Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all 460 articles
Browse latest View live

Thirupathi Sree Venkateswarar - 25

$
0
0
சாந்திப்பிரியா 
 
லஷ்மி தேவி ஷேஷாசலத்தை அடைந்தபோது  ஸ்ரீனிவாசர் தனது மனைவியான பத்மாவதியுடன் அங்கு இருந்த நதிகள், ஓடைகள், நீர் நிலைகள் என பல்வேறு இடங்களுக்கும் சென்று விட்டு புதியதாக நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்துக்குள் பிரவேசித்தார். அங்கு அவர்கள் நின்று கொண்டு இருந்த சமயத்தில் லஷ்மி கோபத்துடன் உள்ளே நுழைய  அவளைக் கண்டதும் ஸ்ரீனிவாசரும் பத்மாவதியும் நிலை குலைந்தார்கள். பத்மாவதியோ இவள் யார் நாம் உள்ள இடத்தில் வந்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டே இருக்கையில் உள்ளே வந்த லஷ்மியோ ' பெண்ணே நீ யார் என் கணவருடன் சல்லாபித்துக் கொண்டு நிற்கிறாய்' என்று கோபமாகக் கேட்க, பத்மாவதியோ ' அடியே பெண்ணே...என்னய்யா யார் என்று கேட்கிறாய்? நான்தான் இவருடைய மனைவி. எங்களுக்கு இப்போதுதான் திருமணம் ஆகி உள்ளது. நீ என்னடா என்றால் என் கணவர் என்கிறாய். என்ன என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாய்?' என்று முறைக்க இருவரும் நீ...நான் என வாதம் செய்து கொண்டு அடிக்காத குறையுடன் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்ததைக் கண்ட ஸ்ரீனிவாசர் அவர்கள் இருவருமே தனது மனைவிகளே என்று கூறி இருவரையும் சமாதானப்படுத்த முயல, இருவரும் அவருடன் சண்டை போடத் துவங்கினார்கள்.
ஆகவே அதை சமாளிக்க முடியாமல் போனவர் சற்று பின்னே சென்று  நின்று  அப்படியே அங்கு சிலையாக மாறி விட்டார். அவர் சிலையானதும் பெரிய  சப்தம் கேட்டது. அந்த சப்தத்தைக் கேட்டு திரும்பிய இருவரும் ஸ்ரீனிவாசர் சிலையாக நிற்பதைக் கண்டு அந்த சிலைக்கு அருகில் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார்கள். சிலையில் இருந்த ஸ்ரீனிவாசரான விஷ்ணு கூறினார் ' அம்மா லஷ்மி, நான் இப்போது இங்கு திருமணம் செய்து கொண்டுள்ளது வேறு யாருமல்ல. பத்மாவதி  எனும் இவளும் உன் துணை அவதாரமே.  நீ பெற்றிருந்த ஒரு சாபத்தினால் நீ இரு அவதாரங்களை எடுத்து இங்கு வந்து என்னை அடைய வேண்டி இருந்தது.
 ஒரு அவதாரத்தில் நீ சீதையாகப் பிறந்து இருந்தபோது, உன்னுடைய பல்வேறு அவதாரங்களில் ஒன்றான வேதவதி என்பவள் வந்து உன்னைக் பாதுகாக்க வேண்டிய அவசியம்  வந்தது.    உன்னைப் பாதுகாத்துக் கொள்ள  நீயே  ஏற்படுத்தி இருந்த வேதவதி எனும்  துணை அவதாரம் குறித்து நீ அக்னிப் பிரவேசம் செய்தபோதுதான் உனக்கும் தெரிந்தது. அப்போது உன்னை சாட்சியாக வைத்துக் கொண்டு அல்லவா அந்த துணை அவதாரத்திடம் அவளை நான் ஸ்ரீனிவாசர் அவதாரத்தில் மணம் செய்து கொள்வதாக வாக்கு தந்தேன் என்பது உன் நினைவுக்கு இப்போது வருகிறதா? அதைக் காப்பாற்றவே இப்போது இவளை மணக்க வேண்டி இருந்தது' என்று கூறவும் லஷ்மியும் பத்மாவதியும் ஒருவருடன் ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டு தாம் அனாவசியமாக சண்டை போட்டுக் கொண்டதற்கு விஷ்ணுவிடம் மன்னிப்பைக் கோரினார்கள்.

லஷ்மி தேவி 

அவர்களைப் பார்த்த விஷ்ணு லஷ்மியிடம் கூறினார் ' லஷ்மி,   கலியுகம் பிறக்கும் முன்னால் உன் மூலம் சில காரியங்கள் நடைபெற வேண்டும் என்பதினால்தான் இங்கு உன்னையும் வரவழைத்தேன்.  இங்கு நீ என்னுடன் லஷ்மியாக இருந்து கொண்டு மக்களுக்கு போக பாக்கியத்தை கொடுக்க வேண்டும். அதை அனுபவிப்பவர்கள் பல தவறான காரியங்களை செய்து கொண்டு இருந்தவண்ணம் அதற்கு பரிகாரம் தேட  என்னிடம் வேண்டும்போது பணமும் பொருளும் பல்வேறு பிரார்த்தனைகளையும் செய்வார்கள்.  அதைக் கொண்டு உன்னை மணப்பதற்காக நான் குபேரனிடம் இருந்து பெற்ற கடன்களை திரும்ப செலுத்திக் கொண்டே இருப்பேன். அவர்கள் பணமும் கொடுப்பார்கள். காணிக்கையாக பொருட்களையும், ஏன் தமது தலை முடியைக் கூட  கொடுப்பார்கள். நான் பெரும் அனைத்து காணிக்கைகளிலும் ஒரு பகுதியை வட்டியாகக் குபேரனிடம் கொடுப்பதாகக் கூறி உள்ளேன்.  அந்தக் கடன் தீர கலிகாலம் ஆகிவிடும். ஒருபுறத்தில் நீ செல்வத்தைக் கொடுக்கக் கொடுக்க, மக்கள் செய்யும் தவறுகளும் பெருகிக் கொண்டே போகும். அப்போது  தாம் செய்யும் தவறுகளுக்கு பயந்து அதற்கு பிராயசித்தம்  தேட இங்கு வந்து என்னை வணகுவார்கள். இங்கு வருபவர்களின் அனைத்து துயரங்களையும் நான் தீர்த்துக் கொண்டே இருப்பேன் என்பதினால் அப்படி தவறு செய்பவர்கள் இங்கு வந்து இந்த இடத்தையே பூவுலக வைகுண்டமாகக் கருதி அதே செல்வத்தை நம்மிடம் காணிக்கை என்ற பெயரில் திருப்பித் தருவார்கள் என்பது மட்டும் அல்ல, அவர்களின் கஷ்டங்கள் அதனால் குறைவதைக் கண்டு பூவுலகில் பக்தி பெருகும். அதற்கு நானும் நீயும் காரணமாக இருக்க ஸ்ரீனிவாச அவதாரம் எடுத்த காரணமும் நிறைவாகும். ஆகவே நீயும் வந்து என் வலது மார்பில் அமர்ந்து கொண்டு இந்த காரியத்தை செய். பத்மாவதி என் இடது மார்பில் அமர்ந்து இருப்பாள். இப்படியாக நீ மீண்டும் உன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டு என்னை சுற்றி இரு புறத்திலும் இரு அவதாரங்களாகவே இருப்பாய்.

 வெங்கடாசலபதி 

அதே சமயத்தில் பக்தர்களைக் காப்பாற்ற  நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப பத்மாவதியும்  பத்மசாரோவரத்தில் சென்று ஒரு ஆலயத்தில் அமர்ந்து கொள்வாள்.  நான் தினமும் இரவு அங்கு வந்து உன்னோடு - உன் அவதாரத்தோடுதான் -  தங்கி இருப்பேன்.  மற்ற நேரத்தில் இங்கிருந்தபடி பக்தர்களுக்கு நீ கொடுக்கும் செல்வத்தை கொடுத்துக் கொண்டும், மீண்டும் அதை அவர்களிடம் இருந்தே பெற்றுக் கொண்டவண்ணம் அவர்களின் குறைகளை களைந்து கொண்டு இருப்பேன். இப்படியாக நீ தரும் செல்வம் உன்னிடமே மீண்டும் மீண்டும் வந்து கொண்டு மீண்டும் மக்களிடையே ஒரு முடிவற்றப் பயணமாக தொடர்ந்து கொண்டு செல்லும். இங்கு வரும் மக்கள் காணிக்கையாக எதை வேண்டுமானாலும் கொடுக்கக் கூறுவேன். ஏன் அவர்கள் தலை முடியைக் கூட காணிக்கையாகப் பெற்றுக் கொள்வேன். தலை முடியைக் கொடுப்பது ஒரு இழிவான செயல் அல்ல. மனிதர்களுடைய  அழகை பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான உடல் பாகம் ஆகும் அது. ஒன்று தலை முடியை அழகு செய்யாமல் முனிவர்கள், ரிஷிகளைப் போல அதை அப்படியே விட்டு விட வேண்டும்.  அப்படி விட்டு விடப்படும்  தலை முடி அடையாக, சிக்காக மாறி  விட்டாலும் சரி அதற்க்கு முக்கியத்துவம் தராமல் அப்படியே விட்டு  விட வேண்டும். அல்லது கடவுளுக்கு முன் வரும்போது  அதை துறந்து விட்டு வர வேண்டும்.   ஆகவேதான்   தலை முடியை கொடுப்பதை ஒரு பக்தியை வெளிப்படுத்தும் சடங்காக  காட்டி என்னிடம் வரும் வேளையில் தமது  வெளித் தெரியும் அழகினையும் ஆசைகளையும்  அழித்துக் கொண்டு  தமது  பக்தியை மட்டும் வெளிப்படுத்தும் ஒரு  அடையாளமாக  அந்த சடங்கை செய்து கொண்டு வர வேண்டும் என்பதை காட்டும்  சடங்காக்கி ஆலய மகிமையை பிரபலப்படுத்திக் கொண்டு இருப்பேன். அந்த தலைமுடி கழித்தல் கூட பூவுலகில் உள்ள செல்வத்தை இங்கு கொண்டு வந்து சேர்க்கும் ஒரு கருவியாக அமையும். தேவி இதற்கு நீ உடன்பட வேண்டும்' என்று ஸ்ரீனிவாச அவதாரத்தில் இருந்த விஷ்ணு கூறவும், அதைக் கேட்ட பத்மாவதியான லஷ்மி தேவியும் மேல்மங்காபுரத்தில்  உள்ள ஆலயத்தில் சென்று அங்கு சிலையாக அமர்ந்தாள். அதனால்தான் ஸ்ரீனிவாசப் பெருமான் மேல்மங்காபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் திரும்புகிறார்.

 பத்மாவதி அம்மையார் 
இதற்கு இடையில் மகனைத் தேடி வந்த வகுளாதேவியை தனது கழுத்தில் தொங்கும் துளசி  மாலையாக மாற்றிக் கொண்டார் ஸ்ரீனிவாசர். தனது சகோதரர் கோவிந்தராஜரையும் தன்னுடன் இருக்கும் வகையில் அதே இடத்தில் கீழ் திருப்பதியில் சென்று வசிக்குமாறு கூறினார். இப்படியாக விஷ்ணுபிரான் ஸ்ரீனிவாசர் அவதாரத்தில் திருப்பதியில் தனது மனைவி லஷ்மியுடன் பல்வேறு ரூபங்களில் இருந்து கொண்டு கலியுகத்தில் மக்களைக் காத்து வருகிறார்.


வராஹா ஸ்வாமி 

ஏழு மலைகளைக் கொண்ட திருப்பதி மலை முழுவதுமே வராஹ ஸ்வாமியின் கட்டுப்பாட்டில் உள்ளதினால் மலையில் ஏறி வெங்கடாசலபதியைக் காண்பவர்கள் முதலில் வராஹா ஸ்வாமியை  தரிசித்த  பின்னரே மேலே செல்ல வேண்டும்.  அதற்குக் காரணம் அங்கு வசிக்க திருப்பதியான் வந்தபோது அவருக்கு ஒரு உறுதிமொழி கொடுத்தார். அதன்படி அவருக்கு அங்கு தங்க வாடகை கொடுக்க வேண்டும். அதற்கு இணையாக முதலில் வராஹ ஸ்வாமிக்கு  நெய்வித்தியம் செய்த பின்னரே வெங்கடாசலபதியாக உள்ள தனக்கு நெய்வித்தியம் செய்வார்கள்  என்பதே வாடகை பணம்  ஆகும்.  அது போலவே திருச்சானூரில் குடி அமர்ந்துள்ள பத்மாவதியை தரிசிக்காமல் திருப்பதிக்கு மட்டும் சென்று விட்டு வந்தால் வெங்கடாசலபதியின் பூரண அருள் கிடைக்காது.
திருப்பதி மலையைக் கட்டிய விவரம் சரிவரத் தெரியவில்லை அதை முதலில் கட்டியவர் சோழ  மன்னனான தொண்டைமான் என்பது சரியான செய்தி அதற்குப் பிறகு பல மன்னர்களும் விஜயநகர  மன்னர்கள் வரை அதை மேலும் கட்டி சிறப்பித்து உள்ளார்கள் திருப்பதி வெங்கடேஸ்வரர்  ஏழு மலைகளுக்கு உள்ளே அமைந்துள்ளதினால் அவரை ஏழு மலையான் என்று அழைக்கிறார்கள். அவரை வேண்டித் துதிப்பவர்களுக்கு அனைத்து செல்வமும் கிடைக்கும் என்பதில் ஐயமே இல்லை.
 ஸ்ரீனிவாசர் மகிமையான அவருடைய ஜீவ சரித்திரம் நிறைவுற்றது 

ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் -PDF

$
0
0
சிறு செய்தி 

இந்த தொடரில் இடை இடையே நான் தந்துள்ள விளக்கங்களை எடுத்து விட்டு, ஜீவ சரித்திரத்தை மட்டும் பாராயணம் செய்யும் வகையில் சிறிய புத்தக வடிவில்  PDF வடிவில் அமைத்து உள்ளேன். ஆகவே  ஜீவ சரித்திரத்தில் படிக்க வேண்டிய பகுதிகளை  மட்டும்  நீங்கள் புத்தக வடிவிலேயே நேரடியாக படிக்க இயலும்.  இதை முதல் முயற்சியாக செய்து  உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தக வடிவில் ஜீவ சரித்திரத்தைப் படிக்க  உங்களுடைய  ஈமெயில் முகவரியை எனக்கு அனுப்பினால்  PDF ஐ அனுப்ப இயலும்.
நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு அனுப்ப வேண்டிய முகவரி:

nrj_1945@yahoo.com
nrj1945@gmail.com 

சாந்திப்பிரியா 
30-11-2012

சிறு விளக்கம்

$
0
0
ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் -PDF

சிறு விளக்கம் 
 
ஜீவ சரித்திரத்தை பாராயணம் செய்யும் முறை பற்றி சிலருக்கு சில சந்தேகம் ஏற்படலாம் அதாவது புத்தகத்தை தொண்ணூறு நாட்களில் படித்து முடிக்க வேண்டுமா?  அப்படி என்றால் தினமும் எத்தனை பக்கங்களை படிக்க வேண்டும்? முழு புத்தகத்தையும் ஒரு நாளைக்கு ஒருமுறை என தொண்ணூறு  நாட்கள் படிக்க வேண்டும்.
இந்த பாராயண புத்தகத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை முழுவதும் படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் தொடர்ந்து படித்து முடிக்க நேரம் இல்லை என்றால் தவறில்லை.  நான்கு அல்லது ஐந்து பாகங்கள் என இரண்டு அல்லது மூன்று  வேளைகளாகவும் ஒரு நாளில் இதை பிரித்துக் கொண்டு படித்து முடிக்கலாம். ஆனால் ஒரு நாளில் அந்த புத்தகத்தை தொடர்ந்தோ அல்லது மூன்று  வேளைகளாக பிரித்துக் கொண்டோ முழுவதுமாக படித்து முடிக்க வேண்டும்.  இதைப் படிக்கும் பெண்களுக்கு வீட்டில் அசௌர்கரியம் ஏற்பட்டுள்ள நாட்களில் படிக்க  தடைப்பட்டாலும் அதற்குப் பின்னர் மீண்டும் தொடர்ந்து படிக்கலாம். ஒரு கோரிக்கைக்கு  மொத்தம் தொண்ணூறு நாட்கள்   படித்து முடிக்க வேண்டும். இதுவே நியமம் .

Book Review- Ayyanar and Mariamman –Folk Deities in South India

$
0
0
ஐயனார் மற்றும் மாரியம்மன்
-கிராம தேவதைகள்-

புத்தக விமர்சனம்
சாந்திப்பிரியா 
 
1949 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த திருமதி  'க்ரிஷ்டா நியுயேன்ஹோபர்' எனும் எழுத்தாளர் ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் உள்ள கிராம மக்களின் வாழ்கை முறை மற்றும் கலாச்சாரங்களைக் கண்டறிய தனது கணவருடன் அங்குள்ள பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். தான் கண்டறிந்த உண்மைகளை  பல படங்களுடன் தனது இணையதளமான http:/www.pbase.com/neuenhoferஎன்பதில் வெளியிட்டு உள்ளார்.
அந்த ஆர்வத்தின் காரணமாக கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள டோகோ, பெனின் மற்றும் கானா போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல அறிய  புத்தகங்களையும் எழுதி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தகங்கள் சில 'டோகோ மற்றும் பெனின்', 'வூடூ மக்களின் தாய் நாடு', 'கானாவில் பிட்டிஷ் நாட்டு பாதிரியார்கள்', 'பில்லி சூனிய பகுதிகள் மற்றும் தகன முறைகள்' போன்றவை ஆகும்.  பல இடன்ன்களுக்குச் சென்றாலும்  அவருக்கு பிடித்தமானதாக இருந்தவை இந்திய கிராமங்களே என்பதினால் வருடத்துக்கு ஒரு முறையாவது இந்தியாவிற்கு விஜயம் செய்கிறார். ஆரியர்கள் மற்றும் திராவிடர்களின் மாறுபட்ட கலாச்சாரத்தை அறிய ஆர்வம் கொண்டவர் இந்தியாவில் விஜயம் செய்யாத மானிலமே இல்லை எனலாம் . கிராமங்களில் உள்ளவர்கள் தமது கிராமங்களை கிராம தேவதைகளே காப்பாற்றி வருவதாக எண்ணுகிறார்கள் எனும் ஆழ்ந்த நம்பிக்கையை  'க்ரிஷ்டா நியுயேன்ஹோபர்' நேரிடையாக கண்டறிந்துள்ளார். ஆகவே பல்வேறு கிராமங்களுக்கும் விஜயம் செய்து அங்குள்ளவர்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், தற்போது பல இடங்களிலும் நின்று விட்ட மிருக பலி போன்றவற்றை நேரில் கண்டார்.  அவை  அனைத்துமே அவர் எழுதி உள்ள புத்தகத்தில் காணப்படுகின்றன. அவர் எழுதி உள்ள புத்தகத்தில் காணப்படும் சில பகுதிகள் இவை:

 '' ......கிராம எல்லையில் எங்களுடைய வாகனம் நின்றது.  தூரத்தில் பயங்கரமான முகத் தோற்றத்துடன் சிலர் காணப்பட்டனர். கணவன் மனைவி போன்று தோற்றம் தந்த ஆஜானுபாவனான மனிதர்கள் தூக்கி வைத்துக்  கொண்டு இருந்த கையில் பெரிய கம்புகள் இருந்தன. எங்களை உள்ளே வராதே என்று எச்சரிப்பது போல  அந்த பொம்மைகள் காணப்பட்டன.  அவர்களை தொடர்ந்து மேலும் சில வீரர்கள், நாய், யானை போன்றவை காணப்பட்டன. அனைத்துமே மண்ணினால் செய்யப்பட்ட  பொம்மைகள் என்பது அருகில் சென்றதும் தெரிந்தது''
''..........எங்களுடன் இருந்த ரவி என்பவர் '  கிராம மக்களுக்கு சிவன், விஷ்ணு, கிருஷ்ணர் மற்றும் ராமர் என்பவர்கள் யார் என்றே தெரியாமல் இருந்தது. திராவிட மக்கள் இயற்கை சக்திகளையே கடவுட்கள் என நம்பி வழிபட்டார்கள். அவர்களின் நம்பிக்கையின்படி  பொறுத்தவரை உலகில் மூன்று தீய சக்திகள் உள்ளன . அவை பேய் பிசாசு, பூதம் மற்றும் தன்னுடைய ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் அடைந்தவர்களின் ஆவிகள் போன்றவை' என்று கிராம தேவதைகளைப் பற்றிக் குறிப்பிட்டார்  .........''
''...........தமது கிராமத்தை கிராம தேவதைகள் நன்கு பாதுகாத்து வருவதாக மக்கள் நம்புகிறார்கள். ஐயனாரினால் கொல்லப்பட்ட தீய ஆவிகளை குதிரைகளின் கழுத்தில் மாலையாகப் போட்டு வைத்துள்ளார்கள் என்பதைக் காட்டும் பொம்மைகள்........''
''............நமன சமுத்திரம் என்ற இடத்தில் உள்ளவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதோ அல்லது மரங்களை சமையல் செய்யத் தேவையான அடுப்பு விறகாக அவற்றை  பயன்படுத்தி எரிப்பதையோ தடை செய்துள்ளார்கள் என்பதின் காரணம் அந்த கடவுட்கள் கோபம் அடைந்து விளைநிலப் பயிர்களை அழித்து விடுவார்கள் என்பதினால்தான் ...........''
''..........முத்துமலையாபுரம் என்ற ஊரில் காணப்படும் ஐயனார் மற்றும் கருப்பச்வாமி வெளுத்த நிறத்தில் இந்துக் கடவுட்களைப் போல (ஆரியர்கள்) இருக்க, அவர்கள் வாகனமாக உள்ளது குதிரை அல்ல, மாறாக பசு மாடுகள்............''

