண்டவர், சூலம், தண்டம் ஆகியவற்றை ஏந்தியவரான அழகிய வீரபத்திரரை வணங்குவோம்''  என்பது.

 மயிலாடுதுறை - தரங்கம்பாடி பாதையில் சென்று செம்பொன்னார் கோயில் எனும் சிற்றூரை அடைந்தால் அங்கிருந்து சிறு பாதை ஒன்று பரசலூர் என்ற கிராமத்தை நோக்கிச் செல்வதைக் காணலாம். அங்கு சென்றால் திருப்பறியலூர் என்ற சிற்றூர் வரும். அதை கீழ்பரசலூர் என்றும் கூறுகிறார்கள். அங்குள்ளது வீரட்டேஸ்வரர் கோவில் எனும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். அதுவே வீரபத்திரருக்கு அமைந்துள்ள தனிக் கோவில் என்கிறார்கள். அனைத்து ஆலயங்களிலும் வீரபத்திரருக்கு தனி சன்னதி இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இங்கு மட்டுமே இவ்வளவு பெரிய அளவில் தனி ஆலயம் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஆலயம் சுமார் 2000 வருடங்களுக்கு முந்தைய கால ஆலயம் ஆகும் . இந்த ஆலயத்தின் வரலாறு தட்ஷனுடன் சம்மந்தப்பட்டது.

சிவபெருமான் தீமைகளை அழிக்க எடுத்த மிக அபூர்வமான தோற்றங்களைக்  காட்டும் ஆலயமும்  அவர் மற்றவர்களுக்கு கருணைப் புரிந்த  தலங்களும் நிறையவே உண்டு என்றாலும் சிவபெருமானின் வீர விளையாடலைக் குறிக்கும் மிக முக்கியமான தலங்கள்  எட்டு உள்ளன. அந்த தலங்கள் திருவிற்குடி, வழுவூர், கண்டியூர், திருக்கோவலூர், திருஅதிகை, குறுக்கை, திருக்கடவூர், திருப்பரசலூர் ஆகியவை ஆகும். ஆகவே அந்த எட்டுத் தலங்களையும் அட்ட வீரட்டத் (எட்டு வீர) தலங்கள் என்பார்கள்.

  பரசலூர்  வீரட்டேஸ்வரர் ஆலயம் 

அவற்றில் ஒன்றான வீரட்டேஸ்வரர் கோவில் பற்றிக் கூற வேண்டும் எனில் இது மிக விஷேசமான ஆலயம் என்றே கூற வேண்டும்.  தட்ஷனுடன் சம்மந்தப்பட்ட இந்த ஆலயத்தின் வரலாறும் பிற கதைகளில் இருந்து மாறுபட்டே உள்ளது.

பொதுவாகவே தட்சனின்  யாகம் நடந்த இடம் வட மானிலத்தில்  ரிஷிகேஷ் அல்லது ஹரித்துவாரில் உள்ளது என்றே நம்பிக்கை உள்ளது என்பதின் காரணம் அது இமயமலையின் அடிவாரத்தில் உள்ளதே. ஹரித்துவாரின் அருகில் உள்ள கங்கால்  என்ற இடத்தில் உள்ள  தக்ஷேஸ்வர  மகாதேவர் எனும் ஆலயத்தை இதனுடன் இணைத்துக் கூறுகையில் இங்குதான் தட்ஷன் யாகம் செய்து,  அந்த யாகத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளினால் வதம் செய்யப்பட்டு மீண்டும் ஆட்டு தலையை பெற்றதாக  புராணக் கதையைக் கூறுகிறார்கள்.

ஆனால்  சிவபெருமானின் மாமனாரான தட்ஷன் யாகம் செய்த உண்மையான இடம் ஹரித்துவாரோ ரிஷேகேசமோ அல்ல, யாகம் நடந்த இடம் பரசலூர் என்று கூறுகிறார்கள்.  இந்த ஆலய வரலாறு என்ன?

சிவபெருமானிடம் இருந்தே பல வரங்களையும் பெற்ற தட்ஷன் ஒரு கட்டத்தில் கர்வம் கொள்கிறான். ஆகவே அவன் சிவனை அவமதிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு  ஒரு முக்கியமான யாகத்தை தட்ஷன்  நடத்தியபோது சிவனுக்கு தரப்பட வேண்டிய அவிர்பாகம் என்னும் முதல் மரியாதையைத் தராமல் ஆணவத்துடன் யாகம் நடத்தி சிவபெருமானை அவமதிக்க, அந்த நிகழ்ச்சியினால் மனம் வருந்திய தட்ஷனின் மகளான பார்வதி யாக குண்டத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள, அதைக் கண்டு கோபமுற்ற சிவபெருமான் தனது தலை முடியில் இருந்து வீரபத்திரரை தோற்றுவித்து தட்ஷனை அங்கேயே சிரச்சேதம் செய்து கொன்றார். வீரபத்திரர் சிவபெருமானின் ஜடையிலிருந்து பிறந்தவர் என்றும், இல்லை, கோபத்தினால் வியர்த்துப் போன சிவபெருமானின் உடலில் இருந்து வழிந்த  வியர்வையிலிருந்து பிறந்தவர் என்றும் வீரபத்திரரின் அவதாரம் பற்றிய செய்திகள் உள்ளன. இது எவ்வாறாயினும், வீரபத்திரர் சிவாம்சம் என்றே கருத வேண்டும். சிவன் படைத்த வீரபத்திரருக்குத் துணையாக அங்கேயே காளியும் தோற்றுவிக்கப்பட்டாள். அவளும் வீரபத்திரருடன் சேர்ந்து யாகத்தை அழித்தாள் .

வீர பத்திரர் வெட்டிய தட்ஷனின் தலையை  வேள்வித் தீயில் போட்டார்.  தட்ஷன் மனைவி வேதவல்லியின் வேண்டுகோளுக்கு இணங்க வெட்டுப்பட்ட தலையின் இடத்தில் ஒரு ஆட்டுத் தலையினைப் பொருத்தி, மீண்டும் தட்ஷனுக்கு  உயிர் கொடுத்தார் சிவபெருமான்.  இப்படியான வரலாற்றுக் கதைப் பின்னணியைக் கொண்ட தட்ஷன் யாகம் செய்த இடமே தற்போது உள்ள பரசலூர் கோவில் என்று கூறுகிறார்கள். இங்குதான் தட்ஷனின் தலையை வெட்டி எறிந்த வீர பத்திரர் அவருக்கு ஆட்டுத் தலையைப் பொருத்தி உயிர் கொடுத்தார் என்றும் அதனால்தான் ஆட்டுத் தலையுடன் தட்ஷன் உள்ள சிலை ஆலய மண்டபத்தில் உள்ளது என சுட்டிக் காட்டுகிறார்கள்.  தட்ஷன் வேள்வி செய்த தலம் இந்த ஆலயம் உள்ள இடம் என்பதினால் இங்குள்ள நிலத்தை ஆழமாகத் தோண்டிப் பார்த்தால் மண் கருப்பாக இருப்பதைக் காணலாம். அது ஏன் என்றால் யாகம் செய்தபோது அதில் போடப்பட்டவை கருகி பூமியிலே புதைந்துள்ளது என்பார்கள். இது தட்ஷன் யாகம் செய்ததை உறுதிப் படுத்துவதாக உள்ளது. ஆகவே இந்த ஆலயம் உள்ள இடத்தை கரிக்குளம் என்றும் கூறுவது உண்டு
.
தட்ஷனின்  யாகம் நடந்துள்ள பூமி -ரிஷிகேசத்தில்
 இருந்து தென் பகுதிவரை விரிந்திருக்க வேண்டும் 

வீரபத்திரர் ரிஷிகேஷத்தில் அவதாரம் செய்து பரிசலூரில் தட்ஷனை சம்ஹாரம் செய்தவர் என்கிறார்கள். அதற்கும் காரணம் முன்னர் பல கட்டுரைகளில் குறிப்பிட்டது போல தேவர்களும், கடவுட்களும் நம்பவே முடியாத அளவு மிகப் பெரும் உருவைக் கொண்டவர்கள் என்றும் தட்ஷன் யாகசாலை ரிஷிகேசத்தில் இருந்து பரசலூர்வரை பரவி இருந்திருக்க வேண்டும் என்றும், யாக குண்டம் பரசலூர் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும் நம்புகிறார்கள்.
இன்னும் பல  காரணங்களினால் தட்ஷனின்  யாகம் பரசலூரில்  நடந்து  இருக்க வேண்டும், இங்குதான் அவரது வதமும் நடந்து இருக்க வேண்டும்  என நம்ப இடமுள்ளது.  தட்ஷன் பூமி (दक्षिण) என்றால் தென் பகுதி என்பது பொருள். ஆகவேदक्षिण वधஎன்பது தட்ஷின வதம் அதாவது தென் பகுதியில் நடந்த வதம் என்பதாகும். ஆகவே  தட்ஷன்   தென் பகுதியை சேர்ந்தவனாகவே  இருந்திருக்க வேண்டும். தட்ஷனனின் வதமும் தென் இந்தியாவில் நடந்து இருப்பதினால்தான் தென் பகுதிகளிலும் வீரபத்திரர் பெரும் அளவில் போற்றி வணங்கப்படுகிறார். வீரபத்திரர் தென் இந்தியப் பகுதிகளில் மிகவும் பிரபலமானவராக இருந்துள்ளார் என்பதின் காரணமும் வீரபத்திரர் அவதாரம் தட்ஷனுடன் சம்மந்தப்பட்டது என்பதினால்தான்.  வீரபத்திரரின்  ஆலயம் இங்கு எழுந்துள்ளதின் காரணமும் அதுதான். தட்ஷன் உண்மையில் வடபகுதியில்  மரணம் அடைந்து இருந்திருந்தால் தென் பகுதியில் அவனுடைய யாகம் நடந்ததாகக் கூறுவது ஏன்?  தென் பகுதியில் அந்த யாக நிகழ்ச்சிகளை கொண்ட ஆலயம் ஏன் எழ வேண்டும்??  

இந்த ஆலயத்தின் மகிமை என்ன?
......... II  - பாகம் தொடரும் 

Thiruparasalur Veeratteswar Temple - 2

$
0
0
சாந்திப்பிரியா 
- II -

சிவபெருமானின் கோபத்தினால் அவரிடம் இருந்து வெளிவந்த வீரபத்ரர் யாகத்தில் வந்தவர்கள் பலரைக் கொன்றதினால் சிவபெருமானுக்கே ஏற்பட்ட பிருமஹத்தி தோஷத்தைக் களைந்து கொள்ள அவரே பூலோகத்தில் பிறவி எடுக்க வேண்டும். வானத்தில் இருந்து தம் உடலில் உள்ள அனைத்து ஆபரணங்களையும் கீழே வீச வேண்டும். அவை எந்த நதியில் வீழுகின்றதோ அந்த நதிக் கரையில் சென்று தங்கி நதியில் குளித்து தவம் இருந்து பிருமஹத்தி தோஷத்தை களைந்து கொண்டு, தன்னுடைய அவதாரமாக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என சாபம் ஏற்பட்டது . அதனால் சிவபெருமான் வீசிய ஆபரணங்கள் நாகப்பட்டினத்தில் வீரபத்திரர்  ஆலயம் உள்ள இடத்தில் வந்து விழுந்ததாகவும் அங்கு வந்து தவம் இருந்து பிருமஹத்தி தோஷத்தை களைந்து கொண்டு, தன்னுடைய அவதாரமாக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் எனவும் அந்த கிராமத்தினர் காலம் காலமாக கூறப்பட்டு வரும் கதையை ஆதாரமாகக் கூறுகின்றார்கள். இன்னும் சிலர் அந்த ஆலயம் கும்பகோணத்து மகாமகம் குளத்தருகில்  உள்ள ஆலயம் என்றும் கூறுகிறார்கள்.

வீரபத்திரர் கர்நாடக மானிலத்தில் வீர சைவர்களினால் பெரிதும் போற்றி வணங்கப்படுகிறார்.அவர்களில் பலருக்கு அவரே குல  தெய்வமாகவும் இருக்கிறார். அந்த சிவபெருமானே அகோர வீரபத்திரர், அக்னி வீரபத்திரர், குபேர வீரபத்திரர் என அறுபத்தி நான்கு விதமான ரூபங்களை எடுத்தாராம்.


