எந்த ஒரு ஆலயத்திலும் மரத்தின் வேர் காயாமல் உள்ளபெரிய மரத்தில் வடிவமைக்கப்பட்ட மூலவரின் சிலையை காண முடியாது. அப்படி இருந்தால் அது தெய்வ மகிமையாக இருக்கும். பூரி ஜகந்நாதர் ஆலயத்திலும் கூட மூலவர்சிலைகளை மரங்களை வெட்டி எடுத்த மரத்தின் கட்டையில்தான் வடிவமைக்கின்றார்கள். ஆனால் 14 அடி உயரவிஷ்ணு பகவானின் மூலவர் சிலை மிகப் பெரிய அத்தி மரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளதை மாயவரத்தில்கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள மாப்படுகை எனும் கிராமஆலயத்தில் உள்ள வான்முட்டி ஆலயத்தில் மட்டுமே காண முடியும். இப்படி ஒரு அதிசயத்தை வேறு எந்த ஆலயத்திலும் காண இயலாது. பூமியில் இருந்து ஆகாயத்தை தொடும் அளவுக்கு காட்சி தரும் விஷ்ணு பகவானை இங்கு வான்முட்டி பெருமாள் என அழைக்கின்றார்கள். அந்த மூலவர்சிலைவடிவமைக்கப்பட்ட அத்தி மரத்தின் வேர்கள் கூட இன்னும் காயாமல் உள்ளது இன்னொரு அதிசயமாம். இந்த ஆலயம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்றும், ஆனால் தேவலோகத்தை சேர்ந்த அந்த தெய்வீக அத்தி மரம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கின்றார்கள்.
இந்த ஆலயத்தின் மேன்மைகுறித்து கூறிய பண்டிதர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த ஆலயம் முதலில் ஏழு பிராகாரங்களைக் கொண்டு இருந்ததாகவும், அவை காலவெள்ளத்தில் அழிந்து விட்டதினால் இப்போது ஒரே ஒரு பிராகாரத்துடன் காட்சி அளிப்பதாகக் கூறினார்.
இந்த ஆலயம் சிறிதாக இருந்தாலும், அதில் உள்ள பெருமானை பல மணிநேரம் தரிசித்துக் கொண்டே இருக்கலாம் எனும் அளவில் அற்புதமான தோற்றத்தில் காணப்படுகின்றார். கைகளில் சங்கு, சக்கரம், கதை என ஆயுதங்களை ஏந்திக் கொண்டு அபய முத்திரைகாட்டியவண்ணம் காட்சி தரும் பெருமானின் சிலையை மூலிகையினால் செய்யப்பட்ட கரிய பச்சை நிறத்தில்வண்ணம் பூசி உள்ளார்கள். ஆலயம் முழுவதும் அஜந்தா வண்ண ஓவியத்தில் காணப்படுகின்றது.
இந்த ஆலயத்தின் இன்னொரு அதிசயம் தனி சன்னதியில் உள்ள சப்தஸ்வரூபஒலி தரும் பகவான் ஹனுமான் ஆகும். சுமார் நான்கு அடி உயர பகவான் ஹனுமாரின் சிலையில் காணப்படும் அவருடைய வாலின் நுனியில் ஒரு மணி கட்டப்பட்டு உள்ளது. அந்த வாலின் நுனிப் பகுதி அவர் தலையை தொட்டபடி அமைந்து உள்ளது. சிறு மணி கட்டப்பட்ட வாலின் நுனிப் பகுதி தலையை தொட்டபடி உள்ள பகவான் ஹனுமானின் பல சிலைகள் கர்னாடகாவின் பல ஆலயங்களில் மட்டுமே பெரிதளவு காணப்படுகின்றது. இங்குள்ள பகவான் ஹனுமானின் உடலில் எந்த பகுதியை தட்டினாலும் வெவ்வேறு ஒலிகள் எழும்புமாம். இங்கு வந்து அவரை வணங்கித் துதிப்பதின் மூலம் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆலயத்தின் தல வரலாறு என்ன?