''.....புதுச்சேரி எல்லையில் முனீஸ்வரர் தனது மனைவியுடன்..........''
''..........சில இடங்களில் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தமது கோரிக்கை நிறைவேற பொம்மைகளை செய்து வைத்துள்ளார்கள் ..........''
இப்படியாக ஒவ்வொரு படத்துக்கும் விளக்கங்கள் காணப்படுகின்றன. கிராமத்தைக் காக்கும் கடவுட்கள், மழலை செல்வத்தைக் கொடுப்பவர்கள், வியாதிகள் நெருங்காமல் தம்மைப் பாதுகாப்பவர்கள் என கிராம மக்கள் நம்பும் ஐயனார் மற்றும் மாரியாம்மனைக் குறித்தத் தகவல்களையும், அற்புதமான படங்களையும் கொண்ட புத்தகத்தைக் குறித்து விமர்ச்சனம் எழுதுமாறு திருமதி க்ரிஷ்டா நியுயேன்ஹோபர் என்னை பிரதியோகியமாக கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் அந்தப் புத்தகத்தைக் குறித்த விமர்சனத்தை மேலே அளித்து உள்ளேன்.
திருமதி க்ரிஷ்டா நியுயேன்ஹோபர் எழுதி உள்ள 'ஐயனார் மற்றும் மாரியம்மன்- கிராம தேவதைகள்' புத்தகத்தை வாங்க இந்த முகவரிக்குச் செல்லவும்.




Ayyanar and Mariamman
Folk Deities in South India 
 Book  Review

Born in Germany in the year 1949, Mrs. Christa Neuenhofer, a writer, has travelled with her husband to remote villages in various parts of Asia and Africa to learn about the customs and life styles of people living there. Interacting with tribal people, they learnt about their traditional ways of life. On the Internet she published many of those photos which she took during these journeys: http:/www.pbase.com/neuenhofer.
Their  interest in traditional religions made the couple travel to Togo, Benin and Ghana in West Africa and their experiences can be found in the books ‘Togo and Benin, Homelands of Voodoo’ and ‘Ghana, Fetish Priests, Witch Camps and Funeral Rites’, written by Mrs. Neuenhofer. Though she has visited many countries, she has retained a special relation to India, which she normally visits at least once a year. She has taken a great interest in the diversity of Aryan and Dravidian culture, and there is hardly any Indian state left where she has not been. Further, Christa Neuenhofer has been particularly attracted by the beliefs of the rural population who are convinced that the village gods guard them. Extensively touring interior villages in South India, she could collect much data on the village gods, the rituals practiced there, including animal sacrifices, which are defunct in most of the villages now. Her book contains absorbing illustrations with texts describing her experiences and information on the gods, rituals and festivals. Here are some excerpts from her book:         
Our car stops. A field next to the road is populated by some fierce looking giants. A huge couple, armed with big clubs, have raised their hands. Do they welcome me or do they tell me not to move on? They are accompanied by several riders on white or earthen terracotta horses who attack some imaginary enemies with their sabres. An elephant, dogs and foot soldiers support these warriors.’’
Ravi informs me that in the early days the village people knew nothing of Shiva, Vishnu, Krishna or Rama. In the native Dravidian religion energy was the ultimate form of god. People believed that there were three evils: Devil, Demon and souls with unfulfilled desires.’’
‘’It seems that the god has protected the village very well so far. The heads of demons, slain by Ayyanar, garland like trophies the horses’ necks.’’
The village people further inform me that in the sacred grove of Namana Samudram it is prohibited to chop down a tree or collect firewood. This would cause the anger of the god who, in retaliation, would destroy the crops on which life of the villagers depends.’’
‘’……. near Muthumaliyapuram I have come across an example of Ayyanar and his companion Karuppu Sami – here with fair skin - who have been transformed into Hindu gods. …… they no longer ride on their horses. They have mounted sacred cows….’’‘’ Muneeswaran with his consort on the outskirts of Puduchery’’
‘’Those dolls have been offered to the temple by couples whose desire for a child has so far been unfulfilled  and who wish the god to bless them with a baby.’’
There are many such descriptions and explanations which follow each photo.
An impressive book, both rich in photographs and narrations not only about Ayyanar and his companion gods but also about Mariamman, the mother goddess who also protects the villages and who is the goddess of fertility and diseases. 
Mrs. Neuenhofer was kind enough to send me a preview of her book. I am privileged to publish in bilingual the  excerpts and photographs from her book - in English and in Tamil.
To purchase the book, AYYANAR AND MARIAMMAN, FOLK DEITIES IN SOUTH INDIA, please click this link: http://www.blurb.com/my/book/detail/3782738

வெண்கடுகு- White Mustard

$
0
0
குடும்ப அமைதிக்கு வெண்கடுகு
 
சாந்திப்பிரியா

சமீபத்தில் நான் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன். அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு உபாசகர் கூறிய செய்தி இது ''பல குடும்பங்களிலும் உள்ள ஓரே பிரச்சனை குடும்ப அமைதி இன்மை. சகோதர, சகோதரிகளிடையே மன வேறுபாடு. வீட்டில் உள்ள பெண்கள்  திருமணம் ஆகிய பின்  கணவனுடன் சென்று வசிப்பார்கள். அது போல ஆண்கள் தன்னுடன் வசிக்க தன் மனைவியையும் அழைத்து வருவார்கள். ஒரு குடும்பத்தில் பெண்கள் வெளியே சென்று விட, புதுப் பெண் உள்ளே நுழைய  பெரும்பாலும் அந்த இரு பிரிவுப் பெண்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் மூலமே  மனஸ்தாபங்கள் தோன்றத் துவங்குகிறது. சின்ன சின்ன பிரச்சனைகளினால் ஏற்படும் மனஸ்தாபங்கள் பெரிய அளவில் எழுகிறது.  இன்னும் சில குடும்பங்களில் சகோதர சகோதரிகளுக்கு இடையேயும் மனஸ்தாபங்களும் வெளியில் தெரியாத வெறுப்பும் ஏற்படும்போது அவை அனைவரது குடும்ப வாழ்க்கை மற்றும் மன நிலையை பாதிக்க அவர்கள் அமைதி இன்றி  வாழ்கிறார்கள். பல வருடங்களாக ஒற்றுமையுடன் இருந்த  நல்ல குடும்பங்களில் கூட திடீர் என  இப்படிப்பட்ட வேற்றுமை தோன்றத் துவங்குகிறது.  இதற்கு மூலக் காரணமே நம் வீடுகளில் குடி புகுந்து கொள்ளும் தீய சக்திகள்தான். தீய சக்திகளினால்  எளிதில் ஆக்ரமிக்க முடிந்தவர்கள்  வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும்   மன வலிமையற்ற பெண்களின் மீதுதான்.
வீடுகளில் சுற்றித் திரியும் அவை வீட்டில் உள்ள நல்ல ஆவிகளை அடித்து விரட்டி விட்டு  அங்குள்ள எண்ண அலைகளை, அதிர்வுகளை  தாமே ஆக்ரமித்துக் கொள்ளும்போது எதிர்மறையான எண்ணங்களையே விதைத்துக் கொண்டு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். பல்வேறு காரணங்களினால் அங்காங்கே சுற்றித் தெரியும் தீய ஆவிகள் யார் மூலமாவது வீடுகளில் புகுந்து கொண்டு முதலில் குடும்ப ஒற்றுமையைக் குலைக்கும். வீட்டிற்குள் நுழைய முடியாத அளவில் உள்ளபோது வெளியில் இருந்தவண்ணம் அவற்றால் எதுவுமே செய்ய இயலாது. ஆனால் ஒருமுறை யார் மூலமாவது வீட்டிற்குள் நுழைந்து விட்டால் அவற்றை கண்டுபிடித்து வெளியேற்றுவது கடினம் என்பதின் காரணம் அவை வீட்டில் உள்ளவர்களின் மன நிலையை தன்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகிறது என்பதினால்தான். தான் தீய சக்தியாக இருப்பதினால் தான் குடி வந்துள்ள  வீட்டில் வேறு யாரும் மன அமைதியுடன் இருக்கக் கூடாது என அவை நினைப்பதே அதற்குக்  காரணம். வீட்டில் புகுந்து கொள்ளும் தீய சக்திகளை விலக்குவது கடினம் அல்ல. ஆனால் வீட்டில் அமைதி இன்மைக்குக் காரணமே தீய சக்திகள்தான் என்பது மட்டும் சத்தியமான உண்மை. ஒற்றுமையாக இருந்து வந்த குடும்பங்கள் கூட சிறு சிறு பிரச்சனைகளினால் மன ஒற்றுமை இன்றி சிதறும் என்பதின் காரணம் அந்த தீய ஆவிகளின் செயல்பாடினால்தான் .

வெண்கடுகு எனும் வெண் கணங்களின் 
மத்தியில் பைரவர்  

ஆகவே அப்படிப்பட்ட தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன? அதைக் குறித்து சாயி உபாசகர் ஒருவர் கூறிய நிவாரணம் இது. ''மனதளவில் பிரிந்து உள்ள குடும்பங்கள் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவவும், வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் உள்ளது. வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபத்தைப் போட வேண்டும். அதில் சிறிதளவு வெள்ளைக் கடுகை ( வெண்கடுகு என்பார்கள்) போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட்டு வந்து ஸ்வாமி அறையில் வைத்து விட வேண்டும். அதன் பின் நடப்பதைப் பாருங்கள். வீட்டில் அந்நாள் வரை இருந்து வந்த மன அமைதி மெல்ல மெல்ல  அதிகமாவதைக்  காணலாம். வெண் கடுகிற்கு அத்தனை சக்தியா? அது எதனால்?
அதன் காரணத்தைக் கேட்டபோது ஒரு பண்டிதர் கீழ் கண்ட காரணங்களைக் கூறினார். ''வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும்.   வெண் கடுகை குறித்த ஒரு கதையைப் படியுங்கள். அதன் சக்தி புரியும்.  மகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும் கொடையாளி. மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான். ஆகவே அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது. அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது. ஆகவே அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார். அதன்படி  ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார். எதற்காக பாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடுகை பயன்படுத்த வேண்டும் என்று மன்னன் கேட்க ராஜ குரு கூறினார் ' மன்னா, வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார். ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும். 
சாதாரணமாக ஸூதர்சன ஹோமங்களில் ஓதப்படும் மந்திரங்களில் சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்று துவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள். அதை ஓதும்போது பகவான் விஷ்ணுவே ஸூதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார். அப்படிப்பட்ட ஹோமத்தில் வெண்கடுகை ஸமித்து ஹோமம் செய்யும் போது சர்வ சத்ருக்களும் அவர்களுடன் சேர்ந்த தீய ஆவிகளும் அழிவார்கள். அது போலவே போர்களில் அடிபட்டு இறக்கும் தறுவாயில் உள்ள வீரர்கள் பூமியில் கிடக்கும்போது அவர்களை சுற்றி உள்ள இடங்களில் வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால் யம பகவான் அவர்களின் உயிர்களை பறிக்க வர மாட்டார் என்ற நம்பிக்கை சங்க காலங்களில் இருந்துள்ளது. அதற்குக் காரணம் வெண்கடுகுப் புகை ஸூதர்சனார் வருகை தரும் நிலையைக் குறிப்பதாகும் . ஆகவேதான் வெண் கடுகு கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது' என்று விளக்கம் அளித்தார்.  தனது ராஜ குரு கூறியதைப் போலவே மன்னன்  மயில்வண்ணன் வெண் கடுகைப் போட்டு பூஜையும், யாகமும் செய்ய அனைத்து தீய ஆவிகளும் வீட்டை விட்டு வெளியேறின. அவர் குடும்பத்தில் மீண்டும் அமைதி ஏற்பட்டது.

Announcement

$
0
0
அறிவிப்பு 

தவிர்க்க முடியாத  சொந்த சில காரணங்களினால் இனி ஒருமாத காலம்  இந்த வலை  தளத்தில் வேறு எந்த கட்டுரையும் வெளியிட முடியாமல் இருக்கிறேன். 
ஆகவே இனி 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  பதினைந்தாம் தேதிக்கு மேல்தான் நான் எழுதும் கட்டுரைகள் மீண்டும் தொடரும்.