தட்ஷன் மிகச் ஒரு காலத்தில் பெரும் சிவ பக்தனாக இருந்தவர். அவருக்கு சிவபெருமானால் பல வரங்கள் கிடைத்தன. ஆனால் அப்படி இருந்தும் அந்த சிவபெருமானையே அவர் அவமதித்ததினால் கோபம் கோபம் கொண்ட சிவபெருமான் அவனிடமிருந்து தான் கொடுத்த அனைத்து வரங்களையும் பறித்து விடுகிறார். திரு என்பதற்கு தெய்வம் என்றும் ஒரு பொருள் உண்டு. இதனாலேயே இத்தலம் தெய்வமே வரத்தைப் பறித்த ஊர் என்பதினால் திரு + பறித்த + ஊர் என இருந்து பின்னர் திருப்பறியலூர் என்று மருவியது. தக்கன் வேள்வி செய்த தலமாதலின் 'தட்சபுரம்' என்றும், தேவர்களுக்கு ஏற்பட்ட பாவத்தைத் தண்டனை மூலம் பறித்ததால் 'திருபறியலூர்' என்றும், பெயர்களைப்  பெற்று  உள்ளது. 

சவுனகர் என்ற முனிவரின் சாபத்தினால் வேடுவனாகத் திரிந்த புற்கலன் என்ற அரக்கன் இத்தலத்துப் பக்கம் வந்த முனிவரின் பொருட்களைப் பறித்துக் கொண்டமையால் பறித்துக் கொண்ட ஊர் என்று கூறப்பட்டு பின்னர் அதுவே பறியலூர் என ஆயிற்று என்ற கிராமிக் கதையும் இங்கு உண்டு.   இன்னொரு காரணம் இங்கு வந்து வீரபத்திரரை வழிபடுபவர்களின் பாவங்களையும் பறித்துவிட்டு அவர்களின் பாவங்களைக் களைவதினால் பாவங்களைக்  பறிக்கும் ஊர் என்று கருதி திரு பறித்த ஊர் அதாவது திரு பரையலூர் என ஆகியதாகவும் கூறுகிறார்கள். ஆனால் காலப்போக்கில் அதை பரசலூர் என அழைத்தார்கள்.
இந்த ஆலயத்தின் முதல்  மதில் சுவருக்கும், இரண்டாவது திருச்சுற்றுக்கும் இடையில் கருவறையை நோக்கி அமர்ந்த நிலையில் நந்தியும், நந்திக்குப் பின்புறத்தில் பலிபீடமும், கொடி மரமும் காணப்படுகின்றன.
கருவறைக்கு  முன்னால்  நந்தி மற்றும் 
கொடி  மரம், பலிபீடம் முதலியன 

திருக்கோயிலின் முதல் திருச்சுற்றில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், போன்றவர்களுக்கு சன்னதிகள் உள்ளன. கருவறையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர்,  , வன துர்க்கை போன்றவர்களையும்  தரிசிக்கலாம்.

வனதுர்க்கை, பிரும்மா

கருவறையில் லிங்கத் திருவுருவில் வீரட்டேசுவரர் எழுந்தருளியுள்ளார். இறைவன் சன்னதிக்கு முன்பாக தனி சந்நிதியில் தட்ச சம்கார வீரபத்திர மூர்த்தியின் திருமேனியை  காணலாம்.   சூலம், மழு, கத்தி, கேடயம், கபாலம், மணி ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய எட்டு கரங்களுடன் காட்சி தருகிறார் வீரபத்திரர். இந்த ஆலயத்தில் பைரவருக்கும் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஆலயத்தில் நவக்கிரகம் இல்லை.  யாகத்தை வீரபத்திரர் அழித்தபோது நடந்த  நிகழ்ச்சியில் சூரியபகவானின் பல் உடைந்தது. அவர் சிவபெருமானை துதித்தபடி அங்கேயே நின்று இருந்தார் என்பதினால் அவர் உருவம் ஆலயத்தில் சிற்பமாக உள்ளது.

 



முகமண்டபத்தில் அம்மன் சன்னதி திருமுன்  தெற்கு  நோக்கி அமைந்துள்ளது. நான்கு கரங்களைக் கொண்டு காட்சி தரும் அன்னையின் பெயர் இளங்கொம்பனையாள் என்பதாகும். மண்டபத்தில் மயில் மேல் காலூன்றி நிற்கும் முருகன்,  விநாயகர், பிரதோஷ நாயகர் ஆகியோரின் சிலைகள் காணப்படுகின்றன.
தட்சன் ஆட்டுத் தலையுடன் இறைவனை வழிபடும் தல வரலாறு தெற்குச் சுவரில் சிற்பமாகக் படைக்கப்பட்டு உள்ளது. மேலும் கருவறையின் இன்னொரு பகுதியில் முனிவர் மற்றும்  அரசன் ஒருவனும் நின்ற நிலையில் வணங்கும் கோலத்தில் இருக்க, இன்னொரு சுவற்றில் தட்ஷன் தனது பரிவாரங்களுடன் சிவலிங்கத்துக்கு பூஜை செய்வதைப் போன்ற  சிற்பங்களும் உள்ளன .



அஷ்ட வீரட்டத் தலங்களில் இது ஒன்றாகும். திருவாடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்தில் இந்த ஆலயம் உள்ளது. சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும். திருமண வரம், குழந்தை வரம் பெற இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நடக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் பக்தர்களது வேண்டுதல்கள்  நிறைவேறுவதாக நம்பிக்கை உண்டு.

மூலவர்  பெயர்  
:-  வீரட்டேஸ்வரர், தட்சபுரீசுவரர்

உற்சவர்  பெயர் :-  சம்ஹாரமூர்த்தி
அம்மன் பெயர்   :-  இளம்கொம்பனையாள் அல்லது இளம் கொடியம்மை 
தல விருட்சம்   :- பலா மரம் மற்றும் வில்வம் 
தீர்த்தம்  :- உத்திரவேதி
 


ஆலய முகவரி  
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
செம்பனார் கோயில் - அஞ்சல் - 609 309
தரங்கம்பாடி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்

தமிழ்நாடு  

முற்றும் 

Irettai Pillaiyaar ( Two Vinayagas) - 1

$
0
0
I
(துவக்க உரை: -இந்தக் கட்டுரையில் உள்ள செய்திகள் அதிக அளவில் உள்ளதினால் இது மூன்று பாகமாக வெளியிடப்படுகிறது- சாந்திப்பிரியா)

எந்த பூஜையை செய்வதானாலும் முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டே பூஜையை செய்ய வேண்டும் என்பார்கள். அதற்குக் காரணம் வினைகளையும் தடைகளையும் தீர்ப்பவர் வினாயகர் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடங்க உள்ள அல்லது தொடங்கிய காரியங்கள் தொடர்ந்து நடந்தேறவும் அக்காரியத்தில் இயற்கையான தடைகள் ஏற்பட்டு விடாமலிருப்பதற்கும், அக்காரியம் வெற்றி பெறுவதற்காகவும் வினாயகரை வேண்டுகிறோம்.

இந்த நம்பிக்கை பொய்த்து விடக் கூடாது என்பதற்காகத்தான் அந்த வினாயகரே வியாச முனிவர் கூறிய மகாபாரதத்தை எழுதத் துவங்குவதற்கு முன்னால் தன்னைப் போலவே இன்னொரு உருவத்தை தன் அருகில் படைத்து அதை தானே (கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்ப்பது போல) வணங்கியப் பின் மகாபாரதத்தை எழுதத் துவங்கியதாக ஒரு புராணக் கதை உண்டு. அதாவது பிள்ளையாரே தனது பிம்பமான இன்னொரு பிள்ளையாரை தோற்றுவித்து, அதை வணங்கி துதித்தப் பின்னரே தனது காரியத்தை துவக்கியதான ஐதீகம். அதுவே இரட்டை பிள்ளையார் எனும் எண்ணம் துவங்கிய கதை.

முன் காலங்களில் வைதீக பூஜைகளில் முக்கியமாக பண்டிதர்கள் எனப்பட்ட வைதீகக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகளில் பூஜைகளை செய்யும்போது குடும்பத்தின் மூத்தவர் செய்யும் பூஜையில் தம் குடும்பத்திற்காக ஒரு பிள்ளையாரையும், தமது வம்சாவளியினருக்காக இன்னொரு பிள்ளையாரையும் மஞ்சளில் பிடித்து வைத்து அந்த இரண்டிற்குமே ஒரே நேரத்தில் பூஜைகளை செய்வார்களாம். இது சோழ மன்னர்கள் மற்றும் பல்லவ மன்னர்கள் காலத்தில் அதிகம் இருந்துள்ளது. இது இலங்கை நாட்டிலும் பரவி இருந்துள்ளது. அதனாலோ என்னவோ இலங்கையிலும் சில ஆலயங்களில் இரட்டைப் பிள்ளையார் காட்சி தருகிறார். இரட்டை பிள்ளையாருக்கு பூஜை செய்வதை மிகுந்த புண்ணியம் என்பார்கள். அது குடும்பத்தை மட்டும் காப்பாற்றும் என்பதல்ல, அவர்களது வம்சத்தையும் வாழ வைக்கும் என்பார்கள். யாராக இருந்தாலும் பிள்ளையாரை வழிபட்ட பிறகே எந்த காரியத்தையும் துவக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை என்பதினால் வினாயகரின் பூஜையை துவக்கும் முன்னால் கூட வினாயகரின் உருவத்திற்கு முன்னால் மஞ்சளில் பிடித்து வைத்த ஒரு வினாயகரை 'விக்னம் தீர்ப்பாய் வினாயகா'' என வேண்டிக் கொண்டு அதற்குப் பிறகு வினாயகர் பூஜையை ஆரம்பிப்பதாக ஒரு ஐதீகம் இருந்துள்ளது.

வினாயகர் ஒருவர் மட்டுமே வேறு அவதாரம் எடுக்கவில்லை என்பது தனிச் சிறப்பு. முதலில் அவர் அவதரித்தபோது மனிதத் தலைக் கொண்டு அவதரித்தார். ஆனால் கடவுளின் ஒரு குறிப்பிட்ட நாடகத்தில் அவருடைய தாயாருக்காக அவர் தனது தலையை இழக்க நேரிட்டபோது அவருடைய தாயாரின் வேண்டுகோளை ஏற்று அவருடைய தந்தையே அவருக்கு இன்னொரு முகத்தை - யானை முகத்தை- தந்து அவரை உயிர்பித்தார். அதனால்தான் முதலில் மனிதத் தலையுடன் இருந்த வினாயகரை வணங்கி உன்னைப் போலவே விக்னம் இல்லாமல் அனைத்தும் இருக்கட்டும் என பிரார்த்தனை செய்து கொண்டு பல சக்திகளைப் பெற்று தடைகளை விலக்கும் சக்தியைப் பெற்று இருந்த யானை முகத்தைக் கொண்ட வினாயகரை பூஜையை செய்வதான ஐதீகத்தில் ஏற்பட்டதே இரட்டைப் பிள்ளையார் பூஜைகளும்.

எதற்காக இந்த இரட்டை பிள்ளையார் வழிபாடு துவங்கியது என்பதற்கு ஒரு காரணம் உள்ளது. நாம் செய்யும் எந்த பூஜைகளும் தடங்கல் இன்றி நடத்திக் கொடுக்க அந்த வினாயகரே இரண்டு நிலைகளை எடுப்பாராம். முதலில் தன் அடிமையான விக்னேஸ்வரனை அனுப்பி விக்னங்களை கிரகித்துக் கொள்ளுமாறு கூறியபின் தான் வந்து அமர்ந்து பூஜைகளை ஏற்பாராம்.