முன் ஒரு காலத்தில் கொடகு நாடு என்ற பகுதியை ஆண்டு வந்திருந்த மன்னன் ஒருவன் செய்திருந்த பல பூர்வஜென்ம பாவங்களினால் அவனுக்கு கடுமையான தோஷங்கள் ஏற்பட்டு இருந்தன. என்ன செய்தும் அவனுடைய பாவங்கள் விலகவில்லை. அதன் விளைவாக உடலெங்கும் கடுமையான தோல் வியாதி ஏற்பட்டுஅவனை வதைத்தது.ஆகவே அவர் தனது பண்டிதர்களின் ஆலோஜனைப்படி கொடகு நாட்டில் இருந்த பல்வேறு ஆலயங்களுக்கும் விஜயம் செய்து தமது வியாதி நிவாரணம் அடைய பரிகாரம் செய்தவாறு இருந்தார். அப்படி பல்வேறு இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தபோது வழியில் ஒரு இடத்தில் அடையாளம் தெரியாத ஒரு ஆசிரி (குரல்) அவர் வியாதி குணம் அடைய வேண்டும் எனில் காவேரிக்கு கரை ஓரத்தில் செல்லுமாறு கூறியது.
அது மட்டும் அல்ல அந்த குரல் அவரை முதலில் மூவலூரில் மார்க சஹாயேஸ்வரராக காட்சி தந்து கொண்டு இருக்கும் சிவபெருமானின் சன்னதிக்கு சென்று வணங்குமாறும், அங்கு அவருக்கு ஒரு விடை கிடைக்கும் எனவும் கூறியது. மார்க சஹாயேஸ்வரர் ஆலயம் தற்போதைய மாயவரத்தில் உள்ளது. அங்கு சென்று அவர் சன்னதியில் பிரார்த்தனை செய்த மன்னனை அங்கிருந்து அருகில் உள்ள ஒரு கோடி பாபங்களையும் விலக்கும் அபூர்வ தலமான கோடிஹத்தி விமோசனப்புரத்துக்கு சென்று அங்குள்ள அத்தி மரத்தின் அடியில் உள்ள பகவான் விஷ்ணுவை தரிசித்தால் அவர் வியாதி பூரண குணம் அடையும் என கண்களில் புலப்படாத நிலையில் இருந்தவாறு சிவபெருமான் ஆசிரியாக குரல் கொடுத்தார்.
அந்தக் குரல் கூறியபடியே அந்த மன்னனும் பயணத்தை தொடர கோழிக்குத்தியை சென்று அடைந்தார். அந்தக் குரல் கூறியபடியேஅங்கு இருந்த அத்தி மரத்தை சென்று அடைந்து பகவான் விஷ்ணுவை பிரார்த்தனை செய்யத் துவங்க பெருமாளும் அவருக்கு அந்த அத்தி மரத்தின்அருகிலேயே விஸ்வரூப தரிசனம் தந்தார். அவர் கைகளில் சங்கு, சக்கரம் மற்றும் கதை போன்றவை இருக்க அவர் மனைவி மஹாலக்ஷ்மி தாயாரும் அவர் மார்பிலே காட்சி தந்தாள். அடுத்தகணம் அந்த மன்னனின் அனைத்து பாபங்களும் அடியோடு விலக வியாதிகளும் குணமாயின. ஆகவேதான் அந்த இடத்துக்கு கோடிக்கணக்கான தோஷங்களை களையும் கோடிஹத்தி எனப் பெயர் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் மருவி கோழிக்குத்தி என ஆயிற்று. அந்த மன்னனே பிற்காலத்தில் பிப்பலர் எனும் முனிவர் ஆனாராம்.