Srilanka:Jaffna - Kudai Swamigal

$
0
0

  யாழ்பாண   சித்தர்  
குடை ஸ்வாமிகள் 
சாந்திப்பிரியா 


சித்தியை கைகொண்டவர்களே சித்தர்கள் எனப்படுவோர். உண்மையான சித்தர்கள் காலத்தை வென்றவர்கள். அவர்களால் இயற்கையை மீறிய பல செயல்களையும் செய்ய இயலும். காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்தவர்களுக்கு வெயிலும், மழையும் பெரிதல்ல. சித்தர்களுக்கு மரணமும் நிர்ணயிக்கப்பட்டது அல்ல என்ற நமிபிக்கை சிலரிடம் உண்டு. ஆனால் அது சரியான கூற்றாக இருக்க முடியாது. ஏன் எனில் பிறக்கும்போதே மனிதனின் மரணமும் நிர்ணயிக்கப்பட்டே பிறக்கிறார்கள். சாதாரண மனிதர்களுக்கும், சித்தர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்றால் மனிதர்களால் விஞ்ஞான ரீதியில் இல்லாமல் நேரடியாக  செய்ய இயலாத காரியங்களை சித்தர்களால் செய்ய முடியும். உதாரணமாக சித்தர்களால் வானிலே பறிக்க இயலும். கூடு விட்டு கூடு பாய முடியும். நினைத்த நேரத்தில் பல நாட்களுக்கு சமாதி  நிலையில் இருக்க முடியும். பல காலத்துக்குப் பிறகு நடக்க இருப்பதை இன்றே உணர முடியும். சித்தர்கள் பிணி தீர்ப்பவர்கள்.
சித்தர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் முதன் முதலாக இந்திய துணை கண்டத்தில்தான் தோன்றியவர்கள் என்ற கருத்து உண்டு. அதற்கான காரணம் இந்தியாவில் இருந்த பூமியே தெய்வீக பூமி என்றும், அதற்கான காரணம் இங்குதான் இறைவன் வாழும் (சிவபெருமான்) இமயமலையும், தாம்பிரபரணி ஆறு, சரஸ்வதி நதி, கங்கை நதி மற்றும் பல்வேறு புனித தெய்வீக நதிகள் ஓடிய இடங்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனாலும் இந்தியாவில் தோன்றிய சித்தர்கள் பின்னர் அவர்களது சிஷ்யப் பரம்பரையினர் மூலம் பிற இடங்களில் பரவினார்கள். ஒரு காலத்தில் இலங்கை கூட இந்திய நாட்டுடன் சேர்ந்தே இருந்தப் நிலப் பகுதியாக இருந்தது என்பதினாலோ என்னவோ இந்தியாவைப் போலவே இலங்கையிலும் பல அற்புதமான சித்தர்கள் இருந்துள்ளார்கள் என்பது புரிகிறது. இலங்கையைப் பொருத்தவரை சித்தர் பரம்பரையில் உள்ளதாகக் குறிப்பிடப்படுபவர்களில் கீழ் கண்ட சித்தர்களே உள்ளார்கள்.
  1. கடையிற் ஸ்வாமிகள்
  2. பரம குரு ஸ்வாமிகள்
  3. குழந்தை ஸ்வாமிகள்
  4. நவநாத ஸ்வாமிகள்
  5. பெரியானைக் குட்டி ஸ்வாமிகள்
  6. சித்தானைக் குட்டி ஸ்வாமிகள்
  7. சடைவரத ஸ்வாமிகள்
  8. மகாதேவ ஸ்வாமிகள்
  9. நாகநாத சித்தர் ஸ்வாமிகள்
  10. நயினாதீவு ஸ்வாமிகள்
  11. செல்லப்பா ஸ்வாமிகள்
  12. குடை ஸ்வாமிகள் எனும் கந்தையா சுவாமிகள்
இவர்களில் குடை ஸ்வாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். குடை ஸ்வாமிகள் 1897 ஆம் ஆண்டு குமாரக் கோட்டம் என்ற இடத்தில் நாகேந்திரன் மற்றும் ஆச்சிப்பிள்ளை என்ற தம்பதியினருக்கு பிறந்தவர் எனத் தெரிகிறது. குடை ஸ்வாமிகள் எனும் கந்தையா ஸ்வாமிகள் முதலில் விவசாயத்தில் ஈடு பட்டிருந்தவர். சுருட்டை சுருட்டு சுற்றும் தொழிலையும் செய்து வந்தவர். இவருடைய குரு மகாதேவ ஸ்வாமிகள். வயதுக்கு வந்த அவருக்கு தகுந்த காலத்தில்  திருமணம் ஆகிற்று. ஆனால் 1930 ஆம் ஆண்டில் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே அவர் மனைவியார் மரணம் அடைந்து விட்டதினால் உலக ஆசைகளையும் பிற சொந்தபந்தப் பிடிப்புக்களையும் துறந்த இவர் துறவறத்தை மேற்கொண்டார் . பெரும் சிவபக்தரான இவர் கையில் எப்போதுமே ஒரு குடை இருக்கும். இவர் வாழ்க்கையோ மிகவும் எளிமையானது. இடுப்பில் நான்கு முழ வெட்டி.  மேல் சட்டை போட்டதில்லை. பாதத்தில் காலணிக் கிடையாது.  முகத்தில் மழிக்காத தாடி. உடல் வளைந்து இருந்ததினால் அவர் நடக்கும் விதமே அலாதியானது. சாதரணமாக நடப்பது இல்லை. திடீர் திடீர் என தாவித் தாவி நடப்பது உண்டு. அவர் படுத்து உறங்கியது மணல் தரை மீதும், வைக்கோல் போர்களின் மீதும்தான் விறகு விற்கும் இடங்களுக்கு அருகில் சென்றால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் விறகுகள் மீதும் படுத்து உறங்குவது உண்டு.
குடை ஸ்வாமிகள் எங்கு செல்வார், எப்போது நம் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்ப்பது தவறு. அவர் யாருக்கும் புரியாத புதிர். இவரை சிலர் பைத்தியம் என்றார்கள். வேறு சிலரோ இறை சக்தி மிக்கவர் என்று எண்ணினார்கள். திடீர் என யார் வீட்டிற்காவது சென்று தனக்கு உணவு தருமாறு கேட்பார். அவர்கள் உணவை எடுத்துவரப் போனப் பின் அங்கிருந்து அவர்களிடம் எதுவும் கூறாமல் சென்று விடுவார். தேடினாலும் கிடைக்க மாட்டார். அவர் அந்த வீட்டிற்கு வந்து விட்டுப் போனதும் அவர்கள் வீட்டில் செல்வம் தாண்டவமாடும் என்ற நம்பிக்கை இருந்தது என்பதற்கு சான்றாக பல நிகழ்ச்சிகளை அங்குள்ள மக்கள் கூறி உள்ளார்கள்.  சித்தர்களின் சக்திக்கு ஏற்ப அவர் பிற்காலத்தில் நடக்க இருப்பதை முதலிலேயே கூறி உள்ளார்.  பலரும் அவரிடம் பக்தர்கள் ஆனதின் காரணமும் அதுவே.
அவர் நுழைந்த இடத்தில் செல்வம் கொழிக்கும். வீட்டில் நுழைந்தால் அங்கு நிலவிய தரித்திரம் தொலைந்து போகும் என்பார்கள். அவர் பார்வையில் அருள் இருக்கும். அவர் அதிகம் பேசியது இல்லை. அவரிடம் சென்று பேசும் அனைவருக்கும் பதில் கூறியதில்லை. ஆனால் அவராகப் போய் பேசினால் அவர்கள் அதிருஷ்டசாலிகளாகவே இருப்பார்கள். அவரிடம் செல்பவர்கள் சிலரிடம் திடீர் என 'உன் வீட்டில் இன்று நல்லது நடக்காது' என்பார். அது போலவே அன்று அவர்கள் வீட்டில் ஏதாவது துக்கம் நேரிடும்.   அவர் அனைத்தையுமே  வாய் வார்த்தையினால்  மட்டுமே கூறியது  இல்லை. ஏதாவது செய்கை மூலமோ இல்லை செயல் மூலமோ ஜாடைமாடையாகக் கூறுவார். புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவே.
ஒருமுறை இவரை கீழே தள்ளி அவமானப்படுத்திய காவல்துறையை சார்ந்த ஒரு அதிகாரி, எந்தக் கையினால் அவரை கீழே தள்ளினாரோ அதே கையில் அனைத்து உணர்ச்சிகளையும் இழக்க, அவர் சக்தியைப் புரிந்து கொண்டவர் குடை சுவாமிகளிடம் ஓடோடி வந்து மன்னிப்புக் கேட்டு தனது கையை சரி செய்து கொண்டார் என்ற கதை உண்டு. அது போலவே ஒரு விவசாயி நிலத்தில் ஒருநாள்  இவர் செல்ல அந்த ஆண்டு என்றும் இல்லாமல் அந்த விவசாயியின் நிலத்தில் அபார விளைச்சல் இருந்ததானக் கதையும் உள்ளது.
இப்படியாக பல அற்புதங்களை நிகழ்திய இந்த சித்தர் 1978 ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். இவர் குறித்து பெரிய அளவில் விவரம் கிடைக்கவில்லை. 

Full moon and Dark moon

$
0
0



அம்மாவாசை மற்றும் பௌர்ணமி
 பிறந்த கதை 

சாந்திப்பிரியா


ஒருமுறை தக்கன் சிவபெருமானை துதித்துக் கடும் தவம் புரிந்து பல ஆற்றல்களைப் பெற்றான். பல சக்திகளைப் பெற்றுக் கொண்ட தக்கன் சற்றே இறுமாப்புக் கொண்டு அலைந்தான். அவன் மணந்து கொண்ட மனைவிகள் மூலம் பால ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றெடுத்தான். ஆனால் பரிதாபம் என்ன என்றால் அவனுடைய எந்தப் பிள்ளைகளினாலும் அவனுக்கு பெருமைக் கிடைக்கவில்லை. ஆகவே அவன் மனம் நொடிந்து போனான். மீண்டும் சிவபெருமானை துதித்தார்.  சிவபெருமானின் அருளினால் அவனுக்கு இருபத்தி ஏழு பெண்கள் பிறந்தார்கள் . அவர்கள் அனைவரையும் நன்கு பேணி வளர்த்து வந்த தக்கன் அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளையை தேடி வந்தான். அப்போது அதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த சந்திரன் தனக்கு அவர்களை மணம் செய்து கொடுக்குமாறு கோரிக்கை வைக்க அதை ஏற்றுக் கொண்ட தக்கனும் சந்திரனுக்கு அவர்கள் அனைவரையும் திருமணம் செய்து வைத்தார்.
முதலில் சில வருடங்கள் அனைத்து மகள்களின் வாழ்கையும் இனிமையாகவே கழிந்தன. சந்திரனும் தினமும் ஒரு மனைவி என ஒவ்வொரு பெண்ணுடனும் ஒவ்வொரு நாளைக் கழித்தாலும் அவர்களில் மூத்தவளையும், இளையவளையும் அதிகம் நேசித்து அவர்கள் இவருடனேயே அதிக நேரத்தைக் கழிக்கலானார். மற்றவர்களை ஒதுக்கி வைத்தார். அதனால் கவலைக் கொண்ட அனைத்துப் பெண்களும் தனது தந்தையிடம் சென்று அது குறித்து முறை இட்டார்கள். அவனும் சந்திரனுக்கு எத்தனையோ எடுத்துக் கூறியும் சந்திரன் தக்கனின் அறிவுரையை ஏற்க மறுத்தார். ஆகவே கோபமடைந்த தக்கனும் இனி சந்திரன் அவரிடம் இருந்த அனைத்துக் கலைகளையும் இழக்க வேண்டும் என்று சாபமிட்டார். அந்த சாபத்தின் விளைவாக சந்திரனின் கலைகள் அனு தினமும் மெல்ல மெல்ல அழியத் துவங்கின. சந்திரனின் வனப்பு அழியத் துவங்கியது. சந்திர ஒளியும் குறைவுற்றது.
அதனால் பிரபஞ்சத்தில் சந்திர ஒளி குன்றியதினால் பல பிரச்சனைகள் தோன்றலாயின. சந்திரனிடம் மொத்தம் பதினைந்து அற்புதமான சக்தி வாய்ந்த கலைகள் இருந்தன . அவற்றை ஒவ்வொன்றாக இழக்கத் துவங்கிய சந்திரனிடம் எஞ்சி இருந்தது பதினைந்தாவது கலைதான் அதையும் சந்திரன் இழந்து விட்டால் இரவில் ஒளியே இருக்காது. சந்திரனின் மகிமையும் முற்றிலும் மறைந்து விடும். அதைக் கண்டு கவலைப்பட்ட சந்திரன் தக்கனின் தந்தையான பிரும்மாவிடம் சென்று நடந்ததைக் கூறி அவரை தக்கனுடைய சாபத்தை விலக்குமாறு  கோரிக்கை விடுத்தார். ஆனால் பிரும்மனோ தன்னால் அதை செய்ய முடியாது என்றும் சிவபெருமானினால்  மட்டுமே அதை செய்ய இயலும் என்றும் கூறி விட வேறு வழி இன்றி சந்திரன் சிவபெருமானிடம் சென்று நடந்ததைக் கூறி நடந்ததைக் கூறி அழுதார். ஆனால் சிவபெருமானும் தான் வரம் கொடுத்த தக்கனும் உண்மையில் முனிவர்களுக்கு நிகராக விளங்கி வந்ததினால் அதை எளிதில் மாற்ற முடியாது என்பதினால், சந்திரனிடம் இருந்த கடைசி கலையை தான் தனது முடியில் வைத்துக் கொள்வதாகவும், அப்படி வைத்துக் கொண்டப் பின் அதை தக்கனின் சாபம் அழிக்க முடியாது என்றும், தான் சந்திரனை அந்த பதினைந்தாவது கலையுடன் சேர்த்து  தன்  முடிக்குள் வைத்துக் கொண்டாலும், சந்திரன் முன்பைப் போலவே அனைத்து கலைகளையும் மீண்டும் பெறுவார் என்றும் கூறினார். ஆனால் அதில் இருந்த ஒரு சிறிய சங்கடத்தையும் சந்திரனுக்கு விளக்கினார்.
சந்திரனை தன் தலையில் பதினைந்தாவது கலையுடன் தான் முடித்து வைத்துக் கொண்டதும், ஒவ்வொரு நாளாக சந்திரனின் ஒவ்வொரு கலையும் சந்திரனிடம் மீண்டும் சென்று அவரை சக்தி மிக்கவர் ஆக்கி பதினைந்தாம் நாள் எப்போதும் போலவே அவர் பிரகாசிப்பார் என்றும், மறு நாள் முதல் மீண்டும் ஒவ்வொரு நாளும் அவர் கலைகள் அவரை விட்டு விலகும் என்றும், மீண்டும் பதினைந்தாம் நாள் அவர் கலைகள் அனைத்தையும் இழந்து விட்டப் பின்  ஒழி இழப்பார் என்றும் கூறினார்.  ஆனால் மீண்டும்  அதற்கு அடுத்த நாள் முதல் கலைகள் மீண்டும் அவருக்கு திரும்பும் என்றும் கூறினார். இப்படியாக ஒவ்வொரு பதினைந்து நாளும் சந்திரனின் கலைகள் விலகி அவர் ஒளி இல்லாமல் இருக்க அதுவே அம்மாவாசை என்றும்,  அடுத்த பதினைந்து நாளில் மீண்டும் அவரிடம் போய் சேரும் கலைகளினால் அவர் பிரகாசிப்பதினால் அதுவே பௌர்ணமியாகவும்  ஏற்கப்பட்டது.

Kannagi worship in Sri Lanka

$
0
0
 இலங்கையில் கண்ணகி வழிபாடு 
புங்குடுத் தீவு 
கண்ணகி ஆலயம் 
 சாந்திப்பிரியா 


மதுரையை எரித்த கண்ணகிக்கு  இந்தியாவின் தென் பகுதியில் மட்டும் அல்ல இலங்கையிலும்  வழிபாடு உள்ளது. ஈழத்தில் முருகன் வழிபாடு எப்படி அதிகமாக உள்ளதோ, அதில் பாதி அளவாவது கண்ணகிக்கும் உள்ளது என்பது ஒரு ஆச்சர்யமான செய்தியாக இருக்கும். இலங்கையில் பல இடங்களில் கண்ணகிக்கு ஆலயங்கள் உள்ளன. கண்ணகியை ராஜராஜேஸ்வரி, நாகபூசணி, முத்துமாரி அம்மன், நாச்சியம்மன், புவனேஸ்வரி, மீனாட்சி போன்ற பல பெயர்களில் வழிபடுகிறார்கள்.
கண்ணகி ஆராதனை என்பதைசுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டு வந்தது கி.பி 170 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்டு வந்த கஜபாகு என்ற மன்னனே என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கண்ணகியும் கோவலனும் தெய்வமாகி மேலுலகம் சென்றப் பின் இந்தியாவின் தென் நாட்டில் ஆட்சியில் இருந்த சேரன் செங்குட்டுவன் என்ற சேர மன்னன் கண்ணகிக்கு பெரும் விழாவை எடுத்தான். வாஞ்சி நகரில் அவன் நடத்திய கண்ணகி விழாவில் இமயமலையில் இருந்து கொண்டு வந்த கல்லில் செதுக்கிய கண்ணகி சிலையை வைத்து ஒரு ஆலயம் அமைத்து விழா நடத்தியபோது அவன் இலங்கையில் இருந்த தன்னுடைய நண்பரும் மன்னருமான கஜபாகு என்ற மன்னனுக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். அதில் கலந்து கொள்ள வாஞ்சிக்கு வந்த கஜபாகு கண்ணகியின் மகிமையை அறிந்து கொண்டு அவளிடம் தன் நாட்டிற்கும் வந்து அருள் பாலிக்குமாறு கண்ணகி ஆலயத்தில் வேண்டிக் கொண்டார். 
கஜபாகுவின் விருப்பத்தை அறிந்து கொண்ட செங்குட்டுவன் விழா, முடிந்த கையோடு அவருக்கு கண்ணகியின் சிலம்பைப் போன்ற ஒன்றையும் ஆலய விழாவில் பயன்படுத்திய வெள்ளியில் ஆன மாம்பழம், சந்தனக் கட்டையினால் செய்த கண்ணகியின் சிலை போன்றவற்றைப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார். அதைக் கொண்டு வந்த கஜபாகு முதன் முதலாக கண்டியில் கண்ணகிக்கு ஒரு ஆலயம் அமைத்தார் என்று கூறுகிறார்கள்.
இன்னொரு செய்தியின்படி கஜபாகு  தமிழ்நாட்டின் தென் பகுதியில் படையெடுத்துச் சென்று அங்கு சோழ மன்னனால் சிறை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த சிங்களவரை விடுதலை செய்து கொண்டு சேரன் செங்குட்டுவன் நடத்திய விழாவில் கலந்து கொண்டதாகவும், அப்போது கண்ணகி சிலையை எடுத்துக் கொண்டு வந்தபோது பெருமளவில் தென் இந்திய மக்களும் கஜபாகுவுடன் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததினால் அவர்களையும் அழைத்துக் கொண்டு இலங்கைக்கு வந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்ததாகவும் நம்பிக்கை உண்டு.  
அதைத் தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் கண்ணகிக்கு ஆலயங்கள் எழுந்தனவாம். அது மட்டும் அல்லாமல் மதுரையில் பாண்டிய நாட்டு மன்னனின் தலை நகரை அழித்த கற்புக்கரசி கண்ணகி இலங்கைக்கு வந்து சுமார் பத்து இடங்களில் தங்கி இருந்துள்ளதாக சில நம்பிக்கையும் இலங்கையில் உள்ளது. அதனாலும் கண்ணகிக்கு பல இடங்களிலும் ஆலயங்கள் எழுந்திருக்கலாம். கண்ணகியை சிங்களவர்கள் 'பத்தினி தெய்யோ' என வழிபாட்டு வருகிறார்கள். 'தெய்யோ' என்றால் 'தெய்வம்' என்று அர்த்தம்.


இப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றே யாழ்ப்பாணத்தில் உள்ள புங்கு தீவில் உள்ள கண்ணகி ஆலயமும். இந்த ஆலயம் சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சார்ந்த ஆலயம் என்கிறார்கள்.  முன் ஒரு காலத்தில் இந்த தீவில் இருந்த சைவ வேளாளப் பிரிவை சார்ந்த ஒருவர் மாட்டுப் பண்ணை முதலாளியாக இருந்தவர். அவருடைய மாடுகளை தினமும் அவருடைய வேலையாட்கள் காடுகளில் மேய விட்டுத் திரும்புவார்கள். இப்படியாக இருக்கையில் ஒருநாள் காட்டில் மேய விட்டு இருந்த ஒரு மாட்டுக் கூட்டம் திரும்ப வரவில்லை. அவர்கள் உடனே யஜமானரிடம் சென்று நடந்ததைக் கூற அவரும் பல இடங்களுக்கும் தனது வேலையாட்களை அனுப்பி அந்த மாட்டு கூட்டத்தைத் தேடுமாறு கூறினார். அவர்கள் அந்த மாட்டு கூட்டத்தை தேடி அலைந்தபோது அந்த மாடுகள் கடற்கரைக்கு அருகில் ஒரு பெரிய கட்டைப் பெட்டியை சூழ்ந்து கொண்டு நிற்பதைக் கண்டார்கள். உடனே அங்கு சென்று அந்தப் பெட்டியை திறந்து பார்க்க முயன்றார்கள். ஆனால் அவர்களால் அந்தப் பெட்டியை திறந்துப் பார்க்கவே முடியவில்லை. ஆகவே  அந்தப் பெட்டியை தூக்கிக் கொண்டு சென்று சற்று தூரத்தில் இருந்த ஒரு பூவரச மரத்து நிழலில் வைத்து விட்டு அங்கேயே இளைப்பாறினார்கள். சற்று தூங்கி கண் விழித்தப் பின் மீண்டும் அதை திறந்து பார்க்க முயன்றபோது அந்தப் பெட்டி முன்னை விட அதிக கனமாக இருந்ததைக் கண்டு வியந்தார்கள். என்ன ஆயிற்று  இதற்கு? சற்று நேரத்துக்கு முன்னர்தான் கொண்டு வந்தோம், அப்போது இதை தூக்க முடிந்த எம்மால் இப்போது தூக்க முடியாமல் இப்படி கனக்கிறதே!,  என எண்ணியவாறு தமது கிராமத்துக்குச் சென்று இன்னும் அதிக ஆட்களை அழைத்து வந்து அதை மிகவும் கஷ்டப்பட்டு திறந்து உள்ளார்கள்.
திறந்ததும் அவர்கள் அதிசயிக்கும் வண்ணம் அதில் ஆபரணங்களும், சிலம்பும் அணிந்த ஒரு பெண்ணின் அற்புதமான கல் சிலை இருந்ததைக் கண்டார்கள். அந்த சிலையை வெளியில் எடுத்து வைத்ததுமே அங்கு கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கு சாமி ஏறியது. அவள் மூலம் அந்த சிலையில் உள்ளவள் 'தானே மதுரையை எரித்த கண்ணகி என்றும், தன்னை எடுத்து வைத்து வணங்கி பூஜித்தால் அவளை பூஜிப்பவர்களுக்கு பல ஐஸ்வர்யம் சேரும்' என்று கூறினாள். அந்த சிலையை அவள் கூறியபடியே வெளியில் வைத்து ஆலயம்  அமைத்து பூஜிக்கலானார்கள். அதுவே இன்று புங்குடுத் தீவில் கண்ணகி ஆலயமாக உள்ளது.  புங்குடுத் தீவு என்பது யாழ்ப்பான மாவட்டத்தில் தென் மேற்கு தீவில்  உள்ள ஏழு தீவுகளில் ஒன்றாகும். சுமார் இருபத்தி ஒன்று சதுர மைல் பரப்பளவில் உள்ள இந்த தீவில் முதலில் பெட்டி இருந்த இடத்தில் மகாதேவர் ஆலயமும், இரண்டாவதாக அவர்கள் பெட்டியை இறக்கி வைத்த இடத்தில் நாச்சியார் ஆலயமும் மூன்றாவதாக பெட்டியை திறந்து பார்த்த இடத்தில் கண்ணகி ஆலயமும் எழுந்துள்ளது. இந்த புங்குடுத் தீவில் இருந்தவர்கள் தென் இந்திய மக்களுடன் நெருங்கிய தொடர்ப்பில் இருந்துள்ளனர் என்பதினாலும் கண்ணகி ஆலயம் முக்கியத்துவம் பெறுகிறது. பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலத்தில் இந்த தீவும் அவர்கள் வசம் இருந்துள்ள பூமியாகும் . இந்த தீவிற்கு புங்குடு என்ற பெயர் வரக் காரணம் இங்கு புங்கை மரங்கள் மிக அதிகமாகும்.