இதற்கும் ஒரு பின்னணி காரணக் கதை உள்ளது. முன் ஒரு காலத்தில் காலரூபி என்றொரு வடிவமற்ற அசுரன் இருந்தான். அவனுடைய வேலை ஒவ்வொரு காரியத்திலும் எத்தனை தடைகள், விக்னங்கள் மற்றும் இடையூறுகளைத் தர முடியுமோ அத்தனையையும் தருபவனாக இருந்தான். அதனால் அவன் செயலை விக்னத்தை தருபவன் என்பார்கள். அனைத்து ரிஷி முனிவர்களும் காலரூபியினால் அவதிப்பட்டார்கள். அவர்களால் யக்னங்களையும் யாகங்களையும் சரிவரச் செய்ய முடியவில்லை என்பதினால் அவர்கள் வினாயகரிடம் சென்று அவரை தமக்கு உதவுமாறு வேண்டினார்கள்.
காலரூபியை வினாயகர்  அழித்து 
விக்னேஸ்வரனாக்கிக் கொண்டார் 

அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வினாயகரும் அந்த காலரூபியை  போர் புரிந்து அழித்தார்.  மரணம் அடையும் முன்னால் அவன் வினாயகரின் கால்களில் விழுந்து சரணாகதி அடைந்தான். தனக்கும் அவருடைய காலடியில் ஒரு இடம் தருமாறு கேட்டுக் கொள்ள அவரும்  அவனிடம் கூறினார்  'உனக்கு நான் இன்று முதல் விக்னேஸ்வரன் என்று பெயர் தருகிறேன்.  எனக்கு பூஜை செய்பவர்கள் முதலில் 'விக்னேஸ்வரா, எனக்கு வர உள்ள விக்னங்களை நீயே விலக்குவாய்'  என உன் பெயரை உச்சரித்து, உன்னை பூஜை இடத்தில் இருந்து விலக்குமாறு என்னிடம் வேண்டுவார்கள்.  ஆகவே எனக்கு செய்யப்படும் பூஜையில் உனக்கும் ஒரு சிறு பங்கு இருக்கும்.   நீயும் வர உள்ள அனைத்து விக்னங்களையும் கிரகித்துக் கொண்டு சென்று விடுவாய்.  ஆகவே இன்று முதல்  நீ என்னுடைய எந்த  பக்தர்களுக்கும் உன்னுடைய செயல்களினால் தடைகளையும், துன்பங்களையும்  தரக்கூடாது.  ஆனால் அதே சமயம் எனக்கு அபசாரம் செய்பவர்களையும், என்னை உதாசீனப்படுத்துபவர்களையும் நீ பல விதமான விக்கினங்களில் சென்று அவர்களுடைய செயல்களுக்கு தடைகளை செய்யலாம்.  இதற்கு மாறாக நீ நடக்கக்கூடாது," என்று ஆணையிட்டார்.
 
 மனிதத் தலையுடன் ஆதி வினாயகர். 
பூந்தோட்டம், கூத்தனூர் வினாயகர்ஆலயம் 

ஆகவேதான் அந்த காலரூபியை விக்னேஸ்வரனாக  பிடித்து வைத்து 'விக்னங்களை கிரகித்துக் கொள்வாய்' என வேண்டிக் கொண்டு அடுத்து வினாயகருக்கு பூஜையை துவக்குவார்கள்.  அதனால்தான் முதலில் இரு உருவங்களை வைத்து வினாயகர் பூஜை செய்யும் பழக்கம் இருந்தது. இப்படியாகவே  வினாயகரை விக்னேஸ்வரனாகவும் , வினாயகராகவும்  வழிபடப்பட்ட,  பல  இடங்களில் மட்டுமே நிலவி வந்திருந்த  இந்த ஐதீகம் காலபோக்கில் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே  வந்திருந்தாலும், அதனால் ஏற்பட்ட தாக்கம் பல ஆலயங்களில் மறைந்து விடாமல் அமைந்தது.  பல மன்னர்கள் அமைத்த பல தொன்மை வாய்ந்த ஆலயங்களில் இன்றும் இரட்டை பிள்ளையார் சன்னதிகள் இருப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் மேலே கூறியவைதான். முக்கியமாக சிவன் கோவில்களில் அது அதிகம் உண்டு என்பதின் காரணம் சிவபெருமானினால் வினாயகர் மனிதத் தலையை இழந்து யானை முகனாகி அபார சக்தி பெற்று இருந்தார் என்பதே ! எனக்குத் தெரிந்தவரை தில தர்பண பூமி (கூத்தனூர்) எனும் ஆலயத்தில் மட்டுமே மனிதத் தலையுடன் வினாயகர் காட்சி அளிக்கிறார். மற்ற ஆலயங்களில் அவர் யானை முகத்தவனாகவே இருக்கிறார்.

இன்னொரு கதையின்படி வினாயகர்  இரண்டு உருவங்களில் இருந்தவர்  என்பதினால் பூஜைகளில் வர உள்ள அனைத்து தடைகளையும், விக்னங்களையும் மனிதத் தலையுடன் அவர் அவதரித்த முதல் பிள்ளையார் நிலையில் இருந்து கொண்டு கிரகித்துக் கொள்வாராம். அதன் பின் கஜமுக வினாயகர் நிலையை எடுத்துக் கொண்டு  வினாயகருக்கு செய்யப்படும்  பூஜைகளை ஏற்றுக் கொண்டு பூஜை செய்பவர்களுக்கு அருள் புரிவாராம். ஆக வினாயகரே இரு நிலைகளில் - அதாவது இரட்டை பிள்ளையார் நிலையில் - இருந்து கொண்டு பூஜைகளை ஏற்றுக் கொள்வதான ஐதீகத்தில் பிறந்ததே  இரட்டை பிள்ளையார் பூஜை என்று கூறுவார்கள்.
..........தொடரும் 

Irettai Pillaiyaar ( Two Vinayagas) - 2

$
0
0

 
II
பொதுவாக பூஜிக்கப்படும் மூலக் கடவுட்கள் எனப்படுபவர்கள் நான்குபேர் மட்டுமே. மற்றவர்கள் அனைவருமே முதல் மூன்று கடவுட்களின் அவதாரங்களே. வினாயகரின்  துணை அவதாரங்கள் எதுவும் உள்ளதாக புராணக் கதைகளிலும் காணப்படவில்லை. ஆகவே வினாயகர் மட்டுமே தனிக் கடவுள் எனலாம்.  முதல் மூவரின் அவதாரங்கள்  அனைத்துமே  இரண்டாம் நிலைக் கடவுட்களே.
  • சிவபெருமான்- பார்வதி
  • பிரும்மா- சரஸ்வதி
  • விஷ்ணு- மகாலஷ்மி
  • வினாயகர்
முருகன் மூலக் கடவுட்களில் ஒருவரா என்பதும் ஒரு சர்ச்சையாகவே உள்ளது. முருகனை சிவபெருமானின் அல்லது சக்தியின் அவதாரம் என்றே கூறுகிறார்கள்.  ஆகவே முருகனைக்  மூலக் கடவுள் என்று கூறுவது இல்லை.

ஒற்றை அல்லது இரட்டை பிள்ளையார் என எப்படி இருந்தாலும் பிள்ளையார் எனும் மூலக் கடவுளின் தத்துவம் வியப்பானது !! ஒவ்வொரு கடவுளையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு இயற்கையில் அமைந்த ஒரே ஒரு உருவம் மட்டுமே  உண்டு.  மற்றவர்கள் அனைவருமே அவர்களுடைய துணை கடவுட்கள் மற்றும் அவதாரங்களே.

அனைத்து  கடவுட்களும் அவரவர்களுடைய  இயற்கை உருவத்தினால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள், வணங்கப்படுகிறார்கள். இயற்கை உருவம் என்றால் அதை இப்படியாக அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  சிவன் என்றால் ஒரு குறிப்பிட்ட உருவத்தில் மட்டுமே அவரைக் காண்பார்கள். ஆனால் அவருக்கு பல ரூபங்களும் அவதாரங்களும் உண்டு. துணை அவதாரங்களும் துணை கடவுட்களுமாக அவருடைய உடலில் இருந்து பலர் தோன்றி உள்ளனர்.   உதாரணமாக ருத்திரன், பைரவர், சிவலிங்கம், நடராஜர் போன்ற பல உருவங்கள் சிவபெருமானுக்கு உண்டு என்றாலும் சிவன் என்றால் இப்படி என்று கூறும் விதத்திலான ஒரு குறிப்பிட்ட மூலத் தோற்றம் அவருக்கு உண்டு.

அது போலவே விஷ்ணுவிற்கும் நரசிம்மர், கிருஷ்ணர், ராமர், தசாவதாரம்  எனப் பல்வேறு அவதார ரூபங்கள் மற்றும் அவதாரங்கள் உண்டு என்றாலும்  அவருக்கும் இப்படி என்று கூறும் விதத்திலான ஒரு குறிப்பிட்ட தோற்றம் உண்டு.  இப்படியாக ஒவ்வொரு கடவுளுக்கும் அது ஆண் கடவுள் என்றாலும் சரி, பெண்ணினமாக இருந்தாலும் சரி பல்வேறு ரூபங்கள் மற்றும் உருவங்கள் உண்டு என்றாலும், அந்த உருவங்களின் மூலம்  அவர்கள் பல்வேறு விதமாக  ஆராதிக்கப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில்தான் அவர்களை அடையாளம்  காண்பார்கள்.

முக்கடவுட்களின் பொதுவான உருவம் 

ஆனால் இதில் விதி விலக்காக உள்ளவர்  வினாயகர்  மட்டுமே.  மூலக் கடவுளான வினாயகரை  மட்டுமே  யானை முகத்தவனாகவே வழிபடுகிறோம். அவர் ஒரு முக வினாயகராக  இருந்தாலும் சரி, பஞ்சமுக வினாயகராக  இருந்தாலும் சரி, அவர் வேறு அவதாரத்தில்  காட்சி தரவில்லை.  யானை முகனாகவே காட்சி தருகிறார். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே மனிதத் தலையுடன் காட்சி அளித்தாலும் பிள்ளையார் என்றால் யானை முகத்தவரே. எனக்குத் தெரிந்தவரை இந்த உலகிலேயே மனித உருவுடன் வினாயகர்  உள்ளது கூத்தனூரில் உள்ள தில தரப்பான பூமி ஆலயத்தில் மட்டுமே என்பதை அதனால்தான் முதல் பகுதியில் சுட்டிக் காட்டி இருந்தேன்.

 பக்தி மற்றும் பூஜை என்பவை வேறுபட்டவை. கடவுளிடம் பக்தி செலுத்துபவன் பூஜைகளை செய்பவனாகவே இருக்க வேண்டும் என்பதல்ல தத்துவம். பக்தியை வெளிக் காட்டாமல் வேஷம் போடாமல் உள்ளுக்குள்ளே வைத்திருப்பது என்பது தன் நிலை உணர்தல் எனும் உயரிய தன்மை ஆகும். இப்படிப்பட்டவர்களே அவர்களுக்கு உள்ளேயே குடி இருக்கும் கடவுளைக் காண முடியும். நாம் அனைவருமே பூர்வ ஜென்ம வினைகளினால் மானிடப் பிறவி எடுத்து வந்துள்ளோம். அதில் பல கர்மாக்கள் அடங்கி இருக்கும். அவற்றை எல்லாம் பக்தி எனும் சக்தியைக் கொண்டு அழித்து விட்டுச் செல்ல வேண்டும்.

அதற்கு முதல்படியாகத்தான்  நாம் தினமும் மற்றக் கடவுட்களை வழிபடுவதற்கு முன்னால் ஒரு ஷணம் வினாயகரை வணங்கி விட்டே மற்ற பக்தியையும் துவக்க வேண்டும். இல்லை என்றால் காலரூபி எனப்படும் விக்னேஸ்வரன் - விக்னத்தை தருபவன் - நம்மை பின் தொடர்ந்து கொண்டே இருப்பான். வினாயகருக்கு முதல் கடவுள் என்ற நாமதேயம் சூட்டி அவருக்கு முதல் மரியாதையைத் தர வேண்டும் என்பதினால்தான் சிவபெருமானே, வினாயகரை தனது மகன் என்றும் கருதாமல் தான் எங்கு சென்றாலும் முதலில் வினாயகரை வணங்கி விட்டு செல்வார் என்பது புராணக் கதை. அப்படிப்பட்ட சிவபெருமானே வினாயகரை முதலில் வணங்கி விட்டே தனது காரியத்தை துவக்குவார் என்பதில் இருந்தே வினாயகரின் சக்தி புரியும். இந்த நிலை ஒற்றைப் பிள்ளையாருக்கே என்றால் ரெட்டைப் பிள்ளையாரைப் பற்றி எப்படிக் கூறுவது என்று எண்ணத் தோன்றும் ?

உண்மையைக் கூறினால் ஓற்றையோ, இரட்டையோ எந்தப் பிள்ளையாரை வணங்கினாலும் அவர் அருள் புரிவார் என்றாலும் ஒரு சில நேரங்களில், ஒரு சில காரியங்களுக்காக ரெட்டை பிள்ளையாரை வணங்கித் துதிப்பது மிக்க நல்ல பலனைத் தரும். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. ஆனால் இரட்டை வினாயகர்  எல்லா ஊர்களிலும் இருப்பதில்லை. சில ஆலயங்களில் மட்டுமே இருக்கிறார்கள். இரட்டைப் பிள்ளையாரை எப்படி வழிபடுவது ? அதற்கு என்ன முறை ??

