Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Village Deities - 19

$
0
0
கிராம தேவதைகள் - 19

தமிழ் நாட்டில் ஒரு கிராம
 எல்லையில்  உள்ள காவல் தெய்வங்கள் 

காப்பாத்தம்பட்டி 
பச்சை மலையான் 

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]

சேலம் மாவட்டத்தில் ஜலகண்டபுரத்தில் உள்ளது சிறிய கிராமமான கப்பாத்தம்பட்டி என்பது. அது வறண்ட பூமி. ஒரு முறை அந்த கிராமத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டது. தண்ணீர் இல்லை. ஆகவே அங்கிருந்து எண்பது கிலோ தொலைவில் இருந்த பச்சை மலை என்ற இடத்துக்கு சிலர் சென்று குடியேறினார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த நான்குபேர் அந்த மலை உச்சிக்குச் சென்று அங்கு கடவுளுக்காக ஒரு குடுசையில் தண்ணீர் வைத்து இருந்த மூன்று பானைகளில் இருந்த தண்ணீரை தாகம் தாங்காமல் குடித்து விட்டனர். அவர்கள் நால்வரும் குருடாகி விட்டனர். அதன் பிறகு அந்த மலை ஜாதியினர் தம் கிராமத்துக்கு வந்து நடந்ததைக் கூற அவர்கள் அங்கு மீண்டும் சென்று அங்கிருந்த ஆலய பூசாரியிடம் மன்னிப்புக் கேட்க அவரும் அவர்களுக்கு ஆலயத்தின் வீபுதியைக் கொடுக்க அவர்கள் இழந்த கண் பார்வையை திரும்பப் பெற்றார்கள். ஆகவே அந்த கிராமத்தினர் அவரிடம் கேட்டு அந்த மலை மீது இருந்த குடுசையில் இருந்து ஒரு கல்லைக் கொண்டு வந்து வைத்து அதை பச்சை மலையான் என பெயரிட்டு வணங்கலாயினர். அதை செய்தப் பின் அந்த கிராமம் மீண்டும் செழிப்புற்றது. நல்ல மழை பொழிய ஆரம்பித்தது. இன்றும் அங்கு உள்ள சில கற்களையே பச்சை மலையானாக வணங்கி வருகிறார்கள். அவரை சுற்றி நாடார், வீரக்காரன், சன்னாசி, வேடர், ஏழு கன்னிகைகள், சின்னண்ணன் மற்றும் பெரிய அண்ணன் போன்றோவர்களுக்கு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதன் பின் ஒரு இடத்தில் கூரைப் போட்டு அவர்கள் அனைவரையும் அங்கு மாற்றினார்கள். இன்றும் அங்கு உள்ள ஒரு கல்லை பச்சை மலையானாக வணங்கி வருகிறார்கள். அவரை சுற்றி நாடார், வீரக்காரன், சன்னாசி, வேடர், ஏழு கன்னிகைகள், சின்னண்ணன் மற்றும் பெரிய அண்ணன் போன்றவர்களுக்கு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதன் பின் ஒரு இடத்தில் கூரைப் போட்டு அவர்கள் அனைவரையும் அங்கு மாற்றினார்கள். ஆனால் அப்படி தேவதைகளைக் கொண்டு வந்தபோது அவற்றில் இரண்டு தேவதைகளை எடுத்து வர மறந்து விட்டதை அவர்கள் கனவில் தோன்றிய அந்த இரண்டு தேவதைகளும் சுட்டிக் காட்டின. ஆகவே மறுநாள் அந்த கற்களை எடுத்து வரச் சென்றபோது அவர்களால் பல கற்களுக்கு இடையே இருந்த அதை அடையாளம் காண முடியவில்லை. ஆகவே அங்கிருந்த அனைத்து கற்களையும் அவர்கள் தெய்வமாகக் கருதி எடுத்து வந்துவிட்டனர் .
பச்சை மலையான் சுத்த சைவ உணவையே உண்பவர். வைகாசி மாதத்தில் ( மே-ஜூன்) பச்சை மலையான் தவத் திருவிழா என்ற விழா நடைபெறுகின்றது. அந்த விழா ஒரு நாளைக்கு மட்டுமே நடைபெறும். மே மாதத்தில் கிராமத்தினர் அந்த ஆலயத்தில் ஒன்று கூடுவார்கள். பச்சை மலையானிடம் திருவிழாவை நடத்த வேண்டுமா எனக் கேட்பார்கள். ஆலயத்தின் வடக்கில் உள்ள ஆல மரத்தில் இருந்து பல்லி கத்தினால் ஆமாம் என்று அர்த்தம், இல்லை தென்புறத்தில் உள்ள மரத்தில் இருந்து பல்லி கத்தினால் வேண்டாம் என்று அர்த்தம்.
கடவுளின் ஆயுதங்களும் அவருடைய வாளும் கிராமத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளன. விழா முடிவு செய்யப்பட்டவுடன் அங்குள்ள குயவர்கள் தூய்மையுடன் விரதம் இருந்து சிரத்தையுடன் புதிய பானைகளை செய்வார்கள். பொங்கல் படைக்க ஆயிரம் பானைகள் செய்யப்படும். அரிசியை அங்குதான் களைந்து இடிப்பார்கள் . அந்த கிராமத்து பெண்கள் அங்கு வந்து அரிசியை இடித்தப் பின் அதை ஒரு பையில் கொட்டி வைத்து தமது பெயரையும் அதன் மீது எழுதி வைத்து விட்டுச் செல்வார்கள். ஆலயத்தின் மீது புதிய கூரை போடப்படும். விடியற் காலை மூன்று மணிக்கே எழுந்து அவருடைய ஆயுதமும் மற்றும் ஆலய மணிகளை எடுத்து வருவார்கள். சுமார் முந்நூறு மீட்டர் தள்ளி சாமியாடிகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். முதலில் பெரிய பானையில் பச்சை மலையானுக்கு பொங்கல் படைத்தப் பிறகு ஏழு கன்னிகைகளுக்கும் சிறிய பானைகளில் படைக்கப்படும். சாமியாடிகள் குறிகளும் சொல்வார்கள்.
சின்னண்ணன், பெரியண்ணன் மற்றும் அவர்கள் பாட்டனாரான பாட்டப்பனுக்கும் ஆடு பலி தரப்படும். அதன் பின் பன்றிகளைத் துரத்தி பிடித்து வேட்டை ஆடிக் கொல்வார்கள் . அதன் பின் மூன்று பானைகளில் தண்ணீர் வைத்தப் பின் விழா முடிவடையும்.

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>