Thirumurugatrup padai

$
0
0



திருமுருகாற்றுப் படை
சாந்திப்பிரியா

சூரியனை வதம் செய்ய புறப்பட்ட முருகப் பெருமான் புலவர் நக்கீரரை காப்பாற்றியக் கதை முருகனின் புராணத்தில் உள்ளது. நக்கீரர் பெரும் கவி. யாருக்கும் தலை வணங்காதவர். காரணம் அவருக்கு உண்மையைத் தவிர வேறொன்றும் தெரியாது என்பதே. சிவபெருமானை வணங்காமல் வேறெங்கும் செல்ல மாட்டார்.  ஒருநாள் என்றும் போல வெளியில் கிளம்பிச் சென்றார். நக்கீரர் ஒருமுறை வெளியூருக்குப் பயணமானார். அது திருப்பரம்குன்றம் எனும் இடமாகும். அங்கு சென்றவே அங்கிருந்த குளத்தில் குளித்து விட்டு அருகில் இருந்த சிவாலயத்தின் வெளியில் இருந்த மரத்தடியில் படுத்துக் கொண்டார். ஆலயம் இன்னும் திறக்கவில்லை. அது திறந்ததும் அங்கு சென்று சிவபெருமானை வழிபடலாம் என எண்ணி இருந்தார்.
அதே நேரத்தில் அங்கு சாபம் ஒன்றைப் இருந்த கார்முகி எனும் பூதம் ஒன்று ஆலயத்தின் வெளியில் காத்துக் கிடந்தது.  அதன் வேலை என்ன என்றால் அந்த ஆலயத்தில் வந்து சிவனை பூசிப்பவர்கள் சிவ பூஜையில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவர்களை கொண்டு போய் சிறையில் அடைத்து விடும். இப்படியாக ஆயிரம் பக்தர்களை  சிறையில் அடைத்தப்  பின் அவர்களை காளி தேவிக்கு பலி கொடுத்தால் அதன் சாபம் விலகி அது தன் பழைய மனித உடலைப் பெற்று விடும். ஆகவே அது சிவாலயங்களை சுற்றித் திரிந்து வந்தது. ஆகவே அது அங்கு வரும் பக்தர்களின் கவனத்தைக் கலைத்து சிவ பூஜையில் தவறிழைக்கச் செய்து, அதில் தவறு செய்பவர்களாய் பிடித்துச் சென்று விடும்.
ஆலயமும் திறக்க அதற்குள் சென்ற நக்கீரர் பூஜையை செய்யலானார். அந்த காலங்களில் ஆலயம் என்பது மிகப் பெரிய அளவில் இருக்காது. கருவறை என்பதெல்லாம் கிடையாது. நான்கு சுவர்களுக்குள் ஒரு குளத்துடன் மரமும் உள்ள இடத்தில் விக்ரகங்கள் அல்லது  ஒரு கல்லைப் போன்ற உருவம் இருக்கும். அதையே குறிப்பிட்ட கடவுளாகக் கருதி பூஜிப்பார்கள். பூஜை செய்யத் துவங்கிய நக்கீரரின் முன்னால் இருந்த குளத்தில் அவர் அமர்ந்து இருந்த மரத்தின் மீது இருந்து சில இலைகள் பறந்து வந்து விழுந்தது. ஆச்சர்யமாக அந்த அந்தக் குளத்தில் விழுந்த இலையோ ஒரு மீனாக மாறிவிட,  குளத்தின் கரையில் விழுந்த இலை ஒரு மீன்கொத்திப் பறவையாக மாறியது. அடுத்தகணம் மீன் கொத்திப் பறவை அந்த மீனைப் பிடிக்க முயல,  அதைக் கண்ட  நக்கீரர் அதிசயத்தினால் அவற்றைப் பார்த்துக் கொண்டே இருந்தார். அதனால் பூஜையில் அமர்ந்த அவருடைய கவனம் கலைந்தது. அதுவே தக்க தருமணம் என்று எண்ணிய கார்முகி அவரை அப்படியே தூக்கிக் கொண்டு போய் தன் சிறையில் அடைத்து விட்டு ஆனந்தமாகக் கூத்தாடியது. உடனே சென்று குளித்து விட்டு வந்து காளிக்கு பலி தருகிறேன் என குதுகுலத்துடன் கூறி விட்டுச் செல்ல அவருக்கு முன்னால்  அங்கு சிறையில் இருந்தவர்கள் அவரைக் கண்டதும்  'ஓ' என ஒப்பாரி வைத்து அழலானார்கள். நக்கீரருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் எதற்காக அழுகிறார்கள் என விசாரித்தபோது அவர்கள் கார்முகி பூதத்தின் கதையைக்  கூறியப் பின் இதுவரை அந்த பூதம் 999 பேர்களை சிறையில் அடைத்து வைத்து உள்ளதாகவும், பல மாதங்கள் தேடியும் அதனால் ஆயிரமாவது மனிதனைக் கண்டு பிடிக்க முடியாமல் திணறியது என்றும், இன்று நக்கீரரை பிடித்து வந்துவிட்டதின் மூலம் அதன் நோக்கம் நிறைவேறி விட்டது என்றும் இனி அங்குள்ள அனைவருக்கும் மரணமே என்றும் கூறி அழுதார்கள்.
ஆனால் அதைக் கேட்ட நக்கீரர் கலங்கவில்லை. ஆர்பரிக்கவில்லை. கண்களை மூடியபடி கந்தனை வேண்டிப் பாடத் துவங்கினார். 'கந்தா, கருணை வேலவா, உன் இடத்துக்கு வந்துள்ள என்னைக் காக்க முடியாதவனாகி விட்டாய் என்பதை நான் நம்பவில்லை. உன் சக்திக்கு எதிராக எந்த பூதம் எங்களைக் கொள்ள இயலும். உன் தந்தைக்கு பூஜை செய்தப் பின் உனக்கல்லவோ பூஜை செய்ய வந்தேன். அப்படிப்பட்ட நற்பண்பு கொண்ட உன் பக்தனை கேவலம் ஒரு பூதத்துக்கு இறையாக்கலாமா? இது முறையா? தர்மமா? உன் வேலின் சக்தி என்ன ஆயிற்று? அதை எங்கே ஒழித்து வைத்து விட்டாய்? முருகா, ஷண்முகா...எம்மைக் காக்க வருவாயா?' என மனமுருகி பிராத்திக்க அவர்கள் சிறை வைக்கப்பட்டு இருந்த குகைக்குள் பெரிய வெளிச்சம் தோன்றியது. அந்த வெளிச்சத்தைத் தொடர்ந்து வந்த கந்தவேலன் அங்கேயே அவர்கள் அனைவரையும் ஆசிர்வதித்தப் பின் காத்திருந்து கார்முகி வரவை எதிர்பார்த்துக் காத்திருந்து அது வந்தப் பின் அதை தனது வேலினால் குத்திக் கொன்றார். அடுத்து அங்கிருந்த ஆயிரம் பேர்களையும் விடுதலை செய்தப் பின் அங்கிருந்துக் கிளம்பிச்  சென்று சூரபதமனையும் அழித்தார்.  அதன் பின்னரே முருகப் பெருமானின் அற்புதத்தை வெளிப்படுத்தும்  திருமுருகாற்றுப் படை எனும் அற்புத பாடலும் பிறந்தது.

Magalam Siva Temple

$
0
0
மாகாளேஸ்வர் ஆலயம்
சாந்திப்பிரியா


மாகாளேஸ்வர் ஆலயம் என்றாலே உஜ்ஜயினியின் நினைவுதான் அனைவருக்கும் வரும். ஆனால் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற பெருமையை கொண்ட இன்னொரு மாகாளேஸ்வர் ஆலயம் பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ள இரும்பை மாகாளம் என்ற ஊரில் உள்ளது. இந்த இடத்துக்கு செல்ல திண்டிவனத்தில் இருந்து கிளியனூர் வழியே பாண்டிச்சேரி செல்லும் பாதையில் செல்ல வேண்டும்.
இந்த தலம் எழுந்த வரலாறு சுவையானது.  இந்த தலம் எழக்காரணம் காடுவெளிச் சித்தர் என்ற உண்மை பலமாக உள்ளது. காடுவெளி என்பது வெட்ட வெளியைக் குறிக்கும். வெட்டவெளி என்பது சூன்யப் பிரதேசம் ஆகும்.  ஆகவே இந்த முனிவர் இவர் அந்த வெட்ட வெளியான  சூனியத்தையே   தியானித்து சித்தி பெற்றதால் காடுவெளிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார் என்பது ஒரு நம்பிக்கை. இவர் காஞ்சிபுரத்தில் சமாதியடைந்ததாக சிலர் கூறுகின்றனர். இவருடைய வாழ்கை  வரலாற்றை யாரும் முறையாக எழுதவும் இல்லை. இவரைப் பற்றிய பல செய்திகள் வாய் மொழிக் கதைகளாகவே உள்ளன.  
இந்த ஆலயத்தைக் குறித்து சில இடங்களில் கூறப்படும் கதைகள் சற்றே மாறுபட்டு உள்ளன. ஒரு காலத்தில் இந்தப் பகுதி பஞ்சத்தினால் சூழப்பட்டு பலர் மரணம் அடைந்தார்கள். அப்போது அந்தப் பகுதி மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்த காலம் ஆகும்.  இந்தப் பகுதியை அவனால் நியமிக்கப்பட்ட குறுநில மன்னன் ஒருவன் ஆண்டு கொண்டிருந்தான். மழை இல்லை என்பதால் பூமி வறண்டு, எதுவுமே விளையாமல் போயிற்று . எத்தனை யாகம் செய்தும் மழை பொழியவில்லை. பஞ்சத்தினால் நாடே தவிக்க, என்ன செய்வது எனப் புரியாமல் போன மன்னன் தமது அரசவைக் கூட்டி பஞ்சத்தை நிவர்த்திக்க என்ன செய்யலாம் என்ற ஆலோசனையை நடத்தினார். அப்போது அவர்கள் அந்த நாட்டின் ஒரு பகுதியில் கடும் தவத்தில் அமர்ந்திருந்த காடுவெளிச் சித்தர் என்பவருடைய உதவியினால் மட்டுமே அதற்கு தக்க வழி காண முடியும் என்பதை ஜோதிட ரீதியாக அறிந்து கொண்டார்கள்.
ஆனால் தவத்தில் அமர்ந்து உள்ள முனிவருடைய தவத்தைக் கலைத்து யார் அவரை எழுப்ப இயலும் ? அவர் தவம் கலைந்து   சாபமிட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயமும் அவர்களை சூழ்ந்து கொண்டது. ஆகவே நாடு முழுவதும் மன்னனின் பரிதவிப்பையும், பஞ்ச நிலைமையையும் தண்டோரா போட்டு எடுத்துக் கூறி அந்த முனிவருடைய தவத்தைக் கலைத்து அவரை எழுப்ப யாராவது முன் வரத் தயாராக உள்ளார்களா எனக் கேட்டார்கள். ஆனால் இரண்டு மூன்று நாள் ஆகியும் அந்த செயலை செய்ய எவரும் முன்வரவில்லை.  காரணம்  பயம்.

 காடுவெளிச் சித்தர் 

அரசனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. அப்போது அகஸ்மாதாக அந்த ஊருக்கு வந்திருந்த ஒரு தேவதாசி நாட்டு நிலைமையைக் கண்டு மனம் உருகி தானே சென்று அந்த முனிவரை எழுப்பி அவர் உதவியை நாட சம்மதித்தாள். அதற்காக அவர் கோபம் கொண்டு தன்னை சபித்தாலும், தான் மக்களின் நலனுக்காக உயிர் இழக்கவும் தயாராக இருப்பதாக கூறிவிட்டு, காடுவெளிச் சித்தர் தவம் இருந்த இடத்துக்குச் சென்றாள். அந்த முனிவரை சுற்றி பல மரங்கள் எழுந்திருந்தன. அந்த மரங்களில் இருந்து அவர் கைகளில் விழும் சில பழங்களை மட்டும் ஒரு நாளைக்கு ஒரு வேளை, இருவேளை என அவருடைய நீண்டு இருந்தக் கைகள்  வாய் வரை கொண்டு செல்ல அவற்றை அவர் உண்டு வாழ்ந்து வருவதைக் கண்டாள். ஆனால் அவருடைய  கண்கள் விழிக்கவோ, வாய் பேசவோ, சுற்றிலும் நடப்பதை உணரவோ இல்லை. ஒரு இறந்த சடலம் போல தவத்தில் இருந்தவர் உண்டதெல்லாம் மரங்களில் இருந்து விழுந்த பழங்கள் மட்டுமே. அவர் முன்னால் சென்று பலவகையான பாடல்களைப் பாடியும், ஆடியும் அவர் தவத்தை கலைக்க முயன்ற தேவதாசி தனது செயல்களில் தோல்வியையே கண்டாள் .
ஆகவே அவள் வேறு வழியைக் கையாள முடிவு செய்தாள். மரங்களில் இருந்து சில பழங்களைப் பறித்தாள். அவற்றை வெட்டி அவற்றுக்குள் உப்பும் காரமும் சேர்த்து அவர் கைகளில் போட்டாள். சில நாட்கள் கழிந்தன. உப்பும், காரமும் தவத்திலோ அமர்ந்து இருந்தவருடைய  உடலில் சேர நாக்கு ருசியை சுவைக்க ஆரம்பித்தது. ஒருநாள் அவர்  கையில் தேவதாசி வேண்டும் என்றே உப்பும், காரமும் கலக்காமல் வைத்தப் பழத்தின் சுவை பிடிக்காமல் அவர் கண்கள் தாமாகத் திறந்து கொண்டதும், அதையே எதிர்பார்த்து காத்திருந்த தேவதாசியும் நடந்த அனைத்தையும் கூறி, அவர் தவத்தைக் கலைத்த தன்னை மன்னித்து விடுமாறும், மடிந்து கொண்டு இருக்கும்  மக்களை காக்க அவர் உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தாள். கண் விழித்த முனிவரும் அவள் கூறியதைக் கேட்டப் பின் அவள் மீது கோபப்படாமல் அவளை வாழ்த்தினார். ஆவலுடன் அரண்மனைக்குச் சென்று அரசனை சந்தித்தார். அந்த ஊரில் ஒரு சின்ன சிவன் ஆலயத்தை நிறுவி அங்கு தங்கி அதைப் பூஜிக்கலானார். ஒரு சில நாளிலேயே கடும் மழைப் பொழிந்தது. நாட்டில் பஞ்சம் விலகத் துவங்கியது.
ஆகவே அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட ஆலயத்தில் பெரும் விழா ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். விழாவும் துவங்கியது. அந்த விழாவில் ஆடல்கள், பாடல்கள் நடைபெற்றன. அப்போது அந்த விழாவின் நாட்டிய நிகழ்ச்சியில் காடுவெளிச் சித்தரை தவத்தைக் கலைத்து அழைத்து வந்த தேவதாசியும் நடனம் ஆடிக் கொண்டு இருந்தபோது அவள் கால்களில் இருந்த ஒரு சலங்கை அறுந்து  விழுந்தது.

 தேவதாசி நடனம் 

அதை எடுத்துக் கொண்டு போய் அவள் கால்களில் மாட்டி விட்ட முனிவரின் செய்கையைக் கண்டு அங்கு கூடி இருந்தவர்கள் கேலி செய்தார்கள். அதைக் கண்ட அந்த சித்தர் கோபம் அடைந்து இறைவனை நோக்கிப் பாடத் துவங்க, தனது பக்தனுக்கு நேர்ந்த கதியைக் கண்டு கொதித்துப் போன சிவபெருமானின் ரூபமான சிவலிங்கத்தின் தலை மூன்று பகுதிகளாக வெடித்துச் சிதறியது. அதைக் கண்ட அனைவரும் பயந்து ஓடினார்கள். அங்கு ஓடோடி வந்த மன்னன் முனிவரிடம் தனது மக்களின் அறியாமையினால் நிகழ்ந்த அவமானத்துக்கு தானே மன்னிப்புக் கோரி சிவலிங்கத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டுகோள் விடுத்தார். அதைக் கேட்ட முனிவரும் சினம் தணிந்து மீண்டும் ஒரு பாடலைப் பாட அந்த வெடித்துச் சிதறிய சிவலிங்கத்தின் தலை மீண்டும் ஒன்றாகியது. அதன் மீது அவரே செப்புத் தகட்டை வைத்து பந்தனம் செய்தார். ஆகவே இன்றும் அங்குள்ள சிவலிங்கத்தில் தலையில் வெடித்த இடத்தின் தழும்புகள் உள்ளன. அதன் பின் அந்த இடத்திலேயே அந்த சிவலிங்கத்திற்கு ஒரு ஆலயம் எழுப்பினார்கள். நாடும் செழிப்புற்றது. மாகாளத்தில் இப்படியாக காடுவெளிச்  சித்தரால் உருவான சிவன் ஆலயமே தென் இந்தியாவின் மாகாளீஸ்வரர்  ஆலயம் எனப்படுகிறது.

Birth of Vishnu Sahasranamam

$
0
0
விஷ்ணு சஹஸ்ரநாமம் 
பிறந்த கதை
சாந்திப்பிரியா


பெரும்பாலான ஆஸ்தீக பக்தர்கள் பெரிதும் போற்றிப் படிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது. பூஜையே செய்யாமல் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு அதை தினமும் ஸ்தோத்திரம் செய்வதின் மூலம் அவரை தினமும் ஆயிரம் முறை பூஜித்தற்கான  பலனைத் தரும் என்பார்கள். சஹஸ்ர என்றால் ஆயிரம் என்று அர்த்தம். ஆகவேதான் ஆயிரம் நாமங்களைக் கொண்ட இதன் பெயர் சஹஸ்ரநாமம் என்றாயிற்று. இந்த உலகில் லலிதா சஹஸ்ரநாமம், கணேச சகஸ்ரநாமம், லஷ்மி சகஸ்ரநாமம், நரசிம்ஹ சகஸ்ரநாமம் மற்றும் சுதர்சன சகஸ்ரநாமம் போன்ற சக்தி வாய்ந்த மந்திர நாம தோத்ராவளிகள் பலவும் இருந்தால் கூட சஹஸ்ரநாமம் என்றாலே எவருக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமமே மனதில் எழும் கூறுவார்கள். 
இந்த நாமாவளியே அத்தனை சக்தி வாய்ந்தது என்பதான நம்பிக்கை இன்றல்ல, பல ஆயிரம் வருடங்களாகவே இருந்துள்ளது என்பதின் காரணம் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் மகாபாரதத்துக்கும் நெருங்கிய சம்மந்தம் உள்ளது.  சரியாகக் கூறினால் இந்த சஹாஸ்ரனாமத்தை சனக குமாரர்களில் ஒருவரே பிதா மகனான பீஷ்மருக்கு உபதேசித்ததாகவும், பீஷ்மர் மூலமே இது மகாபாரத யுத்த முடிவில் அனைவருக்கும் தெரியக் காரணமாக இருந்தது என்பதுமே சரியானதாகும். ஆனால் இந்த சஹாஸ்ரனாமத்தை எழுத்து வடிவில் முதலில் படைத்தது வேத வியாசர் ஆகும். வேத வியாசரே மகாபாரதத்தை எழுதியவர்.