இரெட்டை பிள்ளையாரை நெய்தீபம் ஏற்றி, அருகம் புல் சாற்றி வழிபட்டால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும்,  சந்தனக் காப்புப் போட்டு பூஜை செய்வதின் மூலம்  தடைப்பட்ட திருமணங்கள் தடை விலகி திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். மணப்பேறு,  மகப்பேறு கிட்ட, பித்ரு சாபங்கள் தீர, நோய்கள் அகல இரெட்டை பிள்ளையாரை பைரவருடன் சேர்த்து வணங்குவார்கள். இரெட்டை பிள்ளையார் தோஷங்களைக் களைபவர் என்பதினால் குறிப்பாக செய்வாய் தோஷம் உள்ளவர்கள் தேய்பிறை சதுர்த்தியில் அருகம் புல் மாலைப் போட்டு பூஜை செய்தும், சர்ப தோஷம் உள்ளவர்கள் செய்வாய்க் கிழமையில் நெய் விளக்கு ஏற்றியும் சந்திர தோஷம் உள்ளவர்கள் கொழுக்கட்டைப் போட்டு, வெல்ல சாதமும் நெய்வித்தியம் செய்து  பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆமாம் இரட்டைப் பிள்ளையார்  இல்லாத ஊர்களில் அவரை எப்படி வழிபடுவது? அதற்கு ஏதேனும் உபாயம் உள்ளதா? இவை அடுத்தடுத்தக்  கேள்விகள்!! 
 ............தொடரும் 

Irettaip Pillaiyaar ( Two Vinayagas ) - 3

$
0
0
III
சரி ரெட்டை பிள்ளையார் இல்லாத ஊர்களில் உள்ளவர்கள் அவரை எப்படி பூஜிக்கலாம்? வினாயகர் ஒருவருக்கு மட்டுமே குறிப்பிட்ட உருவம் இல்லாமல் பூஜை செய்ய முடியும். சந்தனம் அல்லது மஞ்சளில் பிடித்து வைத்த கூம்பை (சிறு முக்கோண மலை வடிவம்) தட்டில் பிடித்து வைத்து அதையே பிள்ளையாராக பாவித்தே பல பூஜைகளும் செய்யப்படுகின்றன. ஆகவே ரெட்டைப் பிள்ளையாரை உடனடியாக தரிசனம் செய்ய முடியாதவர்கள் ஒரு செய்வாய் கிழமையில் ஏதாவது ஒரு இடத்தில் உள்ள (ஆலயம் சிறப்பானது) அரச மரத்தின் அடியில் கெட்டியான சந்தனத்தால் அல்லது மஞ்சளினால் பிடித்து வைத்த இரண்டு பிள்ளையார்களை வைத்து தமக்குத் தேவையான வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு ரெட்டைப் பிள்ளையாரை வேண்டிக் கொண்டு அந்த இரு கூம்புகளையும் இரண்டு பிள்ளையார்களாக பாவித்து அதற்கு பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த மரத்துடன் இரண்டு பிள்ளையாரையும் பிரதர்ஷனம் செய்து விட்டு வந்து விட வேண்டும். இப்படியாக ஐந்து செய்வாய் கிழமை பூஜை செய்ய வேண்டும். இடையில் ஏதாவது காரணத்தினால் தடைப்பட்டாலும் அதை தொடரலாம். ஆனால் மொத்தம் ஐந்து செய்வாய் கிழமைகளில் செய்ய வேண்டும் என்பது நியமம்.

அரச மரம் இல்லாத இடத்தில் எப்படி பூஜை செய்வது? அரச மரம் பிள்ளையாருக்கு பிடித்தமான மரம் என்பதால்தான் எளிதில் அங்கு தோன்றி கோரிக்கைகளை ஏற்பார் என்பது ஐதீகம். அரச மரம் இல்லாத ஊர்களில் அங்குள்ள வினாயகரின் சன்னதியில் சந்தனத்தில் அல்லது மஞ்சளில் பிடித்து வைத்த இரண்டு பிள்ளையார்களை வைத்து பூஜை செய்தப் பின் அந்த ஆலயத்தை சுற்றி பிரதர்ஷணம் செய்யலாம். பிள்ளையாருக்கு தனி சன்னதி இருந்தால் அதை மட்டும் சுற்றி பிரதர்ஷணம் செய்யலாம்.

மஞ்சள் அல்லது சந்தனத்தில் பிடித்து வைத்து
பூஜை செய்ய வேண்டிய பிள்ளையார்

அடுத்த கேள்வி அப்படி பிடித்து வைக்கும் பிள்ளையாருக்கு என்ன மாதிரியான பூஜையை செய்வது? இதுவும் மிக எளிதானது. பிடித்து வைக்கும் பிள்ளையாருக்கு சந்தன குங்குமம் இட்டு, மலர்கள் தூவி (அருகம் புல் விஷேசம்) உங்கள் கோரிக்கையை மனதார கூறி அவரை வேண்டிக் கொண்டு உங்களுக்கு தெரிந்த வினாயகர் தோத்திரத்தைக் கூறி பூஜிக்க வேண்டும். வினாயகர் மந்திரங்கள் தெரியாதவர்கள் வினாயகர் அகவலை படித்தால் போதும். அதுவே வினாயகரை பூஜிக்கும் சிறந்த ஸ்துதி ஆகும்.

ஐந்து வாரமும் புதியதாக சந்தானம் அல்லது மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தப் பின் அதை அப்படியே அரச மரத்தடியில் அல்லது பிள்ளையார் சன்னதியில் வைத்து விட்டு வந்து விடலாம். தோஷம் எதுவும் இல்லை. அரச மரத்தடியில் பூஜை செய்தப் பின் ஏதாவது ஒரு கோவிலில் உள்ள வினாயகரின் சன்னதிக்குச் சென்று தம்முடையக் கோரிக்கையை அவரிடம் வைத்து அங்கேயே அவரிடம் வேண்டிக் கொண்டு, அது நிறைவேறினால் ரெட்டைப் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டு வர வேண்டும். ஐந்தாவது வார பூஜை முடிந்ததும் நீங்கள் எந்த ஆலயத்தில் சென்று பிள்ளையாரை வழிபடுகிறீர்களோ அங்கு உள்ள ஏதாவது ஒரு பண்டிதருக்கு வெற்றிலைப், பாக்கு, தேங்காய், பழம் சகிதம் உங்களால் முடிந்த அளவு பணத்தைத் தந்து (இருபத்தி ஒன்று, ஐம்பத்தி ஒன்று அல்லது நூற்றி ஒன்று என்ற கணக்கில்) அவரை நமஸ்கரித்து விட்டு வர வேண்டும். ஐந்து செய்வாய் கிழமைகளிலும் அப்படி செய்யத் தேவை இல்லை. ஐந்தாவது வார இறுதிப் பூஜைக்குப் பிறகே அதை செய்ய வேண்டும். ஐந்து வார பூஜை செய்தப் பின் மீண்டும் அதை செய்ய வேண்டியது இல்லை. பிரச்சனைகள் மெல்ல மெல்ல விலகத் துவங்கும் என்பது நம்பிக்கை. ஆனால் நிச்சயமாக அதீதிப் பயன் இதில் உண்டு என்பது மட்டும் நிச்சயம்.

ஐந்து செய்வாய் கிழமைகள் பூஜை முடிந்தப் பிறகு எப்போது முடிகிறதோ இதற்குக் காலக் கெடு கிடையாது , நீங்கள் செல்லும் எந்த ஊரிலாவது உள்ள ரெட்டை பிள்ளையார் ஆலயத்துக்குச் சென்று உங்களுடைய அதே கோரிக்கையை அவரிடம் மானசீகமாகக் கூறி அவருக்கு அர்ச்சனை செய்து விட்டு வந்து விடலாம். கூடுமானவரை அதையும் செய்வாய்க் கிழமை அன்று செய்வதில்தான் அதிகப் பலன் உண்டு. இன்னொரு முக்கியமான விஷயம். ஐந்து வார பூஜையையும் செய்வாய் கிழமையில்தான் செய்ய வேண்டும்.


 திருவேள்விக்குடி ஆலயத்தில் உள்ள
 இரெட்டை பிள்ளையார் 

மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடி ஆலயத்தில் உள்ள இரெட்டை பிள்ளையாரின் பெயர் சங்கல்ப வினாயகர் என்பது. அவரை ஆதி வினாயகர் என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள பிள்ளையாருக்கு தேய்பிறை சதுர்த்தி திதி, திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும், திதிகளில் பஞ்சமியும் விஷேசமான தினங்களாகக் கருதப்படுகிறது. இந்தப் பிள்ளையாருக்கு திருவோண நட்சத்திரத்தில் மாம்பழங்கள் நெய்வித்தியம்  செய்து ஏழைத் தம்பதிகளுக்கு தானம் செய்தால், கணவன்-மனைவி உறவு பலப்படுவது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொங்கும். திருவாதரை நட்ஷத்திரத்தன்று அதற்கு வில்வ மாலை போட்டு வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும், உடல் ஆரோக்கியம் சீர்படும். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வம் பெருகும். விசாக நட்சத்திரத்தன்று பலவிதமான பூக்களால் தொடுத்த மாலையைப் போட்டு துதித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும் என்பார்கள் . அது மட்டும் அல்ல பெற்றோர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் இங்கு வந்து சங்கல்பம் செய்து கொண்டு பூஜித்தால் பிரிந்தவர் ஒன்று கூடுவர் என்பதும் உண்டு.

இது போல திருவையாறு ஐயாரப்பன் ஆலயத்தில் உள்ள இரெட்டை பிள்ளையாரின் முன்னால் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் . பொதுவாகவே திருமணமாகாத பெண்கள் சந்தான அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். சங்கட ஹர சதுர்த்தியில் வழிபட கணவன் மனைவி ஒற்றுமை வலுப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்.

திருவண்ணாமலையில் மிக பழமை வாய்ந்த கோயில்களில் இரட்டை பிள்ளையார் ஆலயமும் ஒன்று. கிரி வலம் செல்லும் வழியில் இந்த ஆலயத்தைக் காண முடியும். இந்த ஆலயம் உள்ள சாலையை இரட்டை பிள்ளையார் கோயில் தெரு என அழைக்கிறார்கள். இந்த ஆலயத்தில் உள்ள இரட்டை பிள்ளையாருக்கு நெய்தீபம் ஏற்றி, அருகம் புல் சாற்றி வழிபட்டால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை .

மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் உள்ள இரெட்டை வினாயரும் மிகச் சிறப்பானவர். அது போலவே திருவான்மியூரில் உள்ள இரெட்டை வினாயரும் மிகச் சிறப்பானவர் .

கடலூரில் உள்ள புதுப்பாளையம் இரட்டைப் பிள்ளையார் ஆலயமும் மகத்துவமானது . அது போலவே திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள இரெட்டை வினாயரும் சிறப்பானவர் அவர்களை வலம்புரி வினாயகர் மற்றும் பாதிரி வினாயகர் என்ற பெயர்களில் அழைக்கிறார்கள். இவர்களை வணங்கினால் நவக்கிரகங்களினால் ஏற்பட்ட அனைத்து தோஷங்களும் வெகு விரைவில் விலகும் என்பது ஐதீகம் .


தஞ்சை மாவட்டத்தில் குடந்தைக்கு அருகில் உள்ள பாபநாசத்தில் உள்ள இருநூறு ஆண்டுக்கும் மேற்பட்ட ஆலயத்தில் காணப்படும் தாமோதர வினாயகர் எனும் பெயரில் உள்ள இரட்டைபிள்ளையார் மிக சக்தி வாய்ந்தவராக காணப்படுகிறார் .