ஆனால் வேறு சிலரோ பிப்பல முனிவரைக் குறித்து வேறு செய்தியை கூறுகிறார்கள். வியாதி வந்த சோழ மன்னன் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று இருந்தபோது அங்கு பிப்பல முனிவரைக் கண்டதாகவும், அந்த முனிவரும் அவருக்கு வியாதி குணம் அடைய ஒரு மந்திரோபதேசம் செய்து, கோழிக்குத்திக்கு சென்று நாற்பத்தி எட்டு நாட்கள் (48) அங்குள்ள புஷ்காரணி தீர்த்தத்தில் தினமும் நீராடியபின் வான்முட்டி பெருமானை அந்த மந்திரத்தை ஜெபித்தவாறு வழிபட்டு வந்தால் வியாதி குணம் அடையும் என கூறியதினால் அவர் அறிவுரைப்படி அந்த மன்னனும் கோழிக்குத்திக்கு சென்று நியமமாக அவற்றை செய்ய அவன் வியாதி குணம் ஆனதாகக் கூறுகிறார்கள். பிப்பல முனிவரே சனி தோஷம் விலக ஒரு தோத்திரத்தை இங்கு இயற்றினாராம்.
இப்படியாகவே இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் தோல் வியாதிகள் விலகும் என்ற நம்பிக்கை தோன்றியது. அது மட்டும் அல்ல இங்குள்ள வான்முட்டிப் பெருமானை தரிசித்தால் அவரை தரிசனம் செய்பவர்களுக்கு திருப்பதி வெங்கடாசலபதி, காஞ்சீபுரம் ஆதி வரதராஜஆலய பெருமான் மற்றும் சோழிங்கநல்லூர் யோக நரசிம்மர் போன்ற மூவரையும் தரிசித்த பலன் கிடைக்கும் எனவும் கூறுகிறார்கள். ஏன் எனில் பெருமாள் அங்கெல்லாம் எழுந்தருளியபோது அவருக்குள் அடக்கிக் கொண்டு இருந்த அதே சக்திகளைஇங்குஎழுந்தருளியபோது எடுத்து வந்தார் என்கின்றார்கள்.
இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் கூறப்பட்டு உள்ள செய்தி என்ன எனில் 51 சனிக்கிழமைஇங்கு வந்து பத்து பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்தால் சனிதோஷம் விலகும் என்பதே.
ஆலயவிவரம்:
மூலவர் : வானமுட்டிப் பெருமான், பக்தப் பிரியன் மற்றும் வரதராஜன் என்பன
உற்சவர் : யோக நரசிம்ம பெருமான்
தாயார்: மஹாலக்ஷ்மித் தாயார்
தல விருட்ஷம்: அத்தி மரம்
தல தீர்த்தம்: பிப்பல மகரிஷி தீர்த்தம்
இந்த ஆலயத்தின் மேன்மைகுறித்து கூறிய பண்டிதர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த ஆலயம் முதலில் ஏழு பிராகாரங்களைக் கொண்டு இருந்ததாகவும், அவை காலவெள்ளத்தில் அழிந்து விட்டதினால் இப்போது ஒரே ஒரு பிராகாரத்துடன் காட்சி அளிப்பதாகக் கூறினார்.
இந்த ஆலயம் சிறிதாக இருந்தாலும், அதில் உள்ள பெருமானை பல மணிநேரம் தரிசித்துக் கொண்டே இருக்கலாம் எனும் அளவில் அற்புதமான தோற்றத்தில் காணப்படுகின்றார். கைகளில் சங்கு, சக்கரம், கதை என ஆயுதங்களை ஏந்திக் கொண்டு அபய முத்திரைகாட்டியவண்ணம் காட்சி தரும் பெருமானின் சிலையை மூலிகையினால் செய்யப்பட்ட கரிய பச்சை நிறத்தில்வண்ணம் பூசி உள்ளார்கள். ஆலயம் முழுவதும் அஜந்தா வண்ண ஓவியத்தில் காணப்படுகின்றது.