ஆமாம் விஷ்ணு சஹஸ்ரநாமம் தோன்றியது எப்படி என்கிறீர்களா? அதன் கதை இது. மகாபாரத யுத்தம் முடிந்தது. தர்மத்தை அழித்து வெற்றி அடைய நினைத்த துரியோதனின் சகோதரர்கள் மரணம் அடைந்து விட்டார்கள். கங்கா தேவி பெற்றெடுத்த மாபெரும் புனிதரான பீஷ்மர் அர்ஜுனனின் அம்புக்கு இரையாகி மரணப் படுக்கையில் கிடக்கிறார். அவர் உத்ராயண காலத்தில் மட்டுமே தான் மரணம் அடைய வேண்டும் என்று விரும்பியதினால்  அர்ஜுனன் அவருக்கு அம்பினால் ஒரு படுக்கையை அமைத்துக் கொடுக்க அவர் அதில் படுத்துக் கிடக்கிறார். ஆனால் அதே நேரத்தில் ராஜ்ய பதவியில் அமர்ந்து கொண்டிருந்த யுதிஷ்டருக்கு மனதில் அமைதி இல்லை. நடந்து முடிந்திருந்த யுத்தத்தில் தமது உற்றார் உறவினர்களை, நண்பர்களை, நாட்டு மக்களை என அனைவரையும் இழந்து விட்டு பதவியில் அமர்ந்திருக்கிறோமே என்ற மன உறுத்தலால் அவர் அமைதி இல்லாமல் இருந்தார். இரண்டாவது நாளில் உடனடியாக  கிருஷ்ணரை தேடிச் சென்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறார். 'பரமாத்மா, என்னால்  அமைதியாக இருக்க முடியவில்லையே. எனக்கு மன அமைதி கிடைக்க நீதான் ஒரு வழியைக் கூற வேண்டும். உன்னை விட்டால் எனக்கு வேறு நாதியே இல்லையே கண்ணா....எனக்கு மன அமைதியைத் தர ஒரு வழியைக் கூறு' என்று துக்கம் தாங்காமல் அழுதார்.
அதைக் கேட்ட கிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டரிடம் கூறினார் ' யுதிஷ்டிரா, நீ   படும் அவஸ்தையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதற்கு என்னால் விடை தர முடியாது. ஆகவே நினைத்த நேரத்தில் தன் உடலைத் துறந்து விட்டு மேலுலகம் செல்லக் கூடிய சக்தி பெற்றவரான பீஷ்மரிடம் சென்று அவரிடம் ஏதாவது உபாயம் உள்ளதா என்று கேட்போம். அவரே இதற்கான விடையைக் கொடுக்க முடியும் என்பதின் காரணம் அனைத்து தர்ம சூத்திரங்களையும் அறிந்துள்ள அவர் இதற்கான வழி முறையையும் அறிந்துள்ளார். ஆகவே மரணப் படுக்கையில் உத்திராயண காலத்தை எதிர்பார்த்து தனது ஆத்மாவை வெளியில் எடுத்துச் செல்லக் காத்திருக்கும் அவர் அதை செய்யும் முன்னர் அவரிடம் செல்லலாம் வா...' என யுதிஷ்டரை அழைத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட யுதிஷ்டரும் கண்ணனுடன் மரணப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மரிடம் சென்றார். கிருஷ்ணருடன் கிளம்பியவர்களில் வியாச முனிவரும் இருந்தார்.  அவர்கள் அனைவரும்  ஒரு சேர தன்னிடம் வந்ததும், அவர்கள் வந்தக் காரணத்தை கேட்ட பீஷ்மர் விரக்தியால் சிரித்தார். 'சரி யுதிஷ்டிரா என்ன சந்தேகம், கேள்' என்று யுதிஷ்டரிடம் பீஷ்மர் கேட்க யுதிஷ்டரும் ' பிதா மகனே, நடந்தது நடந்து முடிந்து விட்டது. ஆனாலும் நான் மன அமைதி இன்றி தவிக்கிறேன். நான் எனக்கு மன அமைதி கிடைக்க வழி தேடி வந்துள்ளேன். ஆகவே எனக்குள்ள சில சந்தேகங்களை நீங்கள் விளக்க வேண்டும்.  தெய்வங்களிலேயே உயர்வான தெய்வம் எது?  எந்த தெய்வத்தை வேண்டுவதின் மூலம் வாழ்வில் மன அமைதி கிடைத்து மனிதர் மகிழ்ச்சியோடு இருக்க முடியும்? பிறப்பு எனும் இந்த பிறவிக் கடலை விட்டு விலக நான் யாரை வணங்கித் துதிக்க வேண்டும்? ஒவ்வொருவருடைய பிரார்த்தனையும் சென்றடையும் முடிவான இடம்தான் எது என்பது தெரிந்தால் நானும் அதை செய்ய விரும்புகிறேன். இவையே என் சந்தேகங்கள். தயவு செய்து இவற்றை நீங்கள் விளக்க முடியுமா? ' என்று கேட்டார்.
பீஷ்மரோ கண்ணனைப் பார்த்துக் கூறினார் ' என்ன கண்ணா, இன்னமும் உன் திருவிளையாடல் ஓயவில்லையா? உன்னை சாரதியாக்கிக் கொண்டு மகாபாரத யுத்தத்தை நடத்தி முடித்து விட்டாய். எவை எல்லாம் நடக்க வேண்டுமோ அவை அனைத்தையும் சப்தம் இன்றி திறமையாக செய்து காட்டி விட்டாய். நீயே தெய்வம் என்பதை நிரூபித்தப் பின்னரும் அதை அறிந்து கொள்ளாத பாண்டவ சகோதரர்களை இந்த சாமான்யனிடம் ஏன் அழைத்து வந்தாய்? உன்னால் முடியாத காரியமும் உள்ளதா? ஆனாலும் நீ எதோ ஒரு காரணத்துக்காக என்னிடம் இவர்களை அழைத்து வந்துள்ளாய். அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி நீயும் எனக்கு மோட்ஷத்துக்கு வழிகாட்ட வந்துள்ளதற்கு நான் உனக்கு நன்றி கூறியே ஆக வேண்டும்' என்று கூறிய பின் யுதிஷ்டரைப் பார்த்துக் கூறலானார்.
 'யுதிஷ்டிரா இந்த பிரபஞ்சத்தில் பராசக்தியினால் படைக்கப்பட்ட மகா விஷ்ணுவே கடவுட்களுக்கு எல்லாம்  கடவுளாக விளங்குகிறார். அவருக்கு ஆயிரம் நாமகரணங்கள் உண்டு . அந்த நாமத்தை எவன் உச்சரித்து அவரை வணங்குவானோ அவனுக்கே மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். ஆத்மாவில் ஏற்படும் துக்கங்கள் அனைத்தும் விலகி ஓடும். இந்த உலகத்தை முற்றிலும் அறிந்தவர் முதலும் முடிவுமாக உள்ள அவரே. அவரே அனைத்து துக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவருடைய நாமத்தை எவன் ஒருவன் தொடர்ந்து நிலையான மனதுடன் பூஜிப்பானோ அவன் அனைத்து விசனங்களில் இருந்தும் விடுபடுவான்.  இந்த உலகுக்கு ஒளி கொடுக்கும் சூரியனைப் போல அவரை பூஜிப்பவர்களின் மனதிற்கும் இதயத்திற்கும் அமைதி எனும் ஒளியைக் கொடுப்பார். புனிதம் என்றாலே விஷ்ணு என்று அர்த்தம் தரும் வகையில் உள்ள புனிதமானக் கடவுள் அவர்.  ஆகவே முதன்மைக் கடவுளான விஷ்ணுவை ஆயிரம் நாமங்களைக் கொண்டு பூஜிப்பதின் மூலமே மன பயத்தில் இருந்தும் இதய பயத்தில் இருந்தும் விடுதலைக் கிடைக்கும்'


இப்படிக் கூறியபின் பீஷ்மர்  விஷ்ணு சஹாஸ்ரனாமாவளியில் வரும் ஆயிரம் நாமாக்களையும்  மற்றும் அவற்றின் அர்த்தங்களையும், அவற்றின் பலன்களையும்  யுதிஷ்டருக்குக் போதித்தார். அப்படி பீஷ்மர் வாய் வழியே  உபதேசித்த விஷ்ணு சஹாஸ்ரனாமத்தையே  மகாபாரதத்தை  வெகு காலத்துக்குப் பின்னர்  படைத்த வேத வியாசர் எழுத்து வடிவில் தந்தார் என்பது நம்பிக்கை.
இந்த உலகைக் காக்க விஷ்ணுவின் பத்து அவதாரங்களை எடுக்க வைத்த பராசக்தி விஷ்ணு அவதாரத்தின் மகிமையை அவருடைய ஒரு அவதாரத்தின் மூலமே வெளிப்படுத்த வேண்டும் என விரும்பி அதை மகாபாரத யுத்த முடிவில் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் மூலம் உலகிற்கு வெளிக் கொண்டு வந்தாள்  என்பதினால்தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமை இன்னும் கூடுகிறது.  இதன் மூலம் ஹரியும் சிவனும் ஒருவரே என்ற தத்துவம் மேலும் வலுப்பெறுகிறது.

 வேத வியாசரும் ஆதி சங்கரரும் 

இந்த சஹஸ்ரநாமத்தின் பெருமை பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரர் மூலம் உலகிற்குப் மேலும் பரவியது என்பதும் உண்மை ஆகும். ஏன் என்றால் அந்த பராசக்தியான அம்பிகைதான் அவருக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முக்கியத்துவத்தை அறிய வைத்தாள். பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரருக்கும் இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இந்த கதையை  படியுங்கள். ஒருமுறை பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரர் காஷ்மீரத்தில் தங்கி இருந்தபோது (காஷ்மீரத்தில் பகவத் பாதாள் ஸ்ரீ ஆதி சங்கரரின் ஆலயம் கூட உள்ளது) அவர் லலிதாம்பிகையின் சஹஸ்ரனாமாவளிக்கு ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என விரும்பினார். லலிதா சஹஸ்ரநாமம் என்பது ஹயக்ரீவர், மகாவிஷ்ணு மற்றும் அகஸ்திய முனிவர்களுக்கு இடையே ஏற்பட்ட சம்பாஷணை மூலம் படைக்கப்பட்டது என்று பிருமாண்ட புராணம் மூலம் அறியப்படுகிறது.
பண்டாசுரனை அழிப்பதற்காக அவதரித்த லலிதாம்பிகை அவனை வதம் செய்தப் பின் ஆனந்தமாக ஸ்ரீபுரம் எனும் தனது இருப்பிடத்தில் அமர்ந்திருந்தபோது அங்கு அவளால்  படைக்கப்பட்டு  இருந்த வசினி என்னும் தேவதையின் தலைமையில் இருந்த வாக்தேவிகள் ஸ்ரீ சக்கிரத்தில் அமர்ந்திருந்த லலிதாம்பிகையின் புகழை மந்திரங்களின் வாயிலாகப் பாடுகின்றனர். லலிதாம்பிகையின்  வாயில் இருந்து வெளிவந்த  வாசினிகள் என்ற தேவதைகள் துதித்த நாமாவளியே  லலிதா சஹஸ்ரநாமம் ஆயிற்று எனக் கூறுகிறார்கள். அந்த நாமாவளியை வாக்தேவதைகள் லலிதாம்பிகையின் பெருமையை ஆயிரம் பெயர்களைக் கூறி அவளை ஆராதிக்கும் விதத்தில் அமைத்து இருந்ததினால் அதை ரகஸ்ய நாமாவளி என்றும் அதை உச்சரித்து தேவியை வழிபடுவது பல பலன்களை தரும் என்பார்கள். உண்மையில் பார்வதியே  அந்த இடத்தில் சாந்தநாயகியான லலிதாம்பிகை என்ற ரூபத்தில் இருந்தாள். அந்த  இடத்தில் அகஸ்திய முனிவரும் வந்து லலிதா நவரத்னமாலா எனும் பாடலை தானே இயற்றிப் பாடினாராம்.
ஆகவேதான் அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அந்த நாமாவளிக்கு அர்த்தம் தரும் ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என காஷ்மீரத்தில் அப்போது தற்காலிகமாகத் தங்கி இருந்த ஸ்ரீ ஆதிசங்கரர் விரும்பினார். அவர் தமது சீடரை அழைத்து அங்கிருந்த புத்தகசாலையில் ( லைப்ரரி) சென்று தேவி நாமாவளியை எடுத்து வருமாறுக் கூறினார். சீடர் அங்கு சென்று ஒரு புத்தகத்தை எடுத்து வந்தார். சீடர் எடுத்து வந்த புத்தகம் விஷ்ணுவின் ஆயிரம் நாமாவளியைக் கொண்ட புத்தகமாக இருந்தது. ஆகவே தவறாக எடுத்து வந்துவிட்ட அந்த புத்தகத்தை வைத்து விட்டு லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வருமாறு ஸ்வாமிகள் தமது சிஷ்யரிடம் கூற அவர் சிஷ்யரும் மூன்று  முறை உள்ளே சென்று புத்தகத்தைக் கொண்டு வந்தாலும் மூன்று முறையும் அவர் கொண்டு வந்த புத்தகம்  விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்ததாம்.  மீண்டும் மீண்டும் தான் கேட்டதைத் தவிர வேறு  புத்தகத்தையே ஏன் எடுத்து வருகிறாய் என சிஷ்யரிடம் ஸ்ரீ  பாகவத் பாதாள் கேட்டதும் அந்த சிஷ்யர்  கூறினாராம் ' ஸ்வாமி  என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் நான் சென்று நீங்கள் கூறிய புத்தகத்தை எடுக்க முயன்றபோது அங்கிருந்த ஒரு சிறுமி, இதுதான் நீ தேடும் அந்த புத்தகம்  என ஒரு புத்தகத்தைத்    தந்தாள். நானும் அவள் கூறியதை நம்பி  அவள் கொடுத்த புத்தகத்தை எடுத்து வர வேண்டியதாயிற்று' என்றதும் ஸ்ரீ பாகவத் பாதாளுக்கு புரிந்தது இதை செய்வது அந்த அம்பிகைதான்.  அவளால் இந்த பிரபஞ்சத்தின் நம்மைக்காக அவளால் படைக்கப்பட்ட விஷ்ணுவின் நாமத்திற்கு முதலில் பாஷ்யம் எழுத வேண்டும் என்பதினால்தான் இப்படி செய்கிறாள். அந்த உண்மையை உணர்ந்து கொண்டவர் முதலில் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதிய  பின்னரே  லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதினர். இதில் இருந்தே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமையை அறிந்து கொள்ளலாம்.

Bande Mahakali, Bangalore

$
0
0
பெங்களூர்

சாந்திப்பிரியா



பெங்களூரில் கெம்பகெளடா கோபுரம் எனும் இடத்தில் மலைப் பகுதி போன்ற பகுதியில் உள்ளது 'பண்டே மகா காளி' எனும் காளி தேவியின் ஆலயம். இந்த இடம் கவிபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ளது. இந்த ஆலயம் சுமார் 300 அல்லது 350 ஆண்டுகளுக்கு முன்பே வெளியில் தெரிந்ததாக கருதுகிறார்கள். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அது ஸ்யம்புவாகத் தோன்றி இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். இதைக் கட்டியவர் யார், மற்றும் இதன் வரலாறு என்ன என்பது குறித்து சரியான விவரம் தெரியவில்லை. மலைப்பாங்கான பகுதியில் ஒரு பெரிய பாறையில் காளி தேவியின் சிலை காணப்படுகிறது. அங்கொரு ஆலயத்தை நிறுவி அதற்குள் பாறையில் காணப்படும் அந்த காளி தேவியின் சிலை இருக்குமாறு சிறு சன்னதியாகக் கட்டி உள்ளார்கள். அந்த சன்னதிக்கு செல்ல படிகள் ஏறிப் போக வேண்டும். அந்த சன்னதியை சுற்றி வேறு பல தெய்வ சன்னதிகள் உள்ளன.
இந்த காளியின் ஆலயத்துக்கு எதிரில் வீரபத்திர ஸ்வாமி ஆலயம் உள்ளது. அவரை பிரளயகால வீரபத்திரர் என்கிறார்கள். இந்த ஆலயம் ராஜராஜ சோழனின் காலத்து ஆலயம் என்கிறார்கள். மேலும் அங்குள்ள வீர பத்திரர் பிரளய காலத்தில் சுயம்புவாக அங்கு எழுந்தவராம். ஆனாலும் இந்த ஆலய வரலாறு குறித்தும் சரியான தகவல் கிடைக்கவில்லை.

வீரபத்ரர் 

வீரபத்திரர் சிவபெருமானின் அவதாரம் ஆகும். காளியும் சிவபெருமானால் படைக்கப்பட்டவள். சாதாரணமாகவே சிவபெருமானுக்கு காவலாக நிற்பவள் காளி என்பார்கள்.  ஆகவே வீரபத்திரர் ஆலயத்துக்கு  எதிரில் அமைந்துள்ள இந்தாள் காளியின் ஆலயம் சிவபெருமானுக்குக் காவலாக நிர்ப்பவள் காளி என்ற தத்துவத்துக்கு  மிகப் பொருத்தமாகவே உள்ளது.  
இந்த ஆலய காளியின் விசேஷம் என்ன என்றால், ஆலயத்தில் உள்ள காளி சிலையின் கால்களைத் தொட்டு வணங்கும்போது அந்த காளி தேவியின் உருவத்தின் மீது சிறிய சொம்பினால் நீரை ஊற்ற, சிலை மீது ஊற்றப்படும் தண்ணீர் சிலை மீது இருந்து நம் தலையில் தெறித்து விழுகிறது. அதையே காளி தேவி நம் மீது தண்ணீர் தெளித்து ஆசிர்வதிப்பதைப் போலக் கருதுகிறார்கள். தை மாத வெள்ளிக் கிழமையில் கூட்டம் அலை மோதுகிறது. நீண்ட வரிசையில் நிற்க வேண்டி உள்ளது. அதைத் தவிர இருபது ரூபாய் கொடுத்து விசேஷ வாயில் மூலமும் செல்லலாம் என்றாலும் இரண்டிலும் கூட்டம் குறைவே இல்லை. திருப்பதி ஆலயத்தில் உள்ளதைப் போலவே ஜலகண்டி தரிசனமே கிடைக்கின்றது. ஆகவே நிதானமாக காளி தேவியை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றால் வெள்ளிக் கிழமையை தவிர்த்து பிற நாட்களில் சென்று தரிசனம் செய்யலாம். 
இந்தக் காளியின் இன்னொரு மகிமை  என்ன என்றால் தோஷங்களினால் பீடிக்கப்பட்டவர்கள், நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டு குணமடைய முடியாதவர்கள், பில்லி சூனியம் போன்ற தீமைகளினால் பீடிக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து இங்குள்ள காளியை வழிபட்டால் அவை விலகும் என்பது நம்பிக்கை. கவிபுரத்தில் பல பிரபலமான ஆலயங்கள் - புல் டெம்ப்ள் எனப்படும் மிகப் பெரிய நந்தியின் ஆலயம், பவானி தேவி மற்றும் வீரபத்ரர் ஆலயம்- போன்றவை உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ளது இந்த ஆலயமும்.