சங்கரன்கோவிலில் உள்ள சங்கரனாராயனர் ஆலயத்தின் பின்புறத்தில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான வேலைப்ப தேசிகர் ஆலயத்திலும் இரட்டைப் பிள்ளையார் சன்னதி உள்ளது. மேலும் சில இடங்களில் உள்ள இரட்டைப் பிள்ளையார் ஆலயங்கள் வருமாறு:
  • திருநெல்வேலி மாவட்டத்தில் சீவலப்பேரியில் உள்ள இரட்டைப் பிள்ளையார் ஆலயம்.
  • தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிற்ரூரான திருப்பனதாளில் இருந்து சீர்காழிக்குச் செல்லும் வழியில் உள்ள மரத் துறை எனும் சிறு கிராமத்தில் உள்ளது ஒரு இரட்டைப் பிள்ளையார் ஆலயம்.
  • கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் உள்ள சிற்றூரான கொத்துக் கோவில் எனப்படும் இடத்தில் உள்ளது சுந்தர மற்றும் ராஜ விநாயகர் என அழைக்கப்படும் இரட்டைப் பிள்ளையார் ஆலயம்.
  • ஸ்ரீரங்கத்தில் உள்ள உத்தமர்கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தலை வாசலை அடுத்த ஆறகலூர், ஊட்டி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வினாயகர் கோவில் போன்ற இடங்களிலும் இரட்டைப் பிள்ளையாருடைய சன்னதிகள் உள்ளன.
  •  மதுரை தல்லாக்குளத்தில் உள்ளது  இரட்டைப் பிள்ளையாருடைய ஆலயம். 
  • சென்னையில்  பம்மலில் பசும்பொன்  ஆலயத்திலும் உள்ளது இரட்டைப் பிள்ளையாருடைய ஆலயம்.  
  • திருவொற்றியூர் வடிவுடை அம்மன் ஆலய  தனி சன்னதியிலும் இரட்டைப் பிள்ளையார் உள்ளார்.
  • திருவான்மியூரில் இரட்டைப் பிள்ளையாருடைய சன்னதி உள்ளதாகக் கூறுகிறார்கள்.
  • சென்னையில் மடிப்பாக்கத்தில் உள்ள இன்னொரு இரட்டைப் பிள்ளையார் ஆலயத்தின் கதையும் சுவையானது.  சென்னை-மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வினாயகரின்  பக்தர் ஒருவர் சுமார் நூறு வருடங்களுக்குமுன் தன் வயலில் கிணறு வெட்டுவதற்காக பூமியை தோண்டிக் கொண்டு இருந்தபோது பூமியின் கீழேயிருந்து ஒரு கல் தெறித்துச் சிதறியதாம். அதன் தோற்றம் கிட்டத்தட்ட பிள்ளையாரைப் போல இருந்ததினால் அதையே சுயம்பு வினாயகராக  கருதி, அது பள்ளத்தில் இருந்து கிடைத்ததினால்  அதற்கு பாதாள வினாயகர் எனப் பெயரிட்டு ஆலயத்தை அமர்த்தி அதை பிரதிஷ்டை செய்தாராம்.  ஆனால் முழுமையான விநாயகரின் சிலையாக அது இல்லை என்பதினால்  இன்னொரு வினாயகரின் சிலையை வைத்து பக்தர்கள் வணங்கத் துவங்கினார்கள். ஆனால் சில நாட்களிலேயே அனைவரும் அதிசயிக்கும் வகையில் முதலில் அமைத்த பாதாள வினாயகரின் வடிவம் மாறி வினாயகரின்  முழு உருவைப் பெற்றது என்கிறார்கள். அது முதல் கருவறையில் இரட்டை வினாயகர்கள் அமர்ந்துள்ளார்கள். 
மடிப்பாக்கம் இரட்டைப் வினாயகர் ஆலயத்தில் 
உள்ள இரண்டு வினாயகர்கள்  
  • கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை செல்லும் மார்கத்தில் வரும் கயித்தாறு (கட்டபொம்மனை தூக்கில் போட்ட இடம்) அருகில் உள்ளது ஒரு ரெட்டைப் பிள்ளையார் கோவில்.   
  • திருப்பத்தூரில் உள்ள கோட்டை ஈஸ்வரன் ஆலயத்திலும் ரெட்டை வினாயகர் சன்னதி உள்ளது. 

Is Maragatham ammaiyaar Valli devi's reincarnation ?

$
0
0

ஆண்டவன் பிச்சை 
மரகதம் அம்மையார்  
வள்ளி தேவியின் மறு அவதாரமா?

ஆங்கிலத்தில் :வீ. எஸ் . கிருஷ்ணன்

தமிழில் :சாந்திப்பிரியா

பிரபலமான வழக்கறிஞரும் பெரும் கல்விமானுமான சங்கரநாராயண சாஸ்திரி ஒருநாள் தனது வாசகசாலையில் அமர்ந்து கொண்டு இருந்தபோது யாரோ  தம் அறையில் நுழைவதை உணர்ந்தார்.  சாதாரணமாக அவர் தனது வேலையில்  மும்முரமாக இருக்கும்போது அவர் அறையில் யாரும் நுழைய மாட்டார்கள். வந்தது யார் என அவர் திரும்பிப் பார்த்தபோது தனது மகள் மரகதம் தன் பக்கத்தில் நின்று கொண்டு இருப்பதைக் கண்டார்.

எப்போதுமே சிரித்த முகத்துடனும் விளையாடிக்கொண்டும் இருக்கும் மரகதம் அன்று ஏனோ சற்று இறுக்கமான முகத்துடன் இருப்பதைக் கண்டு வியந்து அதற்கான காரணத்தை அவளிடம் கேட்டார். ஆனால் அவளோ அதற்குப் பதிலாக முருகன் மீதான பாடல் ஒன்றைப் பாடினார். அந்த  பாடலின் கருத்தாழத்தைக் கண்ட சங்கரநாராயண சாஸ்திரி  வியந்தார். பல விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் பல நாட்களாகத் விடை தேடிக் கொண்டு இருந்த சாசுவதமான வாழ்க்கை என்பதற்கு விளக்கத்தைக் தந்த பாடலாக அது அமைந்து இருந்தது.

அவள் பாடி முடித்ததும் அதைக் குறித்து அவர் அவளிடம் கேட்டார்' 'இத்தனை அற்புதமாகவும் ஆழம் பதிந்த பொருளுடனும் உள்ள இந்தப் பாடலை யார் இயற்றினார்கள்? இதை எங்கிருந்து கற்றுக் கொண்டாய்?'. அதற்கு அவள் பதில் தந்தாள் 'என் கனவில் நேற்று முருகப் பெருமான் தோன்றி இதை எனக்கு தந்தார் '

அவள் பாடிய பாடலின் கருத்து இது ' இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இருந்தது ஒன்றே ஒன்றுதான். அதுவே இரண்டாகி, பின்னர் மூன்றாகி அதன் பின் பல பொருட்களாகி விட்டது'. கற்றறிந்த சாஸ்திரிஜி அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார். முதலில் ஒன்று என்பது இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பரப்பிரும்மன் எனும் பராசக்தி. அதன் பின் தோன்றியது சிவன், பிரும்மா, விஷ்ணு.  அதன் பின் தோன்றியதே இந்த உலகம் மற்றும் பல தோற்றத்திலான கடவுட்கள். 'ஓர் உருவாக்கிய தாரகா' எனும் அருணகிரிநாதரின் பாடலை அது  நினைவு படுத்தியது.

சங்கரநாராயண சாஸ்திரி மற்றும் சீதாலஷ்மி அம்மையாருக்கு 1899 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்த பெண்ணுக்கு இயற்கையில் கிடைக்கும் அரிய மரகதம் மற்றும் வள்ளி தேவியின் பெயரில் வரும் வள்ளியையும் சேர்த்து மரகத வள்ளி என்ற பெயரை சூட்டினார்கள். குடும்பத்தில் அனைவருமே கல்விமானாக புகழ் பெற்றவர்களாக விளங்கி இருந்ததினால் மரகதமும் நன்கு படித்து தனக்கு உதவியாக இருப்பாள் என்ற எண்ணத்துடன் அவளுக்கு கல்வி அறிவு புகட்ட வீட்டிலேயே நல்ல ஆசானை அமர்த்தினார்கள். ஆனால் மரகதமோ படிப்பில் நாட்டம்  இல்லாமல் இருந்தாள்.

ஒரு கட்டத்தில் மரகதத்தின் தாயார் மரணம் அடைய, அவளது தந்தையும் அவரது ஆராய்ச்சியில் மும்முரமாக கவனம் செலுத்தி வந்ததினால் மரகத வள்ளி தனது மாமனான வெங்கடசுப்ப ஐயரின் பொறுப்பில் வாழ்ந்து வரவேண்டி இருந்தது. ஒரு காலத்தில் சாஸ்திரியின் தந்தை ஒரு சொந்தக்காரருக்கு கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றுவதற்காக சங்கரநாராயண  சாஸ்திரியும் காலாகாலத்தில் தனது பெண்ணான மரகதத்தை நரசிம்மன் என்பவருக்கு மணம் முடித்து வைத்தார்.  ஆனால்  திருத்தணி முருகனின் பக்தரான தனது பாட்டனாரிடம் இருந்து முருகன் மீதான கதைகளைக் கேட்பதிலேயே மரகதமும் ஆர்வமாக இருந்தார். மேலும் திருமணத்துக்குப் பிறகு எப்பொழுதெல்லாம் தனது தந்தையின் வீட்டிற்குப் போனாலும்  தனது பாட்டியை அழைத்து முருகன் கதைகளைக் கூறுமாறு கேட்பார். பாட்டியும் திருத்தணி முருகனின் மகிமைகளைக் அவருக்குக் கூறுவது உண்டு.

ஒருமுறை நவராத்திரியில்  தந்தையின் வீட்டிற்கு சென்று இருந்தபோது அவருடைய பாட்டியிடம்  முருகன் கதைகளைக் கேட்ட பின் உறங்கிக் கொண்டு இருந்த மரகதத்தின் கனவில் முருகப் பெருமான் தோன்றினார். அது முதல் அவளது வாழ்கை திசை திரும்பலாயிற்று. எப்படி நம்பிராஜனின் மகளான மலைப்பெண் வள்ளியின் மீது காதல் கொண்டு  அவளை தன்னிடம் முருகன் அழைத்துக் கொண்டாரோ அது போலவே மரகதத்தையும் அவர் தன்னிடம் அழைத்துக் கொள்ளத் துவங்கினார் என்றே கூற வேண்டும். தனக்குள் உள்ள பக்தி, விவேகம்  என அனைத்தையுமே முருகனே கொடுத்ததாகக் கருதிய மரகதமும் மெல்ல மெல்ல 'ஆண்டவன் பிச்சை' என அழைக்கப்படலானார். இன்றும் அவர் இயற்றிய பல அற்புதமான பாடல்களில் பல ஆலயங்களிலும் பாடப்படும் T.M. சௌந்திரராஜன் பாடி உள்ள 'உள்ளம் உருகுதையா' எனும் இனிய பாடல் மனதை மயக்கும் வகையில் உள்ளது.

 முருகன் நினைவிலேயே தன் 
வாழ்கையை கழித்து வந்தார் மரகதம் அம்மையார்  

பின்னர் மரகதம் தனக்கு வந்த கனவு குறித்து மற்றவர்களிடம் இப்படியாகக் கூறினார். '' முருகன் என் கனவில் வந்தார். என்னுடைய கைகளைப் பற்றிக் கொண்ட அவர் கூறினார் 'நான் உன்னைக் காதலிக்கிறேன்'. அதன் பின் அவர் என் உள்ளத்தை அவர் ஆக்ரமித்துக் கொண்டார். அதே கனவில் அவர் எனக்கு சன்னியாச தீட்சை தருவதை போலவும் உணர்ந்தேன். அவரே எனக்கு இத்தனை அழகான பாடலைப் பாடும் திறமையைத் தந்து எனக்கு ஆசிகள் தந்துள்ளார்.  தனது பக்தையான ஆண்டாளிடம் ரங்கநாதர் கூறியது போலவே முருகனும் என்னை அவருக்கு மல்லிகை அல்லது ரோஜா மாலைகளைப் போடாமல் அவர் மீதான பாடல்களை பாடி அவற்றையே மாலையாக்கி அவருக்கு போடுமாறு கூறினார். ஆண்டாள் திருப்பாவைப் பாடல்களைப் பாடியது போல முருகன் மீதான பாடல்கள் என்னை அறியாமலேயே எனக்குள் இருந்து தானாகவே வெளி வந்தது. அவரது பன்னிரண்டு தோள்களையும் பாடல்கள் எனும் மாலையினால் நான் அலங்கரித்தேன். உண்மையைக் கூறினால் என்னுடைய இதயத்தினுள் முருகப் பெருமானே அமர்ந்து கொண்டு அந்தப் பாடல்களை என் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் என்றே நினைக்கிறேன்''.