இந்த ஆலயத்தின் இன்னொரு அதிசயம் தனி சன்னதியில் உள்ள சப்தஸ்வரூபஒலி தரும் பகவான் ஹனுமான் ஆகும். சுமார் நான்கு அடி உயர பகவான் ஹனுமாரின் சிலையில் காணப்படும் அவருடைய வாலின் நுனியில் ஒரு மணி கட்டப்பட்டு உள்ளது. அந்த வாலின் நுனிப் பகுதி அவர் தலையை தொட்டபடி அமைந்து உள்ளது. சிறு மணி கட்டப்பட்ட வாலின் நுனிப் பகுதி தலையை தொட்டபடி உள்ள பகவான் ஹனுமானின் பல சிலைகள் கர்னாடகாவின் பல ஆலயங்களில் மட்டுமே பெரிதளவு காணப்படுகின்றது. இங்குள்ள பகவான் ஹனுமானின் உடலில் எந்த பகுதியை தட்டினாலும் வெவ்வேறு ஒலிகள் எழும்புமாம். இங்கு வந்து அவரை வணங்கித் துதிப்பதின் மூலம் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆலயத்தின் தல வரலாறு என்ன?
முன் ஒரு காலத்தில் கொடகு நாடு என்ற பகுதியை ஆண்டு வந்திருந்த மன்னன் ஒருவன் செய்திருந்த பல பூர்வஜென்ம பாவங்களினால் அவனுக்கு கடுமையான தோஷங்கள் ஏற்பட்டு இருந்தன. என்ன செய்தும் அவனுடைய பாவங்கள் விலகவில்லை. அதன் விளைவாக உடலெங்கும் கடுமையான தோல் வியாதி ஏற்பட்டுஅவனை வதைத்தது.ஆகவே அவர் தனது பண்டிதர்களின் ஆலோஜனைப்படி கொடகு நாட்டில் இருந்த பல்வேறு ஆலயங்களுக்கும் விஜயம் செய்து தமது வியாதி நிவாரணம் அடைய பரிகாரம் செய்தவாறு இருந்தார். அப்படி பல்வேறு இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தபோது வழியில் ஒரு இடத்தில் அடையாளம் தெரியாத ஒரு ஆசிரி (குரல்) அவர் வியாதி குணம் அடைய வேண்டும் எனில் காவேரிக்கு கரை ஓரத்தில் செல்லுமாறு கூறியது.
அது மட்டும் அல்ல அந்த குரல் அவரை முதலில் மூவலூரில் மார்க சஹாயேஸ்வரராக காட்சி தந்து கொண்டு இருக்கும் சிவபெருமானின் சன்னதிக்கு சென்று வணங்குமாறும், அங்கு அவருக்கு ஒரு விடை கிடைக்கும் எனவும் கூறியது. மார்க சஹாயேஸ்வரர் ஆலயம் தற்போதைய மாயவரத்தில் உள்ளது. அங்கு சென்று அவர் சன்னதியில் பிரார்த்தனை செய்த மன்னனை அங்கிருந்து அருகில் உள்ள ஒரு கோடி பாபங்களையும் விலக்கும் அபூர்வ தலமான கோடிஹத்தி விமோசனப்புரத்துக்கு சென்று அங்குள்ள அத்தி மரத்தின் அடியில் உள்ள பகவான் விஷ்ணுவை தரிசித்தால் அவர் வியாதி பூரண குணம் அடையும் என கண்களில் புலப்படாத நிலையில் இருந்தவாறு சிவபெருமான் ஆசிரியாக குரல் கொடுத்தார்.