 பகவான்  ஜீவீஸ்வர் 
'பண்டே மகா காளி' ஆலயத்தை ஸ்வகுலசாலி எனும் ஒரு பிரிவினர் சஹாஸ்ரார்ஜுன ஷத்ரியா எனும் பிரிவினருடன் சேர்த்து பூஜைகள் செய்து நிர்வாகித்து வருகிறார்கள். ஸ்வகுலசாலி என்பவர்களின் பகவான் ஜீவீஸ்வராவை வழிபடுபவர்கள். பகவான்  ஜீவீஸ்வர் யார்? அவரைக் குறித்துக் கூறப்படும் கதை இது. ஒரு முறை ஆதிமாயா எனும் பராசக்தி சிவபெருமானிடம் பேசிக் கொண்டு இருந்தபோது அவரிடம் அற்புதமான துணிகளை உற்பத்தி செய்யும் புண்ணிய புருஷனைப் படைக்குமாறு கேட்டுக் கொண்டபோது அவர் ஸ்ராவண மாதத்தில் திரியோதிசி நாளில் தனது நாக்கில் இருந்து ஒரு புண்ணிய புருஷனைப் படைத்தார். அவருக்கு கைலாயத்தில் மிக சிறப்பாக ஒரு விழா எடுத்து அவருக்கு சாலி என்ற பெயரை சூட்டினார். அதன் பிறகு பார்வதியும் தன் பங்கிற்கு அவரை வணங்குபவர்கள் ஸ்வகுலா என அழைக்கப்படுவார்கள் என்று கூறினார். அதன் பின் அவரை சிவனின் நாக்கில் இருந்து வெளிவந்தவர் என்பதினால் நாக்கு என்பதை குறிக்கும் சொல்லான ஜீவி என்பதை முன் நிறுத்தி அவரை பூமிக்கு ஜீவீஸ்வரா எனும் பெயரில் அனுப்பி அவருடன் காசிக்கு வந்து அவரை சந்நியாசி ஆக்கி விட்டுச் சென்றார்கள். அவரே காலபைரவர் ஆனார். இப்படியாக வந்தவரே ஜீவிஸ்வரா எனும் பகவான். அவரை ஏற்று அவர் வழியில் வந்த சந்ததியினர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டார்கள். அவர்கள் ஸ்வகுலாசாலி என அழைக்கப்பட்டார்கள்.

Siva (Vishnu) Temple, Thiru Marperu

$
0
0

சாந்திப்பிரியா

ஒருமுறை நாரத முனிவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. பக்தி என்பதின் உண்மையான விளக்கம் என்ன? ஆகவே அவர் திருமாலிடம் சென்று அதற்கான விளக்கத்தைக் கேட்டார். திருமாலோ எதை எதையோ கூறியும் நாரதருக்கு திருப்தி ஏற்படவில்லைஎன்பதினால் திருமால் அவரை சிவபெருமானிடம் சென்று அதற்கான விளக்கத்தைக் கேட்குமாறுக் கூறினார். நாரதரும் சிவபெருமானிடம் சென்று உண்மையான பக்தி என்பதின் விளக்கத்தைக் கேட்க அவர் நாரதரிடம் சில நாட்கள் பூலோகத்துக்குச் சென்று ஆயிரம் ஆலயங்களில் தரிசனம் செய்தப் பின் தன்னிடம் வந்தால் அதற்கான விளக்கத்தைக் கூறுவதாகக் கூறினார்.
சிவபெருமான் கூறியபடி நாரதரும் மனித உருவை எடுத்து பூமிக்குச் சென்று பல இடங்களிலும் இருந்த விஷ்ணு மற்றும் சிவஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்தப் பின் கடைசியாக காஞ்சீபுரத்தின் அருகில் காஞ்சீபுரம் மற்றும் அரக்கோணத்துக்கு இடையே உள்ள  திருமாற்பேறு என்ற ஆலயம் உள்ள இடத்தை அடைந்தார். அங்கு இருந்த மிகச் சிறிய ஆலயத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன் எதிரில் லிங்கத்தை வணங்கிய நிலையில் விஷ்ணுவின் ஒரு சிலையும் இருந்தது. அதைக் கண்ட நாரதருக்கு வியப்பாக இருந்தது. சிவலிங்கத்தை வணங்கிய நிலையில் இருந்த விஷ்ணுவின் சிலையைக் கண்ட நாரதருக்கு அந்த ஆலயம் விஷ்ணுவின் தலமா இல்லை சிவஸ்தலமா என்ற சந்தேகம் இழுந்தது. ஆகவே அங்கிருந்த பண்டிதரிடம் அவர் இது சிவன் ஆலயமா இல்லை விஷ்ணுவின் ஆலயமா என்று கேட்க அந்த பண்டிதரும் இது விஷ்ணுவின் ஆலயமே என்று கூறினார். அதைக் கேட்ட நாரதருக்கும் இன்னும் அதிக ஆச்சர்யம் எழுந்தது. அப்படி என்றால் இங்கு மூலவராக விஷ்ணு இல்லையே . அதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது அங்கிருந்த அர்ச்சகர் அவருக்கு ஒரு புராணக் கதையைக் கூறினார்.


''முன் ஒரு காலத்தில் குபன் என்ற ஒரு மன்னன் ததீசி எனும் தவ வலிமை மிக்க முனிவருடன் போர் செய்ய வேண்டி இருந்தது. அந்த மன்னன் விஷ்ணுவின் பக்தன். ஆகவே அவனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஷ்ணு பகவான் அவனுக்கு ஆதரவாக தானும் ததீசி முனிவருக்கு எதிராக போரில் இறங்கினார். போரில் முனிவர் மீது தனது சக்ராயுதத்தை ஏவிய விஷ்ணுவின் சக்ராயுதம் ததீசி முனிவரின் தவ வலிமையினால் முனை மழுங்கிப் போயிற்று. ஆகவே தனது ஒரே சக்தி வாய்ந்த ஆயுதமான சக்ராயுதமே முனை மழுங்கி விட்டதை கண்டு கவலையடைந்த திருமால் என்ன செய்வதென்று தெரியாமல் தேவர்களுடன் ஆலோசனை செய்தார். அவர்கள் அறிவுறுத்தியபடி அவர் சலந்தராசூரன் எனும் கொடியவனை அழிக்க தான் உண்டாக்கிய சுதர்சன சக்கரம் அப்போது சிவபெருமானிடம் உள்ளதை அறிந்து கொண்டதும், அதை மீண்டும் சிவபெருமானிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக சிவபெருமானை துதித்து பூஜை செய்ய முடிவு செய்து, அந்த பூஜையை செய்ய தகுதியான சக்தி வாய்ந்த தலத்தை தேடி அலைந்து முடிவாக பார்வதி தேவி பூஜித்து வணங்கிய சிவபெருமானின் தலமான மாற்பேறு எனும் இந்த தலத்தை வந்தடைந்தார்.
இத்தலம் வந்து பார்வதி பூஜித்த அதே லிங்கத்தை தினமும் ஆயிரம் தாமரை மலர் தூவி பூஜை செய்தார். இப்படியாக விஷ்ணு சிவனை நோக்கி பூஜித்தவாறு இருந்தபோது ஒருநாள் அவரை சோதிக்க எண்ணினார் ஈசன். வேண்டும் என்றே ஒருநாள் விஷ்ணு கொண்டு வந்து இருந்த ஆயிரம் தாமரை மலர்களில் ஒரு மலரை மாயமாக மறைய வைத்து விட்டார். 999 பூக்களால் அர்ச்சனை செய்தாகி விட்டப் பின்னர் கடைசி மந்திரத்தை உச்சரித்து போட தாமரை இல்லை. சற்றே அதிர்ச்சி அடைந்தாலும் விஷ்ணு மனம் தளரவில்லை. நேரத்தை வீணடிக்க விரும்பாமல் திருமால் தனது ஒரு கண்ணை பிடுங்கி அதையே தாமரை மலராக பாவிக்குமாறு கூறியவாறு சிவனுக்கு அர்ச்சனை செய்ய அவர் பக்தியைக் கண்டு சிவபெருமான் வியந்தார். தெய்வமாகவே இருந்தாலும், தன்னை பூஜிக்கையில் தனது பக்தியைக் நிலை நாட்ட தனது கண்ணையே கொண்டு பூஜித்ததைக் கண்டு மகிழ்ந்து போன சிவனார் திருமாலின் கண்களை மேலும் அழகிய கண்ணாக இருக்குமாறு அருளி சக்கிராயுததையும் அவருக்கு தந்ததும் அல்லாமல் இனி அந்த தலத்தில் உள்ள விஷ்ணு செந்தாமரைக் கண்ணனார் அதாவது அழகிய தாமரை மலர் கண்ணைக் கொண்டவர் என அழைக்கப்படுவார் என்றும் அருள் புரிந்தார். திருமால் சிவபெருமானை வழிபட்டு சக்கிராயுததைப் பெற்றதினால் இதை ஹரிசக்ரபுரம் என்றும் கூறுவார்கள்.  ஆகவே உண்மையான பக்திக்கு ஒரு சான்றாக உள்ள தலம் இது ''என்று பண்டிதர் கூறவும், அதைக் கேட்ட நாரதர் பக்திக்கு அடையாளம் அந்த தலத்தில் உள்ள விஷ்ணுவே என்பதை புரிந்து கொண்டு உடனடியாக கிளம்பி மேலுலகம் சென்றார்.
இந்த ஆலயத்தின் வரலாற்றைப் போலவே தஞ்சை மாவட்டத்தின்  கும்பகோணத்தில் இருந்து  பூந்தோட்டம் செல்லும் வழியில் உள்ள திருவிழிமிழலை நேத்ரபாணேஸ்வரர்  ஆலய வரலாறும் உள்ளதினால் சிவபெருமானுக்கு தன் கண்ணைக் கொண்டு விஷ்ணு பகவான் பூஜை செய்த இடங்கள் இரண்டாக இருந்துள்ளது என்பது தெரிகிறது.  இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த திருமாற்பேறு எனும் ஆலயம் மணிகண்டேஸ்வரர் ஆலயம் என்றும் தயை புரிந்ததினால் தயாநீஸ்வரர் ஆலயம் என்றும் சிலரால் கூறப்படுகிறது.  மேலும் இங்குள்ள ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை பார்வதியே மணலைக் கொண்டு கட்டியதினால் அது சிதைந்து  விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த சிவா லிங்கத்துக்கு தண்ணீர் ஊற்றீ அர்ச்சனை செய்யும்போது, அதன் மீது தண்ணீர் விழக் கூடாது என்பதற்காக அந்த லிங்கத்தின் தலை மீது  ஒரு தாமிர பாத்திரத்தைக் கொண்டு மூடி அர்ச்சனை செய்கிறார்களாம்.
அப்பர் மற்றும் சம்மந்தரினால்  பாடப்பட்ட  இந்த ஆலயம்  சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ளது. ஆலயத்தின் வயது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் என இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த ஆலயத்தில் விஷ்ணு பெருமான் சிவனை துதித்த அந்த ஆயிரம் நாமங்களைக் கொண்டு பூசிப்பவர்கள் முக்தி பெறுவார்கள். அவர்களது எதிரிகள் அழிவார்கள். இந்த ஆலயம் சிவன் ஆலயமே என்றாலும், இதை பெருமாளின் ஆலயமாகவே கருதுகிறார்கள். அதனால்தான் இங்கு வருடாந்திர பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை நடக்கிறது. இந்த ஆலயத்துக்கு நேரடியாகச் செல்ல காஞ்சீபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. அரக்கோணத்தில் இருந்தும் அங்கு செல்லலாம்.

ஆலய விலாசம்  

அருள் மிகு திரு மணிகண்டேஸ்வரர் ஆலயம், 
திருமால்பூர் -அஞ்சல்,
அரக்கோணம் வட்டம், 
(காஞ்சீபுரம் வழி)
வேலூர் மாவட்டம்,
பின் : - 631 053

Naguleswara Puranam - 1

$
0
0



சாந்திப்பிரியா 


பாகம்-1

ஒரு காலத்தில் ஆசியாவின் பகுதியான இந்தியாவும் இலங்கையும் ஒன்று சேர்ந்த ஒரே பூமிப் பிரதேசமாக இருந்துள்ளது என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது. அந்த பிரதேசத்தில் பல இடங்களிலும் பல மேன்மையான ஆலயங்கள் இருந்துள்ளன. ஆனால் காலப்போக்கில் இரண்டு பூமிகளும் கடலினால் பிளக்கப்பட்டு தனி பூமிகள் ஆகி விட்டதினால் அன்று இருந்த மேன்மையான ஆலயங்கள் இரு பூமியிலும் அங்காங்கே தங்கி விட்டன. அவற்றின் பலவற்றின் விவரம் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அவற்றில் சில இந்த வெளி உலகில் அதிகம் தெரியப்படாமல் உள்ளது. அதில் சில தொன்மை வாய்ந்த ஆலயங்கள் இலங்கை பூமியில் உள்ளன. அவற்றின் புராணங்கள் அற்புதமானவை, மேன்மையானவை. ஆகவேதான் நான் இப்படிப்பட்ட ஆலயங்களைத் தேடிப் பிடித்து அந்த புராண வரலாற்றை பற்றி எழுதுகிறேன். அவற்றில் ஒன்றே நகுலேஸ்வரர் புராணம். இதை நகுலேஸ்வரர் மான்மியம் என்றும் கூறுவார்கள். நகுலேஸ்வரர் மான்மியம் என்பது ஸ்ரீலங்காவில் யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள நகுலேஸ்வரர் எனும் சிவபெருமானின் ஒரு ஆலயம் பற்றிய புராணக் கதை. அதைப் படித்து மகிழுங்கள். 
ஒரு காலத்தில் நைமிசாரண்யத்தில் முனிவர்கள் அமர்ந்து இருந்தது போல அன்றும் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். அப்போது அங்கு வந்த சூதக முனிவரைப் பார்த்த மற்ற ரிஷி முனிவர்கள் '' மா முனிவரே எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது. நேற்று நாங்கள் பேசிக் கொண்டு இருக்கையில் நாரத முனிவர் இந்தப் பக்கமாக போய்க் கொண்டு இருந்தார். அவரை பார்த்த நாங்கள் ஸ்வாமி , நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டபோது அவர் தட்சிண கைலாயம் எனப்படும் நகுலேஸ்வரத்துக்கு தான் சென்று கொண்டு இருப்பதாகவும், அங்கு சென்று நகுலேஸ்வரரை வணங்கியப் பிறகு வந்து பேசுவதாகக் கூறி விட்டு அவசரமாகச் சென்று விட்டார். ஆனால் நாங்கள் யாருமே நகுலேஸ்வரர் எனும் தலத்தை பற்றிக் கேள்விப்படவே இல்லை. அது என்ன தலம்? அது எங்குள்ளது? அதன் மகிமை என்ன என்பதை விளக்குவீர்களா'' என்று கேட்டார்கள். உடனே சூதக முனிவரும் அங்கு அவர்கள் முன்பாக அமர்ந்து கொண்டு நகுலேஸ்வர தலத்தை பற்றிய மான்மியத்தைக் கூறலானார்.
'' முனிவர்களே, நீங்கள் அனைவரும் நகுலேஸ்வரத்தைப் பற்றிக் கேட்டதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இன்றுதான் உங்களுக்கும் அந்த தலத்தின் பெருமை தெரிய வேண்டும் என்று உள்ளது போலும். முதலில் நகுலேஸ்வரத்தைப் பற்றிய பெருமையைக் கூறியப் பின்னர் அது உள்ள இடத்தைக் கூறுகிறேன்.
முனிவர்களே, யாழ்ப்பாணம் என்ற இடத்தில் உள்ள மலை மீது உள்ள இந்த நகுலேஸ்வர ஆலயத்தைக் குறித்துக் கூறும் முன் அந்த ஆலயம் உள்ள யாழ்ப்பாணம் பிறந்த காரணத்தையும், அங்கு உள்ள ஆலயத்தில் நகுலன் என்ற பெயரை சிவபெருமான் தரித்துக் கொண்டதின் கதையையும் அனைவரும் கேளுங்கள்.
முன்னொரு காலத்திலே ராமனால் வதைப்பட்டு மரணம் அடைந்த இலங்கேஸ்வரன் எனும் ராவணன் இலங்கையை ஆண்டு வந்தான். பெரும் சிவபக்தனான அவன் யாழ் எனப்படும் வீணையை இசைத்து கானம் பாடி சிவபெருமானை பூஜித்தும் மகிழ்வித்தும் அவரிடம் இருந்து பல வரங்களை பெற்றிருந்தான். காலம் கடந்தது. ராமனின் மனைவி சீதையை கவர்ந்து வந்து, அதனால் ஏற்பட்ட பிரச்சனை பெரும் போராகி ராவணன் அந்த யுத்தத்தில் கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரியும். அப்போது இலங்கையில் ராவணனின் ஆட்சியில் இருந்த கந்தர்வனான சுசன்கீதன் என்பவன் நெடுநாளாகவே ராவணனின் வீணை மீது ஆசை கொண்டிருந்தான். ராவணன் யுத்தத்தில் மடிந்த சேதியைக் கேட்டவன் ராவணனின் அந்தப்புரத்துக்குப் போய் அந்த யாழ் எனும் வீணையை எடுத்து வந்து விட்டான். அதை எடுத்து வந்தவன் அப்போது பெரும் காடுகளும் மலைகளுமாக மட்டுமே இருந்த யாழ்ப்பாணத்திலே இருந்த கங்கரசாகரசங்கமம் எனும் தீர்த்தத்தில் சென்று குளித்தான். அங்கு குளித்தவன் யாழ் எனும் வீணையை எடுத்துக் கொண்டு போய் நாதத்தை மீட்டி அற்புதமான பாடல்களைப் பாடி நகுலேஸ்வரரை பூஜித்தான். அவன் இனிய கானத்தையும் மனம் உருகி செய்த தோத்திரங்களையும் கேட்ட நகுலேஸ்வரர் எனும் சிவபெருமான் அவன் முன் தோன்றி அவன் கேட்ட வரங்களை தந்ததும் அல்லாமல், அவனை யாழ்ப்பாணி அதாவது யாழ் இசைப்பவன் எனும் பெயரை தரிப்பான் என்று அருள் செய்து விட்டுப் போனார். அவர் அருள் புரிந்த சில நாட்களிலேயே அவர் கொடுத்த சக்திகளைக் கொண்டு அந்த கந்தர்வன் அந்த காடுகளையும், மலைகளையும் அழித்து ஒரு நகரை நிர்மாணிக்க பல இடங்களிலும் இருந்தும் பலரும் அங்கு வந்து தங்கலானார்கள். யாழ்ப்பாணி எனும் அவன் பெயராலேயே அந்த ஊரும் யாழ்ப்பாணம் என ஆயிற்று. இப்படியாக நகுலேஸ்வரர் எனும் ஆலயம் உள்ள இடம் யாழ்ப்பாணம் என பெயர் கொண்டது''.
இப்படியாக அந்த தலம் பிறந்தக் கதையை கூறிக் கொண்டு இருந்த சூதக முனிவர் மேலும் தொடர்ந்து கூறலானார்.
'' குலம் என்பதின் ஆன்மீக விளக்கம் சரீரம் எனப்படும். நகுலம் என்றால், அதாவது ந + குலம் = நகுலம், என்பது சரீரம் அற்றவன் என்று பொருள்படும். இந்தப் பிரபஞ்சத்தில் சரீரமே இல்லாமல் உள்ள சக்தியாக இருந்தவர் பராசக்தியின் ஒரு வடிவமான சிவபெருமான் என்பதினால் சிவபெருமானுக்கு நகுலன் என்ற பெயரும் உண்டு. அப்படிப்பட்ட சிவபெருமான் இங்கு எப்படி நகுலேஸ்வரராக வந்தார்? அதில் அகத்திய முனிவரின் பங்கு என்ன? இதையும் கேளுங்கள்''
...............தொடரும் 