பல முறை மரகதம் முருகன்  மீதான பல பாடல்களையும் அவ்வபோது வெளிப்படுத்தி தனது பெற்றோர்களையும், மற்றவர்களையும் பரவசப்படுத்தினார். அந்த கனவு சம்பவத்துக்குப் பிறகு மரகதம் முருகனின் பரம பக்தையானார். அவளை சுற்றி அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருந்தாலும், அவரே குடும்ப வாழ்க்கையில்  ஈடுபட்டுக் கொண்டு இருந்தாலும் மரகதம் மனதளவில் குடும்ப வாழ்க்கையில் பற்றற்றவராகவே வாழ்ந்து வந்திருந்தார்.  தனது கணவர், குழந்தைகள் மற்றும் பிறருக்கு உடலால் சேவைகளை செய்து வந்தாலும் அவள் உள்ளத்தை முருகப் பெருமானே முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு இருந்தார்.  குடும்ப வாழ்வில் இருப்பது போல வெளிக்கு தோற்றம் தந்தாலும் அவர் இதயமோ முருகனின் காலடிகளையே  சுற்றிக் கொண்டு  இருந்தது. ஜொலிக்கும் நகைகளை பெண்கள் அணிந்து கொள்வது போல இதயத்தில் சுடர் விட்டுக் கொண்டு இருக்கும் முருக பக்தி எனும் நகையை அவர் அணிந்து கொண்டு இருந்தார்.

முருக பக்தியைப் பொருத்தவரை அவள் உள்ளமோ பளிங்குக் கல்லைப் போல தூய்மையாகவே இருந்தது. சுந்தரவல்லி எனும் பூர்வ ஜென்மப் பெண் வள்ளியாக நம்பிராஜன்  தினை  விளைந்த தானியத் தோட்டத்தை காவல் காத்து வந்தபோது வள்ளிமலைக்கு அவளைத் தேடி வந்தார் முருகன். அது போலவே இப்போது மரகதத்தின் ஆசையை பூர்த்தி செய்ய முருகன் பூமிக்கு வந்தபோது ஒரு குழந்தையைப் பெற்று எடுத்த நிலையில் மரகதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  இருந்தாள்.

மரகதம் மருத்துவமனையில் இருந்தபோது முருகன் அவள் முன்னால் ஒரு சன்யாசியைப் போல தோன்றி தன்னை மறந்து அவரைப் போற்றிப் புகழும் பாடல்களைப் பாடத் துவங்கினார். தன்னை மறந்து அமர்ந்திருந்த மரகதம் அந்த நேரத்தில் தன்னுடையக் குழந்தை அழுவதைக் கூட பார்க்கவில்லை. அங்கிருந்த நர்ஸ் அவளை தட்டி எழுப்பி அழுது கொண்டு இருந்த குழந்தையை கவனிக்குமாறுக் கூறினாள். அந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட அவளது மாமனார் வீட்டினர் அவளை கடிந்து கொண்டு முருகன் மீது அவள் இயற்றி எழுதி வைத்து இருந்த கைபிரதிகளை எடுத்துக் கொண்டு போய் ஒரு டிரங்க் பெட்டியில் வைத்து பூட்டி வைத்து விட்டார்கள்.

முருகனை மரகதம் அம்மையார் ஆண்டிப் பண்டாரம் என்றே அழைத்தார். இப்படியாக பற்றற்ற  நிலையில் வாழ்ந்து கொண்டு இருந்த அவளுடைய நடத்தையை அவளது புகுந்த வீட்டினர் ரசிக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை  அவர்களது மனமோ செல்வத்தை பெருக்கிக் கொள்வதிலேயே இருந்தது. இதனால் அவர்களது வீட்டில் அடிக்கடி சச்சரவுகள் தோன்றிக் கொண்டே இருந்தாலும், அவை எவற்றையுமே  மரகதம் பொருட்படுத்தாமல் அனைவரையும் விட்டு விலகி தண்டாயுதபாணியின் அருகில் வேகமாக சென்று கொண்டு இருந்தாள்.


அதன் பின்னர் மரகதத்தின் வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தன. வீட்டில் பிரச்சனைகள் அதிகரித்தன. அவளுக்கு மேலும் சில குழந்தைகள் பிறந்தன. ஆனால் மரகதம் அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகவே இருந்து வந்தார். அவள் மனதும் எப்போதும் போல முழுமையாக முருகனுடன் இணைந்தே இருந்தது. முருகன் மீது அவள் பல பாடல்களையும் இயற்றிக் கொண்டே இருந்தாள். அவள் படைத்த பாடல்கள் சிலவற்றின் மூலம், 'முருகா என்னிடம் அவ்வபோது மட்டுமே நீ வந்து விட்டுச் செல்கிறாய். எப்போதுமே என்னுடன் இருக்க மாட்டாயா?' எனும் வேதனைகளை வெளிப்படுத்திய பாடல்கள் அதிகம் இருந்தது. ஒருநாள் முருகன் அவளது கனவில் வந்து 'முட்டாள் பெண்ணே , உன்னுடைய இதயத்திலேயே எப்போதும் முழுமையாக அமர்ந்து உள்ள என்னை காணவில்லை என்று வெளியில் என்னைத் தேடிக்க் கொண்டு நீ ஏன் வேதனைப்பட வேண்டும்?'

1948 ஆம் ஆண்டு அவள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஒருநாள் அவள் படிக்கட்டில் இறங்கி வந்து கொண்டு இருந்தபோது கால் தவறி கீழே விழுந்து விட்டாள். அவளை மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு அவள் தனது சுயநினைவை முற்றிலும் இழந்தாள். சிலநேரங்களில் அவளுக்கு நினைவு திரும்பினாலும், மீண்டும் மீண்டும் நினைவை இழந்து கொண்டே இருந்தாள். இப்படியாக அவள் ஆறு மாதங்கள் படுக்கையில் கிடந்தாள். எப்போவாவது அவளுக்கு சுய நினைவு வந்தால் ' நீங்கள் யார்?, நான் யார்?' என்று கேட்பாள். அவள் தான் யார் என்பதையோ, மற்றவர்கள் யார் என்பதையோ உணரமுடியாத நிலைக்கு சென்று இருந்தாள்.

நடைந்தேறிய மருத்துவ சோதனைகளின் முடிவுகள் அனைத்துமே அவள் வாழ்கையின் இறுதி நிலைக்கு சென்று விட்டாள் என்பதாகவே அமைந்து இருந்தன. ஆனால் அனைவரது கருத்துக்களையும் பொய்யாக்கும் விதத்தில் மரகதம் பூரண குணம் அடைந்தாள். அதுவே அவளுடைய புது வாழ்வு வெளிப்பட்ட நிலைமையாக அமைந்தது. மீண்டும் தன்னுடைய குடும்ப வாழ்க்கைக்கு திரும்பினாள்.  ஆனால் அருணகிரிநாதரைப் போலவே தன்னை மாற்றிக் கொண்ட அவள் முருக பக்தியில் ஈடுபட்டுக் கொண்டும்  அவர் மீதான பாடல்களை  பாடிக் கொண்டும் மட்டுமே தனது வாழ்கையை கழிக்கலானார்.

மரகதம் மருத்துவமனையில் இருந்தபோது அவர் இயற்றிய பாடல்கள் பூட்டி வைக்கப்பட்டு இருந்த பெட்டியை அவரது உறவினர் ஒருவர் எதேற்சையாக திறந்து பார்த்து விட்டு அதில் இருந்த பாடல்கள் அடங்கிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய்  திருப்புகழ் மணி என்பவரிடம் கொடுத்து விட்டார். அவற்றைப் படித்து விட்டு பெரிதும் புகழ்ந்த அவர் அவற்றில் இருந்து சிலவற்றை பிரசுரம் செய்தார். அதற்கு பதிலாக அருணகிரிநாதரின் ஒரு புகைப்படத்தை பிரசாதமாக கொடுத்து அனுப்பினார்.

1950 ஆம் ஆண்டு மரகதம் தனது நண்பர்களுடன் திருவண்ணாமலைக்குச் சென்று இருந்தார். இரவு பத்து மணி ஆகிவிட்டது. இரவு வெகு நேரம் ஆகிவிட்டதினால் ஆலயத்தில் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என்றாலும் எப்படியோ மரகதமும் அவரது நண்பர்களும் ஆலயத்துக்கு உள்ளே சென்று விட்டார்கள். அருணாசலாவை வணங்கியப் பின்னர் உண்ணாமலை அம்மன் சன்னதிக்கும் சென்றார்கள்.  அங்கு ஒரு இளம் வயது பண்டிதர் இருந்தார்.  அவர் அவர்கள் கேட்ட அனைத்து பூஜைகளையும் செய்து முடித்தப் பின் பிரசாதமும் தந்தார். அவர் பெயரை அவர்கள் கேட்டபோது அவர் தன்னை தண்டாயுதபாணி என அறிமுகம் செய்து கொண்டார். அதன் பின் அந்த இளம் பண்டிதரே மரகதம் அம்மையாரின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று  வடக்குப் பக்கத்தில் இருந்த முருகன் சன்னதியில்  அவளை  அங்கேயே விட்டப் பின் அங்கிருந்து மறைந்து விட்டார்.

அங்குதான் முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு தரிசனம் கொடுத்தார்.  அந்த உண்மையை 'அடலாருணை திருகோபுரத்தே அந்த வாயிலுக்கு அருகில் சென்று கண்டு கொண்டேன்' என்ற பாடல் மூலம் அருணகிரிநாதர் வெளிப்படுத்தினார். மறுநாள் மரகதம் அம்மையாருடன் சென்றவர்கள் அந்த ஆலயத்துக்கு சென்று அந்த பூசாரியைக் குறித்து விவரம் கேட்டபோது அங்கிருந்த பண்டிதர்களோ, ஆலயம் திறந்திராத அந்த இரவு நேரத்தில் யாருமே பூஜைகளை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவர்கள் கூறியதைப்  போன்ற எந்த இளைஞரும் அங்கு பூசாரியாக இல்லை என்றும் தெரிவித்தார்கள்.

(திரு வீ. எஸ். கிருஷ்ணன்என்பவர் எழுதி உள்ள  இந்த கட்டுரை முருகன் நியூஸ் லெட்டெர் எனும் வலைதள இதழில் வந்துள்ளது (Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.) .   அதை தமிழாக்கம் செய்து வெளியிட்டுக் கொள்ள அனுமதி தந்துள்ள  அதன் ஆசிரியர் பேட்ரிக்  ஹாரிகனுக்கு நன்றிஅது போல அம்ரிதவர்ஷினி பத்திரிகை ஆசிரியரான வாசுதேவன் அவர்களும் அனுமதி தந்துள்ளார்கள். அவருக்கும் என் நன்றி.)

 -------------------------------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு:-  மரகதம் அம்மையாரின் புகைப்படம் மற்றும் பிற விவரங்கள் குறித்து சில இடங்களில் விசாரித்தேன். பல இடங்களிலும் தேடினேன்.  அவை கிடைத்ததும் இந்தக் கட்டுரையை வெளியிட எண்ணினேன். ஆனால் துரதிஷ்டவசமாக நான் கேட்ட எந்த தகவலுமே இதுவரை கிடைக்கவில்லை. ஆகவே வேறு வழி இன்றி  இந்தக் கட்டுரையை வெளியிட்டு உள்ளேன். ஆண்டவன் பிச்சை எனும் மரகதம் அம்மையாரின் விவரம் கிடைத்தால் அதையும் வெளியிடுவேன்  - சாந்திப்பிரியா 
--------------------------------------------------------------------------------------------------------------------------

Prathosham -some information

$
0
0
 பிரதோஷம் 
- சாந்திப்பிரியா - 
பிரதோஷம்  என்பது  என்ன என்பதை  பலரும் அறிந்ததே என்றாலும் அதன் சுருக்கம் இது.  ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் தசமி திதியன்று துவங்கி பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது  கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி நாகம் கக்கிய கொடிய விஷத்தினால் தோன்றிய வெப்பத்தினால் அனைவரும் தாங்க முடியாத கஷ்டத்தை அனுபவிக்க, அந்த கொடிய விஷத்தினால் ஏற்பட்ட வெப்பத்தை தணிக்க சிவபெருமான் அந்த விஷத்தை தானே உண்டு  அனைவரையும் காப்பாற்றினார்.  ஏகாதசி பதினோராம் நாள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.  

அதன் பின் மீண்டும் அனைவரும் பாற்கடலை கடையத் துவங்க மறுநாள் அதாவது பன்னிரண்டாம் நாளான துவாதசியன்று அமிர்தம் கிடைத்தது. பின்னர் நடைபெற்ற பிற காட்சிகளினால் தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்க அதை உண்டவர்கள் ஆடிப் பாடி  மகிழ்ந்தார்கள். சிவபெருமானையே மறந்து விட்டார்கள். மறுநாள், பதிமூன்றாம் நாள் திரியோதசியாகும்.  அன்றுதான்  அனைவரையும் காப்பாற்ற சிவபெருமான் விஷத்தை  உண்ட நிகழ்ச்சி அனைவருக்கும் நினைவில் வர ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டார்கள். சிவபெருமானும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அனைவரையும் மன்னித்தப்  பின் நந்தி தேவரின் கொம்புகளின் மத்தியில் நின்றபடி அழகிய நடனம் ஆடினார்.  அவர் நடனம் ஆடிய அந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுவது. அது முதல் ஒவ்வொரு மாதமும் வரும் திரியோதசியில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.  சிவபெருமான் நடனம் ஆடிய தினம் சனிக்கிழமையில் வந்திருந்த திரியோதசி தினம் என்பதினால் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை தனி பிரதோஷம் என கருதி விஷேசமாக வழிபடுவார்கள்.

