Quantcast
Viewing all articles
Browse latest Browse all 460

Village Deities - 17

கிராம தேவதைகள் - 17
பெங்களூரில் ஒரு ஆலயத்தில் முனீஸ்வரர் 

கோபால சமுத்ரம் 
அடைக்கலம் காத்தார்

[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
 
உப்பூர் கோபாலசமுத்திரம் என்பது திருவாரூர் மாவட்டத்தின் முத்துப் பேட்டையில் இருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு பெரிய முனீஸ்வரன் ஆலயம் உள்ளது. அவரே ஊரின் அடைக்கலம் காத்தாரின் காவல் தெய்வம். அடைக்கலம் என்றால் காப்பவர், மற்றும் சரண் அடைந்தவர் என்ற அர்த்தம் உண்டு. ஒரு காலத்தில் கோபால சமுத்திரம் சமுத்திரத்தின் கரைப் பகுதியாக இருந்துள்ளது. நாகப்பட்டினம் மற்றும் அந்த காலத்தில் கொலம்போ என அழைக்கப்பட்ட ஸ்ரீ லங்காவுக்கு கப்பல் மூலமே வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு முறை நாகப்பட்டினத்தில் இருந்து கொலோம்போவுக்கு சரக்கு கப்பல் போய் கொண்டு இருக்கையில் கடலில் பயங்கரமான சூறாவளி ஏற்பட்டது. கடல் கொந்தளித்தது. கப்பல் முழுகி விடும் போல இருக்க அந்த கப்பலின் சொந்தக்காரன் கடவுளை வேண்டிக் கொள்ள அந்த கப்பல் எதன் மீதோ மோதி நின்று விட்டது. ஆகவே எதன் மீது அந்தக் கப்பல் மோதி நின்றுள்ளது என்பதைப் பார்த்துவிட்டு வருமாறு கப்பலை ஓட்டி வந்தவனை சோதனை செய்யுமாறு கூற அவனும் அந்தக் கப்பல் ஒரு கல்லின் மீதுதான் மோதி நின்றுள்ளது என்ற அதிசயத்தை சொந்தக்காரனிடம் கூறினான். அந்த கப்பல் மோதியது ஒரு கல் மீதே என்பதைப் பார்த்தவர் அந்த கல்லினால் கப்பல் நின்று இருக்க முடியாது என நினைத்து அதை கடலில் தூக்கிப் போட்டு விட்டார். அது மட்டும் அல்லாமல் உண்மையில் இந்த இடம் தெய்வாம்சம் பொருந்தியது என்றால் நான் அடுத்த முறை வரும் போது கடல் இங்கு இருக்க கூடாது என நினைத்தார். அதுவே நடந்தது. அடுத்த முறை அவர் அங்கு சென்றபோது அங்கு கடல் இல்லை. சிறிய தீவே இருந்தது. அது மட்டும் அல்ல அவர் தூக்கிப் போட்ட அதே கல்லும் அந்த தீவின் மீது இருந்தது. ஆகவே அவர் அந்தக் கல்லை எடுத்து வரச் சொல்லி அதற்கு அங்கு ஒரு ஆலயம் அமைத்தார். அந்த ஆலயத்துக்கு கப்பலைக் காத்தவர் என்ற பெயரில் அடைக்கலம் காத்தார் என பெயரிட்டார். அது முதல் அவர் வியாபாரம் பெருகியது. நிறையப் பணம் வரலாயிற்று. அதற்குக் காரணம் அடைக்கலம் காத்த பெருமாளே என நினைத்து அவருக்கு இன்னும் பெரிய ஆலயம் கட்டினார். அதன் முன்னால் பெரிய யானையின் சிலையை செய்து வைத்தார். முதலில் யானையின் உடலை செய்து வைத்தவர் அடுத்து அதன் முகத்தை செய்தது அதை உடலுடன் பொருத்துமாறு கூறினார். ஆனால் எத்தனை முயன்றும் யானை சிலையின் தலை உடைந்து விழுந்து கொண்டே இருந்தது. அவர் ஒரு சாமியாடியை அது குறித்துக் கேட்க சாமியாடி அடைகலம் காத்தாரின் வாகனம் குதிரை என்பதினால் அப்படி நடக்கின்றது என்று கூறினார். ஆகவே முன்னர் செய்த யானையின் சிலையை எடுக்காமல் அதன் எதிரில் இருக்குமாறு ஒரு குதிரையின் சிலையை செய்து வைத்தார். . அது இன்னமும் அங்கே உள்ளது. அந்த ஆலயத்தில் அடைக்கலம் காத்தாரின் உருவச் சிலை இல்லை. கடலில் கண்டு எடுத்த அந்தக் கல்தான் அடைக்கலம் காத்தவர் என்று என்று கருதி அவரை கல்லின் உருவில்தான் வணங்குகிறார்கள். என வணங்குகிறார்கள். ஆனால் முனீஸ்வரருக்கு மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு உள்ளது. அவர் அடைக்கலம் காத்தாரின் பாதுகாவலராக இருக்கிறார். மக்கள் முதலில் முனீஸ்வரரை வணங்கிய பின்தான் அடைக்கலம் காத்தாரை வணங்குவார்கள்.
வைகாசி மாதத்தில் (ஏப்ரல்-மே) வண்ணமயமான குதிரையின் சிலைகள் அங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ள அலாங்காடு என்ற கிராமத்தில் செய்யப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும். அடைக்கலம் காத்தார் சைவ உணவையே உண்பவர். ஆகவே அவருக்கு பலி தரப்படுவது இல்லை. ஆனால் முனீஸ்வரருக்கு பலிகள் தரப்படுகின்றன. முத்துபேட்டையில் இருந்து திருத்துரைபூண்டிக்கு வளைந்து வளைந்து செல்லும் அபாயகரமான பாதை உள்ளது. ஆனால் அந்த சாலையில் விபத்துக்களே நடப்பது இல்லை.

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>