Naguleswara Puranam- 2

$
0
0


சாந்திப்பிரியா 


பாகம்-2

''ராவணனின் ராஜ்யத்திலே வாழ்ந்திருந்த  யாழ்ப்பாணி எனும் கந்தர்வனின் பெயராலேயே நகுலேஸ்வரமும் யாழ்ப்பாணம் என ஆயிற்று.  அனால் அதற்கு முன்னரே அந்த பூமி புண்ணிய பூமியாக, சிவபெருமான் தங்கி இருந்த பூமியாக, சிவபெருமான் திருமணம் செய்து கொண்ட பூமியாக இருந்துள்ளது  என்பதைக் கேட்க  உங்களுக்கெல்லாம் அதிசயமாக இருக்கும். இனி அந்தக் கதையையும்  சொல்வேன். நன்கு  கேட்டு மகிழுங்கள் '' எனக் கூறிய சூதக முனிவர் அந்தக் கதையைக் கூறலானார்.
''பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு  முன்னால்  அகஸ்திய முனிவர் கதிர்காமனுக்கு வந்து அங்கு முருகப் பெருமானை வழிபட்டுக் கொண்டு இருந்தார்.  சிவபெருமானின்  திருமணக் கோலத்தை  கண்டு  களிக்க  விரும்பிய அகஸ்திய முனிவர்  சிவபெருமானின் ஆணைப்படி பூமியின் பாரத்தை சமனாக்க இந்த பூமியில் வந்து தங்கி இருந்த நேரம் அது. கதிர்காமத்தில் இருந்த  நேரத்தில் அகஸ்திய முனிவர் சிவபெருமானை வேண்டினார் 'உமாபதியே.........சங்கரா..........உமது நடன பேரிகை உலகெங்கும் உள்ள கடல் அலைகள்  ஒரே நேரத்தில் ஆர்ப்பரிக்கும் முழக்கம் போல உள்ளதே.  அப்படிப்பட்ட உனது உன் திருமணக் காட்சியை  ஆவலுடன்  கண்டு களிக்க  அல்லவா நானும் உன்னைத் தேடி அலைகிறேன்.  ஐயனே, கருணை மணாளா, எனக்கு உன் திருமணக் கோலத்தைக் காட்டி அருள் புரிவாயா?'.
பல காலம் தொடர்ந்து சிவபெருமானை வேண்டிக் கொண்டு இருந்த அகஸ்திய முனிவரின் வேண்டுகோளை  கேட்ட சிவபெருமானும் அகஸ்திய முனிவர் முன் தோன்றி அவரை   கடல் சேர்ந்த பிரதேசமான நகுலத்துக்கு வந்து தம்மை தரிசிக்குமாறும், அங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டுவதாகவும் அகஸ்திய முனிவருக்கு உறுதி தந்தார்.  அதை ஏற்றுக் கொண்ட அகஸ்திய முனிவரும் சற்றும் தாமதிக்காமல்  நகுலேஸ்வரரை நோக்கி பயணித்தார். காலம் கடந்தது.  நகுலேஸ்வரத்தை சென்றடைந்த அகஸ்தியர் அங்கு கங்கரசாகரசங்கமம்  கடலில்  குளித்துவிட்டு அதன் கரையிலேயே அமர்ந்து கொண்டு  சிவபெருமானை துதிக்கலானார்.
இன்னும் காலம் ஓடியது.  அன்று சித்ரா மாதம்,  பூச நட்சத்திரம், சோம வாரம் ஆகும். மதிய நேரத்தில் திடீரென ஆகாயத்தில் இருந்து பேரிகை முழக்கம் கேட்டது.  வானம் முழுவதும் பூமாரி பொழிந்தவண்ணம் இருக்க, எங்கெங்கு நோக்கினாலும் வானமே வண்ணமயமாக ஜொலிக்க  பவழமும், வைடூரியமும், ரத்தினக் கற்களும் பூமாரி விழுந்து கொண்டு இருந்த ஒரு பெரிய சிம்மாசனம் ஆகாசத்தில் இருந்து பூமியை நோக்கி இறங்கி வந்து கொண்டு இருந்ததை அகஸ்திய முனிவர் கண்டார்.
அந்த சிம்மாசனம் பூமிக்கு அருகில் வந்தபோதே நாதஸ்வர இசைகளும், நாத ஒலிகளும் தம்மை மயக்குவதை உணர்ந்தார். அந்த சிம்மாசனத்தை சுற்றி மறைத்தவாறு பலகோடி தேவர்களும் முனிவர்களும் வந்து கொண்டு இருந்தார்கள்.  ஆகா....அந்த காட்சியை எப்படி விவரிப்பது....அந்த காட்சியைக் காண ஆயிரம் கோடி கண்கள் அல்லவா வேண்டும்.
அடுத்து அங்கே ஒரு பெரிய திருமண மண்டபமே இறங்கி வந்திருக்க அந்த மண்டபத்திற்குள் அனைவரும் நுழைந்தார்கள்.  தேவேந்திரன் பொன்னையும் பொருளையும் வழி நெடுக தூவிக்கொண்டு வர  சிவபெருமானின் இரு புறத்திலும் பிரும்மாவும், விஷ்ணுவும் ஆடிப் பாடிக் கொண்டு வர, அவர்களுக்கு முன்னால்  ஒரு கை  தடியை தட்டிய வண்ணம் நந்தி தேவர் சென்று கொண்டு இருக்கையிலேயே, ஓரக்கண்ணால் அகஸ்திய முனிவரைக் கண்ட சிவபெருமான் அவரை உள்ளே வருமாறு செய்கை தந்ததும், அதைக் கவனித்த விஷ்ணுவும், பிரும்மனும் ' மா முனிவா....... வருக...வருக...உம் வரவு நல்வரவாக....வாரும்...உள்ளே வாரும் 'என அவரை அழைக்க ஆனந்தக் கூத்தாடியபடி  அகஸ்திய முனிவரும் அவர்களைத் தொடர்ந்து உள்ளே சென்றார்.
அடுத்த சில கணங்களில் இமயமலையின் அதிபதி அங்கு தனது மகள் பார்வதியை கைத்தாங்கலாக  அழைத்துக் கொண்டு தனது பரிவாரங்களுடன் நுழைந்தார். வேத கானங்கள் முழங்கின. அங்கு வந்த இமயவன் சிவபெருமானின் பாதங்களைத் தொட்டு வணங்கி அதற்கு  பாலும், தேனும், பன்னீரும்  ஊற்றி  அபிஷேகம் செய்தார்.   பலவண்ணப்  புஷ்பங்களை பாதத்தில் போட்டு அர்ச்சித்தார்.


அடுத்து கண்களை பறிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டு இருந்த அவர் மகள் பார்வதி தேவியை அவர் மனைவி அழைத்து வர  அவரை சிவபெருமானின் வலப்புறத்தில் நிற்க வைத்து அவர்களின் திருமணத்தை முறைப்படி துவக்கி வைத்தார்.  அங்கிருந்த பிரும்மனோ 'ஐயனே வேதகமங்கள் கூறிய திருமணக் கிரியைகளை இந்த திருக்கல்யாண வைபவத்திற்கு நான் ஓதி திருமணத்தை நடத்தி வைக்க  அடியேன் என்னை அனுமதிக்க வேண்டும்' என்று சிவபெருமானிடம் வேண்டிக் கொள்ள அதற்கும் சிவபெருமான் அன்புடன் இசைந்தார். அதற்கேற்ப வாத்ய வகைகள் முழங்க  மந்திரங்களை பிரும்மன் ஓதத் துவங்க, இமயமலை அரசனோ தனது பெண் பார்வதியின் கைகளை சிவபெருமானின் கரங்களில் ஒப்படைத்து அந்த திருமண வைபவத்தை நிறைவேற்றினார்.  அதைக் கண்டு அகத்தியர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தனது ஆசையை இந்த பூமியில் சிவபெருமான் நிறைவேற்றி உள்ளாரே என்பதைக் கண்டு பலமுறை அவரை வணங்கி எழுந்தார். அவருக்கு பூஜைகளை செய்து மகிழ்ந்தார். சிவபெருமானும் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு இருந்த சிம்மாசனத்தில் தனது மனைவியான பார்வதியுடன் அமர்ந்து கொண்டு அனைவரையும் ஆசிர்வதித்தார்.  அப்போது அவரை வணங்கிய அகஸ்தியர் சிவபெருமானை இவ்வாறாகப் புகழ்ந்து கூறினார்.  ' பரமபதியே இந்த நன்நாளில் உம் விவாகத்தை  கண்டு களித்ததினால் நான் பிறவிப் பயனை முழுமையாக அடைந்து விட்டேன். கருணாகரனே, நகுலேஸ்வரா, இந்த கங்காசாகர சமுத்திரத்தின் மகிமையையும், நகுலத்தின் மேன்மையையும் இன்றுதான் உலகிற்கு தெரிய வந்துள்ளது.  மற்றெல்லா தலத்திலும்  கிடைக்காத ஆனந்தம் இங்குதான் எமக்கெல்லாம் கிடைத்துள்ளது.  இந்த தலத்தில் நீங்கள்  இன்று வந்துள்ளது அளவில்லா மகிழ்ச்சியை அனைவருக்கும் கொடுக்கட்டும். இந்த தலம் உங்களது திருமணத்தினால் பெரும் புகழ் அடைந்துள்ளது'  என்று  கூறத் துவங்க  அதைக் கேட்டுக் கொண்டு இருந்த சிவபெருமான் புன்முறுவல் செய்து பிரும்மாவைப் பார்க்க அகஸ்தியரைப் பார்த்து பிரும்மா கூறலானார்  'அகஸ்தியா........ சிவபெருமானின் மீதான உமது பக்தியைக் கண்டு அனைவரும் மனம் மகிழ்கிறோம்.   இந்த இடம் இன்றல்ல, பல காலத்துக்கு முன்னரே சிவபெருமான் நகுலேஸ்வரராக வந்து தங்கி இருந்த இடம் ஆகும். இந்த இடம் இன்றைய மேன்மையை விட அன்றே  இன்னும் பெரும் அதிகப் பெருமைப் பெற்ற இடமாகும்.  அதற்கான காரணம்  இந்நாள்வரை ஒரு தேவ இரகசியமாகவே இருந்துள்ளது.  அந்த இரகசியத்தை அனைவருக்கும் இன்று வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. அதை இப்போது நான் கூறுகிறேன். அனைவரும் கேளுங்கள்' என்று கூறியப் பின் அந்த  ரகசியத்தை அனைவருக்கும் கூறத் துவங்கினார். அந்த ரகசியம் என்ன?
............தொடரும் 

Naguleswara Puranam - 3

$
0
0

சாந்திப்பிரியா 


பாகம்-3

சூதக முனிவர் தொடர்ந்து கூறலானார். ''அனைத்து முனிவர்களுக்கும் தேவ இரகசியத்தை பிரும்ம தேவர் இவ்வாறாகக் கூறத் துவங்கினார்.
'முன்னொரு காலத்தில் விஷ்ணு பகவான் பல்வேறு காலங்களிலும் தோன்றிக் கொண்டு இருந்த பகைவர்களையும், இடையூறுகளையும் தான் எடுக்க உள்ள ஒவ்வொரு அவதாரத்திலும் அழிக்க எண்ணினார். ஆகவே அதற்கான சக்தி தனக்கு பூரணமாகக் கிடைக்க வேண்டும் என எண்ணியவர் இந்த நகுல பூமிக்கு வந்தார். அப்போது நகுலராக ( நா+குலர் = குளம் கோத்திரம் என அனைத்துக்கும்  அப்பாற்பட்டு உருவமற்ற சக்தி கொண்டவர்) இருந்த அதாவது உருவமற்ற பராசக்தியும் பரமேஸ்வரரும் கங்காசாகரசங்கமத்தில் அவ்வப்போது வந்து தங்குவதாக செய்தி கிடைக்க இங்கு வந்து கங்காசாகரசங்கமத்தில் குளித்தப் பின்னர் அதன் கரையிலேயே அமர்ந்து கொண்டு தான் விரும்பிய சக்தியை தனக்குக் கொடுக்க வேண்டும் என நகுலேஸ்வரரையும், நகுலாம்பிகையையும் வேண்டிக் கொண்டு அவர்களை பூஜித்து வரலானார். விஷ்ணு பகவான் நகுலேஸ்வரரை இப்படியாக  தோத்திரம் செய்யத் துவங்கினார்'.
 'ஸ்வாமி, மலையில் கிடப்பவரே, சம்புவே, உலக நாயகரே, கைலாய மலையில் வாசம் செய்யும் நீங்கள் இங்கு வந்து எனக்கு தரிசனம் தருவீரா? கருணாநிதியே, சர்வ வல்லமை படைத்தவரே, நகுலாம்பிகையுடன் கூடி இருந்து அனைவரையும் ரஷிப்பவரே, நான் எடுக்க உள்ள அவதாரங்களில் என் தொழிலை திறமையுடன் செய்து முடிக்க எனக்கு தக்க சக்தி தந்து எனக்கு  திருவருள் செய்ய வேண்டும். நான் அவதரித்தப் பின் என் தொழிலை செய்து முடித்தப் பின் அடியேன் உம்முடைய சன்னிதானத்தை விட்டு செல்லாமல் இங்கேயே வாசம் செய்து உம்மை துதித்துக் கொண்டு இருக்க எமக்கு நீவீர் அருள் புரிய வேண்டும்.
அது மட்டும் அல்ல கைலாயனாதா, மேலும் இந்த தீர்த்தத்தை காத்துக் கொள்ளுதல் என்ற அதிகாரத்தையும் எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.  எவர் ஒருவர் விதிப்படி இந்த தீர்த்தத்திலே வந்து ஸ்நானம் செய்கிறார்களோ அதன் பின் அந்த ஜனங்கள் என்னை தரிசனம் செய்தப் பின் என் அனுமதியைப் பெற்றே உம்மையும் தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும். சாம்பசிவப் பெருமானே, என்னுடைய இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு எனக்கு அருள் புரிய வேண்டும்'. தினமும் இவ்விதமாக விஷ்ணு மனமுருகி தோத்திரம் செய்து கொண்டு இருந்த நேரத்தில் ஒருநாள் மனம் மகிழ்ந்து போன நகுலேஸ்வரர் விஷ்ணுவின்  வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அவர் முன் தோன்றிக் கூறினார் ' மாதவா, முகுந்தா, உன் துதிக்கு நான் மயங்கி விட்டேன்.  நீ என்னிடம் வைத்துள்ள பக்திக்கும் நம்பிக்கைக்கும் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் நீ கேட்ட அனைத்து வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டு நீ கேட்டபடி உனக்கு அருள் புரிகிறேன்.  மாதவா, இது கர்மபூமியாகும். இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு அனுக்கிரஹம் செய்யும் பொருட்டே நான் இங்கு வந்து வசிக்கிறேன்.  நான் அருணாசலம் மற்றும் கேதாரத்தில் எப்படி பிரீதியுடன்  வசிக்கிறேனோ அப்படித்தான் இங்கும் வசிக்கிறேன்.
முகுந்தா,  நீயே இங்கு எனக்கு அடியவனாகவும் சக்தியுமாகவும் இருக்கிறாய். ஆகவே இனி இந்த பூமியில் நீ எனக்கு இடப் பக்கத்தில் இருந்து வருவாய். எந்த ஜனங்கள் இங்கு வந்து, இந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தப் பின் உன்னையும்  தரிசனம் செய்தப் பின் என்னை வழிபடுவார்களோ அவர்களுக்கு நான் அருள் புரிவேன்.  அவர்கள் காரிய சித்தியும் பெறுவார்கள்.  நான் இன்று முதல் இங்கு நகுலேஸ்வரனாக வசிப்பேன்.  என் மனைவியும் உன்  சகோதரியுமான பார்வதியும் இங்கு நகுலேஸ்வரி என்ற பெயருடன் என்னுடன் இருப்பாள். நீயும் எனது இடப்பக்கத்தில் இருந்தவாறு நகுல மாதவன் என்ற பெயரில் இங்கு  வந்தவர்களுக்கு  அருள் புரிந்து கொண்டு இருப்பாய்'.
இப்படியாக சிவபெருமான் அருள் புரிந்ததைக் கேட்ட விஷ்ணுவும் ஆனந்தம் அடைந்து அது முதல்  இங்கேயே  நகுல மாதவனாக வசிக்கலானார். அப்போது நகுல மாதவர் இந்த தீர்த்தத்தின் மகிமையை மற்றும் நகுலேஸ்வரர் அவருக்குக் கூறிய  எங்கள் அனைவருக்கும் எடுத்துரைத்தார். அதையும் கேளுங்கள்' என்று கூறிய பிரும்மா மேலும் தொடர்ந்து  கூறலானார்.
.............தொடரும்

Naguleswara Puranam - 4

$
0
0

சாந்திப்பிரியா 


பாகம்-4

நகுல மாதவர் பிரும்மாவிற்கு  கூறியது  : 