பிரதோஷ 
வழிபாட்டுப் பலன்கள் 

அனைத்து நாட்களிலும் பலவிதமான பழங்களை நெய்வித்தியமாகப் படைத்தும் மற்றும்  மலர்களைக் கொண்டு  பூசிப்பதும், சந்தனக் காப்புப் அல்லது சந்தன  அபிஷேகம் போன்றவை செய்வது வழக்கமானதுதான் என்றாலும்  சில குறிப்பிட்ட திரவ்வியங்களினால் அபிஷேகம் செய்து ஆராதிப்பதும் குறிப்பிட்ட தினங்களில் வரும் பிரதோஷ தினங்களில் ஆலயத்துக்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்வதும் அதிக  பலன் தரும் என்பது ஐதீகம்.
  • திங்கள் கிழமை :- மன சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும்.
  • செவ்வாய் கிழமை :- உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வருமானம் அதிகரிக்கும்.  இந்த தினத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து பூஜித்தால் செல்வம் பெருகும் என்பார்கள். 
  • புதன் கிழமை :-புத்திர பாக்கியம் கிடைக்கும். இளநீரைக் கொண்டு  அபிஷேகம் செய்தால் நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும்.
  • வியாழன் கிழமை :- வித்தைகள் கை  கூடும் (வித்யா பாரம் என்பது).  சரஸ்வதி தேவியின் பூரண அருள்  கிடைத்து  கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • வெள்ளிக் கிழமை :-பகை விலகும்.  குடும்ப பாசம்  கூடும்.  உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். இந்த தினத்தில் சக்கரையினால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து  பூஜிப்பதின் மூலம் அனைத்து எதிர்ப்புக்களும் குறையும்.  
  • சனிக் கிழமை :-சனிப்பிரதோஷம் என்பது தனிப்  பிரதோஷம் ஆகும். அன்று சிவபெருமானை வணங்குவதினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். நெய்யைக் கொண்டு அபிஷேகம் செய்தால் முக்தி அடையும் வழி கிடைக்கும்.
  • ஞாயிற்றுக் கிழமை :-வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். 

பிரதோஷத்தன்று சிவன் சன்னதியில்  செய்யவேண்டிய பிரதர்ஷண முறை 

எந்த ஸ்வாமி  சன்னதியையும் மூன்று முறை பிரதட்சிணம் அதாவது வலம் வந்து  துதிக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.  அது போலவே பிரதோஷ காலத்தில் சிவன் சன்னதியை சோம சூத்திரப் பிரதட்சணம் என்ற முறையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அதன் பலனே மிகப் பெரியது.  இதை சிலர் சோமசூத்தகப் பிரதட்சிணம்  என்றும் கூறுவது உண்டு.
முதலில் ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும். அனைத்து சன்னதிகளிலும் ஸ்வாமி  மீது செய்யப்படும் அபிஷேக ஜலங்கள் வெளியேற தனி வழி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த தீர்த்தங்கள் அனைத்தும் சன்னதியின் வெளியில் சன்னதியுடன் இணைந்தே உள்ளபடி ஒரு தொட்டிப் போல அமைந்துள்ள இடத்தில் சென்று விழும். அதை கோமுகம் என்பார்கள்.  பசுவின் முகத்தைப் போன்ற புனிதத் தன்மையைக்  கொண்டதே நீர் வெளியேறும் தொட்டி போன்ற அந்த அமைப்பாகும். இதை எதற்காக கூறுகிறேன் என்றால் பிரதோஷ காலத்தில் சிவன் சன்னதியை வலம் வரும் காலத்தில்  இந்த கோமுகத் தொட்டி முக்கியப் பங்கை வகிக்கின்றது.
பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டிய பிரதட்சிண முறை என்ன?  ஆலயத்தில் நுழைந்து கணபதியை வணங்கியப் பின், சிவனை நந்தி தேவர் கொம்புகளின் இடைவழியே பார்த்து வணங்க வேண்டும். அதன் பிறகு அந்த சன்னதியை சுற்றி வலம்  வர வேண்டும். ஆனால் எப்போதும் செய்வது போல அந்த  பிரதர்ஷணம் முழுமையாக இருக்கக் கூடாது. வலம் வரும்போது கோமுகத்தின் அருகில் சென்றவுடன் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து மீண்டும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும். அதன் பின் மீண்டும் பிரதர்ஷணமாக சென்று  கோமுகத்தின் அருகில் சென்றப் பின் மீண்டும் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து சிவனை தரிசிக்க வேண்டும். அப்போதும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும். 
இப்படியாக பிரதட்சிணம் செய்யும்போது ஒவ்வொரு முறையும் சண்டிகேஸ்வரர் சன்னதிக்கும் சென்று அவரை வணங்க வேண்டும். அவர் சன்னதியின் முன்னால் ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டு அல்லது மெல்லியதாக கையைத் தட்டி சப்தம் எழுப்பி விட்டு வர வேண்டும். அப்போதுதான் அவர் நீங்கள் எத்தனை முறை சிவனை வலம் வந்துள்ளீர்கள் எனும் கணக்கை அவருக்கு தெரிவிப்பாராம்.  இதுவும் ஐதீகம்தான்.  இப்படியாக மூன்று முறையும் சன்னதியை சுற்றி முழு வலமும் வராமல், அரைப் பகுதி வலம் வந்து சிவபெருமானை நந்தியின் கொம்புகள் வழியே தரிசிக்க வேண்டும். இந்த பிரதர்ஷண முறையை பிரதோஷ தினத்தன்று மட்டுமே செய்ய வேண்டும்.

      Sikkal Singaravelar Temple 1

      $
      0
      0
       சிக்கல் சிங்காரவேலர் 
      ஆலயம் - I  
       சாந்திப்பிரியா 


      முருகனின் ஆலயங்களில் மிகப் பழமையானதும்  புகழ்  பெற்றதும்  எது என்றால் அந்த ஆலயங்களில் ஒன்று  சிக்கல் சிங்காரவேலவன் ஆலயம் என்பதை தயங்காமல் கூற முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழ்நாட்டில்  நாகப்பட்டினத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிக்கல் எனும் கிராமம்.  அங்கு உள்ளதே புகழ் பெற்ற சிங்காரவேலர் ஆலயம்.  இந்த முருகனுக்கு பெருமை சாற்றும் ஆலயம் கட்டப்பட்டபோது சிவன் ஆலயமாகவே இருந்தாலும் பின்னர்  முருகனே முக்கியமானவராகக் கருதப்பட்டார்.  சோழ மன்னன் காலத்தில் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.  இந்த ஆலயத்தைக் குறித்த கதைகள் சில உண்டு. அவற்றில் முக்கியமானவை இரண்டு ஆகும்.

      இந்த ஆலயம் ஏற்பட்ட இடத்தில் ஒரு காலத்தில் முழுமையாக மல்லிகை பூக்களைக் கொண்ட செடிகள் படர்ந்திருக்க அது மல்லிகை வனம் என அழைக்கப்பட்டு வந்திருந்துள்ளது. ஆகவே இந்த தலத்தின் பெயரையும் மல்லிகாரண்யம் என அழைக்கலானார்கள். அந்த மல்லிகை மணத்தின் வாசனையினால் ஈர்க்கப்பட்டே காமதேனு அங்கு வந்து வசித்ததாக கதை உள்ளது. அந்தக் கதை என்ன என்றால் அந்த பூமியே மல்லிகை மலர் கொடியினால் சூழ்ந்திருந்தபோது அதன் அழகில் மயங்கிய காமதேனுப் பசு  தான் ஒரு மண்டலம் பூமிக்கு சென்றுவிட்டு வருவதாக வசிஷ்டரிடம் அனுமதி கேட்டுக் கொண்டு அந்த வனப் பகுதியில் வந்து வசிக்கலாயிற்று. ஒரு மண்டலம் என்பது தேவ கணக்கின்படி 45 நாட்கள் அல்ல பல வருடங்கள் கணக்கைக் கொண்டது. காமதேனுவும் அவ்வபோது தேவலோகத்துக்கு சென்று விட்டு வருவது உண்டு.


      இந்த நிலையில் ஒருமுறை பிரபஞ்சம் பஞ்சத்தினால் பரிதவித்தது. எவருக்கும் உண்பதற்கு  உணவு சரிவரக் கிடைக்காத நிலை ஏற்பட்டபோது யாருக்கு என்ன கிடைத்ததோ அதையே உண்டு வாழ்ந்தார்கள்.   பூலோகத்தில் வந்திருந்த காமதேனுப் பசுவும் ஒருநாள் உண்ணுவதற்கு புல்லும் உணவும் கிடைக்காத நிலையில் பசியால் துடித்து மாமிசத்தை தின்று விட்டதினால் தோஷம் அடைந்தது.  பூலோக வாசம் முடிந்ததும் அது தேவலோகத்துக்கு சென்றபோது அதைக் கண்ட  சிவபெருமான் மாமிசத்தை உண்டு விட்டதினால் கைலாயத்தில் நுழைய அதற்கு இடம் இல்லை என்று கூறி காமதேனுப் பசுவிற்கு சாபமிட அதுவும் புலியின் முகத்தைக் கொண்ட பசுவாகி விட்டது. தவறு செய்ததற்கு மன்னிப்புக் கோரிய பசுவும்  அழுது புலம்பி  தனக்கு சாப விமோசனம் தருமாறு  அவரிடம் மன்றாடியது. அதனால் அது செய்த பாவத்தைக் களைந்து கொண்டு மீண்டும் பழைய நிலையை அடைய சிக்கல் என்ற இந்த ஊருக்கு வந்து சிவபெருமானை  துதித்து தவம் இருந்து சாப விமோசனம் பெற வேண்டியதாயிற்று. அங்கு வந்தபோது பஞ்சம் ஏற்பட்டு இருந்த பூமியில் தண்ணீரெல்லாம் வற்றி இருந்தது.  ஆகவே சிவபெருமானை துதிப்பதற்கு முன்னால்  குளிக்க வேண்டும் என்பதினால் தண்ணீர் வற்றி இருந்த ஒரு  குளத்தில்   அது தனது மடியில் இருந்த பாலை சுரக்க அது பால் குளமாயிற்று. அதில் குளித்து விட்டு அது சிவனைத் துதித்து தவம் இருந்தது. அந்த குளத்தையே  இன்று தேனு தீர்த்தம் என்கிறார்கள் (காமதேனுவில் இருந்து எடுத்த தேனு எனும் வார்த்தையைக் கொண்டு) .

      அந்த காமதேனு அங்கு வந்து புலி முகத்துடன் இருந்தபோது வசிஷ்ட முனிவரும் அந்த தலத்தில் வந்து  காமதேனு சாப விமோசனம் பெற வேண்டும்  என்பதற்காக தவத்தில் இருந்தார்.  காமதேனு அவருடைய பசு என்பதினால், அதற்கு சாப விமோசனம் கிடைக்க வேண்டும் என சிவபெருமானை வேண்டிக் கொண்டு அவரும் அங்கு இருந்தார். அப்போது பால் குளத்தில் இருந்த பாலும் வற்றி வெண்ணையாக  வழிந்து கொண்டு இருக்க அதை  எடுத்து, அந்த வெண்ணையில் சிவலிங்கத்தை உருவாக்கி  அதையே பூஜித்து வரத் துவங்கினார். அதிசயமாக  அந்த வெண்ணையும் உருகவில்லை, முனிவரின் பூஜையும் தொடர்ந்து கொண்டு இருந்தது.  அவர்களின் தவத்தினால் மனம் உருகிய சிவபெருமான் காமதேனு பசுவிற்கு  சாப விமோசனம் தர அதுவும் தனது பழைய முகத்தை பெற்றது.