அந்தக் குரல் கூறியபடியே அந்த மன்னனும் பயணத்தை தொடர கோழிக்குத்தியை சென்று அடைந்தார். அந்தக் குரல் கூறியபடியேஅங்கு இருந்த அத்தி மரத்தை சென்று அடைந்து பகவான் விஷ்ணுவை பிரார்த்தனை செய்யத் துவங்க பெருமாளும் அவருக்கு அந்த அத்தி மரத்தின்அருகிலேயே விஸ்வரூப தரிசனம் தந்தார். அவர் கைகளில் சங்கு, சக்கரம் மற்றும் கதை போன்றவை இருக்க அவர் மனைவி மஹாலக்ஷ்மி தாயாரும் அவர் மார்பிலே காட்சி தந்தாள். அடுத்தகணம் அந்த மன்னனின் அனைத்து பாபங்களும் அடியோடு விலக வியாதிகளும் குணமாயின. ஆகவேதான் அந்த இடத்துக்கு கோடிக்கணக்கான தோஷங்களை களையும் கோடிஹத்தி எனப் பெயர் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் மருவி கோழிக்குத்தி என ஆயிற்று. அந்த மன்னனே பிற்காலத்தில் பிப்பலர் எனும் முனிவர் ஆனாராம்.
ஆனால் வேறு சிலரோ பிப்பல முனிவரைக் குறித்து வேறு செய்தியை கூறுகிறார்கள். வியாதி வந்த சோழ மன்னன் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று இருந்தபோது அங்கு பிப்பல முனிவரைக் கண்டதாகவும், அந்த முனிவரும் அவருக்கு வியாதி குணம் அடைய ஒரு மந்திரோபதேசம் செய்து, கோழிக்குத்திக்கு சென்று நாற்பத்தி எட்டு நாட்கள் (48) அங்குள்ள புஷ்காரணி தீர்த்தத்தில் தினமும் நீராடியபின் வான்முட்டி பெருமானை அந்த மந்திரத்தை ஜெபித்தவாறு வழிபட்டு வந்தால் வியாதி குணம் அடையும் என கூறியதினால் அவர் அறிவுரைப்படி அந்த மன்னனும் கோழிக்குத்திக்கு சென்று நியமமாக அவற்றை செய்ய அவன் வியாதி குணம் ஆனதாகக் கூறுகிறார்கள். பிப்பல முனிவரே சனி தோஷம் விலக ஒரு தோத்திரத்தை இங்கு இயற்றினாராம்.
இப்படியாகவே இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் தோல் வியாதிகள் விலகும் என்ற நம்பிக்கை தோன்றியது. அது மட்டும் அல்ல இங்குள்ள வான்முட்டிப் பெருமானை தரிசித்தால் அவரை தரிசனம் செய்பவர்களுக்கு திருப்பதி வெங்கடாசலபதி, காஞ்சீபுரம் ஆதி வரதராஜஆலய பெருமான் மற்றும் சோழிங்கநல்லூர் யோக நரசிம்மர் போன்ற மூவரையும் தரிசித்த பலன் கிடைக்கும் எனவும் கூறுகிறார்கள். ஏன் எனில் பெருமாள் அங்கெல்லாம் எழுந்தருளியபோது அவருக்குள் அடக்கிக் கொண்டு இருந்த அதே சக்திகளைஇங்குஎழுந்தருளியபோது எடுத்து வந்தார் என்கின்றார்கள்.
இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் கூறப்பட்டு உள்ள செய்தி என்ன எனில் 51 சனிக்கிழமைஇங்கு வந்து பத்து பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்தால் சனிதோஷம் விலகும் என்பதே.
ஆலயவிவரம்:
மூலவர் : வானமுட்டிப் பெருமான், பக்தப் பிரியன் மற்றும் வரதராஜன் என்பன
உற்சவர் : யோக நரசிம்ம பெருமான்
தாயார்: மஹாலக்ஷ்மித் தாயார்
தல விருட்ஷம்: அத்தி மரம்
தல தீர்த்தம்: பிப்பல மகரிஷி தீர்த்தம்