கிராம தேவதைகள் - 22
மாடப்புரம் பத்ரகாளி ஆலயத்தில்
காணப்படும் சிலையின் இரு தோற்றம்
காணப்படும் சிலையின் இரு தோற்றம்
மாடப்புரம்
பத்திரக்காளி
பத்திரக்காளி
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
அந்த ஆலயத்தை நீதியின் இடம் என்கிறார்கள். ஆலயத்தில் அவளுக்கு முன்னால் ஒரு மேடு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும், குற்றம் சுமத்தப்பட்டவரும் அங்கு வந்து அந்த மேட்டில் நின்று கொண்டு தத்தம் வாதத்தை வைக்க வேண்டும். பொய் கூறுபவர் முப்பது நாட்களுக்குள் ஏதாவது ஒரு விதத்தில் தண்டனையை பெறுகிறார் . சில சமயங்களில் அவர்களால் அந்த கிராமத்தின் எல்லையைக் கூட கடக்க முடியாமல் ஆகிவிடுமாம். ஆகவே தண்டனை பெற்றவன் மீண்டும் ஆலயத்துக்கு வந்து பத்ரகாளிக்கு காணிக்கை செலுத்தி, குற்றமற்றவனுக்கும் அபராதமாக ஏதாவது தொகை தர வேண்டுமாம்.
பணக்காரர்களினால் கொடுமை இழைகப்பட்டவர்கள் ஈரத் துணி உடுத்தி அங்கு வந்து பட்டயக்கல் எனக் கூறப்படும் இடத்தில் நின்று கொண்டு ஒரு நாணயத்தை அங்குள்ள கத்தி மற்றும் சுத்தியலினால் இரண்டாக உடைத்து அங்கே போட வேண்டும். அதை செய்தால் அவர்களை கொடுமைபடுத்தியவர்களை பத்ரகாளி கடுமையாக தண்டிப்பாளாம் .
ஒரு காலத்தில் சில நீதிபதிகளே குற்றம் சாட்டப்பட்டவரையும் , குற்றம் சுமத்தப்பட்டவரையும் அங்கே அழைத்து வந்து அவர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பின் வழக்கை விசாரித்ததாகக் கூறுகிறார்கள். பத்ரகாளிக்கு பின் புறத்தில் வேப்ப மரம் உள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் மற்றும் திருமணத் தடை விலக வேண்டும் என வேண்டிக் கொண்டும் பக்தர்கள் அங்கு வருவது உண்டாம். அவை உடனேயே நடைபெறுகின்றனவாம். அந்த ஆலயத்தில் விழா எதுவும் கிடையாது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நிறைய கூட்டம் வருகின்றது.
---------------------------------
பின் குறிப்பு :
இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாடப்புரம் மதுரைக்கு அருகில் உள்ளது. அந்த இடத்துக்கு செல்ல திருப்புவனத்தில் இருந்து வாகன வசதிகள் உள்ளன. அது போல திருநெல்வேலியில் இருந்தும் செல்ல நல்ல சாலை உள்ளது. சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதி கேசனை எடுத்து மதுரையை வளைத்தார்.
மேற்கே திருவேடகமும், தெற்கே திருப்பரங்குன்றமும், வடக்கே திருமாலிருஞ்சோலையும் இருக்குமாறு எல்லையை வைத்த இறைவன் கிழக்கில் இருந்த மடப்புரத்தில் தனது வாயையும் சேர்த்து வைத்தபடி இருந்தவாறு மதுரையின் எல்லையை பார்வதிக்கு காட்டினார் என்றும் அதனால் அந்த இடத்தில்தான் சிவபெருமானின் வாயில் இருந்து வெளியான நஞ்சை உண்ட பார்வதி இங்கு காளியாக காட்சி தந்தாள் என்பது இன்னொரு கதை. காளியின் தலை மீது கால்களை தூக்கியபடி நிற்கும் குதிரையின் கால்கள் நிழல் தரும் குடையாக உள்ளது என்கிறார்கள் - சாந்திப்பிரியா
பின் குறிப்பு :
இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாடப்புரம் மதுரைக்கு அருகில் உள்ளது. அந்த இடத்துக்கு செல்ல திருப்புவனத்தில் இருந்து வாகன வசதிகள் உள்ளன. அது போல திருநெல்வேலியில் இருந்தும் செல்ல நல்ல சாலை உள்ளது. சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதி கேசனை எடுத்து மதுரையை வளைத்தார்.
மேற்கே திருவேடகமும், தெற்கே திருப்பரங்குன்றமும், வடக்கே திருமாலிருஞ்சோலையும் இருக்குமாறு எல்லையை வைத்த இறைவன் கிழக்கில் இருந்த மடப்புரத்தில் தனது வாயையும் சேர்த்து வைத்தபடி இருந்தவாறு மதுரையின் எல்லையை பார்வதிக்கு காட்டினார் என்றும் அதனால் அந்த இடத்தில்தான் சிவபெருமானின் வாயில் இருந்து வெளியான நஞ்சை உண்ட பார்வதி இங்கு காளியாக காட்சி தந்தாள் என்பது இன்னொரு கதை. காளியின் தலை மீது கால்களை தூக்கியபடி நிற்கும் குதிரையின் கால்கள் நிழல் தரும் குடையாக உள்ளது என்கிறார்கள் - சாந்திப்பிரியா