      சில காலம் கழிந்ததும், வசிஷ்ட முனிவர் முன்னால் சிவபெருமான் தோன்றி அவர் கேட்ட வரங்களையும் அருளினார். அதன் பின் வசிஷ்டர் அங்கிருந்து கிளம்பலானார். ஆகவே அந்த இடத்தில் தான் பூஜித்த வெண்ணையினால் உருவாக்கிய சிவலிங்கத்தையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு வசிஷ்ட முனிவர் செல்லத் துவங்கியபோது   வெண்ணை என்றாலும் அதை அவரால் வெளியில் எடுக்க  முடியவில்லை. வெண்ணையை பூமியில் இருந்து எடுக்க முடியாமல் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது.  அதனால்தான் சிக்கல் ஏற்பட்ட இந்த தலத்தின் பெயரும் சிக்கல் என ஆயிற்று என்கிறார்கள். வசிஷ்ட முனிவரினால் வெண்ணையினால் செய்த லிங்கத்தை எடுக்க முடியாததினால்  அதை அங்கேயே விட்டு விட்டுச் சென்று விட அதுவும் லிங்கமாகி அங்கேயே பதிந்து கொண்டது. இப்படியாக அந்த சிங்காரவேலர் ஆலயத்தில் முதலில் சிவலிங்கமே பூஜிக்கப்பட்டு வந்தது.  வெண்ணையினால் செய்த சிவலிங்கமாக அது இருந்ததினால் அந்த சிவலிங்கத்திற்கு வெண்ணை நாதர் அல்லது  வெண்ணைபிரான் என்று பெயர் ஏற்பட்டது.

      வசிஷ்டர் அமர்ந்து கொண்டு வெண்ணையினால் 
      ஆன சிவலிங்கத்தை பூஜித்த இடமாம் இது.  மேலே உள்ளது 
      வெண்ணை சிவன் இருந்த சன்னதி

      இந்த தலத்தின் பெருமை மேலும் உண்டு. இதுவும் ஒரு விதத்தில் சிவன் மற்றும் விஷ்ணு சேர்ந்தே உள்ள தலமாகும். இன்னொரு கதையின்படி வசிஷ்டர் உருவாக்கிய வெண்ணை லிங்கத்தை குழந்தை உருவில்  கிருஷ்ணரைப் போல வந்த  விஷ்ணு தனது கையில் எடுத்துக் கொண்டு செல்ல முயல,  அதைக்  கண்டு கோபமுற்ற வசிஷ்டர் அவரைத் தடுத்தபோது  தனது நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கடிஹஸ்தம்  மற்றும் அபய முத்திரையுடன் வசிஷ்ட முனிவருக்கு விஷ்ணு பெருமான் காட்சி தந்தப் பின்  அங்கிருந்து போக முயன்றபோது அந்த வெண்ணை அவர் கட்டைவிரல் மற்றும் அடுத்த விரலில் ஒட்டிக் கொள்ள அதை எடுக்க முடியாத நிலை தோன்றி  அவருக்கு சிக்கல் ஏற்பட்டதினால் அந்த இடம் சிக்கல் என்ற பெயரைப்  பெற்றதாகவும்  கூறுகிறார்கள்.
       -----தொடரும் 

      Sikkal Singaravelar Temple - 2

      $
      0
      0
      சிக்கல் சிங்காரவேலர் 
      ஆலயம் - I 
       சாந்திப்பிரியா 


      இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை நவநீதேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். அதனால் அந்த சிவன் தலத்தில் விஷ்ணுவும் வெண்ணை பெருமானாக அமர்ந்தார். இது ஸ்ரீ வாமனப் பெருமாள் வரலாற்றுக் கதையில் காணப்படுகிறது.


      ஸ்ரீ வாமனப் பெருமாள் கதையின்படி தேவர்களை துன்புறுத்தி வந்த மகாபலி சக்கரவர்த்தி என்பவற்றின் கொடுமைகளை தேவர்கள் திருமாலிடம் சென்று கூறினார்கள் . ஆகவே திருமாலும் வாமனாக அவதாரம் எடுத்துக் கொண்டு சிக்கலை அடைந்து அங்கு கயா தீர்த்தம் என்ற தீர்த்தத்தை உருவாக்கினார் . அதன் பின் அதில் ஸ்நானம் செய்துவிட்டு நவநீதேஸ்வரரை வணங்கித் துதித்து மகாபலி சக்கரவர்த்தியை அழிக்க தமக்கு சக்தியைத் தருமாறு வேண்டினார். நவநீதேஸ்வரரும் அவர் மூன் தோன்றி அவர் கேட்ட வரத்தை அருள அந்த பலத்தைக் கொண்டு விஷ்ணு யுத்தம் செய்து மகாபலி சக்கரவர்த்தியைக் கொன்று தேவர்களைக் காத்தார். இப்படியாகவே சிக்கல் ஆலயத்தின் உள்ளேயே சிவபெருமானுடன் சேர்ந்து விஷ்ணுவிற்கும் ஒரு ஆலயம் அமைந்தது. இப்படியாக அங்கு அமர்ந்த விஷ்ணுவே கோலவாமனப் பெருமான் என அழைக்கப்படலானார்.

      அது போலவே சிக்கலின் அருகில் உள்ள திருகண்ணக்குடி என்ற கிருஷ்ணர் ஆலய வரலாற்றுக் கதையின்படி வசிஷ்டர் பாற்கடலில் இருந்து எடுத்த வெண்ணையை கொண்டு சிவன் உருவைப் படைத்து அதை பூஜிக்க அந்த வெண்ணையை உண்பதற்காக கிருஷ்ணர் கொண்டு போக முயன்றபோது அந்த வெண்ணை அவர் விரலில் ஒட்டிக் கொண்டு வெளிவர மறுக்க அவருக்கும் சிக்கல் ஏற்பட்டதினால் சிக்கல் எனும் பெயர் இந்த இடத்துக்கு ஏற்பட்டது என்றும் கதை உள்ளது.

      இப்படியான கதைகளைக் கொண்டு அமைந்த அந்த சிவன் ஆலயம் எப்படி முருகனுக்கு பெருமை சேர்க்கும் ஆலயமாக கருதப்படுகிறது ? அதன் கதை இது. உலகை ஆட்டிப் படைத்து கொடுமைப்படுத்தி வந்த சூரபத்மனை எவராலுமே அழிக்க முடியாமல் தேவர்கள் தவித்தபோது, முருகனுக்கு அந்த சூரனை அழிக்கும் கடமையை சிவபெருமான் கொடுத்தார். சூரபத்மனை அழிக்க முருகப் பெருமான் செல்லக் கிளம்பியபோது அந்த யுத்தத்தில் சூரபத்மனை அழிக்க வேண்டும் என்பதற்காக விஷேசமான ஒரு ஆயுதத்தைப் படைத்த பார்வதி அதை முருகனுக்கு இந்த தலம் உள்ள இடத்தில்தான் அளித்தார். அதுவே முருகன் சூரனை அழித்த வேல் ஆகும்.

      சூரனை அழித்தப் பின் முருகன் இந்த தலத்தில் வந்து தனது பெற்றோர்களை வணங்க, அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இனி தான் உள்ள இந்த தலமான சிக்கல், யாராலும் அழிக்க முடியாமல் இருந்த சூரனை அழித்த முருகனுக்கு பெருமை சேர்க்கும் தலமாக அமையட்டும் என சிவபெருமான் ஆசி கூற அது முதல் சிக்கல் சிவபெருமான் ஆலயம் சிக்கல் சிங்கார வேலன் ஆலயம் என ஆயிற்று என்பது தல வரலாற்றுக் கதை.  சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில் சிவபெருமான், விஷ்ணு, முருகன் என அனைவரும் குடி கொண்டு இருந்தாலும் முருகனே மூலவராக வழிபடப்படுகிறார்.


      ஆலயத்தில் வருடாந்திர விஷேஷம் என்ன என்றால் சூரசம்ஹார விழா. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சூரபத்ம சம்ஹார விழாவில்  சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம் வேலை வாங்கிக் கொண்டு முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் உடலெங்கும் வியர்க்குமாம். அங்குள்ள பண்டிதர்கள் பட்டுத்துணியால் அந்த தண்ணீர் திவலைகளை  துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதத்தைக் காணக் கண் கோடி வேண்டும் என்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் அந்த சன்னதியின் சுவர் முழுவதும் வியர்வை சிந்தியது போல தண்ணீரால் காணப்படுமாம். இந்த மாயத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுவார்கள் என்று ஆலயத்தில் கூறுகிறார்கள்.

      இங்குள்ள ஆலயத்தின் இன்னொரு சிறப்பான அம்சம் என்ன என்றால் ஒரு சன்னதியில் தனியாக ஹனுமாரும் ஆராதிக்கப்படுவதே. வடமேற்கு மூலையில் ஆஞ்சனேயர் சந்நிதி அமைந்திருக்கிறது. முருகன் ஆலயங்களில் ஹனுமான் இருப்பது அறியதே. அப்படி முருகனும் ஹனுமானும் சேர்ந்தே உள்ளதாக கூறப்படும் ஆலய விவரம் இங்குள்ள ஆலய சுவற்றில் எழுதப்பட்டு உள்ளது. அதைக் கீழே காணலாம்.


      பிரகார சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். அது போலவே சிவனும் விஷ்ணுவும் சேர்ந்துள்ள ஆலயங்கள் 28 எனத் தெரிகின்றது. அவை இந்த ஆலயத்தின் சுவற்றின் பலகையில் காணப்படுகிறது. அதையும் கீழே காணலாம்.


      கோவிலின்  பிற சிறப்பு அம்சங்கள் இவை: 
      1. திலோத்தமையுடன் கூடாத நட்பைக் கொண்டதினால் தன் தவ வலிமையை இழந்த விசுவாமித்திர முனிவர் தாம் இழந்த தவவலிமையை திரும்பப் பெற இங்கு வந்து தவம் இருந்தாராம். அவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவருக்கு  தவ வலிமையை மீண்டும் கொடுத்தாராம் .
      2. இந்த ஆலயத்தைக் கட்டியதாக கூறப்படும் முசுகுந்தச் சக்கரவர்த்தி ஒரு அந்தணனைக் கொன்ற ஏற்பட்ட பாவத்தினால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்ப்பட அவர் இங்கு வந்து சிவபெருமானை வேண்டிக் கொண்டு சாப விமோசனம் பெற்றாராம்.  
      3. இந்த தலத்தில்  எப்போதுமே காமதேனுப் பசு வசிப்பதாக ஐதீகம் உள்ளது.


      ஆலய விலாசம்
      அருள்மிகு நவனிதேஸ்வரர் திருக்கோயில்
      சிக்கல்
      சிக்கல் அஞ்சல்
      வழி நாகப்பட்டினம்
      நாகப்பட்டினம் வட்டம்
      நாகப்பட்டினம் மாவட்டம்
      PIN - 611108

      Thanks Mr Pattabiraman

      $
      0
      0
      நன்றி

      இதுவரை எனக்கு அறிமுகம் இல்லாதவரான திரு பட்டாபிராமன் ( Pattabi Raman <vijayakoti33@gmail.com) என்பவர் மரகதம் அம்மையாரைப் பற்றி நான் எழுதி இருந்த கட்டுரைக்கு பதிலாக கீழ் உள்ள கவிதையை அவர்  எனக்கு அனுப்பி உள்ளார்.  அதை அனுப்பி உள்ள அதே படத்துடன் அப்படியே வெளியிடுகிறேன். அவருக்கு என் நன்றி.  - சாந்திப்பிரியா 
       
       
       
      மரகதவல்லி மீனாட்சி
      மாங்காட்டில் உறையும் காமாட்சி
      காசியில் வதியும் விசாலாட்சி

      தந்தைக்கு உபதேசம் செய்தான்
      முருகன் சுவாமிநாதனாக

      தாயோ வல்லியாய் உருவெடுத்து வந்தாள்
      தணிகை நாதனிடம் வந்தமர்ந்து
      தத்துவ உபதேசம் பெற்றாள் போலும்

      பாட்டினிலே வருவான் முருகன்
      பல்லவியாய் வந்தமர்ந்தான்
      என்று பாட்டினிலே வந்தான்
      முருகன் மரகத வள்ளிக்கு

      அவளின் உள்ளம் முருகனை
      குறித்து உருகியதைப்போல்
      உள்ளம் உருகுதையா என்ற
      பாடலை பலமுறை கேட்டதுண்டு
      நானும் முருகனின் நினைவில்
      திளைத்து இன்புற்றதுண்டு.

      பக்தி பரவசம் அடைந்தேன்
      முருகனின் அடியாளின்
      சரிதை படித்து
      TR Pattabiraman
      Viewing all 460 articles
      Browse latest View live


      <script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>