ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் -PDF
சிறு விளக்கம்
ஜீவ சரித்திரத்தை பாராயணம் செய்யும் முறை பற்றி சிலருக்கு சில சந்தேகம் ஏற்படலாம் அதாவது புத்தகத்தை தொண்ணூறு நாட்களில் படித்து முடிக்க வேண்டுமா? அப்படி என்றால் தினமும் எத்தனை பக்கங்களை படிக்க வேண்டும்? முழு புத்தகத்தையும் ஒரு நாளைக்கு ஒருமுறை என தொண்ணூறு நாட்கள் படிக்க வேண்டும்.
இந்த பாராயண புத்தகத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை முழுவதும் படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் தொடர்ந்து படித்து முடிக்க நேரம் இல்லை என்றால் தவறில்லை. நான்கு அல்லது ஐந்து பாகங்கள் என இரண்டு அல்லது மூன்று வேளைகளாகவும் ஒரு நாளில் இதை பிரித்துக் கொண்டு படித்து முடிக்கலாம். ஆனால் ஒரு நாளில் அந்த புத்தகத்தை தொடர்ந்தோ அல்லது மூன்று வேளைகளாக பிரித்துக் கொண்டோ முழுவதுமாக படித்து முடிக்க வேண்டும். இதைப் படிக்கும் பெண்களுக்கு வீட்டில் அசௌர்கரியம் ஏற்பட்டுள்ள நாட்களில் படிக்க தடைப்பட்டாலும் அதற்குப் பின்னர் மீண்டும் தொடர்ந்து படிக்கலாம். ஒரு கோரிக்கைக்கு மொத்தம் தொண்ணூறு நாட்கள் படித்து முடிக்க வேண்டும். இதுவே நியமம் .