''முனிவர்களே , எல்லாப் பாவங்களையும் போக்கவல்ல இந்த தீர்த்தத்தின் மகிமையை குறித்து நகுல மாதவர் பிரும்மாவிற்கு கூறியதை இப்போது கூறுகிறேன். அதையும் கேளுங்கள்.  விஷ்ணு கூறினார் ' இந்த நதி  பிறக்கும் இடம் எது தெரியுமா? அது நகுல மலையில் இருந்தே உற்பத்தி ஆகிறது. அதன் பெயர் கன்னியா கங்கை என்பது. உலகத்துக்கு நன்மை பயக்க  தன்னிடம் வந்து ஸ்நானம் செய்தவர்களின் பாவங்களை தானே சுமந்து கொண்டு சென்று கடலில் கரைத்து விடுகிறது. அப்போது அந்த பாவங்கள் அனைத்தும் அழிந்து போகின்றன.  எந்த ஒருவர் இங்கு வந்து இந்த கன்னியா கங்கை  தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வானோ அப்போதே அவன் பாவங்கள் அனைத்தும் அழிந்து போகும். அவனும் சியவப்ரீதியைப் பெறுவான். பொன்னை களவாடியவர்கள், மதுபானம் பருகுபவர்கள், பிராமணனைக் கொன்றவர்கள் மற்றும் குருத்துரோகிகள், கணவனுக்கு துரோகம் செய்தவர்கள்  என அனைத்து பாவங்களையும் செய்தவர் எவராயினும் இந்த தீர்த்தத்தில் வந்து குளிக்கையில் அந்த பாவங்களில் இருந்து விமோசனம் பெறுகிறார்கள்.  எந்த மனிதர் இந்த தீர்த்தத்தில் வந்து ஸ்நானம் செய்து எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் செய்வானோ அவனது பித்ருக்கள் அனைவரும் மேலான பதத்தை அடைவார்கள்.  இங்கு வந்து இந்த தீர்த்தத்தில் பிண்டதானம் செய்து விட்டு எவனொருவன் அன்னதானமும் செய்வானோ  அவன் கயாவிலும், கங்கையிலும், நர்மதையிலும், காவேரியிலும்  பித்ரு காரியம் செய்த பலனை விட அதிக பலனை அடைவார்கள். எவன் ஒருவன் இந்த தீர்த்தத்தில்  குளித்தப் பின் பசுவை தானம் செய்வானோ அவர்கள் அந்த பசுவின் மீது உள்ள ரோமத்தின் கணக்கான அளவு கற்பகாலம்வரை  அடுத்தப் பிறவி எடுக்காமல் ஸ்வர்கத்தில்  இருப்பார்கள். எவன் ஒருவன் இங்கு வந்து வேத விதிப்படி யாகம் செய்வானோ அவன் பிரும்ம லோகத்தை அடைவான். எவன் ஒருவர் இங்கு வந்து நகுல மாதவரை வணங்கித் துதிப்பாரோ அவன் விஷ்ணு லோகத்தை அடைந்து ஒரு கோடி கற்ப  காலம் வரை அங்கேயே வாழ்ந்து  கொண்டு  இருப்பான். எவன் ஒருவன் நகுல மாதவரை வணங்கியப் பின்  பக்தியோடு இங்கு சிவபூஜை செய்வானோ அவன் சிவப் பிராப்தியைப் பெறுவான்'.
இப்படியாக நைமிசாரண்யத்தில் கூடி இருந்த முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் நகுலேஸ்வரத்தைக் குறித்து கூறிய சூதக முனிவர் மேலும் அதன் மகிமையைக் குறித்துக் கூறலானார் '' உத்தமமான முனிவர்களே, நான் இன்னமும் நகுலேஸ்வரரின்  மகிமையை சொல்வேன். கேளுங்கள்.
 நகுலேஸ்வரம் சாதாரண தலம் அல்ல. இங்கு  ராமபிரான் வந்து பெரும் சிவபக்தனான ராவணனைக் கொன்ற தமது பிரும்மஹத்தி தோஷத்தைத் தொலைத்துக் கொண்டு சென்றுள்ளார். சனியினால் பீடிக்கப்பட்ட நளனும்  இங்கு வந்து நகுலேஸ்வரரையும், நகுலேஸ்வரியையும் வணங்கி நிவாரணம் பெற்று உள்ளார்கள். அது மட்டும் அல்ல பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனனிடம் தனது பசுக்களை களவாடிவிட்ட திருடர்களிடம் இருந்து தனது பசுக்களை மீட்டுத் தருமாறு ஒரு பிராமணன் வேண்டிக் கொண்டபோது,  அந்த திருடர்களை துரத்திக் கொண்டு அர்ஜுனன் போனான். திருடர்களோ  தருமனின் வீட்டில் புகுந்து பின் வழியே ஓடி விட அவர்களை துரத்திக் கொண்டு சென்ற அர்ஜுனன், அந்த வீட்டுக்குள் நுழைய அப்போது தன்னை மறந்த நிலையில்  திரௌபதியுடன்  தருமபுத்திரர் தனிமையில் இருந்தது தெரியாமல் அவர்கள் இருந்த அந்த அறைக்குள்  நுழைந்து அவர்கள் இருந்த அலங்கோல கோலத்தைப்  பார்த்து விட்ட பாவத்தைத் தொலைக்க இங்கு வந்து சிவபெருமானை வணங்கி நிவாரணம் பெற்றுள்ளார்''.
இப்படியாக சூதக முனிவர் கூறிக்கொண்டு இருந்த கதையைக் கேட்ட முனிவரில் ஒருவர் தனது சந்தேகத்தை சூதகரிடம் கேட்டார் ' மா முனிவரே, இது அனைத்தும்  கேட்கவே  மிக அற்புதமாக உள்ளது.   ஆனால்  நகுல முனிவர் என்றொருவர் இருந்ததாகவும் அவர் இங்கு வந்து தவம் செய்து சாப விமோசனம் பெற்றதினால்  நகுல மலை என்று இந்த இடத்துக்கு பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகிறார்களே. அதுவும் உண்மையா?  நகுலேஸ்வரரின் மகிமையை கூறும் மேலும் சில கதைகள் உண்டெனில் அவற்றையும் எமக்குக் கூறுவீர்களா ?' என்று கேட்க  சூதக முனிவர் அந்த தலத்தின்  மகிமையை   எடுத்துக் காட்டும் மேலும் சில கதைகளை தொடர்ந்து  கூறலானார்.
............தொடரும் 

Naguleswara Puranam - 5

$
0
0

சாந்திப்பிரியா 

பாகம்-5

சூதக முனிவர் கூறலானார் ''முன் ஒரு காலத்திலே சுதாம முனிவர் என்றொரு மாமுனிவர் இருந்தார். அவர் மேரு மலையின் அடிவாரத்திலே இருந்த வனம் ஒன்றில் கடும் தவத்தில் இருந்தார். புதருக்குள் இருந்த அவரை பார்க்காமல் காட்டில் வேட்டையாடிக் கொண்டு இருந்த வேடன் ஒருவன் மதியம் களைப்பினால் உந்தப்பட்டு மிருகங்கள் வந்து தம்மை தாக்காமல் இருக்க அவர் அமர்ந்திருந்த அந்த மரத்தின் மீது ஏறி படுத்து உறங்கி விட்டான் . தன்னை மறந்து உறங்கியவன் வாயில் இருந்து எச்சில் வெளி வந்து அந்த முனிவரின் நெற்றியில் விழுந்தது. அதையும் அறியாமல் அவன் உறங்கிக் கொண்டு இருக்க, தன் நெற்றிப் பொட்டில் வந்து விழுந்த எச்சிலால் கண் விழித்த முனிவர் யார் தன் மீது எச்சிலை உமிழ்ந்தார் என்று நோக்கினார். அப்போது அந்த மரத்தின் மீது இருந்து கீரிப்பிள்ளை ஒன்று வேக வேகமாக வெளி வந்தது. வெளிவந்த கீரிப்பிள்ளை முனிவரின் பாதங்களில் வணங்கி தான் அதை செய்யவில்லை என்றும், அந்த வாய் நீர் வெளியே வந்தது மேலே படுத்துள்ள வேடன் வாயில் இருந்து ஆகும் என்று கூறி அந்த வேடனைக் காட்ட  சுதாம முனிவரும் கடும் கோபத்துடன் அந்த வேடனை கீழ் இறங்கி வருமாறு சப்தமிட்டு  அழைத்தார் .
மரத்தின் மீது இருந்து கீழ் இறங்கி வந்த வேடனும் நடந்ததை தெரிந்து கொண்டப் பின் தன் தவறை உணர்ந்தான். முனிவரிடம் மன்னிப்புக் கேட்டான். ஆனால் அதற்குள் அந்த முனிவரோ அவனுக்கு ஒரு கடும் சாபம் இட்டுவிட்டார். தான் கண் விழித்தபோது முதலில் தான் கண்ட கீரிப்பிள்ளையின் முகம் அவர் மனதில் வர அந்த வேடனை சபித்தார் ' என் மீது எச்சலிட்ட மூடனே இனி நீ கீரிப்பிள்ளையின் முகம் கொண்ட மனிதனாகப் பிறக்க வேண்டும்'.
உடனே அந்த மனிதன் அவர் கால்களில் விழுந்து வணங்கி மீண்டும் மன்னிப்பைக் கோர சுதாம முனிவர் தன் நிலைக்கு வந்தார். அப்போது அவர் அருகில் இருந்த கீரிப்பிள்ளையும் மனித உருவை அடைந்து ஒரு தேவகணமாயிற்று. அந்த தேவகணத்தை  கண்ட சுதாம முனிவர் அவரை வணங்கி நின்றபோது அந்த வேடனும் அந்த தேவகணத்தைக் கண்டு தன் நிலையை எடுத்துக் கூறி தனக்கு அந்த சாபத்தில் இருந்து விடுதலைக் கிடைக்க வேண்டும் என வேண்டினான். அப்போது சுதாக முனிவர் மற்றும் அந்த வேடனைப் பார்த்து அந்த தேவகணம் கூறியது ' வேடனே, உன் இந்த நிலைக்குக் காரணம் உன்னுடைய பூர்வ ஜென்மப் பலனே ஆகும். உனக்கு இந்த முனிவரால் பூர்வ ஜென்மத்தின் அந்த சாபத்திற்கு சாப விமோசனம் கிடைக்க வேண்டும் என்று உள்ளது. அதனால்தான் இது நிகழ்ந்துள்ளது' என்று கூற அதைக் கேட்ட அந்த வேடன் தான் பூர்வ ஜென்மத்தில் யாராக இருந்தேன் என்பதையும், தான் செய்த பாவம் என்ன என்பதையும் கூறுமாறும்  பணிவுடன் அந்த தேவகணத்தைக் கேட்க, அந்த தேவகணமும் அவனுடைய பூர்வ ஜென்மக் கதையைக் கூறத் துவங்கியது.


'வேடா, முன் ஒரு காலத்தில் நேபாள நாட்டிலே நீ ஒரு புழுவாகப் பிறந்து இருந்தாய். அப்போது அதே நேபாள ராஜ்யத்திலே ஒரு பாவாத்மா இருந்தான். அவன் செய்யாத அக்கிரமங்கள் கிடையாது. அவன் வீட்டு முற்றத்தில்தான் நீ புழுவாக நெளிந்து கொண்டு இருந்தாய். அவன் வீட்டில் சமைக்க வெட்டி வைத்திருந்த மாட்டு இறைச்சி ஒன்றை ஒரு காகம் கௌவிக் கொண்டு போயிற்று. அது பறந்து செல்லும்போது அதன் நிழல் உன் மீது விழுந்தது. உடனேயே புழுவாக இருந்த நீ சாப விமோசனம் பெற்று மரணம் அடைந்து மனிதனாகப் பிறந்தாய். அந்தக் காகம் அதற்கு முன் பிறவியில் ஒரு முனிவராக இருந்தது. நீயும் ஒரு பெரிய யோகியாக  இருந்தாய். ஆனால் ஏதோ ஒரு சிறு காரணத்துக்காக உனக்கு  அந்த முனிவரிடம் இருந்து    சாபம் பெற்று அவர் மூலமே விமோசனமும் கிடைக்கும் என்று விதி  இருந்தது.  ஆகவேதான் அது காகமாகப் பிறந்தபோது அதன் நிழல் புழுவாகப் பிறந்து இருந்த உன் மீது பட்டு அதன் மூலமே நீ சாப விமோசனமும் அடைந்தாய். ஆனால் காகம் தனது வாயில் இறைச்சியை வைத்துக் கொண்டு உனக்கு சாப விமோசனம் தந்ததினால் நீ இறைச்சிகளை தின்னும் வேடனாகப் பிறக்க வேண்டி இருந்தது. அதனால்தான் நீயும் மிருகங்களைக் கொன்று இந்த ஜென்மத்திலும் பாபத்தை சுமக்க வேண்டி இருந்தது. ஆனால் நீ முனிவராக இருந்தபோது பெற்று இருந்த வரத்தினால் உனக்கு இந்த ஜென்மத்துடன் அனைத்து பிறப்புக்களும் அழிந்து மோட்ஷம் பெற உள்ளாய். ஆகவேதான் உனக்கு மோட்ஷம் கிடைக்க இங்கு வந்து இந்த முனிவரிடம் சாபத்தைப் பெற்று கீரிப்பிள்ளை முகத்துடனானவராக மாற உள்ளாய். இதுவும் நல்லதற்கே ஆகும். வேடனே உனது கர்ம யோகத்தின் பலனாக உனக்கு மீண்டும் மனித முகம் திரும்ப வரும்.  அப்படியே யோகிகளுக்கும் உண்டான மோட்சமும் உனக்குக் கிடைக்கும். அப்போது நீயும் நகுலேஸ்வரரை  துதித்து சாப விமோசனம் பெற முடியும்'.
அதைக் கேட்ட வேடன் அந்த முனிவரிடம்  ' ஸ்வாமி , மகா யோகியானவரே, கரும யோகத்தை அனுஷ்டிக்க வல்லதும், விரைவில் சித்தி கிடைக்கவும் கூடிய பூமி எது என்று எனக்கு உறைத்தால்  உடனே அங்கு சென்று நான் சாப விமோசனம் பெற இயலும் என்பதினால் அடியேன் எனக்கு அவ்விடம் குறித்துக் கூற முடியுமா ?' என்று கேட்டான்.  அவன் கேட்டதைக்  கண்ட தேவகணமும்  அவனுக்கு  அந்த இடத்தைப் பற்றிக்  கூறத் துவங்கியது.
 .........தொடரும்

Naguleswara Puranam - 6

$
0
0

சாந்திப்பிரியா 



பாகம்-6

'வேடனே இன்னும் தொண்ணூறு  நாழிகைக்குள் நீ கீரிப்பிள்ளையின் முகத்தை அடைய உள்ளாய். அதற்குள் நீ கிளம்பிச் சென்றுவேதாரண்யத்துக்கு தென் பகுதியில் தெரியும் கடலில் பயணித்தால் நீண்டப் பயணத்துக்குப் பின்னர் பெரிய மலை பகுதியை நீ காண்பாய்.  எந்த இடத்தில் உன்னை அறியாமலேயே  உன் மனதில் இதுவே கர்ம யோகத்தை செய்ய வல்லமைக் கொண்ட பூமி எனத் தோன்றுகிறதோ அப்போது உன் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கு சென்று அந்த மலை அடிவாரத்தில் தங்கி நகுலனாக உள்ள சிவபெருமானை நீ துதித்து வந்தால் உனக்கு மீண்டும் சாப விமோசனம் கிடைக்கும்' என்றது.
அதைக் கேட்ட அந்த வேடனும் சற்றும் காலம் தாழ்த்தாமல் உடனே கிளம்பி வேதாரண்யத்துக்குச் சென்றான். அந்த தேவகணத்தின் உதவியினால் அவனால் பதினைந்து நாழிகைக்குள் வேதாரண்யத்தை பறந்து சென்று அடைய முடிந்தது.   வேதாரண்யத்தை அடைந்து கடலில் பயணிக்கத் துவங்கி இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் இருந்த நகுல மலைப் பிரதேசத்தை அடைந்தான். அங்கு சென்று இறங்கியதுமே  அந்த வேடன் ஒரு முனிவராக மாறினார்.  ஆனால் அவர் முகம் மட்டும் கீரிப்பிள்ளையின் முகம் போல மாறி விட்டது. கீரிப்பிள்ளையின் முகத்தோடு இருந்த அந்த முனிவரைக் கண்ட மக்கள் அஞ்சினார்கள். அவருடன் நெருங்கிப் பேசவோ அல்லது அவர் அருகில் செல்லவோ பயந்தார்கள்.  அவரை சீண்டுவாரில்லை. மேலும் அவரை திட்டித் தீர்த்தார்கள்.  அதைக் கண்டு மனம் ஒடிந்து போன அந்த முனிவர்  அந்த ஊரை விட்டு ஒதுங்கி மலை அடிவாரத்தில் இருந்த வனப் பகுதிக்குச் சென்று அங்கு நகுலேஸ்வரரை வேண்டித் துதித்தபடி தவத்தில் இருந்தார்.
பல காலத்துக்கு தவத்தில் இருந்த அவர் தவத்தைக் கண்டு மகிழ்ந்து போன சிவபெருமான் அவர் முன் தோன்றி தானே அந்த இடத்தில் உருவமற்ற நகுலேஸ்வரராக தங்கி உள்ளதாகவும் அவர் வேண்டும் வரம் எது என்றும்  கேட்க சிவபெருமானிடம் நடந்த அனைத்தையும் கீரி முகத்தைக் கொண்ட முனிவர் கூறினார். அதைக் கேட்ட நகுலேஸ்வரர் அவருக்கு சாப விமோசனம் தந்து அவரை அழகிய முகம் கொண்ட முனிவராக்கினார்.  கீரிப்பிள்ளையின் முகத்தைக் கொண்ட முனிவர் அதி அற்புதமான அழகை அடைந்ததைக் கண்ட மக்கள் அவர் உண்மையிலேயே பெரும் மகானாக இருந்திருக்க வேண்டும், அவருக்கு தெய்வீக அருள் உள்ளது என்பதை உணர்ந்தார்கள்.  தாங்கள் அவரை உதாசீனப் படுத்தியதற்கு அவரிடம் வந்து மன்னிப்புக் கேட்டார்கள். அந்த முனிவரும் பல காலம் அங்கேயே தங்கி இருந்து நகுலேஸ்வரருடைய மகிமையை எடுத்துக் கூறி மக்களை நல்வழிப்படுத்தி வந்தார்.


காலப்போக்கில் அவர் மறைந்து விட அவருடைய பெயராலேயே அந்த மலை பகுதியை கீரிப்பிள்ளை மலை என்ற பெயரில் கீரி மலை என அழைத்தார்கள். அந்த ஊர் மன்னனும் அந்த முனிவரின் புகழைக் கேள்விப்பட்டு அங்கு வந்து அவரை தரிசனம் செய்தப் பின் அவர் விரும்பியபடி அங்கேயே ஒரு ஆலயத்தையும் நிறுவினார். இப்படியாக சாபம் பெற்று இருந்த முனிவர் சில பிறவிகளை எடுத்து இங்கு வந்து நகுலேஸ்வரரை ஆராதித்து மோட்ஷம் அடைந்தார்' என்று சூதக முனிவர் கூறினார்.
அவர் அதைக் கூறி முடிக்கவும், மாலைப் பொழுதும் துவங்கியது. சாயங்கால கடமைகளை அனைவரும் செய்ய வேண்டி இருந்ததினால் அனைவரையும் மீண்டும் மறுநாள் காலை அங்கேயே வருமாறும் அந்த நகுலேஸ்வர தலத்தை பற்றிய மேலும் சில மகிமைகளைக் கூறுவதாகவும் கூற முனிவர்கள் கலைந்து சென்றார்கள். மறுநாள் காலை சூதக முனிவர் வரும் முன் அங்கு வந்து மீண்டும் கூடினார்கள்.
.......தொடரும்
Viewing all 460 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>